புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
3 Posts - 4%
Baarushree
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
2 Posts - 3%
viyasan
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Rutu
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
1 Post - 1%
சிவா
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
1 Post - 1%
manikavi
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
2 Posts - 6%
viyasan
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
1 Post - 3%
Rutu
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
1 Post - 3%
manikavi
கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_m10கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி - Page 3 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்வனின் காதலி - கல்கி கிருஷ்ணமூர்த்தி


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 9:52 am

First topic message reminder :

கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் பணியாற்றிய போது எழுதிய தொடர் நாவல் 'கள்வனின் காதலி'. இது ஒரு சமூக நாவலாகும். உலகில் உறுதியானது, உண்மையானது, அழிவில்லாதது ஒன்று உண்டு; அது அன்பு. தீய செயல்களுக்குங்கூட அன்பே தூண்டுகோல் என்ற கருத்தினை இந் நாவல் விளக்குகிறது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:42 am

15.பசியும் புகையும்

வீட்டுக் கதவு பூட்டியிருப்பது கண்டு ஒரு கணம் திகைத்து நின்றான் முத்தையன். இதை அவன் எதிர் பார்க்கவேயில்லை. நின்று யோசிக்கவும் நேரமில்லை. கைகளை நெறித்துக் கொண்டான். உதட்டைக் கடித்துக் கொண்டான். கணத்துக்குக் கணம் போலீஸ்காரர்களின் ஆர்ப்பாட்டக் கூச்சல் சமீபத்தில் வந்து கொண்டிருந்தது.

அப்போது அவன் உள்ளத்தில் மற்ற எல்லா நினைவுகளையும் அமுக்கிக் கொண்டு ஒரு பேருணர்ச்சி எழுந்தது. அது என்னவெனில் போலீஸார் கையில் தான் மறுபடியும் அகப்படக்கூடாது என்பதுதான். கடவுளை நினைத்துக் கைகூப்பி, "ஸ்வாமி! ஸ்வாமி! ஒரு தடவை என் கண்ணால் அபிராமியைப் பார்த்துவிடுகிறேன். அப்புறம் எனக்கு என்ன வந்தாலும் வரட்டும். அதுவரையில் அவர்கள் கையில் அகப்படாமல் என்னைக் காப்பாற்று!" என வேண்டிக் கொண்டான்.

எங்கேயாவது ஒளிந்து கொள்ளலாம் என்று ஒரு கணம் தோன்றிற்று. சுற்றுமுற்றும் பார்த்தான். வீட்டுக்குள் ஏறிக் குதிக்கலாமென்றால், ஏறுவதற்குள்ளேயே வந்து பிடித்து விடுவார்கள். சமீபத்தில் எங்கேயும் ஒளிந்து கொள்ளுவது சாத்தியமில்லை. இப்போதைக்கு ஓட வேண்டியதுதான். பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

முத்தையன் ஓடத் தொடங்கினான். வழி, திசை ஒன்றையும் கவனிக்காமல் கால் போன போக்கில் ஓடினான். ஊருக்கு அடுத்தாற்போல் ஒரு மைதானம். மைதானத்தில் மங்கலான நிலவு வீசிக்கொண்டிருந்தது. அந்த மைதானத்தைத் தாண்டும் வரையில் அபாயந்தான். அதற்கப்பால் இருபுறமும் மரங்களடர்ந்த சாலை. அதைப் பிடித்துவிட்டால் தப்பலாம்.

மைதானத்தில் முக்கால் பங்கு அவன் தாண்டிவிட்ட போது, பின்னால், போலீஸ்காரர்களின் ஆரவாரம் கேட்டது. இன்னும் விரைந்து ஓடிச் சாலையைப் பிடித்தான். பிறகு சாலையோரமாக, இருளடர்ந்த பக்கமாகவே பார்த்து ஓடிக்கொண்டிருந்தான். போலீஸ் ஆரவாரங்கள் நின்று வெகு நேரம் ஆன பிறகும் அவன் நிற்கவில்லை. ஏழெட்டு மைல் தூரத்துக்கப்பால் அந்தச் சாலையானது கொள்ளிடத்து லயன்கரைச் சாலையுடன் சேர்ந்தது. முத்தையன் அவ்விடம் வந்த போது சந்திரன் அஸ்தமித்து, நன்றாக இருளடர்ந்து விட்டது. அங்கே சாலை ஓரத்தில் ஒரு சுமைதாங்கி இருந்தது. அதில் சற்று உட்காரலாமென்று முத்தையன் உட்கார்ந்தான். அப்படியே தலையைச் சற்றுச் சாய்த்தான். அடுத்த நிமிஷம் நித்திரையில் ஆழ்ந்து விட்டான்.


*****

பலபலவென்று பொழுது புலர்ந்தது. நாலாவிதமான பட்சிகளின் கானம் கேட்டது. வயல்களின் மடைகளிலே பாய்ந்து கொண்டிருந்த தண்ணீர் தம்புரா சுருதியைப் போல் இனிமையாக ஒலித்தது. கொஞ்ச தூரத்தில் ஒரு குடியானவன் தோளில் கலப்பையுடன் உழவு மாடுகளை ஓட்டிக் கொண்டு தெம்மாங்கு பாடிக்கொண்டு வந்தான்.

"அபிராமி! உன் தொண்டை எப்போது இவ்வளவு லட்சணமாச்சு?" என்று சொல்லிக் கொண்டே முத்தையன் கண்களை விழித்தான். அந்தண்டையும் இந்தண்டையும் பார்த்து முழித்தான். உடனே நேற்றைய சம்பவங்கள் எல்லாம் ஞாபகம் வந்தன. சட்டென்று கீழே குதித்து பக்கத்தில் கொள்ளிடத்துப் படுகையில் இறங்கி அவ்விடம் அடர்ந்து வளர்ந்திருந்த நாணற் காட்டில் மறைந்து கொண்டான்.

குடியானவன் அந்தச் சுமைதாங்கியின் அருகில் வந்த அதே சமயம், இன்னொரு பக்கத்திலிருந்து இரண்டு போலீஸ் சேவகர்கள் வந்தார்கள். பாவம்! அவர்கள் இராத்திரியெல்லாம் கண்ணை விழித்து அலைந்து ரொம்பவும் களைத்துப் போய்க் காணப்பட்டார்கள்.

"அடே! இங்கே எங்கேயாவது ஒரு ஆளைக் கீளைப் பார்த்தாயா?" என்று ஒரு போலீஸ்காரன் அந்தக் குடியானவனைப் பார்த்துக் கேட்டான்.

குடியானவன் திருதிருவென்று விழிக்கவே, இன்னொரு போலீஸ்காரன், "அடே! என்னடா முழிக்கிறாய்? ஆளு, தேளு எதையாவது பார்த்தாயா?" என்று அதட்டுங் குரலில் கேட்டான்.

குடியானவன் தன் கையில் வைத்திருந்த ஒரு காகிதப் பொட்டலத்தைச் சட்டென்று பின்புறமாக எறிந்து விட்டு, "சாமி! நான் பார்க்கலேங்க! நான் பார்க்கவே இல்லைங்க!" என்று அலறினான்.

அவள் பொட்டலத்தை எறிந்ததைப் போலீஸ்காரர்களில் ஒருவன் பார்த்துவிட்டான். அதை எடுத்துப் பிரிக்கத் தொடங்கினான். குடியானவன், "ஐயோ! சாமி நான் இல்லை! நான் போடவே இல்லை!" என்று இன்னும் அதிகமாய்க் கதறினான். பிரித்த பொட்டலத்திற்குள் ஒரு தேளைக் கண்டதும், போலீஸ்காரன் அலறி அடித்துக் கொண்டு அதைக் கீழே போட்டான். இரண்டு கான்ஸ்டபிள்களும் அந்தக் குடியானவனுடைய இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டார்கள்.

"என்னடா சமாசாரம், நிஜத்தைச் சொல்லிவிடு! இல்லாவிட்டால்..."

"சாமி, சாமி, சொல்லிடறேனுங்க - எங்க துரைச்சாமி இருக்கானுல்ல, துரைச்சாமி! - அவன் நேத்தி நான் தூங்கிட்டிருந்த போது என் காதிலே கட்டெறும்பைப் போட்டானுங்க - அதற்குப் பதிலாய் அவன் மேலே போடறதுக்காகத் தேளைப் பிடிச்சுட்டு வந்தேனுங்க - சாமி, அது உங்களுக்கு எப்படியோ தெரிஞ்சுக்கிடுத்தே! அதல்ல ஆச்சரியமாயிருக்கு?" என்று மூக்கின் மேல் விரலை வைத்து ஆச்சரியப்பட்டான் குடியானவன். போலீஸ்காரர்கள் அவனைப் பிடரியைப் பிடித்து ஒரு நெட்டு நெட்டித் தள்ளிவிட்டு மேலே சென்றார்கள்.


*****

சற்றுத் தூரத்தில் மறைவிலிருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முத்தையன், நாணற் காட்டின் வழியாக மேலே நடக்கலானான். நடக்கும்போது யோசித்துக் கொண்டே போனான். இன்றெல்லாம் போலீஸ் நடமாட்டம் அதிகமாய்த்தானிருக்கும். ஆகையால், சாலைப் பக்கம் தலை காட்டக்கூடாது. ஒருவன் கொள்ளிடக்கரை நாணற் காட்டில் மட்டும் புகுந்து விட்டால் அவனைக் கண்டு பிடிக்க யாராலும் முடியாது என்று முத்தையன் கேள்விப்பட்டதுண்டு. அது உண்மையென்று இப்போது நன்றாய்த் தெரிந்தது. நாணலில் பத்து அடி தூரத்தில் உள்ளவனைக் கூடப் பார்க்க முடியாது. பல மைல் விஸ்தீரணம் படர்ந்திருக்கும் அக்காட்டில் மறைந்திருப்பவனை எங்கே என்று தேடுவது? எத்தனை பேர் தேடினால் தான் ஆகிற காரியமா?

ஆகவே, எவ்வளவு நாள் வேண்டுமானாலும் அங்கே நாணற் காட்டில் அவன் அகப்படாமல் இருக்கலாம். ஆனால் இருந்து என்ன செய்வது? எதற்காக இருக்க வேண்டும்? எத்தனை நாள் அப்படி இருப்பது? அபிராமியைப் பார்ப்பதற்கு வழி என்ன?

அபிராமியின் நினைவு வந்ததும் அவள் வீட்டை விட்டு எங்கே போயிருப்பாள் என்று சிந்திக்கத் தொடங்கினான். அப்போது நேற்று மத்தியானம் கான்ஸ்டபிள்கள் தன்னைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போகையில் வழியிலே செங்கமலத்தாச்சி வீதியின் மறுபக்கம் போய்க் கொண்டிருந்ததும், அவள் தன்னை வியப்புடனே பார்த்துவிட்டுச் சென்றதும் ஞாபகம் வந்தன. 'ஐயோ! அந்தப் பாவிகள் என்னைக் கைது செய்து கொண்டு போகிறார்கள் என்று மட்டும் தெரிந்திருந்தால் ஆச்சியிடம் அபிராமியைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லியிருப்பேனே?' என்று நினைத்தான். ஆனால் தான் சொல்லாது போனாலும் செங்கமலத்தாச்சியேதான் அபிராமி ஒண்டியாயிருக்கக் கூடாதென்று சொல்லி அவளைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துப் போயிருக்க வேண்டும். இல்லாவிட்டால், அபிராமி வேறு எங்கே போயிருப்பாள்?

ஒரு வேளை...ஒரு வேளை... கார்வார் பிள்ளைதான் மறுபடியும் வந்திருப்பானோ? அந்த நினைவே அவனுக்கு எல்லையில்லாத துன்பத்தையளித்தது. நூறு தேள்கள் சேர்ந்தாற்போல் கொட்டிவிட்ட மாதிரி இருந்தது. தலையை அதிவேகமாக ஆட்டி அசைத்து அந்த நினைவைப் போக்கிக் கொண்டான். அப்படி ஒரு நாளும் இராது. அவ்வளவு துணிச்சல் அவனுக்கு ஒரு நாளும் வராது. ஆனால் ஏற்கனவே அவன் தனக்குச் செய்த தீங்கு தான் கொஞ்சமா? பாவி, போலீஸில் பொய் கேஸ் எழுதி வைத்துத் தன்னைக் கைது செய்தானே? அடே கொலைபாதகா!

அப்போது முத்தையனுக்கு வந்த கோபத்தில் பக்கத்திலிருந்த நாணலையெல்லாம் பிய்த்தெறியத் தொடங்கினான். நாணலின் கூரிய முனை அவன் உள்ளங்கையை அறுத்து, அதனால் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது கூட அவனுக்குத் தெரியவில்லை. அப்போது 'பட்' என்று அவனுக்குச் சமீபத்தில் ஒரு கல் வந்து விழுந்தது. தூரத்தில் சாலையில் "சூ! சூ!" என்று சத்தம் கேட்டது. சாலையில் போகிறவன் யாரோ நாணல் அசைவதைக் கண்டு நரியாக்கும் என்று நினைத்துக் கல்லை விட்டு எறிந்திருக்க வேண்டும்.

நாணற் காட்டிற்குள்ளே கூட ஜாக்கிரதையாய்த் தானிருக்க வேண்டுமென்று முத்தையன் அப்போது அறிந்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:43 am

16."திருடன்! திருடன்!"


அன்று சாயங்காலம் கையெழுத்து மறையும் நேரத்துக்கு முத்தையன் நாணற் காட்டிலிருந்து லயன் கரைச் சாலைக்கு வந்தான். நேற்று மத்தியானத்துக்குப் பிறகு அவன் சாப்பிடவில்லையாதலால், கோரமான பசி அவனை வாட்டிக் கொண்டிருந்தது. உடம்பு சோர்ந்து போயிருந்தது. தள்ளாடித் தள்ளாடி நடந்தான். லயன் கரைக்குப் பக்கத்தில் இராஜன் வாய்க்காலுக்கு அப்பால் ஒரு வாழைத் தோட்டம் இருந்தது. அதில் வாழைக்குலைகள் தொங்கிக் கொண்டிருந்தன. முத்தையன் அங்கே சென்று, ஒரு வாழைத்தாரில் சற்றுச் சிவந்திருந்த ஒரு காயைப் பறித்துக் கடித்தான். தின்ன முடியாமல் துப்பி விட்டான்.

கொஞ்ச தூரத்தில் தென்னந் தோப்புக்கு மத்தியில் ஒரு கோயிலின் ஸ்தூபி தெரிந்தது. அதற்கு அருகில் புகை கிளம்பிற்று. அங்கே ஒரு கிராமம் இருக்க வேண்டும். கிராமத்திலுள்ள வீடுகளில் இப்போது சமையல் நடந்து கொண்டிருக்க வேண்டும். இதை நினைத்தபோது முத்தையனுடைய பசி அதிகமாயிற்று. அவனை அறியாமலேயே முத்தையனுடைய கால்கள் அந்தக் கிராமத்தை நோக்கி நடந்தன.


*****

திருப்பரங்கோவில் லாக்-அப்பிலிருந்த இரண்டு கைதிகள் தப்பி ஓடிவிட்டார்களென்ற செய்தி ஊருக்கு ஊர் வாய்மொழியாகவே பரவி நெடுந் தூரத்துக்கு எட்டி விட்டது. தப்பியோடியவர்கள் இரண்டு பேரும் பொல்லாத திருடர்கள் என்றும் கொலை பாதகங்களுக்கு அஞ்சாதவர்கள் என்றும் செய்தி பரவிற்று. அவர்கள் எந்தெந்த ஊரில் எந்தெந்த மாதிரிக் கொடுமைகளைச் செய்தார்கள் என்பதாகக் கதைகளும் பரவின. இந்தச் சந்தர்ப்பத்தில் ஒவ்வொருவரும் தாங்கள் கேட்டிருந்த திருடர் கதைகளைச் சொல்ல ஆரம்பித்தார்கள்

பனங்குடி கிராமத்தில் சுப்பையா முதலியார் வீட்டில், முதலியார் தாழ்வாரத்தில் உட்கார்ந்து அனுஷ்டானம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தாயார் - வயதான கிழவி - முற்றத்தின் குறட்டில் படுத்துக் கொண்டிருந்தாள். கூடத்தில் மாடத்தில் மண்ணெண்ணெய் சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. முதலியாரின் மகன் அந்த விளக்கின் வெளிச்சத்தில் பாடப் புத்தகத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு ராகம் போட்டு வாசித்துக் கொண்டிருந்தான்.

"ஆகையால், பிள்ளைகளே! பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்!" என்று பையன் பாடத்தை முடித்தான்.

அந்தச் சமயம் பார்த்து, வாசலிலே நாய் குரைத்தது!

முதலியார், தமது மனைவியைக் கூப்பிட்டு, "ஏய்! கொல்லைக்கதவைப் பார்த்துத் தாளிட்டாயா! ஊரெல்லாம் திருட்டுப் பயமாயிருக்கிறது. திருப்பரங்கோயில் ஜெயிலிலிருந்து இரண்டு பக்காத் திருடர்கள் தப்பி ஓடிப்போயிருக்கிறார்களாம்" என்றார்.

"திருடன் வந்தால் வரட்டும். இங்கே என்னத்தைக் கொண்டு போவேன்? கைக் கொலுசைக் கூடத்தான் வாய்தாப் பணத்துக்கு விற்றாய் விட்டதே?" என்றாள் அவர் மனைவி.

அச்சமயம், வாசற்கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டார்கள். மறுபடியும், அந்தச் சத்தம்.

முதலியார், "யார் அது?" என்று இரைந்தார்.

"நான் தான்."

"நான் தான் என்றால் யார்?"

"நான் தான் என்றால் நான் தான். கதவைத் திறங்க, ஐயா!"

"யாரடா அவன் அவ்வளவு திமிராகப் பேசுகிறது?" என்று சொல்லிக் கொண்டு முதலியார் எழுந்திருந்தார்.


*****

குறட்டில் படுத்திருந்த கிழவி தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்து, "இந்தாடாப்பா, சுப்பையா! நீ போவாதே! சொல்லிவிட்டேன். அதெல்லாம் நீ போகவே கூடாது" என்று வழி மறித்தாள். முதலியார் அதைப் பொருட்படுத்தாமல் திமிறிக் கொண்டு போனார். கிழவி சட்டென்று கூடத்துக்குப் போய் அங்கிருந்த சிம்னி விளக்கை எடுத்துக் கொண்டு முதலியாரைப் பின் தொடர்ந்தாள்.

முதலியார் கதவைத் திறந்து, "யாரடா அது?" என்றார்.

"ரொம்பப் பசிக்கிறது. ஐயா! கொஞ்சம் சாதம் போடுவீர்களா?" என்றான், வாசலில் நின்ற முத்தையன். அவன் பேச்சு ரொம்பவும் ஈனஸ்வரத்தில் இருந்தது.

அவன் அப்படிச் சொன்னானோ இல்லையோ, பின்னால் சிம்னி விளக்குடன் வந்து கொண்டிருந்த கிழவி, "ஐயோ! திருடன்! திருடன்!!" என்று கூவிக்கொண்டே விளக்கைக் கீழே போட்டாள். விளக்கு அணைந்தது. இருள் சூழ்ந்தது.

"திருடன்! திருடன்!" என்று அந்தக் கிழவி போட்ட கூச்சலுக்கு நாலா பக்கங்களிலிருந்தும் எதிரொலி கிளம்பியது.

அடுத்த வீடு, அண்டை வீடு, எதிர் வீடுகளில், "திருடன்! திருடன்!" என்ற ஒலி எழுந்தது. அது வீடு வீடாகப் பரவி, கிராமத்தின் கடைசி வீடு வரையில் சென்றது. "திருடன்! திருடன்!" என்று கூவிக் கொண்டே சிலர் வீட்டுக் கதவை அவசரமாய்த் தாழ்ப்பாள் போட்டார்கள். வேறு சில தீர புருஷர்கள் வீட்டை விட்டு வெளியே கிளம்பி ஓடி வந்தார்கள். அவரவர்களும் கையில் அகப்பட்டதை - தடி, உலக்கை, அரிவாள், மண்வெட்டி - இப்படிக் கிடைத்ததை எடுத்துக் கொண்டு வந்தார்கள்.

விளக்கு அணைந்ததோ இல்லையோ, சுப்பையா முதலியார் சட்டென்று உள்ளே புகுந்து கதவைப் படார் என்று சாத்தித் தாழ்ப்பாள் போட்டுவிட்டார். முத்தையன் ஒரு நிமிஷம் திகைத்துப் போய் நின்றான். அப்புறம, கிராமத்தாரெல்லாம் கூச்சல் போட்டுக் கொண்டு ஓடி வருவதைப் பார்த்து இனி அங்கு நிற்பது அபாயம் என்று அறிந்து ஓடத் தொடங்கினான்.

"அதோ ஓடறான்!" "அதோ ஓடறான்!" "விடாதே! பிடி!" என்று கூக்குரல்கள் எழுந்தன. தெருவிலிருந்த நாய்கள் எல்லாம் ஏக காலத்தில் குரைத்தன.

முத்தையன் வீதியில் கொஞ்ச தூரம் ஓடியதும் நாலாபுறமிருந்தும் ஜனங்கள் தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டான். இனி, ஓடுவதில் பயனில்லை என்று தோன்றிற்று. கோவிலுக்கெதிரில் இருந்த லாந்தர் கம்பத்தினடியில் போய் வெளிச்சத்தில் நின்று, தான் திருடனில்லையென்றும் திருடுவதற்கு வரவில்லை என்றும் அவர்களுக்குச் சொல்லிவிடுவது தான் சரியென்று எண்ணினான். அந்த லாந்தர் வெளிச்சத்தண்டை அவன் போன போது யாரோ ஒருவன் கையில் சூரிக் கத்தியுடன் தன்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டான். அடுத்த கணத்தில் அவ்வாறு ஓடிவந்தவன் கத்தியை ஓங்கினான். முத்தையன் அவன் கையைத் தாவிப் பிடித்துக் கத்தியைப் பிடுங்கினான். அப்படி பிடுங்கும்போது, கத்தி வைத்திருந்தவனின் தோளில் காயம்பட்டு இரத்தம் பீறிட்டது. அவன் கீழே விழுந்தான்.

முத்தையனுடைய கையிலே இப்போது கத்தி இருந்தது. அதில் இரத்தம் தோய்ந்திருந்தது. முத்தையனுடைய கையிலும் துணியிலுங்கூட இரத்தம். லாந்தர் வெளிச்சத்தில் முத்தையன் இதையெல்லாம் பார்த்தான். அவன் முகம் ஒரு நொடியில் பயங்கரமாக மாறிற்று. கண்கள் திருதிருவென்று விழித்தன. பற்கள் நறநறவென்று சப்தித்தன. இரத்த வெறியென்பது இது தான் போலும்!

அதற்குள்ளே கிராமத்தார் அநேகர் கையுந் தடியுமாக அவனை அங்கு வந்து சூழ்ந்தார்கள். முத்தையன் சூரிக்கத்தியைத் தூக்கிக் காட்டி, "வாருங்களடா" என்று ஒரு கர்ஜனை செய்து பல்லைக் கடித்தான். வந்தவர்கள் அவனுடைய பயங்கரத் தோற்றத்தைப் பார்த்தார்கள். இரத்தம் தோய்ந்த கத்தியைப் பார்த்தார்கள். கீழே காயம்பட்டுக் கிடந்தவனையும் பார்த்தார்கள். ஒருவன் "ஐயோ!" என்று கூச்சலிட்டுக் கொண்டு திரும்பி ஓடினான். அவ்வளவுதான்; எல்லாரும் நாலாபுறமும் சிதறி ஓடத் தொடங்கினார்கள். முத்தையன் பயங்கரமாகக் கூச்சலிட்டுக் கொண்டு அவர்களைத் துரத்தத் தொடங்கினான்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:44 am

17.தண்ணீர்க் கரையில்


ஐந்து நிமிஷத்திற்கெல்லாம் அந்தத் தெரு வீதியில், மனுஷ்யர் யாரும் இல்லாமல் போயினர். காயம் பட்டுக் கீழே கிடந்தவன் கூட எழுந்து ஓடிப் போனான். நாய்கள் மட்டுந்தான் ஆங்காங்கு தூரதூரமாய் நின்று குரைத்துக் கொண்டு இருந்தன.

முத்தையன் சாவதானமாய் ஊரைவிட்டு நடந்து சென்றான். அவன் வந்த காரியம் நிறைவேறவில்லை. சாப்பாடு கிடைக்கவில்லை; பசி தீரவில்லை. ஆனாலும் அவன் உள்ளத்திலே ஒரு பெரிய உற்சாகம் தோன்றியிருந்தது. அவனுடைய உடம்பிலிருந்த சோர்வெல்லாம் அந்த நேரம் எங்கேயோ போய்விட்டது. இன்னதென்று விவரிக்க முடியாத ஒரு கிளர்ச்சி அவன் உள்ளத்தில் தோன்றியது போலவே உடம்பிலும் ஏற்பட்டிருந்தது. சுருக்கமாகச் சொன்னால், அவன் அப்போது வெற்றி வெறியில் முழுகியிருந்தான்.

உலகத்திலே கோழைகள் தான் அதிகம்; உயிருக்குத் துணிந்த ஒருவன் உயிர்ப்பற்றுள்ள நூறு பேருக்குச் சமானம் என்பதை அவன் அப்போது அநுபவத்தில் கண்டான். ஏற்கெனவே முரட்டுச் செயல்களில் பிரியமுள்ள அவனுக்கு இந்த அறிவு அளவிலாத உற்சாகத்தை உண்டு பண்ணியது.

நட்சத்திரங்களின் மங்கலான வெளிச்சத்தில் குருட்டாம் போக்காய் வழியைக் கவனியாமல் நடந்து கொண்டு போனவன், அறுவடையான ஒரு சோளக் கொல்லையை அடைந்தான். அதிலே குருவி ஓட்டுவதற்காகப் போட்டு இருந்த பரண் ஒன்று இருந்தது. அதில் ஒருவரும் இல்லையென்பதைக் கண்டு ஏறிப் படுத்துக் கொண்டான். வெகுநேரம் வரை தூக்கம் பிடிக்கவில்லை; புரண்டு கொண்டிருந்தான். அவனுடைய உள்ளத்தில் ஒன்றின்மேல் ஒன்றாக எத்தனயோ எண்ணங்கள் அலையெறிந்து வந்து கொண்டிருந்தன. அவற்றில் அபிராமியும், கல்யாணியும் அதிகமாக இடம் பெற்றிருந்தார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ?


*****

முத்தையனுக்கு முன்னால் ஒரு பெரிய தலை வாழை இலை போட்டிருக்கிறது. அதில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் வீட்டில் குசேலருக்குப் பரிமாறி இருந்தது போல் உணவு வகைகள் பரிமாறப்பட்டிருக்கின்றன. சாதம், கறிவகைகள் பட்சணங்கள் எல்லாம் போர்போராய்க் குவிந்திருக்கின்றன. முத்தையன் அவற்றை அள்ளிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். சமையற்காரக் குண்டோ தரன் ஒருவன் தட்டில் சாதம் கொண்டு வருகிறான். அவன் சாதம் போடப் போட, முத்தையன் "இன்னும்போடு" என்று சொல்கிறான். பரிசாரகனுக்குக் கோபம் வந்து, "இனிமேல் உன் தலையிலே தான் போடவேணும்!" என்று தாம்பாளத்தை முத்தையன் தலையில் போடுகிறான்...

இச்சமயத்தில் முத்தையன் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்திருந்தான். பரணின் மேற்கூரையில் இருந்து சில சோளத் தட்டைகள் நழுவி அவன் தலையில் விழுந்திருந்தன. கொஞ்ச தூரத்தில் "மே" என்று ஆடு கத்திற்று. மேலே வெயில் சுளீரென்று அடித்தது.

'இத்தனை நேரமா தூங்கிப் போய்விட்டோ ம்?' என்று முத்தையன் எண்ணியதும், முதல் நாள் இராத்திரி சம்பவங்கள் எல்லாம் ஞாபகத்தில் வந்தன. பக்கத்தில் கிடந்த கத்தி அவையெல்லாம் உண்மைதான் என்று ருசுப்படுத்திற்று.

பசியோ காதை அடைத்துக் கொண்டு போயிற்று. பரண் மீதிருந்தே நாலா பக்கமும் பார்த்தான் முத்தையன். கொஞ்ச தூரத்தில் கொள்ளிடம் தெரிந்தது. அதன் நீரோட்டத்திற்குச் சமீபமாய் ஒரு கட்டை வண்டி நின்றது. அதனுள்ளிருந்து ஒரு ஸ்திரீயும் புருஷனும் இறங்கினார்கள். அவர்கள் வண்டிக்குள்ளிருந்து ஒரு மூட்டையை எடுத்தார்கள். சரி, சரி அது கட்டுச் சாத மூட்டைதான் என்று முத்தையன் தீர்மானித்துக் கொண்டான். அவனுடைய பசி நூறு மடங்கு அதிகமாயிற்று.

ஒரு நிமிஷம் யோசனை செய்தான் முத்தையன். அந்த பரண்மேலே கிடந்த ஒரு பழைய கம்பளியின் மேல் அவனுடைய பார்வை தற்செயலாய் விழுந்தது. சினிமாக்களில் டக்ளஸ் பேர்பாங்ஸ் போன்ற திருடன் வேஷக்காரர்களை அவன் பார்த்ததுண்டு. அவர்களுடைய வேஷம் அவன் மனக்கண் எதிரே தோன்றவே, கத்தியினால் அந்தக் கம்பளியில் ஒரு துண்டு கிழித்துக் கொண்டான். அதன் நடுவில் இரண்டு கண்ணுக்கும் இரண்டு துவாரம் செய்து, அதை முகத்தில் கட்டிக் கொண்டான். மேற்படி கட்டை வண்டி நின்ற இடத்தை நோக்கி வேகமாக நடந்தான்.


*****

புருஷனும் பெண்சாதியும் சாவகாசமாய்ப் பல் துலக்கிவிட்டு, நீர்க்கரையில் மணல்மேல் சாவதானமாய் உட்கார்ந்து கட்டுச் சாத மூட்டையை அவிழ்த்தார்கள். முதல் நாள் இரவு பிசைந்த புளியஞ் சாதத்தின் வாசனை கமகமவென்று வந்தது. சாதத்தின்மேல் இருந்த இலைகளை எடுத்துத் தண்ணீரில் அலம்பிப் போட்டான் கணவன். "இதோ பார்! தினந்தான் நீ எனக்குச் சாதம் போடுகிறாயே! இன்றைக்கு நான் உனக்குப் போடுகிறேன்" என்றான் அவன்.

"என்னமோ, இன்னிக்கு மழைதான் வரப்போகுது. இல்லாட்டிப் போனா, கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் போனாலும் போயிடும்!" என்றாள் மனைவி.

அந்தச் சமயம் "ஹா!" என்று ஒரு பயங்கரமான குரலைக் கேட்டு இருவரும் திடுக்கிட்டார்கள். பக்கத்தில் இருந்த நாணற் காட்டிலிருந்து முகமூடியணிந்த ஒரு பயங்கர உருவம் கையில் கத்தியுடன் வந்து கொண்டிருந்தது. உடனே இருவரும் கதிகலங்கிப் போய் எழுந்து, வண்டி கிடந்த கரையை நோக்கி ஒரே ஓட்டமாய் ஓடினார்கள். அந்த உருவம் பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டும், இடையிடையே பயங்கரமாகக் கூவிக்கொண்டும் அவர்களை கொஞ்ச தூரம் துரத்திற்று. பிறகு திரும்பித் தண்ணீர்க் கரைக்குச் சென்று, கூடையிலிருந்த சாதத்தை எடுத்து 'லபக்' 'லபக்' என்று விழுங்கத் தொடங்கியது. ஏறக்குறைய பாதி கூடை காலியான பிறகு கை கழுவிற்று அந்த உருவம். மறுபடி அந்தக் கூடையைத் துணியைப் போட்டுச் சுற்றிக் கட்டி, அதைக் கையில் எடுத்துக் கொண்டு நாணற் காட்டிற்குள் புகுந்து மறைந்தது.

வண்டியின் அருகில் நின்று பிரமை கொண்டவர்கள் போல் இதைப் பார்த்துக் கொண்டிருந்த தம்பதிகள், அந்தப் பயங்கர உருவம் மறைந்ததும் வண்டியைப் பூட்டிக் கொண்டு கிளம்பினார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:45 am

18.அபிராமியின் பிரயாணம்


முத்தையனும் குறவனும் தப்பிச் சென்ற செய்தி கேட்ட உடனே வீட்டை விட்டுக் கிளம்பிய ஸர்வோத்தம சாஸ்திரி அன்றிரவு திரும்பி வரவில்லை. அப்புறம் ஐந்து ஆறு நாள் வரையில் அவர் வரவில்லை. கடைசியில் ஒரு நாள் சாயங்காலம் வந்து சேர்ந்தார். ரொம்பவும் அலைந்து களைத்துப் போய், அவர் முகம் பார்க்க முடியாமல் கோரமாயிருந்தது.

அவர் வந்து கூடத்தில் கிடந்த சாய்மான நாற்காலியில் "அப்பாடா!" என்று உட்கார்ந்ததும், மீனாட்சி அம்மாள் வெறுமனே அவரிடம் போனால் எரிந்து விழுவார் என்று அறிந்தவளாதலால், கையில் ஒரு டம்ளர் தீர்த்தத்துடன் போய் அருகில் நின்றாள். அவர் தீர்த்தம் சாப்பிட்டதும் "என்ன இத்தனை நாளாய் இப்படி வராமலிருந்து விட்டீர்கள்? ரொம்பக் கவலையாய்ப் போயிற்று. அந்தப் பெண்ணானால் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாயிருக்கிறாள்..." என்று சொல்ல, சாஸ்திரி, "அழறாளா? நன்னா அழச் சொல்லு!... இன்னும் அந்தப் பெண் இங்கே தான் இருக்கிறாளா, என்ன?" என்றார்.

"ஆமாம்; அவளுக்குத்தான் வேறு திக்கு கிடையாதே! எங்கே போவாள்?"

"ரொம்ப நன்றாயிருக்கிறது; அதற்காக நாம் என்னத்தைச் செய்கிறது? எங்கே அவள்? கூப்பிடு, பார்க்கலாம்?"

கதவின் ஓரத்திலிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த அபிராமி அப்போது கண்ணைத் துடைத்துக் கொண்டு வந்தாள்.

சாஸ்திரி அவளைப் பார்த்து, "ஆஹா! பெண்ணே! அழுகிறாயா? அழு அழு! உன் அண்ணன் அகப்படக் கூடாது என்று பிரார்த்தனை செய்தாயல்லவா? அவன் அகப்படவில்லை. இப்போது உனக்குச் சந்தோஷந்தானே?" என்றார். பிறகு, "ஐயோ பைத்தியமே!" என்று சொல்லித் தலையில் அடித்துக் கொண்டார்.

அபிராமிக்கு ஒன்றுமே புரியவில்லை. முத்தையன் அகப்படவில்லையென்று மட்டும் தெரிந்தது. ஆனால் இன்ஸ்பெக்டர் பேசிய தினுசிலிருந்து ஏதோ விபரீதம் நேர்ந்துவிட்டதென்றும் நினைக்க வேண்டியதாயிருந்தது.

"அவளை ஏன் மிரட்டுகிறீர்கள்? அவளுக்கு என்ன தெரியும், குழந்தை!" என்றாள் மீனாட்சி அம்மாள்.

"அவளுக்கு ஒன்றும் தெரியாது; அவள் அண்ணனுக்கும் ஒன்றும் தெரியாது...பெண்ணே! இனிமேல் உன் அண்ணனை நீ மறந்துவிடு. வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது. அவன் லாக்-அப்பிலிருந்து தப்பித்துப் போகாமலிருந்திருந்தால் மறுநாளே நான் விடுவித்திருப்பேன். தப்பித்துப்போன குற்றத்தோடிருந்தாலும் சொற்பத் தண்டனையோடு போயிருக்கும். இப்போதோ அவன் மேல் ஐந்து கொள்ளைக் குற்றங்கள் இருக்கின்றன. இந்தப் பழைய 'கேடி' குறவனையும் அவனுடைய சகாக்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டிருக்கிறான். கொலை ஒன்றைத் தவிர, 'பீனல் கோ'டிலுள்ள எல்லாக் குற்றங்களும் செய்துவிட்டான். கட்டாயம் ஒருநாள் அவனைப் பிடித்தே தீருவோம். அப்போது தீவாந்திர சிட்சைக்குக் குறைந்து விதிக்க மாட்டார்கள்...இனிமேல் உனக்கு அண்ணன் இல்லையென்று நினைத்துக் கொள்" என்றார் ஸர்வோத்தம சாஸ்திரி.

இதைக் கேட்ட அபிராமி விம்மி விம்மி அழத் தொடங்கினாள். மீனாட்சி அம்மாள் அவளை அழைத்துக் கொண்டு உள்ளே போய், "நீ அழாதே, அம்மா! அவர் கோபத்தில் ஏதோ சொல்கிறார். அப்படியெல்லாம் உனக்கு ஒன்றும் வராது" என்று தேறுதல் சொல்லிவிட்டு மறுபடியும் கூடத்திற்குத் திரும்பி வந்தாள்.

"இந்தப் பெண்ணை என்ன செய்கிறதென்று தெரியவில்லையே? அவளை நம் வீட்டில் எத்தனை நாளைக்கு வைத்துக் கொண்டிருப்பது? ரொம்பவும் பிசகாயிற்றே. இவளுக்குப் பந்துக்கள், வேண்டியவர்கள் யாரும் இல்லையா?" என்றார் சாஸ்திரி.

"ஒருவரும் கிடையாது, பெரிய சங்கடந்தான்... எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது, சொல்லட்டுமா?"

"பேஷாய்ச் சொல்லு! 'யோசனை சொல்வதில் மந்திரிக்குச் சமானம்' என்று உத்தம பத்தினியைப் பற்றி சாஸ்திரம் கூறுகிறது."

"பாருங்கள்! சென்னைப் பட்டணத்தில் என் நாத்தனார் சரஸ்வதி வித்யாலயம் நடத்துவதுதான் தெரியுமே? அதற்கு ஒத்தாசை செய்ய வேண்டும், ஒத்தாசை செய்ய வேண்டும் என்று பிராணனை வாங்கிக் கொண்டிருக்கிறார் அல்லவா? இந்தப் பெண்ணை அனுப்பி வைக்கலாமே? அதுவும் ஒரு உதவிதானே?"

"பேஷான யோசனை. இப்போதே சாரதாமணிக்குக் கடுதாசி எழுதிவிடு."

"பார்த்தீர்களா? உலகத்திலே நாத்தனார்களுக்குக் கூட உபயோகம் இருக்கிறதே?" என்று சொல்லி மீனாட்சி அம்மாள் சிரித்தாள்.

இவ்வாறு செய்து கொண்ட தீர்மானத்தை மேற்படி தம்பதிகள் விரைவிலேயே நிறைவேற்றி வைத்தார்கள். மீனாட்சி அம்மாள், அபிராமியின் புத்திசாலித்தனத்தைப் பற்றியும் நற்குணங்களைப் பற்றியும் வர்ணனை செய்து எழுதியிருந்ததைப் படித்துவிட்டு, சரஸ்வதி வித்யாலயத்தின் தலைவி சகோதரி சாரதாமணி அம்மாள் அவளை உடனே அனுப்பிவைக்கும்படி பதில் எழுதினாள். மீனாட்சி அம்மாள் கூடச் சென்று அபிராமியை வித்தியாலயத்தில் சேர்த்துவிட்டு வரவேணுமென்று ஏற்பாடாயிற்று.

அவ்வாறே ஒரு நாள் மீனாட்சி அம்மாளும் அபிராமியும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் ஏறிச் சென்னைக்குப் பிரயாணமானார்கள். ரயில் போகத் தொடங்கியதும் அபிராமிக்கு அவளையறியாமல் கண்ணீர் வந்தது. அண்ணனை ஆபத்தான நிலைமையில் விட்டுவிட்டு நாம் தூரதேசம் போகிறோம் என்ற எண்ணம் அவளுக்கு வேதனையளித்தது. முத்தையனுக்கு இந்தத் துன்பமெல்லாம் தன்னால்தான் வந்தது என்று எண்ணியபோது அவளுடைய வேதனை பன்மடங்கு அதிகமாயிற்று. 'ஆகா; இப்போது தன் அருகில் முத்தையன் மட்டும் உட்கார்ந்து கொண்டு வந்தால், இந்த ரயில் பிரயாணம் எவ்வளவு உற்சாகமாயிருக்கும்?'

இப்படி இவள் எண்ணியபோது, "முத்தையன்" என்ற வார்த்தை காதில் விழவே உற்றுக் கவனிக்கத் தொடங்கினாள்.


*****

"பேப்பர்லே முத்தையனைப் பற்றி ஏதாவது போட்டிருக்கா?" என்று அதே வண்டியில் உட்கார்ந்து கொண்டிருந்த பிரயாணி ஒருவர் கேட்டார்.

"ஊரிலே இருக்கிற திருடனையெல்லாம் பற்றிப் போடுவதுதான் பத்திரிகைகளுக்கு வேலையாக்கும்" என்றார் ஒருவர்.

"இவன் அப்படியொன்றும் சாமான்யபட்ட திருடன் இல்லை. நேற்றைய சமாசாரம் கேட்டீர்கள் அல்லவா?"

"இல்லையே? இன்னும் எங்கேயாவது கொள்ளை நடந்ததோ?"

"இல்லை; இல்லை. சங்கரமடத்தில் இரண்டு நாளைக்கு முன்பு ஒரு கல்யாணம் நடந்ததாம். கல்யாணத்துக்குப் பிறகு நேற்றைக்கு, பெண் மாப்பிள்ளை முதலியவர்கள் சாலையோடு போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது விளக்கேற்றுகிற நேரத்தில், திடீரென்று முத்தையனும் ஐந்தாறு திருடர்களும் வந்து சூழ்ந்து கொண்டார்களாம். பெண் மாப்பிள்ளையுடன் வந்த ஆண் பிள்ளைகள் எல்லாம் பயந்து ஓடியே போய்விட்டார்களாம். ஆனால் கல்யாணப் பெண் மட்டும் தைரியமாய் முன்னால் வந்து, முத்தையனிடம், 'அண்ணா! என்னை உன் தங்கச்சி என்று நினைத்துக் கொள். முந்தா நாள் தான் தாலி கட்டிக் கொண்டேன். எங்களை ஒன்றும் பண்ணாதே!' என்றதாம். 'நான் உன் தங்கச்சி' என்றதும் முத்தையன் திடீரென்று அழுது விட்டானாம். அவர்களை ஒன்றும் பண்ணாமல் மற்றத் திருடர்களையும் அழைத்துக் கொண்டு ஒரு நொடியில் மறைந்து போய் விட்டானாம். என்ன ஆச்சரியம், பார்த்தீர்களா?"

"முத்தையனுக்கு ஒரு தங்கை உண்டு என்றும், அவள் மேல் அவன் உயிராயிருந்தானென்றும் சொல்கிறார்களே, இது நிஜமா, ஸார்!"

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அபிராமி, பொங்கிக் கொண்டு வந்த அழுகையை மிகவும் பிரயத்தனப் பட்டுத் தடுத்துக் கொண்டாள்.

"அண்ணா! அண்ணா! உன்னை மறுபடியும் இந்த ஜன்மத்தில் காண்பேனா?" என்று அவள் நெஞ்சம் அலறிக் கொண்டிருந்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:47 am

19.கச்சேரியில் கள்ளன்


'மகா-ஸ்ரீ-ஸ்ரீ-ஸ்ரீ மகாகனம் பொருந்திய முத்தையப் பிள்ளை அவர்கள் நாளது ஜுலை மீ 20வ புதன் கிழமை இராத்திரி 11 மணிக்கு உம்முடைய வீட்டுக்கு விஜயம் செய்வார்கள். அவர்களை தக்கபடி உபசரித்து வரவேற்பதற்குச் சித்தமாயிருக்க வேண்டியது. கொஞ்சமாவது அலட்சியமாய் இருப்பதாய்த் தெரிந்தால், கடுமையான சிட்சை அனுபவிக்க நேரிடும்.'

இம்மாதிரிக் கடிதங்கள் அந்தத் தாலுக்காவிலுள்ள ஐம்பது அறுபது பெரிய மனிதர்களுக்கு ஒரே நாளில் கிடைத்தன. கடிதம் பெற்றவர்கள் கதிகலங்கிப் போனார்கள். அந்தச் செய்தி வாய்மொழியாகத் தாலுகா முழுவதும் பரவிற்று. ஜனங்கள் அடைந்திருந்த பரபரப்பைச் சொல்லி முடியாது.

குடித்தனக்காரர்கள் வீட்டுக் கதவுகளுக்கு இரட்டைத் தாள்ப்பாள் போட ஆரம்பித்தார்கள். இரும்புப்பெட்டிகளை இழுத்து இழுத்துப் பார்த்துப் பூட்டினார்கள். அநேகம் பேர் தலைமாட்டில் பெரிய தடியை வைத்துக் கொண்டு தூக்கினார்கள். ரொம்பப் பெரிய மனுஷர்கள் சிலர் துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பம் போட்டார்கள். வேறு சிலர் வஸ்தாதுகளுக்குச் சம்பளம் கொடுத்து வீட்டில் வைத்துக் கொண்டார்கள். சிலர் தாங்களே சிலம்பம் பழகத் தொடங்கினார்கள்.

இராத்திரியில் வீதியில் நாய் குரைத்தால் தீர்ந்தது; அன்றிரவு ஊரில் யாருக்கும் தூக்கம் கிடையாது.

சாலைகளில் அஸ்தமித்த பிறகு பிரயாணம் செய்வது அநேகமாக நின்று போயிற்று. அப்படிப் பிரயாணம் செய்தாலும், கையில் தடிகளுடன் தீவட்டி கொளுத்திக் கொண்டுதான் கிளம்பினார்கள். ஒரு தடவை, இப்படி எதிரும் புதிருமாய் வந்த இரண்டு கோஷ்டியினர், ஒருவரையொருவர் திருடர் கூட்டம் என்று நினைத்துக் கொண்டு அடித்துக் கொண்டார்கள்!


*****

திருடன் முத்தையனும் மேலும் மேலும் துணிகரமான செயல்களைச் செய்துகொண்டு வந்தான். சில சமயம், கடிதம் அனுப்பிய பெரிய மனிதர்களின் வீட்டுக்குக் கடிதத்தில் குறிப்பிட்ட தேதியிலேயே அவன் தைரியமாகப் போவான். வேறு சில சமயம் முன் பின்னாகப் போய் அவர்களைத் திடுக்கிடச் செய்வான்.

அவன் போகுமிடங்களுக்கெல்லாம் தன்னந்தனியாகவோ, இரண்டொருவரை மட்டும் அழைத்துக் கொண்டோ தான் போவான். ஆனால், அவனுடைய ஆட்கள் கொஞ்சம் தூரத்தில் நின்று கொண்டிருப்பதாய் எண்ணிக்கொண்டு, குடித்தனக்காரர்கள் அவன் கேட்டபடி நகை நாணயங்களைக் கொடுத்து விடுவார்கள்! புருஷர்கள் ஒரு வேளை மார் தட்டிக் கொண்டு சண்டைக்குக் கிளம்பினாலும், ஸ்திரீகள் அவர்கள் காலில் விழுந்து கெஞ்சி, கொள்ளைக்காரன் கேட்டதைக் கொடுத்து அனுப்பிவிடச் சொல்வார்கள்.

"அங்கே அப்படிச் செய்தான்", "இங்கே இப்படிச் செய்தான்" என்ற கதைகள் பரவப் பரவ, ஜனங்களின் பீதி வளர்ந்தது. அவ்வளவுக்கு முத்தையனுடைய துணிச்சலும் அதிகமாகிக்கொண்டு வந்தது. ஆனால் கோவிந்த நல்லூரில் அவன் செய்த காரியந்தான் அவனுடைய துணிச்சலான காரியங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தது போலிருந்தது.

கோவிந்தநல்லூரில் ஒரு பெரிய வீட்டில் கல்யாணம். வீதியை அடைத்துப் போட்டிருந்த கொட்டாரப் பந்தலில் சங்கீதக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. இரவு சுமார் எட்டு மணியிருக்கும். காஸ் லைட்டுகள் கண்ணைப் பறிக்கும்படியான பிரகாசம் அளித்தன. புருஷர்களின் கை விரல் மோதிரங்களும் ஸ்திரீகளின் காதுக் கம்மல்களும் காந்த விளக்கின் வெளிச்சத்தில் டால் வீசின. சந்தனம், பன்னீர், ஊதுவத்திகளின் வாசனை கமகமவென்று இருந்தது.

ஒரு பக்கத்தில் அலங்கரிக்கப்பட்ட ஸோபாவில் பெண்ணும் மாப்பிள்ளையும் அமர்ந்திருந்தார்கள். அந்தச் சபையில் வாயசைக்காமல் உட்கார்ந்திருந்தவர்கள் இவர்கள் தான். மற்றபடி பந்தலில் இருந்தவர்கள் அவ்வளவு பேரும் ஒன்று வெற்றிலை புகையிலையாவது மென்று கொண்டிருந்தார்கள்; அல்லது பேசிக்கொண்டாவது இருந்தார்கள்.

பாடகர் வெகு நன்றாய்ப் பாடிக்கொண்டு வந்தார். தியாகராஜ கீர்த்தனம் ஒன்றை, அக்கு வேறு ஆணி வேறாய்ப் பிய்த்தெறிந்துவிட்டு, "முத்துக் குமரய்யனே!" என்ற பழந்தமிழ்க் கீர்த்தனத்தை எடுத்தார்.

உடனே, சபையில் இருந்தவர்கள் அவ்வளவு பேரும் பாடகரை நோக்கினார்கள். ஒரு நிமிஷ நேரம் சபையில் நிசப்தம் குடிகொண்டிருந்தது.

ஆனால் அடுத்த நிமிஷத்தில், அப்படி மௌனமாயிருந்ததில் வெட்கமடைந்தவர்கள் போல் அவ்வளவு பேரும் சேர்ந்தாற்போல் பேச ஆரம்பித்திருந்தார்கள். ஒவ்வொருவரும் மெதுவாய்த்தான் பேசினார்களென்றாலும், அத்தனை பேரும் மெதுவாய்ப் பேசின சப்தம் சேர்ந்து, ஒரு பெரிய பேரிரைச்சலாகி, பாடகரின் பாட்டை மூழ்க அடித்து விட்டது.

அவர்கள் அவ்வளவு பேரும் பேசின விஷயம் ஒன்றே ஒன்றுதான். அது, முத்தையனின் விஷயந்தான்.

இப்படி எல்லாரும் முத்தையனைப் பற்றியே பேசினார்கள் என்றாலும் அவர்களின் இரண்டு பேருடைய பேச்சை நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள். ஒருவர் பூங்குளம் தர்மகர்த்தாப் பிள்ளை; இன்னொருவர் சாக்ஷாத் திருப்பரங்கோயில் மடத்துக் கார்வார் சங்குப் பிள்ளை.

"அந்தப் பயலுக்கு நம் ஊர்தான்னா! பாலியத்திலிருந்தே ரொம்ப துஷ்டன். நான் அப்போதே சொல்லியிருக்கேன்! இந்தப் பயல் பெரியவனாய் போனால் தீவட்டிக் கொள்ளை அடிப்பான் என்று!" என்பதாகத் தர்மகர்த்தாப் பிள்ளை கூறினார்.

"நான் சொல்கிறேன் கேளுங்கள். எல்லாம் இந்தப் போலீஸ்காரர்களின் கையாலாகாத்தனந்தான். இவனை நான் நன்னா உதைச்சு, போலீஸ் ஸ்டேஷனிலே கொண்டு விட்டேன். போலீஸ்காரர்கள் கையாலாகாமல் அவனைத் தப்பிச்சுக்க விட்டுவிட்டார்கள்..." என்று கார்வார் பிள்ளை சரடு விட்டார்.

"ஆமாம்; போலீஸிலே கூட அவனுக்கு யாரோ உடந்தை. அதனால்தான் அவனை இதுவரையிலும் பிடிக்கவில்லை என்கிறார்களே!" என்றார் தர்மகர்த்தா.

"இருந்தாலும் இருக்கும், இந்தக் காலத்திலேதான் யோக்யனுக்குக் காலமில்லையே! திருட்டுப் பயல்களுக்குத் தானே காலமாயிருக்கு! திருப்பரங்கோவில் சப் - இன்ஸ்பெக்டர் மட்டும் மாற்றலாகாமற் போனால், இவனைப் பிடிக்க முடியவே போறதில்லை. இப்போ எங்கிட்ட மட்டும் போலீஸ் அதிகாரத்தைக் கொடுக்கட்டும்! ஒரு நொடியில் பிடிச்சுத் தரேன். இந்த நிமிஷம் அவன் எங்கேயிருக்கான்னு எனக்குத் தெரியும்..."

இப்படிக் கார்வார் பிள்ளை சொல்லிக் கொண்டிருக்கும்போது, சபையில் சட்டென்று மறுபடியும் நிசப்தம் குடி கொண்டது. பாடகர் பாட்டை நிறுத்தி விட்டார். பக்க வாத்தியங்களும் நின்றன. சபையோர் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். எல்லோரும் ஒரே போக்காக, கார்வார் பிள்ளை இருந்த திக்கையே நோக்கினார்கள். அவர்களுடைய கண்கள் மிரண்டு விழித்தன. அவர்களுடைய முகத்திலே பயங்கரம் குடிகொண்டிருந்தது.

இதைப் பார்த்த கார்வார் பிள்ளையும் கலவரமடைந்தார். எல்லோரும் தம் தலைக்குமேல் நோக்குவதைப் பார்த்து அவரும் தலை நிமிர்ந்து பார்த்தார்.

அந்த க்ஷணத்தில் அவருடைய உடம்பு சொட்ட வியர்த்து விட்டது. ஏனெனில் அவருக்குப் பின்னால், கண் மூடி அணிந்த ஓர் உருவம், கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தது. "ஐயோ!" என்று ஒரு கூச்சல் போட்டார் சங்குப் பிள்ளை. எழுந்து ஓட ஆரம்பித்தார்.

அடுத்த கணத்தில் பந்தலிலிருந்த அவ்வளவு பேரும் எழுந்தார்கள்; நாலா புறமும் சிதறி ஓடினார்கள். விளக்குகள் விழுந்து உடைந்தன. குழந்தைகள் அழுதன. ஸ்திரீகள் கூச்சலிட்டார்கள். அல்லோல கல்லோலமாய் போய் விட்டது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:48 am

20.சங்குப்பிள்ளை சரணாகதி


தெறிகெட்டு ஓடினவர்களுக்குள்ளே மிகவும் விரைவாக ஓடினவர் நமது கார்வார்ப் பிள்ளைதான். அவரைத் தொடர்ந்து முத்தையனும் ஓடினான். ஒரு தாவுத் தாவி அவரை முத்தையன் பிடித்திருக்கக் கூடும். ஆனால் அப்படி உடனே அவரைப் பிடிக்க அவன் இஷ்டப்படவில்லை. கூட்டமில்லாத தனி இடத்தில் பிடிக்கவேண்டுமென்று கருதிப் பின்னோடே சென்று கொண்டிருந்தான். கடைசியில் ஊருக்குக் கொஞ்ச தூரத்தில் விளக்கு வெளிச்சம் ஒன்றுமில்லாத இடத்தில், ஒரு வைக்கோல் போருக்கு அருகில் அவரைப் பிடித்து வீழ்த்தினான். அவருடைய மார்பின் மேல் ஒரு முழங்காலை ஊன்றி உட்கார்ந்து கொண்டான். கத்தியைக் கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டான்.

"சங்குப் பிள்ளைவாள்! நான் இந்த நிமிஷம் எங்கே இருக்கிறேன், சொல்லும் பார்க்கலாம்!" என்று கூறிப் பற்களை நறநற வென்று கடித்தான்.

சங்குப் பிள்ளைக்குப் பயத்தினால் பாதிப் பிராணன் போய்விட்டது. "தம்பி என்னை விட்டுவிடு! நான் ஒன்றும் பண்ணவில்லை. ஐயோ! என்னை விட்டு விடேன். நான் உன் வழிக்கு வரவில்லை" என்று விம்மிக் கொண்டே கூறினார்.

"என் வழிக்கு வரவில்லையா? அடாடா! பெரியவாள் அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. என் வழிக்கு வந்து தான் ஆகவேணும்" என்று சொல்லி முத்தையன் பயங்கரமாய்ச் சிரித்தான்.

பிறகு கடுமையான குரலில், "அடே படுபாவி! நிஜத்தைச் சொல்லு! அபிராமி என்ன ஆனாள்? எங்கே இருக்கிறாள்? - நிஜத்தைச் சொன்னால் பிழைப்பாய். இல்லாவிட்டால், ஒரே குத்தில் செத்துப் போவாய்" என்றான்.

"ஐயோ! நிஜத்தைச் சொல்லுகிறேன். அப்புறம் நான் அவளைப் பார்க்கவேயில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு யாரோ அழைத்துப் போனார்களாம். இன்ஸ்பெக்டர் வீட்டு அம்மா அவளைச் சென்னைப் பட்டணத்திலே கொண்டு போய்ப் பள்ளிக்கூடத்திலே சேர்த்திருக்கிறாளாம். மற்றபடி எனக்கு ஒன்றும் தெரியாது. முத்தையா! நான் பிள்ளைக் குட்டிக்காரன் என்னை விட்டுவிடு!" என்று கதறினார் சங்குப்பிள்ளை.

"நீ இப்போ சொன்னது நிஜந்தானா! பொய் என்று தெரிந்ததோ கொன்னுடுவேன்!"

"இல்லை, இல்லை. பொய்தான் சொல்லி விட்டேன். கோவிச்சுக்காதே, தம்பி! எனக்குப் பிள்ளைக்குட்டி ஒன்றும் கிடையாது..."

"சீச்சீ! நீ நாசமாய்ப் போக! உனக்குப் பிள்ளைக்குட்டி வேறு கேடு!...அபிராமியைப் பற்றி நீ சொன்னது நிஜந்தானா? அப்புறம் நீ அவளைப் பார்க்கவே இல்லையா?"

"இல்லவே, இல்லை! சத்தியமாய் இல்லை. விட்டு விடு. நீ மகாராஜனாயிருப்பாய்..." என்று சங்குப் பிள்ளை விம்மி அழத் தொடங்கி விட்டான்.

முத்தையன், "போ, தொலைந்து போ! உன்னைத் தொட்ட பாவத்துக்கு நான் தலை முழுகவேணும். ஆனால் மறுபடியும் ஏதாவது துர்க்கிருத்யம் பண்ணினாய் என்று தெரிந்ததோ, என் கை அழுக்காய்ப் போனாலும் போகிறதென்று உன் தொண்டையை நெறித்துவிடுவேன். தெரியுமா?" என்று சொல்லிக் கொண்டே எழுந்திருந்தான். அவ்வளவு தான்! கீழே கிடந்த சங்குப் பிள்ளை வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து ஒரே ஒட்டம் பிடித்து ஓடிவிட்டார்.

முத்தையனிடம் சங்குப்பிள்ளை தனியாக அகப்பட்டுக் கொண்டபோது, அவன் வெகு காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சந்தர்ப்பம் கிடைத்தது. "அந்த அயோக்யன் மட்டும் என்னிடம் அகப்படட்டும் பார்க்கலாம்; என்ன பாடுபடுத்துகிறேன்!" என்று அவன் தனக்குத் தானே எத்தனையோ தடவை சொல்லிக் கொண்டு பல்லைக் கடித்திருக்கிறான்! கையை நெறித்திருக்கிறான். ஆனால் அத்தகைய சந்தர்ப்பம் கிடைத்ததும் அவனால் பழி வாங்கமுடியவில்லை. கார்வார் பிள்ளையின் கோழைத்தனம் அப்படி அவனைச் சக்தியற்றவனாக்கி விட்டது.

அது மட்டுமல்ல; அபிராமியைப் பற்றிச் சங்குப்பிள்ளை சொன்ன செய்தி முத்தையனுடைய உள்ளத்தில் ஒரு பெரிய மாறுதலை உண்டாக்கிற்று. அது உண்மையென்பதை அவன் உணர்ந்தான்; அவன் மனத்திலிருந்த கசப்பும் குரோதமும் சட்டென்று விலகிச் சென்றன. அவன் நெஞ்சை அமுக்கிக் கொண்டிருந்த ஒரு பாரம் நீங்கியது போலிருந்தது. அன்று வீட்டை விட்டுக் கிளம்பியதற்குப் பிறகு இதுவரை இல்லாத குதூகலம் இப்போது அவனுடைய உள்ளத்தில் பொங்கி எழுந்தது.

இத்தகைய மனோநிலையில் அவன் தன் கையைக் கறையாக்கிக் கொள்ள உண்மையிலேயே விரும்பாதபடியால் தான் கார்வார் பிள்ளையை விட்டுவிட்டான். அவர் எழுந்து ஓடிப் போனதும், ஒரு சிரிப்புச் சிரித்துவிட்டு, குஷாலாகச் சீட்டி அடித்துக் கொண்டு சென்றான்.

இங்கே கல்யாணப் பந்தலில், கள்ளன் மறைந்ததும் எல்லோரும் மறுபடியும் ஒன்று திரண்டு கும்பல் கூடிப் பேசினார்கள். முக்கிய விருந்தினரில் ஒருவரான தர்மகர்த்தாப் பிள்ளை, மற்றும் சிலரைப் பார்த்து, "இத்தனையுண்டு வாண்டுப் பயல் தனியாய் வந்து இவ்வளவு காபரா பண்ணிவிட்டுப் போகிறான், நாம் எல்லோரும் வாயிலே விரலை வச்சுண்டுதானே நிற்கிறோம்?" என்று இரைந்தார். கும்பலில் அவர் சமீபத்தில் நின்ற ஒரு சிறுவன், சட்டென்று தன் வாயிலிருந்த விரலை எடுத்தான். அந்தப் பையனுக்கு வந்த கோபத்தைப் போலவே, அங்கிருந்த இன்னும் பலருக்கும் ரோஸம் பிறந்தது. அவரவர்களும் "வாங்க, போகலாம்!" "வாங்க போகலாம்!" என்று சொல்லிக் கொண்டு, தடிகளுடனும் லாந்தர்களுடனும் கிளம்பினார்கள்.

ஊருக்குக் கொஞ்ச தூரம் மேற்கே அவர்கள் போன போது சங்குப் பிள்ளை எதிரே வந்தார். அவர் இவர்களைப் பார்த்து, "ஏன், ஐயா, நீங்கள் எல்லாம் மனுஷர்கள்தானா? ஏதடா, ஒருத்தன் முன்னாலே போறானே, நாம்பளும் போவோம் என்று பின்னால் வந்திருக்கக் கூடாதா? வந்திருந்தால் அந்தத் திருட்டுப்பயலைக் கைப்பிடியாய்ப் பிடிச்சிருக்கலாமே?" என்றார். அப்போது தூரத்திலே மறுபடியும் சிரிப்பு ஒலி கேட்டது. சங்குப் பிள்ளையின் உடம்பு நடுங்கிற்று. அவரைக் கவனிக்காமல், சிரிப்புச் சத்தம் வந்த திசையை நோக்கி எல்லாரும் ஓடினார்கள்.

ஊருக்கு அரை மைல் மேற்கே இராஜன் வாய்க்கால் இருந்தது. அதில் அப்போது பிரவாகம் நிரம்பப் போய்க் கொண்டிருந்தது. வாய்க்காலின் மேல் மூங்கில் கழிகளினால் பாலம் போட்டிருந்தது. முத்தையன் அந்தப் பாலத்துக்குச் சமீபம் வந்தபோது, கொஞ்ச தூரத்தில் "அதோ போகிறான்", "விடாதே", "பிடி" என்ற சத்தத்துடன் ஜனங்கள் ஓடி வருவதைப் பார்த்தான். பாலத்தின் முக்கால் பகுதி வரை அவன் சென்று, அங்கே உட்கார்ந்து, சில மூங்கில் கழிகளைப் பிடுங்கி ஆற்றில் விட்டான். பிறகு அக்கரைக்குத் தாவிச் சென்று ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்றான்.

அவனைத் தொடர்ந்து ஓடிவந்தவர்கள் பாலத்தின் கழிகள் பெயர்க்கப்பட்ட இடத்துக்கு வந்ததும் தொப்தொப்பென்று தண்ணீரில் விழுந்தார்கள்.

முத்தையன் "ஹா ஹா ஹா" என்று உரக்கச் சிரித்து விட்டு இருட்டில் சென்று மறைந்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:49 am

21.சுமைதாங்கி


தை மாதம். அறுவடைக் காலம். சென்ற மாதம் வரையில் பசுமை நிறம் பொருந்தி விளங்கிய வயல்கள் எல்லாம் இப்போது பொன்னிறம் பெற்றுத் திகழ்கின்றன. நெற்கதிர்களின் பாரத்தால் பயிர்கள் வயல்களில் சாய்ந்து கிடக்கின்றன. காலை நேரத்தில் அவற்றின் மீது படிந்திருக்கும் பனித் துளிகளின் மீது சூரியக் கிரணம் படுங்கால் எண்ணிலடங்காத வெண் முத்துக்கள் சிதறிக் கிடப்பது போல் தோன்றிற்று. வயல் வரப்புகளில் நடந்து போனால், பசும் புல்லில் படிந்திருக்கும் பனித் துளிகள் காலில் படும்போது ஜிலு ஜிலுவென்று வெகு சுகமாயிருக்கிறது. சில வரப்புகளில் துவரஞ் செடிகள் செழிப்பாக வளர்ந்திருக்கின்றன. அந்தச் செடிகளில் சிலுசிலுவென்று பூத்திருக்கும் சின்னஞ்சிறு பூக்களுக்குத்தான் என்ன அழகு, எத்தகைய பசும்பொன் நிறம்!

இன்னும் சில வரப்புகளில் சேம்புச் செடிகள் அடர்த்தியாக வளர்ந்திருக்கின்றன. அவற்றின் இலைகளுக்கு என்ன மிருதுத் தன்மை? அந்த இலைகளின் மீது அப்படியும் இப்படியும் ஊசலாடிக் கொண்டிருக்கும் பனித் துளிகளை நாளெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாலும் அலுக்காது. ஆனால், அந்தத் துளிகள் தான் நேரம் ஆக ஆக, வெயில் ஏற ஏற, மாயமாய் மறைந்து போகின்றன.

கதிர்கள் நன்றாக முற்றிவிட்ட வயல்களில் அதிகாலையில் ஆட்கள் இறங்கி அறுக்கத் தொடங்குகிறார்கள். அப்படி அறுவடையாகும் வயல்களிலிருந்து கம்மென்று புது வைக்கோலின் மணம் வீசுகின்றது. அந்த வாசனையை முகர்ந்து கொண்டு, அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு வாழ்நாளெல்லாம் கழித்து விடலாம் போல் தோன்றுகிறது.

சூரியன் உச்சி வானத்தை அடையும் போது அறுப்பதை நிறுத்துகிறார்கள். அறுத்த பயிர்களைக் கட்டுக் கட்டாய்க் கட்டுகிறார்கள். பிறகு அக்கட்டுக்களைத் தலையில் சுமந்து கொண்டு போய்க் களத்தில் போடுகிறார்கள்.

திருமகள் செந்தாமரையில் வசிப்பதாகக் கேட்டிருக்கிறோம். வருஷத்திலே பத்து மாதத்துக்கு இது உண்மையாயிருக்கலாம். ஆனால், தை, மாசி மாதங்களில் மட்டும் நன்செய் நிலப் பிரதேசங்களிலுள்ள நெற்களங்களிலே தான் அவள் வசிக்க வேண்டும். அந்த மாதங்களில், நெற்களங்களின் காட்சி அவ்வளவு அழகாகவும் லக்ஷ்மி விலாசம் பொருந்தியும் இருக்கும். களத்தில் சில இடங்களில் டபார் டபார் என்று அடித்துக் கொண்டிருக்கிறார்கள். தானியம் உதிர்ந்ததும், வைக்கோலைப் போர் போராய்ப் போடுகிறார்கள். நெல்லைக் குவித்துக் குவியல் குவியலாய்ச் செய்கிறார்கள்.

களத்துக்கு நடுவில் ஒரு பெரிய ஆலமரம் விழுதுகள் விட்டு இறங்கி விஸ்தாரமாகப் படர்ந்திருக்கிறது. அதன் கிளைகளில் காக்கைகளும், குருவிகளும், இன்னும் பலவிதமான பட்சிகளும் அமர்ந்து கீதமிசைத்துக் கொண்டிருக்கின்றன. ஆமாம்; அவ்வேளையில் காக்கை கத்துவது கூட நல்ல சங்கீதமாகவே தோன்றுகிறது. புள்ளினங்கள் தங்களுடைய இறகுகளை அடித்துக் கொள்ளும் சப்தம் காதுக்கு இன்னிசையாய்த் தொனிக்கின்றது.

அந்த ஆலமரத்தின் அடியில் அங்கங்கே சில ஸ்திரீகள் எதிரில் கூடைகளுடன் உட்கார்ந்திருப்பதைக் காணலாம். இவர்களுக்கு அங்காடிக்காரிகள் என்று பெயர். இவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு கூடையும் ஒரு சின்னக் கடை. அதில் வறுத்த கடலைக் கொட்டை, வேக வைத்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சுட்ட சோளக் கொண்டை, வெற்றிலைப் பாக்கு புகையிலை - இவையெல்லாம் இருக்கும். இவற்றை அவர்கள் நெல்லுக்கு விற்பார்கள். லாபம் தம்பிடிக்குத் தம்பிடிதான்! ஆனாலும் மொத்தத்தில் லாபம் ஒன்றும் பிரமாதமாயிராது. நாலணா சாமான்கள் கொண்டுவந்தால் எட்டணா நெல்லுடன் திரும்பிச் செல்வார்கள். அவ்வளவுதான்.

இம்மாதிரி அங்காடி விற்கும் பெண்பிள்ளை ஒருத்தியைத் தொடர்ந்து போகும் அவசியம் நமக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. அவள் களத்தில் தனக்குப் பக்கத்தில் இருந்த இன்னொரு அங்காடிக்காரியிடம் சண்டை போட்டுக் கொண்டு, "சீச்சி! உன்னைச் சொல்லி என்ன பிரயோசனம்? உன்னைப் படைச்சானே பிரம்மா அவனைச் சொல்லணும்!" என்று கடுமையாய்ப் பேசி விட்டு, அங்காடிக் கூடையை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு, விருவிரு என்று நடக்கத் தொடங்கினாள். அவள் வயல் வரப்புகள் வழியாகவே நடந்து சென்று, கடைசியில் ஒரு வாய்க்காலின் கரையை அடைந்தாள். அந்த வாய்க்காலின் இருபுறமும் அடர்த்தியாகக் காடு மண்டியிருந்தது. கரையோடு ஓர் ஒற்றையடிப் பாதை போயிற்று. கூடைக்காரி அந்தப் பாதையோடு போனாள். கொஞ்சதூரம் நடந்த பிற்பாடு, அந்தப் பெரிய வாய்க்காலிலிருந்து இன்னொரு சின்ன வாய்க்கால் பிரியும் இடம் வந்தது. அப்படிப் பிரியும் இடத்தில் ஒரு மதகு இருந்தது. கூடைக்காரி அந்த மதகண்டை வந்ததும் ஆவலுடன் உற்றுப் பார்த்தாள். அந்த மதகின் மேல் ஒரு முழு ரூபாய் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்தது. கூடைக்காரி அந்த ரூபாயை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, "என் அப்பனே! மவராசா! நீ யாராயிருந்தாலும் சரி, தெய்வமாயிருந்தாலும் சரி, மனுஷனாயிருந்தாலும் சரி! நீ நன்றாயிருக்கணும். உன்னை நான் பார்த்து அறிய மாட்டேன். ஒரு நாளைக்கு நீ அசரீரி வாக்கு மாதிரி சொன்னாய். அதன்படியே நானும் இரண்டு நாளைக்கு ஒரு தடவை இங்கே வாரேன். நீயும் ஒவ்வொரு ரூபாய் படி அளக்கிறாய். சாமி! ஆண்டவனே! என் காலமெல்லாம் இப்படியே போயிண்டிருந்தா - நான் சாகிறதுக்குள்ளே முழுசா ஒரு ஆயிரம் ரூபாய் சேர்த்துடுவேன். அப்புறம் என்னை யார் என்ன கேட்கிறது?" என்று இவ்விதம் புலம்பிக் கொண்டே கூடையிலிருந்த நிலக்கடலை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு எல்லாவற்றையும் எடுத்து மதகின்மேல் வைத்துவிட்டு, கடைசியாக ஒரு சோற்று மூட்டையும் எடுத்து வைத்தாள். பிறகு, "சாமி! ஆண்டவனே! காப்பாத்து!" என்று இரண்டு கன்னத்திலும் போட்டுக் கொண்டு, வெறுங்கூடையுடன் கிளம்பிச் சென்றாள்.

அவள் போய்ச் சற்று நேரத்துக்கெல்லாம் புதரை விலக்கிக் கொண்டு முத்தையன் வெளியில் வந்தான். மதகின் மேல் காலைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான். சாவகாசமாக நிலக்கடலையை உரித்துத் தின்னத் தொடங்கினான்.

அப்போது ஒரு மரத்தில் ஏதோ சலசலவென்று சத்தம் கேட்கவே, முத்தையன் பளிச்சென்று குதித்து எழுந்து இடுப்பில் செருகியிருந்த கத்தியைக் கையில் எடுத்தான். "சாமி! சாமி! நான் தான், சொக்கன்" என்று சொல்லிக் கொண்டே, குறவன் சொக்கன் முன்வந்தான்.

"அடே! முட்டாள்! கண்ட இடத்தில் எல்லாம் நீ என்னைத் தேடிக்கொண்டு வரக்கூடாது என்று சொல்லியிருக்கிறேனே? ஏன் இங்கு வந்தாய்?" என்று கேட்டான் முத்தையன்.

"இல்லைங்க, சாமி! அந்த ஆளு சொன்னேனே, அது வந்திருக்கு, பணத்தோட வந்திருக்கு" என்றான் சொக்கன்.

"சரி, சாயங்காலம் கையெழுத்து மறைகிற சமயத்துக்கு சுமை தாங்கிக்கிட்ட அழைத்துக் கொண்டு வா. இப்போ இங்கே நிற்காதே, போ!" என்றதும் சொக்கன் "அப்படியே ஆகட்டும், சாமி!" என்று சொல்லிவிட்டுப் போனான்.


***** அன்று சாயங்காலம், முன்னே 'லாக்-அப்'பிலிருந்து முத்தையன் தப்பிச் சென்ற இரவில் அவன் படுத்துத் தூங்கிய அதே சுமைதாங்கி மேடையில் ஓர் ஆசாமி உட்கார்ந்து அப்புறம் இப்புறம் பார்த்து முழித்துக் கொண்டிருந்தான். பொழுது சாயச் சாய, அவனுடைய கவலையும் அதிகமாகிக் கொண்டிருந்தது. கடைசியில் சுமைதாங்கியின் பின் புறத்தில் ஏதோ சத்தம் கேட்டு அவன் திரும்பிப் பார்க்க, அங்கே முகமூடியணிந்த ஓர் உருவம் கையில் கத்தியுடன் நிற்கக் காணவும், உதறியடித்துக் கொண்டு எழுந்திருந்தான். நல்ல வேளையாக, அந்த உருவத்துக்குப் பின்னால், குறவன் சொக்கனும் தென்படவே அவனுடைய படபடப்பு ஒருவாறு அடங்கியது.

"என்ன, ஐயா, எங்கே வந்தே! சீக்கிரம் சொல்லு!" என்றான் முத்தையன்.

"ஒ ஒ ஒ ஒ - ஒண்ணுமில்லை... வ வ வ வ - வந்து..." என்றான் அந்த ஆசாமி.

"ந ந ந ந - நாசமாய்ப்... போ போ போ போச்சு!" என்றான் முத்தையன்.

"கொ கொ கொ கொஞ்சம்... நே நே நேக்கு... தே தே தே தெத்து..."

"கொஞ்சம் தெத்தா? ஜாஸ்தியாயிருந்தால் இன்னும் அது எப்படியிருக்குமோ? போகட்டும்; எங்கே வந்தே, சொல்லித் தொலை."

"ஒ ஒ ஒ ஒ - ஒன்னை... ப ப ப ப - பாக்கத்தான் வந்தேன்."

"சரி, பார்த்தாச்சா? போகலாமா?"

"பொ பொ பொ - பொறு அப்பா! பு பு பு - புலிப்பட்டி எஜமான் - ப ப ப - பணம் கொடுத்திருக்காரு..."

"சரி கொடுத்துத் தொலை."

அந்த ஆசாமி மடியிலிருந்த பண நோட்டுக்களை எடுத்து முத்தையனிடம் கொடுத்தான்.

"வ வ வ வ - வந்து... கா கா கா கா - காரியத்தை மு மு மு மு - முடிச்சுட்டாக்க..."

இந்தச் சமயத்தில் குறவன் குறுக்கிட்டு, "இதோ பாருங்க, ஐயா! நீங்க சமாசாரம் சொல்றதுக்குள்ளே போது விடிஞ்சு போயிடும், எங்கிட்டதான் எல்லாச் சமாசாரமும் சொல்லிட்டீங்களே! நான் விவரமாய்ச் சொல்லிப்புடறேன். நீங்க போய் வாருங்க" என்றான்.

அந்த ஆசாமி, "அ அ அ - அப்படியானால் சரி" என்றான். பிறகு குறவனைச் சமிக்ஞை செய்து அருகில் அழைத்து, அவன் காதோடு, "அந்தப் பொ பொ பொ - பொம்பளையை... ப ப ப - பைஸல் பண்ணிவிடணும்" என்று கூறினான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:50 am

22.நிலவும் இருளும்



முத்தையன் பண நோட்டுக்களைக் கையில் அலட்சியமாய்ச் சுருட்டி எடுத்துக்கொண்டு, லயன் கரையிலிருந்து படுகையில் இறங்கித் தண்ணீர் துறையை நோக்கி நடந்தான். தண்ணீர்த் துறையை அடைந்ததும், நீர்க்கரையோடு கிழக்கு நோக்கி நடக்கலானான். அன்று பௌர்ணமி. கிழக்கே பூரண சந்திரன் உதயமாகிச் சற்று நேரம் ஆகியிருந்தது. மேற்கே இருட்ட இருட்ட, நிலவு வெண்ணிறம் பெற்றுப் பிரகாசித்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் அந்த நதிப் பிரதேசம் முழுவதும் ஒரு மோகன மாய உலகமாக மாறி விட்டது. வெண்ணிலவு; வெண் மணல்; வெண்மையான நாணல். ஜலமும் நெடுந்தூரத்துக்கு வெள்ளியை உருக்கி வார்த்தது போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

அந்த வேளையில் அந்த நதிக்கரையோரமாய் வெண்மணலில் நடந்து கொண்டிருந்த முத்தையனுக்குக் கல்யாணியின் ஞாபகம் வந்தது. "கல்யாணி! கல்யாணி! என்னிடம் பணமில்லையென்றுதானே என்னை நீ நிராகரித்தாய்? கிழவனைப் போய்க் கல்யாணம் செய்து கொண்டாய்? இப்போது என்னிடம் பணம் இருக்கிறது. வேண்டிய அளவு இருக்கிறது. இரு, இரு, ஒரு நாளைக்கு உன்னை நான் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. இவ்வளவு பணத்தையும் உன் தலையிலே போடுகிறேன். அப்போது நீ என்ன சொல்லப் போகிறாய், பார்க்கிறேன்!" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

"நீ என்ன சொல்லப் போகிறாய்? என்னைத் திருடன், கள்ளன் என்று சொல்லப் போகிறாய். என்னைப் பார்க்கவே பயப்படுவாய். உளறியடித்துக் கொண்டு போலீஸ்காரனைக் கூப்பிடுவாய். ஹா ஹா ஹா!" என்று சிரித்தான். அந்த நிசப்தமான நதிப் பிரதேசத்தில் அந்தச் சிரிப்பின் ஒலி பயங்கரமாய்க் கேட்டது.

"ஆனால், என்னைத் திருடனாகப் பண்ணியது யார்? நீதான், நீயும், உன் தகப்பனாரும், உன் உற்றாரும், உன் ஊராருந்தான்! ஹா! ஹா! என்னை எவ்வளவு கேவலமாய் எண்ணினார்கள்? இப்போது?"

மறுபடியும் முத்தையன் சிரித்தான். அன்று சாயங்காலம் நடந்த பேரத்தை நினைக்க நினைக்க அவனுக்கு அடங்காத சிரிப்பு வந்தது. யாரோ ஒரு பெண் பிள்ளை, ரொம்பத் திமிர் பிடித்தவள் - அவளோடு சண்டை பிடிக்கத் திறமையில்லாத ஒரு பெரிய மனுஷன் - அவள் வீட்டில் கொள்ளையடிப்பதற்காக இரண்டாயிரம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறான்! இது ரொம்பக் கேவலந்தான். அந்தப் பெரிய மனுஷனுக்கு ஒரு சமயம் புத்தி கற்பிக்க வேண்டியது தான்.

ஆனால் இந்தப் பெண் பிள்ளைக்கு என்ன இவ்வளவு அகந்தை! கொள்ளிடக்கரைக் கள்ளனைப் பிடித்துப் போலீஸில் ஒப்பிக்கப் போகிறதாக அவள் சபதம் கூறியிருக்கிறாளாமே? அவள் எப்படிப்பட்ட திமிர் பிடித்த ஸ்திரீயாயிருக்கவேணும்? அவளுடைய கர்வத்தையும் அடக்க வேண்டியதுதான்.


*****

இப்படி பேசிக்கொண்டே போன முத்தையன், ஓரிடத்தில் தண்ணீர்க் கரையிலிருந்து விலகி, நாணற்காட்டிற்குள் பிரவேசித்தான். கொஞ்ச தூரம் போனதும், அங்கே ஒரு பெரிய மரத்தின், அடிப்பாகம் கிடக்க, அதனருகில் சென்றான். எப்போதோ நதியில் பெருவெள்ளம் வந்தபோது, அந்தப் பெரிய மரம் வேருடன் பெயர்த்துக் கொண்டு வந்து அவ்விடத்தில் மணலில் தட்டிப் போய்க் கிடந்திருக்க வேண்டும்.

அந்த மரத்தில் வாய் குறுகலான ஒரு போறை இருந்தது. முத்தையன் அந்த மரத்தின் அருகில் உட்கார்ந்து அந்தப் போறையில் கையை விட்டான். அதற்குள்ளிருந்த விலையுயர்ந்த நகைகளையும், ரூபாய்களையும், நோட்டுகளையும் வாரி வாரி எடுத்து மடியில் போட்டுக் கொண்டான். இரண்டு கையினாலும் அவற்றை அணைத்துக் கொண்டே, "கல்யாணி! கல்யாணி! ஒரு நாளைக்கு இவ்வளவு பணத்தையும் உன் காலினடியில் போடப் போகிறேன், பார்!" என்றான்.

கிருஷ்ண பக்ஷத்து சந்திரன் நாளுக்கு நாள் தேய்ந்து வந்தது. சந்திரோதயமும் நாளுக்கு நாள் இரவின் பிற்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. அமாவாசைக்கு முதல் நாள் இரவு நடு ஜாமத்தில் முத்தையனும் குறவன் சொக்கனும் ஒரு வீட்டின் புறக்கடையில் நின்று கொண்டிருந்தார்கள். கன்னங்கரிய இருள் சூழ்ந்திருந்தது. சொக்கன் முத்தையனுக்கு வீட்டின் அடையாளம் எல்லாம் சொல்லிக் காட்டிவிட்டு, "நானும் வரட்டுமா, சாமி?" என்று கேட்டான். "கூடாது; நான் ஒரு தடவை விஸில் அடித்தால் உள்ளே வா; இரண்டு தடவை அடித்தால் ஓடிப் போய்விடு! தெரிகிறதா?" என்றான் முத்தையன், சட்டைப் பையிலிருந்து ஒரு சின்ன டார்ச்சு லைட்டை எடுத்து ஒரே ஒரு நிமிஷம் வெளிச்சம் போட்டு ஓட்டின் மீது ஏறவேண்டிய இடத்தைப் பார்த்துக் கொண்டான்; உடனே விளக்கை அணைத்துவிட்டு, ஓட்டின் மீது ஏறினான்.

முற்றத்தில் அவன் குதித்த போது அதிகச் சத்தம் உண்டாகவில்லை. ஆனாலும் "யார் அது?" என்று ஒரு பெண் பிள்ளையின் கலவரமான குரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்று, சட்டென்று டார்ச் லைட்டைக் கொளுத்திக் காட்டினான். அவள் ஒரு வயது வந்த ஸ்திரீ. முகமூடி தரித்துக் கையில் கத்தி பிடித்து நின்ற உருவத்தைத் திடீரென்று கண்டதும், "ஐயோ! திருடன்!" என்று அவள் அலறினாள். முத்தையன் கத்தியைக் காட்டி "சத்தம் போட்டாயோ, கொன்று விடுவேன்!" என்று சொல்லி விளக்கை அணைத்தான்.

இதற்குள் கூடத்தில் படுத்திருந்த இன்னொரு ஸ்திரீ எழுந்திருந்து முற்றத்தின் பக்கமாய் ஓடி வந்தாள். முற்றத்தில் நட்சத்திரங்களின் இலேசான வெளிச்சம் சிறிது இருந்தது. அந்த வெளிச்சத்தில் அவள் ஓடுவதைப் பார்த்து, முத்தையன் பாய்ந்து சென்று அவளுடைய தோளைப் பிடித்தான். உடனே நின்றுவிட்டாள்.

"சத்தம் போடாதே! நகைகளையெல்லாம் உடனே கழற்றிக்கொடு; இல்லாவிட்டால்..." என்று முத்தையன் ஆரம்பித்தான். ஆனால் அவனுடைய குரல் தழுதழுத்தது. மேலே பேச ஓடவில்லை. ஏனென்றால், அந்தப் பெண்ணினுடைய தோளைத் தொட்ட மாத்திரத்தில் அவனுடைய உடம்பு ஒரு முறை சிலிர்த்தது. தனக்கு என்ன நேர்ந்து விட்டதென்று அவனுக்கே தெரியவில்லை. அந்தப் பெண் சட்டென்று திரும்பினாள். அந்த மங்கலான நட்சத்திர வெளிச்சத்தில் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். "என் நகைகள் தானா உனக்கு வேண்டும் முத்தையா?" என்று கேட்டாள்.

முத்தையனுடைய காலின் அடியிலிருந்து பூமியே நழுவிவிட்டது போல் அவனுக்குத் தோன்றிற்று. அந்தக் குரல்?...அது யாருடையது?

டார்ச் லைட்டை அவள் முகத்துக்கு நேரே பிடித்தான். ஆமாம்; அவள் கல்யாணிதான்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:51 am

23.பண்ணையாரின் தவறு


கல்யாணியின் கல்யாணத்தன்று திருமாங்கல்யதாரணம் ஆனதும், அவள் மூர்ச்சையாகி விழுந்தாளென்று சொல்லி விட்டு, பிறகு அவளை நாம் கவனியாமலே இருந்து விட்டோ ம். அதன் பின்னர் இன்று வரையில் அவளுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தெரிந்து கொள்வது இப்போது அவசியமாகிறது.


*****

தாமரை ஓடைப் பண்ணையார் பஞ்சநதம் பிள்ளை இந்த உலகில் தப்பிப் பிறந்த உத்தம புருஷர்களில் ஒருவர். அவர் தமது வாழ்க்கையில் ஒரே ஒரு தவறு தான் செய்தார். அது, அந்த முதிய வயதில் ஓர் இளம் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டது தான். இது பெரும் பிசகு என்றாலும் அவருடைய பூர்வ சரித்திரத்தை நாம் தெரிந்து கொள்ளுவோமானால் அவரிடம் கோபம் கொள்வதற்குப் பதில் அநுதாபமே அடைவோம்.

பஞ்சநதம் பிள்ளை படித்தவர்! விசால நோக்கமும் உயர்ந்த இலட்சியங்களும் உள்ளவர். கொஞ்ச நாளைக்கு அவர் பிரம்ம ஞான சங்கத்தில் சேர்ந்திருந்தார். பிறகு அச்சங்கத்தின் கொள்கைகள் சில பிடிக்காமல் விட்டு விட்டார். தேசிய இயக்கத்திலே கூட அவருக்கு ஒரு சமயம் சிரத்தை இருந்தது. ஆனால் அந்த இயக்கம் ரொம்பத் தீவிரமாகி, சட்டம் மறுத்தல், சிறைக்குச் செல்லுதல் என்றெல்லாம் ஏற்பட்டபோது, இது நமக்குக் கட்டி வராது என்று ஒதுங்கிவிட்டார்.

ஒரே ஒரு தடவை அவர் ஜில்லாபோர்டு தேர்தலில் நின்று ஜயித்து அங்கத்தினர் ஆனார். ஆனால் ஒரு வருஷ அனுபவத்தில் அதிலே நடந்த அக்கிரமங்களையும் ஊழல்களையும் சகிக்க முடியாதவராய் ராஜினாமா கொடுத்து விட்டார்.

சொந்த வாழ்க்கையில், அவருடைய நடத்தை மாசற்றதாய், அப்பழுக்கு சொல்ல இடமற்றதாய் இருந்தது. லக்ஷ்மணனைப் பற்றிச் சொல்லியிருக்கிறதே ராமாயணத்தில் - சீதா தேவியின் பாதகங்களையன்றி அவளுடைய திருமேனியை அவன் பார்த்ததேயில்லையென்று - அம்மாதிரியே, "பரஸ்திரீகளை நான் கண்ணெடுத்தும் பார்த்தது இல்லை" என்று அவர் உண்மையுடன் சொல்லிக் கொள்ளக் கூடியவராயிருந்தார்.


*****

அவருடைய மாசற்ற வாழ்க்கைக்குப் பன்மடங்கு பெருமையளிக்கக்கூடியதான இன்னொரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். பணக்காரக் குடும்பங்களில் சாதாரணமாய் நடப்பதுபோல் அவருக்குச் சின்ன வயதிலேயே கல்யாணம் ஆயிற்று. அந்தக் கல்யாணம் அவருடைய வாழ்க்கையின் பெரிய துர்ப்பாக்கியமாக ஏற்பட்டது.

இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்து செத்துப்போன பின்னர், அவருடைய மனைவியை, மனுஷ்யர்களுக்கு வரக்கூடிய வியாதிகளுக்குள்ளே மிகக் கொடியதான வியாதி பீடித்தது. அவளுக்கு சித்தப் பிரமை ஏற்பட்டது.

சுமார் இருபது வருஷ காலம் அந்தப் பைத்தியத்துடன் அவர் வாழ்க்கை நடத்தினார். அவளுக்காக அவர் பார்க்காத வைத்தியம் கிடையாது; கூப்பிடாத மந்திரவாதி கிடையாது; போகாத சுகவாசஸ்தலம் கிடையாது.

சில சமயம் அவளுக்குப் பிரமை சுமாராயிருக்கும்; அப்போதெல்லாம் சாதாரணமாய் நடமாடிக் கொண்டு இருப்பாள். வேறுசில சமயம் பைத்தியம் முற்றிவிடும்! சங்கிலி போட்டுக் கட்டி அறையில் அடைத்து வைக்க வேண்டியதாயிருக்கும். இம்மாதிரி சமயங்களில் பஞ்சநதம் பிள்ளையைத் தவிர வேறு யாரும் அவள் சமீபம் போக முடியாது.

இன்னும் சில சமயம் அவள் பிரம்மஹத்தி பிடித்தவளைப் போல் சிவனே என்று உட்கார்ந்திருப்பாள். அப்போதெல்லாம் பஞ்சநதம் பிள்ளைதான் அவளுக்கு வேண்டிய சிசுருஷைகளையெல்லாம் செய்தாக வேண்டும்.

அந்தக் காலத்தில், வேறே கல்யாணம் செய்து கொள்ளும்படியாக அவரை எவ்வளவோ பேர் வற்புறுத்தினார்கள். "இந்தப் பிரம்மஹத்தியைக் கட்டிக் கொண்டு வாழ்நாளெல்லாம் கழிக்க முடியுமா?" என்றார்கள். "இவ்வளவு சொத்தையும் ஆள்வதற்குச் சந்ததி வேண்டாமா?" என்று கேட்டார்கள்.

அதையெல்லம் பஞ்சநதம் பிள்ளை காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. தொட்டுத் தாலி கட்டிய மனைவிக்குத் தாம் செலுத்த வேண்டிய கடமை இது என்று கருதினார்.

சில சமயம் அவர் வருங்காலத்தைப் பற்றி எண்ணிக் கவலைபடுவதுண்டு. தமது மனைவிக்கு முன்னால் தாம் காலஞ்செல்ல நேர்ந்தால் அவளுடைய கதி என்ன ஆகும் என்று எண்ணிப் பெருமூச்சு விடுவார். "ஸ்வாமி! இவள் எத்தனைக் காலம் இப்படிக் கஷ்டப்படுவாள்? இவ்வளவு போதாதா? இவளுடைய துன்பங்களுக்கு முடிவு உண்டு பண்ணக்கூடாதா?" என்று சில சமயம் பிரார்த்திப்பார்.

கடைசியாக, அவருடைய பிரார்த்தனை நிறைவேறிற்று! ஒரு நாள் ஊரில் இல்லாத சமயம் அந்தப் பைத்தியக்காரி திடீரென்று கூச்சலிட்டுக் கொண்டு ஓடி, கொல்லையிலிருந்த கிணற்றில் விழுந்து உயிரைவிட்டாள்.

பஞ்சநதம் பிள்ளைக்கு இது ஒருவாறு மன ஆறுதல் அளித்தது என்றே சொல்ல வேண்டும். ஆயுள் கைதிக்குத் திடீரென்று விடுதலை கிடைத்ததுபோல், கொஞ்ச நாள் வரையில் அவருக்கே பிரமையாயிருந்தது. பின்னர் தாம் உண்மையிலேயே சுதந்திரம் அடைந்துவிட்டதை அவர் உணர்ந்ததும் வருங்காலத்தைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினார்.

அவர் மனைவி உயிரோடிருந்தவரையில், "இவள் மட்டும் இறந்து போனால், நம்முடைய சொத்துக்களை யெல்லாம் நல்ல தர்ம ஸ்தாபனங்களுக்குச் சேர்த்துவிட்டு நாம் சந்நியாசியாகி விட வேண்டும்" என்று அவர் எண்ணமிடுவதுண்டு. இப்போதும் அவருக்கு அந்த எண்ணம் மாறிவிடவில்லை. புதிதாய் கிடைத்த சுதந்திரத்தை இன்னும் கொஞ்சநாள் அனுபவிக்க வேணுமென்ற ஆசையினால், சந்நியாசியாவதைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும், தேசத்திலுள்ள முக்கியமான தர்ம ஸ்தாபனங்கள், சந்நியாசி மடங்கள் இவற்றையெல்லாம் பற்றி அவர் விசாரிக்கவும் விவரங்கள் சேமிக்கவும் தொடங்கினார்.

இந்த மாதிரி நிலைமையில்தான் பஞ்சநதம் பிள்ளை கல்யாணியைப் பார்க்கவும், அவளுடைய குதூகலமான சிரிப்பின் ஒலியைக் கேட்கவும் நேர்ந்தது. உடனே, அவருடைய வாழ்க்கை நோக்கம் முழுவதும் அடியோடு மாறிப்போய் விட்டது.


*****

கொள்ளிடத்தில் பிரவாகம் போகும்போது சில சமயம் பெரிய உத்தியோகஸ்தர்கள் கரையோரமாகப் படகில் பிரயாணம் செய்வதுண்டு என்று சொல்லியிருக்கிறோமல்லவா? ஒரு சமயம், டிபுடி கலெக்டர் ஒருவர் அவ்வாறு படகில் பிரயாணம் செய்தபோது பஞ்சநதம் பிள்ளையும் அவருடன் கூடப் போகும்படி நேர்ந்தது. இவர்கள் பழைய சிநேகிதர்கள், சந்தித்துச் சில காலமானபடியால், படகில் போகும்போது பேசிக்கொண்டிருந்தார்கள்.

வழியில், பூங்குளம் கிராமத்து ஸ்நானத் துறையண்டை படகு சென்றபோது, துறையில் இரண்டு இளம் பெண்கள் குளித்துக் கொண்டிருப்பதையும், அவர்கள் ஒருவர் மேல் ஒருவர் ஜலத்தை வாரி இறைத்துக் கொண்டு சிரித்து விளையாடுவதையும் அவர்கள் கண்டார்கள். அப்படி அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது, கரையில் இருந்த குடங்களில் ஒன்று மெதுவாய் நகர்ந்து ஆற்றில் மிதந்து செல்லத் தொடங்கியது. அதைப் பார்த்து விட்ட பெண்களில் ஒருத்தி "ஐயோ! கல்யாணி! குடம் போகிறது! எடு! எடு!" என்றாள். கல்யாணி "நீதான் எடேன்!" என்று சொல்லி ஜலத்தை வேகமாய் மோதவும், குடம் இன்னும் ஆழத்துக்குப் போய்விட்டது. அப்போது படகானது, மிதந்து போய்க் கொண்டிருந்த குடத்துக்குச் சமீபத்தில் வர, டிபுடி கலெக்டர் குனிந்து அந்தக் குடத்தைப் பிடிக்க முயன்றார். அம்முயற்சியில் அவர் தலையிலிருந்த தொப்பி நழுவித் தண்ணீரில் விழுந்தது. உடனே அவர் குடத்தை விட்டுவிட்டுத் தொப்பியைப் பிடிக்க முயன்றார். ஆனால் குடமும் போய்விட்டது; தொப்பியும் போய் விட்டது. குடத்தைப் பஞ்சநதம் பிள்ளை பிடித்துக் கொண்டார்; தொப்பி அரோகரா!

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள் கல்யாணி, முதலில் அவளுடைய முகத்தில் இதழ்கள் விரிந்து குறுநகை ஏற்பட்டது. அந்தக் குறுநகை இளஞ்சிரிப்பாயிற்று. பின்னர், அந்த நதி தீரமெல்லாம் எதிரொலி செய்யும்படி கலகலவென்று ஒரு சிரிப்புச் சிரித்தாள். அவ்வளவு சந்தோஷமான, குதூகலமான சிரிப்பைப் பஞ்சநதம் பிள்ளை தமது வாணாளில் கேட்டது கிடையாது.

கன்னங்கள் குழியும்படி சிரித்த அந்த அழகிய முகத்தின் தோற்றமும், கிண்கிணியின் இனிய ஓசையையொத்த அவளுடைய சிரிப்பின் ஒலியும் அவருடைய உள்ளத்தில் நன்கு பதிந்துவிட்டன. அந்த நிமிஷம் முதல் அவருடைய வாழ்க்கை நோக்கமும் மாறுதல் அடைந்தது. "இத்தனை வருஷகாலமாய் முடிவேயில்லாதது போன்ற துன்பத்தின் மத்தியில் உழன்றாயிற்றே, இனிமேலாவது ஏன் சந்தோஷமாய் வாழ்க்கை நடத்தக் கூடாது?" என்று அவர் கருதத் தொடங்கினார்.

ஒரு வேளை, பஞ்சநதம் பிள்ளைக்கு வயது வந்த புதல்வன் ஒருவன் இருந்திருந்தால் அவனுக்குக் கல்யாணியை மணம் செய்வித்து, அவர்கள் சந்தோஷமாயிருப்பதைப் பார்த்தே தாமும் மகிழ்ந்திருப்பார். அப்படி இல்லையாதலால், அவர் தமக்கே அவளை உரிமை கொள்ளச் சொன்னவர்களின் வாதங்களையெல்லாம் நினைவு கூர்ந்து, அவற்றின் நியாயங்களைப் பற்றிச் சிந்திக்கலானார்.

முடிவில், கல்யாணியைப் பற்றி விசாரித்து அறிந்து, அவளைக் கல்யாணமும் செய்து கொண்டார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 25, 2010 10:52 am

24.கைம்பெண் கல்யாணி


கல்யாணம் ஆன ஒரு வாரத்துக்குள்ளே, பஞ்சநதம் பிள்ளை தாம் செய்து விட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதைத் தெரிந்து கொண்டார்.

கல்யாணத்தன்று, கல்யாணி மூர்ச்சையாகி விழுந்த போது, அவருக்குக் கொஞ்சம் நெஞ்சு திடுக்கிடத்தான் செய்தது. ஆனால் அவள் மூர்ச்சை தெளிந்து எழுந்ததும் அவருக்குப் பழையபடி உற்சாகம் ஏற்பட்டது. சௌந்தரிய தேவதையாய், இன்ப விளக்காய், நிலவு வீசும் முகத்தில் நீலக் கருவிழிகள் ஊசலாட நின்ற கல்யாணி இனிமேல் தமக்கே முழுமையும் உரியவள் என்பதை எண்ணிய போது, அவருக்குச் சொல்ல முடியாத பெருமை உண்டாயிற்று. அந்தச் செய்தியை கூரை மீது நின்று கூறி, சகலரும் அறியச் செய்ய வேண்டுமென்று அவருக்கு ஆசையாயிருந்தது.

கல்யாணத்தை யொட்டி அந்த ஜில்லாவிலுள்ள பெரிய உத்தியோகஸ்தர்களுக்கும், பெரிய மனுஷர்களுக்கும் பிரபலமான விருந்து நடத்தினார். அந்த விருந்துக்கு வந்திருந்த பெரிய மனிதர்களை உட்கார வைத்து நடுவில் மாப்பிள்ளையுடன் ஒரு குரூப் போட்டோ எடுக்கப்பட்டது. அந்தச் சமயம் யாரோ சொன்னார்கள், மணமகனும் மணமகளும் சேர்ந்து உட்கார்ந்து ஒரு போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டுமென்று. பஞ்சநதம் பிள்ளைக்கும் இது விருப்பமாகவேயிருந்தது. அப்படியே, அவர் நாற்காலியில் உட்கார்ந்திருக்க கல்யாணி பக்கத்தில் நிற்க, ஒரு போட்டோ எடுக்கப்பட்டது.

கல்யாணம் நடந்த ஒரு வாரத்திற்கெல்லாம் அந்த போட்டோ தபாலில் வந்தது. அதைப் பஞ்சநதம் பிள்ளை ஆவலுடன் எடுத்துப் பார்த்தார். அவருடைய முகத்தில் ஒரு பெரிய மாறுதல் உண்டாயிற்று; எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோ மென்பதை அந்தக் கணமே அவர் உணர்ந்தார்.

இதற்கு முன்னால் அவர் தம்மைத் தனியாகக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கிறார். கல்யாணியை எதிரே வைத்துப் பார்த்திருக்கிறார். ஆனால் தம்மையும் அவளையும் சேர்த்துப் பார்த்தது கிடையாது. இப்போது படத்தில் சேர்த்துப் பார்த்தவுடன் அவருக்குப் பகீர் என்றது! 'வயதிலும், தோற்றத்திலும் எவ்வளவு வித்தியாசம்! ஐயோ! ஓர் இளம் பெண்ணின் வாழ்க்கையை அநியாயமாய்ப் பாழாக்கி விட்டோ மே?'

இம்மாதிரி அவருக்கு ஏற்பட்ட கவலையை ஊர்ஜிதப் படுத்துவதற்கு இன்னொரு சந்தர்ப்பமும் சேர்ந்து கொண்டது. கல்யாணி தம்முடைய வீட்டுக்கு வந்ததிலிருந்து சிரிப்பதில்லை யென்பதை அவர் கண்டார். எந்தக் குறுநகையைக் கண்டும், குதூகலமான சிரிப்பைக் கேட்டும் அவர் தம் உள்ளத்தைப் பறி கொடுத்தாரோ, அதெல்லாம் இப்போது எங்கே? யார் கொண்டு போனார்கள்? அந்த அழகான மிருதுவான கன்னங்களில் இப்போது குழி விழுவதே இல்லையே அது ஏன்?

சிரிப்பது தான் இல்லை; அழவாவது செய்கிறாளா? அதுவும் கிடையாது. சிரிக்காவிட்டாலும் அழுதாலாவது தேவலையென்றுதான் பஞ்சநதம் பிள்ளை எண்ணினார். அழுதால் அருகில் சென்று சமாதானம் செய்யலாம்; கண்ணீர் பெருக்கினால் கண்களைத் துடைக்கலாம்; விசித்தாலும் விம்மினாலும் மடியில் எடுத்துப் போட்டுக் கொண்டு ஆறுதல் சொல்லலாம். அப்படி எல்லாம் தமது எல்லையில்லாத அன்பையும் ஆசையையும் வெளியிடுவதற்குச் சந்தர்ப்பமாவது கிடைக்கும்.

ஆனால் கல்யாணியோ சிரிப்பதுமில்லை; அழுவதுமில்லை. பஞ்சநதம் பிள்ளையிடம் மிக பயபக்தியுடன் அவள் நடந்து கொண்டாள். தன்னுடைய நடத்தையில் எவ்விதக் குறையும் சொல்வதற்கு அவள் இடம் வைக்கவில்லை. அந்த வீட்டின் எஜமானியாய், அந்தக் குடும்பத்தின் தலைவியாய் அந்த வயோதிகரின் மனைவியாய் வாழ்வது தனக்குரிய கடமை என்று உணர்ந்தவளைப் போல் அவள் நடந்து வந்தாள். ஆனால் அவளுடைய குதூகலத்தையும் இருதயத்தையும் ஏன், ஜீவனைக்கூட, பூங்குளத்திலேயே விட்டுவிட்டு இங்கே வெறும் உடம்புடன் மட்டும் வந்து நடமாடிக் கொண்டிருப்பது போலப் பஞ்சநதம் பிள்ளைக்குத் தோன்றியது.

கல்யாணியின் முகத்தில் மறுபடியும் சிரிப்பை வரவழைக்க வேணுமென்று பஞ்சநதம் பிள்ளை எவ்வளவோ முயற்சி செய்தார். எள் என்று சொல்லுமுன் எண்ணெயாக நின்றார். நகைகளும் புடவைகளும் கணக்கில்லாமல் கொண்டு வந்து குவித்தார். ஆயினும் கல்யாணி சிரிக்கவில்லை. அவள் எப்பொழுதும் போலவேயிருந்து வந்தாள்.

நாளாக ஆக, பஞ்சநதம் பிள்ளையின் மனசு உடைய ஆரம்பித்தது. அதன் பலனாய் அவர் படுத்த படுக்கையானார். கல்யாணி இரவு பகல் பாராமல் அவருக்குச் சிசுருஷை செய்தாள். பிள்ளைக்கு நோய் முற்றிக் கொண்டு வந்தது. கடைசியாக ஒரு நாள் பஞ்சநதம் பிள்ளை படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார். கல்யாணியின் கையை எடுத்துத் தம்முடைய கையில் வைத்துக் கொண்டார்.

"கல்யாணி! முக்கியமான விஷயத்தை இப்பொது சொல்கிறேன், கேள். நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன்; இந்தக் கல்யாண பந்தத்திலிருந்து, கடவுள் சாட்சியாக உன்னை விடுதலை செய்கிறேன். வருங்காலத்தில் உன் மனதுக்குப் பிடித்த வாலிபன் யாரையேனும் நீ கல்யாணம் செய்து கொண்டால், என்னுடைய ஆத்மாவுக்கு அதனால் அதிருப்தி ஏற்படாது; திருப்தி தான் உண்டாகும்" என்றார்.

இத்தனை நாளைக்குப் பிறகு இப்போது தான் கல்யாணியின் கண்களில் ஜலம் வந்தது. அவளுடைய உள்ளத்தில் அப்போது ஒரு ஆசை, ஒரு வேகம் உண்டாயிற்று. எழுந்திருந்து பஞ்சநதம் பிள்ளையைக் கட்டிக் கொள்ள வேண்டுமென்று நினைத்தாள். கட்டிக் கொண்டு அவரை "மாமா!" வென்று கூப்பிட்டு, தன்னுடைய இருதயத்தின் கதவைத் திறந்து, அதிலுள்ள இரகசியத்தை அவருக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்று எண்ணினாள். ஆனால் அத்தகைய எண்ணத்துடனே எழுந்து நின்றதும், அவளுடைய இருதயம் மறுபடி வைரமாகி விட்டது. அந்த இரகசியம் தனக்கு மட்டும் உரியதல்லவென்றும் முத்தையனுக்கும் அதில் உரிமை உண்டென்றும், தங்கள் இருவரையும் பகவானையும் தவிர வேறு யாருக்கும் அது தெரியக்கூடாது என்றும் ஒரு கணத்தில் அவள் உறுதி கொண்டாள்.

ஆகவே, எழுந்து நின்றவள், கை கூப்பியவண்ணம் அவரைச் சுற்றி வந்து, தன்னுடைய தலை அவருடைய பாதங்களில் படும்படியாக வணங்கி நமஸ்கரித்தாள். அவருடைய பாதங்கள் அவளுடைய கண்ணீரினால் நனைந்தன.

இது நடந்து ஐந்தாறு தினங்களுக்கெல்லாம் பஞ்சநதம் பிள்ளை காலமானார். கல்யாணி உலகத்தாரின் முன்னிலையில் கைம்பெண் ஆனாள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக