புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
92 Posts - 38%
ayyasamy ram
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
89 Posts - 37%
Dr.S.Soundarapandian
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ayyamperumal
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
340 Posts - 48%
heezulia
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
24 Posts - 3%
prajai
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Barushree
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Guna.D
மனித உடலியல் - Page 2 Poll_c10மனித உடலியல் - Page 2 Poll_m10மனித உடலியல் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உடலியல்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:38 am

First topic message reminder :

மனித உடலியல் - Page 2 Be1JxKu

மனித உடலின் முக்கிய உறுப்பு மண்டலங்கள் என்னென்ன?

உடலின் பல்வேறு உறுப்புகளைக் கண்டறிந்தே மனித உடற்கூறியல் ஆய்வு செய்யப்படுகிறது. உடலுறுப்புகளின் அமைப்புகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவை பல்வேறு குழுக்களாக அல்லது மண்டலங்களாகப் பிரிக்கப்படுகின்றன.

அக்குழுக்கள் பின்வருமாறு:

எலும்பு (skeletal) மண்டலம்,
தசை (muscular) மண்டலம்,
நரம்பு (nervous) மண்டலம்,
நாளமில்லா சுரப்பி (endocrine) மண்டலம்,
மூச்சு (respiratory) மண்டலம்,
இதயக் குருதி நாள (cardiovascular) மண்டலம்,
நிணநீர் நாள (lymph vascular) மண்டலம்,
செரிமான (digestive) மண்டலம்,
கழிவு (excretory) மண்டலம் மற்றும்
இனப்பெருக்க (reproductive) மண்டலம்


உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது. மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் (liver) ஆகும்.

ஒருவரின் சிதைந்து போன உடலுறுப்பை நீக்கி, வேறொரு கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட நல்ல உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிப் பொருத்துவதற்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (transplantation surgery) எனப் பெயர். தற்போது இதயம், ஈரல், சிறுநீரகங்கள், நுரையீரல்கள் ஆகிய உறுப்புகளை அறுவை சிகிச்சை வாயிலாக மாற்றிப் பொருத்த முடியும்.

Dr.S.Soundarapandian and dillikumar இந்த பதிவை விரும்பியுள்ளனர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:44 am

சிறுநீரகங்களின் (kidneys) பயன்பாடு என்ன?

நமது உடலிலுள்ள உயிரணுக்கள் நாம் உண்ணும் உணவிலுள்ள ஊட்டச்சத்துகளை (nutrients) ஆக்சிஜனுடன் கலந்து எரித்து நம் உடல் வளர்வதற்கும் வாழ்வதற்கும் தேவையான ஆற்றலை (energy) உருவாக்குகின்றன. மரக்கட்டைகளும் பிறவும் சேர்ந்து எரிந்து வெப்பச் சக்தியையும் உருவாக்குவது போன்றதே இச்செயல்பாடு ஆகும். மரக்கட்டைகள் எரிவதால் கழிவு வாயுக்களும் சாம்பலும் உண்டாவது போலவே நமது உடலின் உயிரணுக்களால் ஆற்றல் உருவாக்கப்படும்போது கழிவுப்பொருட்கள் உண்டாகின்றன. இக்கழிவுப் பொருட்கள் உடலிலிருந்து நீக்கப்பட வேண்டும்; இல்லாவிடில் அவை நம் உடலுக்கு நஞ்சாக மாறிவிடும்.

இக்கழிவுப்பொருட்கள் சிறுநீராகவும் மலமாகவும் நம் உடலை விட்டு வெளியேறுகின்றன. உடலின் கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய உறுப்பாக விளங்குவதே சிறுநீரகம். நமக்கு இரு சிறுநீரகங்கள் முதுகெலும்புக்கு இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன. அவை இரண்டு பெரிய சிகப்பு அவரைக் கொட்டைகள் போன்று இறுக்கி மூடிய கைமுட்டிகள் அளவில் அமைந்துள்ளன. இரத்தத்திலுள்ள கழிவுப் பொருட்களை வடிகட்டி, உடலுக்குத் தேவையற்ற நீருடன் சேர்த்து வெளியேற்றி இரத்தத்தை அவை தூய்மைப் படுத்துகின்றன. இந்த நீர்மப் பொருளே சிறுநீராகும். இது சிறுநீர்ப்பையில் சேகரிக்கப் பட்டு சிறுநீர் கழிக்கும்போது வெளியேற்றப்படுகிறது.

ஒருநாளைக்கு நம் உடலில் இருந்து 3லிட்டர் அளவுக்கு வியர்வையாகவும் சிறுநீராகவும் மூச்சு விடுவதன் வாயிலாகவும் கழிவுநீர்ப் பொருள் நம் உடலை விட்டு வெளியேறுகிறது; கூடுதலாக உள்ள உப்பும் வெளியேறுகின்றது; மூச்சு விடுவதன் வாயிலாகக் கழிவுப் பொருளான கார்பன் டை ஆக்சைடும் வெளியேற்றப்படுகிறது.

டயாலிசிஸ் (Dialysis) என்றால் என்ன?

உடலின் சிறுநீரகங்கள் பழுதடைந்து தமது பணிகளைச் செய்ய இயலாத நிலையில், சிறுநீரகத்திற்குப் பதில் எந்திரத்தின் வாயிலாக இரத்தத்திலுள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றும் முறையே டயாலிசிஸ் எனப்படுகிறது. மனிதனின் கையில் ஒரு குழாய் வழியே உடலிலுள்ள இரத்தம் பம்ப் செய்யப்பட்டு நுண்ணுயிர் நீக்கம் செய்யப்பட்ட (sterile) திரவத்தையுடைய சிறு தொட்டி போன்ற பகுதிக்குள் செலுத்தப்படுகிறது; இரத்தக் கழிவுப் பொருட்கள் குழாயின் சுவர்ப் பகுதி வழியே வெளியேற்றப்பட்டு, தூய்மையடைந்த இரத்தம் மீண்டும் மனித உடலுக்குள் அனுப்பப்படுகிறது. சிறுநீரகத்தின் இரண்டு முக்கிய இரத்த நாளங்கள் – ஒன்று இரத்தத்தை வெளிக் கொணர்ந்து, மற்றொன்று உட்கொண்டு செல்வது - போன்றே டயாலிசிஸ் எந்திரம் பணிபுரிகிறது. எந்திரத்தின் ஒரு குழாய் [சிறுநீரகத் தமனி (renal artery) போல] வடிகட்டாத இரத்தத்தை உடலிலிருந்து எடுத்துச் செல்லவும் மற்றொரு குழாய் [சிறுநீரகச் சிரை (renal vein) போல] தூய்மைப்படுத்தப்பட்ட இரத்தத்தை உடலுள் கொண்டு செல்லவும் பயன்படுகின்றன. டயாலிசிஸ் என்னும் செயல்முறை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மூலம் புதிய சிறுநீரகம் பொருத்தப்படும்வரை செய்யப்பட வேண்டும். மேலும் டயாலிசிஸ் அடிக்கடி வாரத்தில் சில முறைகளாவது செய்யப்பட வேண்டும்; இதன் வாயிலாக கழிவுப் பொருள் இரத்தத்தில் அபாய அளவுக்குச் சேராமல் தடுக்கப்படுகிறது.

மனித உடலின் 70% நீர்மப் பொருளால் ஆனது. எனவே ஒவ்வொரு நாளும் போதுமான அளவுக்கு நாம் தூய தண்ணீரைப் பருக வேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:44 am

மூளையின் (brain) முக்கியப் பகுதிகள் யாவை?

அடிப்படையில் மூளையின் முக்கியப் பகுதிகளாக விளங்குபவை மூன்று: பின் மூளை, நடு மூளை மற்றும் முன் மூளை என்பனவே அவை. இப்பகுதிகள் ஒவ்வொன்றும் பல்வேறு செயல்பாடுகளுக்கென மேலும் பல நுண்ணிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மூளையின் பிற பகுதிகளுடன் இணைக்கப்படுகின்றன.

பின் மூளையின் மிகப் பெரிய கட்டமைப்பாக விளங்குவது சிறுமூளை (cerebellum) ஆகும். மூளை முழுவதிலும் மிகப் பெரிய அமைப்பாக விளங்குவது முன்மூளையில் அமைந்து உள்ள பெருமூளை (cerebrum) ஆகும். இப்பகுதி வேறு எந்த விலங்கையும் விட மனிதர்களிடம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. மூளையின் பிற பகுதிகள் பெருமூளைக்கே செய்திகளை அனுப்பி முடிவெடுக்க உதவி புரிகின்றன. பெருமூளையின் மேலே கவிந்துள்ள சாம்பல் நிற மூடி போன்ற உறை, மூளை மேலுறை (cerebral cortex) என அழைக்கப்படுகிறது. மூளையின் இப்பகுதி மனித மூளையில் மிக நன்கு வளர்ச்சியுற்று மடிக்கப்பெற்று மண்டைக்கூட்டினுள் (skull) பொருந்துமாறு அமைந்துள்ளது. மடிக்கப்பெறாத நிலையில் இப்பகுதி, மடிக்கப்பெற்ற நிலையில் இருப்பது போல் 30 மடங்கு பரந்து விரிந்து இருக்கக்கூடியது.

மனித உடலின் நடுக்க (shivering) உணர்ச்சியில் நான்கு இயங்குமுறைகள் (mechanisms) அமைந்துள்ளன. மூளையின் கீழ்ப்பகுதியிலுள்ள ஹைபொதாலமஸ், வெப்பநிலை குறைவாக உள்ளது என்பதை உணர்ந்து தைராய்டு சுரப்பிகளுக்குச் செய்திகளை அனுப்புகிறது; வளர்சிதை மாற்ற வீதத்தை விரைவு படுத்துமாறும் கூறுகிறது. இதன் விளைவாக உடல் தசைகள் விரைவாகச் சுருங்கி விரிந்து வெப்பத்தை உற்பத்தி செய்கின்றன. பின்னர் நரம்புகளால் தோல் பகுதிக்குச் செய்தி அனுப்பப்பட்டு தோல் துளைகள் குறுகி வெப்ப உணர்வு உடலுக்குள்ளேயே சேமிக்கப்பட்டு நடுக்கத்தை ஈடுகட்டும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

மூளையின் முக்கியச் செயல்கள் யாவை?

மூளை மனித உடலின் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படுகிறது எனலாம். எண்ணங்கள் உணர்வுகள் மற்றும் நினைவாற்றல் ஆகிய மூன்றிலும் தொடர்பு கொண்டு மனித உடல் இயல்பாகச் செயல்பட மூளை உதவி புரிகிறது.

மூளையின் பல்வேறு பகுதிகள் பல்வேறு பணிகளுக்குக் காரணமாக அமைந்துள்ளன. மூளையின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது பெருமூளை (cerebrum) அல்லது முன் மூளையாகும் (forebrain). இது ஒரு கொட்டையின் பிளவுற்ற அரைப்பகுதி போல் காணப்படும். பெருமூளையின் முக்கியச் செயல் புலன்களால் அனுப்பப்படும் செய்திகளைப் பிரித்து அவற்றிற்கு விடையளிப்பதாகும். மேலும் தகவல்களைச் சேமிப்பதும் சிந்திப்பதும் கூட அதன் பணியே. புலன்களில் இருந்து வரும் செய்திகளை மேலாண்மை செய்வது பெருமூளையின் புலனுணர்வுப் பகுதி; தசைகளைக் கட்டுப்படுத்துவது அதிலுள்ள இயக்கப்பகுதி. சிந்தித்தல், நினைவிற் கொள்ளல் மற்றும் பேசுதல் ஆகியவற்றை மேலாண்மை செய்வது இணைவுப் பகுதி எனப்படும். சிறுமூளையானது (பின்மூளை) பெருமூளைக்குக் கீழே அமைந்துள்ளது. இது பெருமூளையின் இயக்கப்பகுதியாகப் பணியாற்றுவதால் தசைகள் இயல்பாக இயங்குகின்றன.

நூறாயிரக்கணக்கான செயல்பாடுகளைத் தற்போது கணினி வாயிலாக ஒரு சில நொடிகளில் செய்ய முடியும் என்றாலும், நமது மூளை அதனை விடவும் ஆற்றல் வாய்ந்தது, விரைந்து செயல்படக் கூடியது! ஒவ்வொரு வினாடியும் பில்லியன் கணக்கில் மின் சமிக்ஞைகளை அனுப்பி நமது மூளைகளால் மனித உடல்களைக் கட்டுப்படுத்த முடிகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:45 am

விழித்திரை (retina) என்பது என்ன?

ஒளிக்கதிர்கள் கண்ணின் ஓளிப்படலம் (cornea) மற்றும் ஒளிவில்லைகள் (lens) வழியே செல்லும் போது அவை கண்கோளத்தின் (eyeball) பின்புற உட்பரப்பில் உள்ள விழித் திரையில் (retina) ஒளிர்கின்றன. இவ்விழித்திரை அஞ்சல் தலை அளவுக்கு மிகவும் மெல்லியதாக அமைந்துள்ளது. இருப்பினும் இதில் நுண்ணோக்கியால் காணக்கூடிய சுமார் 130 மில்லியன் உயிரணுக்கள் அடங்கியுள்ளன. ஒளி அவை மீது ஒளிரும்போது, நரம்பு சமிக்ஞைகள் (nerve signals) உருவாக்கப்படுகின்றன. உயிரணுக்கள் ஒளிகூருணர்வுத்திறன் (light sensitive) கொண்டவை. விழித்திரையில் இருவகைக் கூருணர்வுத்திறன் கொண்ட உயிரணுக்கள் உள்ளன; வடிவத்தின் அடிப்படையில் அவை நுண்கம்பி (rods) மற்றும் நுண்கூம்பு (cones) உயிரணுக்கள் எனப்படும். ஏறக்குறைய 125 மில்லியன் கம்பி மற்றும் கூம்பு உயிரணுக்கள் உள்ளன. வெள்ளை, சிகப்பு, ஊதா, பச்சை அல்லது மஞ்சள் நிறம் கொண்ட எல்லாவகை ஒளிக்கும் அவை ஈடுகொடுப்பவை. நுண்கம்பி உயிரணுக்கள் வலிமையற்ற ஒளியிலும் பணிபுரிபவை; எனவே கண்கள் மங்கலான நிலைமைகளிலும் பார்க்க உதவுகின்றன. ஒளி கூருணர்வுத்திறன் கொண்ட அடுத்தவகை உயிரணுக்கள் கூம்பு வடிவம் கொண்டவை ஆகும். விழிவில்லைக்கு எதிரே பின்புறத்தில் இவ்வகை உயிரணுக்கள் சுமார் 7 மில்லியன் அளவுக்கு உள்ளன.

பார்க்கும்போது பார்க்கப்படும் படிவம் (image) ஒரு நொடியின் மிகச் சிறு பகுதியளவு நேரம் விழித்திரையிலும் மூளையிலும் நகராமல் தங்கியிருக்கும். அதாவது இப்படிவங்கள் மிக விரைவாக மாறி அடுத்த படிவங்கள் தோன்றும். இதனால் அப்படிவங்களைத் தொடர்ச்சியாக நகரும் காட்சியாக நம்மால் காண முடிகிறது.

விழிக்கோளம் (eye ball) நகர்வதற்குக் காரணம் என்ன?

ஒவ்வொரு விழியின் நகர்வையும் ஆறு தசைகள் (muscles) கட்டுப்படுத்துகின்றன:

1) மூக்குக்கு அப்புறமாக விழியைச் சுழற்றும் தசை
2)மூக்கை நோக்கிச் சுழற்றும் தசை
3) மேற்புறம் சுழற்றும் தசை
4) கீழ்ப்புறம் சுழற்றும் தசை
5) கீழும் வெளிப்புறமும் சுழற்றும் தசை
6) மேலும் வெளிப்புறமும் சுழற்றும் தசை.

மேற்கூறிய எல்லா நகர்வுகளும் மூளையால் ஒன்றிணைக்கப்படுகின்றன. ஒரு கண்ணிலுள்ள பக்கவாட்டு நேர்த்தசை (lateral rectus) சுருங்கினால் அடுத்த கண்ணிலுள்ள நடு நேர்த்தசையும் அதே அளவுக்குச் சுருங்கும். மேலேயுள்ள நேர்த்தசைகள் ஒன்றிணைந்து செயல்பட்டு கண்ணைப் பின்புறம் இழுத்து மேலே பார்க்கச் செய்கின்றன. கீழேயுள்ள நேர்த்தசைகள் ஒன்றிணைந்து செயல்படுவதால் கண் கீழே பார்க்க இயலுகிறது. மேலே இருக்கும் சாய்வான தசைகள் கண்ணைச் சுழற்றிக் கீழ்ப்புறமும் வெளிப்புறமும் காணச் செய்கின்றன. அதேபோல் கீழேயுள்ள சாய்வான தசைகள் செயல்பட்டு கண்ணை மேற்புறமும் வெளிப்புறமும் காணச் செய்கின்றன.

கண்கள் உடலின் சாளரங்கள் போல் செயல்பட்டு வெளியுலகைப் பார்க்கச் செய்வதால் அவற்றிற்குச் சிறப்புப் பாதுகாப்பு தேவை. ஒவ்வொரு வினாடியும் கண் இமைகள் செயல்பட்டு கண்ணில் தூசும் கிருமிகளும் சேராவண்ணம் தடுக்கின்றன. கண் புருவங்கள் நீர்ப்பொருட்களை கண்ணுக்குள் செல்லாமல் வடிகட்டுகிறது. கண்ணிமை முடிகள் தூசுகளைத் தடுப்பதற்குத் துணை செய்கின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:45 am

கண்பாவையின் (pupil) அனிச்சைச் செயல் (reflex) என்பது என்ன?

மிகுந்த ஒளியின்போது தசைகள் சுருங்கி கண்பாவை சிறியதாக மாற்றமடைகிறது; இதனால் மிகுதியான ஒளி கண்ணினுள் சென்று கண்பாவையின் நுட்பமான உட்பகுதிகளுக்குச் சேதம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. விழித்திரையானது ஒளியினால் கூருணர்ச்சித் திறன் அடையக்கூடியதாகும். மிக அதிகமான ஒளி நாம் பார்க்கும் பொருளின் உருவத்தைச் சிதைத்து கண்களைக் கூசச் செய்துவிடும். கண்களின் பாவைகள் உருவ அளவுகளை மாற்றிக்கொள்வதன் வாயிலாக கண்களுள் நுழையும் ஒளியின் அளவைக் குறைக்கவோ அல்லது கூட்டவோ முடிகிறது. கூடுதல் வெளிச்சம் மிக்க ஒளியால் அனிச்சையான நரம்பு எதிர்வினை உருவாகி அது நடுமூளைப் பகுதியால் கட்டுப்படுத்தப்படுகிறது. இரு விழிகளிலுமுள்ள வட்ட வடிவமான கண்பாவைத் தசை சுருக்கமடைந்து, புரியிழைகள் நீட்சியடைவதால் பாவையின் விட்டம் சுருக்கமடைகிறது. மங்கலான ஒளியின்போது இரு கண்பாவைகளும் விரிவடைந்து போதுமான ஒளியை அனுமதித்து விழித்திரையின் உயிரணுக்கள் தூண்டிவிடப்படுகின்றன.

மனிதனது கண்கள் மிகவும் கூருணர்வுத்திறன் கொண்டவை. நிலவொளியே இல்லாத இருளில் ஒரு மலையுச்சியின் மீது அமர்ந்துள்ள மனிதனால் 80 கி.மீ. தூரத்திற்கு அப்பால் உரசப்படும் ஒரு தீக்குச்சியின் ஒளியையும் காண இயலும் எனக் கூறப்படுகிறது.

கண்ணின் குவிய இயக்காற்றல் (focusing mechanism) என்பது என்ன?

கண்ணின் ஒளி வில்லையானது (lens) ஒளிப்படக்கருவியின் (camera) ஒளிவில்லையைப் போன்றே பணிபுரிகிறது. பார்க்கப்படும் பொருள் அண்மையில் உள்ளதா சேய்மையில் உள்ளதா என்னும் நிலைமைக்கேற்ப ஒளிப்படலத்தின் குவிய ஆற்றலை அமைத்து ஒளிவில்லை நுண்ணிய மாறுதல்களைச் செய்கிறது. கண்ணின் ஒளிவில்லை ஓரளவுக்கு நீட்சித்தன்மை (elasticity) கொண்டிருப்பதால் அதன் அளவை மாற்றி குவியச் செயலை மேற்கொள்ள இயலுகிறது. ஒளிக்கதிர்கள், ஒளிவில்லையைத் தாண்டி, கண்கோளத்தின் இடைப்பகுதியிலுள்ள தெளிவான பாகு (gel) போன்ற பொருள் வழியே விழித்திரையை அடைகின்றன. தூரப்பார்வையில் தசைகள் ஓய்வாகவும் இணைப்பு இழைகள் ஒளிவில்லையை இழுத்து தட்டு வடிவத்தில் அமைக்கும்; கிட்டப்பார்வையில் அதிக வட்டத்துடனான ஒளிவில்லை தேவைப்படும்; எனவே தசைகள் ஒளிவில்லையை இறுக்கும், இணைப்பு இழைகள் ஓய்வாக அமையும்.

நமக்கு ஏன் இரு கண்கள் இருக்க வேண்டும்? ஒரு கண்ணை மூடிக்கொள்க; பென்சில் ஒன்றை கையில் பிடித்துக் கொள்க; உங்கள் கையை முன்னால் நீட்டி ஏதேனும் ஒரு பொருளைத் தொட முயல்க; உங்களால் தொட முடிகிறதா? இரு கண்களும் இணைந்து செயல்பட்டால் தான் பொருட்கள் எவ்வளவு அருகில் உள்ளன என்பதை அறிய முடியும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:46 am

காதுக்குள் இருக்கும் பகுதிகள் யாவை?

நம் கேட்கும் திறன், தலையின் இரு பக்கங்களிலும் உள்ள வெளிக்காதுகளுடன் மட்டுமே தொடர்பு கொண்டதல்ல. இவ்விரு செவிகளும் வெளிப்புறக் காதுகள் அல்லது தோலினால் மூடப்பட்ட குருத்தெலும்பினாலான தொங்கும் மடிப்புகள். உண்மையில் காதில் மூன்று பகுதிகள் உள்ளன. வெளிப்புறக் காது காற்றின் அதிர்வுகளான ஒலி அலைகளைத் திரட்டுகின்றது. நடுப்புறக் காது காற்றலைகளை செவிப்பறை (ear drum) மற்றும் சின்னஞ்சிறு எலும்புகள் ஆகிய திடப் பகுதிகளில் அதிர்வுகளை உருவாக்குகிறது. உட்புறக் காதில் அவ்வதிர்வுகள் திரவத்தின் அதிர்வுகளாக மாற்றப்படுகின்றன. பின்னர், அவை மின் நரம்புச் சமிக்கைகளாக மாறுகின்றன. உட்புறக் காது நமக்கு ஒரு சமநிலை உணர்வையும் (sense of balance) அளிக்கிறது. காதின் நடுப்பகுதியும் உட்பகுதியும் மண்டையோட்டு எலும்புகளால் அதிர்வுகளிலிருந்து காப்பாற்றப்படுகின்றன. வெளிப்புறக் காதிலுள்ள முடிகளால் தூசு, அழுக்குகள், கிருமிகள் ஆகியவை காதினுள் புகாமல் தடுக்கப்படுகின்றன.

மின்தூக்கி (lift), விமானம் ஆகியவற்றில் மேலே செல்லும்போது காதுகளில் உள்ள காற்று விரிவடைவதால் வெடிப்பொலி (pop) உண்டாகலாம். இது ஏற்படாவிடில் காதின் செவிப்பறை சிதைவுறக்கூடும்.

செவிச்சுருள்வளை (cochlea) என்பது என்ன?

செவியின் கேட்கும் பகுதி செவி அறையின் ஒரு முனையில் நத்தையின் ஓடு (snail shell) போன்று சுருள் (coil) வடிவில் அமைந்துள்ளது. இது செவிச்சுருள் வளை என அழைக்கப்படுகிறது; இதன் நீளவாட்டம் முழுவதிலும் தளச் சவ்வு (basilar membrane) எனும் மென்மையான சவ்வுப் பகுதி பரவியுள்ளது; இது சின்னஞ்சிறு நரம்பு முனைகளை செவிச்சுருள் வளைக்கு அளிக்கிறது. ஒலியளவின் மாற்றங்கள் அல்லது ஒலிகளின் உரத்த அளவுகள் சின்னஞ்சிறு முடிகளால் உணரப்பட்டு அழுத்த அலைகளாகப் பயணம் செய்யும்போது அவை உள்ளேயிருக்கும் செவிப்பறையில் (ear drum) அதிர்வு அல்லது அசைவை ஏற்படுத்துகின்றன. இந்த அதிர்வுகள் சுத்தி (hammer) எலும்பு, பட்டைச் (anvil) செவி எலும்பு மற்றும் அங்கவடி (stirrup) எலும்பு ஆகிய சின்னஞ்சிறு எலும்புகள் வாயிலாகக் கடந்து செல்கின்றன. மேலும் செவிசுருள்வளையைக் கடந்து செல்லுமுன் அவை ஒலிக்கின்றன. பின்னர் இந்த அதிர்வுகள் செவிச்சுருள் வளையினுள் இருக்கும் நரம்பு முனைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு செய்திகளாக மாற்றம் பெற்று மூளைக்கு அனுப்பப்படுகின்றன.

உட்புறச் செவியைப் பாதுகாக்கும் பொருட்டு உரத்த ஒலிகள் செவிப்பறையை உறுதியாக்கி அங்கவடி எலும்பால் செவிச்சுருள் வளையிலிருந்து வெளியே இழுக்கப் படுகின்றன. மிகப் பெருமளவிலான உரத்த ஒலிகள் செவிப்பறையைக் கிழித்து காதைச் செவிடாக்கி விடக்கூடும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:46 am

நமது உடலின் சமச்சீர் நிலையைக் கட்டுப்படுத்துவது எது?

உடலின் சமச்சீர் நிலையைக் கட்டுப்படுத்தும் முக்கிய உறுப்பாக விளங்குவது செவியின் உட்பகுதியாகும். ஆனால் கழுத்து, முதுகு, கால், பாதத் தசைகளின் நரம்பு முனைகள் ஆகியவற்றிலிருந்தும் செய்திகளை மூளையானது பெறுகின்றது. மூளை இச்செய்தியைப் பிரித்துணர்ந்து, அவற்றை மீண்டும் தசைகளுக்கே அனுப்பி வைக்கிறது; இதன் விளைவாகத்தான் நம்ப முடியாத வியப்பூட்டும் செயல்களான பனிச்சறுக்கல்கள் அல்லது உடலை வளைத்துச் செய்யும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்ற உடற்பயிற்சி விளையாட்டுகள் ஆகியவற்றை நம் உடலால் செய்ய முடிகிறது. செவிச்சுருள்வளைக்கு (cochelea) அருகில் திரவம் நிரம்பிய குழல்கள்-அரை வட்டக் குழாய்கள் உள்ளன. தலையை அசைக்கும்போது, ஒவ்வொரு குழாயிலுமுள்ள திரவம் இப்படியும் அப்படியுமாக அசைகிறது. உடல் அசையும்போது அத்திரவத்தால் முடிகள் பாகுக்குழம்பு போல் வளைகின்றன. நடுக்குழாய் நரம்புடன் (vestitubular nerve) இவை இணைக்கப்பட்டு மூளை எச்சரிக்கப்படுகிறது; இதனால் உடல் சமச்சீர் நிலையை அடைய முடிகிறது.

ஒருவர் சுற்றிச் சுற்றி சுழன்று ஆடியபின் திடீரென்று நிறுத்தி விட்டாலும், காதிலுள்ள திரவம் சுழன்று கொண்டிருப்பதால் மயக்கம் ஏற்படுவது போன்ற ஒரு நிலை உண்டாகிறது; அவர் எங்கே செல்கிறார் என்பதை அவரது மூளையால் கூறமுடிவதில்லை. சுற்றிச் சுழன்று நடனமாடுபவரின் தலையைக் கவனித்தால், அவரது தலை தொடர்ந்து சுழலாமல் இருப்பதைக் காணலாம்.

உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது எது?

நமது உடலின் உட்பகுதிச் சூழல் ஒரே நிலையில் அமைந்திருப்பதற்கு "உட்சீர்மை (homeostasis)" எனப் பெயர். உடலின் உட்சூழலை நிலையாக வைத்திருப்பதற்குப் பல அமைப்புகளையும் செயல்முறைகளையும் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. உடலின் வெப்ப இழப்பையும் தோலின் மூலம் வெப்ப உற்பத்தியையும் கட்டுப்படுத்த மூளையின் கீழ்த்தளத்திலுள்ள வெப்ப உட்கரு (temperature nucleus) காரணமாக விளங்குகிறது. அதிக வெப்பமானது இரத்த நாளங்களிலிருந்து மிகுதியான இரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது; அப்போது வியர்வை நாளங்களிலிருந்து வியர்வை வெளியேறி வெப்ப இழப்பு ஏற்படக் காரணமாகிறது. உடலின் வெப்பநிலை குறையும்போது மேற்புற இரத்த நாளங்கள் சுருக்கமடைந்து, வியர்வை வெளியேற்றம் தடுக்கப்படுகிறது; மேலும் முடிகள் விறைத்து நின்று காற்றைக் காப்புறை போன்று உள்ளேயே தடுத்து நிறுத்தும் மேலும் உடல் நடுக்கத்தாலும் கூடுதல் வெப்பம் உருவாக்கப்படும்.

உடல் அசைவுகளும் உட்சீர்மை ஏற்படக் காரணமாக விளங்குகின்றன. வெப்பம் மிகுதியாக உள்ளபோது கைகளையும் கால்களையும் நீட்டி அகலப்படுத்துவதால் வெப்பம் வெளியேற வாய்ப்புண்டாகிறது. குளிர்ந்த நிலையிலுள்ள மனிதர்கள் உடலைச் சுருக்கி உடற்பரப்பையும் குறுக்கிக்கொள்வதால் வெப்ப இழப்பு தவிர்க்கப்பட்டு உடல் வெப்பம் காக்கப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:47 am

தோல் என்பது என்ன?

தோல் என்பது உடல் முழுதும் மிக மிகக் குறைவான தடிமனுடன் (சுமார் 2 மில்லி மீட்டர் தடிமனுக்கு) போர்த்தப்பட்ட ஒரு விரிப்பு போன்ற அமைப்பாகும். உடலின் சில பகுதிகளில் குறிப்பாக கால் பாதத்தின் அடிப்பகுதி, உள்ளங்கைப் பகுதி ஆகியவற்றில் அதன் தடிமன் சற்றுக் கூடுதலாக (சுமார் 3 மி.மீ. அளவுக்கு) இருக்கும். அது நீர் உடலில் புகாவண்ணம் காப்பதோடு நீட்சித்தன்மையுடன் விளங்குகிறது; மேலும் நுண்ணிய தூசு, கிருமிகள் ஆகியவையும் உடலுள் செல்லாவண்ணம் தோல் உடலைப் பாதுகாக்கிறது.

தோலில் இரண்டு முக்கிய பகுதிகள் உள்ளன. வெளிப்புறப் பகுதி புறத்தோல் (epidermis) எனப்படுகிறது. உடலின் மேல்பகுதியில் காணப்படும் புறத்தோல் பகுதி இறந்த உயிரணுக்களால் ஆனது; புதிய உயிரணுக்கள் புறத்தோலின் அடிப்பகுதியில் உருவாகின்றன. தோலின் அடிப்பகுதி உட்தோல் (dermis) எனப்படுகிறது. தொடு உணர்ச்சி, வெப்பம், குளிர், அழுத்தம் மற்றும் வலி ஆகியவற்றை உணரும் உணர்ச்சி ஏற்பிகள் (sensory receptors) இங்கேதான் அமைந்துள்ளன; மற்றும் தகவல்களைத் தெரிந்தெடுத்து மூளைக்கு அனுப்பும் நரம்பு முனைகளும் இப்பகுதியில்தான் அமைந்துள்ளன. உட்தோலில்தான் வியர்வைத் துளிகள் அரும்புவதோடு, உடலின் முடிகளும் உருவாகின்றன.

உடலிலுள்ள ஒவ்வொரு முடியிலும் மிக நுண்ணிய விரைப்புத் தசைகள் (erector muscles) அமைந்துள்ளன. உடல் குளிரால் பாதிக்கப்படும்போது இத்தசைகள் சுருங்கி முடிகள் விரைத்து நிற்கும். இதனால் வெதுவெதுப்பான காற்று அவற்றுள் சிக்கி உடல் வெதுவெதுப்பாகிறது.

தொடு உணர்ச்சி (sensation) என்றால் என்ன?

உடலின் தோல் பகுதியானது மிகப் பெரிய உணர்ச்சி உறுப்பாகும்; இதில் ஆயிரக்கணக்கில் உணர்வு ஏற்பிகள் அமைந்துள்ளன. தோலில் உள்ள உணர்வு ஏற்பிகள் (sensory receptors) தொடு உணர்ச்சியை மட்டும் தெரிவிப்பனவல்ல; தொடப்படும் பொருளின் இழை நயத்தையும், எடுத்துக்காட்டாக, அது மென்மையானதா சொரசொரப்பானதா எனவும் தெரிவிக்கக்கூடியவை. வெப்பமான மற்றும் குளிர்ச்சியான பொருட்களையும் தெரிவிக்கக்கூடிய ஏற்பிகள் அமைந்துள்ளன. மற்றும் சில ஏற்பிகள் தோலில் ஏற்படும் அழுத்தத்தையும் தெரிவிக்கக் கூடியவை.

தோலின் சில ஏற்பிகள் தொடுதல், வெப்பம், குளிர்ச்சி மற்றும் அழுத்தம் ஆகிய நான்கு உணர்ச்சிகளையும் உணரக் கூடியவை. அவை கட்டற்ற நரம்பு முனைகள் (free nerve endings) எனப்படுகின்றன. இந்த உணர்ச்சிகள் வலிமையாக இருந்தால் அவற்றின் வலி சமிக்ஞைகளுக்கான செய்திகளை அவை அனுப்புகின்றன. தோலிலுள்ள முடிகளைச் சுற்றி சில கட்டற்ற நரம்பு முனைகள் அமைந்துள்ளன. அவை ஒவ்வொரு முடியின் சிறு அசைவின் உணர்ச்சியையும் வெளிப்படுத்துபவை. தோலின் சில பகுதிகளில் குறிப்பாக விரல் நுனிகளில் நரம்பு முனைகள் அடர்த்தியாக அமைந்துள்ளன. மற்ற சில பகுதிகளில் அதாவது முதுகு போன்ற பகுதிகளில் நரம்பு முனைகள் அடர்த்தி குறைந்து அமைந்துள்ளன.

ஐந்து முக்கிய உணர்ச்சிகளைத் தவிர்த்து சமச்சீர் உணர்வு, பசி, நீர் வேட்கை போன்ற வேறு சில உணர்வுகளும் அமைந்துள்ளன. நமது வலி உணர்வு மிக முக்கியமான ஒன்று. உடலில் ஊறு விளையும்போது அல்லது அபாயம் ஏற்படும்போது இவ்வுணர்வு எச்சரிக்கை உணர்வாக அமைகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:47 am

நம் இரத்தம் சிகப்பு நிறத்தில் இருப்பது ஏன்?

நமது உடலில் ஓடும் இரத்தத்தில் பலவகைப் பொருள்களும், உயிரணுக்களும் (செல்கள்) உள்ளன. இரத்தத்தின் ஒவ்வொரு பகுதிக்கும், அவற்றிற்கே உரிய சிறப்புப் பணிகள் உண்டு. இரத்தத்தின் பாதிக்கு மேற்பட்ட திரவப் பகுதி பிளாஸ்மா எனப்படும். இது வெளிர் மஞ்சள் நிறமானது; தண்ணீரை விடச் சற்று அடர்த்தியானது; பல பொருள்கள் இதில் கரைந்துள்ளன. புரதம், நோய் எதிர்ப்புப் பொருள்கள், இரத்தத்தை உறைய வைக்கும் ஃபைப்ரினோஜன், கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுப் பொருள்கள், கொழுப்பு மற்றும் உப்புகள், இரத்த உயிரணுக்கள் ஆகியவை இதில் அடங்கும்.

சிகப்புக் குருதி அணுக்கள் (Red Blood Corpuscles _ RBC) எனப்படுபவையே இரத்தத்திற்கு நிறத்தை அளிப்பவை. இரத்தம் சிகப்பாகக் காணப்படுவதற்கு இவையே காரணம். இரத்தத்தில் இவ்வணுக்கள் ஏராளமாக உள்ளன. மிகவும் நுண்ணிய, வட்டமான, தட்டையான இந்த அணுக்கள் ஏறக்குறைய 35 டிரில்லியன் எண்ணிக்கையில் உள்ளன.

இளம் இரத்தச் சிகப்பணு வளர்ச்சியடைந்து, கொழுப்புத் திசுவின் சோற்றுப் (marrow) பகுதியில் முதிர்ச்சியுறும்போது தனது அணுக்கருவை இழந்து, ஹீமோகுளோபினாக உருவாகிறது.

ஹீமோகுளோபின் என்பது சிகப்பு நிறமிப் பொருளாகும். சிகப்பணுக்களின் வாழ்நாள் நான்கு மாதங்கள் மட்டுமே; பின்னர் அவை பெரும்பாலும் மண்ணீரலில் (spleen) சிதைவுறுகின்றன. சிதைவுற்று அழிந்து போகும் உயிரணுக்களை ஈடுகட்ட புதிய சிகப்பு உயிரணுக்கள் எப்போதும் உருவாகிக் கொண்டே இருக்கும்.

இதயத் துடிப்பு வீதம் என்பது ஒரு நிமிடத்தில் இதயம் எத்தனை முறை சுருங்கி விரிகிறது என்பதன் எண்ணிக்கையாகும். மணிக்கட்டில் உள்ள நாடியின் மீது கை விரலை மெதுவாக வைத்து ஒரு நிமிடத்தில் எத்தனை முறை நாடி துடிக்கிறது என்பதைக் கணக்கிட்டு இதயத் துடிப்பின் அளவை நீங்களே அறிந்து கொள்ளலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:48 am

தமனிகள், சிரைகளில் இருந்து ஏன் வேறுபட்டவை?

நமது உடலின் இரத்த ஓட்ட அமைப்புடன், நகரின் போக்குவரத்து அமைப்பின் திறன் எதையும் ஒப்பிட்டுப் பார்க்க இயலாது; அந்த அளவுக்கு நமது உடலின் இரத்த ஓட்ட அமைப்பு சிறந்து விளங்குகிறது எனலாம். மைய விநியோக நிலையத்துடன் (Central Pumping Station), ஒன்று பெரியதும், மற்றொன்று சிறியதுமான இரண்டு வகைக் குழாய் அமைப்புகள் இணைக்கப்பட்டிருப்பதாகக் கற்பனை செய்து கொள்க; இது ஏறக்குறைய நமது இரத்த ஓட்ட அமைப்புடன் ஒப்பிடக் கூடியதாகும். சிறு குழாய்கள் இதயத்திலிருந்து நுரையீரலுக்கும், பின்பு மீண்டும் இதயத்திற்கும் செல்பவை. பெரிய குழாய்கள் இதயத்திலிருந்து உடலின் பிற பகுதிகளுக்குச் செல்பவை. இக்குழாய்கள் தமனிகள் (arteries), சிரைகள் (veins), தந்துகிகள் (capillaries) எனப்படும். இரத்தத்தை இதயத்திலிருந்து எடுத்துச் செல்லும் குழாய்கள் தமனிகளாகும். சிரைகள் வழியே இரத்தம் திரும்ப இதயத்திற்கு வந்து சேரும். பொதுவாகக் கூறுவதெனில் தமனிகள் தூய இரத்தத்தை உடலின் பல பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும். சிரைகள் அசுத்தங்கள் நிரம்பிய இரத்தத்தை மீண்டும் கொண்டு வரும். மைய விநியோக நிலையமாக விளங்குவது நமது இதயம்தான். மணிக்கட்டையும், கழுத்தின் பக்கவாட்டுப் பகுதிகளைத் தவிர்த்துப் பிற இடங்களில் தமனிகள் திசுக்களுக்கு அடியில் அமைந்திருக்கும். எனவேதான் இவ்விடங்களில் நாடித்துடிப்பைக் கணக்கிட்டு அறிந்து கொள்ள முடிகிறது. மருத்துவர் இதன் மூலம் தமனிகளின் நிலையை அறிந்து கொள்வார். தமனிகளில் செல்லும் இரத்தம் ஒளிரும் சிகப்பு நிறமானது. சிரைகள் தோலுக்கு நெருக்கமாக அமைந்திருக்கும். இச்சிரைகளில் இரத்தம் இருண்ட சிகப்பு நிறத்தில் ஒரே சீராக ஒடும். சிரைகள் நெடுகிலும் ஆங்காங்கே வால்வுகள் அமைந்திருக்கும்.

இரத்தத்தில் வெள்ளை மற்றும் சிகப்புக் குருதி அணுக்கள் உள்ளன. இவை பிளாஸ்மா என்னும் திரவத்தில் மிதந்துகொண்டிருக்கும். உடலுக்குத் தேவையான பல ஆயிரம் பொருள்கள் இரத்தத்தில் உள்ளன. இப்பொருள்கள் அனைத்தும் இரத்தத்தில் கலந்து செல்வதோடு, தேவையற்ற மாசுப்பொருள்கள் அதே இரத்தத்தால் வெளியேற்றப்படுகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:48 am

நமக்கு ஏன் எலும்புக்கூடு (skeleton) அமைந்துள்ளது?

எலும்புகளாலான வலையமப்பை எலும்புக்கூடு என்கிறோம். முழு உடலையும் ஒன்றிணைத்துப் பிடித்துக்கொள்ளும் ஒரு சட்டகமாக எலும்புக்கூடு விளங்குகிறது.

எலும்புக்கூடு இல்லமலிருக்குமானால் உடலுக்கு ஆதாரமான பிடிமானமின்றி துணிப்பொம்மை போல் உடல் துவண்டு விழுந்து விடும். அதாவது உடலால் எங்கும் நடமாடவே இயலாது.

இதுமட்டுமல்லாமல் உடலின் முக்கிய பகுதிகளான மூளை, இதயம், நுரையீரல்கள் போன்றவற்றிற்கும் பாதுகாப்பாக எலும்புக்கூடு அமைந்துள்ளது. உடலின் மென்மையான உறுப்புகள் அனைத்திற்கும் ஆதாரமாகவும் உறுதுணையாகவும் விளங்குவது எலும்புக்கூடேயாகும்.

எலும்புக்கூடு நெம்புகோல் அமைப்புபோல் துணைபுரிந்து உடலின் தசைகள் இயங்கவும் வழி செய்கிறது. இதனால் உடலின் அசைவுகள் அனைத்தும் நன்கு நடைபெற முடிகிறது.பிறந்த குழந்தைக்கு சுமார் 300 எலும்புகள் உள்ளன. இவற்றுள் 94 ஒன்றோடொன்று இணைந்து அமைந்துள்ளவை. கை மற்றும் மணிக்கட்டு ஆகியவற்றில் மட்டும் 27 எலும்புகள் அமைந்துள்ளன.

எக்ஸ்-ரே ஏன் எடுக்கப்படுகிறது?

மனிதர்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால், உடனே மருத்துவமனைக்குச் சென்று, எலும்புகளில் ஏங்கேனும் முறிவு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய எக்ஸ்-ரே எடுப்பதை நாம் அறிவோம். எக்ஸ்-ரேயில் காணப்படும் படம் நிழற்படமாக அமைந்திருப்பதை நாம் காணலாம். எக்ஸ் கதிர்கள் உடற்பகுதிகளுள் ஊடுருவி படலத்தில் (film) நிழற்பகுதியாக விழுகின்றன. இப்படலத்தின் இரு பக்கங்களிலும் பசை (emulsion) பூசப்படுகிறது; பின்னர் இது வெளியில் காட்டப்படும்போது சாதாரண ஒளிப்படமாகக் காட்சியளிக்கிறது. எலும்புகள் மற்றும் பிற பொருட்களை எக்ஸ் கதிர்கள் ஊடுருவிச் செல்ல முடியாததால் அவை அடர்த்தியான நிழற்பகுதியாக படலத்தில் ஒளிர்கின்றன. இதனைப் பார்த்து மருத்துவர் எலும்புகளில் முறிவு அல்லது இட மாற்றம் ஏற்பட்டுள்ளதா என அறிந்து கொள்கிறார்.

எக்ஸ் கதிர்களைப் போன்றே மீஒலி அலைகளும் (ultrasonic sound waves) உடலில் ஊடுருவிச் செல்கின்றன. அவை உடலினுள் இருக்கும் உறுப்புகளால் திருப்பி அனுப்பப்படும். எதிரொளிக்கப்பட்ட ஒலி திரையில் படமாக விழுகிறது. இதன் மூலம் கருவுற்ற தாயின் வயிற்றிலுள்ள குழந்தை பற்றி அறிய முடிகிறது. இதனை ஸ்கேன் (scan) எடுத்தல் என்கிறோம்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக