புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10 
49 Posts - 60%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10 
44 Posts - 60%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்


   
   

Page 6 of 29 Previous  1 ... 5, 6, 7 ... 17 ... 29  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 6:47 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 9:32 pm

22.12.2017

MSV அறிமுகப்படுத்திய பாடகர்கள் :

P ஜெயசந்திரன் – மணிப்பயல் 1973 


ஜாலி ஆப்ரஹாம் – வணக்கத்துக்குரிய காதலியே 1978

AV ரமணன் – மன்மதலீலை 1976

TL மகராஜன் – ஒரு வீடு ஒரு உலகம் 1978

சிவாஜிராஜா – அன்புள்ள அத்தான் 1981

சந்திரபோஸ் – ஆறு புஷ்பங்கள் 1977

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 9:41 pm

22.12.2017


சரிதா இத்............தான பேருக்கு பின்னணி குரல் கொடுத்திருக்காராம்.

ப்ரகதி - வீட்ல விசேஷங்க

நக்மா – காதலன், பாஷா, love birds , அரவிந்தன்

மீனா – எஜமான், ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி

நதியா – மிஸ்டர் குமரன், த்ருஷ்யம்

சௌந்தர்யா – அந்தப்புரம்

மதுபாலா – அழகன்

சிநேகா – புன்னகை தேசம்

ராதா – எங்க சின்ன ராசா

விஜயசாந்தி – போலீஸ் லாக்கப், மன்னன்

சுஷ்மிதா சென் – ரட்சகன்

தபு – சிநேகிதியே, காதல் தேசம்

ஜெயபாரதி – வருஷம் 16


Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 9:49 pm

22.12.2017

தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு ரொம்ப கொஞ்சமா இருக்கு.

தமிழ் சினிமா பேச ஆரம்பிச்சு பல வருஷங்கள் ஆகியும்,
விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலதான் பெண்
இயக்குனர்கள் வந்து போயிருக்காங்க. இதிலும் பெருசா
பேசப்பட்டவங்க என யாருமே இல்லாததும் 
இன்னொரு குறை. அந்த குறையை போக்க பல பெண்கள் சினிமாவில காலடி எடுத்து வச்சாங்க.

1936ல TP ராஜலட்சுமி 'மிஸ் கமலா' என்கிற தன் நாவலையே படமாக இயக்கி இருக்கார். அதற்கப்புறம் வந்த 'மதுரை வீரன்' (1938) படத்தையும் இவர் இயக்கினார். 

இவருக்கு அப்புறம் கிட்டத்தட்ட முப்பத்தஞ்சு வருஷம் கழிச்சு தெலுங்கில ‘மீனா’ன்னு படத்தை 1973ல விஜயநிர்மலா இயக்கினார். இவர் இயக்கிய 'ராம் ராபர்ட் ரஹீம்' படம் 1980ல இதே பேர்ல தமிழில் ரிலீஸ் ஆச்சு.

இடையில் பானுமதி, சாவித்திரின்னு ஆசைக்கு ஒண்ரெண்டு படங்கள டைரக்ட்டி பார்த்துக் கொண்டதோடு சரி. அதற்கிடைல யாராச்ச்சும் வந்து போனாங்களா இல்ல, வராமலே போனாங்களான்னு தகவல்கள் தெரியல. 

1980ல வந்த 'மழலைப் பட்டாளம்' திரைப்படத்தின் மூலமா இயக்குனரா அறிமுகமானார் நடிகை லட்சுமி. ஒரு கலகலப்பான குடும்பக் கதையா அமஞ்ச இந்தப் படம், இன்னிக்கும் ரசிச்சு பார்க்கும் படங்களில் ஒண்ணா இருக்கு.

80களில் பிரபல நடிகையாக இருந்த ஸ்ரீபிரியா 'சாந்தி முகூர்த்தம்' திரைப்படத்தின் மூலமா 1984ல இயக்குனரானார். நீண்ட இடைவெளிக்கு பின்னால ‘நானே வருவேன்’1992, ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ 2014 ஆகிய திரைப்படங்களை இயக்கினார்.

இயக்குநர் P. ஜெயதேவி ‘விலாங்கு மீன்’ என்ற திரைப்படம் மூலமா இயக்குநராக அறிமுகமானார். பல திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை எழுதியிருக்கார். இவர் இயக்குநர் வேலு பிரபாகாரனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. 

அவருக்குப் பின்னால வந்தவங்களாக சுஹாசினி மணிரத்னம், நடிகை அம்பிகா, V ப்ரியா, மதுமிதா, JS நந்தினி & சமீபமாய் லட்சுமி ராமகிருஷ்ணன், சுதா கொங்கரா, கிருத்திகா உதயநிதி, ரஜினியின் இரு மகள்கள். 

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 9:57 pm

22.12.2017

நடிகர் திலகம் படத்தின் கால்ஷீட் பற்றி அவர்கிட்ட யாராவது பேச வந்தா, என் தம்பி சண்முகத்தை போய் பாருங்கன்னு நடிகர் திலகம் சொல்லிட்டு, அவர் அக்கடா ......................... ன்னு உக்காந்துருவாராம். அவருடைய கால்ஷீட் விஷயங்களை எல்லாம் முடிச்சுட்டு, சண்முகம் நடிகர் திலகம்கிட்ட அவருடைய ஷூட்டிங் நாளை பற்றி பேசுவாராம். 

நடிகர் திலகத்துக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர்கள்ல சி.வி.ராஜேந்திரனும் ஒருத்தராம். இந்த டைரடக்கரும், சண்முகமும் ஒருநாள் ஒரு ஃபோட்டோவை நடிகர் திலகத்திடம் காட்டி, “உங்க அடுத்த படத்ல இவர் அறிமுகம் ஆகப் போகிறார்” னு சொன்னாங்களாம். அந்த photoவை பார்த்த நடிகர் திலகம் ஆச்சரியமாய், சந்தேகத்துடனும், ஒரு புன்சிரிப்புடனும், இவர் நடிப்பாரா, நடிக்க வருமான்னு நெனச்சாராம். அந்த photoல இருந்தது வேற யாருமில்லைங்க, சாட்சாத் அவர் மகன் பிரபுதான்.

அப்பாவுக்கு மகன் நடிப்பாரான்னு சந்தேகம் இருந்தாலும், மகன் நடிக்க ஆசைப்பட்டு, நடிக்க தயாராயிட்டாராம். சிவாஜிக்கு அந்த சந்தேகம் வந்ததுக்கு காரணம், அவர்கூட அவருடைய மூத்தமகன் ராம்குமார் நடிச்ச அறுவடைநாள் படம் ஓடல. அதனால ராம்குமார் அதுக்கப்புறம் நடிக்கிறதை விட்டுட்டார். அதனாலதான் பிரபு நடிக்கிறதுக்கு சிவாஜி தயங்கினார். அப்புறமா சம்மதிச்சார். சங்கிலி 1982 முதல் முதலா அப்பாவும் மகனும் சேர்ந்து நடிச்சாங்க. ஆனா பிரபு போலீஸ் ஆfeeசரா வரணும்னு சிவாஜி ஆசைப்பட்டாராம். தலையெழுத்து யாரை விட்டுச்சு?


Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 10:42 pm

22.12.2017

ரோஹிணி [1953] இப்படி ஒரு தமிழ் படம் வந்துச்சாம். நடிகை மாதுரிதேவி இந்தப் படத்தை தயாரிச்சாராம். இவர்தானான்னு சொல்லுங்க.


தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 XUk9IVgbT0K7Z2SHXjee+மாதுரிதேவி

இந்தப் படத்துக்கு ம்யூசிக் போட்ட ஜி. ராமநாதனை மாதுரி கூப்ட்டாராம், அவரும் வந்தாராம். பாட்டுக்களை மருதகாசி எழுதினாராம். இவரும் ராமநாதனை போலத்தானாம்ல, பாட்டு எழுதுற விஷயத்தில யா .................. ரும் தலையிட கூடாதாம். 

ரோஹிணி ஒரு பெங்காலி படத்தின் ரீமேக்காம். அதனால மாதுரி அந்தப் பெங்காலி படத்தின் பாட்டு ரெக்கார்டை எல்லாம் போட்டு காட்டி இதுபோல ம்யூசிக் போடுங்கன்னு ராமநாதன்ட்ட சொன்னாராம். போதுமே, இது ராமநாதனுக்குத்தான் பிடிக்காதே. 


மாதுரியின் தொல்லையை தாங்கமாட்டாம, அந்தப் படத்தின் பாதிலியே வெளியே வந்துட்டாராம். அப்புறமா KV மகாதேவன்ட்ட போயி நடந்ததை சொல்லி, அவரை அந்தப் படத்துக்கு இசையமைக்க சொன்னாராம். KVM மும் சரீன்னுட்டு அந்தப் படத்துக்கு ம்யூசிக் போட்டாராம். 

பொன்முடி [1950] ன்னு ஒரு படமாம். இதுல நரசிம்ம பாரதி கதாநாயகனாம். 



தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 OoHCe50Rse4DEmWCAuuQ+நான்கண்டசொர்க்கம்’படத்தில்நாரதராக
நாரதரா இருப்பவர்தான் நரசிம்ம பாரதியாம்.

இந்தப் படத்தில இவருக்கு எல்லா பாட்டையும் ராமநாதன் பாடினாராம்.

'அல்லி பெற்ற பிள்ளை' ன்னு ஒரு படம். இதுக்கு KVM இசையமைச்சிருந்தார். அந்த படத்தில "எஜமான் பெற்ற செல்வமே" பாட்டு ராமநாதன்தான் பாடியிருந்தாராம். பாட்றது மட்டுமில்லாம நடிக்கவும் செஞ்சிருக்காராமே. 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்கிற படத்தில முனிவரா நடிச்சிருப்பாராமே. 

சேலத்துல 'மாடர்ன் தியேட்டரஸ்'னு ஒரு ஸ்டூடியோ இருக்குதாமே. அதுல ஒருத்தர் துணை நடிகரா இருந்தாராம். இவர்தான், சீர்காழி கோவிந்தராஜன். இவர் திறமையை ராமநாதன் பார்த்தாராம். அவர்கிட்ட போயி, "வேணும்னா பாரு, நான் சொல்றேன், நீ சிறந்த பாடகனா வருவே"ன்னு ராமநாதன் சொன்னாராம். அதேமாதிரி நடந்துசுல்ல, நடந்துச்சுல. 

கோமதியின் காதலன் [1955] படத்தில ராமநாதன்தான் ம்யூசிக். அதுல கோவிந்தராஜனை பாட்டுக்களை பாட வச்சாராம், ராமநாதன். 

Heezulia 


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 10:58 pm

22.12.2017

‘ஓர் இரவு’ன்னு ஒரு நாடகம். இது சினிமாவாக உருவாச்சு. எப்படி ? அண்ணாவிடம் சொல்லியிருக்காங்க கதை எழுத சொல்லி. அவர் என்ன சொன்னார் தெரியுமா? "கணக்குபிள்ளை எழுதுற ஒரு சின்ன மேஜை, பேப்பர், வெத்தல பாக்குப் பெட்டி இதையெல்லாம் வச்சுட்டு போங்க. காலையில் வாங்க"ன்னு சொன்னாராம். ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு போனாராம். அங்க இருந்த ஒரு குடிசை மாதிரி இருந்த ஒரு அறைல போய் உக்காந்தாராம். ஒரே............. இரவில் அந்தப் படத்துக்கு திரைக்கதையும், வசனமும் எழுதி முடிச்சாராம், அண்ணா.

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 11:04 pm

22 .12 .2017

பீம்சிங் ‘சகோதரி’ என்ற படத்தை டைரக்ட் செஞ்சார். படமும் முடிஞ்சு தயாரானது. எல்லார்கூடயும் சேர்ந்து மெய்யப்ப செட்டியாரும் படத்தைப் பார்த்தார். பார்த்து முடிஞ்சதும் ‘ஒரு நாள் டைம் கொடுங்க’ன்னுட்டு கெளம்பி போயிட்டாராம்.

அடுத்த நாள், “ஏதோ ................... சரியில்லாத மாதிரி இருக்குதே. படத்தில் எமோஷன் எல்லாம் சரியா இருக்கு. உணர்ச்சிபூர்வமான இந்தப் படம் இப்படியே போனா, ரொம்ப இறுக்கமா இருக்கும். சில இடங்கள்ல கொஞ்சம் காமெடி போட்டு சரி செஞ்சா படம் நல்லா இருக்கும். இல்லேன்னா படம் ஒரே சோகமா இருக்கும்’’னு சொன்னார். உடனே ‘‘சந்திரபாபுவை வச்சு ஒரு காமெடி ட்ராக் வச்சுரலாமே”ன்னு ஒரு சஜெஷன் கொடுத்தாராம்.

சந்திரபாபுவை வச்சுதான் சகோதரி படத்தில காமெடி ட்ராக் சேர்க்கப் போறாங்கன்னு சந்திரபாபுவுக்கு தெரிய வந்துச்சு. அந்த சான்ஸை மிஸ் பண்ண அவர் விரும்பல. ஒரு கணிசமான தொகையை சம்பளமாகக் கேட்டாராம். அதுக்கு செட்டியாரும் ஒத்துகிட்டாராம்.

படத்தைதான் எடுத்து முடிச்சாச்சே, ரிலீஸ் செஞ்சுரலாம்னு நெனக்காம, அதை எப்படி மெருகேற்றலாம் என்கிற அக்கறை மெய்யப்ப செட்டியாருக்கு எப்பவுமே இருக்குமாம். அதனாலதான் சகோதரி படம் வெற்றிப்படமா வந்துச்சாம்.


Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 11:11 pm

22 .12 .2017

B லெனின் – இவர் தமிழகத்தின் சிறந்த எடிட்டர்களில் ஒருவர் & இயக்குனர்.

B கண்ணன் – இவர் பாரதிராஜா படங்களுக்கு ஒளிப்பதிவாளர்.

இவங்களுக்கு என்னான்னு கேக்குறீங்களா? இவங்க ரெண்டுபேரும் பீம்சிங்கின் மகன்களாம்.

பீம்சிங் முதல் முதலா செந்தாமரைனு ஒரு படத்தை டைரக்ட் செஞ்சார். இந்தப் படம் சீக்கிரமா ரிலீஸ் செய்ய முடியாத நிலையில், அம்மையப்பன் என்கிற படத்தை டைரக்ட் செஞ்சு ரிலீஸ் ஆச்சு. ஆனா இந்தப் படம் ஓடல. ஆனா பீம்சிங் தலைல கைய வச்சுட்டு சோர்ந்து உக்காரலியாம். இந்த சமயத்தில்தான் அவர் சுறுசுறுப்பா வேல செஞ்சாராம். எப்படி ? ‘பா’ வரிசை படங்களையா ..... எடுக்க ஆரம்பிச்சார். எல்லா படங்களும் வெற்றி. AVM சரவணன் பீம்சிங்கை “இவர் பீம்சிங் இல்ல, பாம்சிங்”ன்னு சொன்னாராம்.

Heezulia


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5845
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Dec 22, 2017 11:22 pm

22 .12 .2017

விஜயகுமாரி நடிச்ச சாரதா நல்லா ஓடுனதால, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் AL சீனிவாசன் மெஜஸ்டிக் ஸ்டூடியோவை வாங்கினாராம். அதுக்கு சாரதா ஸ்டூடியோன்னு பேர் வச்சாராம்.

பாதகாணிக்கை படம் எடுக்கும்போது, விஜயகுமாரிக்கு மேக்கப் சரியா வரலியாம். அப்போ நல்ல மேக்கப் போட்றதுன்னா ஹரிபாபுங்கறவர்ட்ட மேக்கப் போட்டுக்குவாங்களாம். அதனால விஜயகுமாரியையும் அவர்ட்ட அனுப்பினாங்களாம். மேக்கப் போட்றதுக்கு ஹரிபாபுவின் வீட்டுக்குத்தான் போகணுமாம். அப்படி விஜயகுமாரி போயிருந்தப்போ, அங்க NTR மேக்கப் போட்றதுக்கு வந்திருந்தாராம். ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்களாம். அப்போ NTR விஜயகுமாரியை தெலுங்கு படத்தில நடிக்க கூப்ட்டாராம். விஜயகுமாரி தனக்கு தெலுங்கு தெரியாதுன்னு சொல்லி, நடிக்க வரமாட்டேன்னு சொல்லிட்டாராம். தெலுங்கு படிக்கிறதுக்கு ஈஸிதான்னு சொல்லி, அவரே சொல்லிகொடுப்பதாவும் NTR சொன்னாராம். விஜயகுமாரி ஊஹும் சொல்லிட்டாராம்.

Heezulia

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Dec 23, 2017 11:03 am

heezulia wrote:22.12.2017

‘ஓர் இரவு’ன்னு ஒரு நாடகம். இது சினிமாவாக உருவாச்சு. எப்படி ? அண்ணாவிடம் சொல்லியிருக்காங்க கதை எழுத சொல்லி. அவர் என்ன சொன்னார் தெரியுமா? "கணக்குபிள்ளை எழுதுற ஒரு சின்ன மேஜை, பேப்பர், வெத்தல பாக்குப் பெட்டி இதையெல்லாம் வச்சுட்டு போங்க. காலையில் வாங்க"ன்னு சொன்னாராம். ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு போனாராம். அங்க இருந்த ஒரு குடிசை மாதிரி இருந்த ஒரு அறைல போய் உக்காந்தாராம். ஒரே............. இரவில் அந்தப் படத்துக்கு திரைக்கதையும், வசனமும் எழுதி முடிச்சாராம், அண்ணா.

Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1254438

தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 3838410834 தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 6 3838410834



Sponsored content

PostSponsored content



Page 6 of 29 Previous  1 ... 5, 6, 7 ... 17 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக