புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_m10தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து


   
   

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:16 am

First topic message reminder :

கடல்...
உலகின் முதல் அதிசயம்.
சத்தமிடும் ரகசியம்.
காலவெள்ளம்
தேங்கிநிற்கும் நீலப் பள்ளம்.

வாசிக்கக் கிடைக்காத
வரலாறுகளைத் தின்றுசெரித்து
நின்றுசிரிக்கும் நிஜƒம்.

கடல்...
ஒருவகையில் நம்பிக்கை.
ஒருவகையில் எச்சரிக்கை.

கடல்குடித்துக் கொண்டிருந்த
கலைவண்ணன் மடியில்கிடந்த
தமிழ்ரோƒஜாவை மறந்துபோனான்.

அவள் அழகின் நவீனம்.
சிறகுகளைந்து சுடிதார்கொண்ட
சொப்பனதேவதை. ரத்தஓட்டம்
பாயும் தங்கம் அவள் தேகம்.
பொறுக்கி எடுத்த உலக
அழகுகளை நெருக்கித் தொடுத்த
நேர்த்தியான சித்திரம். குமரி
வயதுகொண்ட குமரி அவள்.

அவன் அழகன். இளைய அறிஞன்.
காதலிக்கும்போதும் கம்பீரம்
குறையாதவன்.

என்ன யோசனை?
என்றாள் தமிழ்.
கலைவண்ணன் மனது
கரையேறியது.

இந்தச் செவிட்டுக் கரைகளோடு
அந்த அலைகள் இத்தனை
யுகங்களாய் அப்படி என்னதான்
பேசும் என்று யோசிக்கிறேன்.

பூமியில் கிடந்துகொண்டே இந்தக்
கடல் தூரத்துவானத்துக்குத்
தூரிகையில்லாமல் எப்படி
வர்ணமடிக்கிறது என்று
யோசிக்கிறேன்.

மடியில் கிடந்தவள் நொடியில்
எழுந்தாள்.

நீங்கள் கடல்பைத்தியம்.

இல்லை. நான் கடற்காதலன்.

கடல் உங்களுக்குச் சலிக்கவே
சலிக்காதா?

காதலியும் கடலும் சலிப்பதில்லை தமிழ்ரோƒ.

அவள் மல்லிகைக்கரம் தொட்டு
மணிக்கட்டில் முத்தமிட்டான்.

நேசமின்சாரம் நெஞ்சுக்குள் பரவியது.

அவளை இழுத்து வளைத்து
இறுக்கி இறுக்கி உருக்கி உருக்கி
மடியில் ஊற்றிக் கொண்டான்.

ஓர் அலை அவர்கள் மீது அட்சதை தூவியது.

காதுமடல்களின் வெயில்மறைவுப்
பிரதேசங்களில் விளையாடி
அவன் விரல் நன்னம்பிக்கை முனைநோக்கி
நகர்ந்தபோது வெடுக்கென்று விலகிக்
கொண்டவள் பொய்க் கோபத்தில் பூத்தாள்.

அவன் அறிவான் - ஊடல் என்பது
பசிதூண்டும் பந்தி. பந்திக்கு முந்தியவளை
வம்புக்கிழுத்தான்.

வா. கொஞ்ச நேரம் கடலோடு கால்நனைப்போம்.

அய்யோ. கடலுக்குள்ளா? நான் மாட்டேன்.

கலாபமயில் கூட்டுப்புழுவானது குறுகிக் குறுகி.

ஏன்? என் மீது நம்பிக்கையில்லையா?
இல்லை, கடல்மீது நம்பிக்கையில்லை.

எதனால்?

ஆக்டோப… அலைகள் என்னை அள்ளிக்
கொண்டோடிவிட்டால்?

அப்படியாவது கடல்நீர் குடிநீராகட்டுமே.
சிரித்தது அவன் நுரைத்தது கடல்
தள்ளி நின்றாள் தமிழ்ரோƒஜா,

தான்மட்டும் அலைதாண்டிக் கடல்புகுந்தான்
கலைவண்ணன்.

வா

மாட்டேன். எனக்கு பயம் தண்ணீர் பயம்.

குடிநீர் குளிநீர் தவிர எல்லாம் பயம்.
வெள்ளித்திரையில் வெள்ளம் பார்த்தாலே
விழிமுடிக் கொள்வேன்.

ஆறோ ஏரியோ கடலோ என் கனவுகளில்
ததும்பும்போது என் படுக்கையில் நான்
வியர்த்து விழிக்கிறேன்.

மாட்டேன் கடலாட மாட்டேன். என்னை
ஆபத்துக்குள் அழைக்காதீர்கள்.

ஒரே ஒரு பயம்
எனக்கு தண்ணீர் பயம்

பேசப் பேச அவள்
படபடப்பைப் பறைசாற்றின
கண்களில் உடைந்துவிழுந்த
மின்மினி மின்னல்கள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:43 am

ஆமாம் விடிந்தால் உன் பிறந்த நாள்.
அப்படியா. என்று ஆச்சரியம் காட்டியவள்,
நான் தேதி பார்ப்பதை நிறுத்திவிட்டேன் என்றாள்.
ஏன்? என்றான்.
கோமாவில் கிடப்பவனுக்குத் தேதி எதற்கு?

அவநம்பிக்கை அடையாதே. நாளை
உன் பிறந்தநாள். ஒரு நல்ல சேதி வரலாம்
வருமா?

வராவிட்டாலும் பரவாயில்லை. நீ பூமிக்கு
வந்ததே ஒரு நல்ல சேதிதானே?

எனக்கென்ன பிறந்தநாள் பரிசு தருவீர்கள்?

பொறுத்திருந்து பார்.
சூரியன் தாம்பூலம் போட்டு வெளியேறத்
தயாரானபோது -
அவள் கன்னத்திலும் காதுகளிலும் சுட்டுவிரல்
கோலமிட்டு எழுப்பினான்
தமிழ். உனக்கென்ன பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
என்ன பரிசு தருவீர்கள்? அவள் விழிக்காமல்
புரண்டபடி வினவினாள்.
இதோ.

அவள் விழித்துப் பார்த்தாள்.
அவன் கையில் - அரை டம்ளர் தண்ணீர்.

நேற்றுப் பருகாமல் வைத்திருந்த அவன் பங்கு.
அவள் உணர்ச்சிவசமானாள்.. பரவசப்பட்டுப்
பாய்ந்தெழுந்து அவன் தோள்கட்டினாள்.
அந்த வேகத்தில் தவறி விழுந்து டம்ளர்
உருண்டது, தண்ணீர் சிதறியது.

அது ஒன்பதாம் நாள்.
இதயத் துடிப்பு குறையத்
தொடங்கும் இரண்டாம்
வாரம்.

தண்ணீர் குறையக் குறைய
உயிர்த்தாமரை உலரும்
காலம்.

ஒரு மனிதன் தண்ணீர் இல்லாமல்
ஈரப்பதம் இல்லாத
பாலைவனத்தில் இரண்டு நாள்
இருக்கலாம்.

ஈரப்பதமுள்ள கடலில்
ஏழுநாள்வரை பொறுக்கலாம்.
ஆனால் - அது ஒன்பதாம்
நாள்.

காலக்கெடு முடிந்துவிட்டது.
எச்சில் சுரப்பி வறண்டுவிட்டது.
தார்ச்சாலையில் அசைவற்றுக்
கிடக்கும் செத்தபிராணியாய்
உள் அண்ணத்தில்
ஒட்டிக்கொண்டது நாக்கு.
சூரியன் வந்துவந்து
போனாலென்ன. விடியல்
மட்டும் வரவே இல்லையே.
இன்னும் சொல்லப்போனால்
இரவுகூடக் கொஞ்சம்
இதமாயிருக்கிறது.

விடிந்தால்தான்
பயமாயிருக்கிறது.

சாரமற்ற இந்த
வாழ்க்கையைச்
சகிப்பதெப்படி?
கடற்காற்றின் ஒரேமாதிரியான
ஓசை. காது மடலடியில்
படியும் உப்புப் பிசுபிசுப்பு.

கொஞ்சம் கொஞ்சமாய்
எடையிழக்கும் உடல்கள்.

உடம்பின் ஏதோ ஒரு
துவாரத்தின் வழியே, உயிர்
பகுதி பகுதியாய்
வெளியேறுவதாய் ஒரு பயம்.
மோகனமாய்த் தொடங்கி
முகாரியாய் நிறம்மாறிய
தளக் தளக்
அலைச்சத்தம்.

நரகத்தை உருவகித்தவன் அது
கடலுக்கு மத்தியில்தான்
கட்டப்பட்டிருக்கிறது என்று ஏன்
கற்பனை செய்யவில்லை?
இதுதான் நரகம். இதுதான்

மரணத்தின் முன்னோட்டம்.
இந்த நிமி„த்தின் முதல் தேவை
தண்ணீர்தான். சுருங்கிக்
கொண்டிருக்கும் உயிரைச் சில
மில்லி மீட்டர்களாவது
விரியவைப்பது தண்ணீர்
மட்டும்தான்.

மீனவர் சற்றே தாங்குவர்.
அவை உழைத்த தேகங்கள்.

தமிழ்ரோƒஜா தாங்குவாளோ?
அது செம்பருத்திப் பூக்களையும்
செண்பகப் பூக்களையும்
செதுக்கிச் செதுக்கி இழைத்த
தேகம்.

கிரேக்கச் சிற்பம்போல்
பளபளத்த பருவமகள்,
மொகஞ்சதாரோ
ஒவியம்போல் முகம்
சிதைந்து போனாளே.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:43 am

மீனுக்குக் கொண்டுவந்த
பனிக்கட்டி இருந்திருந்தாலும்
ஊனுக்கும் உயிருக்கும்
கொஞ்சம் நீர்
வார்த்திருக்கலாம்.

ஆனால் - கலக்கத்தில் -
உள்ளறைக் கதவு திறந்து
கிடந்ததில் உ„ணக்காற்று உள்
நுழைந்து பனிக்கட்டிகளை
அழவைத்துவிட்டுப்
போய்விட்டது.

இனி என்ன வழி? உறைந்த
கடல்நீரில் உப்பிருக்காதாமே.
அதை உறைய வைத்துப்
பருகலாமா?
அய்யோ.

கடல்நீர் உறைய இது
வடதுருவம் அல்லவே.
இனி இருக்கும் ஒரே ஓர்
எதிர்பார்ப்பு வானம்தான்.

இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை
- ஓரிடத்தில் குவிந்ததை அள்ளி
ஊருக்குப் பகிர்ந்தளிக்கும்
காம்ரேட் மேகம்தான்.

ஏ, திட்டுத்திட்டாய் மிதக்கும்
மேகங்களே. நீங்களும்
நாங்களும் ஒரே ƒஜாதிதான்.
ஆமாம்.

இருவருமே விட்டுப்புறப்பட்டு
விலாசம் தப்பியவர்கள்.
கொள்ளை கொள்ளையாய்
மிதக்கும் வெள்ளை
மேகங்களே. எங்களுக்காகக்
கொஞ்சம்
கறுப்பாகுங்களேன்.

மழைத்துளிகளை
உண்டுவாழுமாமே
சாதகப்பட்சிகள். நாங்களும்
இப்போது சாதகப்பட்சிகளே.

இந்தச் சாதகப்பட்சிகளின்
ƒஜாதகம், இப்போது உன்
கையில் மழையே... உன்
கையில். ஓராண்டுக்கு
எண்பத்தாறு சென்டிமீட்டர்
உலகத்துக்காக ஒழுகும்
மழையே. எங்கள் மீது ஒரே
ஒரு மில்லிமீட்டர் உதிர்க்கக்
கூடாதா? திருடிய பொருளைத்
திருப்பித்தர மறுக்கும் ஒரு
திருடனைப் போல -
உயரத்தில் ஏறிக்கொண்டு ஏன்
எங்கள் உயிர் குறைக்கிறாய்?
கொஞ்சம் அவிழ்த்துவிடு. உன்
வைரப்பை சிந்தட்டும்.
முத்துக்கள் எங்கள் முகத்தில்
தெறிக்கட்டும். மாட்டாயா?
காட்டில் நிலாவும் - கடலில்
மழையும் விரயமா? ஏன்?
காட்டில் நிலவடித்தால் என்ன?
விலங்குகளும் பறவைகளும்
நிலாவின் எதிரிகளா?
பூக்களுக்கு நிலவின் புளகம்
பிடிக்காதா?
கடலில் மழை பெய்தால்
என்ன? இந்த உலர்ந்த
தேகங்கள் உயிர்

நனையக்கூடாதா?
இரக்கமில்லையா
இளையமேகமே? யாராவது
ஒரு விஞ்ஞான தேவதை வந்து
உன்மீது சில்வர் அயொடைடு
தெளித்தால்தான் சில்லென்று
சிரிப்பாயா?
காற்று வந்து மண்ணைச்
சுரண்டாமலிருக்க மழை
வேண்டுமாமே. மரணம் வந்து
எங்கள் உயிரைச்
சுரண்டாமலிருக்கவும் இப்போது
மழைதான் தேவை.
அவர்கள் மானசீகமாக
யாசித்தார்கள். என்ன
செய்வது? காது கேட்காது -

வானத்திற்கு. கண் தெரியாது
- மேகத்திற்கு.

கடல்
அமைதியாகத்தானிருந்தது.
கரையில் ஒரு புயலடித்தது.
அந்தப் புயலின் பெயர்
அகத்தியர். தமிழ்ரோƒஜாவின்
தந்தை.

தன் எதிர்காலச்
செலவுப்பட்டியலை எண்ணிக்
கிடந்தபோதுதான்
தமிழ்ரோƒஜா அவர்
ஞாபகங்களில் மின்னி
மறைந்தாள்.

ஓ. என்னவானாள் என் மகள்?
வாரத்தில் ஒருநாள் மட்டும்
சலவைச்சட்டை அணிந்து
கொள்ளும் ஒரு பழைய
தமிழ்வாத்தியாரைப் போல
அந்த வாரத்தில் அன்றுதான்
மகளை நினைந்தார்
அகத்தியர்.
அது ஒன்றும் அதிசயமல்ல.
முன்பெல்லாம் அவர்
அனுமதியோடு இருவரும்
விடை கொள்வார்கள்.

சிலநாள் சென்று
திரும்புவார்கள்.

அப்போதெல்லாம் அவர்
கொண்ட வருத்தம் முன்று
நாட்களாகத் தன் மகளைக்
காணவில்லையே என்பதல்ல.
தன் மகளின் முகத்தில்
முத்தத்தின் அடையாளங்கள்
காணவில்லையே என்பதுதான்.

இத்தனை நாள் இல்லாமல்
போனது இதுவே முதல் முறை.
அவர் மீசையில் தோன்றிய
நரைகளைப் போலவே
மனதிலும் அங்கங்கே
அச்சரேகைகள்.

சுழற்றினார் -
பத்திரிகை அலுவலகம் -
கலைவண்ணன் இல்லை.

சுழற்றினார் -
பல்கலைக்கழகம் -
தமிழ்ரோƒஜா இல்லை.
சின்னச் சந்தேகக்கோடு
சீனத்துப் பெருஞ்சுவரானது.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:43 am

அடுத்ததென் செய்வது?
காவல்துறைக்கு எப்போதும்
அவர் தூரத்து உறவினர்.

பல காக்கிச்
சட்டைகளுக்கெல்லாம்
அவர்தான் கஞ்சி உபயம்.
அடுத்த பத்தாம் நிமிடத்தில்
ஐந்தாறு ஜோடி பூட்…கால்கள்
அழகிய கிரானைட் படிகளை
அழுக்காக்கின.

சற்று நேரத்தில் செய்திகள்
பறக்க - அங்கங்கே
தீப்பிடிக்க - ராயபுரம்
காவல்நிலையத்தில் உண்மையின்
மங்கிய கைரேகைகள் பதிவாக
- அகத்தியர் கண்களுக்கு ஒரு
மெல்லிய நம்பிக்கை பிறந்தது.

கரையிலிருந்த அவருக்கு
மட்டுமல்ல - கடலில் சிக்கிய
ƒஜீவன்களுக்கும் ஒரு தூரத்து
நம்பிக்கை
வானத்தில் தெரிந்தது.

உடம்பு நிற்பது உயிரின்
தலத்தில். உயிர் நிற்பது
நம்பிக்கை பலத்தில்.
அந்த
நம்பிக்கை அவர்களைக்
கைவிடவில்லை. பரதன்தான்
முதலில் அதைப் பார்த்தான்.
அதோ.

தன் உயிரையெல்லாம் உருட்டி
- சுட்டு விரலில் திரட்டி அவன்
காட்டிய திசையில் ஓர் இருண்ட
மேகத்தீவு திரண்டு நின்றது
தென்கிழக்கே.

ஓ.
கருணையின் நிறம் கறுப்பு.
சூரியன்கூட அதன்மீது சுள்ளென்று
அடிக்கவில்லை.

ஒரு மார்கழி மாதத்து
மாலையில் அருகம்புல் மேய்ந்து
திரும்பும் ஒரு தாய்ப்பசுவின்
கொழுத்த காம்பாய் அந்த
மேகம் செழித்து நின்றது.

ஒரு தென்றல்கன்று
வாய்வைத்தால் போதும் -
திமுதிமுவென்று சொரிந்துவிடும்
போலிருந்தது.

சிந்தி விழப்போகும் அந்த
மேகம் இந்த வேளை இங்கு
வருமா?
வாராது.

காற்று அவர்களுக்கு மேகத்தை
அழைத்துவரும் திசையில்
வீசவில்லை. அந்த மேகமிருக்கும்
தென்கிழக்கை நோக்கித்தான்
காற்று வீசுகிறது.

அந்த மேகம் உடைந்து விழும்
நேரத்தில் அதை
அடைந்துவிட்டால் - இருக்கும்
பாத்திரத்தில் சிதறும்
உயிர்த்துளிகளைச் சேமித்துக்
கொள்ளலாமே.

சரிசரி. எப்படி அடைவது?
அதோ அதோ.

எட்டிவிடும் தூரத்தில் வானம்.
தொட்டுவிடும் தூரத்தில்
மேகம்.
கலைவண்ணன் கண்ணில் ஒரு
மின்னல்.

பாண்டி. பரதன்.
பாய்மரம் செய்வோமா? பாய்மரம்...
பாய்மரம் செய்தால் பசி
தீருமா? - இசக்கி.

பசி தீருமோ இல்லையோ,
தாகம் தீரலாம். அதோ
பாருங்கள் ஒரு தாய்மேகம்.

நல்ல வாய்ப்பு நமக்கு.
காற்றும் அதை நோக்கி.
நீரோட்டமும் அதை நோக்கி.
பாய்மரம் மட்டும் கட்டிவிட்டால்
பயணம் கொள்ளலாம். முயற்சி.

முயற்சிதான் முன்னேற்றம். என்ன
சொல்கிறீர்கள்? கடலின்
அடிமைகளாய்ச் சாவதைவிடக்
கடலின் வேட்டைக்காரர்களாய்ச்
சாவோமே.

சரி. அதுதான் சரி
தமிழ்ரோƒஜா வழிமொழிந்தாள்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்
ஒரு பாய்மரம் அங்கே
பிரசவமானது.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:44 am

தளத்தின் மேற்கூரை கழற்றி -
அதை செளகரியமாய்ச் சாய்த்து
- அதன் ஓரங்களில் கழிகள்
நட்டு - ஆணிகள் அறைந்து -
அந்தக் கழிகளில் லுங்கிகள் -
போர்வைகள் தார்ப்பாய் கட்டி
வீணையின் தந்திகளாய் இழுத்து
நிறுத்தி - பரபரவென்று
பாய்மரம் தயாரித்து, நங்கூரம்
களைய - பாய்மரத்தில்
மோதிய காற்று விசுக்கென்று
நகர்த்தியது விசைப்படகை.
எல்லோரும் கலகலவென்று
ஒலிசெய்து கைதட்டினார்கள்.
ஆகா. அதுவரை செத்துக்கிடந்த
வாழ்க்கை ƒசிவ்வென்று
சிறகடித்ததா?

ஓ.
இயங்காத வாழ்க்கையில்
இன்பமில்லை. இயங்கு. இயங்கு
மனிதனே. இயங்கு. வெற்றியை
நோக்கியாவது - தோல்வியை
நோக்கியாவது
இயங்கிக்கொண்டே இரு.

இயக்கமே வாழ்க்கையின்
முதல் அடையாளம்.

வீசு காற்றே வீசு. விரைக
படகே விரைக. எங்கள் உயிரின்
தூரம்
சில கிலோமீட்டர்.
அதோ.

அந்தக் கறுத்த மேகம்தான்
எங்கள் குறிக்கோள். கடலுக்கு
வந்து வானத்தில் தூண்டில்
போட்டவர்கள்

நாங்களாகத்தானிருப்போம்.

வீசு காற்றே வீசு. விரைக
படகே விரைக.

அவர்களின் மனோவேகம்
பாய்மரத்திற்குப் புரியவில்லை.
காற்றுப் பேசினால் மட்டும்தான்
அதற்குக் காது கேட்கும்
போலிருக்கிறது.

காற்று சொல்லியபடி
அது மெதுவாகவே நகர்ந்தது.

ஏ, பாய்மரமே. பாய்மரமே.
உன்னைத்தான் நம்புகிறோம்.
உனக்கு வேரில்லை.

கிளையில்லை. மலரில்லை.

கனியில்லை. ஆனாலும்
பாய்மரமே. எங்கள் உயிர்
ஒதுங்கியிருப்பது உன்
நிழலில்தான்.

நின்று - நின்று - அசைந்து -
அசைந்து - விரைந்து -
விரைந்து - வேகம் குறைந்து -
அலைகள் கடந்து அவர்களின்
லட்சிய மேகத்தை அந்தப் படகு
அடைந்தபோது - அந்த
மாயமேகம் ஏற்கெனவே சில
துளிகளைப் பொழிந்துவிட்டுக்
கலைந்து போயிருந்தது.

இரண்டு முரட்டு அலைகள்
விசைப்படகின் விலா துழாவியதில்
அது அப்படியும் இப்படியும்
ஆடியது.

ஓங்கியடித்த ஒரு காற்றின்
வேகத்தில் பாய்மரத்தின்
தார்ப்பாய் கழன்று தண்ணீரில்
விழுந்தது.

கிரீச். கிரீச். கிரீச்.
கிரீச். - எங்கோ கத்திய
சுண்டெலியின் பாதிக் குரலில் பசி
தெரிந்தது.

வெற்றி தோல்வி இரண்டுமே
மனதின் விகாரங்கள்.
இன்னொரு வகையில் சொல்லப்
போனால் வெற்றி தோல்வி
இரண்டுமே ஒட்டிப்பிறந்த
இரட்டைக் குழந்தைகள்.

இரண்டும் ஒன்றுக்கொன்று
உள்ளுறவுகொண்டவை.
தோல்வியின் முடிவுதான்
வெற்றி. வெற்றியின் முடிவுதான்
தோல்வி.

துரத்தி வந்த கருமேகம்
தொலைந்து போனதற்காய்
அவர்கள் வருந்தவில்லை.
தோல்வி அவர்களுக்குப்
புதிதில்லை. இந்தியர்களாக
வாழ்ந்து வாழ்ந்து
ஏமாறுவதற்குத்
தயாரிக்கப்பட்டவர்கள்
அவர்கள்.

அதனாலென்ன.

கோடுகளும் சித்திரங்களே.
எமாற்றங்களும் அனுபவங்களே.

வெற்றியால் தரமுடியாத
விளைச்சலைத் தோல்வி தரும்.
எவரெ…ட்டைத் தொடுவதற்கு
ஏறி, இமயமலையின்
இடுப்பிலிருந்து வழுக்கி
விழுந்தாலும் அது தோல்வி
அல்ல. ஏறுதல் - விழுதல்
என்ற அனுபவம் வெற்றி.
துவண்டு விழுந்த மனதை
எல்லோரும் தூக்கி நிறுத்திக்
கொண்டாலும் தமிழ்ரோƒஜா
மட்டும் வாடித்தான்
போனாள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:44 am

ஏ பொழியாத வானமே.
பொய் வானமே.
உண்மை சொல்.

எங்கள் கண்களில் நீ
கறுப்பாய்க் காட்டியது
மேகமா? புகையா?
வானம் செய்யாத வேலையை
அவள் கண்கள் செய்தன.
தூறலிட்டன.

சரி. சரி. நம்பி வந்தது
போதும். நங்கூரமிடுங்கள்.

உணர்ச்சியில்லாமல் அவர்கள்
அந்த வேலையைச்
செய்தார்கள்- ஒரு பிணத்திற்குக்
குழிவெட்டும் வெட்டியானைப்போல.

கிரீச். கிரீச். கிரீச்.
கிரீச். தொடர்ந்தது
சுண்டெலியின் சோகக்
கச்சேரி.

சலீம் அதன்மீது பார்வை
பதித்தான்.

பஞ்சு மிட்டாயாய்ப்
பருத்திருந்த சுண்டெலி
இளைத்துவிட்டது இப்போது.
தண்ணீர் வற்றியதும்
தலைகாட்டும் ஏரிமரங்களைப்
போல அதன் உடம்பில்
விறைத்து நின்றன
குருத்தெலும்புகள்.

கோரிக்கை விடுக்கும் ஓர்
அகதியின் குரலாய்க் குறுகிப்
போன அதன் கிரீச் ஓசை
அதன் மரண வாக்குமுலமாகவே
ஒலித்தது சலீமுக்கு.

சட்டென்று ஒரு சிந்தனைச்
சிறுமின்னல் அவன் முளையின் ஒரு
முலையில் மின்னிமறைந்தது.
கரப்பான்பூச்சி விழுந்த
கஞ்சி நமக்குத்தான் ஆகாது.

ஆனால் அந்தச் சோறு
சுண்டெலிக்கு ஆகுமில்லையா?
எல்லோரும் யோசித்தார்கள்.
உண்மைதான். மனிதன்
தனக்குப் பசிக்கும்போது
மற்றவன் பசியை
மறந்துவிடுகிறான். சரி சரி.
சுண்டெலிக்குச் சோறு வை.
அவன் கஞ்சிப் பானையில்
கைவிட்டான். நைந்த
சோற்றை நசுங்காமல்
பிழிந்தான். அதை உருண்டை
திரட்டினான். கடுகுபுட்டி மேல்
வைத்துவிட்டுக் காத்திருந்தான்.

சோற்றுவாசங்கண்டு சுண்டெலி
வந்தது. முக்கை நீட்டி
முகர்ந்து பார்த்தது. அதன்
வால் அதிருப்தியை அபிநயம்
பிடித்தது.

மீண்டும் முகர்ந்து பார்த்தது.

அப்படியும் இப்படியும்
தலையாட்டியது. ஒரு
பருக்கையும் உண்ணவில்லை.
ஓசைப்படாமல் உள்ளே
போய்விட்டது.

அடடே. இது தன்மானச்
சுண்டெலி. பசித்தாலும்
புலிமட்டும்தான் புல்லைத்
தின்னாது என்றிருந்தோம்.
எலிகூடத் தின்னாது என்பதை
இப்போது கண்டுகொண்டோம்.
சுண்டெலியே வாழ்க. உன்
சுயமரியாதை வாழ்க.
அது அமாவாசை இரவு.
தேய்பிறை நிலவும்
தீர்ந்துவிட்டது.

நட்சத்திரங்களின் ஊசிக்கிரண
ஒளியில் விளையாட்டுக் காட்டின
வெள்ளலைகள்.

வியர்வைத் துவாரங்களின்
வழியே உள்ளே புகுந்து
உயிர்குடிக்கப் பார்த்தது
வாடைக்காற்று.

கொழிக்கும் நுரைகளோடு
அடிக்கும் அலைகளோடு
தடுமாறத் தொடங்கியது
படகு.

அலைகளின் கனமும் உயரமும்
வரவர வளரத்
தொடங்கியபோது நங்கூரம்
கழன்றுவிடுமோ என்ற நடுக்கம்
வந்தது.

ஏ சமுத்திரமே.

எங்களுக்கெதிராக என்ன
போர்ப் பிரகடனம்?
உனக்கு யுத்த தர்மம்
தெரியாதா?

நிராயுதபாணிகளோடு போர்
தொடுப்பது நியாயமில்லை
தெரியுமா?

ஏ. ஏ. நிறுத்து.

இந்தக் கறுப்பு இரவிலென்ன
வெள்ளை யுத்தம்?

அச்சம் நனைந்த குரலில்
என்னவாயிற்று கடலுக்கு?

என்றாள் தமிழ்ரோƒஜா.

இன்று அமாவாசை.
அதுதான் இந்தப்
பொங்குதல்.

பெளர்ணமியில்தானே கடல்
பொங்கும்?

இல்லை அமாவாசையிலும்
பொங்கும்
ஏன்... எப்படி?

பெளர்ணமியில் - சூரியனும்
சந்திரனும் எதிரெதிர் திசையில்
பூமியை இழுக்கின்றன -
அதனால் அலைகள்.

அமாவாசையில்- சூரியனும்
சந்திரனும் ஒரே திசையிலிருந்து
பூமியை இழுக்கின்றன.
அதனாலும் அலைகள்.

அடிக்கும் அலை அடித்துக்
கொண்டேயிருந்தது. ஆடும்
படகு ஆடிக்
கொண்டேயிருந்தது.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:44 am

எங்கள் வானத்தில் உலகத்தின்
இருளையெல்லாம் ஊற்றிவிட்டுப்
போனது யார்?

எங்கள் நிலாவைத்
திருடிக்கொண்டு
நட்சத்திரங்களின் கண்களைக்
குருடாக்கிவிட்டது யார்?

கயிறில்லாத ஊஞ்சலான இந்தப்
படகில் உயிரில்லாத
உருவங்களை ஊசலாட்டுவது
யார்?

கலக்கம். மயக்கம்.
குழப்பம்.

நள்ளிரவுக்குப் பிறகு அலைகள்
மெள்ள மெள்ளக் குறையத்
தொடங்கியபோது -

நம்பிக்கை உள்ளவர்கள்
உறங்கிப் போனார்கள்.
நம்பிக்கையற்றவர்கள் விழித்தே
கிடந்தார்கள்.

மேகக் கிழிசல் வழியே சில
நட்சத்திரங்கள் மட்டும்
இவர்கள் படகை வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்த
வேளையிலே...
பனைமர உயரத்திற்குப்
பளிச்சென்று கடல்
தீப்பற்றியது.

பாதித்
தூக்கத்திலிருந்த சலீம்தான்
அதை முதலில் பார்த்தான்.
அவன் உயிரே உறைந்துவிட்டது.
உலர்ந்த நாக்கில் வார்த்தை
ஒட்டிக்கொண்டது.

பேய். பேய். கடல்பேய். என்று
அலறிக்கொண்டே பரதனையும்
பாண்டியையும் ஓங்கியடித்து
உசுப்பினான். அவர்கள்
எழுவதற்குள் அச்சங்காட்டிய
அக்கினிப்பேய் அணைந்துவிட்டது.
எங்கே? எங்கே? என்ன
உளறுகிறாய்?

அதோ.. அங்கேதான்.

பேய். நெருப்புப் பேய்.
அதோ. அதோ.

மீண்டும் அந்தப் பனைமர உயர
நெருப்பு பயங்காட்டியது.
எழுந்து - வளர்ந்து -
வளைந்து - நீண்டு -
நெகிழ்ந்து - அகன்று அக்கினி
வாய்திறந்து மீண்டும்
அணைந்தது.

இப்போது பாண்டிக்கும்
பரதனுக்கும்கூடப் பயம் என்ற
தொற்றுநோய் பரவிவிட்டது.

மொத்தப் படகும் விழித்துக்
கொண்டது முன்று பேரின்
தத்தளிப்பில்.
பேய். பேய். கடல்
பேய்.

தண்ணீரில் முழ்கிப்போன பேய்
மீண்டும் தலைகாட்டியது.
நெருப்பாய் - பளபளப்பாய்
- சுடரொழுகும் ஜொலிப்பாய்
ஆடியது அக்கினிப் பேய் -
கடலுக்கு மேலே கனல்
பற்றியது போல.
ஆ. அய்யோ.
அய்யய்யோ.
அலறியபடி கலைவண்ணனின்
உடம்பில் உயிர்போல
ஒட்டிக்கொண்டாள்
தமிழ்ரோƒஜா.

வாடைக்காற்றிலும் வியர்த்து
நின்றார்கள் சலீமும் பரதனும்.
அவர்களின் கலக்கங்கண்டு
குழப்பம்கொண்ட கலைவண்ணன்
- அந்தப் பேயின்மீது ஒரு
தூரப்பார்வை வீசித்
துப்பறிந்தான்.

சலீமின் இருதயம்
மரணவேகத்தில் துடித்தது.
அய்யோ. நம்
மண்டையோடுகூடக்
கரைசேராதா?
கலைவண்ணன் உண்மைகண்டு
தெளித்தான். ஒரு பொய்ச்
சத்தம் போட்டு அவர்களின்
அச்சம் அடக்கினான்.
அஞ்சாதீர்கள். அது பேயின்
வி…வருபம் அல்ல. அக்கினியும்
அல்ல. பூச்சிகளின் உயர
ஊர்வலம்.

எப்படி?

சற்றே பெருமுச்சு விட்டவர்கள்
அந்த ஒரே வார்த்தையை
ஐந்துநாவுகளால்
உச்சரித்தார்கள்.

அவை கடல்மேல் மிதக்கும்
மெல்லிய வெளிச்சப் பூச்சிகள்
- பெயர் நாக்டிலூக்கா
கோப்பை அளவுத் தண்ணீரில்
கோடானுகோடி எண்ணிக்கை
கொண்டவை. அலைகளுக்கு
உற்சாகம் வருகிறபோது
இந்தப் பூச்சிகளுக்கும் ஆவேசம்
வந்துவிடும். அலையோடு
பயணம் கொண்டு மெர்க்குரி
விளக்குகளாய் மின்னும்.
தொட்டால் சுடுவதில்லை.
பற்றினால் எரிவதில்லை.
போலி நெருப்புப் பூச்சிகள்.
போய் உறங்குங்கள்.
அவ்வளவுதான். படகைப்
பிடித்திருந்த பிசாசு
இறந்துவிட்டது.

நிம்மதி. நிம்மதி. கரைகடந்த
புயலாய் மனங்கடந்தது பயம்.
அறிவே உனக்கு வணக்கம்.
நீதான் மனிதƒஜாதியின் அச்சம்
களைந்தாய். நீதான் பூமியின்
இருட்டுக்குப் புதுப்பகல்
கொண்டு வந்தாய்.

இடியும் மழையும் புயலும்
இயற்கையின் கோபங்கள்
என்றிருந்தபோது - அவை
சீதோ„ணத்தின்
சிலிர்ப்புகள்... சிரிப்புகள்
என்ற செய்தி அறிவித்தாய்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:45 am

அறியாமையே அச்சம். அறிவே
பலம். காரணம்
கண்டறியாதவரை ஆன்மீகம்.
காரணம் கண்டறிந்தால்
விஞ்ஞானம். காரணங்கள்
கண்டறிவோம். நன்றி அறிவே.
நன்றி.

விடியாதே இரவே.
விடியாதே.

எங்கள் துயரத்திற்கு இரவாவது
திரைபோடுகிறது. நீ ஏன்
வெளிச்சம் போடுகிறாய்?

எங்கள் நாவுகளில்
வாடைக்காற்று பூசிய ஈரத்தை
சூரியனே நீ வந்து
சுண்டவைக்கப் போகிறாயா?
தகிக்கும் பகலே. உன்னைத்
தவிர்க்கமுடியாதா? இந்தக்
கடலில் எங்கள்
சம்மதத்துடன்தானா எல்லாம்
நடக்கிறது?

விடிந்து தொலை இரவே.
விடிந்து தொலை.

இதோ பாருங்கள். என்
கைப்பையில் ஒரே ஒரு
சாக்லெட்.. துழாவியபோது
ஆழத்தில் அகப்பட்டது.
மீட்சிக்கு ஒரு படகு வந்தது
போல் துள்ளிக்குதித்தாள் தமிழ்
ரோƒஜா.

கண்ணாடித்தாள்

சுற்றப்பட்டிருந்த அந்தச் சின்ன
சாக்லெட். செத்துப்போய்ச்
சில நாட்கள் இருக்கும்.
ஆனாலும், அது ஒவ்வொரு
நாவிலும் மிச்சமிருந்த எச்சிலை
ஊறவைத்தது.

சரி சரி. பங்கிடுங்கள்.
ஆறு பங்கு.
இல்லை. இல்லை. ஏழு
பங்கு.

மன்னிக்க வேண்டும்.
மறந்துவிட்டேன்

சுண்டெலியை.
ஆறு பங்காய்ப் போடுவது
எளிது. ஏழு பங்காய்ப்
போடுவது கடிது.

சரி.. சரி. ஆறு
பங்காகவே போடுங்கள். என்
பங்கைச் சுண்டெலிக்குக்
கொடுத்துவிடுகிறேன்
என்றான் சலீம்.

சாக்லெட் பிளக்கப்பட்டது.
இந்தியா-பாகி…தான்
பிரிவினையைவிட அது
கவனமாகவே
கையாளப்பட்டது.

அவரவர் துண்டு அவரவர்
கைக்கு வந்ததும், உயிருக்கு
அது ஓர் அமிர்தச் சொட்டு
என்றே அறியப்பட்டது.
சலீமைக் காணோம்.

தன் பங்கோடு அவன் சுண்டெலி
தேடி ஓடினான்.

கடுகுபுட்டியின் முடியில்
வைத்தான். காணவில்லை
சுண்டெலியை.

வாய்குவித்து ஒலிசெய்தான்.
வரவில்லை. சின்னச் சின்னச்
சந்துகளில் கண்களைப்
போட்டான். சுண்டெலியின்
அடையாளம் தோன்றவில்லை.

சுக்கான் அறையை ஒட்டிக்
கவலையோடு நடந்தபோது
அவன்
கால்களில் ஏதோ
பிசுக்கிட்டது.

தீயை மிதித்தவன்போல விசுக்கென்று
காலெடுத்தான், குனிந்து பார்த்தான்.
சுண்டெலியின் உரிக்கப்பட்ட தோலும்,
துண்டிக்கப்பட்ட தலையும் தனித்தனியே
கிடந்தன.

அவ்வளவுதான.

தன் உயிரையெல்லாம் குரல்வளையில்
திரட்டி எவனடா. எவனடா என
சுண்டெலியைக் கொன்றவன் என்று கண்ணீர்
தெறிக்கக் கதறினான் சலீம்.

சில விநாடிகள் அங்கே மரணமெளனம்
நிலவியது.

அந்த மெளனம் கிழித்து இசக்கி மெல்ல
எழுந்துவந்தான்.

நான் கொன்றேன், நான்தான் தின்றேன்.
பசி, உயிர்போகும் பசி.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:45 am

என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?
அவன் மார்பில் ஓங்கிக் குத்தி, சட்டை
பிடித்துலுக்கி, கண்ணீர்விட்டுக் கதறியபடி -
அடப்பாவி. நீ என்னைத் தின்றிருக்கலாமே
என்றான் சலீம்.

அதற்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது.
என்றான் இசக்கி.

ஒரு மனிதன் -
எத்தனை நாடுகள் கடந்தான்.

எத்தனை கடல்கள்
கடைந்தான்.

எத்தனை பேரைக்
கொன்றான்.

எத்தனை மகுடம் கொண்டான்.
எத்தனை காலம் இருந்தான்.

எத்தனை பிள்ளைகள் ஈன்றான்
- என்பவை அல்ல அவன்
எச்சங்கள்.

இவையெல்லாம் நான் என்ற
ஆணவத்தின் நீளங்கள்.

அவன் இன்னோர் உயிருக்காக
எத்தனைமுறை அழுதான்
என்பதுதான், அவன் மனிதன்
என்பதற்கான மாறாத
சாட்சி.

சலீம் அழுதான்.

அது சுயசோகத்திற்காகச்
சொட்டிய கண்ணீரன்று.

சுண்டெலியின் மரணத்திற்காகச்
சிந்தப்பட்ட சுத்தக் கண்ணீர்.

காணவும் தூங்கவும் மட்டுமே
கண்கள் என்று பலபேர்
தப்பாகக் கருதிக்
கொண்டிருக்கிறார்கள்.

இல்லை - கண்ணீருக்கும்
சேர்த்துத்தான் கண்கள்.
பார்த்தல் என்பது
கண்களின் வேலை.

கண்ணீர் என்பதே
கண்களின் தியானம்.
இதயம் கொதித்து
ஆவியாகும்போது இமைகளின்
முடி திறந்து கொள்கிறதே...

அதுதான் கண்ணீர்.

ஒருவன் தனக்காக அழும்
கண்ணீர் அவனைமட்டுமே
சுத்திகரிக்கிறது.

அடுத்த உயிருக்காக அழும்
கண்ணீர்
அகிலத்தையே சுத்திகரிக்கிறது.
அழாதே சலீம். அழாதே.

இசக்கியின்
தவறுக்காக நான் மன்னிப்புக்
கேட்கிறேன்

- கலைவண்ணன் சலீமின்
கரங்கள் பற்றிக் கெஞ்சினான்.
அவன் நிறுத்தவில்லை.
அவன் கண்களிலிருந்து
அறுந்துபோகாத அருவி
வடிந்து கொண்டேயிருந்தது.
இவன் எவ்வளவு மெல்லியவன்.
அனிச்சப்பூ மனசு கொண்டவன்.
பிள்ளை மாதிரி
வளர்த்தேனே.

பிடித்துத் தின்றுவிட்டானே.

- அவன் எழுத்துக் கூட்டி
அழுதான்.
விடு சலீம். ஒரு
சுண்டெலிக்காக இவ்வளவு
சோகப்படுகிறாயே.

- பாண்டியின் சொற்களில்
அலட்சியம் சொட்டியது.

சொல்லாதே. அதை
வெறும் சுண்டெலி என்று
சொல்லாதே. இந்தப் படகின்
ஏழாவது ƒஜீவன் என்று
சொல். உருவங்கள்
மாறலாம். ஆனால், உனக்கும்
எனக்கும் அதற்கும் உயிர்
ஒன்றுதான். நம் ஆறுபேரில்
யாராவது ஒருவர்
செத்திருந்தால் நீ அழாமல்
இருப்பாயா?
அப்படித்தான் அதுவும்
அவன் வாக்கிலிருந்த தர்க்கம்
அவர்களை
வாயைடைத்துவிட்டது.

அவன் அழுகை நிற்கவில்லை.
தண்ணீர் குடிக்காத தேகத்தில்
எப்படித்தான் அவ்வளவு
கண்ணீர் இருந்ததோ.

பாண்டியும் பரதனும் அவனைத்
தங்கள் மார்பில்
சாய்த்துக்கொண்டு வேர்வைப்
பிசுக்கில் சிக்கலாகிப்
போன அவன் கேசத்தில்
சிக்கெடுத்தார்கள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:45 am

அந்த …பரிசம் அவனுக்குத்
தேவைப்பட்டது.
இசக்கி மட்டும்
பேசவேயில்லை.
அவன் தன்னைத் துண்டித்துத்
தனியனானான்.

ஆடும் படகின் விளிம்பில்
அசையாது உட்கார்ந்து
பிரமைப் பிடித்தவன்போல்
கடல் பார்த்தான்.
தன்னைத் தாங்கிய
மார்புகளுக்கு மத்தியில்
அழுது கொண்டேயிருந்தான்
சலீம்.

ஒரு முரட்டுக்கூட்டத்தில்
இப்படி ஓர் இதயமா?
தன் தாகம், பசி இரண்டையும்
மறந்து வியந்தாள்
தமிழ்ரோƒஜா.

உரிக்கப்பட்ட சுண்டெலியின்
தோலை மட்டும் சலீமால்
தூக்கி எறிய முடியவில்லை.
தான் வருவதற்கு முன்பே
அடக்கம் செய்யப்பட்டுவிட்ட
தாயின் பழைய புடவையைத்
தொட்டுப் பார்க்கும்
ஒரு பாசமுள்ள மகனைப்
போல - சுண்டெலியின்
தோலை
அவன் தடவிக்கொண்டிருந்தான்.

கைகளில் ஒட்டிய
ரத்தம் பார்த்துத் திடீரென்று
ஆவேசமானான்.

டேய், மனிதனாடா. நீ
மனிதனா? என்று கண்கள்
பிதுங்கக் கத்தி, இசக்கியை
நோக்கி
முன்னேறினான்.

இழுத்துக் கொண்டோடியவனின்
வயிற்றில் கைவைத்து வளைத்து
நிறுத்தினான் கலைவண்ணன்.
அவனைத் தழுவித் தடவிச்
சாந்தம் செய்தான்.

இதோ பார் சலீம்.
சுண்டெலியைக் கொன்றது
பாவம்தான். உன் உணர்ச்சி
நியாயம்தான். ஆனாலும்
உனக்கொன்று சொல்வேன்.

இதை உன் உள்ளத்தில்
எழுதிக்கொள்.
எது நியாயம், எது பாவம்,
என்று தீர்மானிப்பவன்
மனிதனல்லன்.

இடமும் காலமும்தான்.
தாகத்தில் சாகப் போகும்
பாலைவனப் பயணிகள்,
தங்கள் ஒட்டகத்தையே
கொன்று அதன் உள்ளிருக்கும்
நீரை அருந்துவார்களாம்.
அங்கே ஒட்டகவதை என்பது
பாவமல்ல. பாலைவன
நியாயம்.

பசி உடம்பைத் தின்னத்
தொடங்கும் பஞ்சநாட்களில்
எறும்புப் புற்றை இடித்து,
அதன் மாரிக்காலச்
சேமிப்பான
தானியம் எடுத்துச்
சமைப்பார்களாம்.

அங்கே அது திருட்டு அல்ல.
அது பசியின் நியாயம்.
உணவு கிட்டாத காலத்தில்
உயிர்காக்க நினைக்கும்
இருளர்கள், களிமண்
தின்பார்களாம்.

அங்கே மண் தின்பது என்பது
பாவமல்ல.
பழக்க நியாயம்.

பயிர் செய்ய முடியாமல்
வரு„த்தில் பாதி நாட்கள்
பனிமுடிக் கிடக்கும்
பிரதேசங்களில்
துருவக்கரடிகளும் நாய்களும்கூட
அன்றாட உணவாகுமாம்.

அங்கே அசைவம் என்பது
பாவமல்ல. பூகோள
நியாயம்.

சோமாலியாவின் பஞ்சத்தில்
எலும்பும் உயிரும் வெளியேறத்
துருத்திக் கொண்டிருக்கும்
உடம்புக்குச்
சொந்தக்காரர்கள்
ஒன்றும் கிடைக்காமல்
உடைகளையே தின்னத்
தொடங்கினார்களாம்.

அவர்கள் உடை தின்றது
பாவமல்ல. கால நியாயம்.

இசக்கி சுண்டெலியைக் கொன்று
தின்றதை நான்
நியாயப்படுத்த விரும்பவில்லை.

ஆனால், அவன் செய்தது
கொலை என்று
குற்றம்சாட்டவும்
முடியவில்லை.

சலீம் தன் அழுக்குச் சட்டையில்
வாய் புதைத்து
அழுகை அடக்கினான்.

அழுகை மெல்ல மெல்லக்
குறைந்து விசும்பலானது.
விசும்பல் மெல்ல மெல்லத்
தேய்ந்து மெளனமானது.
சுண்டெலியின் இறுதிச்
சடங்குக்குப்
படகு தயாரானது.

இறந்த உடம்பை இரண்டு
வகையில்
நிறைவு செய்யலாம்.
ஒன்று எரிப்பது அல்லது
புதைப்பது.

எரிப்பதென்றால் ஒரு தீக்குச்சி
செலவாகும்.

இருக்கும் சில தீக்குச்சிகளில்
ஒன்றை இழப்பது
அறிவுடைமை ஆகாது.
புதைத்தல் என்றால் அங்கே
பூமியில்லை.

யோசித்தார்கள்.

வீசுவது என்று
முடிவெடுத்தார்கள்.

எந்தக் கடுகுப்புட்டியின் முடியில்
அது ஆசையாக
உணவருந்துமோ அதே
கடுகுப்புட்டியில், அதன்
தோலையும் தலையையுமிட்டுக்
காற்றுப் புகாமல் முடினான்
கலைவண்ணன்.

அந்தக் கடுகுப் புட்டியைக்
கட்டிக் கொண்டு அழுதான்
சலீம்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 20, 2010 12:46 am

தாயின் மார்பகத்தோடு
ஒட்டிக் கொண்ட
குழந்தையைப் போல்
அவனிடமிருந்து அதைப் பிரிக்க
முடியவில்லை.
பாவம். அன்புள்ள அப்பாவி.

அவனைச் சிரமப்படுத்திப்
பிரித்து, அவன் விரல்களில்
ஒவ்வொன்றாய் விலக்கி, அதை
அத்தனை பேரும் பறித்துக்
கண்ணை முடிக்கொண்டு
கடலில் வீசினார்கள்.
சலீமோடு சேர்ந்து அலைகள்
சிலவும் அழுதன.

இசக்கி மட்டும் பிரமைப்
பிடித்தவன் போல்
உணர்ச்சியில்லாமல்
உட்கார்ந்திருந்தான்.

ஏ தமிழ்ரோƒஜா.
தலை கவிழ்ந்திருக்கும் என்
தங்கமே.

என்னை மன்னித்துவிடு.
ஆறுதலும் நம்பிக்கையும் தவிர
எதையும் தர முடியாத
ஏழையாகிவிட்டேன்.
உடுத்துவதற்கு மாற்று
ஆடையுமில்லை. உயிர்
பிழைப்பதற்கு
மாற்று வழியுமில்லை.
என்ன கலக்கம். ஏனிந்தக்
குழப்பம்.

உன் முகத்தில் என்ன பயத்தின்
முற்றுகை.
மீண்டும் தண்ணீர் பயமா?
இல்லை. மரணபயம்
- அவள் லேசாய்ச்
சிரித்தாள்.

சாவின் புன்னகை
இப்படித்தானிருக்குமோ?
அவன் ஒற்றைவிரல் கொண்டு
அவள் உதடு பொத்தினான்.
பேதையாய்க்கூட இரு.

கோழையாய் இருக்காதே.
இயற்கை அளவற்ற
கருணையுடையது.
நம்மை உயிரோடு வரவேற்ற
கடல் நம் பிணங்களைக்
கரை சேர்க்காது.
எனக்கும் அதுதான்
சந்தேகம்.

இங்கே இறந்தால் கரை
சேர்வதற்கு நம் உடலே
இருக்காது
நம்பிக்கை இழக்காதே
தமிழ்.

நாளை நம்முடையதே.
நாளை நம்முடையதென்றால்
இன்று யாருடையதோ?
அவளுக்குத் தலை சுற்றியது.
மயக்கம் வந்தது.
கொஞ்சம் தண்ணீர்
கிடைக்குமா?
கொஞ்சம் தண்...

மிச்ச எழுத்துக்களை அவள்
சைகையில்
உச்சரித்துவிட்டு
முர்ச்சையானாள்.
தமிழ். தமிழ். -
அவன் பதறினான்
தமிழ். தமிழ். -
அவன் கதறினான்.
கலைவண்ணன் முதன் முதலாய்
அச்சப்பட்டான்.

எல்லோரும் ஓடி வந்தார்கள்
- இசக்கியைத்தவிர.
சலீம் தன் மேல்துண்டைக்
கடல்நீரில் நனைத்துப்
பிழிந்து நீட்டினான்.

கலைவண்ணன் அவள் முகத்தில்
அதை ஒற்றி ஒற்றி
ஈரப்பசை காட்டினான்
மூர்ச்சை தெளிந்து அவள்
முனகினாள்.

தலைக்குமேலே நாரைகளின்
மந்தை ஒன்று படபடவென்று
சிறகடித்துப் போனது.
அத்தனைபேரும் மொத்தமாய்
அண்ணாந்து பார்த்தார்கள்.

ஏ மனிதர்களே.

சிறகுகொண்டு கடல்கடக்கத்
தெரியாத நீங்கள்
எங்களைவிட எப்படி
உயர்ந்தவர்கள்?
உப்புத் தண்ணீர் பருகி
உயிர்வாழ முடியாத நீங்கள்
மீன்களைவிட எப்படி
உயர்ந்தவர்கள்.

ஒருவார தாகம் பொறுக்க
முடியாத நீங்கள்
ஒட்டகத்தைவிட எப்படி
உயர்ந்தவர்கள்.
எங்களைக் கொல்லுவதற்கும்
வெல்லுவதற்கும் ஆயுதம்
கண்டுபிடித்தீர்கள்.



தண்ணீர் தேசம் - கவிப்பேரரசு வைரமுத்து - Page 7 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக