புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
14 Posts - 70%
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mruthun
நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_m10நம் தமிழை முறையாக அறிவோமே ! - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம் தமிழை முறையாக அறிவோமே !


   
   

Page 3 of 34 Previous  1, 2, 3, 4 ... 18 ... 34  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 17, 2016 8:53 am

First topic message reminder :

காற்பந்தா? கால் பந்தா? எது சரி ?

நாள் + கள் = நாள்கள்
கால் + கள் = கால்கள்
கோள் + கள் = கோள்கள்
வேல் + கள் = வேல்கள்
தாள் + கள் = தாள்கள்

இவ்விதியின் படி கால் + பந்து = கால்பந்து என்றே எழுதப் பெறல் வேண்டும். இவ்வாறு எழுதுவதும் பேசுவதும் ஏற்புடையதுதானா என்பதே நம் ஆய்வு.

இதற்கு நடைமுறையிலுள்ள பல எடுத்துக்காட்டுகளைக் காண்பது நன்று.

மேல் + கணக்கு
கால் + கடுக்க
பால் + பசு
நாள் + கோள்
பால் + பழம்
கால் + சட்டை
மேல் + படிப்பு
கால் + புள்ளி
நூல் + பா
மேல் + கொண்டு
பால் + குடம்

இவற்றுள் திரிவனவும் திரியாதனவும் உள. எல்லா இடங்களிலும் லகர ளகர வீறு வரும் மொழி க ச ப முன் திரியா என்பது தவறு. எங்குத் திரியும் எங்குத் திரியாது என்பதை இக்கால் பார்ப்போம். .

இவ்வகையில் இரண்டாம் வேற்றுமை உருபு தொகையிலும் வினைத் தொகையிலும் லகர ளகர வீறு திரியாது. ஏனையவற்றுள் திரியும்.

எடுத்துக் காட்டு:  

கொல் + களிறு = கொல்களிறு (கொல்லும், கொல்கின்ற, கொன்ற என்பவற்றின் தொகையே கொல்) இது வினைத் தொகையாகும்.  

நாள் + கோள் = நாள்கோள்  நாளும்கோளும் என்பதே உம்மைத் தொகையாக நாள்கோள் என ஆகியிருக்கின்றது.  

பால் + பழம் என்பதும் பால்பழம் என்றே புணரும். இதுவும் உம்மைத் தொகையாகும். இதன் விரி பாலும் பழமும். பாற்பழம் என்று எழுதினால் பால் போன்ற பழம் எனப் பொருள்பட்டு உவமைத்தொகையாகி விடும் .

பால் + குடித்தான் என்பது பால் குடித்தான் என்றே புணர வேண்டும். இது இரண்டாம் வேற்றுமை உருபுத் தொகையாகும். பாலைக் குடித்தான் என்பது இதன் விரி.

 கால் + சட்டை = காலில் அணியப் படும் சட்டை எனும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையாகும். இல் எனும் வேற்றுமை உருபும் அணியப்படும் எனும் பயனும் தொக்கி வருவதால் லகர வீறு திரிந்து காற்சட்டை என்றாகும்.

பால் + பசு - பாலைத்தரும் பசு பாற்பசு என்றாகும்.

மேல் + படிப்பு - மேற்படிப்பு

மேல் + கொண்டு - மேற்கொண்டு

மேல் + சென்று - மேற்சென்று  

கால் + புள்ளி = காற்புள்ளி என்றாகும்.

நூல் + பா = நூற்பா என்றாகும். இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாகும்.

பாலைக் கொண்டிருக்கும் குடம் பாற்குடமாகும். இதுவும் உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையே. பால் குடம் என்று எழுதினால் பாலும் குடமும் எனப் பொருளாகிவிடும்.

இந்நிலையில் , கால் + பந்து எனும் மொழிப் புணர்ச்சியில் லகர வீறு திரியுமா? திரியாதா? இங்கு வரும் கால் உறுப்பைக் குறித்ததா? பகுதியைக் குறித்ததா? இந்தப் பந்திற்கு ஏன் இப்பெயர் இடப்பெற்றது. கையால் தட்டப்படும் பந்து கைப்பந்தாகும். வலையில் போடப்படும் பந்து வலைப் பந்தாகும். மேசையில் ஆடப்படும் பந்து மேசைப் பந்தாகும். பூப் போன்றிருக்கும் பந்து பூப்பந்தாகும். அது போல காலால் உதைக்கப் படும் பந்தே கால் + பந்து . இது உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாதலால் நிலை மொழியில் லகரவீறு திரிதலே சரி.


காற்பந்தை கால் பந்து என்று எழுதினால் வேல் கம்பு , நாள் கோள், பால் பழம் போல் உம்மைத் தொகையாகி காலும் பந்தும் என்று பொருள்பட்டு விடும்.

எனவே காற்பந்து என்பதே இலக்கண விதிப் படி சரியானதாகும்.

உதவி : இணையம் . நம் தமிழை முறையாக அறிவோமே



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 18, 2016 7:54 am

தேநீரகம் , தேனீரகம் - இவற்றில் எது சரி ?

டீக் கடையைக் குறிக்கும் விளம்பரப் பலகையில் சிலர் " தேநீரகம் " என்றும் சிலர் " தேனீரகம் " என்றும் எழுதுகிறார்கள் . இவற்றில் எது சரி ?

தேநீர் + அகம்  = தேநீரகம்

எனவே தேநீரகம் என்று எழுதுவதே சரி .

தேனீரகம் என்றால் , " தேனீக்களின் வகை " என்று பொருள்படும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 18, 2016 8:02 am

தமிழ் இலக்கண நற்குறிப்புகளின் பங்களிப்பு , தொடருங்கள் M Jagadeesan . நன்றி நன்றி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 18, 2016 8:54 am

கால்வாய் , வாய்க்கால் - எது சரி ?

இரண்டுமே சரி .

இலக்கணம் இல்லாததாயினும் இலக்கணம் உடையதைப் போல சான்றோர்களால் தொன்று தொட்டு வழங்கப்படுவது இலக்கணப் போலி எனப்படும். சான்று:

இல்முன் → முன்றில்

கால்வாய் → வாய்க்கால்

கோவில் → கோயில்

நகர்ப்புறம் → புறநகர்

தசை → சதை

கொம்பு நுனி → நுனிக் கொம்பு

நிலைமொழிகள் முன் பின்னாக மாறிவருதல் போலி. இவ்வாறு பயின்று வருதல் பிழை இல்லை என்று கருதப்படுகிறது.

இலக்கணப் போலி ,முதற்போலி , இடைப் போலி , கடைப்போலி என மூவகைப்படும் .

1.முதற்போலி - மஞ்சு -மைஞ்சு

2. இடைப் போலி - அரசன் - அரைசன்

3.கடைப்போலி - அறம் -அறன்





இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 18, 2016 10:31 am

ராமன் , இராமன் - எது சரி ?



றகரமும் ரகரமும் சொல்லின் முதல் எழுத்தாக வாரா.

என்பது விதி .

எனவே இராமன் என்பதே சரி

ரங்கன் என்று எழுதாமல் அரங்கன் என்றே எழுதவேண்டும் .

ரவி என்று எழுதாமல் இரவி என்றே எழுதவேண்டும் .

ரோமம் என்று எழுதாமல் உரோமம் என்றே எழுதவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 18, 2016 11:54 am

M.Jagadeesan wrote:ராமன் , இராமன் - எது சரி ?



றகரமும்  ரகரமும்  சொல்லின் முதல் எழுத்தாக வாரா.

என்பது விதி .

எனவே இராமன் என்பதே சரி

ரங்கன் என்று எழுதாமல் அரங்கன் என்றே எழுதவேண்டும் .

ரவி என்று எழுதாமல் இரவி என்றே எழுதவேண்டும் .

ரோமம் என்று எழுதாமல் உரோமம் என்றே எழுதவேண்டும் .
மேற்கோள் செய்த பதிவு: 1211528
ஆர்வத்தை தூண்டுகின்றன , M Jagadeesan  ,நன்றி

ரகசியம்  வேண்டாம் --
இரகசியமாகவே இருக்கட்டும் . சரிதானே !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 18, 2016 12:37 pm


சொல்லக்கூடாதது எது ?

பெண்ணிடம் இரகசியம் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jun 18, 2016 12:49 pm

இரகசியம் சொல்லலாம்
இரகசியம் என்று சொல்லி
சொல்லுதல் கூடாது புன்னகை




M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 18, 2016 1:35 pm

அடையார் , அடையாறு - எது சரி ?

அடையாறு என்பது ஓர் ஆற்றின் பெயர் .

" அடையார் " என்றால் " சேரமாட்டார்கள் " என்று பொருள் .

சென்னையில் அந்த ஆறு ஓடுவதால் அடையாறு என்பதே சரி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 18, 2016 3:43 pm

செல்வர் , செல்வந்தர் - எது சரி ?

செல்வரைக் குறிக்கும் வடசொல் தன்வந்த என்பது.

அதை தனவந்தர் என்று கூறுவதில் இருந்து மருவி வந்தது செல்வந்தர்.

எனவே செல்வர் என்பதே சரி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 19, 2016 8:18 am

தக்க வைத்துக் கொண்டார் , தங்க வைத்துக் கொண்டார் - எது சரி ?

ஜெயலலிதா ஆட்சியைத் தங்க ( Retain ) வைத்துக் கொண்டார் என்பதே சரி .

தக்க என்ற சொல்லுக்கு " சரியான " என்பதே பொருளாகும்.

விருந்தினரைத் தக்க முறையில் உபசரித்தார் .

ஆசிரியர் கேட்ட கேள்விக்கு மாணவன் தக்க முறையில் பதிலளித்தான் .

எனவே " தக்க " என்ற சொல்லுக்கு " Retain " என்ற பொருள் இல்லை என்பதைக் கவனிக்கவேண்டும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 3 of 34 Previous  1, 2, 3, 4 ... 18 ... 34  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக