புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
சிவா
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
432 Posts - 48%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
29 Posts - 3%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !


   
   

Page 3 of 34 Previous  1, 2, 3, 4 ... 18 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 18, 2016 7:54 am

தேநீரகம் , தேனீரகம் - இவற்றில் எது சரி ?

டீக் கடையைக் குறிக்கும் விளம்பரப் பலகையில் சிலர் " தேநீரகம் " என்றும் சிலர் " தேனீரகம் " என்றும் எழுதுகிறார்கள் . இவற்றில் எது சரி ?

தேநீர் + அகம்  = தேநீரகம்

எனவே தேநீரகம் என்று எழுதுவதே சரி .

தேனீரகம் என்றால் , " தேனீக்களின் வகை " என்று பொருள்படும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 18, 2016 8:02 am

தமிழ் இலக்கண நற்குறிப்புகளின் பங்களிப்பு , தொடருங்கள் M Jagadeesan . நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 18, 2016 8:54 am

கால்வாய் , வாய்க்கால் - எது சரி ?

இரண்டுமே சரி .

இலக்கணம் இல்லாததாயினும் இலக்கணம் உடையதைப் போல சான்றோர்களால் தொன்று தொட்டு வழங்கப்படுவது இலக்கணப் போலி எனப்படும். சான்று:

இல்முன் → முன்றில்

கால்வாய் → வாய்க்கால்

கோவில் → கோயில்

நகர்ப்புறம் → புறநகர்

தசை → சதை

கொம்பு நுனி → நுனிக் கொம்பு

நிலைமொழிகள் முன் பின்னாக மாறிவருதல் போலி. இவ்வாறு பயின்று வருதல் பிழை இல்லை என்று கருதப்படுகிறது.

இலக்கணப் போலி ,முதற்போலி , இடைப் போலி , கடைப்போலி என மூவகைப்படும் .

1.முதற்போலி - மஞ்சு -மைஞ்சு

2. இடைப் போலி - அரசன் - அரைசன்

3.கடைப்போலி - அறம் -அறன்





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 18, 2016 10:31 am

ராமன் , இராமன் - எது சரி ?



றகரமும் ரகரமும் சொல்லின் முதல் எழுத்தாக வாரா.

என்பது விதி .

எனவே இராமன் என்பதே சரி

ரங்கன் என்று எழுதாமல் அரங்கன் என்றே எழுதவேண்டும் .

ரவி என்று எழுதாமல் இரவி என்றே எழுதவேண்டும் .

ரோமம் என்று எழுதாமல் உரோமம் என்றே எழுதவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 18, 2016 11:54 am

M.Jagadeesan wrote:ராமன் , இராமன் - எது சரி ?



றகரமும்  ரகரமும்  சொல்லின் முதல் எழுத்தாக வாரா.

என்பது விதி .

எனவே இராமன் என்பதே சரி

ரங்கன் என்று எழுதாமல் அரங்கன் என்றே எழுதவேண்டும் .

ரவி என்று எழுதாமல் இரவி என்றே எழுதவேண்டும் .

ரோமம் என்று எழுதாமல் உரோமம் என்றே எழுதவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1211528
ஆர்வத்தை தூண்டுகின்றன , M Jagadeesan  ,நன்றி

ரகசியம்  வேண்டாம் --
இரகசியமாகவே இருக்கட்டும் . சரிதானே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 18, 2016 12:37 pm


சொல்லக்கூடாதது எது ?

பெண்ணிடம் இரகசியம் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 18, 2016 12:49 pm

இரகசியம் சொல்லலாம்
இரகசியம் என்று சொல்லி
சொல்லுதல் கூடாது புன்னகை




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 18, 2016 1:35 pm

அடையார் , அடையாறு - எது சரி ?

அடையாறு என்பது ஓர் ஆற்றின் பெயர் .

" அடையார் " என்றால் " சேரமாட்டார்கள் " என்று பொருள் .

சென்னையில் அந்த ஆறு ஓடுவதால் அடையாறு என்பதே சரி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 18, 2016 3:43 pm

செல்வர் , செல்வந்தர் - எது சரி ?

செல்வரைக் குறிக்கும் வடசொல் தன்வந்த என்பது.

அதை தனவந்தர் என்று கூறுவதில் இருந்து மருவி வந்தது செல்வந்தர்.

எனவே செல்வர் என்பதே சரி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 19, 2016 8:18 am

தக்க வைத்துக் கொண்டார் , தங்க வைத்துக் கொண்டார் - எது சரி ?

ஜெயலலிதா ஆட்சியைத் தங்க ( Retain ) வைத்துக் கொண்டார் என்பதே சரி .

தக்க என்ற சொல்லுக்கு " சரியான " என்பதே பொருளாகும்.

விருந்தினரைத் தக்க முறையில் உபசரித்தார் .

ஆசிரியர் கேட்ட கேள்விக்கு மாணவன் தக்க முறையில் பதிலளித்தான் .

எனவே " தக்க " என்ற சொல்லுக்கு " Retain " என்ற பொருள் இல்லை என்பதைக் கவனிக்கவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 3 of 34 Previous  1, 2, 3, 4 ... 18 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக