புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நவீன குடும்ப விளக்கு _சசி
Page 2 of 11 •
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
கோழிகள் கூவவில்லை என்றாலும்
சட்டென்று எழுந்திருக்க முடியவில்லை என்றாலும்
சிறிது படுக்கையில் உருண்டு புரண்டு
பார்த்தால் மணி 5:30 ஆகா!
மணி ஆகிவிட்டதே!
எழுந்திருத்து தன் சுத்தம் பேணி
வாசல் தெளித்து கோலமிட்டு
குதூகலமாய் புத்துணர்ச்சியோடு
அடுக்களைக்குள் நுழைந்தால்
அவள் மட்டும் தான் அடுக்களையின் ராணி!
ராஜாவிற்கு அடுக்களைக்குள் வேலை உண்டு
ஆனால் ராஜா செய்யவது இல்லை!
ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும்
அடுக்களையை ஆள்பவள் பெண் தான்!
மனதுக்குள் தனக்கு பிடித்த பாடல்களையே
ஸ்லோகன்களையோ இல்லை கணவனை
வறுத்துக் கொண்டே அன்றைய இரு வேளைக்கான உணவு இருமணி நேரத்தில்
சமைத்தாக வேண்டுமே!
என்ற கவலை அவளுக்கு!
குழந்தைக்கும் கணவனுக்கும்
மாமா மாமிக்கும் சூடாக உணவு
பரிமாற இயலவில்லையே!
அவள் வேலையை பதப்படுத்தி
செய்து கொண்டு இருக்கிறது!!
அதுக்கு ஒரு நன்றி மனதுக்குள்!
அதற்குள் குழந்தைகள் சிணுங்கல்
அம்மா அம்மா!
இதோ வருகிறேன் என் கண்ணே!
என் வைரமே! அம்மா உன்னோடு தான் இருக்கிறேன்!!
ஆரத்தழுவி அணைத்து அன்பு பரிசாக
குழந்தைகளுக்கு முத்தம்!!
அதற்குள் பெரிய குழந்தையும் சிணுங்கும்
இருந்தாலும் கணவனுக்கும் ஒரு முத்தம்!!
ஆச்சா? மீண்டும் அடுப்படியில்
காலை காபி டீ
மாமிக்கு டிகிரி காபி
மாமனாருக்கு டீ
குழந்தைகளுக்கு பால்!
கணவருக்கு வரடீ!
முடிந்ததா!
தனக்கு நேரம் இல்லாததால் (டீ)குடிப்பது இல்லை!!
காலை உணவு ;;மதிய உணவு
அவசர கதியானாலும் ஆரோக்கிய உணவு
என்பதில் உடன்பாடு _சத்தான உணவை சிறிது சிரமப்பட்டு செய்து முடித்து உணவை கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அடைத்து வைத்து அடுக்களைக்களையை சுத்தம் செய்தால் மணி 7:30!
ஆகா
மணி ஆகிவிட்டதே!
கிளம்பு கிளம்பு குழந்தையை
குளிக்க வைத்து குழந்தைக்கு தேவையானவற்றவை
பையில் எடுத்து வைத்தாகி விட்டது!!
குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயாராகிவிட்டது!
இந்த வீட்டு ராஜா
நிதானமாக உறக்கம் கலைந்து
ஆரஅமர எழுந்திருந்தால் மனைவி
கையால் டீ கிடைக்கும்!
டீ யோடு பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம் அவர்களுக்கு அதனால்
கண் விழிப்பது செய்தி தாளில் தான்!!
பாவம் பெண்களுக்கு அறிவு வேண்டாம் என்று நினைத்து விட்டார்கள் போலும்!
நிதானமாக எழுந்திருத்தாலும்
அவசர கதியில் அலுவலகம் செல்வதை
வழக்கமாக கொண்டிருப்பவர்கள்
ஆண்கள்!
அப்படியும் கிளம்பியாகி விட்டது!
வீட்டை பூட்ட வேண்டிய வேலை
இல்லை பெரியவர்கள் இருக்கின்றனர்!
அலுவலகம் செல்ல வெளியே வந்தாகி விட்டது!
கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய சம்பாஷணை எதுவும் இல்லை!
அவள் அவசரமாக பேருந்துக்குள் ஏறி உட்கார்ந்தாள்! உட்கார இடம் கிடைத்தால்
சற்று ஓய்வு தான்!
அதுவும் இல்லை என்றால் அவள் பாடு திண்ட்டாட்டம் தான்!!
கழுகு பார்வையில்லிருந்தும்
கண்டவனின் உரசுதலில் இருந்தும்
தன்னை பாதுகாத்து கொள்ள கொஞ்சம்
மெனக்கெடத்தான் வேண்டி இருக்கிறது!
அலுவலகம்! ;
அலுவலகம் வந்தாச்சு
அவசரகதியில் வந்தாலும்
நான்கு தோழிகளை பார்த்து
ஆசுவாசப்படுத்தி மகிழ்ச்சியில்
வாய்விட்டுச் சிரிக்கும் நேரம்
சில மணித்துளிகள் தான்!
தொடரும் __-
கோழிகள் கூவவில்லை என்றாலும்
சட்டென்று எழுந்திருக்க முடியவில்லை என்றாலும்
சிறிது படுக்கையில் உருண்டு புரண்டு
பார்த்தால் மணி 5:30 ஆகா!
மணி ஆகிவிட்டதே!
எழுந்திருத்து தன் சுத்தம் பேணி
வாசல் தெளித்து கோலமிட்டு
குதூகலமாய் புத்துணர்ச்சியோடு
அடுக்களைக்குள் நுழைந்தால்
அவள் மட்டும் தான் அடுக்களையின் ராணி!
ராஜாவிற்கு அடுக்களைக்குள் வேலை உண்டு
ஆனால் ராஜா செய்யவது இல்லை!
ஆண்டுகள் ஆயிரம் ஆனாலும்
அடுக்களையை ஆள்பவள் பெண் தான்!
மனதுக்குள் தனக்கு பிடித்த பாடல்களையே
ஸ்லோகன்களையோ இல்லை கணவனை
வறுத்துக் கொண்டே அன்றைய இரு வேளைக்கான உணவு இருமணி நேரத்தில்
சமைத்தாக வேண்டுமே!
என்ற கவலை அவளுக்கு!
குழந்தைக்கும் கணவனுக்கும்
மாமா மாமிக்கும் சூடாக உணவு
பரிமாற இயலவில்லையே!
அவள் வேலையை பதப்படுத்தி
செய்து கொண்டு இருக்கிறது!!
அதுக்கு ஒரு நன்றி மனதுக்குள்!
அதற்குள் குழந்தைகள் சிணுங்கல்
அம்மா அம்மா!
இதோ வருகிறேன் என் கண்ணே!
என் வைரமே! அம்மா உன்னோடு தான் இருக்கிறேன்!!
ஆரத்தழுவி அணைத்து அன்பு பரிசாக
குழந்தைகளுக்கு முத்தம்!!
அதற்குள் பெரிய குழந்தையும் சிணுங்கும்
இருந்தாலும் கணவனுக்கும் ஒரு முத்தம்!!
ஆச்சா? மீண்டும் அடுப்படியில்
காலை காபி டீ
மாமிக்கு டிகிரி காபி
மாமனாருக்கு டீ
குழந்தைகளுக்கு பால்!
கணவருக்கு வரடீ!
முடிந்ததா!
தனக்கு நேரம் இல்லாததால் (டீ)குடிப்பது இல்லை!!
காலை உணவு ;;மதிய உணவு
அவசர கதியானாலும் ஆரோக்கிய உணவு
என்பதில் உடன்பாடு _சத்தான உணவை சிறிது சிரமப்பட்டு செய்து முடித்து உணவை கணவனுக்கும் குழந்தைகளுக்கும் அடைத்து வைத்து அடுக்களைக்களையை சுத்தம் செய்தால் மணி 7:30!
ஆகா
மணி ஆகிவிட்டதே!
கிளம்பு கிளம்பு குழந்தையை
குளிக்க வைத்து குழந்தைக்கு தேவையானவற்றவை
பையில் எடுத்து வைத்தாகி விட்டது!!
குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல தயாராகிவிட்டது!
இந்த வீட்டு ராஜா
நிதானமாக உறக்கம் கலைந்து
ஆரஅமர எழுந்திருந்தால் மனைவி
கையால் டீ கிடைக்கும்!
டீ யோடு பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டுமாம் அவர்களுக்கு அதனால்
கண் விழிப்பது செய்தி தாளில் தான்!!
பாவம் பெண்களுக்கு அறிவு வேண்டாம் என்று நினைத்து விட்டார்கள் போலும்!
நிதானமாக எழுந்திருத்தாலும்
அவசர கதியில் அலுவலகம் செல்வதை
வழக்கமாக கொண்டிருப்பவர்கள்
ஆண்கள்!
அப்படியும் கிளம்பியாகி விட்டது!
வீட்டை பூட்ட வேண்டிய வேலை
இல்லை பெரியவர்கள் இருக்கின்றனர்!
அலுவலகம் செல்ல வெளியே வந்தாகி விட்டது!
கணவனுக்கும் மனைவிக்கும் பெரிய சம்பாஷணை எதுவும் இல்லை!
அவள் அவசரமாக பேருந்துக்குள் ஏறி உட்கார்ந்தாள்! உட்கார இடம் கிடைத்தால்
சற்று ஓய்வு தான்!
அதுவும் இல்லை என்றால் அவள் பாடு திண்ட்டாட்டம் தான்!!
கழுகு பார்வையில்லிருந்தும்
கண்டவனின் உரசுதலில் இருந்தும்
தன்னை பாதுகாத்து கொள்ள கொஞ்சம்
மெனக்கெடத்தான் வேண்டி இருக்கிறது!
அலுவலகம்! ;
அலுவலகம் வந்தாச்சு
அவசரகதியில் வந்தாலும்
நான்கு தோழிகளை பார்த்து
ஆசுவாசப்படுத்தி மகிழ்ச்சியில்
வாய்விட்டுச் சிரிக்கும் நேரம்
சில மணித்துளிகள் தான்!
தொடரும் __-
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இன்பமாக இருக்கிறது .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
செவ்வானம் சூரியனை விழுங்கும் காட்சியை காண்பதில் ஆர்வம் அவளுக்கு!
எத்தனை எத்தனை மலைப்பான
விஷயங்கள் இவ்வுலகத்தில்
தகதகவென்றிருக்கும் சூரியன்
சாந்தம் கொள்வதுபோல்
செங்கதிர்கள் கொஞ்சம்
கொஞ்சமாய் விழுங்கி
வெண்மையாய் வெண்ணிலவை
பரிசளிக்கிறது!!
ஆஹா இது தான் இயற்கை!
நாட்டிலும் சில ஞாயிறுகள்
இருக்கத்தான் செய்கின்றனர்!!
பெண்களை கண்களால்
விழுங்கும் கயவர்களுக்கு
வெண்ணிற ஆடை தான்
சிறந்த பரிசு என்று மனதில்
நினைத்துக் கொண்டு
மாடியில் இருந்து துணிகளை
எடுத்துக் கொண்டு இறங்கினாள் !
குழந்தைகள் வெளியே செல்ல
விருப்பம் தெரிவித்து இருந்தனர்
ஆனால் உடல் ஒத்துழைக்க வில்லை!
வேறு வழியில்லை குழந்தைகள் அம்மா
கிளம்புங்கள்! வெளியே செல்ல வேண்டும்!!
கணவனும் கிளம்பேன் என்று கூறவும்
கிளம்பினாள்!!
கடற்கரையில் காலாற நடப்பது
இவளுக்கு பிடித்த விஷயம்
குழந்தைகளுடன் மகிழ்ச்சியாய் செலவிடும்
நேரத்தை விட வேறு ஏது ஆனந்தம்??
குழந்தைகளுடன் தானும் குழந்தையாக
மாறி குழந்தைகளை மகிழ்வித்தாள்!!
அன்று பவுர்ணமி வேறு
இரவு உணவை சமைத்து கொண்டு வந்ததால் பவுர்ணமியில் பாய் விரித்து
பந்தி பரிமாறினாள்!!
நிலவின் குளிர்ச்சியில்
நித்திரை லேசாக எட்டிப் பார்க்க
குழந்தை வீடு திரும்ப ஆயத்தமாயின!
நிலவின் ஒளி வெண்மை
அவளுக்கு ஏதோ சொல்ல வருவது போல்
உணர்ந்தாள்!!
களங்கமில்லாத மனதோடு
இருங்கள்!
உங்களின் எண்ணங்கள்
ஒருவரையும் காயப்படுத்தி
விடக்கூடாது!
நான் குளிர்ச்சி
தருவது போல
வார்த்தைகளால் அன்பாய் பேசுங்கள்
அடுத்தவர்கள் குளிர்ந்தது போவார்கள்!
கடுஞ்சொற்களை கோவத்தை
தவிர்த்தாலே வெற்றி நம் வசமாகி விடும்!
என்று நிலவு சொல்வது போல்
எண்ணிக் கொண்டு எண்ணங்களை
கணவனிடம் சொல்லி
தானும் அவ்வாறே இருக்கப் போவதாகவும்
கூறினாள்!!!
இருவரும் இவ்வாறு பேசிக்
கொண்டு பயணிக்கையில்
குழந்தைகள் உறங்கி விட்டன!!
வீடு வந்து சேர்கையில்
மணி 10:00 மாமா மாமிக்கும்
உணவு எடுத்து வைத்தாகி விட்டது
அவர்களும் உறங்கும் நிலையில் தான்
இருந்தார்கள்!!
படுக்கையில் குழந்தைகளை
படுக்க வைத்து விட்டு
கணவன் அருகில் அமர்ந்தாள்!
அப்பாடா.....
ஓர் பொழுது
ஓர் அமைதியான யுத்தம் தான்
மனதில் நினைத்துக் கொண்டு
அமர்ந்தாள்!!
அனைத்து நாட்களிலும்
அலுவலகம் வேலை என்று சென்று
கொண்டே இருக்கிறது!
மகிழ்ச்சியான தருணம்?
இல்லறத்தை இனிதே
மேற் கொண்டு செல்ல
கணவனையும்
கவனித்தாக வேண்டுமே!!
வந்து அமர்ந்ததும்
கணவனின் காமப் பார்வைக்கு
கரைந்து போனாள்!!
மட்டற்ற மகிழ்ச்சியை தருவது
மனைவி தரும் சுகம் தானே!
அதை உணர்ந்து நடந்து கொள்வாள்!!
இரவின் மடியில் இறுக்கம் நெருக்கம்
அதிகமானது!!
மணிகள் கரைந்தது
இரவின் மடியில் அயர்ந்து
போனார்கள்!!!
ஞாயிறு கரைய திங்கள்
உதயமாயிற்று!!
மீண்டும் ஓர் யுத்தம்
பெண்ணுக்கு ஆரம்பமாயிற்று!!!!!
தொடரும்
எத்தனை எத்தனை மலைப்பான
விஷயங்கள் இவ்வுலகத்தில்
தகதகவென்றிருக்கும் சூரியன்
சாந்தம் கொள்வதுபோல்
செங்கதிர்கள் கொஞ்சம்
கொஞ்சமாய் விழுங்கி
வெண்மையாய் வெண்ணிலவை
பரிசளிக்கிறது!!
ஆஹா இது தான் இயற்கை!
நாட்டிலும் சில ஞாயிறுகள்
இருக்கத்தான் செய்கின்றனர்!!
பெண்களை கண்களால்
விழுங்கும் கயவர்களுக்கு
வெண்ணிற ஆடை தான்
சிறந்த பரிசு என்று மனதில்
நினைத்துக் கொண்டு
மாடியில் இருந்து துணிகளை
எடுத்துக் கொண்டு இறங்கினாள் !
குழந்தைகள் வெளியே செல்ல
விருப்பம் தெரிவித்து இருந்தனர்
ஆனால் உடல் ஒத்துழைக்க வில்லை!
வேறு வழியில்லை குழந்தைகள் அம்மா
கிளம்புங்கள்! வெளியே செல்ல வேண்டும்!!
கணவனும் கிளம்பேன் என்று கூறவும்
கிளம்பினாள்!!
கடற்கரையில் காலாற நடப்பது
இவளுக்கு பிடித்த விஷயம்
குழந்தைகளுடன் மகிழ்ச்சியாய் செலவிடும்
நேரத்தை விட வேறு ஏது ஆனந்தம்??
குழந்தைகளுடன் தானும் குழந்தையாக
மாறி குழந்தைகளை மகிழ்வித்தாள்!!
அன்று பவுர்ணமி வேறு
இரவு உணவை சமைத்து கொண்டு வந்ததால் பவுர்ணமியில் பாய் விரித்து
பந்தி பரிமாறினாள்!!
நிலவின் குளிர்ச்சியில்
நித்திரை லேசாக எட்டிப் பார்க்க
குழந்தை வீடு திரும்ப ஆயத்தமாயின!
நிலவின் ஒளி வெண்மை
அவளுக்கு ஏதோ சொல்ல வருவது போல்
உணர்ந்தாள்!!
களங்கமில்லாத மனதோடு
இருங்கள்!
உங்களின் எண்ணங்கள்
ஒருவரையும் காயப்படுத்தி
விடக்கூடாது!
நான் குளிர்ச்சி
தருவது போல
வார்த்தைகளால் அன்பாய் பேசுங்கள்
அடுத்தவர்கள் குளிர்ந்தது போவார்கள்!
கடுஞ்சொற்களை கோவத்தை
தவிர்த்தாலே வெற்றி நம் வசமாகி விடும்!
என்று நிலவு சொல்வது போல்
எண்ணிக் கொண்டு எண்ணங்களை
கணவனிடம் சொல்லி
தானும் அவ்வாறே இருக்கப் போவதாகவும்
கூறினாள்!!!
இருவரும் இவ்வாறு பேசிக்
கொண்டு பயணிக்கையில்
குழந்தைகள் உறங்கி விட்டன!!
வீடு வந்து சேர்கையில்
மணி 10:00 மாமா மாமிக்கும்
உணவு எடுத்து வைத்தாகி விட்டது
அவர்களும் உறங்கும் நிலையில் தான்
இருந்தார்கள்!!
படுக்கையில் குழந்தைகளை
படுக்க வைத்து விட்டு
கணவன் அருகில் அமர்ந்தாள்!
அப்பாடா.....
ஓர் பொழுது
ஓர் அமைதியான யுத்தம் தான்
மனதில் நினைத்துக் கொண்டு
அமர்ந்தாள்!!
அனைத்து நாட்களிலும்
அலுவலகம் வேலை என்று சென்று
கொண்டே இருக்கிறது!
மகிழ்ச்சியான தருணம்?
இல்லறத்தை இனிதே
மேற் கொண்டு செல்ல
கணவனையும்
கவனித்தாக வேண்டுமே!!
வந்து அமர்ந்ததும்
கணவனின் காமப் பார்வைக்கு
கரைந்து போனாள்!!
மட்டற்ற மகிழ்ச்சியை தருவது
மனைவி தரும் சுகம் தானே!
அதை உணர்ந்து நடந்து கொள்வாள்!!
இரவின் மடியில் இறுக்கம் நெருக்கம்
அதிகமானது!!
மணிகள் கரைந்தது
இரவின் மடியில் அயர்ந்து
போனார்கள்!!!
ஞாயிறு கரைய திங்கள்
உதயமாயிற்று!!
மீண்டும் ஓர் யுத்தம்
பெண்ணுக்கு ஆரம்பமாயிற்று!!!!!
தொடரும்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
பெண் காலங்கள் மாறினாலும்
பெண்களுக்கான வேலையும்
நேரமும் என்றும் அப்படியேதான்
இருக்கிறது!!
பம்பரமாய் சுழன்று சுழன்று
தன் வேலையை தானே
செய்து முடிக்க வேண்டிய கட்டாயம்
பெண்களுக்கு தான் அதிகம்!
வசதி வாய்ப்புகள் இருந்தாலும்
வீட்டு வேலைக்கு ஆட்கள்
இருந்தாலும் பெண்களுக்கான
பொறுப்புகள் குடும்ப பராமரிப்பும்
இன்னும் பெண்களிடம் தான்
இருக்கிறது!!
வேலைக்கு ஆட்கள் இருந்தாலும்
பெரும்பாலும் அந்த வேலையை
செய்வது பெண்கள் தான்!
நமது சமூக கட்டமைப்பு
அப்படி ஒரு மாய வலையில்
பின்னப்பட்டுள்ளது!!!
இன்று நடுத்தர குடும்பத்தில்
இருக்கும் பெண்களுக்கு தான்
தெரியும் ஒரு நாளின் அருமை
என்னவென்று?!
உடல் ஓய்வெடுக்க நினைத்தாலும்
ஓய்வு என்பது ஏது??
அந்த வேலையை யார் செய்வார்கள்??
இப்படியான எண்ணங்கள்
இருந்தாலும் அனைத்தையும்
மேற்கொண்டு குடும்பத்தை
நடத்தி செல்பவள் பெண் தான்!!
ஆணிற்கு பங்கு இல்லையா?
என்று கேட்கலாம்
நிச்சயம் உண்டு!
எல்லோர் வீட்டிலும் ஆண்களுக்கான
பங்கு என்பது குறைவாகவே உள்ளது!
இந்த காலத்து ஆண்கள்
குடி பழக்கத்துக்கு அடிமையாகி
சின்னா பின்னமாக்குகிறார்கள்
குடும்பத்தை!!
பொறுப்புகள் பெண்கள் தலையில்
தான்!!
தனக்கான நேரத்தை பெண் எப்பொழுது எடுத்துக் கொள்வாள்
என்று கேட்டால் இல்லை என்று தான்
செல்வேன்!!
நான் சொல்வது ஏழை எளிய
நடுத்தர வர்க்கதிற்கு மட்டுமல்ல
எந்த உயர்ந்த பணியில்
இருந்தாலும் பெண்களுக்கான
கடமைகளும் பொறுப்புகள்
அதிகம்!!!
இந்த சமூகம் பெண்ணிற்கான
பொறுப்புகளையும் கடமைகளையும்
பகிர்ந்தளிக்கும் போது
முன்னேற்றமான சமூகமாக மாறும்
என்பதில் மாற்றுக் கருத்து
இல்லை!!!
பெண் நிர்வகிக்கும் திறன்
பெற்றவள்!!
அன்பானவள்
அறிவானவள்
அடக்குமுறைக்கு
எதிரானவள்!!
ஒரு தாயாய்
தங்கையாய்
சகோதரியாய்
காதலியாய்
மனைவியாய்
எல்லாமுமாய்
இருந்து மகிழ்விப்பவள்
பெண்!!
அந்த பெண்ணை
இந்த சமூகம் எப்படி நடத்த
வேண்டும்??
என்பதை இன்னும் கற்றுக்
கொள்ளவில்லை!!
பார்வையில் பதறவைக்கும்
ஆண்களே?
பெண்ணிற்கான வலி என்ன
என்பதை உணருங்கள்!
பெண்களுக்கான பாதையில் பாலியல்
வன்மத்தை வரவழைக்காமல்
இருந்தாலே நீங்கள் செய்யும் மிகப் பெரிய
மரியாதை!
அவளை நிலை கொள்ள வைப்பது
அது ஒன்று தான்!!!
மிகைப்படுத்துதல்
ஏதும் இல்லை
உள்ளதை உள்ளபடி
பதிவு செய்து இருக்கிறேன்!!
எந்த ஆணையும் காயப்படுத்த விரும்பவில்லை!!
பெண்களுக்கான பாதை முட்கள்
நிறைந்தது!!
அதில் நீங்கள் கண்ணாடி
துகள்களை வைத்து விடாதீர்கள்!!
பெண்ணை பெண்ணாக
நடத்துங்கள்! தெய்வமாக அல்ல!!
நான் எழுதியது சாதாரண நிலையில்
இருக்கும்
ஒரு பெண்ணின் நாட்கள்
எப்படி பட்டது?
என்பதை உணர்த்தத்தான்!!!
வலி நிறைந்த வாழ்வின்
பெண்ணின் பயணம்
இன்னொரு தருணத்தில்
என் வழியே தொடரும்!!!!!
முற்றும்
பெண்களுக்கான வேலையும்
நேரமும் என்றும் அப்படியேதான்
இருக்கிறது!!
பம்பரமாய் சுழன்று சுழன்று
தன் வேலையை தானே
செய்து முடிக்க வேண்டிய கட்டாயம்
பெண்களுக்கு தான் அதிகம்!
வசதி வாய்ப்புகள் இருந்தாலும்
வீட்டு வேலைக்கு ஆட்கள்
இருந்தாலும் பெண்களுக்கான
பொறுப்புகள் குடும்ப பராமரிப்பும்
இன்னும் பெண்களிடம் தான்
இருக்கிறது!!
வேலைக்கு ஆட்கள் இருந்தாலும்
பெரும்பாலும் அந்த வேலையை
செய்வது பெண்கள் தான்!
நமது சமூக கட்டமைப்பு
அப்படி ஒரு மாய வலையில்
பின்னப்பட்டுள்ளது!!!
இன்று நடுத்தர குடும்பத்தில்
இருக்கும் பெண்களுக்கு தான்
தெரியும் ஒரு நாளின் அருமை
என்னவென்று?!
உடல் ஓய்வெடுக்க நினைத்தாலும்
ஓய்வு என்பது ஏது??
அந்த வேலையை யார் செய்வார்கள்??
இப்படியான எண்ணங்கள்
இருந்தாலும் அனைத்தையும்
மேற்கொண்டு குடும்பத்தை
நடத்தி செல்பவள் பெண் தான்!!
ஆணிற்கு பங்கு இல்லையா?
என்று கேட்கலாம்
நிச்சயம் உண்டு!
எல்லோர் வீட்டிலும் ஆண்களுக்கான
பங்கு என்பது குறைவாகவே உள்ளது!
இந்த காலத்து ஆண்கள்
குடி பழக்கத்துக்கு அடிமையாகி
சின்னா பின்னமாக்குகிறார்கள்
குடும்பத்தை!!
பொறுப்புகள் பெண்கள் தலையில்
தான்!!
தனக்கான நேரத்தை பெண் எப்பொழுது எடுத்துக் கொள்வாள்
என்று கேட்டால் இல்லை என்று தான்
செல்வேன்!!
நான் சொல்வது ஏழை எளிய
நடுத்தர வர்க்கதிற்கு மட்டுமல்ல
எந்த உயர்ந்த பணியில்
இருந்தாலும் பெண்களுக்கான
கடமைகளும் பொறுப்புகள்
அதிகம்!!!
இந்த சமூகம் பெண்ணிற்கான
பொறுப்புகளையும் கடமைகளையும்
பகிர்ந்தளிக்கும் போது
முன்னேற்றமான சமூகமாக மாறும்
என்பதில் மாற்றுக் கருத்து
இல்லை!!!
பெண் நிர்வகிக்கும் திறன்
பெற்றவள்!!
அன்பானவள்
அறிவானவள்
அடக்குமுறைக்கு
எதிரானவள்!!
ஒரு தாயாய்
தங்கையாய்
சகோதரியாய்
காதலியாய்
மனைவியாய்
எல்லாமுமாய்
இருந்து மகிழ்விப்பவள்
பெண்!!
அந்த பெண்ணை
இந்த சமூகம் எப்படி நடத்த
வேண்டும்??
என்பதை இன்னும் கற்றுக்
கொள்ளவில்லை!!
பார்வையில் பதறவைக்கும்
ஆண்களே?
பெண்ணிற்கான வலி என்ன
என்பதை உணருங்கள்!
பெண்களுக்கான பாதையில் பாலியல்
வன்மத்தை வரவழைக்காமல்
இருந்தாலே நீங்கள் செய்யும் மிகப் பெரிய
மரியாதை!
அவளை நிலை கொள்ள வைப்பது
அது ஒன்று தான்!!!
மிகைப்படுத்துதல்
ஏதும் இல்லை
உள்ளதை உள்ளபடி
பதிவு செய்து இருக்கிறேன்!!
எந்த ஆணையும் காயப்படுத்த விரும்பவில்லை!!
பெண்களுக்கான பாதை முட்கள்
நிறைந்தது!!
அதில் நீங்கள் கண்ணாடி
துகள்களை வைத்து விடாதீர்கள்!!
பெண்ணை பெண்ணாக
நடத்துங்கள்! தெய்வமாக அல்ல!!
நான் எழுதியது சாதாரண நிலையில்
இருக்கும்
ஒரு பெண்ணின் நாட்கள்
எப்படி பட்டது?
என்பதை உணர்த்தத்தான்!!!
வலி நிறைந்த வாழ்வின்
பெண்ணின் பயணம்
இன்னொரு தருணத்தில்
என் வழியே தொடரும்!!!!!
முற்றும்
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இன்று தான் முழுவதுமாக படித்தேன் சசி. வெகு அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். இது கவிதை அல்ல, கண்ணாடி...
தொடரட்டும் இந்த முடிவில்லா பயணம்!
தொடரட்டும் இந்த முடிவில்லா பயணம்!
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1189263K.Senthil kumar wrote:ம்ம் .....ம்ம்......வர்ணனை நன்றாகத்தான் இருக்கிறது தோழியே...அது இருக்கட்டும் முதலில் உங்கள் கணவரின் மின் அஞ்சல் முகவரியை கொடுங்கள் இந்த பதிவின் லிங்கை அவருக்கு அனுப்பிவிடுகிறேன் அதில் இந்த தகவலையும் சேர்த்து அனுப்பிவிடுகிறேன்
இந்த பதிவை நன்றாக படியுங்கள் அண்ணா..
பிறகு சசி வந்ததும் இறுக்கமாக
தலைமுடியை நன்றாக பிடியுங்கள் அண்ணா..
என்று அனுப்பிவிடுகிறேன் ...ஹா..ஹா..ஹா..
இவன்
ஆண்கள் பாதுகாப்பு சங்க நிரந்தர பொதுசெயலாளராக விரும்பும்
கே.செந்தில்குமார்
(குட்டு ஏதும் வைக்க வேண்டாம் நகைச்சுவைக்காக மட்டுமே ..)
நன்றி தோழரே
வர்ணனை ஏதும் இல்லை
வாழ்வியல் எதார்த்ததை தான்
பதிவு செய்து உள்ளேன்.
கணவர் படித்து விட்டார். குட்டு ஏதும் வைக்க வில்லை
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாவ் !.. ...........அருமை சசி, முதலது மட்டும் படித்தேன், எல்லாமும் படித்ததும் பின்னூட்டம் போடுகிரேன் .........மிக நேர்த்தியாக எழுதுகிறீர்கள்............. .....தொடருங்கள் சசி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
நன்றி ரமணியன் ஐயா
முழுவதும் படித்தீர்களா ஐயா
நான் ஆண்களை குறை கூறவில்லை
பெண்களுக்கான ஓர் நாளின் வலி என்ன என்பதை தான் பதிவு செய்து உள்ளேன் ஐயா
முழுவதும் படித்தீர்களா ஐயா
நான் ஆண்களை குறை கூறவில்லை
பெண்களுக்கான ஓர் நாளின் வலி என்ன என்பதை தான் பதிவு செய்து உள்ளேன் ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
முழுதும் படித்தேன் சசி .
அருமையாக கோர்வையாக எழுதி உள்ளீர்.
அழகாக வடித்த 48 மணி நேர சுயானுபவம் என்று கூறலாமா ?
வாழ்த்துகள் .
மேலெழுந்தவாரியாக , அதிக விழுக்காடுகள் நிறைந்த யதார்த்தத்தை
சுவைபட பதிவிட்டுள்ளீர் . மனதை வருடிய நெருடிய வரிகள் பல .
கவிதை எந்த திசையில் செல்லும் என்று மனதில் பட்டதின் விளைவுதான் எந்தன் முதல்
பின்னூட்டம் . பார்த்த அனுபவம் ,பார்கின்ற அனுபவம் தான் அது .
நீங்கள் ஆண்களை குறை கூறுவதாக சொல்லவே இல்லையே நான் .
அதே சமயத்தில் நீங்கள் சிலாகித்த பெண்மணிகள் 100% இல்லை என்றே கூற வருகிறேன்.
ஏன் , எந்தன் கணிப்பில் 40% இருந்தால் அதிகம்
அதற்காக பெண்களை குறைவாக மதிப்பிடவில்லை . அவர்கள் ஈடுபட்டுள்ள வேலைகள் ,
அதன் எதிர்பார்ப்புகள் .
ஆண்கள் பேப்பர் ,காபி காலை நேரம் கடத்துவது ,இப்போது வெகுவாக மாறிவிட்டனவே .
வீட்டில் வாஷிங் மெஷினில் துணிப்போட்டு /துவைப்பது ,அதை உலர்த்துவது , மடித்து அழகாக அடுக்கி பீரோவில் வைத்து , விடுமுறை நாட்களில் இஸ்த்ரி பண்ணி , கறிகாய்கள் நறுக்கி தருவது , பேங்க்,
இன்சூரன்ஸ் , வரிகள் கட்டுவது போன்ற காரியங்கள் , வெளியாருடன் பேசுதல் போன்ற காரியங்கள்
பலவும் செய்து , குடும்பத்தை சீராக நடத்தி செல்லும் கணவன்கள் பலரையும் கண்டுள்ளேன்
இவை யாவும் கருத்து பரிமாறல்களே தவிர , வேறு எதுவும் இல்லை
உங்கள் கவிதைக்கு
ரமணியன்
அருமையாக கோர்வையாக எழுதி உள்ளீர்.
அழகாக வடித்த 48 மணி நேர சுயானுபவம் என்று கூறலாமா ?
வாழ்த்துகள் .
மேலெழுந்தவாரியாக , அதிக விழுக்காடுகள் நிறைந்த யதார்த்தத்தை
சுவைபட பதிவிட்டுள்ளீர் . மனதை வருடிய நெருடிய வரிகள் பல .
கவிதை எந்த திசையில் செல்லும் என்று மனதில் பட்டதின் விளைவுதான் எந்தன் முதல்
பின்னூட்டம் . பார்த்த அனுபவம் ,பார்கின்ற அனுபவம் தான் அது .
நீங்கள் ஆண்களை குறை கூறுவதாக சொல்லவே இல்லையே நான் .
அதே சமயத்தில் நீங்கள் சிலாகித்த பெண்மணிகள் 100% இல்லை என்றே கூற வருகிறேன்.
ஏன் , எந்தன் கணிப்பில் 40% இருந்தால் அதிகம்
அதற்காக பெண்களை குறைவாக மதிப்பிடவில்லை . அவர்கள் ஈடுபட்டுள்ள வேலைகள் ,
அதன் எதிர்பார்ப்புகள் .
ஆண்கள் பேப்பர் ,காபி காலை நேரம் கடத்துவது ,இப்போது வெகுவாக மாறிவிட்டனவே .
வீட்டில் வாஷிங் மெஷினில் துணிப்போட்டு /துவைப்பது ,அதை உலர்த்துவது , மடித்து அழகாக அடுக்கி பீரோவில் வைத்து , விடுமுறை நாட்களில் இஸ்த்ரி பண்ணி , கறிகாய்கள் நறுக்கி தருவது , பேங்க்,
இன்சூரன்ஸ் , வரிகள் கட்டுவது போன்ற காரியங்கள் , வெளியாருடன் பேசுதல் போன்ற காரியங்கள்
பலவும் செய்து , குடும்பத்தை சீராக நடத்தி செல்லும் கணவன்கள் பலரையும் கண்டுள்ளேன்
இவை யாவும் கருத்து பரிமாறல்களே தவிர , வேறு எதுவும் இல்லை
உங்கள் கவிதைக்கு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அதிசயம் தான்.ஆண்கள் பேப்பர் ,காபி காலை நேரம் கடத்துவது ,இப்போது வெகுவாக மாறிவிட்டனவே .
வீட்டில் வாஷிங் மெஷினில் துணிப்போட்டு /துவைப்பது ,அதை உலர்த்துவது , மடித்து அழகாக அடுக்கி பீரோவில் வைத்து , விடுமுறை நாட்களில் இஸ்த்ரி பண்ணி , கறிகாய்கள் நறுக்கி தருவது , பேங்க்,
இன்சூரன்ஸ் , வரிகள் கட்டுவது போன்ற காரியங்கள் , வெளியாருடன் பேசுதல் போன்ற காரியங்கள்
பலவும் செய்து , குடும்பத்தை சீராக நடத்தி செல்லும் கணவன்கள் பலரையும் கண்டுள்ளேன்
- Sponsored content
Page 2 of 11 • 1, 2, 3, ... 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 11
|
|