புதிய பதிவுகள்
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (97 - 100 )
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (37 - 39 )
37 . வாங்க, ஆட்டோவில் போகலாம்!
நம்ம முத்து மக்களே!
ஆட்டோ நண்பர் வந்தாரே!
கூப்பிட்ட உடனே
வீட்டின்முன் நிற்பாரே!
பள்ளிக்கூடம் கொண்டுபோய்
நம்மையும் சேர்ப்பாரே!
பள்ளி முடிந்து வீட்டுக்கும்
கொண்டுவந்து சேர்ப்பாரே!
ஆட்டோ நண்பரே!
நம்ம ஆட்டோ நண்பரே!
38 .வருதே இரயிலு!
வருதே இரயிலு!
வருதே இரயிலு!
இருப்புப் பாதையில்
வருதே இரயிலு!
சனங்கள் நிரம்பிய
அழகிய இரயிலு இது!
புகையை உமிழும்
நல்ல இரயிலு இது!
மக்கள் மெச்சும்
அழகான இரயில் இது!
மக்கள் விரும்பும்
உன்னத இரயில் இது!
கூகூ…. என்று
கூவும் இரயில் இது!
மக்கள் மெச்சும்
அழகு இரயில் இது!
வருதே இரயிலு!
வருதே இரயிலு!
39 . அழகு வண்ணங்கள் !
அழகு அழகான வண்ணங்கள்!
வாவா அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்!
காக்கையின் நிறம்பார் அதுவே
கறுப்பு கறுப்பு!
கோழியின் நிறமே சிவப்பு!
சிவப்பு! அது சிவப்பு!
மரங்கள் செடிகள் இவற்றின் நிறம்
பச்சை ! அது பச்சை!
மேகத்தின் நிறம் என்ன?
வெள்ளை! அது வெள்ளை!
பூக்களின் நிறமே மஞ்சள்!
மஞ்சள் ! அது மஞ்சள்!
ஆரஞ்சுப் பழத்தின் நிறத்தைப் பார்!
ஆரஞ்சு! அது ஆரஞ்சு!
வானத்தின் நிறம்தான் நீலம்
நீலம் ! அது நீலம்!
காமன் வில்லின் நிறம் பார்!
ஏழுவண்ணம்! அது ஏழுவண்ணம்!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம் :
infobells.com & KidsTVKannada)
***
37 . வாங்க, ஆட்டோவில் போகலாம்!
நம்ம முத்து மக்களே!
ஆட்டோ நண்பர் வந்தாரே!
கூப்பிட்ட உடனே
வீட்டின்முன் நிற்பாரே!
பள்ளிக்கூடம் கொண்டுபோய்
நம்மையும் சேர்ப்பாரே!
பள்ளி முடிந்து வீட்டுக்கும்
கொண்டுவந்து சேர்ப்பாரே!
ஆட்டோ நண்பரே!
நம்ம ஆட்டோ நண்பரே!
38 .வருதே இரயிலு!
வருதே இரயிலு!
வருதே இரயிலு!
இருப்புப் பாதையில்
வருதே இரயிலு!
சனங்கள் நிரம்பிய
அழகிய இரயிலு இது!
புகையை உமிழும்
நல்ல இரயிலு இது!
மக்கள் மெச்சும்
அழகான இரயில் இது!
மக்கள் விரும்பும்
உன்னத இரயில் இது!
கூகூ…. என்று
கூவும் இரயில் இது!
மக்கள் மெச்சும்
அழகு இரயில் இது!
வருதே இரயிலு!
வருதே இரயிலு!
39 . அழகு வண்ணங்கள் !
அழகு அழகான வண்ணங்கள்!
வாவா அவற்றைத் தெரிந்து கொள்ளலாம்!
காக்கையின் நிறம்பார் அதுவே
கறுப்பு கறுப்பு!
கோழியின் நிறமே சிவப்பு!
சிவப்பு! அது சிவப்பு!
மரங்கள் செடிகள் இவற்றின் நிறம்
பச்சை ! அது பச்சை!
மேகத்தின் நிறம் என்ன?
வெள்ளை! அது வெள்ளை!
பூக்களின் நிறமே மஞ்சள்!
மஞ்சள் ! அது மஞ்சள்!
ஆரஞ்சுப் பழத்தின் நிறத்தைப் பார்!
ஆரஞ்சு! அது ஆரஞ்சு!
வானத்தின் நிறம்தான் நீலம்
நீலம் ! அது நீலம்!
காமன் வில்லின் நிறம் பார்!
ஏழுவண்ணம்! அது ஏழுவண்ணம்!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம் :
infobells.com & KidsTVKannada)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
'மொழிபெயர்ப்புக் கவிதைகள்' பகுதியில் எனது ‘கன்னடக் குழந்தைப் பாடல்கள்’ வரிசையைக் காணவில்லையே?
இரமணியன் கவனிக்கவும்!
இரமணியன் கவனிக்கவும்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (40 - 42 )
40 . தாத்தாவின் பண்ணை !
எங்கள் அன்பான தாத்தா உடைய!
அழகான பண்ணை!
அருமையான பண்ணை!
ஹொய்யா! ஹொய்யா! ஹொய்யா!
பிராணிகள் துள்ளும் பண்ணை!
அவை அங்குமிங்கும்
ஓடிவரும் அழகான பண்ணை!
பசுவும் கன்றும் அங்கும் இங்கும்
அன்புடன் உலாவும் பண்ணை!
கொக்கரக்கோ என்றே கூவும்
கோழி நடக்கும் காட்சி உண்டு!
குவாக்! குவாக்! சத்தத்துடனே
வாத்து வரும் அழகான பண்ணை!
குதிரையும் குட்டியும் ஓடும் பண்ணை!
அவை அங்கும் இங்கும்
தாவும் பண்ணை!
ஆட்டுக் குட்டிகள் நீர் குடிக்கும்
அழகான பண்ணை!
அருமையான பண்ணை!
ஹொய்யா ! ஹொய்யா! ஹொய்யா!
41 . நாய்க் குட்டி !
நாய்க் குட்டி! நாய்க் குட்டி!
தின்ன வேண்டுமா?
தின்ன வேண்டும் தண்ணீர் வேண்டும்
எல்லாம் வேண்டும்!
நாய்க் குட்டி உனக்குத்
தின்ன ஏன் வேண்டும்?
தின்னுபுட்டு வீட்டைக் காக்கவேண்டும்!
நாய்க் குட்டி , கள்ளன் வந்தால்
என்ன செய்வாய்?
லொள் லொள் பௌ பௌ என்றே
கூவி எழுப்புவேன்!
நாய்க்குட்டி உனக்குத் தின்ன என்னவேண்டும்?
ஜிலேபியுடன் லட்டு ஒன்று
கொடுத்தால் போதுமே!
42 . நான் ஒரு மாயாவி !
வானில் இருந்து தேவதை வந்தது!
மாயக் கோலை எனக்குத் தந்தது !
இப்போநான் வேண்டியதைப் பெறுவேனே!
பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளைக்
கொண்டுவருவேனே!
அவற்றையுமே பிடித்துப் பிடித்து
விளையாடுவேனே!
வண்ண வண்ணப் பலூன்களைக்
கொண்டு வருவேனே!
ஊதி ஊதி நானும் அவற்றை
உடைத்து மகிழ்வேனே!
பூனைக் குட்டி ஒன்றையுமே
வரவழைப்பேனே!
மியாவ் மியாவ் என்று கத்தி
விளையாடுவேனே!
மாயக் கோலை ஆட்டியேதான்
நானும் மகிழ்வேனே!
அப்பா அம்மா சண்டை போடாமல்
என்னோடு விளையாடச் செய்வேனே
அப்பா அம்மா அன்பாக இருந்தால்
விளையாட எனக்கு எதுவும் வேண்டாமே!
எனக்கு விளையாட எதுவும் வேண்டாமே!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னட ஒலி மூலம் :
infobells.com & KidsTVKannada)
***
40 . தாத்தாவின் பண்ணை !
எங்கள் அன்பான தாத்தா உடைய!
அழகான பண்ணை!
அருமையான பண்ணை!
ஹொய்யா! ஹொய்யா! ஹொய்யா!
பிராணிகள் துள்ளும் பண்ணை!
அவை அங்குமிங்கும்
ஓடிவரும் அழகான பண்ணை!
பசுவும் கன்றும் அங்கும் இங்கும்
அன்புடன் உலாவும் பண்ணை!
கொக்கரக்கோ என்றே கூவும்
கோழி நடக்கும் காட்சி உண்டு!
குவாக்! குவாக்! சத்தத்துடனே
வாத்து வரும் அழகான பண்ணை!
குதிரையும் குட்டியும் ஓடும் பண்ணை!
அவை அங்கும் இங்கும்
தாவும் பண்ணை!
ஆட்டுக் குட்டிகள் நீர் குடிக்கும்
அழகான பண்ணை!
அருமையான பண்ணை!
ஹொய்யா ! ஹொய்யா! ஹொய்யா!
41 . நாய்க் குட்டி !
நாய்க் குட்டி! நாய்க் குட்டி!
தின்ன வேண்டுமா?
தின்ன வேண்டும் தண்ணீர் வேண்டும்
எல்லாம் வேண்டும்!
நாய்க் குட்டி உனக்குத்
தின்ன ஏன் வேண்டும்?
தின்னுபுட்டு வீட்டைக் காக்கவேண்டும்!
நாய்க் குட்டி , கள்ளன் வந்தால்
என்ன செய்வாய்?
லொள் லொள் பௌ பௌ என்றே
கூவி எழுப்புவேன்!
நாய்க்குட்டி உனக்குத் தின்ன என்னவேண்டும்?
ஜிலேபியுடன் லட்டு ஒன்று
கொடுத்தால் போதுமே!
42 . நான் ஒரு மாயாவி !
வானில் இருந்து தேவதை வந்தது!
மாயக் கோலை எனக்குத் தந்தது !
இப்போநான் வேண்டியதைப் பெறுவேனே!
பறக்கும் வண்ணத்துப் பூச்சிகளைக்
கொண்டுவருவேனே!
அவற்றையுமே பிடித்துப் பிடித்து
விளையாடுவேனே!
வண்ண வண்ணப் பலூன்களைக்
கொண்டு வருவேனே!
ஊதி ஊதி நானும் அவற்றை
உடைத்து மகிழ்வேனே!
பூனைக் குட்டி ஒன்றையுமே
வரவழைப்பேனே!
மியாவ் மியாவ் என்று கத்தி
விளையாடுவேனே!
மாயக் கோலை ஆட்டியேதான்
நானும் மகிழ்வேனே!
அப்பா அம்மா சண்டை போடாமல்
என்னோடு விளையாடச் செய்வேனே
அப்பா அம்மா அன்பாக இருந்தால்
விளையாட எனக்கு எதுவும் வேண்டாமே!
எனக்கு விளையாட எதுவும் வேண்டாமே!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னட ஒலி மூலம் :
infobells.com & KidsTVKannada)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (43 - 45 )
43 . பொங்கல் வந்தது !
பொங்கல் வந்தது! பொங்கல் வந்தது !
வாங்க எல்லோரும் கொண்டாடுவோம் !
வீடெல்லாம் வெள்ளை அடித்து வைப்போம்!
வீட்டுமுன்னே வண்ணக் கோலம் போடுவோம்!
விளைச்சலை வீட்டுக்குக் கொண்டுவருவோம்!
சுத்திநின்று பூசை அதற்குச் செய்வோம்!
பொங்கல் வைத்துச் சூரியனை வணங்கி மகிழ்வோம்!
எருது பசுவை அலங்கரித்துக்
கரும்பு பொங்கலை உண்டு மகிழ்ந்து
பக்க வீடுகளுக்கும் கொடுத்து மகிழ்வோம்!
பொங்கல் வந்தது ! பொங்கல் வந்தது!
44 . இரயில் விளையாட்டு !
சிக்குப் புக்கு சிக்குப் புக்கு !
சிக்சிக் சிக்சிக் !
சிக்குப் புக்கு ! சிக்குப் புக்கு!
இரயில் வண்டி கண்டுள்ளோம்!
சிக்குப் புக்கு இரயிலைக் கட்டுவோம்!
முதலில் என்ன செய்ய வேண்டும்?
முதலில் தண்டவாளம் கட்டவேண்டும்!
இரயிலை எப்படித் தொடங்குவது?
முதலில் எஞ்சினை வைக்கவேண்டும்!
அதன் பின்னே போகிகளையும் வைக்கணும்!
இரயில் வண்டி கட்டுவோம்!
சிக்குப் புக்கு இரயிலைக் கட்டுவோம்!
வண்டியைப் பார்த்து எலிகள் வந்தன!
எலிகளை வண்டியில் ஏற்றுவோம்!
வண்டி போகுது சிக்குப் புக்கு
சிக்குப் புக்கு இரயிலை ஓட்டுவோம்!
சிக்குப் புக்கு சிக்குப் புக்கு!
45 . சிம்ம ராஜா !
சிம்மம்தான் காட்டின் ராஜா!
ஆனாலும் அதனால் பயமே இல்லை!
பிராணிகளின் அப்பா சிம்மம்தானே?
ஒவ்வொன்றையும் காப்பது சிம்மம்தானே?
நாம் ஆடுவதும் சுத்துவதும் –
பயமே இல்லை! நீரில்
நீந்துவதும் மரத்தில் ஏறுவதும்
எங்களுக்குச் சிரமமே இல்லை!
சிம்மம்தான் காட்டின் ராஜா!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்
முனைவர் சு. சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம் :
infobells.com)
***
43 . பொங்கல் வந்தது !
பொங்கல் வந்தது! பொங்கல் வந்தது !
வாங்க எல்லோரும் கொண்டாடுவோம் !
வீடெல்லாம் வெள்ளை அடித்து வைப்போம்!
வீட்டுமுன்னே வண்ணக் கோலம் போடுவோம்!
விளைச்சலை வீட்டுக்குக் கொண்டுவருவோம்!
சுத்திநின்று பூசை அதற்குச் செய்வோம்!
பொங்கல் வைத்துச் சூரியனை வணங்கி மகிழ்வோம்!
எருது பசுவை அலங்கரித்துக்
கரும்பு பொங்கலை உண்டு மகிழ்ந்து
பக்க வீடுகளுக்கும் கொடுத்து மகிழ்வோம்!
பொங்கல் வந்தது ! பொங்கல் வந்தது!
44 . இரயில் விளையாட்டு !
சிக்குப் புக்கு சிக்குப் புக்கு !
சிக்சிக் சிக்சிக் !
சிக்குப் புக்கு ! சிக்குப் புக்கு!
இரயில் வண்டி கண்டுள்ளோம்!
சிக்குப் புக்கு இரயிலைக் கட்டுவோம்!
முதலில் என்ன செய்ய வேண்டும்?
முதலில் தண்டவாளம் கட்டவேண்டும்!
இரயிலை எப்படித் தொடங்குவது?
முதலில் எஞ்சினை வைக்கவேண்டும்!
அதன் பின்னே போகிகளையும் வைக்கணும்!
இரயில் வண்டி கட்டுவோம்!
சிக்குப் புக்கு இரயிலைக் கட்டுவோம்!
வண்டியைப் பார்த்து எலிகள் வந்தன!
எலிகளை வண்டியில் ஏற்றுவோம்!
வண்டி போகுது சிக்குப் புக்கு
சிக்குப் புக்கு இரயிலை ஓட்டுவோம்!
சிக்குப் புக்கு சிக்குப் புக்கு!
45 . சிம்ம ராஜா !
சிம்மம்தான் காட்டின் ராஜா!
ஆனாலும் அதனால் பயமே இல்லை!
பிராணிகளின் அப்பா சிம்மம்தானே?
ஒவ்வொன்றையும் காப்பது சிம்மம்தானே?
நாம் ஆடுவதும் சுத்துவதும் –
பயமே இல்லை! நீரில்
நீந்துவதும் மரத்தில் ஏறுவதும்
எங்களுக்குச் சிரமமே இல்லை!
சிம்மம்தான் காட்டின் ராஜா!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்
முனைவர் சு. சௌந்தரபாண்டியன். கன்னட ஒலி மூலம் :
infobells.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (46 - 48 )
46 . எறும்பே ! எறும்பே!
எறும்பே! எறும்பே!
எங்கு இருக்கிறாய்?
ஏன் சும்மா உட்கார்ந்துள்ளாய்?
என்னிடம் வா உனக்கு நான்
வெல்லமும் சர்க்கரையும் தருவேனே!
உடலைப் பார்த்தால் சின்னது!
செய்யும் வேலையோ ரொம்பப் பெரியது!
உணவைச் சேமித்து வைக்கிறாய்!
தேவை வரும்போது பயன்படுத்துகிறாய்!
எறும்பே ! எறும்பே!
எங்கு இருக்கிறாய்?
47 . சைக்கிள்!
சைக்கிள்! சைக்கிள்! சைக்கிள்!
சிறுவர்கள் விரும்பும் சைக்கிள்!
வண்ணங்கள் அடித்த சைகிள்!
பளபளக்கும் சைக்கிள்!
சைக்கிள்!சைக்கிள்! சைக்கிள்!
இரண்டு பெடல் உள்ள சைக்கிள்!
மூன்று சக்கரம் கொண்ட சைக்கிள்!
முன்னும் பின்னும் ஓடும் சைக்கிள்!
ஓடி வருது சைக்கிள்!
வேகமா வழியை விடுவீரே!
48 . சின்னக் குருவி!
வாவா வா!
சின்னக் குருவி வாவா!
கடலைப் பொரி நான் தருவேன்!
வாவா வா சின்னக் குருவி!
அம்மா செய்யும் அவல்பொரி
அவள் எனக்குத் தந்தாளானால்
உனக்கு நான் தருவேன் குருவி!
குருவி! குருவி! சின்னக் குருவி!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னட ஒலி மூலம் :
infobells.com&KidsTvIndia)
***
46 . எறும்பே ! எறும்பே!
எறும்பே! எறும்பே!
எங்கு இருக்கிறாய்?
ஏன் சும்மா உட்கார்ந்துள்ளாய்?
என்னிடம் வா உனக்கு நான்
வெல்லமும் சர்க்கரையும் தருவேனே!
உடலைப் பார்த்தால் சின்னது!
செய்யும் வேலையோ ரொம்பப் பெரியது!
உணவைச் சேமித்து வைக்கிறாய்!
தேவை வரும்போது பயன்படுத்துகிறாய்!
எறும்பே ! எறும்பே!
எங்கு இருக்கிறாய்?
47 . சைக்கிள்!
சைக்கிள்! சைக்கிள்! சைக்கிள்!
சிறுவர்கள் விரும்பும் சைக்கிள்!
வண்ணங்கள் அடித்த சைகிள்!
பளபளக்கும் சைக்கிள்!
சைக்கிள்!சைக்கிள்! சைக்கிள்!
இரண்டு பெடல் உள்ள சைக்கிள்!
மூன்று சக்கரம் கொண்ட சைக்கிள்!
முன்னும் பின்னும் ஓடும் சைக்கிள்!
ஓடி வருது சைக்கிள்!
வேகமா வழியை விடுவீரே!
48 . சின்னக் குருவி!
வாவா வா!
சின்னக் குருவி வாவா!
கடலைப் பொரி நான் தருவேன்!
வாவா வா சின்னக் குருவி!
அம்மா செய்யும் அவல்பொரி
அவள் எனக்குத் தந்தாளானால்
உனக்கு நான் தருவேன் குருவி!
குருவி! குருவி! சின்னக் குருவி!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னட ஒலி மூலம் :
infobells.com&KidsTvIndia)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (49 - 51 )
49 . ஆசிரியர்!
பள்ளி மணி அடித்தது!
டிரிங்! டிரிங்! டிரிங்!
எல்லோரும் மௌனமாய் ஆனாரே!
உஷ்!உஷ்!உஷ்!
ஆசிரியர் வகுப்புக்கு வந்தாரே!
மாணவர்கள் குட்மார்னிங் சொல்லினரே!
ஆசிரியரும் மாணவர்க்குக்
காலை வணக்கம் சொன்னாரே!
பாடம் நடத்துவதும்
சந்தேகம் தீர்ப்பதும் செய்வாரே ஆசிரியர்!
சிறந்த மாணவரைப்
புகழ்ந்து கூறுவார் ஆசிரியர்
மாணவர் படித்து முன்னேற
ஏணியாய் இருப்பவரே ஆசிரியர்!
எதிர்கால நன்மைக்கு அடித்தளமாய்
இருப்பவரே ஆசிரியர்! ஆசிரியர்!
50 . பொம்மை !
சின்னச் சின்னப் பொம்மை!
சிங்காரப் பொம்மை!
சிவந்த வண்ணப் பொம்மை!
கண்ணைச் சுழற்றியே காட்டும் பொம்மை!
இரண்டு கை தட்டியே
சத்தம் போடும் பொம்மை!
சின்னச் சின்னப் பொம்மையே!
51 . குதிரை வண்டி!
கடபுட வண்டி குதிரை வண்டி!
குதிரைச் சத்தம்! வண்டியின் சத்தம்!
கடகட வண்டி குதிரை வண்டி!
சாட்டையைச் சுழற்றிய
அக்கணமே சட்டென்று
வேகமாய் ஓடும் வண்டி!
குதிரை வண்டி ஏறினால்
சுகமாய்ச் சவாரி போகலாம்!
ஹாய் ஹாய் ஹாய்!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னட ஒலி மூலம் :
infobells.com)
***
49 . ஆசிரியர்!
பள்ளி மணி அடித்தது!
டிரிங்! டிரிங்! டிரிங்!
எல்லோரும் மௌனமாய் ஆனாரே!
உஷ்!உஷ்!உஷ்!
ஆசிரியர் வகுப்புக்கு வந்தாரே!
மாணவர்கள் குட்மார்னிங் சொல்லினரே!
ஆசிரியரும் மாணவர்க்குக்
காலை வணக்கம் சொன்னாரே!
பாடம் நடத்துவதும்
சந்தேகம் தீர்ப்பதும் செய்வாரே ஆசிரியர்!
சிறந்த மாணவரைப்
புகழ்ந்து கூறுவார் ஆசிரியர்
மாணவர் படித்து முன்னேற
ஏணியாய் இருப்பவரே ஆசிரியர்!
எதிர்கால நன்மைக்கு அடித்தளமாய்
இருப்பவரே ஆசிரியர்! ஆசிரியர்!
50 . பொம்மை !
சின்னச் சின்னப் பொம்மை!
சிங்காரப் பொம்மை!
சிவந்த வண்ணப் பொம்மை!
கண்ணைச் சுழற்றியே காட்டும் பொம்மை!
இரண்டு கை தட்டியே
சத்தம் போடும் பொம்மை!
சின்னச் சின்னப் பொம்மையே!
51 . குதிரை வண்டி!
கடபுட வண்டி குதிரை வண்டி!
குதிரைச் சத்தம்! வண்டியின் சத்தம்!
கடகட வண்டி குதிரை வண்டி!
சாட்டையைச் சுழற்றிய
அக்கணமே சட்டென்று
வேகமாய் ஓடும் வண்டி!
குதிரை வண்டி ஏறினால்
சுகமாய்ச் சவாரி போகலாம்!
ஹாய் ஹாய் ஹாய்!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னட ஒலி மூலம் :
infobells.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (52 - 54 )
52 . ருசிகள்!
கசப்பாய் இருப்பது
பாகற்காய்!
உறைப்பாய் இருப்பது
மிளகாய்!
உப்பின் ருசியே
உப்பாய் இருக்கும்!
ஐந்து சுவை கலந்தது
நெல்லிக்காய்!
புளிப்பாய் இருக்கும்
மாங்காய்!
சர்க்கரை தின்றால்
மிக இனிக்கும்!
அதுவே உனக்கு
ரொம்பப் பிடிக்கும்!
53 . பொம்மையம்மா !
பொம்மை யம்மா !
பொம்மை யம்மா!- எனது
முத்துப் பொம்மையம்மா!
என்ன கனவு கண்டாய் என்று
எனக்கு நீயும் சொல்லம்மா!
என்ன நீ சாப்பிடுவாய்?
குதித்துக் குதித்து ஆடுவாய்!
உனக்கு நான்
முத்தமும் தருவேன்!
பொம்மை யம்மா!
பொம்மை யம்மா!
54 . நம்ம போலீஸ்!
அங்கே பாரு போலீசை!
நம்மைக் காக்கும் போலீஸ் !
கூப்பிட்டால் வருவார்
அந்தக் காவலர்!
காக்கி உடுப்பு அணிவார்!
தொப்பி தலையில் அணிவார்!
கையில் லத்தி பிடித்திருப்பார்!
கம்பீரமாக இருப்பாரே!
காலை முதலாய்
இரவு வரையில்
நம்மைக் காப்பார் போலீசே!
கள்ளன் திருடி ஓடினான்
விரட்டிப் பிடித்தார் போலீசே!
திருடப்பட்ட பர்சையுமே
திருப்பித் தந்தாரே
போலீஸ்! போலீஸ்!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி மூலம் :
infobells.com)
***
52 . ருசிகள்!
கசப்பாய் இருப்பது
பாகற்காய்!
உறைப்பாய் இருப்பது
மிளகாய்!
உப்பின் ருசியே
உப்பாய் இருக்கும்!
ஐந்து சுவை கலந்தது
நெல்லிக்காய்!
புளிப்பாய் இருக்கும்
மாங்காய்!
சர்க்கரை தின்றால்
மிக இனிக்கும்!
அதுவே உனக்கு
ரொம்பப் பிடிக்கும்!
53 . பொம்மையம்மா !
பொம்மை யம்மா !
பொம்மை யம்மா!- எனது
முத்துப் பொம்மையம்மா!
என்ன கனவு கண்டாய் என்று
எனக்கு நீயும் சொல்லம்மா!
என்ன நீ சாப்பிடுவாய்?
குதித்துக் குதித்து ஆடுவாய்!
உனக்கு நான்
முத்தமும் தருவேன்!
பொம்மை யம்மா!
பொம்மை யம்மா!
54 . நம்ம போலீஸ்!
அங்கே பாரு போலீசை!
நம்மைக் காக்கும் போலீஸ் !
கூப்பிட்டால் வருவார்
அந்தக் காவலர்!
காக்கி உடுப்பு அணிவார்!
தொப்பி தலையில் அணிவார்!
கையில் லத்தி பிடித்திருப்பார்!
கம்பீரமாக இருப்பாரே!
காலை முதலாய்
இரவு வரையில்
நம்மைக் காப்பார் போலீசே!
கள்ளன் திருடி ஓடினான்
விரட்டிப் பிடித்தார் போலீசே!
திருடப்பட்ட பர்சையுமே
திருப்பித் தந்தாரே
போலீஸ்! போலீஸ்!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி மூலம் :
infobells.com)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (55 - 57 )
55 . உடலும் உறுப்புகளும்!
தலை தோளு!
முட்டி காலு!
எனது கை கண்ணு!
செவி வாய்!
எனது மூக்கு!
எனது தலை தோளு காலு!
56 . ஒன்றுபோலத்தான் இருக்கும்!
ஒன்றாகக் காணப்படும்!
ஆனால் வேறே! வேறே!
பிராணிகள் காண்பதற்கு ஒன்றே!
ஆனால் அவை
வேறே! வேறே!
காக்கையும் புறாவும் ஒரே ரீதி!
எழுப்பும் ஓசையில் வேறே!வேறே!
காக்கை கறுப்பு ! புறா வெளுப்பு!
வேறே! வேறே!
சிங்கமும் புலியும் ஒரே ரீதி!
சிங்கந்தானே கர்ஜிக்கும்!
புலிதானே உறுமும்!
ஒலி எழுப்புவதில் இரண்டும்
வேறே!வேறே!
குளமும் கடலும் ஒரே ரீதி!
இரண்டிலுமே நீர்தான் இருக்கும்!
கடல்நீர் உப்பாகுமே
குளத்துநீர் உப்பாய் இருப்பதில்லை!
கடலும் குளமும்
வேறே!வேறே!
57 . வீட்டில் ஒரு குழந்தை !
நம்ம வீட்டில் குழந்தை ஒன்று
பாபு உள்ளது!
யாரும் தூக்காமல் விட்டுவிட்டால்
கத்தத் தொடங்குது!
உடம்பிலும் தலையிலும்
அடித்துக் கொள்கிறது!
கண்ணில் நீரைச் சிந்த விடுகிறது!
அம்மா வந்து தூக்கி ஒரு
முத்தம் தருவாளே!
அத்தனையும் அடங்கிப் போகும்!
நம்ம பாபுவுக்கே!
நம்ம வீட்டில் குழந்தை ஒன்று
பாபு உள்ளது!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி
மூலம் : infobells.com& Shemaroo Kids Kannada)
**
55 . உடலும் உறுப்புகளும்!
தலை தோளு!
முட்டி காலு!
எனது கை கண்ணு!
செவி வாய்!
எனது மூக்கு!
எனது தலை தோளு காலு!
56 . ஒன்றுபோலத்தான் இருக்கும்!
ஒன்றாகக் காணப்படும்!
ஆனால் வேறே! வேறே!
பிராணிகள் காண்பதற்கு ஒன்றே!
ஆனால் அவை
வேறே! வேறே!
காக்கையும் புறாவும் ஒரே ரீதி!
எழுப்பும் ஓசையில் வேறே!வேறே!
காக்கை கறுப்பு ! புறா வெளுப்பு!
வேறே! வேறே!
சிங்கமும் புலியும் ஒரே ரீதி!
சிங்கந்தானே கர்ஜிக்கும்!
புலிதானே உறுமும்!
ஒலி எழுப்புவதில் இரண்டும்
வேறே!வேறே!
குளமும் கடலும் ஒரே ரீதி!
இரண்டிலுமே நீர்தான் இருக்கும்!
கடல்நீர் உப்பாகுமே
குளத்துநீர் உப்பாய் இருப்பதில்லை!
கடலும் குளமும்
வேறே!வேறே!
57 . வீட்டில் ஒரு குழந்தை !
நம்ம வீட்டில் குழந்தை ஒன்று
பாபு உள்ளது!
யாரும் தூக்காமல் விட்டுவிட்டால்
கத்தத் தொடங்குது!
உடம்பிலும் தலையிலும்
அடித்துக் கொள்கிறது!
கண்ணில் நீரைச் சிந்த விடுகிறது!
அம்மா வந்து தூக்கி ஒரு
முத்தம் தருவாளே!
அத்தனையும் அடங்கிப் போகும்!
நம்ம பாபுவுக்கே!
நம்ம வீட்டில் குழந்தை ஒன்று
பாபு உள்ளது!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு.
சௌந்தரபாண்டியன்.கன்னடக் காட்சி ஒலி
மூலம் : infobells.com& Shemaroo Kids Kannada)
**
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
கன்னடக் குழந்தைப் பாடல்கள் (58 - 60 )
58 . சின்னதொரு சிலேட்டு!
சின்னதாய் ஒரு சிலேட்டு!
நீளதாய் ஒரு குச்சி!
எழுதிக் காட்ட வில்லையென்றால்
உனக்கு இல்லை ஸ்வீட்டு!
அப்பா தந்த காசு!
அம்மா தந்த உணவு!
ஸ்கூல் முன்னே கதவு!
நிதானமாகப் போவோமே!
59 . மாமா ஊருக்குப் பொவோமா?
மாமா ஊருக்குப் போவோமா?
சிக்குப் புக்கு சிக்குப் புக்கு!
தண்டவாளத்தில் போகும் ரயிலில்
ஓடும் மரங்களைக் காண்போமா?
மாமா ஊருக்குப் போவோமா?
மாமா ஊர் பெரியது!
மாமா ஊரில் சிறுவர்கள்
ஆட்டம் ஆடுவோம் அவர்களுடன்!
மாமா ஊருக்குப் போவோமா?
அத்தை சமையல் செய்வாரே!
தினமும் புதிதாய்ச் செய்வாரே!
குலாப் ஜாமூனு தின்போமே!
மாமா ஊருக்குப் போவோமா?
மாமா பெரிய வியாபாரி!
புதிய துணிகளை விற்பாரே!
மாமா ஊருக்குப் போவோமா?
60 . ஒரு காகம் வந்தது !
ஒரு காகம் வந்தது!
இரண்டு ரொட்டி தின்றது!
மூன்று முட்டை இட்டது!
நான்குமுறை பார்த்தது!
ஐந்துமுறை பறந்தது!
காக்கை காக்கை அப்பா!
மாமா வந்தார் இங்கே!
மாமனைக் கேளு உண்ண!
நீ கறுப்புக் காக்கை!
காகா என்று கத்துவே!
திருகையில் திரித்த உணவு
தின்ன ஓடி வாவா!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்.
கன்னடக் காட்சி ஒலி மூலம் : infobells.com; Kids
Planet;KidsTvKannada)
***
58 . சின்னதொரு சிலேட்டு!
சின்னதாய் ஒரு சிலேட்டு!
நீளதாய் ஒரு குச்சி!
எழுதிக் காட்ட வில்லையென்றால்
உனக்கு இல்லை ஸ்வீட்டு!
அப்பா தந்த காசு!
அம்மா தந்த உணவு!
ஸ்கூல் முன்னே கதவு!
நிதானமாகப் போவோமே!
59 . மாமா ஊருக்குப் பொவோமா?
மாமா ஊருக்குப் போவோமா?
சிக்குப் புக்கு சிக்குப் புக்கு!
தண்டவாளத்தில் போகும் ரயிலில்
ஓடும் மரங்களைக் காண்போமா?
மாமா ஊருக்குப் போவோமா?
மாமா ஊர் பெரியது!
மாமா ஊரில் சிறுவர்கள்
ஆட்டம் ஆடுவோம் அவர்களுடன்!
மாமா ஊருக்குப் போவோமா?
அத்தை சமையல் செய்வாரே!
தினமும் புதிதாய்ச் செய்வாரே!
குலாப் ஜாமூனு தின்போமே!
மாமா ஊருக்குப் போவோமா?
மாமா பெரிய வியாபாரி!
புதிய துணிகளை விற்பாரே!
மாமா ஊருக்குப் போவோமா?
60 . ஒரு காகம் வந்தது !
ஒரு காகம் வந்தது!
இரண்டு ரொட்டி தின்றது!
மூன்று முட்டை இட்டது!
நான்குமுறை பார்த்தது!
ஐந்துமுறை பறந்தது!
காக்கை காக்கை அப்பா!
மாமா வந்தார் இங்கே!
மாமனைக் கேளு உண்ண!
நீ கறுப்புக் காக்கை!
காகா என்று கத்துவே!
திருகையில் திரித்த உணவு
தின்ன ஓடி வாவா!
-(கன்னட மூலத்திலிருந்து தமிழில்
மொழிபெயர்த்தவர் முனைவர் சு. சௌந்தரபாண்டியன்.
கன்னடக் காட்சி ஒலி மூலம் : infobells.com; Kids
Planet;KidsTvKannada)
***
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (34 - 36 )
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» பட்டுக்கோட்டையாரின் காதல் பாடல்கள், கற்பனைப் பாடல்கள் வேண்டும்
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
» யுவன் இசையில் வைரமுத்து பாடல்கள் எழுதிய ‘கண்ணே கலைமானே’ பாடல்கள் வெளியீடு!
» பட்டுக்கோட்டையாரின் காதல் பாடல்கள், கற்பனைப் பாடல்கள் வேண்டும்
» இளையராஜாவின் ரசிகர்களுக்காக - இளையராஜா இசையில் சுமார் 582 படங்களின் 2800 தமிழ் பாடல்கள் MP3 வடிவில்(திருத்தம் 761 படங்கள் 3581 பாடல்கள் 15.4GB)
» சிறுவர் பாடல்கள் (பள்ளிப் பருவ பாடல்கள்)
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|