புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
284 Posts - 45%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 4 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !


   
   

Page 4 of 34 Previous  1, 2, 3, 4, 5 ... 19 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 19, 2016 8:26 am

தாக்கல் செய்யப்பட்டது , பதிவு செய்யப்பட்டது - எது சரி ?

வேட்பு மனு தாக்கல் செய்தார் என்று பத்திரிகைகளில் படிக்கிறோம் .

"தாக்கல் " என்ற சொல்லுக்கு " அடித்தல் " அல்லது " மோதுதல் " என்று பொருள் .

திருடன் போலீஸ்காரரைத் தாக்கினான் என்று செய்தித்தாள்களில் படிக்கிறோம் .

எனவே

" வேட்புமனு பதிவு செய்தார் " என்று கூறவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 19, 2016 9:30 am

காலம்பற , காலம்பெற - எது சரி ?

காலம்பற எழுந்து , வாசல் தெளித்து , கோலம் போடவேண்டும் .

காலம்பெற எழுந்து , வாசல் தெளித்து , கோலம் போடவேண்டும் .

காலம்பெற = விடியற்காலை என்று பொருள் .

எனவே இரண்டாவது வாக்கியமே சரி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 19, 2016 10:00 am

ஏமாந்தான் , ஏமாறினான் - எது சரி ?

ஏமாந்தான் = மகிழ்ந்தான் என்று பொருள் .

மாந்தினான் = குடித்தான்

கள் மாந்தினான் என்றால் கள் குடித்தான் என்று பொருள்.

எனவே

ஏமாறினான் / ஏமாறிப் போனான் / ஏமாற்றமடைந்தான்

என்று எழுதுவதே பொருத்தமானது .

" கம்பன் ஏமாந்தான் ! " என்ற சினிமாப் பாட்டில் உள்ள தவறைக் காண்க !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 10:02 am

அருமையான திரி ஐயா, தொடருங்கள் புன்னகை.................. சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 10:07 am

யினியவன் wrote:இரகசியம் சொல்லலாம்
இரகசியம் என்று சொல்லி
சொல்லுதல் கூடாது புன்னகை

அது சரி புன்னகை............... சிரி சிரி சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 10:09 am

M.Jagadeesan wrote:செல்வர் , செல்வந்தர் - எது சரி ?

செல்வரைக் குறிக்கும் வடசொல் தன்வந்த என்பது.

அதை தனவந்தர் என்று கூறுவதில் இருந்து மருவி வந்தது செல்வந்தர்.

எனவே செல்வர் என்பதே சரி .

அப்போ, 'போகிறார்கள்' என்று பொருள் பட நாம் சொல்லும் வார்த்தையும் ...."செல்வர்" தானே ஐயா?..............இரண்டுக்கும் ஒரே வார்த்தையா?.....கொஞ்சம் விளக்குங்களேன்! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 10:11 am

M.Jagadeesan wrote:காலம்பற , காலம்பெற - எது சரி ?

காலம்பற எழுந்து , வாசல் தெளித்து , கோலம் போடவேண்டும் .

காலம்பெற எழுந்து , வாசல் தெளித்து , கோலம் போடவேண்டும் .

காலம்பெற = விடியற்காலை என்று பொருள் .

எனவே இரண்டாவது வாக்கியமே சரி .

'காலம்பற' என்பது 'காலம்பெற' மருவு என்றே நினைக்கிறேன் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 19, 2016 10:58 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:செல்வர் , செல்வந்தர் - எது சரி ?

செல்வரைக் குறிக்கும் வடசொல் தன்வந்த என்பது.

அதை தனவந்தர் என்று கூறுவதில் இருந்து மருவி வந்தது செல்வந்தர்.

எனவே செல்வர் என்பதே சரி .

அப்போ, 'போகிறார்கள்' என்று பொருள் பட நாம் சொல்லும் வார்த்தையும் ...."செல்வர்" தானே ஐயா?..............இரண்டுக்கும் ஒரே வார்த்தையா?.....கொஞ்சம் விளக்குங்களேன்! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1211643

தமிழில் ஒரு சொல் பல பொருளைக் குறிக்கும் .

அரி = நாராயணன்

அரி = வெட்டு

மனைவி சமையலுக்குக் காய் அரிந்தாள் .

எனவே அரி என்ற சொல்லுக்கு இரு பொருள் உண்டு .

கடி = பல்லைக் கடித்தல்

கடி = காவல் , திருமணம்

இதுபோல செல்வர் என்ற சொல்லுக்கு பணக்காரன் என்றும் , எழுந்து செல்லுதல் என்றும் பொருள் உண்டு .





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 19, 2016 11:03 am

krishnaamma wrote:
M.Jagadeesan wrote:காலம்பற , காலம்பெற - எது சரி ?

காலம்பற எழுந்து , வாசல் தெளித்து , கோலம் போடவேண்டும் .

காலம்பெற எழுந்து , வாசல் தெளித்து , கோலம் போடவேண்டும் .

காலம்பெற = விடியற்காலை என்று பொருள் .

எனவே இரண்டாவது வாக்கியமே சரி .

'காலம்பற' என்பது  'காலம்பெற' மருவு என்றே நினைக்கிறேன் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1211644

நீங்கள் சொல்வது சரிதான் . ஆனால் எல்லோரும் காலம்பற என்றுதானே சொல்கிறார்கள் . இது பேச்சு வழக்கில் உள்ள சொல் . எழுத்து வழக்கில் வைகறை என்றும் விடியற்காலை என்றும்தான் எழுதுகிறார்கள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 19, 2016 11:26 am

M.Jagadeesan wrote:

தமிழில் ஒரு சொல் பல பொருளைக் குறிக்கும் .

அரி = நாராயணன்

அரி = வெட்டு

மனைவி சமையலுக்குக் காய் அரிந்தாள் .

எனவே அரி என்ற சொல்லுக்கு இரு பொருள் உண்டு .

கடி = பல்லைக் கடித்தல்

கடி = காவல் , திருமணம்

இதுபோல செல்வர் என்ற சொல்லுக்கு பணக்காரன் என்றும் , எழுந்து செல்லுதல் என்றும் பொருள் உண்டு .

மேற்கோள் செய்த பதிவு: 1211657

நன்றி ஐயா, தமிழில் ஒரு சொல் பல பொருளைக் குறிக்கும் என்று தெரியும் என்றாலும் இந்த சொல்லைப் பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன் புன்னகை............விளக்கத்துக்கு நன்றி ஐயா !.... அன்பு மலர்




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 4 of 34 Previous  1, 2, 3, 4, 5 ... 19 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக