புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 7 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 7 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 7 Poll_c10 
5 Posts - 63%
heezulia
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 7 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 7 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 7 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 7 Poll_c10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 7 Poll_m10திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 7 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?


   
   

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 17, 2017 2:18 pm

First topic message reminder :

17.12.2017

கர்ணன் vs வேட்டைக்காரன்

ரஜனி / கமல், விஜய் / சூர்யா மாதிரி அப்போ சிவாஜி / MGR. இவங்க படங்கள் ரிலீஸ் ஆனா, அவங்கவங்க ரசிகர்கள் மோதிக்குவாங்களாம்.

பந்துலு எக் ............. கச்சக்கமான செலவுல கர்ணன் படத்தையும், திருமுகம் கொறஞ்.................ச பட்ஜெட்ல வேட்டைக்காரன் படத்தையும் எடுத்தாங்களாம். கர்ணன் படத்ல முன்னணி நட்சத்திர கூட்டம். பாதி படம் முடிஞ்சிருச்சாம். மீதி படத்தை எடுக்கவும் ஆரம்பிச்சாச்சாம். ஆனா வேட்டைக்காரன் படத்தை அப்பதான் எடுக்க ஆரம்பிச்சாங்களாம்.

பந்துலு கர்ணன் படத்தை பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்ய சுறுசுறுப்பா வேல செஞ்சுட்டு இருந்தாராம். அப்போ ஒருத்தர் பந்துலுட்ட ஒரு விஷயத்தை சொல்லியிருக்கார். பந்துலு யோசிக்க ஆரம்பிச்சுட்டாராம். அந்த ஆள் சொன்ன விஷயம் என்ன............? கர்ணன் ரிலீஸ் ஆகிற அன்னிக்கே, திருமுகம் வேட்டைக்காரன் படத்தை ரிலீஸ் செய்ய போறதா.

ரெண்டு மெகா ஸ்டார் படங்கள் ஒண்ணா ரிலீஸ் ஆனா நல்லா இருக்காதே, வசூல் அடிபடுமேன்னு பந்துலு நினைச்சு, தமது குழுவினருடன் பேசினாராம். சிவாஜி காதிலும் போட்டு வச்சாங்க. அவரும் யோசனை செய்ய ஆரம்பிச்சுட்டாராம். வேட்டைக்காரன் படத் தயாரிப்பாளர் தேவரையும் கூப்ட்டு பேசியிருக்காங்க. ஆனா இவங்கல்லாம் என்னதான் பேசினாலும், MGR தான் ரிலீஸ் date சொல்லணுமாமே. ஒரு வாரம் கழிச்சு படத்தை ரிலீஸ் செய்யலாம்னு அவர்ட்ட எப்படி, யார் சொல்றது? அப்புறமா ஒருத்தர் ஒரு ஐடியா சொன்னாராம். MGR க்கு கர்ணன் படத்தை தனியா போட்டு காட்டிட்டு, அதுக்கப்புறமா ரிலீஸ் பத்தி பேசலாம்னு முடிவு செஞ்சாச்சாம். MGRட்ட போய் சொன்னாங்களாம். அவரும் படத்தை பார்க்க உம் சொல்லிட்டாராம்.

படத்தை பார்த்த MGRக்கு சிவாஜியின் நடிப்பு ரொம்ப புடிச்சு போச்சாம். "நடிப்புக்குன்னே பொறந்தவர்யா. மனுஷன் கர்ணனாவே வாழ்ந்திருக்கார்"ன்னு பாராட்டினாராம். பந்துலு உள்பட, எல்லா கலைஞர்களையும் மனசா................ர புகழ்ந்தாராம். படத்தின் வெற்றிக்கு வாழ்த்து சொல்லிட்டு போய்ட்டாராம். இப்படிப்பட்ட சமயத்தில் ரிலீஸை பத்தி பேச எல்லாரும் தயங்கினாங்களாம். வேட்டைக்காரன் படத்தை ஒரு வாரம் கழிச்சு ரிலீஸ் பண்றத பத்தி எப்படி பேசுறது?
மறுநாள். தேவரை கூப்ட்டுட்டு MGR ஐ பாக்க போனாங்களாம். விஷயத்தை சொல்லியிருக்காங்க. "படத்தை பார்த்தேன். ப்ரமாதமாய், ப்ரமாண்டமாய் இருக்கு. நண்பர் சிவாஜியும் நல்லாவே நடிச்சிருக்கார். சரி, ஒண்ணு செய்ங்க, ரெண்டு படத்தையும் ஒண்ணாவே ரிலீஸ் செஞ்சிருங்க. ரெண்டு பேர் ரசிகர்களும் பார்த்து ரசிச்ச மாதிரி இருக்கும்ல. ரெண்டு பேர் ரசிகர்களும் ரெண்டு படத்தையும் பார்க்கட்டுமே. எல்லாரும் சந்தோஷப்படுவாங்க".

வேற வழி? அப்டீ இப்டீன்னு ரெண்டு படங்களும் 14.01.1964 ல ரிலீஸ் ஆயிருச்சு. கர்ணன் ரிலீஸ் ஆன தியேட்டர்கள்ல பிரமாண்டமான பேனர்கள். படத்தை பார்த்தவங்க பாராட்டினாங்களாம். ஆனா அவ்ளோ பணம் செலவழிச்சு எடுத்த கர்ணன், வேட்டைக்காரன் மாதிரி வெற்றி பெறலியாம். ஆனா பாருங்க, 2012ல வெளியான டிஜிட்டல் படம் ஓஹோன்னு ஓடுச்சாம்.

ஆனா வேட்டைக்காரன் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் என்ன செஞ்சாங்க தெரியுமோ? தேவர் ஃபிலிம் ஆச்சே. நிஜமான கூண்டு வச்சு, நிஜமான புலியையும் கூண்டுக்குள்ள வச்சுட்டாங்களாம். இந்தப் புலியை பார்க்குறதுக்குன்னே .............. கூட்டம் கூடுச்சாம். Low பட்ஜெட் படம் வசூலை குவிச்சுதாம். இதுக்கு MGR என்ன செஞ்சார் தெரியுமா? பந்துலுவுக்கு 1965ல ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு வாய்ப்பு கொடுத்தாராம். நல்ல லாபம் அள்ளிக் கொடுத்த படமாச்சே. கன்னாபின்னான்னு ஓடின படமாச்சே. நல்ல மனுஷர்தானே MGR.


Baby Heerajan மீண்டும் சந்திப்போம்


heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 7:29 pm

பேபி ரொம்ப சந்தோஷம்.
இந்த சினிமா கொட்டகை கிராமத்தின்
வசந்த மாளிகை. கிராம மக்களின்
பொழுது போக்கிடம் சினிமா தான்.
பீம்சிங்யின் அனைத்து படங்களும்
''பா'' சிரியல்
சிவாஜியின் அனைத்தும் பார்த்திருப்பேன்.
தாத்தா சிவாஜி படத்தை தான் அதிகம்
வாங்கி திரையிடுவார் விலை கம்மி.
எம்ஜிஆர் படம் எப்போதும் விலை அதிகம்.
சில நேரங்களில் ஓசியாக துக்ளக்
மிக மிக தள்ளுபடி விலையில்
காந்தா ராவ் படம் ,டிஆர் மகாலிங்கம்,
எஸ்எஸ் ஆர் , ஜெமினி கனேசன்
ஜெயசங்கரின் சிஐடி சங்கர்,பூம்புகார்
போன்றவைகளும் வரும்.

லீவு நாட்களில் மட்டுமே சினிமா.
படிப்பில் கிராமத்து பள்ளியில்
முதல் மூன்று இடங்களில்.
நன்றி பேபி


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Jan 30, 2018 10:37 pm

30.01.2018 

அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க, முத்து சார்.  

நல்லாதான் படிச்சிருக்கீங்க. அது சரி.................., நீங்க முதல் மூன்றாவது ரேங்க்னா, உங்க கிளாஸ்ல மொத்தம் எத்தன பேர்? 

பீம்சிங் பாம்சிங் ஆனதை பற்றி நான் எழுதினதுல இருந்து, எனக்கு பீம்சிங் பேர் மறந்து போச்சு. பாம்சிங்னுதான் ஞாபகத்துக்கு வருது. வசந்த மாளிகையில நீங்க பார்த்த படங்களை நீங்க ஒரு அலசு அலசிட்டீங்க. 

Heezulia  

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 1:59 pm

heezulia wrote:30.01.2018 

அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க, முத்து சார்.  

நல்லாதான் படிச்சிருக்கீங்க. அது சரி.................., நீங்க முதல் மூன்றாவது ரேங்க்னா, உங்க கிளாஸ்ல மொத்தம் எத்தன பேர்? 

பீம்சிங் பாம்சிங் ஆனதை பற்றி நான் எழுதினதுல இருந்து, எனக்கு பீம்சிங் பேர் மறந்து போச்சு. பாம்சிங்னுதான் ஞாபகத்துக்கு வருது. வசந்த மாளிகையில நீங்க பார்த்த படங்களை நீங்க ஒரு அலசு அலசிட்டீங்க. 

Heezulia  
மேற்கோள் செய்த பதிவு: 1258352
கிளாசில் முப்பது பேர்
இப்போது வருடத்திற்கு
இரண்டு படங்கள் கூட
பார்ப்பதில்லை.
பீம்சிங் இந்த பெயரை
எப்படி மறுப்பது
சிவாஜி கணேசன்
அவர்களை திரையுலகில்
ஜொலிக்க வைத்தவர்.
நன்றி
பேபி

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Feb 20, 2018 3:08 pm

20.02.2018

சினிமாவை கலர்ல எடுக்க தொடங்கிய காலம். எம்.ஜி.ஆர்.என்ன செஞ்சார்னா, தன்னை வச்சு கருப்பு வெள்ளை படங்கள் எடுத்த தயாரிப்பாளருங்களுக்கு, தானே வாலன்டியரா போயி, கலர் படம் எடுக்க கால்ஷீட் கொடுத்தாராம். 
 
எம்.ஜி.ஆரை வச்சு சதிலீலாவதி படத்தை கருப்பு வெள்ளைல எடுத்த SS வாசன்,  நாமும் அவரை வச்சு  கலர் படம் எடுக்கலாமேன்னு யோசிச்சார். கதையை தே......................டு தேடுன்னு தேடினார். கடேசில ஹிந்தி படம் ஒண்ணு மாட்டுச்சு. தர்மேந்திரா நடிச்ச 'ஃபூல் ஒளர் பத்தர்' என்ற படம். 

இந்தப் படத்தில, ஹீரோ ஒரு குடிகார திருடன். அதனால முரடன். எல்லாரும் அவன பார்த்து பயப்பட்றாங்க. அவன் இருக்கிற இடத்ல, யார்கூடவும் பழக்கமில்ல. அவனை பார்க்கிறவங்க பயந்து ஓடினாங்க. அப்புறம் எப்படி மத்தவங்க கூட பழக முடியும்? ஆனா இவன் என்னடான்னா போலீஸுக்கு பயந்து ஓடினான். திருடனாச்சே, போலீஸ் துரத்தினாங்க. விட்ருவாங்களா? 

ஒரு இடத்தில இவன் திருட போறான். திருட போனா, திருடிட்டு வரவேண்டியதுதானே. அங்க ஒரு விதவையை பாக்றானாம். அவளை கூடவே.......................... தாவ்வீட்டுக்கு கூட்டியாரானாம். தேவயா? கடேசில அவளை கல்யாணம் செஞ்சுகுறான். இதுல வே..........ற அந்த திருட்டுகும்பல்ல ஒரு பொண்ணாம். அந்த பொண்ணுக்கு வேற வேல இல்ல போல, இவன லவ்வுது. அப்..........................டி போவுது கத. 

இந்தப் படத்தை எம்.ஜி.ஆருக்கு போட்டு காட்றாங்க. அவர் சும்மா இருப்பாரா? தமிழ் படத்துக்கு ஏத்த மாதிரியும், தனக்கு சரிப்பட்டு வர்ற மாதிரியும் அங்கங்க மாத்தினார். எப்டீ.....................?

யாருமில்லாத ஒரு சின்ன பையன். அவனுக்கு பசிக்குது. யாரும் சாப்பாடு குடுக்கல. என்ன செய்வான் பாவம்? திருடுறான். திருடிகிட்டே.............. பெரியவனாகிறான். பெரியவன் ஆனப்புறம் என்ன மாறவா போறான்? அப்பவும் திருடன்தான். போலீஸ் துரத்துது. ஆனா நல்லவன். திருடின பணத்துல ஏழைங்களுக்கு உதவுறான். 

அங்க ஒரு மோசமான கும்பல். அந்த கும்பல்ல உள்ளவங்க, அவங்க  தேவைங்களுக்காக, கெட்ட கெட்ட பழக்கத்தல்லா...........ம் அவனுக்கு சொல்லி குடுத்துர்றாங்க. அந்த கும்பல்ல ஒரு பொண்ணு. அவ இவனை லவ்வுறா. 

இவன் ஒரு இடத்தில திருட போறான். அங்க ஒரு விதவை பொண்ணு ஒரு ஆபத்துல சிக்கியிருக்கா. அவளை காப்பாத்தி தன் கூட கூட்டியாந்துர்றான். ஹிந்தி படத்தில விதவை பொண்ண கல்யாணம் செஞ்சுக்கிற மாதிரி இல்லாம, இதுல அவளை சகோதரியாய் நினைக்கிறான். இந்த சகோதரி, சகோதரனை திருத்த ட்ரை பண்றா. 

திடீர்னு அவன் இருக்கிற ஊர்ல தீப்பிடிக்குது. இவன் நிறைய பேரை காப்பாத்துறான். ஆனா அவன் தீக்கு நடுவில மாட்டிக்கிறான். ஆபத்தான நிலையில இருக்கான். இந்த தீ விபத்தில மாட்டிகிட்டவங்களை, தன் உயிருக்காக கூட பயப்படாம, மத்தவங்களை காப்பாத்தினான்ல, அவனுடைய இந்த  நல்ல குணத்தாள,  எல்லாரும் அவனை புரிஞ்சுக்குறாங்க. அதனால் கடவுள்ட்ட அவன் உயிருக்காக pray பண்றாங்க. பாட்டெல்லாம் பாடறாங்க. 

இப்டீல்லாம் ஜனங்களுக்கு புடிக்கிற மாதிரி, ஹிந்தி கதையில எம்.ஜி.ஆர். changes பண்ணார். 

வசனம் எழுத ஆள் புடிச்சாச்சு, கே. சொர்ணம். அவர் வேலைய ஆரம்பிச்சுட்டார். ஆரம்பத்தில எஸ்.எஸ்.வாசன் எம்.ஜி.ஆர். செஞ்ச மாற்றங்களுக்கு ஒத்துகிட்டதால, ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு. 

ஆ.......ங், எனக்கு தெரியும் நீங்க கண்டுபுடிச்சிருப்பீங்க. 

அதே.............தான். ‘ஒளி விளக்கு’. அந்த படத்துக்கு இப்படித்தான் பேர் வச்சுட்டாங்க. எம்.ஜி.ஆரும் இந்தப் படத்தை, தான் நடிச்ச படங்கள்ல, இந்தப் படத்தை நூறாவது படமாக அறிவிச்சாராம். 

அதுக்கப்புறமா பிரச்ன ஆரம்பிச்சிருச்சு. ஆரம்பத்தில எம்.ஜி.ஆர் சொன்ன மாற்றங்களுக்கு “சரி.............சரி.....”ன்னு தலைய ஆட்டிட்டு, அதுக்கப்புறமா கதைல இருந்த மாதிரி படத்தை முடிக்கிறதா சொல்லிட்டாங்க. இதுக்கெல்லாம் எம்.ஜி.ஆர் அவ்ளோ சீக்கிரமா ஒத்துக்குவாரா என்ன. என்ன நடந்துச்சு? ஷூட்....................டிங் நின்...............னு போச்....................சு........................ கொஞ்ச நாளாச்சு. ஷூட்டிங் நடக்கல.  ரெண்டு பார்ட்டியும் உக்காந்து பேசி, ஒரு வழிக்கு வந்துட்டாங்க. என்ன பண்றது, படம் முன்னேறணுமே. ஷூட்டிங்கும் தொடர்ந்துச்சு. 

MGR தீ விபத்தில சிக்கி, உயிருக்கு போராட்ற சமயத்தில ஒரு பாட்டு இருக்குல்ல, வாலி எழுதிய “ஆண்டவனே உன் பாதங்களை”னு ஒரு பாட்டு, இந்தப் பாட்டோட காட்சிகளை, MGR விருப்பப்படி, கதைப்படி ஷூட் செஞ்சாங்களாம்.  

அந்த ஹிந்தி பாட்டு


https://www.youtube.com/watch?v=k0qCqt4IWgc

MGR நடிச்ச நிறை...............ய படங்கள் இப்டி ப்ரச்னை வந்துதான் ஷூட்டிங் நடக்குமாம். இவருக்கு புடிச்சது தயாரிப்பாளர்களுக்கு புடிக்காது, அவங்களுக்கு புடிக்காதது இவருக்கு புடிக்கும். தயாரிப்பாளர்கள் கதைப்படி எடுக்கணும்னு சொல்வாங்க. எம்.ஜி.ஆரோ கருத்துப்படிதான் எடுக்கணும்பார். 

படத்தை பாக்குறவங்களுக்கு நல்ல கருத்தை சொல்லணும், நம்பிக்கையை கொடுக்கணும், தன் படத்தை பாத்துட்டு ஜனங்கள் நல்ல வழியில நடக்கணும், அதே சமயத்தில படமும் எல்லா.....ரும் விரும்பும்படி ஜனரஞ்.................சகமா இருக்கணும்னு பெரும்பாலும் MGR விரும்புவாராம். அதுவும் சரிதானே. 

இதுலதான், இவருக்கும், அவங்களுக்கும் முரண்பாடு ஏற்படும். ஆனா படம் ரிலீஸ் ஆச்சுன்னா, படம் ஓஹோ...................ன்னு ஓடி, வசூல் பிச்..............சுகிட்டு போகுமே, அப்போ ரெண்டு பேருமே சேக்கா போட்டுக்குவாங்க. அப்புறமா பாருங்களேன், அதே..... தயாரிப்பாளருங்க, MGR வீட்ல போயி, அவரோட கால்ஷீட்டுக்காக தேவுடு காப்பாங்களாம்.  

இதெல்லாம் வாழ்க்கைல ஜகஜம்ப்பா. 
 

- Oneindia Tamil

Heezulia  மீண்டும் சந்திப்போம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Feb 20, 2018 5:07 pm

ஒளி விளக்கு

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 7 3838410834 திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ? - Page 7 3838410834



avatar
Guest
Guest

PostGuest Tue Feb 20, 2018 8:54 pm

நன்றி. ஆஷா போஷ்லே பாடிய இனிமையான ஆனால் சோகப்பாடல். நேரடியாக இணைத்திருக்கலாமே!

மேலே மனுவில் YouTube  ஐகானை கிளிக் செய்து லிங்கை ஒட்டி insert . அவ்வளவுதானே!



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Feb 20, 2018 9:20 pm

20.02.2018 

நீங்க சொன்னபடிதான் செஞ்சேன் மூர்த்தி. ஆனா எனக்கு வரலியே. இதுக்கு முன்னால Youtube அனுப்பியிருக்கேன். ஆனா இந்த தடவ வரமாட்டேன்னு என்கூட டூ விட்டுருச்சு போல. என்னன்னு தெரியல. அதுக்கு நான் என்ன செஞ்சேன் மூர்த்தி? நீங்கதான் கேட்டு சொல்லுங்க.  



ஆனா இப்ப ட்ரை செய்யலாமேன்னு செஞ்சேன். வந்துருச்சு பாருங்க. என்கூட சேக்கா போட்டுருச்சு. அப்போ என்னவோ கோவம் போல. 

மூர்த்தி, மூர்த்தி, அதை நீங்க ஏதாவது செஞ்சுராதீங்க. பாவம். இப்பதான் சரியாபோச்சுல்ல. விட்ருங்க. 

Heezulia

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 21, 2018 12:04 pm

உங்களுக்கு  YouTube  காணொளி இணைப்பதில் பிரச்சனை ஏற்பட்டது  உண்மைதான் .
அதற்கு காரணம் YouTube  காணொளிகளை upload செய்யும் போது upload செய்பவர்கள் சில வசதிகளை டிசபிள் செய்து விடுவார்கள். அதாவது வேறொரு தளத்தில் பார்க்க முடியாமல், எம்பெட் செய்ய முடியாமல், தனிப்பட்ட காணொளியாக இப்படி சில வசதிகளை நீக்கி விட்டால்  அவை வேறு பக்கங்களில் செயல்படாது.

அப்படி எம்பெட்  முறை  டிசபிள் செய்தால் வேறு பக்கங்களில் பார்க்க முடியாது,மீண்டும் YouTube  ஐ கிளிக் செய்து அங்கே சென்று பார்க்க வேண்டும்.

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5830
இணைந்தது : 03/12/2017

Postheezulia Wed Feb 21, 2018 12:07 pm

21.02.2018

சத்யா ஸ்டூடியோ. MGR படம். படப்பிடிப்பு நடந்துட்டு இருந்துச்சு. MGR படம்னா அவரும் அங்க இருந்திருப்பார்ல. நான் சொல்றது சரியா? ஆமா  அவர் அங்க இருந்தார். கவிஞர் முத்துலிங்கம்  வந்தார், அதுவும் MGRஐ பார்க்க. பார்த்தார்.

MGR கேட்டார், “இந்தப் படத்தில எந்த பாட்டு எழுதியிருக்கே?” 

“நான் எந்த பாட்டும் எழுதலியே.”

MGRக்கு  அதிர்ச்சியாம். “எழுதலியா? ஏன் எழுதல?”

“என்னை யாரும் பாட்டு எழுத கூப்டல.”

அந்த சமயத்தில, முத்துலிங்கம் பாட்டெல்லாம் ரொம்ப பிரபலமாம். அவர் தன் படத்தில பாட்டு எழுதலேன்னு தெரிஞ்சவுடனே, MGRக்கு கோவம் வந்துருச்சாம். படப்பிடிப்பில நின்னுட்டு இருந்த ப்ரொடக் ஷன் மேனேஜரை கூப்ட்டார்.

“முத்துலிங்கம் பாட்டு இந்தப் படத்தில வேணும்னு சொல்லியிருந்தேனே. ஏன் அவரை கேக்கல?”

“நாங்க பாக்கும்போது அவர் இல்ல”

“இப்பதான் வந்துட்டார்ல. அவர வச்சு ஒரு பாட்டு எழுதி வாங்குங்க.”

“இந்தப் படத்துக்கு தேவையான பாட்டு எல்லாமே........ படமாயிருச்சு. புதுசா எந்த பாட்டையும் சேக்க ச்சான்ஸே..... இல்ல. படம் வேற கடேசி கட்டத்தில இருக்கு. புது பாட்டெல்லாம் சேக்க முடியாது” ப்ரொடக் ஷன் மேனேஜர் சொல்லிட்டார்.

MGRக்கு  ஒரு மா.....திரியா போச்சு. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சடையப்ப செட்டியாரையும், டைரக்டர் ஸ்ரீதரையும் கூப்ட்டனுப்பினார். முத்துலிங்கத்தை அவங்கள்ட்ட காட்டி, “இந்தப் படத்தில இவரோட ஒரு  பாட்டை சேக்கணுமே" ன்னு MGR சொன்னார். 

“படம் முடியுற கட்டத்தில இருக்கு. தவிர, பாட்டை சேக்கிற மாதிரி எந்த situationஉம் இந்தப் படத்தில இல்ல.”னு ப்ரொடக் ஷன் மேனேஜர் சொன்னதையே இவங்களும் சொல்லிட்டாங்க. 

“காட்சியும் தேவையில்ல, situationஉம் தேவையில்ல. இவரோட  ஒரு பாட்டை ரெக்கார்ட் செஞ்சுட்டு சொல்லி அனுப்புங்க அதுக்கப்புறம் ஷூட்டிங்கை வச்சுக்கலாம்"னு கண்டிப்பா சொல்லிட்டு  MGR போயிட்டார். 

இந்த சூழ்நிலையில முத்துலிங்கம், “ச்சே, நாம இங்க வரபோயிதானே இப்படிப்பட்ட ப்ரச்ன வந்துருச்சு”ன்னு நெனச்சு வருத்தப்பட்டு நின்னார். 

அப்புறம் என்ன, MGR சொன்ன பிறகு, அதுக்கு அப்பீல் உண்டா? முத்துலிங்கத்துகிட்ட பாட்டை வாங்கி.............., ரெக்கார்ட் செஞ்சு..........., வேற வழி?

அது என்ன பாட்டு? என்ன படம்? MGR கோவத்ல உருவான அந்த பாட்டு, “தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து"
படம் உங்களுக்கு இப்போ தெரிஞ்சிருக்கும். ஆமா 'மீனவ நண்பன்'.


Heezulia  மீண்டும் சந்திப்போம்

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 21, 2018 12:12 pm

அப்பீல் இல்லைதான். ஆனால் எல்லாப் பதிவிலும் பார்த்தேன். அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறதே ஏன்?

Sponsored content

PostSponsored content



Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக