புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
68 Posts - 45%
heezulia
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
prajai
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
4 Posts - 3%
Jenila
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
M. Priya
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
kargan86
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
108 Posts - 53%
ayyasamy ram
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
68 Posts - 33%
mohamed nizamudeen
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
9 Posts - 4%
prajai
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
6 Posts - 3%
Jenila
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Rutu
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
jairam
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_m10சிலேடை சிரிப்புகள் - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலேடை சிரிப்புகள்


   
   

Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 30, 2010 5:36 pm

First topic message reminder :

எங்கே விழுது?

கி.வா.ஜகன்நாதன் அவர்கள் திருப்பனந்தாள் கோயிலுக்குப் பிரசங்கம் செய்யப் போயிருந்தார். பிரசங்கம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படும் முன் அவருக்குச் சிற்றுண்டி வழங்கப்பட்டது. பொங்கல், இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவை இடம் பெற்றன.

இலை போட்டபின்பு கி.வா.ஜ.வும் அவருடன் வந்தவர்களும் இலையில் அமர்ந்தனர்.

பரிமாறுபவன் முதலில் கி.வா.ஜ. வின் இலையில் பொங்கலை வைத்தான். பின்னர் ஒரு சிப்பந்தி ஒரு பாத்திரத்தை எடுத்து வந்து, கி.வா.ஜ.வின் இலையில் வைத்துள்ள பொங்கல் மேல் கவிழ்த்தான். ஆனால் ஒன்றும் விழவில்லை.

கி.வா.ஜ அவனை நோக்கி, "என்ன?" என்று கேட்க, "நெய்ங்க..." உருகாமல் விழுதாக இருக்கிறது, சீக்கிரமே விழமாட்டேங்குது" என்று சொன்னான்.

கி.வா.ஜ அவர்கள் நகைச்சுவையாக, "விழுதா, எங்கே விழுது? விழக் காணோமே!" என்று சொல்ல உடனிருந்தவர்கள் அவரது சிலேடையைக் கேட்டு ரசித்துச் சிரித்தனர்.

தலைவனை பையனாக...?

கி.வா.ஜகன்நாதனை ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜ அவர்கள் சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார்.

கூட்டம் முடிந்த பின் கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு அவரிடம் கொடுத்தனர்.

அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ அவர்கள் "என்னைத் 'தலைவனாக'த் தலைமை தாங்க அழைத்துப் 'பையனாக" அனுப்புகிறீர்களே?" என்றார்.

அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.

ஜெகனாதனுக்குப் பூரி பிடிக்காதா?

தன் ஊரில் சொற்பொழிவு செய்ய வந்த கி.வா.ஜ.வுக்கு அன்போடு சிற்றுண்டி தயாரித்தாள் ஒரு பெண்மணி. கி.வா.ஜ இலைமுன் அமர்ந்ததும் அப்பெண்மணி பூரியைப் போட்டுக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? மிகுந்த அக்கறையோடு இந்த பூரியை உங்களுக்காக என்றே தயாரித்தேன்" என்றாள்.

உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார்.

இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.

(ஒரிசாவில் பூரி ஜகன்நாதர் ஆலயம் சிறப்புடையது எனபது குறிப்பிடத்தக்கது.)

நீரில் குவளை

ஒரு வீட்டில் சிற்றுண்டி அருந்திவிட்டு, கை கழுவத் தண்ணீர் கேட்டார் கி.வா.ஜ. ஒரு பெண்மணி பிளாஸ்டிக் குவளையில் ந்நிர் கொண்டு வந்து கொடுத்தார்.

அந்தப் பெண்மணியிடம் அவர், "நீரில்தான் குவளை இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் இங்கு குவளையிலேயே நீர் இருக்கிறதே!" என்றார்.

நானா தள்ளாதவன்...?

கி.வா.ஜவும் வேறு சில நண்பர்களும் காரில் போய்க் கொண்டிருந்தார்கள். கார் வழியில் நின்று விட்டது.

கி.வா.ஜ முதியவர் என்பதால் அவரை மட்டும் காரிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள் மற்றவர்கள்.

ஆனால், அதை ஏற்காமல் தாமும் கீழே இறங்கிக் காரைத் தள்ளியவாறே கி.வா.ஜ. சொன்னது;

"என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?" என்று கேட்டார்.

வாயிலில் போடுவேன்..!

கி.வா.ஜகன்நாதனிடம் ஒருவர், "சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடும் பழக்கம் தங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்.

அதற்கு, "ஓ...! உண்டே...! ஆனால் வெற்றிலையை வாயில் போட மாட்டேன். வாயிலில் போடுவேன்" என்றார்.

அங்கிருந்த அனைவரும் அவர் சொன்னது தெரியாமல் விழித்தனர்.

கி.வா.ஜ. சாப்பிட்ட பிறகு வெற்றிலையை அதாவது வெறும் இலையை வாயிலில் உள்ள குப்பைத் தொட்டியில்தானே போட வேண்டும்?" என்று கூறி அனைவரையும் சிரிக்க வைத்தார்.



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 22, 2010 4:47 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:

இல்ல சரவணா இது பேரு பாலு இல்லை வாலு வாலு....

பாலா உனக்கிருப்பது அனுமார் வாலா?? இந்த சிலேடை நல்லா இருக்கா பாலா? சிலேடை சிரிப்புகள் - Page 3 755837

என் பேரு பாலு
எனக்கு ரெண்டு காலு
எனக்கில்ல வாலு
இதுகெல்லாம் அஞ்சமாட்டான் என்னபோல ஆளு
இத படிச்சா உங்கள கடிக்கும் தேளு
சரி நீ போடாத பிளேடு. சிலேடை சிரிப்புகள் - Page 3 230655 சிலேடை சிரிப்புகள் - Page 3 230655 சிலேடை சிரிப்புகள் - Page 3 230655



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 22, 2010 4:47 pm

balakarthik wrote:
மஞ்சுபாஷிணி wrote:

இல்ல சரவணா இது பேரு பாலு இல்லை வாலு வாலு....

பாலா உனக்கிருப்பது அனுமார் வாலா?? இந்த சிலேடை நல்லா இருக்கா பாலா? சிலேடை சிரிப்புகள் - Page 3 755837

என் பேரு பாலு
எனக்கு ரெண்டு காலு
எனக்கில்ல வாலு
இதுகெல்லாம் அஞ்சமாட்டான் என்னபோல ஆளு
இத படிச்சா உங்கள கடிக்கும் தேளு

தெரியாம சொல்லிட்டேன் பாலா நீ அனுமார் வாலுன்னு... சிலேடை சிரிப்புகள் - Page 3 67637 எவ்ளோ அழகா கவிதை எழுதுற கண்ணுல ஒத்திக்கிட்டால் கண்ணுல புண்ணு வந்துரும்.. சிலேடை சிரிப்புகள் - Page 3 Icon_eek



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிலேடை சிரிப்புகள் - Page 3 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 6:54 pm

அரசன் ஆனையும் பூனையும் தின்பவன்


அரசனைப் புகழ்ந்து பாடி பரிசு பெறுவதற்காகப் புலவர் ஒருவர் அவைக்குள் வந்தார். சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மன்னரைப் பார்த்து, "பாராளும் மன்னனிவன் ஆனையும் தின்பான்; பூனையும் தின்பான்" என்றார்.

அரசனுக்கு அதிர்ச்சி, "நிறுத்தும் புலவரே! இதுதான் புகழ்ந்து பாடும் லட்சணமா?" என்றான் கோபத்துடன்.

அதற்குப் புலவர், "மன்னா! தாங்கள் ஆ+நெய், அதாவது பசுவின் நெய்யையும், பூ + நெய் அதாவது பூவிலிருந்து கிடைக்கும் தேனையும் உண்பீர்கள் என்றுதான் சொன்னேன். வருந்தற்க" என்றார்.

பரிசும் பெற்றுச் சென்றார்.




ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 20, 2010 6:58 pm

பாலா நீங்க எப்படி ?? இந்த இரண்டையும் போடு போடு என்று போடுபவரா ?? இல்லை இதெல்லாம் பிடிக்காது என்பவரா ???


balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 7:02 pm

சாந்தன் wrote:பாலா நீங்க எப்படி ?? இந்த இரண்டையும் போடு போடு என்று போடுபவரா ?? இல்லை இதெல்லாம் பிடிக்காது என்பவரா ???

பிடிக்காது என்று கூறிவிட்டு யாருக்கும் தெரியாமல் போடுபவர் அதாவது Pure Vegetarian



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Wed Oct 20, 2010 7:03 pm

balakarthik wrote:
சாந்தன் wrote:பாலா நீங்க எப்படி ?? இந்த இரண்டையும் போடு போடு என்று போடுபவரா ?? இல்லை இதெல்லாம் பிடிக்காது என்பவரா ???

பிடிக்காது என்று கூறிவிட்டு யாருக்கும் தெரியாமல் போடுபவர் அதாவது Pure Vegetarian

அப்படி போடுங்க .... ஜாலி ஜாலி ஜாலி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 7:05 pm

சாந்தன் wrote:
balakarthik wrote:
சாந்தன் wrote:பாலா நீங்க எப்படி ?? இந்த இரண்டையும் போடு போடு என்று போடுபவரா ?? இல்லை இதெல்லாம் பிடிக்காது என்பவரா ???

பிடிக்காது என்று கூறிவிட்டு யாருக்கும் தெரியாமல் போடுபவர் அதாவது Pure Vegetarian

அப்படி போடுங்க .... ஜாலி ஜாலி ஜாலி

போட்டேனே நாய் தூக்கிட்டு போயிடிச்சு



ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Oct 20, 2010 7:48 pm

அது தங்கவில்லை... அய்யா

கோயில் தர்மகர்த்தா ஒருவர் கோயிலில் வேலை பார்த்த ஏழை ஓதுவார் ஒருவருக்கு ருத்திராட்ச மாலையில் தங்கத்தால் ஆன ஒரு வில்லையும் இணைத்துப் பரிசு ஒன்று அளித்தார்.

சில நாட்களில் அந்த ஓதுவார் கழுத்தில் அந்த வில்லை காணவில்லை.

தர்மகர்த்தா அவரிடம், "எங்கே தங்க வில்லையைக் காணவில்லை?" என்று கேட்டார்.

அதற்கு ஓதுவார், "தங்கவில்லை அய்யா" என்றார்.




ஈகரை தமிழ் களஞ்சியம் சிலேடை சிரிப்புகள் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 20, 2010 9:08 pm

balakarthik wrote:ஒரு புலவர் மன்னைப் புகழ்ந்து பாடினார். மன்னர் அவருக்கு நூறு ரூபாய் பரிசளிப்பதாகக் கூறி, கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, இருநூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 200 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, முன்னூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 300 ரூபாய் கொண்டு வந்தார்.
புலவர்: மன்னா, நானூறு தருகிறேன் என்றீர்களே?. மன்னர் 400 ரூபாய் கொண்டு வந்தார். புலவரை ஏன் இப்படி மாற்றினீர்கள் என்று கேட்டார். புலவர் சொன்னார்: நீங்கள் இரு, நூறு ரூபாய் கொண்டு வருகிறேன் என்றீர்கள். அமரவே இடம் இல்லை. அதைச் சொன்னேன். உடனே, 200 ரூபாய் கொண்டு வந்தீர்கள். முன்னால் 100தானே தருவேன் என்றீர்கள். அதைச் சொன்னேன். 300 ரூபாய் வந்தது. 'நான் 100 ரூபாய் தருவேன்' என்றீர்களே என்றேன். உடனே 400 ரூபாய் எடுத்து வந்தீர்கள். இதுதான் நடந்தது. மன்னர் மகிழ்ந்து, மொத்தத் தொகையான 1000 ரூபாய் கொடுத்தார்.

பாலா, நான் வேறு விதமாகவும் கேள்வி பட்டது உண்டு. இருந்தாலும் நானூறுக்கு மேல் தொடர்கிறேன்.

புலவர்: ஐநூறு தரமுடியுமா ?
(மன்னர் இல்லை , பிரபு தான் அடுத்தப் பார்ட்டி, அவரும் தமிழ் கற்றறிந்த அறிஞர் )
பிரபு : தருகிறேன்.
புலவர்: அறுநூறு------ தரமுடியுமா?
பிரபு: தருகிறேன்.
புலவர்: எழுநூறு தந்தால் நல்லது!
பிரபு: தருகிறேன்.
புலவர்: எண்ணூறு சந்தோஷமாக இருக்கும்.
பிரபு: தருகிறேன்.

ஆனால், பிரபு கொடுத்தது நூறு ரூபாய்தான்.

புலவர்: ஐநூறு ரூபாய் தருகிறேன் என்றிறே?
பிரபு: ஐ (! ஆச்சர்யம்), நூறு தருகிறேன் என்றேன்.
புலவர்: அறுநூறு தருகிறேன் என்றிறே?
பிரபு: அறு! (என்னை விட்டு விடு) நூறு தருகிறேன் என்றேன்.
புலவர்: எழுநூறு ,தருகிறேன் என்றிறே?
பிரபு: எழு!(இடத்தை விட்டு) நூறு தருகிறேன் என்றேன்.
புலவர் : எண்ணூறு தருகிறேன் என்றிறே?
பிரபு: எண்(ரூபாயை எண்ணுங்கள்) நூறு தருகிறேன் என்றேன்

புலவரும்,பிரபுவே உங்கள் தமிழ்,பொருளுடன் போட்டி போட என்னால் முடியாது நூறே போதும் என்றார்.
பிரபுவும் ,புலவரே,தமிழுடனும் பொருளோடு விளையாடினோம். மகிழ்ந்தோம் என்று கூறி ஆயிரம் ரூபாய் கொடுத்து அனுப்பினான் .

ரமணீயன்.


அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Oct 20, 2010 9:21 pm

அருமை அய்யா மற்றும் அன்பு நண்பர் பாலா

Sponsored content

PostSponsored content



Page 3 of 19 Previous  1, 2, 3, 4 ... 11 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக