புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_m10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10 
59 Posts - 50%
heezulia
மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_m10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10 
47 Posts - 39%
T.N.Balasubramanian
மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_m10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_m10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_m10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_m10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_m10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10 
1 Post - 1%
Shivanya
மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_m10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_m10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_m10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_m10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_m10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10 
14 Posts - 3%
prajai
மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_m10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_m10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10 
9 Posts - 2%
jairam
மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_m10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_m10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10 
4 Posts - 1%
Jenila
மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_m10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_m10மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 07, 2023 10:05 pm

மகளிர் உரிமைத் தொகை: யாருக்கெல்லாம் மாதம் 1000 ரூபாய் கிடைக்கும்?  Image

மகளிர் உரிமைத் தொகை யாருக்கு கிடைக்கும், யாருக்கெல்லாம் கிடைக்காது என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 07) வெளியிட்டுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதில் யாரெல்லாம் பயனடைய முடியும்?

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் காணொளி வாயிலாக கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தத் திட்டத்திற்கு, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், சிறப்பு முகாம்களை நடத்தி கூட்ட நெரிசல் இன்றி ஆவணங்களைப் பெற வேண்டும் என்று அதிகாரிகளை அறிவுறுத்திய முதல்வர், ஆவணங்களுக்காக காத்திருக்காமல், ஆவணங்கள் இல்லாத இல்லத்தரசிகளுக்கும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த உரிமைத் தொகை யார், யாருக்கெல்லாம் இந்த உரிமைத் தொகை கிடைக்கும், என்னென்ன தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு இன்று (ஜூன் 07) வெளியிட்டுள்ளது.

மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுடைய குடும்பத் தலைவிகள் யார்?


குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனப் பெயரிடப்பட்டுள்ள பெண் குடும்பத்தலைவியாக கருதப்படுவார்.

குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தல, அவரது மனைவி குடும்பத்தலைவியாக கருதப்படுவார்.

திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள், திருநங்கைகள் தலைமையிலான குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.

ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரை குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.

இந்தத் திட்டத்தில் பயனடைவதற்கான பொருளாதாரத் தகுதிகள் என்ன?

இந்த உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருக்க வேண்டும்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருக்க வேண்டும்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2.5 லட்சம் ரூபாய்க்கும் கீழே உள்ள குடும்பங்களாக இருக்க வேண்டும்.

ஐந்து ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்கும் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களாக இருக்க வேண்டும்.

ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட் மின்சாரத்தைவிடக் குறைவாகப் பயன்படுத்தும் குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.

யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது?

மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும், கீழ்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தாலும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதி இல்லாதவராகக் கருதப்படுவார்.

கீழ்கண்ட ஏதாவது ஒரு தகுதியின்மை வகைப்பாட்டில் வரும் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறத் தகுதியில்லை.


ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காது

ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காது

குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க முடியாது.

ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இந்த உரிமைத் தொகை கிடைக்காது.

சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்போருக்கு கிடைக்காது.

ஆண்டுக்கு 50 லட்சத்திற்கு மேல் ஆண்டு விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு கிடைக்காது.

ஏற்கெனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வுதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்காது.

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் கடும் உடல் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்துப் பயன் பெறலாம்.

இந்த வகைப்பாட்டின்கீழ் வருவோர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை என்றால், விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

மகளிர் உரிமைத் தொகைக்கு எப்படி விண்ணப்பிப்பது?


மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதாவது, 2002ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதிக்கு முன்னதாகப் பிறந்தவர்கள் விண்ணபிக்கலாம்.

இந்தத் திட்டத்திற்கு நியாயவிலை கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்துள்ள விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 08, 2023 12:41 pm

மகளிர் உரிமைத்தொகை - கமலஹாசனால் தமிழகத்திற்கு வந்துள்ளது! அவர்தான் முதன்முதலில் தன் தேர்தல் அறிக்கையில் இதைச் சொன்னார்! அப்போது பல ‘மேதாவிகள்’ கேலிபேசினர்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 08, 2023 6:51 pm

Dr.S.Soundarapandian wrote:மகளிர் உரிமைத்தொகை - கமலஹாசனால் தமிழகத்திற்கு வந்துள்ளது! அவர்தான் முதன்முதலில் தன் தேர்தல் அறிக்கையில் இதைச் சொன்னார்! அப்போது பல ‘மேதாவிகள்’ கேலிபேசினர்!


ஆமாம், கூறுவது உண்மை...

coderthiyagarajan1980
coderthiyagarajan1980
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 05/07/2023

Postcoderthiyagarajan1980 Sat Jul 08, 2023 7:08 pm

விதிமுறைகளை பார்த்தால் யாருக்கும் கிடைக்காது என்பது போல் தான் உள்ளது. தகுதியானவருக்கு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34982
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 08, 2023 7:12 pm

முந்தைய திட்டங்களில் தபால்காரர் மூலம் பணம் பட்டுவாடா செய்தனர்.
அப்போது தபால்காரர் தனது கமிஷனாக 25 /50 எடுத்துக்கொள்வார்.
பிரதமர் திட்டப்படி 0 பாலன்ஸ் வங்கி கணக்குகள் யார் வேண்டுமானாலும்
திறக்கலாம்.ஆகவே 1000 யை on line மூலம் வரவு வைத்தால்தான் பணம் உரியவருக்கு
போய் சேரும். இடை தரகர் வேண்டாமே .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 08, 2023 7:20 pm

T.N.Balasubramanian wrote:முந்தைய திட்டங்களில் தபால்காரர் மூலம் பணம் பட்டுவாடா செய்தனர்.
அப்போது தபால்காரர் தனது கமிஷனாக 25 /50 எடுத்துக்கொள்வார்.
பிரதமர் திட்டப்படி 0 பாலன்ஸ் வங்கி கணக்குகள் யார் வேண்டுமானாலும்
திறக்கலாம்.ஆகவே 1000 யை on line மூலம் வரவு வைத்தால்தான் பணம் உரியவருக்கு
போய் சேரும். இடை தரகர் வேண்டாமே .

ரேஷன் கடை மூலம் கொடுத்தால் தானே திமுக கொடி, ஸ்டாலின் குடும்ப புகைப்படம், அந்தந்த ஏரியா அல்லக்கைகளின் ஆர்ப்பாட்டம் என மக்களை அவமானப்படுத்தி பணம் பட்டுவாடா செய்ய முடியும்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 08, 2023 7:21 pm

coderthiyagarajan1980 wrote:விதிமுறைகளை பார்த்தால் யாருக்கும் கிடைக்காது என்பது போல் தான் உள்ளது. தகுதியானவருக்கு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி.


சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

யாருக்கும் கிடைக்காது என்பது கூட உண்மைதான்... நக்கல் நாயகம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 08, 2023 8:14 pm

மகளிர் உரிமைத் தொகை 80% பெண்களுக்கு கிடைக்காது: அண்ணாமலை



80% பெண்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாகவும் அதற்கான நிபந்தனைகள் குறித்து தமிழக அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் இதற்கு கடுமையான எதிர்ப்பை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் “ வழக்கம்போல, வாக்களித்த மக்களை மீண்டும் ஒரு முறை ஏமாற்றியிருக்கிறது திறனற்ற திமுக அரசு. தனது தேர்தல் வாக்குறுதியில், அனைத்து மகளிருக்கும் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, சில மாதங்களுக்கு முன்பு, தகுதி வாய்ந்த மகளிருக்கு மட்டுமே மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று புதிய நிபந்தனை விதித்தது.

நேற்றைய தினம், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகளை திமுக அரசு வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை வழங்க, திமுக எதிர்பார்க்கும் தகுதிகள் என்னென்ன என்று பார்ப்போம்.

குடும்பத்தின் மாத வருமானம் 20,833 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. அதாவது, இவர்கள் கொடுப்பதாகக் கூறிய மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வாங்க, குடும்பத்தில் யாருமே வேலைக்குச் செல்லாமல் இருக்க வேண்டும் என்று கூறுவதைப் போல் உள்ளது. தமிழக மக்கள் கடினமான உழைப்பாளிகள்.

வேலைக்குச் செல்லாமல், டீக்கடை, பஜ்ஜிக் கடை, பிரியாணி கடையில் பாக்ஸிங் செய்து திரிய, தமிழக மக்கள் அனைவரும் திமுகவினர் இல்லை என்பதை, முதலமைச்சருக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

அடுத்த தகுதி, மாதம் 300 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தக் கூடாதாம். ஷாக் அடிக்கும் அளவுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி வைத்திருக்கும் திறனற்ற திமுக அரசுக்கு, மின்சாரக் கட்டணம் கட்டவே எளிய மக்களின் பாதி வருமானம் போய் விடுகிறது என்பது தெரியாதா?

தமிழகத்தில் 99.6 லட்ச வீடுகள், 300 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துகிறார்கள் என்று, சென்ற ஆண்டு ஜூன் மாதம், தமிழக அரசு தெரிவித்தது. இந்த 99.6 லட்ச குடும்பங்களிடமும் குடும்ப அட்டை இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மாதம் 300 யூனிட்டுக்குக் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், மாதம் 20,833 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால், அவர்களுக்கு இந்த உரிமை தொகை வழங்கப்படாது என்ற விசித்திரமான நிபந்தனையை இட்டுவிட்டு, ஒரு கோடி மகளிர் பயனடைவார்கள் என்று எப்படிக் கூறுகிறார் முதலமைச்சர்?

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மகளிர் உரிமைத் தொகை வழங்க இப்படி எல்லாம் நகைக்கத்தக்க நிபந்தனைகள் விதிப்பதற்குப் பதிலாக,

திமுக உறுப்பினர் அட்டை வேண்டும் என்ற நிபந்தனையும் போட்டு இருக்கலாம். உங்கள் நிபந்தனைகள் பெரும்பாலும் உங்கள் கட்சியினருக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர தமிழக மக்களுக்கு அல்ல. நீங்கள் விதித்திருக்கும் நிபந்தனைகளைப் பார்த்தால், தமிழகத்தில் 80 சதவீத குடும்பத் தலைவிகளுக்கு, இந்த உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

முதலமைச்சரிடம் ஒன்றே ஒன்று கேட்க விரும்புகிறேன். தமிழக அமைச்சர்களாகப் பொறுப்பேற்க, குறிப்பிடத்தக்க தகுதிகள் வேண்டும் என்று தமிழக மக்கள் நிபந்தனை விதித்திருந்தால், உங்கள் கட்சியின் நிலைமை என்னவாக இருந்திருக்கும்?” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 08, 2023 8:16 pm

ரூ 1000 மகளிர் உரிமைத் தொகை; இப்படிச் செய்தால் அரசியல் தலையீடு இருக்கும்: ஜெயக்குமார்



குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ம் தேதி முதல் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம்? பொருளாதார அளவுகோல், தகுதி உடைய நபர்கள் குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி, பொருளாதாரத் தகுதிகளாக ஆண்டுக்கு வருமானம் இரண்டரை லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும். ஆண்டுக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் உள்ளிட்ட தகுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதோடு, சொந்த பயன்பாட்டிற்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனம் வைத்துள்ளவர்கள்; ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் விற்பனை செய்து சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்; ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியங்கள் மற்றும் அரசிடமிருந்து பென்ஷன் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன் பெறத் தகுதியற்றவர்கள். இவர்கள் விண்ணப்பிக்க முடியாது போன்ற தகுதி விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தகுதியுடைய நபர்களுக்கு மட்டும் ரூ.1000 வழங்கப்படும் என அரசின் அறிவிப்புக்கு அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “தி.மு.க கொடுத்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதில் இந்த வாக்குறுதி நாங்கள் போராட்டம் செய்து, எடப்பாடி பழனிசாமி போராட்டம் அறிவித்த பிறகு இப்பொழுது பாராளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

2 லட்சத்து 15 ஆயிரம் ரேஷன் கார்டு இருக்கிறது. அனைத்திற்கும் கொடுத்துவிட்டுப் போக வேண்டியது தானே. இப்பொழுது தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் கொடுப்போம் என்கிறார்கள் . அப்பொழுது ஆயிரம் ரூபாய் வாங்குபவர்கள் தகுதியுடைய குடும்பத் தலைவி, வாங்காதவங்க தகுதி இல்லாத குடும்ப தலைவியா? இது என்ன நியாயம்? தன்னார்வலர்களைக் கொண்டு தகுதியானவர்களைக் கணக்கெடுப்போம் என்கிறார்கள். அதில் சில கேட்டகிரி இருக்கு கணக்கெடுத்து கொடுப்போம் என்று சொல்கிறார்கள்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த செக்டாரில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் கொடுப்போம் என்று ஏன் சொல்லவில்லை. ஏன் இரண்டு லட்சத்து 15 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கும் கொடுப்போம் என்று சொன்னீர்கள்?. இப்பொழுது ஏன் அந்தர் பல்டி அடிக்கிறீர்கள். இன்னொரு விஷயம் தன்னார்வலர்கள் கணக்கெடுக்கும் பொழுது யாருடைய மேற்பார்வையில் இது நடக்கும்.

தன்னார்வலர்கள் சென்றார்கள் என்றால் தி.மு.க ஒன்றிய செயலாளர்,தி.மு.க வார்டு செயலாளர் பேச்சை கேட்டு அங்குள்ள தி.மு.க ஆட்களுக்கு மட்டும்தான் சேர்ப்பது போன்று வரும். இதில் அரசியல் தலையீடு கண்டிப்பாக இருக்கும். இதில் கட்சியை பார்த்து தான் செய்வார்கள். அதனால் தான் இந்த மாதிரி தகுதிகளை இவர்கள் வரையறுத்துள்ளார்கள்” என்று குற்றஞ்சாட்டினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 08, 2023 8:38 pm

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு கலைஞர் பெயர் : ஸ்டாலின் அறிவிப்பு



தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் மகளிர் உதவித்தொகை திட்டத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை கைப்பற்றிய திமுக அரசு தங்களது தேர்தல் அறிக்கையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் என்ற திட்டத்தை மட்டும் அறிவித்த நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

மேலும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அமைச்சர்கள் கூட இந்த திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறியிருந்தனர். அதன்படி தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்த சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐ.ஏ.எஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டார்.

மேலும் இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக தமிழக அரசு முதற்கட்டமாக ரூ7000 கோடி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், ஒரு கோடி மகளிருக்கு இந்த திட்டத்தின் மூலம் உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,

தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இவ்வளவு பெரிய திட்டம் உருவாக்கப்பட்டது இல்லை. மகளிருக்கு சொத்தில் பங்கு உண்டு என்பதை சட்டப்பூர்வமாக்கியவர் கருணாநிதி. மகளிர் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்த திமுக ஆட்சி காலத்தில் பெண்களுக்கு அரசு பணிகளில் 30% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் செயல்படுத்தப்படும் உரிமைத்தொகை திட்டத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயர் சூட்டப்படுகிறது. இந்த திட்டத்திற்காக ரூ.7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியினர் இதர ஆதரவற்றோர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைக்க வேண்டும். சமுதாயத்தில் உள்ள விளிம்பு நிலை மக்கள் இந்த திட்டத்தில் பயனடைவதை ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். விளிம்பு நிலை மக்களிடம் ஆதார், ரேஷன் கார்டு இல்லாவிட்டாலும் அவற்றை பெற வழி செய்து, உரிமை தொகை கிடைத்திட உதவ வேண்டும். அக்கறையுடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.

செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்படும். ரேஷன் கடைகள் மூலம் 1 கோடி விண்ணப்பங்களை விநியோகித்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உரிய அடையாள அட்டை இல்லாவிட்டாலும், இந்த திட்டம் பயனாளிகளை சென்றுசேர நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோரம் வசிப்பவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு மகளிர் உரிமை தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக