புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உடலியல் Poll_c10மனித உடலியல் Poll_m10மனித உடலியல் Poll_c10 
30 Posts - 50%
heezulia
மனித உடலியல் Poll_c10மனித உடலியல் Poll_m10மனித உடலியல் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
மனித உடலியல் Poll_c10மனித உடலியல் Poll_m10மனித உடலியல் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித உடலியல் Poll_c10மனித உடலியல் Poll_m10மனித உடலியல் Poll_c10 
72 Posts - 57%
heezulia
மனித உடலியல் Poll_c10மனித உடலியல் Poll_m10மனித உடலியல் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
மனித உடலியல் Poll_c10மனித உடலியல் Poll_m10மனித உடலியல் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
மனித உடலியல் Poll_c10மனித உடலியல் Poll_m10மனித உடலியல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உடலியல்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:38 am

மனித உடலியல் Be1JxKu

மனித உடலின் முக்கிய உறுப்பு மண்டலங்கள் என்னென்ன?

உடலின் பல்வேறு உறுப்புகளைக் கண்டறிந்தே மனித உடற்கூறியல் ஆய்வு செய்யப்படுகிறது. உடலுறுப்புகளின் அமைப்புகள் மற்றும் அவற்றின் செயற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அவை பல்வேறு குழுக்களாக அல்லது மண்டலங்களாகப் பிரிக்கப்படுகின்றன.

அக்குழுக்கள் பின்வருமாறு:

எலும்பு (skeletal) மண்டலம்,
தசை (muscular) மண்டலம்,
நரம்பு (nervous) மண்டலம்,
நாளமில்லா சுரப்பி (endocrine) மண்டலம்,
மூச்சு (respiratory) மண்டலம்,
இதயக் குருதி நாள (cardiovascular) மண்டலம்,
நிணநீர் நாள (lymph vascular) மண்டலம்,
செரிமான (digestive) மண்டலம்,
கழிவு (excretory) மண்டலம் மற்றும்
இனப்பெருக்க (reproductive) மண்டலம்


உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலை நீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது. மிகவும் சிக்கல் நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் (liver) ஆகும்.

ஒருவரின் சிதைந்து போன உடலுறுப்பை நீக்கி, வேறொரு கொடையாளியிடமிருந்து பெறப்பட்ட நல்ல உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிப் பொருத்துவதற்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (transplantation surgery) எனப் பெயர். தற்போது இதயம், ஈரல், சிறுநீரகங்கள், நுரையீரல்கள் ஆகிய உறுப்புகளை அறுவை சிகிச்சை வாயிலாக மாற்றிப் பொருத்த முடியும்.

Dr.S.Soundarapandian and dillikumar இந்த பதிவை விரும்பியுள்ளனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:38 am

ஓர் உயிரணுவின் (cell) உள்ளே என்ன இருக்கிறது?

தாவரம், விலங்கு, மனிதர் ஆகிய அனைத்து உயிரினங்களும் உயிரணுக்களால் ஆனவையே. இவ்வுயிரணுக்களில் சைடோபிளாசம் (cytoplasm) எனப்படும் பாகு (jelly) போன்ற நீர்மப் பொருளே நிரம்பியுள்ளது.

ஒவ்வொரு உயிரணுவும் மிக மெல்லிய சவ்வு போன்ற பொருளால், நீர் நிரம்பிய பலூன் (balloon) போன்று ஒன்றிணைக்கப்படுகிறது. உயிரணுவின் உள்ளே சைட்டோபிளாசம், குறிப்பிட்ட நுண் உறுப்புப் பகுதிகளில் (organells) அடங்கியிருக்கும். உயிரணுக்களின் செயல்பாட்டை இவையே கட்டுப்படுத்துகின்றன; எடுத்துக்காட்டாக புரதங்களின் (proteins) உற்பத்தியைக் குறிப்பிடலாம்.

மைட்டோகாண்டிரியா (mitochondria) எனப்படும் மிகச் சிறு நுண்ணுறுப்புகள் உயிர்வளியைப் பயன்படுத்தி உனவுப் பொருளைத் துகள்களாக மாற்றி, உயிரணுக்களுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன.

அணு உட்கருப் (nucleus) பகுதியில் நூலிழை போன்ற 46 குரோமோசாம்கள் அடங்கியுள்ளன; இவையே உயிரணுவின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துபவை.

குடல்களின் சுவர்ப் பகுதியில் உள்ள உயிரணுக்கள் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழ்பவை; ஆனால் மூளைப் பகுதியின் நரம்பிலுள்ள உயிரணுக்கள் நம் வாழ்நாள் முழுதும் உயிர் வாழ்பவை.

உயிரணுக்கள் வாழ்வதற்கு உணவு, உயிர்வளி, நீர்மச் சூழல் ஆகியன இன்றியமையாதன. இரத்தம் மற்றும் பிற உடல் திரவங்கள் உணவையும் நீர்ப்பொருளையும் அளிக்கின்றன. கழிவுப் பொருட்களையும் இவையே வெளியேற்றுகின்றன. உயிரணுவுக்குத் தேவைப்படும் உணவு மற்றும் வேதிப்பொருட்களையும் இரத்தமே அளிக்கிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:39 am

டி.என்.ஏ (DNA) என்பது என்ன?

டி.என்.ஏ என்பதை இனக்கீற்று அமிலம் எனத் தமிழில் கூறலாம். DNA என்பது deoxyribonucleic acid என்னும் ஆங்கிலத் தொடரின் சுருக்கமாகும். மனித உயிரைக் கட்டுப்படுத்தும் அடிப்படை அலகு இதுவே. இது நியூகிளியோடைட்ஸ் எனும் வேதி அலகுகளின் தொடர்களிலிருந்து பெறப்படும் மிகவும் சிக்கலான பொருளாகும். ஒரு புதிய உயிரினம் வளர்ச்சியுறுவதற்கான எல்லா அறிவுறுத்தல்களும் டி.என்.ஏ மூலக் கூறாகக் (molecule) குறிப்பிடப்படுகின்றன. ஓர் ஏணியை முறுக்கியது போன்று இதன் வடிவம் விளங்குகிறது. இரு செங்குத்தான நீண்ட புரியிழைகள், அமினோ அமில இணைகளான தொடர் படிகளால் இணைக்கப்படுகின்றன; இவை குறிப்பிட்ட சில வழிகளால் மட்டுமே இணைக்கப்பட முடியும். இந்த அமினோ அமில இணைகளின் அமைப்பு டி.என்.ஏ மூலக்கூறின் குறியீடாக விளங்குகிறது; இவ்விணைப்புகளின் குழுக்கள் மரபணுக்கூறுகளாக (genes) விளங்குகின்றன. ஒவ்வொரு டி.என்.ஏ மூலக் கூறும் ஒரு இலட்சம் முதல் 10 இலட்சம் அணுக்களால் கட்டமைக்கப்படுகிறது. ஒரு முழு மனிதத் தொகுதியில் 46 குரோமோசாம்கள் உள்ளன: இதில் 23 தாயின் முட்டை உயிரணுவிலிருந்தும் மற்ற 23 தந்தையின் விந்தணுவிலிருந்தும் வந்தவை. ஒரு உயிரணு பிரியும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குரோமோசோமிலுமுள்ள டி.என்.ஏவின் ஒவ்வொரு துண்டும் நகல் எடுக்கப்படுகிறது.

டி.என்.ஏ மூலக்கூறு மிக நீண்டது, மென்மையானது; ஸ்பேகெட்டி (spaghetti) என்னும் இத்தாலியத் தின்பண்ட நூலிழையின் 5 மைல் நீள அளவுக்கு இது அமையும்.

கண்ணின் நிறத்தைத் தீர்மானிப்பது எது?

கண்ணின் நிறத்தைத் தீர்மானிப்பதில் ஒன்றுக்கு மேற்பட்ட மரபணு (gene) காரணமாக அமைகிறது; ஆனால் பழுப்பு நிறம் ஊதா நிறத்தை விட விஞ்சி நிற்கிறது எனலாம். இருவரில் ஒருவர் பழுப்பு நிறக் கண்களுக்கான இரண்டு மரபணுவையும், மற்றவர் ஊதா நிறக் கண்களுக்கான இரண்டு மரபணுவையும் கொண்டிருந்தால் அவர்களுடைய குழந்தைகள் அனைவருமே பழுப்பு நிறக் கண்களையே கொண்டிருப்பர். ஆனால் இருவரும் பழுப்பு நிறக் கண்களைக் கொண்டிருந்து, ஒவ்வாத குறை ஊதா நிறத்திற்கான உயிரணுவைக் கொண்டிருந்தால் அவர்களுக்கு மூன்று பழுப்பு நிறக் கண்களுடனான குழந்தைகளுக்கு ஒரு ஊதா நிறக் கண்களுடனான் அ குழந்தை பிறக்கும்.

பறக்கும் ஈ ஒவ்வொரு வினாடியிலும் 200 படிவங்களைப் (images) பிரித்துணரும் ஆற்றல் வாய்ந்தது. திரைப்படம் அல்லது தொலைக்காட்சியைத் தொடர்ச்சியான நிலை படிமங்களாகவே அது பார்க்கிறது. இதனால்தானோ என்னவோ ஈக்கள் தொலைக்காட்சியைப் பார்ப்பதில்லை போலும் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:39 am

எலும்பின் உட்கூறுகள் யாவை?

எலும்பானது இருவகை எலும்புத் திசுக்களால் ஆனது. அதன் வெளிப்புறத்தில் எலும்புச் சவ்வு (periosteum) எனப்படும் ஒரு வகைத் தோல் பகுதி அமைந்துள்ளது. இதன் கீழே தடிமனான, அடர்த்தி மிக்க, ‘திடவடிவிலான எலும்பு’ எனப்படுகிற மெல்லிய அடுக்கு (layer) ஒன்று அமைந்துள்ளது. இதுவே கடினமான அல்லது உறுதியான எலும்புத் திசுவாகும். இதற்கு உட்புறம் எலும்பின் நடுப்பகுதியான வேறொரு எலும்புத் திசு பஞ்சு அல்லது தேன்கூடு அமைப்பில் அமைந்துள்ளது. இதில் இடைவெளிகளும், துளைகளும் உள்ளன; இதனை பஞ்சு அமைப்பிலுள்ள அல்லது குழிவுகளைக் கொண்ட எலும்புத் திசு என அழைப்பர். இது வெளிப்புறம் இருக்கும் எலும்புத் திசுவை விட மிகவும் மென்மையானது; இதன் இடைவெளிகளில் புதிய இரத்த அணுக்களை உருவாக்கும் நாளங்களும், பாகு போன்ற எலும்புச் சோறும் (marrow) அமைந்துள்ளன.

சாதாரண மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் சிலரிடம் 12 இணை விலா எலும்புகளுக்குப் (Ribs) பதிலாக 13 இணைகள் இருப்பதுண்டு; இதனால் அத்தகையோர்க்கு மொத்தத்தில் 208 எலும்புகள் இருக்கும்.

இதய இரத்த ஓட்டம் என்றால் என்ன?

முழு உடலின் இரத்த ஓட்ட அமைப்பின் ஒரு பகுதியாக விளங்குவதே இதய இரத்த ஓட்டமாகும். இதனால் இதயத்தின் திசுக்களுக்கு இரத்தத்தை அனுப்புதல், அங்கிருந்து இரத்தத்தை வடித்தல் ஆகியன நடைபெறுகின்றன. மனித இதயத்தில் பெருந்தமனியின் (aorta) பிறைவடிவ வால்வுகளுக்கு அப்பாலிருந்து இரண்டு இதயத் தமனிகள் (arteries) தோன்றுகின்றன; இதய விரிவின்போது (diastole) [இதயத்தின் அறைகளில் நீர்த்த இரத்தம் நிரம்புகிறது] வால்வுகளுக்கு மேலே ஏற்படும் பெருந்தமனி அழுத்தத்தால் இரத்தம் இதயத் தமனிக்குள் செலுத்தப்பட்டுப் பின்னர் தசை மண்டலத்துக்குள் செல்கிறது. உயிர்வளி/ஆக்சிஜன் நீக்கம் செய்யப்பட்ட இரத்தம் இதயத்தின் அறைக்குள் இதய நரம்புகள் வாயிலாகப் பின்னர் திரும்ப வந்து, மூவிதழ் (tricuspied) வால்வுக்குக் கீழேயுள்ள வலது வெண்ட்ரிக்கிலுள் வடிந்து செல்கிறது.

இதய இரத்த ஓட்டத்தின்போது, இரத்தத்திலிருந்து 70% முதல் 75% ஆக்சிஜன் பெறப்படுகிறது. இந்த ஆக்சிஜன் அளவானது பிற உறுப்புகளின் இரத்த ஓட்டத்துடன் ஒப்பிடுகையில் மிக அதிக அளவாகும். இதயத் தமனியால் தடை ஏதேனும் ஏற்படுமானால், ஆக்சிஜன் மிகுதியுள்ள இரத்தம் இதயத் திசுக்களுக்குச் செல்வது தடைபட்டு, பலருக்கும் இதயத் தசைகளின் ஒரு பகுதி செயலிழந்து போகும் வாய்ப்பு ஏற்படும்.

சில நேரங்களில் இதய வால்வுகள் கடினமாக அல்லது கசியும் தன்மை கொண்டதாக மாறுவதுண்டு. அத்தகைய வால்வுகளை, வேறு விலங்கின் திசுக்களால் செய்யப்பட்ட வால்வுகளைக் கொண்டு மாற்ற இயலும்; அல்லது உலோகம் அல்லது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட வால்வுகளைக் கொண்டும் மாற்றலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:40 am

இரத்தத்தில் அடங்கியுள்ளவை என்னென்ன?

இரத்த ஓட்டத்தின் போது உடல் முழுதும் பம்ப் (pump) செய்யப்படும் திரவமாக இரத்தம் விளங்குகிறது. நுரையீரலில் (lung) இருந்து பெறப்படும் உயர்வளியை (ஆக்ஸிஜன்) இரத்தம் எடுத்துச் செல்கிறது. உடலின் ஒவ்வொரு உயிரணுவும் (cell) உயிர்வாழ ஆக்சிஜன் தேவைப்படுவதால் அதனை இரத்தம் உடலின் எல்லா பாகங்களுக்கும் பகிர்ந்தளிக்கிறது.

இரத்தத்தில் பல உறுப்புகள் உள்ளன; அவற்றின் செயல்பாடுகளும் பலவாகும். இதில் மஞ்சள் நிற பிளாஸ்மா என்னும் திரவப் பொருள் ஒன்றுள்ளது; இதில் சிகப்பு மற்றும் வெள்ளை இரத்த அணுக்களுக்கும் தட்டையங்களும் (platelets) தொங்கவிடப்பட்டுள்ளன. தந்துகிகள் எனப்படுபவை பிளாஸ்மா திரவம் இரத்தத்திலிருந்து தப்பிச்செல்ல உதவுபவை. உயிரணுக்களும் பெரிய அளவு புரதங்களும் நாளங்களிலேயே விடப்படுகின்றன; இப்போது திரவம், இடைநிலைத் திரவமாக (interstitial fluid) விளங்குகின்றது (ஆதரவளிக்கும் பின்னணித் திரவம்). இது தந்துகிக்குத் திரும்பிச் செல்லும் அல்லது நிணநீர் அமைப்பில் இணைந்து விடும். மொத்த இடைவெளித் திரவத்தில் மூன்றில் ஒரு பங்கு இரத்தமாக விளங்கும்.

சிகப்பு மற்றும் வெள்ளை உயிரணுக்கள் எலும்புச் சோற்றில் அமைந்துள்ளன. இரத்தத்தின் கொள்ளளவில் 55% பிளாஸ்மா உள்ளது. இதில் 90% நீரும் 7% புரதங்களும் மீதமுள்ள 3% மூலக்கூறுகளும் ஆகும்.

இரத்தம் பொதுவாக கதகதப்பாக இருக்கும்; மைய வெப்ப அமைப்பில் உள்ள திரவம் போல் இரத்தம் விளங்குகிறது; உடலில் சுறுசுறுப்பான பகுதிகளாக விளங்கும் இதயம், தசைகள் போன்றவற்றிலிருந்து வெப்பத்தை உறிஞ்சி, தோல் போன்ற குளிர்ந்த பகுதிகளுக்கு அவ்வெப்பத்தை இரத்தம் பரவச் செய்கிறது.

இரத்த உறைவு (Blood clotting) என்பது என்ன?

உங்கள் உடலின் எப்பகுதியிலாவது வெட்டு அல்லது காயம் ஏற்பட்டால் அங்கிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறுவதைத் தடுக்கவே இரத்த உறைவு நிகழ்கிறது. இரத்த உறைவு என்பது இரத்தத்திலுள்ள பொருட்களால் ஏற்படுவதே ஆகும். தட்டயங்கள் எனப்படும் சின்னஞ்சிறு பொருட்களுடன் இவை இணைந்து மெல்லிய வலை போன்ற அமைப்பு உருவாகிறது. இவை காயம் ஏற்பட்ட இடத்திலிருந்து இரத்தம் வெளியேறாமல் தடுக்கின்றன. காயம்பட்ட இடத்தில் விரைந்து புதிய உயிரணுக்கள் உருவாகி சேதமடைந்த திசுக்களுக்கு மாற்றாக அமைகின்றன. உறைவுற்ற இப்பொருள் பொருக்காக (scab) மாறி அதுவும் கீழே விழுந்து, வெட்டுப்பட்ட அல்லது காயம் ஏற்பட்ட இடத்தில் புதிய தோல் உண்டாகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:41 am

நிணநீர் அல்லது வடிநீர் (Lymph) என்பது என்ன?

உடலின் முக்கிய தாக்கு விசை அமைப்பே நிணநீர் அல்லது வடிநீர் அமைப்பாகும். புண் போன்றவற்றில் இருந்து கசியும் ஒருவகை நீர் இது. இரத்த அமைப்பைப் போன்று இதுவும் உடல் முழுதும் திரவத்தைக் கொண்டு செல்லும் நாளங்களின் ஒரு தொகுதி. நிணநீரில் சிறப்பு இரத்த வெள்ளை அணுக்கள் (lymphocytes) உள்ளன. இவை கிருமிகளை எதிர்த்து நச்சுகளுடன் போராடும் நோய் எதிர்ப்புப் பொருட்களை (antibodies) உருவாக்குகின்றன. இது கீழ்க்கண்டவாறு பணியாற்றுகிறது:

இத்திரவம் தந்துகியில் (capillary) இருந்து வெளியேறி சிரை (vein) அல்லது மிகச் சிறிய மெல்லிய சுவர்ப்பகுதியுடனான நிணநீர் நாளத்துள் (vessel) செல்கிறது. இந்நாளங்கள் ஒன்றிணைந்து குழாய்களாக மாறி இறுதியில் பெருந்தமனிக்குப் (aorta) பக்கத்தில் செல்லும் மார்பக நிணநீர்க் குழலை (thoracic duct) அடைகிறது. இக்குழல் பெருஞ்சிரையின் (vena cava) முக்கிய கிளைகளுள் ஒன்றில் இணைகிறது. நிணநீர் ஒரு திசையில் மட்டுமே செல்லுமாறு வால்வுகள் பார்த்துக்கொள்கின்றன. நிணநீர்ச் சுரப்பிகள் (glands) உடல் முழுதும் நிணநீர் நாளங்கள் இணையுமிடத்தில் காணப்படுகின்றன.

குரல் வளை (Voice Box) என்பது என்ன?

காற்று நமது குரல் நாண்களில் (vocal cords) விசையை ஏற்படுத்தி அதிரச் செய்வதால்தான் நம்மால் ஒலியை ஏற்படுத்த இயலுகிறது. குரல் நாண்கள் குருத்தெலும்பின் (cartilage) இரண்டு ரப்பர் பேண்டுகளைப் போன்று மிடறினுள் (larynx) அமைந்துள்ளன. வாயின் இப்பகுதியே குரல் வளை (voice box) எனப்படுகிறது. இது மூச்சுக் குழலின் (wind pipe) மேற்பகுதியில் உள்ளது; தொண்டையின் வெளிப்பகுதியில் ஒரு முட்டை போன்று (lump) விளங்குகிறது; இதனை குரல் வளை மணி அல்லது ஆதாமின் ஆப்பிள் (Adam’s apple) என அழைக்கின்றனர்.

மிடறின் தசைப்பகுதிகள் நாண்களின் வடிவத்தை மாற்றுவதால்தான் பல்வேறு ஒலிகள் எழும்புகின்றன. நாண்கள் ஒன்றிணைந்து இருக்கும்போது குறைந்த அளவிலான ஒலியும் (low pitch) ஒன்றிலிருந்து ஒன்று விலகி இருக்கும்போது பெரிய அளவிலான ஒலியும் உண்டாகின்றன. காற்று கடினமாக வெளியேற்றப்படும்போது உரத்த ஒலி எழுப்பப்படுகிறது. தொண்டையின் தசைகள், வாய் மற்றும் உதடு ஆகியவை ஒன்றிணைந்து பயன்படும்போது ஒலிகள் சொற்களாக மாறுகின்றன.

ஒருவன் வயதில் முதிர்ச்சியடையும் (puberty) போது அவனது குரல் “உடைந்து (breaks)” போகிறது என்கிறோம். டெஸ்டோஸ்டெரோன் எனப்படும் ஆண் ஹார்மோனின் விளைவினாலும் குரல் நாண்கள் நீளமாவதாலும் மிடறு விரிவடைகிறது. இதுவே அதற்கான காரணம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:41 am

நுரையீரல்களுள் (Lungs) என்ன உள்ளது?

நமக்கு இரண்டு நுரையீரல்களும் மார்பின் இரு பக்கங்களில் காற்று புகாத பெட்டி போன்ற அமைப்புகளுக்குள்ளே அமைந்துள்ளன. நமது விலா எலும்புகளும் (ribs) தசைகளும் ஒன்றிணைந்து உதரவிதானம் (diaphragm) எனும் சவ்வு போன்ற அமைப்புடன் சேர்ந்து அப்பெட்டி போன்ற அமைப்பு உருவாகிறது.

நுரையீரல்களின் உள்ளே தந்துகிகளால் சூழப்பட்ட சின்னஞ்சிறு கண்ணறைகள் (alveoli) அமைந்துள்ளன. ஆக்சிஜனும், கார்பன் டை ஆக்சைடும் அவற்றினூடே கடந்து செல்லும் அளவுக்கு தந்துகிகள் மற்றும் கண்ணறைகளின் சுவர்ப்பகுதிகள் மிக மெல்லியதாக அமைந்துள்ளன. வளர்ந்த ஒருவரின் கண்ணறைகளின் மொத்தப் பரப்பளவு சுமார் 70 சதுர மீட்டர் அளவுக்கு இருக்கும். மேலும், சுவாசிக்கும் அமைப்பானது புதிய காற்றை இரத்தத்துக்கு மிக அருகில் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூச்சை உள்ளே இழுக்கும்போது காற்று நுரையீரலுள் நிரம்புகிறது; மூச்சை வெளிவிடும் போது அக்காற்று வெளியே தள்ளப்படுகிறது. நுரையீரல்கள் மேலும் கீழும் விரிவடைந்து பலூன்களைப்போல் செயல்படுகின்றன; ஆயினும் அவை வெற்றுப் பைகளைப்போல் அமைந்திருக்கவில்லை. திசுக்கள், நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் போன்ற மென்மையான உறுப்புகள் அவற்றினுள்ளே இருக்கின்றன.

மீன் போன்ற நீரினுள்ளே வாழும் உயிரினங்களுக்கு, நுரையீரல்களுக்குப் பதிலாக செவுள்கள் (gills) எனப்படுபவை சுவாசிக்கும் உறுப்புகளாக அமைந்துள்ளன. நீருள்ளிருந்து அவை ஆக்சிஜனை உட்கொள்ளும். நாம் நீருள் மூழ்கி இருக்கும்போது ஆக்சிஜன் தொட்டி இல்லாவிடில் நம் நுரையீரல் முழுதும் நீர் நிரம்பி தண்ணீருக்குள் மூழ்கி விடுவோம்.

மூச்சுக்குழாய் அழற்சி (Bronchitis) என்றால் என்ன?

மூச்சுக்குழாய் (Bronchi) வழியே சுவாசிக்கும் காற்று நுரையீரல்களுக்குள் செல்கிறது. மூச்சுக்குழாய்களில் முழுமையாகவோ அல்லது அவற்றின் பகுதியிலோ ஏற்படும் அழற்சியே மூச்சுக்குழாய் அழற்சி எனப்படுகிறது. மூச்சுக்குழாய்க்கு உள்ளே காற்று நுழையும்போது, அதிலுள்ள நுண்ணுயிரிகளை மற்றும் பிற அயல்பொருட்களை நீக்குவதற்கு மூச்சுக்குழாய்ச் சுவர்களின் உயிரணுக்களில் அமைந்துள்ள மிக நுண்ணிய கண்ணிமை முடி போன்ற அமைப்புகளான இழைகள் (cilia) பயன்படுகின்றன. இந்த இழைகள் அலைகளைப் போன்று அசைவுற்று அயல்பொருட்களை மூச்சுக்குழாயின் மேற்புறம் மற்றும் மிடறுப் பகுதிகளுக்குள் பெருக்கித் தள்ளுகின்றன. இதனால் ஒருவகை உறுத்தல் (irritation) ஏற்பட்டு மூச்சுக்குழாய்ச் சுவர்ப் பகுதியிலுள்ள சுரப்பிகளில் தடிமனான கோழை அல்லது சளி (mucus) உருவாகி அயல்பொருட்களை நீக்குவதற்கு உதவிபுரிகிறது. அவ்வாறு சுரக்கும் சளி போன்ற பொருள் மூச்சுக் குழாய் சுவர்ப் பகுதியின் நரம்பு முனைகளைத் தூண்டி இருமலை உண்டாக்கி அயல் பொருட்களை வெளித்தள்ளுகின்றது.

தீவிரமான மூச்சு அழற்சியை ஒரு குறிப்பிட்ட நோய் என்பதை விட, பிற பொருட்களால் ஏற்படும் ஒரு நிகழ்வு எனலாம். மூச்சுத் தொற்றுகளுக்குக் காரணமான நச்சு நுண்ணுயிரிகளால் (viruses) மிகச் சாதாரணமாகத் தோன்றும் சளிப்பு அல்லது தடுமன் ஏற்பட இது காரணமாக அமைகிறது.

நுரையீரல்களைத் தூய்மைப்படுத்தும் இயற்கைத் தொழிநுட்பத்தை “புகைபிடித்தல்” சேதப்படுத்தி விடுகிறது. மேலும், நுரையீரல்களில் உள்ள உயிரணுக்களிலும் நச்சுத் தன்மையை உருவாக்கி விடுகிறது. எனவே புகைபிடிப்பவர்களுக்கு மூச்சுக்குழாய் அழற்சி அடிக்கடி தோன்றுகிறது எனலாம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:42 am

இன்சுலின் என்பது என்ன?

இன்சுலின் என்பது கணையத்தினால் (pancreas) உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன். இன்சுலினின் முக்கிய நோக்கம் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை இயல்பாக வைத்திருப்பதாகும்.

ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு மிகுதியானால், கணைய உயிரணுக்கள் (Islets of Langerhans) இரத்த ஓட்டத்தில் இன்சுலினை வெளிப்படுத்தும். இதனால் கார்டிசோன் (cortisone) மற்றும் அட்ரினலின் (adrenalin) போன்ற ஹார்மோன்களின் விளைவுகளை எதிர்த்து இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிகுதியாகும். இன்சுலின் தனது விளைவினால் சர்க்கரையை இரத்த ஓட்டத்திலிருந்து உடலின் உயிரணுக்களில் ஓர் எரிபொருளாகப் பயன்படுத்த வழிவகுக்கிறது.

இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற 21 உடலுறுப்புகளைத் தற்போது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் மாற்றிப் பொருத்த இயலும். இவற்றுள் சிறுநீரக அறுவை சிகிச்சை சாதாரணமாக மேற்கொள்ளப்படுகிறது. சிறுநீரகங்களின் முக்கிய பணி இரத்தத்தில் இருந்து கழிவுப் பொருட்களை வெளியேற்றுவதாகும்.

கணையம் (pancreas) என்பது என்ன?

உடலிலுள்ள மிகப் பெரிய சுரப்பிகளுள் கணையம் ஒன்று; உண்மையில் இது ஒன்றில் அடங்கிய இரு சுரப்பிகளாகும். ஏறக்குறைய இதன் உயிரணுக்கள் அனைத்தும் சுரத்தல் (secretion) செயலுடன் தொடர்புடையனவே. அடிவயிற்றின் மேற்பகுதியில் குறுக்கே, முதுகெலும்புக்கு (spine) முன்னர் மற்றும் பெருந்தமனிக்கும் (aorta) பெருஞ்சிரைக்கும் (vena cava) மேற்புறமாக கணையம் அமைந்துள்ளது. கணையத்தின் தலைப்பகுதியில் முன்சிறுகுடல் (duodenum) சுற்றிக் கவிந்துள்ளது. கணையத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளாக விளங்குபவை ஊனீர் சுரப்பு இழைகளாகும் (acini); இவை சிறு நாளத்தைச் (duct) சுற்றியுள்ள சுரக்கும் உயிரணுக்களின் திரட்சிகளாகும். ஒவ்வொரு நாளமும் பிற ஊனீர் சுரப்பு இழைகளின் நாளங்களுடன் இணைந்து கணையத்தின் நடுப்பகுதியில் செல்லும் முக்கிய நாளத்துடன் இணைகின்றன. கணைய உயிரணுக்கள் என்பவை உடலின் சர்க்கரை அளவை நிலையான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்குக் காரணமான இன்சுலினை சுரப்பவையாகும். இந்த உயிரணுக்களே குளுகோன் எனப்படும் ஹார்மோனை உற்பத்தி செய்து இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்காமல் உயர்த்துவதற்கும் காரணமாக அமைபவை. கணையம் மற்றுமொரு முக்கியமான செயல்பாட்டுக்கும் காரணமாக விளங்குகிறது; செரிமானத்திற்குத் தேவைப்படும் நொதிகளை (enzymes) சுரந்து உடலின் செரிமானச் செயலுக்கும் முக்கிய பங்காற்றுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:42 am

நமது செரிமான அமைப்பின் (Digestive system) செயல்பாடு என்ன?

நாம் உண்ணும் பொருட்கள் அனைத்தும் துண்டு துண்டாக நறுக்கப்பட்டு, துகள்களாக மாற்றப்பட்டு அவற்றிலுள்ள சத்துப் பொருட்கள் மற்றும் நன்மை தரும் பொருட்கள் ஆகியன இரத்தத்திலும் உடலின் உயிரணுக்களிலும் சேர்ந்து ஆற்றலாக மாற்றம் பெறுகின்றன. இவ்வாறு உணவுப் பொருட்கள் நறுக்கப்படுவதும் துணுக்குகளாக்கப் படுவதும் நமது செரிமான அமைப்பில் அல்லது குடல் பகுதியில் நடைபெறுகின்றன.

உணவுப் பண்டத்தை முதன்முதலாக வாயில் கடிக்கும்போதே செரிமானப் பணி துவங்கி விடுகிகிறது. வாயில் உணவு துண்டுகளாக்கப்பட்டு பற்களால் நன்கு மென்று அரைக்கப் பட்டு உமிழ்நீருடன் கலக்கிறது. பின்னர் நாவினால் இவ்வுணவுப் பண்டம் பிசையப் பெற்று சிறுசிறு உருண்டைகளாகிறது. இவ்வுருண்டைகள் உணவுக் குழாய் மூலம் வயிற்றுக்குள் தள்ளப்படுகின்றன. பின்னர் இவை சிறிது சிறிதாக வயிற்றிலிருந்து சிறுகுடலுக்குள் செல்கின்றன. இங்குதான் உணவு பெருமளவு செரிமானமடைகிறது. செரிமானமாகாத உணவுப்பண்டம் பெருங்குடலுள் சென்று அதிலுள்ள நீர்மப் பொருள் பிரித்தெடுக்கப்படுகிறது. மீதமுள்ளது குடலின் இறுதிப் பகுதியான மலக்குடலைச் சென்றடைகிறது.

நமது செரிமான அமைப்பு வாயில் துவங்கி மலக்குடல் வரை நீளும் நீண்டதொரு குழாயாகும். இதன் நீளம் வளர்ந்த மனிதருக்கு சுமார் 9 மீட்டர். உணவு இந்நீண்ட பகுதியைக் கடக்க 10 முதல் 20 மணி நேரம் பிடிக்கிறது.

வயிற்றின் உட்பகுதியில் இருப்பவை என்ன?

நமக்கு வயிறு என்னும் உடலுறுப்பு இல்லாவிடில் ஒவ்வொரு நாளும் இரண்டு அல்லது மூன்று முறை முக்கிய உணவை உட்கொள்வது மட்டுமே போதாது. சிறு சிறு அளவில் உணவை ஏராளமான முறை உட்கொள்ள வேண்டியிருக்கும். வயிறு உணவைச் சேமித்து வைத்துக்கொள்ளும் பெரியதோர் உணவுப்பை போன்று விளங்குகிறது. ஒரு முழுமையான உணவை ஏற்றுக்கொள்ளும் வகையில் வயிறு விரிவடையக் கூடியது. பின்னர் வயிற்றின் சுவர்ப் பகுதியிலுள்ள தசைகள் உணவைப் பிசைவதற்கேற்ப சுருங்குகின்றன. இதற்கிடையில் வயிற்றுப் பகுதியிலுள்ள சின்னஞ்சிறு சுரப்பிகள் செரிமான வேதிப் பொருட்களைச் சுரக்கும்; உணவை அரிக்கக்கூடிய ஆற்றல் மிக்க அமிலங்கள் மற்றும் சத்துப் பொருட்களைப் பிரிக்கக்கூடிய நொதிகள் (enzymes) ஆகியவை இவ்வேதிப் பொருட்களில் அடங்கும். இத்தகைய இயற்பியல் மற்றும் வேதியியல் தாக்கங்களால் சில மணி நேரம் கழித்து உணவானது கூழ் போன்ற பொருளாக ஓரளவுக்குச் செரிமானமடைகிறது. சுமார் இரண்டு முதல் நான்கு மணி நேரம் கழித்து ஓரளவு செரிமானமடைந்த உணவு செரிமான அமைப்பிற்கு உட்பட்டு சிறுகுடலுக்குள் அடுத்தபடியாகச் செல்கிறது.

சாதாரண எக்ஸ் கதிர் ஒளிப்படத்தின் வாயிலாக செரிமான அமைப்பின் பகுதிகளை நன்கு காண இயலாது. இருப்பினும் பேரியம் என்னும் பொருளால் எக்ஸ் கதிர் ஒளிப்படங்களை வெண்ணிறத்தில் காண முடியும். இந்த "பேரியம் உணவை" உண்டால் அழற்சிப் புண்கள், கூடுதலாக வளர்ந்த பகுதிகள் மற்றும் தடைகள் ஆகியவற்றைக் கண்டறிய இயலும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 22, 2009 1:43 am

ஈரலின் (Liver) பணி என்ன?

உடலில் அதிகமாகப் பணிபுரியும் உறுப்புகளுள் ஈரலும் ஒன்று. வயிறு, குடல்கள், இதயம் அல்லது தசைகள் போன்று இது நெளிவதோ புரள்வதோ இல்லை. இதன் செயல்பாடுகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை; ஈரல் உடலின் மிகப் பெரிய உள் உறுப்பாக விளங்குகிறது; இதன் எடை 2-3 பவுண்டுகளாகும். அடி வயிற்றின் மேல் வலப் பகுதியில் நிறைந்திருப்பது இது. உடல் வேதியியலில் பல்வேறு வகையான, முக்கியமான, குறைந்தது 500 பணிகளை இவ்வுறுப்பு கொண்டுள்ளது.

ஈரலில் தனிச் சிறப்பு வாய்ந்த இரத்த நாளம் உள்ளது; இதனைக் கல்லீரல் சிரை (hepatic portal vein) என்பர். இது இதயத்திலிருந்து நேரடியாக வரவில்லை எனினும், இரத்தத்தை வயிறு, குடல்கள் மற்றும் மண்ணீரல் (spleen) ஆகியவற்றிற்கு எடுத்துச் செல்கிறது. இந்த இரத்தத்தில் ஊட்டப் பொருட்கள் அதிகமாக உள்ளதால் உடலாற்றலுக்கு பெரிதும் காரணமாக அமைகிறது; இரத்தத்தால் கொண்டுவரப்படும் பல ஊட்டப்பொருட்களை ஈரல்தான் செயல்படுத்துகிறது. இது பலவற்றைக் குறிப்பாக சர்க்கரை, இரும்புச் சத்து, பி12 வைட்டமின் போன்ற கனிமங்கள் ஆகியவற்றைச் சேமித்து வைக்கிறது. மேலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களையும் இது நீக்குகிறது.

ஈரலின் உறுப்புத் தடிப்புக் கோளாறு (cirrhosis) என்பது நீக்க முடியாத நோயாகும்; இந்நோய்க்கு முக்கிய காரணமாக விளங்குவது மிகுதியாக மது அருந்துவதேயாகும்.

பித்தநீர் (Bile) என்பது என்ன?

ஈரலின் அடிப்பகுதியில், வலப்புறத்தில் அமைந்திருப்பது பித்தநீர்ப்பை (gall bladder) ஆகும். மஞ்சள் நிறமுள்ள பித்தநீர் சேமித்து வைக்கப்படும் சிறிய அளவிலான பை இது. பித்தநீர் எனப்படுவது கொலஸ்ட்ரால், பித்த உப்புகள் மற்றும் நிறமிகள் (pigments) ஆகியவை கலந்த ஒரு திரவம். இதில் ஒரு பகுதி ஈரலிலும் மற்றுமொரு பகுதி பித்தநீர்ப் பையிலும் நாம் உணவு உண்ணும் வரை தங்கியிருக்கும். பின்னர் பித்தநீர் ஈரலிலிருந்தும் பித்தநீர்ப் பையிலிருந்தும் பித்தநீர் நாளம் எனப்படும் முக்கிய குழாய்க்குச் சென்று அங்கிருந்து சிறுகுடலுள் போய்ச் சேரும். பித்தநீர் என்பது ஈரலில் இருந்து வெளிப்படும் ஒரு கழிவுப் பொருளாகும். ஆனால் இது உணவு செரிமானத்திற்கு உதவி புரிகிறது. இதிலுள்ள கனிம உப்புகள் சிதைவுற்று குடலுள் இருக்கும் பொருட்களைச் சின்னஞ்சிறு துணுக்குகளாக்கிக் குழம்பு நிலைக்கு மாற்றுகின்றன.

சில சமயங்களில் பித்தநீர்ப்பையில் கடினமான பொருட்கள் சேர்ந்து கொட்டை போல் மாறிவிடுவதுண்டு. இவை பித்தநீர்ப் பையிலுள்ள கற்கள் (gall stones) என அழைக்கப்படுகின்றன. முக்கியமாக கொலஸ்ட்ரால், கால்சியம் போன்ற பொருட்களால் இக்கற்கள் உருவாகின்றன. லேசர் அறுவை சிகிச்சை மூலம் இக்கற்களை மருத்துவர்கள் அகற்றுகின்றனர்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக