புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 11 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 11 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 11 Poll_c10 
5 Posts - 63%
heezulia
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 11 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 11 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 11 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 11 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 11 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 11 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?


   
   

Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 17, 2017 2:18 pm

First topic message reminder :

17.12.2017

கர்ணன் vs வேட்டைக்காரன்

ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.

பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.

பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.

ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.

படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".

வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.

ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.


Baby Heerajan மீண்டும் சந்திப்போம்


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Apr 05, 2018 9:26 am

சிவாஜி கூட எங்க கேப்டன் நடிச்சிருக்காரா
ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Apr 11, 2018 1:35 pm

11.04.2018 

நானும் ஒரு பெண் படத்ல, விஜயகுமாரிக்கு மேக்கப் போடறது சவாலா இருந்துச்சு.  கினின்னு ஒரு மேக்கப் கலைஞர். இவர்தான் விஜயகுமாரிக்கு இந்தப் படத்துல மேக்கப் போட்டு விட்டார்.
இவர் பராசக்தி படத்ல, சிவாஜிக்கு முதல் முதலா பொட்டு வச்சு மேக்கப் போட்டவர்.

மேக்கப்  போடறதுக்குன்னே ................... தனியா பான்கேக்னு இருக்காமே. இதுல ரெண்டு மூணு கலர்களை மிக்ஸ் செஞ்சு, புது மாதிரியான கருப்பு கலரை உண்டாக்கி, விஜயகுமாரிக்கு மேக்கப் போட்டார்.

இந்தப் படத்தில ரங்கராவும், MR ராதாவும் நடிச்சிருந்தாங்க. ரங்காராவ்  எப்பவுமே 11 மணிக்குதான் வருவார். ஒருநாள் ராதா ரங்காராவ்ட்ட, “மொதலாளி செலவுல நாங்கல்லாம் காலைலயே டிஃபன்ல்லாம் சாப்ட்டுட்டு ஷூட்டிங்காக வெய்ட் பண்ணிட்டு இருக்கோம். நீங்க இப்டி 11 மணிக்கு வர்றதா இருந்தா, ஷூட்டிங்கையும் 11 மணிக்கே வச்சிருக்கலாம் போலியே”ன்னு அவர் பாணியிலேயே சொன்னார். ரங்காராவுக்கு ஒரு மாதிரியா போச்சு.

இந்த படத்தில “ஏமாற சொன்னதும் நானோ” அப்டீன்னு ஒரு பாட்டு. புஷ்பலதாவும், AVM ராஜனும் பாட்றமாதிரி. ரெண்டு பேரும் NCC உடையை போட்டு ஆட்றாங்க, பாட்றாங்க. பெங்களூர்ல ஷூட் பண்ணாங்க. படம் சென்ஸாருக்கு போச்சு.
சென்ஸார் குழுல, சாஸ்திரின்னு ஒருத்தர். அவர் படத்தை பார்த்தார். செட்டியாரை கூப்ட்டனுப்பினார். செட்டியாரும் வந்தார். சாஸ்த்திரி, “ஏன் செட்டியாரே, உங்க படத்தில இப்டி செய்யலாமா? NCC உடை போட்டுக்கிட்டு, டூயட் பாட்ற மாதிரி ஸீன் வச்சிருக்கீங்களே.”

உடையை மாத்தி, அந்த பாட்டை மறுபடியும் எடுக்கிறதா செட்டியாரும், டைரக்டரும்  ப்ராமிஸ் செஞ்சாங்க. 

அதே................. மாறி, அந்த பாட்டை இன்னொரு தடவை எடுத்துட்டாங்க. எப்டி? பெங்களூர்ல இயற்கை காட்சிகள்ல எடுத்தாங்கல்ல? இப்போ அந்த பாட்டை விஜயா கார்டன்ல, ஒரே.................. நாள்ல எடுத்துட்டாங்க.

AVM தயாரிப்புல நாகேஷ் நடிச்ச முதல் படம் நானும் ஒரு பெண். நாகேஷின் சம்பளத்தை பற்றி பேசும்போது, AVM சரவணன்
“ஐயாயிரம் வச்சுக்கலாமா?” ன்னு கேட்டார்.

ஆனா நாகேஷ் ஒத்துகல. “ஏன் ஏழாயிரம் எப்டீ?”

“சரி உங்களுக்கும் வேணாம், எங்களுக்கும் வேணாம். ஆறாயிரமா இருக்கட்டும்” னு முடிவு செஞ்சாங்க.

“சரவணன் சார், நான் பெருமைக்காக சொல்றேன்னு நினைக்காதீங்க. திமிர்னு நெனச்சாலும் பரவாயில்ல. ஒரு காலம் வரும் பாருங்க. நான் கேக்குற சம்பளத்தை, கேள்வி கேக்காம நீங்களே குடுப்பீங்க பாருங்க”

“அப்படி ஒரு காலம் வந்தா, நான் குடுக்காமயா இருக்க போறேன்? கண்...................டிப்பா குடுப்பேன்.”

அதுமாதிரிதான் நடந்துச்சு. நாகேஷ் கேட்ட பணத்தை, கேக்காம கொள்ளாம குடுத்தார். தாம்மேல நாகேஷுக்கு அவ்ளோ............. நம்பிக்கை.

படத்தில விஜயகுமாரிக்கு சகோதரன் நாகேஷ். விஜயகுமாரி பட்ற கஷ்டத்தை பார்த்து நாகேஷ் அழணும். டைரக்டர் திருலோக்ட்ட “ஏன் சார், நானோ காமெடியன். நான் அழுது நடிச்சா, சரியா வருமா?”னு நாகேஷ் கேட்டார்.

“ஏன் சரியா வராது. நான் என்ன சொல்றேனோ, அதே................... மாதிரி நடிங்க. உணர்ச்சி பூர்வமா நடிங்க. கண்...................டிப்பா சரியா வரும்”

நாகேஷும், திருலோக் சொன்னபடியே நடிச்சார்.

காமெடியன் சோக காட்சியில் நடிச்சா சரியா வருமான்னு பேச்சு அடிபட்டது, செட்டியார் காதுல போய் விழுந்துச்சு. அவர் திருலோக்கிடம் இதை பற்றி பேசினார்.

“நாகேஷ் சோக காட்ச்சீல நடிக்கிறது, அவருக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் பாருங்க”ன்னு திருலோக் சொல்லிட்டார். டைரக்டர் மேல உள்ள நம்பிக்கைல, செட்டியாரும் சரீன்னுட்டார்.

நானும் ஒரு பெண் படத்தில சோக காட்சியில நாகேஷ் நடிச்சதை பார்த்துதான், பாலசந்தருக்கு சர்வர் சுந்தரம் படத்தில நாகேஷை நடிக்க வைக்க எண்ணம் வந்துச்சுன்னுகூட பேசிக்கிட்டாங்களாம்.
நானும் ஒரு பெண் ரிலீஸ் ஆகி, சக்.................க போடு போட்டுச்சு.

அடுத்தாபுல, செட்டியாரும், திருலோக்கும் சேர்ந்து ஒரு படம் எடுத்தாங்க, ‘காக்கும் கரங்கள்’. நானும் ஒரு பெண் படத்தின் ஜோடிதான் இந்தப் படத்திலேயும்.

ஒரு புதுமுகம் அறிமுகம் ஆனார். முதல் நாள் ஷூட்டிங். புதுமுகம் காதலியின் கையை புடிச்சு பேசணும். கையை புடிச்சார். ரெண்டு கையும் நடு நடு நடுன்னு நடுங்..............குச்சு. திருலோக் இதை பார்த்தார். காதலிட்ட, “நீங்க அவர் கையை கெட்.............டியா புடிச்சுக்கோங்க”ன்னு சொன்னார். காதலியும் அவர் கைகளை இறுக்.......................க புடிச்சுகிட்டார். அம்புட்டுதான், புதுமுகம் கைகள், கூட கொஞ்சம் நடுங்க ஆரம்பிச்சுருச்சு.
யாருங்க அந்த புதுமுகம்?

அடுத்த பதிவுல சொல்றேன். காத்.....................திருங்க.

- இந்து 18

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Apr 21, 2018 7:50 am

21.04.2018

விஜயா வாஹினி ஸ்டூடியோ. பெரீ.....................ய செட். ஒரு பாட்டோட ஸீன் ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. 

“வாங்கைய்யா வாத்யாரையா வரவேற்க வந்தோமையா” 

நம்நாடு படத்ல உள்ள பாட்டு. இந்த பாட்ல நூத்துக்கணக்கா................ன பொம்பளைங்க, ஆமபளைங்க நடன கலைஞர்கள். இவங்களுக்கு நடூல ஜெயலலிதா & எம்.ஜி.ஆர்.

டைரக்டக்கர் ஜம்பு. சக்கரபாணியும், நாகிரெட்டியும் தயாரிச்சாங்க. 

கொஞ்ச பாட்டை ஷூட் செஞ்சாங்க. சாப்பாட்டு நேரம். மத்யான சாப்பாடு. எல்லாரும் சாப்ட போய்ட்டாங்க. 

எம்.ஜி.ஆருக்கு ஒரு பழக்கம். சென்னை, தி.நகர், ஆற்காடு சாலையில அவருக்கு ஒரு ஆபிஸ் இருக்கு. சாப்ட்டுட்டு அவர் அங்கதான் போய் ஓய்வெடுப்பார். அதுமாதிரிதான் அன்னிக்கும் இங்க சாப்ட்டுட்டு, ஓய்வெடுக்க அங்க போய்ட்டார். 

இங்க நடன கலைஞர்கள்லாம் சாப்ட்டுட்டாங்க. மேனேஜர் எல்லா...............ரையும் கூப்ட்டு அனுப்பினார். அவங்களும் டான்ஸ் ஆட ரெடியாயிட்டாங்க. 

எம்.ஜி.ஆரின் கார் வந்து நின்னுச்சு. கரீட்டு டைம்க்கு வந்துட்டார்ல. அவர் கார்லேயிருந்து இறங்கினார். நடன கலைஞர் ஒருத்தர்ட்ட, “சாப்ட்டாச்சா”ன்னு கேட்டார். எவ்ளோ நல்ல மனசு பாருங்க எம்.ஜி.ஆருக்கு. 

ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு. ஜெயலலிதா சம்பந்தப்பட்ட ஸீன்லாம் எடுத்து முடிச்சாச்சு. எம்.ஜி.ஆர். சம்பந்தப்பட்ட பாட்டு ஸீன் எடுக்கணும். இயக்குனர் ஜம்பு அவரை கூப்ட்டு வர ப்ரொடக் ஷன் மேனேஜரை அனுப்பினார். அவர் எம்.ஜி.ஆர். ரூமுக்கு ஓடினார். ரூம் மூடியிருந்துது. டொக் டொக். கதவை தட்டினார் மேனேஜர். நோ பதில். கதவு தொறந்துச்சு. ஆனா எம்.ஜி.ஆர். இல்ல, வேற ஒருத்தர். 


“எம்.ஜி.ஆர். இருக்காரா?” ன்னு கேட்டுட்டே.................... உள்ள நொழஞ்சார் மேனேஜர்.

“அவர் இங்க வரவே இல்லியே” ரூமுக்குள்ள இருந்தவர் சொல்லிட்டார்.

“இப்பத்தானே கார்லே இருந்து எறங்கினார். நான் பாத்தேனே. எங்க போய்ட்டார்?” னு மேனேஜர் யோசிச்சுகிட்டே அங்க இங்க தேடினார். எம்.ஜி.ஆர்தான் இல்லேன்னா, அவரோட காரும்ல இல்ல. என்ன செய்றதூன்னு தெரியாம, ஜம்புட்ட சமாச்சாரத்த சொன்னார்.

“சின்னவரு ரூம்ல இல்ல”

இன்னாங்கடா இது, ஜம்புவுக்கும், மேனேஜருக்கும்  வந்த சோதன.

“அவர் கார் வந்துச்சே. யாரோ ஒரு டான்ஸரட்ட பேசினதை கூட பாத்தேனே. பின்ன எங்கதான் போய்ட்டார்?” ஜம்பு யோசிச்சுட்டு இருந்தார். ஸ்டூடியோ முழுக்க தேடு தேடுன்னு தேடினாங்க. ஊ........................ஹும். காணவே காணோம். 

அப்புறம் ஒரு தகவல் வந்துச்சு எம்.ஜி.ஆர். எங்க இருந்தார்னு. ஆற்காடு சாலைல இருந்த அவரோட ஆபிஸுக்குத்தான். எல்லாருக்கும் ஷாக்கோ................ ஷாக். இந்த நேரத்தில அவர் அங்க எதுக்கு போனார்னு எல்லாரும் குழம்பி, கவலைப்பட்டுட்டு இருந்தாங்க. பயம் வேற. என்ன பிரச்னைனு தெரியலியே. அதான். விஷயம் விஜயா வாஹினி ஸ்டூடியோல உள்ள மூல முடுக்குக்கெல்லாம் தெரிஞ்சு போச்சு. 

“எம்.ஜி.ஆர். இங்க வந்தபோ, யாரோ ஒரு டான்ஸர்ட்ட பேசிட்டு இருந்தாரே. நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது. அவர் யார்னு தே..............டி கண்டுபுடிச்சு, அவரை கூட்டிட்டு வா” ன்னு ஜம்பு மேனேஜரை வெரட்டி விட்டார். 

மேனேஜர் தன் உதவியாளர்களை கூட்டிக்கிட்டு, ஓடி................. ஓடி தேடினார். அப்பா.....................டா, அந்த டான்ஸர் கெடச்சுட்டார். செட்ல ஒரு ஓ....................ரமா உக்காந்திருந்தார். அவர கூட்டிட்டு போயி ஜம்புட்ட விட்டார் மேனேஜர். 

ஜம்பு டான்ஸரை தனியா இஸ்துகினு போயி, “சின்னவரு உங்ககிட்ட பேசிட்டிருந்தாருல்ல?”னு விசாரிச்சார்.

“ஆமா, என்ட்ட பேசிட்டிருந்தார்”

“என்ன பேசினார்?”

“சாப்ட்டாச்சான்னு கேட்டார்.”

“நீங்க என்ன சொன்னீங்க”

“சாப்ட்டோம்”னு சொன்னேன். “என்ன சாப்ட்டீங்க?”ன்னு கேட்டார். “புளியோதரை, தயிர்சாதம் பொட்டலம் கட்டி குடுத்தாங்க”ன்னு சொன்னேன். அதுக்கப்புறம் எதுவும் கேக்கல. விறுவிறுன்னு கார்ல ஏறி வெளியே போய்ட்டார்” 


அம்புட்டுதான். புரிஞ்சுபோச்சு, புரிஞ்சுபோச்சு. எதுக்காக எம்.ஜி.ஆர். வெளிய போனார்னு காரணம் தெரிஞ்சுபோச்சு. ஜம்புவும், மேனேஜரும் ஆற்காடு சாலை ஆபீஸுக்கு ஓடினாங்க. 

ஓடினாங்களா? அட நீங்க ஒண்ணு. கார்ல வேகமா போனாங்கன்னு அர்த்தம். என்ன புரிஞ்சுதா? 

எம்.ஜி.ஆர். ஆபீஸுக்கு போனாங்களா? போனா....................ங்க. அவரை பாத்தாங்களா? பாத்தா.............................ங்க. மேனேஜர் பேசினார்.


“எம்மேலதான் தப்பு. இது மேனேஜ்மெண்ட்டுக்கு தெரியாது. லஞ்ச் சாப்ட்ட உடனே சீக்கிரமா ஷூட்டிங் ஆரம்பிக்கணும். நிறைய பேர் இருந்ததால, பொட்டலமா சாப்பாடு குடுத்தா சீக்கிரமா சாப்ட்டு முடிப்பாங்கன்னுதான் இப்படி ஏற்பாடு செஞ்சுட்டேன். இனிமே இப்படி தப்பு நடக்காம பாத்துக்குறேன். மன்னிச்சுருங்க”

அப்றம் என்ன? மன்னிப்புதான் கேட்டாச்சுல்ல. ஷூட்டிங் ஆரம்பிச்சுது. அந்த பாட்டு ஷூட்டிங் முடியுற வரைக்கும் எம்.ஜி.ஆர். மற்ற கலைஞர்களோடுதான் இருந்தாராம். 

ப்ரொடக் ஷன் மேனேஜர் கம்பெனி செலவுல கலைஞர்களுக்கு நல்ல சாப்பாடு வாங்கி கொடுக்காம, பொட்டல சாப்பாடு வாங்கி கொடுத்ததுதான் எம்.ஜி.ஆருக்கு கோவம். அதுவும் மேனேஜ்மென்ட்டுக்கு தெரியாம, அவராவே தன் இஷ்டத்துக்கு  முடிவு எடுத்திருக்காரே. அவர் என்ன சாப்ட்ராறோ, அதே சாப்பாடுதான் ஷூட்டிங்க்கு வர்றவங்களுக்கும் கொடுக்கணும்னு அவரோட கண்டிப்பான உத்தரவாம். 

எம்.ஜி.ஆர். பட ஷூட்டிங்க்னா, அது எந்த கம்பெனி படம்னாலும் சர்தான், எல்லாருக்கும் நல்ல சாப்பாடு கிடைக்குதா, எல்லாருக்கும் சரியான சம்பளம், முழு................ சம்பளம் போய் சேருதாங்கறதுல கவனமா இருப்பாராம். அவர்கூட நடிச்சவங்களுக்கெல்லாம்கூட இது தெரியும். 

இந்த நல்ல குணமும், மனமும்தான் அவர் பேருக்கும் புகழுக்கும் காரணம்னு எல்லாருக்கும் தெரிஞ்ச ரகசியம்தானே. 


“வாங்கைய்யா வாத்யாரையா, வரவேற்க வந்தோமையா, ஏழைகள் உங்களை நம்பி எதிர்பார்த்து நின்றோமையா”

வாலி பொருத்தமாத்தான் எழுதியிருக்காரப்பு.

- Oneindia Tamil


Heezulia  மீண்டும் சந்திப்போம்  

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Apr 21, 2018 9:48 am

அது எந்த கம்பெனி படம்னாலும் சர்தான், எல்லாருக்கும் நல்ல சாப்பாடு கிடைக்குதா, எல்லாருக்கும் சரியான சம்பளம், முழு................ சம்பளம் போய் சேருதாங்கறதுல கவனமா இருப்பாராம். அவர்கூட நடிச்சவங்களுக்கெல்லாம்கூட இது தெரியும்.

எங்க கருப்பு எம்.ஜி.ஆர். கூட இப்படி தானாம்





Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Apr 21, 2018 2:52 pm

சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Thu Jul 26, 2018 11:30 pm

26.07.2018

மறுபடியும் என்னை ஈகரைல சேத்துகிட்டதுக்கு  நன்றி. எதுக்குன்னா, நான் நிறை....................ய தடவ இங்க நுழைய ட்ரை செஞ்சேன், முறைப்படிதான். ஊ.......................ஹும், முடியாம போச்சு. இப்பதான் வழி கெடச்சுது. வேற பேர்ல register செஞ்சுக்கலாமான்னுகூட நெனச்சேன். 


இன்னொரு விஷயம். Fontஐ கலர் போடறது முன்னால நல்லா இருந்துச்சே. இப்ப எதுவுமே இல்லியே. ஏன் மாத்திட்டாங்க? நல்.............லாவே இல்ல, எனக்கு. என்னமா........... ஆசை ஆசையா கலர் கலரா போட்டு எழுதிட்டு இருந்தேனே. நான் கொஞ்ச நாள் வரலேன்னா எல்லாமே மாறிப்போச்சு. 

சரி, சமாச்சாரத்துக்கு வர்றேன்.

என்னோட பதிவு #102ல காக்கும் கரங்கள் [1965] படத்தை பற்றி சொல்ல ஆரம்பிச்சேன்.


இந்தப் படத்ல ஒரு புதுமுகம் அறிமுகம் ஆனார். ஆனாரா? ஆமா ஆனார். முதல் நாள் ஷூட்டிங்ல ஹீரோயின் கைய புடிச்சுட்டு வசனம் பேசணும். ஆனா பாருங்க, ஹீரோயின் கைய புடிச்ச உடனேயே, அந்த புதுமுகம் கை நடுங்க ஆரம்பிச்சிருச்சு. இதை பார்த்த டைரடக்கர் திருலோகசந்தர் ஹீரோயின்ட்ட சொன்னார்,

“நீங்க ஹீரோ கைய இறுக்கமா புடிச்சுக்கோங்க." 



ஹீரோயினும் ஹீரோ கைய டைரடக்கர் சொன்ன மாதிரி புடிச்சார். அவ்ளோதான், ஹீரோ கை, கூட கொஞ்சம் ‘கிடுகிடு’ன்னு நடுங்க ஆரம்பிச்சுது. 

என்னதான் சினிமாவுக்கு புதுமுகமா இருந்தாலும் இப்டியா? அது சரி, அது யார்னு தெரியுமோ? சினிமால ‘என்றும் 16’ ன்னு பேர் வாங்கினவர். இப்ப தெரிதா? சரி நானே சொல்லிர்றேன்.

சிவகுமார்.

ஆமாங்க. இவருக்குத்தான் அப்டி கைல்லாம் நடுங்குச்சு. ஆரம்பத்ல இவர் கொங்கு தமிழ்லதான் பேசினாராம். அதனால செட்ல அவரை ‘கொங்குகாரரே’னு கிண்டல் செஞ்சாங்களாம். அப்புறமா சிவகுமார், மேஜர் சுந்தரராஜன் நாடக குழூல சேந்து, தமிழை பலவிதமாக பேச கத்துகிட்டாராம்.

காக்கும் கரங்கள் படத்ல SV சுப்பையா பணக்காரரா நடிச்சிருந்தாராம். அவருக்கு நெஜமாவே ஒரு குணம் இருந்துச்சாம். டெய்.......................லி ஷூட்டிங்க்கு வரும்போது, செட்ல இருக்கிற எல்லாருக்கும், ட்ரிங்க்ஸ் கொண்டுவருவார். அதை செட்ல இருக்கிற எல்லாரும், அவர் டைரடக்கரா இருந்தாலும் சர்தான், லைட்மேனா இருந்தாலும் சர்தான், எல்லாரும் குடிச்சாகணும். அம்புட்டுதான். SVS எல்லாரையும் குடிக்க வச்சிருவாராம்.

ஆமா................. அது என்ன ட்ரிங்க்ஸ்? அட நீங்க ஒண்ணு, கற்பனை எங்க போகுது உங்களுக்கு? வீட்ல இருந்து கூழ் எடுத்து வருவாராம். அததான் எல்லாரும் குடிச்சாங்க. அப்டி அவருக்கு ஒரு பயக்கம்.

அவருக்கு இன்னொரு பழக்கம் இருந்துச்சு. சாயங்காலம் ஆறு மணிக்கு மேல செட்ல இருக்கமாட்டார். வூட்டுக்கு போயிருவார்.

ஒருநாள் SVS ராத்திரி நடிக்க வேண்டிய ஸீன். அவர் கண்டிப்பா ராத்திரி நடிச்சே ஆகணும்ங்ற நெலம. ஆனா SVSதான் சாயங்காலம் 6 மணிக்கு மேல நடிக்கமாட்டேங்க்ற பாலிஸில இருக்காரே. AVM சரவணன் அவர்ட்ட விஷயத்த சொன்னார். சரீன்னுட்டு, SVS ஒரு கண்டிஷன் போட்டார். அது என்னான்னா, அவர் AVM சரவணன்ட்ட சொன்னார்,

“நான் கொண்டு வர்ற கூழை உங்க அப்பா AVM குடிச்சார்னாக்கா, நான் ராத்திரி நடிக்கிறேன்”

AVM, SVS கொடுத்த கூழை நெஜமாவே குடிச்சார். அது மட்டுமா?

“கூழ் நல்லா இருக்கே, இன்னொரு டம்ளர் கூழ் வேணுமே”

SVS ஒரே சந்தோஷம். இன்னொரு டம்ளர் கூழ் கொடுத்தார். AVMமும் குடிச்சார். அவர் ரெண்டு டம்ளர் கூழ் குடிச்சதால, SVS தன்னோட பாலிஸியை மாத்திட்டார்.

“AVM ரெண்டு டம்ளர் கூழ் குடிச்சதால, நானும் ரெண்டு ராத்திரி நடிக்கிறேன்”னு SVS சொல்லிட்டார்.

காக்கும் கரங்கள் படத்தோட ம்யூஸிக் டைரடக்கர் KV மகாதேவன். “அல்லித்தண்டு காலெடுத்து அடி மேல் அடியெடுத்து” பாட்டு ஷூட்டிங். இந்த பாட்ல நடிக்க வேண்டிய குழந்தை வந்தாச்சு. குழந்தை நடந்து வரணும். ஆனா என்ன ஆச்சு? ஷூட்டிங்ல குழந்தை நடப்பேனாண்ட்ருச்சு. அடம் புடிச்சுது. யார்லாமோ என்னல்லாமோ செஞ்சு பாத்தாங்க. ஒண்......................ணும் நடக்கல. அப்புறமா திருலோகசந்தர்,
“சரி பரவால்ல. குழந்தை ஸீனை அப்புறமா எடுத்துக்கலாம். மத்த ஸீன்ல்லாம் இப்ப எடுத்துறலாம்.” ன்னுட்டார்.

இந்த படத்தோட கேமராமேன் முத்துசாமி. இவர் அந்த கொழந்தய தனியா கூட்டிட்டு போயி, பிஸ்கட், சாக்லேட்லாம் வாங்கி கொடுத்து, நடக்க வைக்க ட்ரை செஞ்சு பார்த்தார். கொழந்த நடக்..............கணுமே. முத்துசாமியின் முயற்சீல்லாம் வேஸ்ட். டயடாயிட்டார். சரி, ஒரு தம் அடிக்கலாமேன்னு சிகரட் பத்த வச்சார். ஸ்மோக் பண்ண ஆரம்பிச்சார்.

சிகரட்ட பத்த வச்சா ஸ்மோக் பண்ணுவார்தானேன்னு கேள்வி கேக்காதீங்க.  
முத்துசாமிக்கு ஒரு ரோசன தோணுச்சு. பத்த வச்ச சிகரட்ட குழந்தட்ட காட்டி,
“இங்க வாப்பா கொழந்த” ன்னு கூப்ட்டார். என்னத்தையோ காட்டி கூப்ட்றாங்களேன்னு , கொழந்தயும் முத்துசாமியை நோக்கி நடக்க ஆரம்பிச்சுது. இதை கவனிச்ச திருலோகசந்தருக்கு பத்தாதா?  முத்துசாமி கையாண்ட அதே முறையை வச்சு, கொழந்தய நடக்க வச்சு, அதுக்கான ஸீன் ஷூட் செஞ்சு முடிச்சுட்டார். எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது.

- இந்து

Heezulia மீண்டும் சந்திப்போம்


SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 27, 2018 10:57 am

நீ...........ண்ட நாட்களுக்கு அப்பறமா உங்க பதிவு 

  திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 11 3838410834 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 11 3838410834



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jul 27, 2018 11:13 am

27.07.2018


ஆமா SK, வந்துட்டேன். அதெப்டி இங்க வராம இருக்க முடியும், சொல்லுங்க? 


Heezulia

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jul 27, 2018 11:17 am

heezulia wrote:27.07.2018


ஆமா SK, வந்துட்டேன். அதெப்டி இங்க வராம இருக்க முடியும், சொல்லுங்க? 


Heezulia
காணாமல் போனவர்கள் பட்டியலில் உங்கள் பேரை சேத்துட்டேன் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Jul 27, 2018 11:59 am

27.07.2018


லிஸ்ட்ல எத்தன பேர் இருக்காங்க? 

Heezulia 

Sponsored content

PostSponsored content



Page 11 of 14 Previous  1 ... 7 ... 10, 11, 12, 13, 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக