புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Poll_c10 
3 Posts - 7%
heezulia
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து


   
   

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:16 am

First topic message reminder :

கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.

வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜƒம்.

கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.

கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோƒஜாவை மறந்துபோனான்.

அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.

அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.

என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.

இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.

பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.

மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.

நீங்கள் கடல்பைத்தியம்.

இல்லை. நான் கடற்காதலன்.

கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?

காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோƒ.

அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.

நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.

அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.

ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.

காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.

அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.

வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.

அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.

கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.

ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.

எதனால்?

ஆக்டோப… அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோடிவிட்டால்?

அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.
சிரித்தது அவன் நுரைத்தது கடல்
தள்ளி நின்றாள் தமிழ்ரோƒஜா,

தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.

வா

மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.

குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.

ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.

மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.

ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்

பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:24 am

அவர் பாண்டி இவர் பரதன் இவர் இசக்கி
அவர் சலிம்.

எல்லோரையும் அவள் வேர்த்த
முகத்தோடு வெறித்துப் பார்த்தாள்.

அவளை அவர்களுக்கு அறிமுகம் செய்தான்
இவள்தான் தமிழ்ரோƒஜா. இப்போது
மனைவிபோல் இருக்கும் என் காதலி.

பின்னாளில் காதலிபோல் இருக்கப்போகும்
என் மனைவி.

விசைப்படகு விரைந்து படபடத்தது
தமிழ்ரோƒஜா இதயம் இரண்டுமடங்கு
துடிதுடித்தது.

கண்விழித்துப் பாரடி என்
காதல்தமிழே.
இமைகொண்டு கண்ணுக்கும்
கரம்கொண்டு முகத்துக்கும்
இரட்டைக்கதவுகள் இட்டுக்
கொண்டவளே.
இப்போது வங்காள
விரிகுடாவில் முப்பது
கிலோமீட்டர் வேகத்தில்
முன்னேறிக்
கொண்டிருக்கிறோம்.
மேலே
நீலவானம் - நீளவானம்.
கீழே
நீலக்கடல் - நீளக்கடல்.

தண்ணீரில் அங்கங்கே
வெள்ளைவெள்ளையாய்க் கவிதை
எழுதும் கடற்காற்று.

சரி. சரி. கண்திறந்துபார்.

சமுத்திரம் உனக்குக் கீழே.

பிளா…டிக் வலைகளின்மேலே
நைந்து குலைந்து
நலிந்துகிடந்தவள் விலக்கவில்லை
விழித்திரைகளை.
தலைசுற்றியது தமிழுக்கு.

அவள் அடிவயிற்றில் மெல்ல
மெல்லப் பெரிதானதொரு
குமட்டல் குமிழி.
புதிய விருந்தாளிகள்
வந்திருக்கும் புளகாங்கிதத்தில்
அலைமீன்கள் ஆனார்கள்
மீனவர்கள்.

வராதவர்கள்
வந்திருப்பதால் விழாத மீன்கள்
விழும்.
நம்பிக்கைமொழி பேசி
நடனமாடினார்கள்.

காதலர் தனிமைக்குப்
பின்பக்கம் தந்துவிட்டு
முன்பக்கச் சுக்கான் அறையில்
மொத்தமானார்கள்.

தன் சொற்பொழிவுக்குக் கடல்
கைதட்டுவதாய்க் கருதிய
களிப்போடு இன்னும் அதிகமாய்
ஓசையிட்டது விசைப்படகு.
காதலியை மடியில்போட்டவன்
கண்களைக் கடலில்
போட்டான்.

கண்ணுக்கெட்டிய மட்டும்
கடலோ கடல்.
இது வியப்பின் விசாலம்.
பூமாதேவியின் திரவச்சேலை.

ஏ தமிழா.
உன் புலமைகண்டு
புல்லரிக்கிறேன்.

இதன் பரப்பை வியந்தாய்.
பரவை என்றாய். ஆழம்
நுழைந்தாய். ஆழி என்றாய்.
ஆற்றுநீர் - ஊற்றுநீர் -
மழைநீர் முன்றால் ஆனதென்று
முந்நீர் என்றாய்.

வியந்துகிடந்தவன்உடைந்துகிடந்தவளை
மடியில் அள்ளி ஒட்டவைத்தான்.
ஏ தமிழ். என்ன இது?
திற, கண்களைத் திற.

கண்களால் கடல்விழுங்கு.
விசைப்படகு விரையும்போது
கடலோடு ஒரு வெள்ளிவீதி
பார்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:24 am

அன்பு கொண்டவர்களைக்
காணும்போது துயரம்
மெல்லமெல்ல மறைவதுமாதிரி
- தூரத்துக்கரை மெல்ல
மெல்லத் தொலைவது பார்.

ததும்பும் தண்ணீர்
ஊஞ்சல்மேலே அழகுப்
பறவைகள் ஆடுவதுபார்.

தப்பு செய்துவிட்டுவந்த
கணவர்கள், தாழ்திறவாக்
கதவுகளுக்கு வெளியே
நிற்பதுபோல் -
துறைமுகத்துக்குள்
அனுமதியில்லாத கப்பல்கள்
தூரத்தில் நிற்பது பார்.

அங்கொன்றும்
இங்கொன்றுமாய்க்
கடற்பட்டாம் பூச்சிகளாய்
மிதக்கும் கட்டுமரங்கள்
பார்.

காசுக்கு மனம்மாறும்
வஞ்சகர்களைப் போல
அங்கங்கே நிறம்மாறும்
கடல்பார்.

நீ ஏன் பயப்படுகிறாய்?

தன்னைக் கடைந்து கடைந்து
கடந்துவிட்டானே என்று
கடல்தான் மனிதனைப் பார்த்து
பயப்படுகிறது.

அவளை அவன் மில்லிமீட்டர்
மில்லிமீட்டராய் மலர்த்தப்
பார்த்தான்.

ஆனால், தன் புலன்களைப்
பூட்டிக்கொண்டவள்
திறக்கவேயில்லை.

ஆடும் படகு ஆடஆட அடிவயிறு
அழுத்தியது அவளுக்கு.
நிறந்தெறியாத பூச்சிகள்
நெற்றிப் பொட்டில்
பறந்தன.

உள்ளே வளர்ந்து வளர்ந்து
உடையப்பார்த்தது
குமட்டல்குமிழி.
முகம்தூக்கிப் பார்த்தபோது
அவன்
கையில் பிசுபிசுத்தது அவள்
கண்ணீர்.

அழுகிறாயா?
கடல்நீரை மேலும்
கரிக்கவைக்கிறாயா?

கடலில் 3.6 சதம் உப்பு
முன்னமே இருக்கிறது.
அதுபோதும். எங்கே... உன்
இதழ்நீர் துப்பு. இனிக்கட்டும்
கடல்.

ஏன் இப்படி என்னைச்
சோதிக்கிறீர்கள்?
அவள் எழுத்துக்கூட்டி
விசும்பினாள்.

அவன் சின்முறுவல் பூத்தான்.
தன்மேல் விழும் மண்ணைச்
சோதனை என்று
சொன்னதுண்டா விதை?

உளியின் உரசலைச் சோதனை
என்று சொன்னதுண்டா சிலை?
இது பயிற்சி. முளைக்கவைத்து
முழுமையாக்கும் முயற்சி.

சோதனை என்று சொல்லாதே
பெண்ணே.

சொடுக்கு, விரலுக்குச்
சோதனை அல்ல.

அவள் வயிற்றில் புறப்பட்ட
வாந்தி நெஞ்சில் வந்து
நின்றுவிட்டது.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:24 am

தன்னிரு கரங்களால் அவள்
தலைதாங்கித் தவித்தாள்.
துவண்ட கொடிகண்டு துடித்தான்
அவனும்.
இது கடல்நோய்.

ஒருவகையில் இது ஒவ்வாமை.
முதன்முதலாய்க் கடல்புகும்
பலருக்கு இது வரவே வரும்.
கலங்காதே.

சின்னச் சின்னச் சிரமங்களுக்கு
உன் உடம்பை உட்படுத்து.
எனக்கிது தேவைதானா?
அவள் கன்னத்தில் வழிந்த
கண்ணீர் வாயில் விழுந்ததில்
வார்த்தை நனைந்தது.

தேவைதானா என்று
கேட்டிருந்தால்
தீயை அறிந்திருக்க முடியுமா?

குரங்கிலிருந்து மனிதன்
குதித்திருக்க முடியுமா?

தூரத்தை நெருக்கியிருக்க
முடியுமா?

நேரத்தைச் சுருக்கியிருக்க
முடியுமா?

தேவைதான் முட்டைக்குள்
இருக்கும் உயிரை
முச்சுவிடவைக்கிறது.
தேவைதான் உலக உருண்டைக்கு
ஒரேபகல் கொண்டுவர
யோசிக்கிறது.

உணர்வுகளின் தேவை காதல்.
உணர்ச்சிகளின் தேவை காமம்.
உலகத்தின் தேவை உழைப்பு.
இந்தத் தேவைகளின் வெவ்வேறு
வடிவங்களே வாழ்க்கை.
பெண்மீது காதலும் வெற்றிமீது
வெறியும் இல்லையென்றால்
இன்னும் இந்த பூமி பிறந்த
மேனியாகவே
இருந்திருக்கும்.
அவன் பேச்சுக்குக்
காதுகொடுத்தது காற்று
மட்டும்தான்.

அவளால் தாங்கமுடியவில்லை.
ஒவ்வாத சூழல்.
உடன்படவில்லை உடம்பு.
ஏதோ ஒரு திசையில் -
ஆனால் மிகமிகப் பக்கத்தில்
மரணம்
மையம்கொண்டிருப்பதாய்ப்பட்டது
அவளுக்கு.

என்னைக் கொல்லாதீர்கள்.
படகைத் திருப்புங்கள்.
படபடப்பாய்
வருகிறதெனக்கு.

அவன் இரு கரங்களாலும் அவள்
முகம் அள்ளினான்.
வசதி இல்லாத இடங்களிலும்
வளைத்து வளைத்து
முத்தமிட்டான்.
இடைவேளையில் பேசினான்.
இது ஓர் அனுபவம்.

படபடப்பு என்பது உயிருக்கு
நேரும் உயர்ந்த அனுபவம்.
படபடப்பு இல்லையென்றால்
பரிணாமம் இல்லை.

முதன் முதலில் நிலாவுக்கு
மனிதனைக் கொண்டு சென்ற
விண்வெளிக்கலம் பூமிக்குத்
தெரியாத நிலாவின்
மறுபக்கத்தில் சுற்றத்தொடங்க
- விண்ணுக்கும் மண்ணுக்கும்
ஒலித்தொடர்பு அறுந்துபோக
- முப்பத்து முன்று நிமிடம்
பூமியின் இதயம்
படபடக்கவில்லையா?

மைன… 27 டிகிரியில் -
எவரெ…ட் உச்சிதொட இன்னும்
நானூறடிதான் இருக்கையில் -
அந்த தூரம்
கடக்கும்வரைக்கும் ஆக்சிƒன்
இருக்குமா என்று †சிலாரி
ஐயம் கிளப்ப டென்சிங்கின்
இதயம் படபடக்கவில்லையா?



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:25 am

வடதுருவம் தொடும் முயற்சியில்
ஏழுமுறை விழுந்து ஒவ்வொரு
தோல்வியிலும் ஒரு விரல்
இழந்து எட்டாம் முறையும் தன்
முயற்சி தொடர்ந்து, …லெட்ƒ
வண்டிகள் சிதறிப்போக,
இழுக்கும் நாய்கள்
இறந்துபோக இதுதானோ தன்
கடைசிப் பயணம் என்று
வெற்றிக்குச் சற்றுதூரத்தில்
விரக்தியில் நின்றபோது
எட்வின்பியரியின் இதயம்
படபடக்கவில்லையா?

இன்னும் பத்துநாட்களில்
கண்ணுக்குக்
கரைதெரியாவிட்டால்
புறப்பட்ட இடத்துக்கே
திரும்பவேண்டும் என்று
மாலுமிகள் போர்க்கொடி
பிடிக்க அந்த ஒன்பதாம்
ராத்திரியில் கொலம்ப…சின்
இதயம் படபடக்கவில்லையா?

அவர்களைவிடவா ஆபத்து
உனக்கு?
அவர்கள் உயிரைப்
பணயம்வைத்துப் பயணம்
செய்தவர்கள்.
நீ சுகமாக இருக்கிறாய்.

தாய்க்குரங்கின் பிடியிலிருக்கும்
குட்டியைப்போல்
நீ என் மடியில்
பத்திரமாயிருக்கிறாய்.
பதறிப்பதறிச் சிதறிப்
போகாதே.

எழு தமிழ். எழு.
ஒரு பேரலையின் உசுப்பலில்
விசைப்படகு ஆபத்தான
ஆட்டமொன்றாட - அந்த
அதிர்வலைகள் அவள் உள்ளுக்குள்
பரவிஉசுப்ப - அவளுக்கு
வந்துவிடும் போலிருந்தது
வாந்தி.

அவள் தரைமேல் மீனாய்
வலைமேல் உருண்டாள்.
தாளாமல் துடித்தவளைத்
தாவிஎடுத்து
அவலம் கொள்ளாதே
தமிழ். இது ஓர் அனுபவம்
என்றான்.

வேண்டாம். எனக்கிந்த
அனுபவம் வேண்டாம்.
அவள் சட்டை பிடித்துலுக்கிச்
சத்தமிட்டாள்.

அவனோ ஏசுவின்
மலைப்பிரசங்கம் மாதிரி
அலைப்பிரசங்கம்
ஆரம்பித்தான்.

பாவம். வயதுக்கு வந்த
குழந்தை நீ. அனுபவங்களின்
தொகுப்புதான் வாழ்க்கை.

நம் வாழ்க்கைமுறை
தீர்மானிக்கபட்ட
அனுபவங்களையே நம்மீது
திணித்தது.

யாருக்கோ நேர்ந்த
அனுபவங்களை
ஒப்புக்கொள்ளுமாறு நம்மீது
துப்பியது.

ஆகவே தாத்தாக்களின்
நகல்களாகவே தமிழன்
தயாரிக்கப்பட்டான்.

எனவே பல நூற்றாண்டுகளாக
இந்த இனம் இருந்த
இடத்திலேயே இருந்தது.

சாதிக்கும் முளையிருந்தும்
சோதிக்கும் முயற்சி இல்லை.
வாழ்நாளில் 66,000 லிட்டர்
தண்ணீர் குடித்தான்.
ஆயுளில் முன்றில் ஒருபங்கு
தூங்கினான்.

நான்குகோடி முறை
இமைத்தான்.
நாலரை லட்சம் டன்
ரத்தத்தை இதயத்தால்
இறைக்கவைத்தான்.

35 ஆயிரம் கிலோ உணவு -
அதாவது எடையில் இந்திய
யானைகள் ஏழு தின்றான்.
மரித்துப் போனான்.

இதற்குத்தானா மனிதப்பிறவி?
யாருக்கும் இங்கே
குறைந்தபட்ச லட்சியம்கூட
இல்லை.

நமக்கேனும் வேண்டாமா?
இற்றுப்போன பழைய
இரும்புவேலிகளைச் சற்றே
கடக்கவேண்டாமா?
ரத்தம்பார்த்தாலே
மயங்கிவிழும் ஒரு தலைமுறையை
மீட்கவேண்டாமா?
எழுந்து உட்கார்.
துன்பமென்பது மனதின் பிரமை.
மனதை மாற்றுத்திசையில்
ஆற்றுப்படுத்து.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:25 am

தும்மல் - காதல் - வாந்தி
முன்றும் வந்தால்
அடக்கலாகாது.
அதன்போக்கில் விட்டுவிடு.
அவள் மெல்ல அசைந்தாள்.
கவிழ்ந்துகிடந்தவள் நிமிர்ந்து
எழுந்தாள். கண்திறந்து
கடல்பார்த்தாள்.

நடுக்கடல் கண்ட திடுக்கிடல்
கண்ணில் தெரிந்தது.
முச்சு - நம்பிக்கை
இரண்டையும் மெல்ல மெல்ல
உள்ளிழுத்தாள்.

கடைவிழியில் ஆடிய கண்ணீருக்கு
நங்கூரமிட்டாள்.

ஓங்கியடித்த ஓர் அலை
விசைப்படகின் விளிம்பு தாண்டி
திடதிரவமாய் அவள்மீது
விழுந்தபோது
ஓ வென்றலறினாள்
ஓசையோடு.

நன்றாய் நனைந்துவிட்டாள்.
கலைவண்ணன் தொடாத
பாகமெல்லாம் கடல்தண்ணீர்
தொட்டுவிட்டது.

ஓடிவந்தனர் உள்ளிருந்தோர்
என்ன.... என்னவாயிற்று? பாண்டியும்
இசக்கியும் படபடத்தார்கள்.
ஒன்றுமில்லை. அலை...

உள்ளே ஓடிய சலீம் துவைக்கவேண்டிய
ஒரு துண்டைத் துடைத்துகொள்ள நீட்டினான்
பரவாயில்லை. கடல்நோய் கொண்டவர்கள்
நனைந்தால் நல்லதுதான்.

இசக்கி அனுபவம் சொன்னான்.
தண்ணீர் சொட்டச்சொட்ட தானே
தலைதாங்கிக் தமிழ்ரோƒஜா அழுதாள்.
அதில் கண்ணீர் எது? தண்ணீர் எது?
கடல்மீன் அழுத கதைதான்.

ஒரு கண்ணில் பாசம் ஒரு கண்ணில்
பரிதாபம் மீனவர்பார்வை நிலைகுலைந்தவள்
மீது நிலைத்தது.

ஆவேசமாய் நிமிர்ந்தவள் - இப்போதே
கரைதிரும்ப வேண்டும் என்றாள் அழுதவிழி
துடைத்தபடி
மீன் விழுந்தாலும் விழாவிட்டாலும்
மாலைக்குள் கரைசேர்ப்போம் என்றான் பாண்டி
அலையில் இந்தப் படகு கவிழ்ந்துவிட்டால்?
கவிழாது. கவிழ்ந்தாலும் எங்கள் உயிர் கொடுத்து
உங்கள் உயிர்காப்போம் தங்கையே.

தடித்த எழுத்துக்களில் பேசினான் இசக்கி.
விடவில்லை அவள்.

டீசல் தீர்ந்துவிட்டால்?

தீராது 2800 லிட்டர் கொள்ளும் கலத்தில்
இரண்டாயிரம் லிட்டர் அடைத்திருக்கிறோம்
நம்பிக்கை சொன்னான் பாண்டி
படகைத் திருப்ப முடியுமா - முடியாதா?
அவள் கரைக்கே கேட்குமாறு கத்தினாள்.

யாரும் பேசவில்லை.

முட்டிக்கொண்ட இரண்டு அலைகள் எட்டிமோத
தஞ்சாவூர் பொம்மையாய்த் தலையாட்டியது படகு.
அவள் வயிற்றுக்குள் வட்டமிட்ட
குமட்டல்குமிழி வளர்ந்து வளர்ந்து -
நெஞ்சு கடந்து - தொண்டைதொட்டு -
வெளியேறியது. அவள் வலையெல்லாம்
நனைய வாந்தியெடுத்தாள்
கலைவண்ணன் தன் கட்டைவிரல் பதித்து
அவள் நெற்றிப்பொட்டை அழுத்தினான்
மீனவர் பதறினர்.

சலீம் மட்டும் கலைவண்ணனைக்
கேட்டேவிட்டான்
தங்கை வாந்தியெடுக்கும்படி
அப்படி என்ன செய்தீர்கள்?



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:31 am

உள்ளே எதையும் ஒளிக்காதே.
துணிந்துவிடு. துப்பிவிடு.
ஆசையைத் துப்பு.
ஞானம் வரும்.
அச்சம் துப்பு.

வீரம் வரும்.
ரகசியம் துப்பு. தூக்கம்
வரும்.

அவள் அடிவயிற்றில் உழன்ற
வாந்தி துப்பினாள். அழுத்தம்
குறைந்தது. அமைதி வந்தது.
நெற்றியில் அடித்த சம்மட்டி
நின்றேவிட்டது. மழை நின்ற
பின்னால் இலை சொட்டும்
துளிபோல தலைபாரம்
வடிந்தது, சொட்டுச்
சொட்டாய்.

அவள் வலை நனைய
வாந்தியெடுத்தது கண்டு
பதறிய மீனவர் சிதறி ஓடினர்.
காணாமல் போன வேகத்தில்
மீண்டும் கண்ணில் தெரிந்தனர்.
பரதன் கையில் குடிதண்ணீர்
பாண்டி கையில் கோப்பைத்
தேநீர்.

இதற்குத் தேநீர்தான்
மருந்து.
குடி தாயே. குடி.

- இசக்கி வைத்திய வார்த்தை
சொன்னான்.

பருகினாள் அவள்.
பாலில்லாத தேநீர்.
அவள் களைப்பை மாற்றும்
கறுப்புத் தாய்ப்பால்.

துவண்ட கொடியைத்
தோளில் அணைத்து
வாந்தியெடுத்த
வாய்க்கடை துடைத்து
விரிந்த குழலை
விரல்கொண்டளைந்து
காதலிதுயரம் கண்களால்
அளந்து அவள் கண்ணோரம்
சிதறிய
கண்ணீர் துடைத்த கலைவண்ணன்
இப்போது
பரவாயில்லையா..? -
என்றான் இதமாக.

புலவர்க்கு மட்டுமே புரியும்
சில தமிழ்ச்சொற்கள் மாதிரி
- அவனுக்கு மட்டுமே
புரியும்படி ஒரு புன்னகை
புரிந்தாள்.

அந்தப் பாலைவனச்சாரல்
கண்டு பளிச்சென்று மலர்ந்தவன்
- எல்லாரும் ஜோராக
ஒருமுறை கைதட்டுங்கள்.

தமிழ் புன்னகைக்கிறாள். தமிழ்
புன்னகைக்கிறாள்.
- என்று தன்னைமறந்து
கத்தினான்.

அவர்கள் குழந்தைகளாய்ச்
சிரித்தார்கள்.
குதூகலமானார்கள்.
மார்கழிமாத வெயில்
மறைவதற்குள் துணிகாய
வைக்கத் துடிக்கும் ஒரு
சலவைக்காரியைப் போல
அந்தப் புன்னகை மறைவதற்குள்
அவளைக் கரைசேர்த்துவிடக்
கருதினார்கள்.

மின்னல்வேகத்தில் மீன்பிடிக்க
ஆயத்தமானார்கள்.
பாண்டி கட்டளையிட்டான்.

பரதா. விசைப்படகின்
வேகம் குறை. இந்த இடத்தின்
ஆழம் அறி. இரும்புக் குண்டை
நுனியில்கட்டிய பிளா…டிக் கயிறு
எடு.

வீசு கடலில்.
விடு. விடு. போகட்டும்.

அது தரைதொட்ட உணர்வு
தட்டுப்படுகிறதா? இப்போது
எடு. ஆழக்கயிற்றின் நீளம்
அள. எத்தனை பாகம்?
இசக்கி அளந்து சொன்னான்.

பதினான்கு பாகம்...
பதினான்கு பாகமா?
பரவாயில்லை - இருபத்தைந்து
மீட்டர். இறக்கு, இறக்கு.
வலைகளை இறக்கு. அய்யா

பேனாக்காரரே.
அம்மா தமிழ்ரோƒஜா.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:31 am

ஓரமாய் ஒதுங்குங்கள்.
வலையோடு சேர்த்துக்
கடலோடு எங்கள் இரும்புவடம்
இறங்கும். தலையில்
மோதலாம். தள்ளியிருங்கள்.

ஏ இசக்கி. ஏ சலீம்.

வலைவிரிய வசதியாய்ப்
பக்கப்பலகை இறக்கு.
கவனம். ஒவ்வொரு பலகையும்
தொண்ணூறு கிலோ.

நகர்த்திவிட்டு நகராவிட்டால்
முகத்தைப் பிய்க்கும்.
மீன் விழும் முன்னே நீ விழக்கூடாது.

சுறாக்கள் உன்னைச்
சுவைத்துவிடக் கூடாது.
அப்புறம் உன்
வைப்பாட்டிக்கெல்லாம் நான்
வாழ்வுதர முடியாது.

இரும்புவடத்தில் வேகம்
இருக்கு. பக்கப் பலகையைப்
பார்த்து இறக்கு...

கடலில் எறிந்த வலை
காணாமல் போக - மிதந்த
மிதவைகள் அமிழ்ந்துபோக -
பக்கப்பலகைகளின் பாரம்
அழுத்த ஆடிக்காற்றில்
பாவாடையாய் அகலப்பட்டது
வலை.

விழித்த விழி விழித்தபடி
வியந்துநின்ற தமிழ் ரோƒஜா -
படகுக்கு வால்முளைத்த
மாதிரி வலை மிதந்து
கொண்டே வருமா?
என்றாள்

ஆமாம். கடலின் தரையை
வலை தடவிக்கொண்டே வரும்.
வலைநீளும் எல்லைக்குள் எந்த
மீன் வந்தாலும் அது
வலைப்படும். வலையில்
மாட்டிய மீனும்
அரசியல்வாதியிடம் மாட்டிய
பணமும் ஒன்றுதான். சிக்கினால்
மீளாது.

வெண்கல உண்டியலில்
வெள்ளிக்காசுகளாய்த் ததும்பிச்
சிரித்தாள் தமிழ்ரோƒஜா.

இதுவல்லவோ நான்
எதிர்பார்த்தது. இதுவல்லவோ
என் மனம் கேட்டது.

இதற்காகவல்லவோ நான்
தண்ணீரில் தவமிருப்பது.

சிரி பெண்ணே சிரி. இந்தக்
கடல் இத்தனை யுகமாய்
எத்தனை சிரித்ததோ
அத்தனைச் சிரிப்பையும்
மொத்தமாய்ச் சிரி...
சுக்கான் அறையில் பரதன்.

சமையல் அறையில் சலீம்.

விசைப்படகின் வெளித்தளத்தில்
அணில் மனிதர்களாய் -
பாண்டியும் இசக்கியும்.

விசித்திர வாழ்க்கை
இவர்களுக்கு என்றாள்
தணிந்த குரலில் தமிழ்.

இல்லை. வேதனை
வாழ்க்கை இவர்களுக்கு
என்றான் தடித்த குரலில்
கலை.

விளங்கவில்லை.
உனக்கு மட்டுமில்லை.
உலகுக்கே விளங்கவில்லை.

இவர்கள் இந்த மண்ணின்
பூர்வகுடிகள். காற்றை
எதிர்த்துக் கடல்
கிழித்தவர்கள். கிழக்கிலும்
மேற்கிலும் நம் நாகரிகத்தை
நடவுசெய்தவர்கள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:32 am

பூமியின் மையக்கோட்டுக்கு
மேலே போனவர்கள். ஆனால்
இன்னும் வறுமைக்கோட்டுக்குக்
கீழே வாழ்பவர்கள்.

மனிதனின் முதல்தொழில்
மீன்பிடித்தல்தான். வேட்டையே
மீன் வேட்டையில்தான்
ஆரம்பித்தது.

இன்னும் பசிபிக் தீவுகளில் சில
பழங்குடிகள் அம்பு
தொடுத்துத்தான் மீன்
பிடிக்கிறார்கள்.

அந்தப் பழந்தொழில் செய்த
இனம் இன்னும் பழையதாகவே
இருக்கிறது.

இந்த மீன்நாற்றத்தில் முக்கு
முடிக்கொள்கிற சில
மனிதர்களைப் போலவே -
இவர்களைப் பார்த்துக்
கண்முடிக் கொண்டது காலமும்.

இயற்கை தாலாட்டினால்
இந்தக் கடல் இவர்களுக்குத்
தொட்டில்.

இயற்கை தள்ளிவிட்டால் இந்தக்
கடல் - கல்லறை.

கரை மீண்டால் இவர்கள்
மீன்தின்னலாம். கரை
மீளாவிட்டால் இவர்களை
மீன்தின்னும்.

வேட்டையாடு. அல்லது
ஆடப்படு.- இதுதான்
இந்தத் தண்ணீரில் எழுதப்பட்ட
அழியாத வாசகம்.

அதோ பார். இந்த உப்புக்
காற்றில் துருப்பிடித்துவிட்டது
இரும்புவடம்.

சுக்கான் இரும்பில் துரு.
சமைக்கும் அடுப்பில் துரு.
நட்ட கம்பியில் துரு.
விசைப்படகின் விளிம்பில் துரு.

இன்னும் துருப்பிடிக்காதிருப்பது
இவர்களின் எலும்பு
மட்டும்தான்.

அவன் பேச்சிலிருந்த உண்மையும்
உள்ளார்ந்த கண்ணீரும்
தடுமாறவைத்தன தமிழை.

இப்போது புரிகிறது. என்
வாழ்க்கை எவ்வளவு
மெல்லியதென்று.

என் வீட்டுக் கூண்டுக்கிளிகூட
எவ்வளவு பத்திரமாயிருக்கிறது?

என் வாழ்க்கை என்
சாப்பாட்டு மேஜைக்கே
வந்துவிடுகிறது. ஆனால்,
இவர்களோ கரையில்
தொலைத்த வாழ்க்கையைக்
கடலில் தேடிக்
கொண்டிருக்கிறார்கள்.

மெல்லிய வாழ்க்கை என்
வாழ்க்கை. பனித் துளிக்குள்
பள்ளிகொள்ளும் வாழ்க்கை.

என் குரோட்டன்… - என்
செல்ல நாய் - ஆயிரம்
டாலர் இலைகளின் மேலே
அள்ளித் தெளித்த புள்ளிகள் -
காற்றாடும் மொட்டைமாடி -
கண்ணடிக்கும் நட்சத்திரம் -
சுருக்கம் விழாத படுக்கை -
சுதந்திரமான குளியல் -
கைநிறையக்காசு -
பைநிறையக் கனவுகள் - இந்த
சந்தோ„வட்டத்தில் நான்
செளகரியமாயிருக்கிறேன்.

ஆனால், இவர்களுக்காக நான்
இரக்கப்பட முடியும். என்னால்
இவர்களாக இருக்க முடியாது.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:32 am

என் சுவாச உறுப்புகள்
தரைக்கு மட்டுமே ஏற்றவை.
தண்ணீருக்குள் தள்ளாதீர்கள்.

அவள் சத்தமிட்டுப்
பேசவில்லை. ஆனால் அவள்
கருத்து உரத்துநின்றது. உண்மை
சொல்கிறேன் உணர்ந்து
சொல்கிறேன் என்ற உறுதி
இருந்தது.

வாடிய கீரையைத்
தண்ணீர்தெளித்து வைப்பது
மாதிரி
வாடிய அவள் முகத்தில்
வேர்வை தெளித்தது வெயில்.
தன் கசங்காத கைக்குட்டையில்
அவளின் கசங்கிய
முகம் துடைத்தான்.

தாயின் முதுகைக் கட்டிக்
கொண்டு முதன்முதலாய்
யானைபார்க்கும் ஒரு
குழந்தையைப் போல்
கலைவண்ணன் முதுகைக்
கவசமாய்க் கொண்டு அவள்
கடல்பார்த்தாள்.

பார்த்து வியந்து பயந்தவள்
பதறிச் சொன்னாள்.
அய்யய்யோ. இதில்
விழுந்தால்?

அவ்வளவுதான். குன்றில்
தொலைந்த குன்றிமணிதான்.
கடலில் விழுந்த
கடுகுதான்...
அவள் செல்லக் கேள்விகளால்
சீண்டினாள்.

இப்போது
புயலடித்தால்?
அடிக்காது. புயல் நல்ல
விருந்தாளி. சொல்லாமல்
வருவதில்லை...

திடீரென்று கடலுக்குள்
எரிமலைகள் வெடித்தால்?

வங்காளவிரிகுடாவில் அதற்கு
வசதி இல்லை. இது
இந்துமகாசமுத்திரத்தின்
குழந்தை. பெரும்பாலும்
ஆழமில்லை. எரிமலைகள்
எங்குமில்லை.

பர்மாக் கரையோரம்
செடுபா தீவுகளில் சின்னச்
சின்ன எரிமலைகள் உண்டு.

ஆனால், அவை அனல்
கக்குவதில்லை. மணல் கக்கும்.
முன்னாளில் இது கடல்
என்றுகூடக் கருதப்படவில்லை.

கங்கைஏரி என்பதுதான் இதன்
சின்ன வயதுச்
செல்லப்பெயர்...

விசைப்படகில் ஓட்டைவிழுந்து
விறுவிறுவென்று நீர்புகுந்து
மொத்தத்தில் எல்லாரும்
முழ்கிவிட்டால்?

கவலைகொள்ளாதே
கண்ணே. ஓர் அலையின் முதுகில்
ஏறிக்கொண்டு உலகம் சுற்றி
வருவோம்...

அவள் சலவைநிலவாய்ச்
சட்டென்று சிரித்தாள்.
அலை முதுகில்
ஏறிக்கொண்டால் உலகம் சுற்ற
முடியுமா?

ஆமாம். தென்கடலில்
தோன்றும் பேரலைகள்
இருபத்துநான்கு மணி
ஐம்பது நிமிடத்தில்
உலகத்தைச் சுற்றிவிட்டு
ஓடிவந்துவிடுகின்றன. அப்படி
எனக்கும் உனக்கும் ஓர் இலவச
அலை கிடைக்காதா? சுற்றும்
உலகத்தை நீர்வழியே
சுற்றிவரமாட்டோமா?

எனக்கு மீண்டும்
தலைசுற்றுகிறது...



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:32 am

அவளைத் தாங்கிப்பிடித்துத்
தலைமுடிதடவி விசைப்படகின்
விளிம்பில் சாய்த்து நெற்றியில்
அன்பு தடவி ஆதரவு
செய்தான்.

இரண்டுமணி நேர
இடைவெளிக்குப் பிறகு
மீனவர்கள் வலையிழுத்தார்கள்.
நீரில் கிடந்த இரும்புவடங்கள்
எந்திரச் சுழற்சியில்
ஏறின மேலே.

அமிழ்ந்த மிதவை மீண்டும்
மிதக்க - பக்கப் பலகைகள்
பளிச்சென்று தெரிய -

மீனவர்கள்
இழுக்க இழுக்க நீள வலைகள்
நிறைத்தன படகை.

எந்த முகத்திலும்
உற்சாகமில்லை.
வலையில் மீன்பட்ட அறிகுறி
இல்லை.

வலையில் அங்கங்கே ஒட்டிவந்த
பச்சைப்பாசி, அது தரைதடவி
வந்ததென்றே தடயம்
சொன்னது.
கலைவண்ணன் முகத்தில்
கவலைக்கோடு.

அரசனை யாசித்து
வெள்ளைவேட்டியோடு போன
புலவன் அழுக்குவேட்டியோடு
திரும்பி வந்ததைப்போல
மீன்பிடிக்கப் போன வலை
பாசி பிடித்தல்லவா
வந்திருக்கிறது.
தமிழ்ரோƒஜாவும் தவித்துப்
போனாள்.

முழுவலையும் இழுத்து
முடித்தார்கள். இல்லை.
பெருமீன்கள் இல்லை.
ஏழைக்கிழவியின் சுருக்குப்பையில்
முலையில் அங்கங்கே முடங்கிக்
கிடக்கும் சில்லறைகளைப்போல
வலையின் ஆழத்தில் சில
சில்லறை மீன்கள்
சேர்ந்திருந்தன.

வலை உதறினார்கள்.
வா வா தமிழ்.
வந்துபார்...

அவள் தட்டுத்
தடுமாறிக்கொண்டே
ஆடும்படகில் ஓடிவந்தாள்.
தட்டை மீன்கள் குட்டி மீன்கள்
உருளைஉயிர்கள் பெயரிடப்படாத சில
பிண்டப் பிராணிகள் சின்னச் சின்ன

ஜெல்லி மீன்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாய் ஆக்டோப…கள் .. குதித்தும்
ஊர்ந்தும் நகர்ந்தும் தவழ்ந்தும் பல
வண்ணங்களில் படங்காட்டின.

சரியாய் விழவில்லை - பாண்டி
சமையலுக்கே காணாதே - சலீம்
இன்னொரு முறை வலைபோட நேரமில்லை
தங்கை பாவம் தாங்காது கரை திரும்ப
வேண்டியதுதான் - இசக்கி.

எல்லார் முகத்திலும் கவலை வலைவரித்து.
கலைவண்ணன் தமிழ்ரோƒஜாவைத் தனியே
அழைத்தான்.

அவள் உள்ளங்கைகளைத் தன்
கன்னங்களில் ஒற்றிக் கொண்டு சொன்னான்.

இதோ பார் தமிழ். முப்பது கிலோ மீட்டர்
கடல் கடந்து வந்தபிறகு வெறுங்கையோடு
கரைதிரும்புவது காலவிரயம் - காசுவிரயம்-
டீசல் விரயம். பல்லைக் கடித்துப் பொறுத்துக்
கொள். இன்னொரு வலைவீச்சுக்கு
வாய்ப்புக்கொடு ... - அவன் கெஞ்சினான்
தலையை அழுத்திப் பிடித்து உட்கார்ந்தவள்
சற்றுநேரப் போராட்டத்திற்குப் பிறகு சரி,,,
என்றாள்.

உப்புக்கரித்த அவள் கன்னத்தில் இனிக்க இனிக்க
முத்தமிட்டான்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக