புதிய பதிவுகள்
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Today at 8:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 6:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:30 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:19 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 1:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 1:33 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 12:20 am

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:49 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 8:03 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:26 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:09 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 am

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:40 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:35 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:32 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 8:23 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:21 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:12 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:42 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:40 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:38 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:36 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:34 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 2:20 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 2:06 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 23, 2024 1:08 am

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon Sep 23, 2024 12:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10 
44 Posts - 60%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10 
22 Posts - 30%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10 
2 Posts - 3%
viyasan
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10 
236 Posts - 42%
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10 
13 Posts - 2%
prajai
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 20 of 32 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 26 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 11:32 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 10:15 am

திடீர் பாசம், திருடியின் நேசம்

தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலிக்கு கணவருடன் சென்றேன். பஸ்சில் அதிக கூட்டம் என்பதால், நான் முன்பக்க படிக்கட்டு வழியாக ஏறிக்கொண்டேன். கணவர் பின்பக்க படிக்கட்டு வழியாக ஏறி விட்டார்.

பஸ் இரண்டொரு ஸ்டாப்பில் நின்று போன போது இரண்டு பேர் கொண்ட ஒரு சீட் காலியானது அதில் நான் உட்கார்ந்து கொள்ள, என் அருகில் இன்னொரு பெண்ணும் அவசர மாக உட்கார்ந்தார். அவரை நான் முன்பின் பார்த்ததில்லை என்றாலும், பழகிய பெண் போல் சிரித்தார். என் கையில் வைத்திருந்த பேக்கை `அழகாய் இருக்கிறதே' என்று சொன்னபடி உரிமையுடன் வாங்கியவர், என் கண் முன்பே அதை திறந்து பார்த்து மூடினார். `நல்லாத்தான் இருக்கு' என்றவர், `காலம் கெட்டுக்கிடக்கு. தனியாகவா வந்தீர்கள்?' என்று கேட்டார். நான் அந்தப் பெண்ணிடம், என் கணவர் பின் சீட்டில் இருக்கிறார். கூட்டமாக இருந்ததால் நான் முன் வாசல் வழியாக ஏறி விட்டேன் என்றேன்.

நான் இப்படிச் சொன்னதுமே அந்தப் பெண்மணி முகத்தில் சின்னதாய் ஒரு அதிர்ச்சியை உணர்ந்தேன். அதற்கேற்ப அடுத்த ஸ்டாப்பில் அந்தப் பெண்மணி இறங்கிச் சென்று விட்டார். அத்தனைநேரம் அன்பும் அக்கறையுமாய் பேசியவர், போகும்போது ஒரு வார்த்தை சொல்ல வேண்டுமே...அது தான் இல்லை. அப்புறம் தான் புரிந்தது, அந்தப்பெண் தனியாக வரும் பெண்களிடம் அன்பாக பேசி அவர்கள் வைத்திருக்கும் பணம் மற்றும் பொருட்களை திருடிக் கொண்டு போகிறவர் என்று! அன்று என் கணவருடன் நான் வந்திருக்கிறேன் என்று சொன்னதால் என் கைப்பையில் இருந்த பணம் தப்பியது. தனியாக வரும் பெண் களை ஏமாற்றி பணம் பறிக்கும் பெண்களும் இப்படி கிளம்பி விட்டார்கள். அதனால் தனியாக பயணம் செய்யும் பெண்களே, கவனம்.

-எஸ்.பரிதாபானு, காயல்பட்டணம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 10:16 am

`இது எங்க ரோடு...தள்ளிப்போ..!'

கேம்ப் ரோட்டில் சில நாட்களுக்கு முன்பு காலை 9 மணிக்கு டிராபிக் அதிகமாக இருந்தது. இரண்டு பெரியவர்கள் பைக்கை ரோட்டில் நிறுத்திக்கொண்டு பேசிக் கொண்டி ருந்தார்கள். அவர்களும் டிராபிக் நெரிசல் ஏற்பட காரணமாக இருந்தார்கள்.

நான் கடையை விட்டு வெளியே வந்து "சார் கொஞ்சம் ஓரமாக நின்று பேசுங்கள். நீங்கள் நிற்பதால் டிராபிக் நெரிசல் அதிகம் ஆகிவிட்டது'' என்றேன். பதிலுக்கு அவர்கள், "டேய் உன் கடைக் குள்ளா வந்து நின்று பேசுகிறேன்? போ, போய் உன் வேலையைப் பார். நீ தள்ளு என்று சொன் னால் நான் தள்ளணுமா?

நீங்கள் நின்று வேசுவதால் பள்ளிக்கு, வேலைக்கு செல்பவர்களுக்கு கூட தாமதமாகி விடுகிறது. அதை கொஞ்சம் புரிந்து கொள்ளுங்கள்'' என்றேன்.

அப்போதும் கூட வண்டியை நகர்த்தவில்லை. என்மேல் கோபப்பட்டு என்னை திட்டுவதை தொடர்ந்தார்கள். மனவேதனையுடன் அங்கிருந்து அகன்றேன். நம்மால் முடிந்த வரைக்கும் ரோட்டில் போகும் மற்ற வண்டிகளுக்கு இடைஞ்சல் வராமல் பார்த்துக் கொள்ளணும். ஆனால் இதுபோன்று செய்யும் செயல் நம்மை வேதனைப் பட செய்கிறது.

சிதம்பரம், சென்னை 73.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 27, 2012 10:16 am

வீண் பேச்சால் உறவு கெட்டது

என் திருமணத்தன்று நடந்த சம்பவம் இது. வேலை மற்றும் பல காரணங்களால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமலே இருந்து விட்டார், என் தந்தை. எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததால் 20 வருடங்களுக்குப் பிறகு தந்தை வழி சொந்தங்கள் நிறையபேர் என் திருமணத்திற்கு வந்திருந்தனர்.

அப்போது உறவினர் ஒருவர், மணமக்களை வாழ்த்தி விட்டு வந்தவர், `பொண்ணு கட்டி யிருக்கிறது எட்டாயிரம் ரூபாய் பட்டுப்புடவை மாதிரி இல்லியே... வெறும் 2 ஆயிரம் ரூபாய் தான் இருக்கும். தாலி செயின் கூட 7 பவுன் போல இல்லை. வெறும் 5 பவுன்தான் இருக்கும்...' என்று கூறிவிட்டுச் சென்றார்.

சாப்பிட்டு முடித்த சொந்தபந்தங்கள் அனை வரும் அங்கங்கே அமர்ந்து பேசிக் கொண்டி ருந்தனர். 20 வருட பிரிவுக்குப் பிறகு சேர்ந்த சொந்தங்களின் முகத்தில் சந்தோஷமும், பாசமும் மிளிர்ந்தது. அந்த நேரம் பார்த்து உறவினர் ஒருவர் தாலி செயினையும் படவை பற்றியும் சொன்னது மற்றவர்கள் காதுக்கு வர, ஒரு நிமிடத்தில் வீடே சண்டை வீடாகி விட்டது. `யார் அப்படி சொன்னது? கூப்பிடு. இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம்' என்று பெண் வீட்டுக்காரர்கள் மல்லுக்கட்டத் தொடங்க, கடைசியில் என் பெற்றோர் தலையிட்டு ஒருவழியாக சமாதானம் செய்தனர்.

விருந்துக்கு வரும் உறவினர்கள் கல்யாணத்துக்கு வந்தோமா, சாப்பிட்டோமா எனச் செல் லுங்கள். தேவையில்லாமல் எதையாவது கூறி சந்தோஷ நிகழ்வில் சஞ்சலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்.

சி.சித்ராதேவி, திருவள்ளூர் .



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Mar 27, 2012 10:56 am

சொன்னவர் வாயில கொஞ்சம் அடுப்புக்கரிய சூட போடனும் புன்னகை
அபத்தம் பேசுபவர்களை வெறுத்து ஒதுக்க வேன்டும். அப்போது கூட இதுமாதிரி ஆளுங்க திருந்தாதுங்க சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Mar 27, 2012 5:11 pm

சொன்னவர் வாயில கொஞ்சம் அடுப்புக்கரிய சூட போடனும்
அபத்தம் பேசுபவர்களை வெறுத்து ஒதுக்க வேன்டும். அப்போது கூட இதுமாதிரி ஆளுங்க திருந்தாதுங்க

அசுரன் அண்ணா உங்கள் கோபத்தை பார்த்தால் நீங்களும் அனுபவ பட்டு இருக்கிறீங்க போல

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 10:04 pm

உன் வாழ்க்கை உன் கையில்!

எனக்குத் தெரிந்த பெண்ணொருத்தி கிட்டத்தட்ட 30 வயது தாண்டியும் திருமணமாகாமல் இருந்தாள். துலக்கிய குத்துவிளக்கு போல் அத்தனை அழகு அவள்.தனியார் நிறுவன ஊழியரான அவளது தந்தை பணியில் இருந்து ஓய்வு பெற்றபிறகு குடும்பத்திற்கென்று வேறு வருமானமில்லை. பெரிதாக சொத்தும் கிடையாது.

இதனால் பணத்தை எதிர்பார்த்து பல வரன்கள் வந்து போனார்களே தவிர, அந்தப்பெண்ணின் அழகு அங்கு காட்சிப்பொருளாக மட்டுமே ஆகிப்போனது. அதனால் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.

ஒருவழியாக 40 வயது நிரம்பிய ஒருவர் வந்து பெண் கேட்டார். அவர் ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்தவர். பெண்ணின் பெற்றோர் தயங்கியபோது அந்தப் பெண்ணே தைரியமாக முன்வந்து திருமணத்துக்கு சம்மதித்தார்.

திருமணத்துக்கு தேதி முடிவான நிலையில் அந்தப் பெண்ணின் தாயாருக்குத் தான் மனம் கேட்கவில்லை. மகளிடம், "இந்த திருமணத்துக்கு நீ மனப்பூர்வமாகத்தான் சம்மதித்தாயா? அல்லது இன்னும் எத்தனை காலம் தான் பெற்றோருக்கு பாரமாக இருப்பது என்று சம்மதித்தாயா?'' என்றுகேட்டார்.

அதற்கு அந்தப்பெண், "நம் குடும்ப நிலை எனக்குத் தெரியும். இன்றைய ராஜகுமாரன்களும் கல்யாணச்சந்தையில் விலை போகிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். பெண்ணைப் பார்த்து அவள் குடும்பம் பார்த்து, குணம் பார்த்து மணமுடிக்கிற எண்ணமெல்லாம் அவர்களிடம் இல்லவே இல்லை. அப்படியிருக்கும்போது கிடைக்காத வாய்ப்புக்கு ஏங்கிக் காத்திருப்பதை விட, தேடிவந்த வாய்ப்பை பற்றிக்கொள்வது தானே சரியாக இருக்கும். அதோடு நானும் மனுஷி தானே. எனக்கு மட்டும் குடும்பம்...வாழ்க்கை...வாரிசுகள் வேண்டாமா?'' என்று சொல்லியிருக்கிறாள்.

மகளின் பேச்சில் இருந்த யதார்த்தம் அந்தத் தாயை கண்ணீர் வடிக்க வைத்து விட்டது. இல்லாமை குடி கொண்டிருக்கிற இடத்தில், சூழலை புரிந்து கொண்டு தன் வாழ்க்கையை தானே தீர்மானித்த அந்தப்பெண் என்னை ரொம்பவே ஆச்சரியப்படுத்தினாள்.

இப்போது அந்தப்பெண் மணமாகி கணவருடன் சந்தோஷமாய் குடும்பம் நடத்துகிறாள்.

-டி.பத்மா, ராம் நகர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 10:05 pm

நல்ல மனம் வாழ்க

சில நாட்களுக்கு முன்பு நான் நகரத்தில் உள்ள தபால் நிலையம் சென்றுவிட்டு பஸ்சில் வீடு திரும்ப தயாரானேன். பஸ் நிறுத்தத்தை நோக்கி ரோட்டோரமாய் நடந்து சென்று கொண்டிருந்தேன். திடீரென்று போகும்வழியில் `ஸ்பீடு பிரேக்கர்' இருந்தது தெரியாமல் கால் தடுக்கி கீழே விழுந்து விட்டேன். விழுந்த வேகத்தில் கல் குத்தி ரத்தம் பீறிட்டு வந்ததில் மயக்கம் அடைந்திருக்கிறேன்.

நான் மயக்க நிலையில் ரோட்டோரம் கிடந்ததை பார்த்த ஒருவர் உடனே அந்தத் தெருவில் வசிக்கும் பெண்மணி ஒருவரை துணைக்கு அழைத்திருக்கிறார். அந்த பெண்மணியும் அவரது வீட்டிற்கு என்னை கொண்டு சென்று முதல் உதவி செய்து, வீட்டருகே இருந்த டாக்டரையும் அழைத்து சிகிச்சை கொடுத்திருக்கிறார். சிறிது நேரத்தில எனக்கு மயக்கம் தெளிந்தது. உடனே எனக்கு சூடாக காபி கொடுத்தவர், என் செல்லை வாங்கி என் கணவருடன் பேசி அவரை வரவழைத்தார். கணவர் வந்தவுடன் நடந்ததை சுருக்கமாக சொல்லி `இப்போ உங்கள் மனைவிக்கு நன்றாகி விட்டது. நீங்கள் பத்திரமாக அழைத்துச் செல்லுங்கள்' என்று கூறி சிரித்தமுகமாய் வழியனுப்பியும் வைத்தார்.

தெரிந்தவர்களையே யார் என்று கேட்கும் இந்தக்காலத்தில், இப்படி நல்ல மனிதர்களை பார்த்ததில் என் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது. கடவுள் மற்றவர்களுக்கு உதவ இவர்கள் மாதிரி மனிதநேயமுள்ளவர்களைப் படைத்திருக்கிறார் என்பதை மனதார புரிந்து கொண்டேன்.

-கே.சரண்யா, காட்டூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 10:05 pm

கருணைக்கு உயிர் கொடுத்தவர்!

சமீபத்தில் ஒருநாள் அலுவலகப் பணியை முடித்துவிட்டு டூவீலரில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். வழியில் கும்பலாய் சிலர் நின்று எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம், "எதற்காக இப்படி கூட்டமாய் நிற்கிறீர்கள்?'' என்று கேட்டேன். அவர்கள் ரோட்டோரம் தேங்கிக் கிடந்த சாக்கடைக்குட்டையை காட்டினர்கள். அங்கே கோட்டும் சூட்டும் அணிந்த ஒரு பெரிய மனிதர் ஒருவர் சாக்கடைத் தண்ணீரில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நாய்க்குட்டி ஒன்றை கொஞ்சமும் முகம் சுளிக்காமல் தூக்கிஎடுத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன்.

நாய்க்குட்டியுடன் அவர் தன் கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்தார். காரில் இருந்த ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்தார். நாய்க்குட்டியை குளிப்பாட்டினார். அடுத்த கணம் டவல் ஒன்றால் துடைக்கவும் செய்தார்.

நான்அவரை நெருங்கி "இத்தனைபேருக்கு இல்லாத பொதுநலம் உங்களிடம் இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன்'' என்றேன்.

பதிலுக்கு அவரோ, "இது பொதுநலம் இல்லை. சுயநலம் தான்'' என்றார். எப்படி என்று நான்ஆச்சரியமாய் கேட்க, அவர் சொன்ன பதில் இன்னும் ஆச்சரியமானது. "என்னால் செய்யக்கூடிய ஒரு காரியத்தை நான் பார்த்தபிறகும் செய்யாமல் போனால் அந்த உணர்வே என்னை நாள் முழுக்க ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும். இப்போது இந்த நாய்க்குட்டியை ஆபத்தான நிலையில் பார்த்தபிறகும் கண்டுகொள்ளாமல் போயிருந்தால், நாள் முழுக்க `நாய்க்குட்டிக்கு என்னாயிற்றோ? அது பிழைத்ததோ இல்லையோ தெரியவில்லையே' என்றெல்லாம் எனக்குள்ளாக ஒரு கவலை ஓடிக்கொண்டிருக்கும். இதனால் தூக்கமும் பறிபோய் விடும். அப்படியானால் இதில் என் மனம் சம்பந்தப்பட்ட சுயநலமும் தானே இருக்கிறது. அதேசமயம் உதவினால் நம்மால் செய்யமுடிந்த ஒரு நல்ல காரியம் என்ற மனநிறைவுடன் அடுத்த வேலையில் மனதைச் செலுத்துவேன்'' என்றார்.

இப்படியும் மனம் கொண்ட மனிதர்களா? நிஜமாகவே நெகிழ்ந்து போனேன்.

-சா.ஆனந்த் பிரகாஷ், நி.பஞ்சம்பட்டி.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 02, 2012 10:05 pm

மகனை ஓடவைத்த தாய்ப்பாசம்

என் உறவுக்கார பாட்டி ஒருவருக்கு மூன்று மகள்கள். ஒரு மகன். பாட்டி தனது மகள்களைக் காட்டிலும் மகன் மீது அதிக பாசத்தை கொட்டி வளர்த்தார்.

மகள்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது. அப்படியே மகனுக்கும் ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து வைத்தார். மகனுக்கு அடுத்தடுத்து மூன்று குழந்தைகள் பிறந்தன. பாட்டியின் கணவர் விவசாயத்தை கவனித்ததால் குடும்பம் பணத்தட்டுப்பாடு இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. திருமணத்துக்குப் பிறகும் பாட்டி மகன் மீது காட்டிய அளவுக்கு அதிகமான பாசத்தால் மகன் வேலைக்குப் போவதையே மறந்தான்.

இந்நிலையில் பாட்டியின் கணவர் எதிர்பாராமல் இறந்து விட, மகன் வேலைக்குப் போய் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை. வேலைக்குப் போவதை பெரும் தண்டனையாக நினைத்த அந்த மகன் ஒருநாள் ராத்திரி எல்லாரும் அசந்து தூங்கிய நேரத்தில் வீட்டில் இருந்து ஓடிவிட்டான்.

அதிர்ச்சியடைந்த அவன் தாயார் மகனை சுற்று வட்டாரம் முழுக்க தேடிப்பார்த்தார். கிடைக்கவில்லை. எங்கிருக்கிறான் என்பதும் தெரியவில்லை. அவன் இப்படி ஓடிப்போய் இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. ஆனாலும் அவன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அந்த வயதான தாயார் தான் உழைத்து சோறு போடுகிறார்.

பாசம் காட்டி வளர்த்த பிள்ளை எப்படியாவது திரும்பி வருவான். தன் சுமையை மாற்றுவான் என்று நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார், அந்த அப்பாவித் தாய்.

-க.கருணாநிதி, கொட்டியப்படுகை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 17, 2012 12:51 pm

கொட்டும் மழையில் கொட்டிய கருணை

நண்பர் ஒருவர் இரவுப்பணிக்காக தன் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினார். அப்போது பார்த்து நல்ல மழை கொட்டத் தொடங்க, மழை நின்றதும் போகலாம் என்று வீட்டில் சொல்லியிருக்கிறார்கள். என்றாலும் அலுவலகத்துக்கு தாமதமாகி விடக்கூடாது என்ற எண்ணத்தில் மழையை பொருட்படுத்தாமல் அவர் மழைக்கோட்டை மாட்டிக்கொண்டு ஸ்கூட்டரில் கிளம்பி விட்டார்.

வழக்கமாக போகிற பாதையில் தெருவை அடைத்தபடி மழைத்தண்ணீர் ஓடியதால் வாகனம் பழுதாகி நின்று விடக்கூடும் என்ற அச்சத்தில் வேறு பாதையில் வாகனத்தை செலுத்தியிருக்கிறார். ஆனால் அந்த தெருவில் கேபிளுக்காக தோண்டிய பள்ளத்தை மழை நீர் நிரப்பியிருக்க, தெரியாமல் அந்த பள்ளத்தில் விழுந்து விட்டார்.

வண்டியுடன் விழுந்ததில் உடம்பில் நல்ல அடி. அவர் போட்ட கூச்சல் அந்த தெருவில் அப்போது வந்து கொண்டிருந்த ஒரு ஆட்டோ டிரைவர் காதில் விழ, அவர் உடனே தனது ஆட்டோவில் அவரை தூக்கிப்போட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். அதோடு நில்லாமல் அவர் சட்டைப் பையில் இருந்த விசிட்டிங் கார்டில் இருந்து வீட்டு நம்பருக்கு போனில் பேசியும் இருக்கிறார். அவர்களும் பதறியடித்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். அவருக்கு அன்பளிப்பாக ஒரு தொகையை கொடுத்திருக்கிறார்கள். அவரோ அதை வாங்க மறுத்ததோடு, இவர் விரைவில் குணமாக இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்றும் சொல்லி விட்டு கிளம்பியிருக்கிறார். இப்படியும் மனிதர்கள்.

டி.ராஜன், கோச்சடை



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 20 of 32 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 26 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக