புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 / Chapter 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
by வேல்முருகன் காசி Today at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
-
ஜாம்பவான் என்றதும், ‘அவர் ராமாயண காலத்தில் ராமபிரானுக்கு
உதவிய, வானர அரசன் சுக்ரீவனின் அரசவையில் அமைச்சராக
இருந்தவர்’ என்று அனைவரும் சொல்லி விடுவார்கள். அவர் மிகுந்த
அனுபவம் வாய்ந்தவராகவும், அறிவுக்கூர்மையுடையவராகவும்
இருந்தார். அதனால்தான் அவரால் ராமபிரானுக்கே கூட சில
நேரங்களில் ஆலோசனைகளை வழங்க முடிந்தது.
-
இலங்கையில் சீதை இருப்பதாக தகவல் கிடைத்தது. கடலைத் தாண்டி
தான் இலங்கைக்கு செல்ல வேண்டும். ஆனால் கரையே கண்ணுக்கு
தெரியாத அந்த சமுத்திரத்தை பார்த்து வானர வீரர்கள் சோர்ந்து
போய் விட்டனர். ‘எப்படி இதனை தாண்டிச் செல்வது?’ என்று
அயர்ந்திருந்தவர்களிடம், ‘ஆஞ்சநேயனே சமுத்திரத்தை தாண்டும்
வலிமை பெற்றவன்’ என்று அனுமனுக்கு அவரது பலத்தின்
பெருமையை உணர்த்தி கடலைத் தாண்டச் செய்தவர் ஜாம்பவான்.
இவ்வாறு பிறரை உந்துதல்படுத்தி காரியங்களை வெற்றிபெறச்
செய்வதில் வல்லவராக இருந்தார்.
-
அது மட்டுமல்லாமல் அவர் உடல் வலிமையிலும் சிறப்பு மிக்கவராக
இருந்தார். ‘ஜாம்பவான்’ என்ற பெயரே அவரது வலிமையைப்
புலப்படுத்தும். ராவண யுத்தத்தின் போது, ராவணனின் மகன்
மேகநாதன் விடுத்த நாக பாணத்திற்கு அனைவரும் மூர்ச்சையுற்ற
நிலையில், அந்த பாணத்தால் பாதிக்கப்படாத ஒரே ஒருவர் ஜாம்பவான்
மட்டுமே. அவர் ஓங்கி ஒரு குத்து விட்டபோது மேகநாதன் மட்டுமல்ல,
ராவணன் கூட மூர்ச்சையாகி போனான்.
-
அப்படிப்பட்ட ஜாம்பவான் ராமாயண காலம் மட்டுமின்றி,
மகாபாரத காலத்திலும் கூட வாழ்ந்தார் என்பது பலர் அறியாத
விஷயமாக இருக்கலாம். அது என்ன கதை என்பதைப் பார்க்கலாம்.
-
மல்யுத்தத்தில் சிறந்தவர்
-------------------
-
ஜாம்பவான் மல்யுத்தம் செய்வதில் வல்லவர். யாருடனாவது நன்றாக
மல்யுத்தம் செய்ய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு உண்டு. ஆனால்
அவரை எதிர்த்து மல்யுத்தம் செய்யத்தான் யாரும் இல்லாமல் போய்
விட்டனர். அவரது ஆவலை பூர்த்தி செய்ய எண்ணினார் இறைவன்.
அதற்காக ஒரு யுகம் காத்திருக்க வேண்டி வந்தது ஜாம்பவானுக்கு.
-
ராமரின் பட்டாபிஷேகம் முடிந்து அனைவரும் அயோத்தியில் இருந்து
விடைபெற்று திரும்பிக் கொண்டிருந்தனர். ஜாம்பவான், ராமரை
பிரிய மனமின்றி கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார். அவரது
எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட ராமபிரான், ‘ஜாம்பவானே!
நீ எங்கிருந்தாலும் உன்னுடைய நெஞ்சில் நான் இருப்பேன். அடுத்து
வரும் துவாபர யுகத்தில் நேருக்கு நேராக உனக்கு காட்சி தருவேன்’
என்று வாக்குறுதி அளித்தார்.
-
ஸ்யமந்தக மணி
-------------------
-
துவாபர யுகத்தில் யது குலத்தில் தோன்றியிருந்தார் கிருஷ்ண
பகவான். யாதவர்களில் சிறந்த ஸத்ராஜித் என்ற அரசன், சிறப்பான
வழிபாட்டின் மூலம் சூரியனை மகிழ்வித்து, அவரிடம் இருந்து
ஸ்யமந்தக மணி என்ற ஒப்பற்ற ரத்தினத்தை பெற்றான்.
அந்த ரத்தினமானது எந்த இடத்தில் இருக்கிறதோ, அந்த இடம்
செல்வச் செழிப்பாக இருக்கும். எனவே ஸத்ராஜித் ஆண்ட சிறு
நாடானது எந்த குறையும் இன்றி செழித்திருந்தது.
-
கண்ணபிரான் ஸத்ராஜித்தை சந்தித்து, ‘அரசே! உன்னிடம்
உள்ள ஸ்யமந்தக மணியை, நாட்டின் பெரும்பகுதியை ஆளும்
உக்ரசேன மகாராஜாவுக்கு தந்தால், அதன் மூலம் நாட்டில் உள்ள
மக்கள் அனைவரும் செழிப்புடன் வாழ்வார்கள்’ என்று கூறினார்.
ஆனால் ஆசையின் காரணமாக அதனை தானே வைத்துக்
கொண்டான் ஸத்ராஜித்.
வீண் பழிச்சொல்
---------------------
ஒரு நாள் ஸத்ராஜித்தின் சகோதரன் பிரசேனன், ஒளி பொருந்திய
ஸ்யமந்தக மணியை கழுத்தில் அணிந்து கொண்டு, காட்டிற்கு
வேட்டையாடச் சென்றான். அடர்ந்த வனத்தில் சிங்கத்தால்,
பிரசேனன் கொல்லப்பட்டான். அவன் அணிந்திருந்த மணியை,
சிங்கம் எடுத்துக் கொண்டு ஒரு குகைக்குள் நுழைந்தது. குகையில்
வசித்து வந்த ஜாம்பவான், சிங்கத்தை கொன்று அந்த மணியை,
தன் வளர்ப்பு மகள் ஜாம்பவிக்கு கொடுத்து விட்டார்.
-
வேட்டைக்கு சென்ற தம்பி திரும்பி வராததால் மிகவும்
வருத்தமுற்றான் ஸத்ராஜித். பல நாட்கள் ஆகியும் பிரசேனன்
வராததால், ஸ்யமந்தக மணிக்காக கண்ணன் அவனை
கொன்றிருப்பானோ? என்ற சந்தேகம் ஸத்ராஜித்துக்கு வந்தது.
இந்த அபாண்டமான பழியை பற்றி அறிந்த கண்ணபிரான்,
தன் மீது விழுந்த பழிச்சொல்லை நீக்க முடிவு செய்தார்.
-
-
ஜாம்பவானுடன் மோதல்
---------------------
பிரசேனன் சென்ற காட்டிற்கு புறப்பட்டுச் சென்றார் கிருஷ்ணர்.
அடர்ந்த வனத்தில் ஓரிடத்தில் பிரசேனன் இறந்து கிடந்தான்.
அவனை சிங்கம் தாக்கியிருப்பதை கிருஷ்ணர் கண்டுகொண்டார்.
பிரசேனனுக்கு அருகில் பதிந்திருந்த சிங்கத்தின் கால் தடத்தைப்
பற்றி சென்றபோது, அது ஒரு குகை வாசலில் கொண்டு போய்
விட்டது. குகைக்குள் நுழைந்தார் கிருஷ்ண பகவான்.
-
அங்கு கழுத்தில் ஸ்யமந்தக மணியை அணிந்தபடி இருந்த
ஜாம்பவியை பார்த்தார் கிருஷ்ணர். அன்னிய ஆடவன் ஒருவனைப்
பார்த்ததும் பயத்தில் கத்தினாள் ஜாம்பவி. மகளின் சத்தம் கேட்டு
அங்கு வந்த ஜாம்பவானிடம், ஸ்யமந்தக மணியை தரும்படி
கேட்டார் கிருஷ்ணர். ஜாம்பவான் மறுத்ததால் அவர்களுக்குள்
யுத்தம் தொடங்கியது.
-
மல்யுத்தம் புரிவதில் வல்லவரான ஜாம்பவான், மிகுந்த
கோபத்துடன் சண்டையிட்டார். கண்ணனுக்கும், ஜாம்பவானுக்கும்
இடையே தொடர்ச்சியாக 27 நாட்கள் யுத்தம் நடந்தது.
ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர் இல்லை என்பதைப் போல
இருவரும் மல்யுத்தம் புரிந்தனர்.
-
காட்சி கொடுத்த இறைவன்
------------------------
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தன் பலம் குறைந்து வருவதை,
உடல் சோர்வின் மூலமாக அறிந்து கொண்டார் ஜாம்பவான்.
‘சோர்வையே அறிந்திராத தனக்கு சோர்வு ஏற்படுவது விந்தையாக
உள்ளதே! தன்னுடன் போரிடும் இந்த வீரன் உண்மையில் மானிடனாக
இருக்க வாய்ப்பில்லை’ என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார்.
-
அப்போது அவருக்கு தான் யார் என்பதை உணர்த்தும் வகையில்
ராமபிரானாக காட்சியளித்தார், கிருஷ்ண பகவான். ‘இறைவனை
எதிர்த்து போரிட்ட பாவியாகி விட்டேனே!’ என்று கதறியபடியே
கண்ணனின் காலடியில் விழுந்தார் ஜாம்பவான்.
-
‘ஜாம்பவானே! உனக்கு நிகராக இவ்வையகத்தில் மல்யுத்தம் புரிவோர்
எவருமில்லை. ஒருவருடனாவது நன்றாக யுத்தம் செய்ய வேண்டும் என்ற
உனது ஆவலை பூர்த்தி செய்யவே இது நிகழ்ந்தது’ என்றார் கிருஷ்ணர்.
-
பின்னர் ஜாம்பவானை தொட்டு தூக்கி, தான் விட்ட குத்துக்களால்
அடிபட்ட இடங்களை தடவிக் கொடுத்தார் கிருஷ்ண பகவான்.
இறைவனின் வாஞ்சையைக் கண்டு வாய் மொழி வராமல் ஆனந்தத்தில்
திளைத்துப் போனார் ஜாம்பவான். தன் மகள் ஜாம்பவியையும்,
ஸ்யமந்தக மணியையும், கண்ணனிடம் ஒப்படைத்து அக மகிழ்ந்தார்.
-
ஜாம்பவான் யார்?
--------------------
பிரம்மதேவரே, ஜாம்பவானாக அவதரித்தார். உலக சிருஷ்டி தொழிலை
செய்து வந்த காரணத்தால், பிரம்மதேவரால் வேறு எந்த காரியத்திலும்
ஈடுபட முடியவில்லை. குறிப்பாக இறை பணியை செய்வது, அதற்காக
முழு நேரத்தையும் செலவிடுவது என்பது இயலாமல் போயிற்று.
இதற்காக என்ன செய்யலாம்? என்று சிந்திக்க தொடங்கினார்.
உடனே அவர், கரடியின் வடிவம் கொண்டு ஜாம்பவான் என்ற பெயரில்
பூமியில் தோன்றினார். கடவுளின் பெயரையே ஜெபிப்பது, இறைவனையே
தியானிப்பது, அவனது லீலைகளையே நினைத்து உருகுவது என்று
எப்போதும் இறைவனின் நினைவிலேயே தன் வாழ்நாட்களை கழிக்கத்
தொடங்கினார்.
-
----------------------------------------------
தினத்தந்தி - ஆன்மிகம்
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அருமையான கிருஷ்ணர் பிரம்மாவாகிய ஜாம்பவான் கதை.
- naanaa1977புதியவர்
- பதிவுகள் : 16
இணைந்தது : 08/08/2014
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மெய்பொருள் காண்பது அறிவு
// ராவணனின் மகன்
மேகநாதன் விடுத்த நாக பாணத்திற்கு அனைவரும் மூர்ச்சையுற்ற
நிலையில், அந்த பாணத்தால் பாதிக்கப்படாத ஒரே ஒருவர் ஜாம்பவான்
மட்டுமே. //
//பிரம்மதேவரே, ஜாம்பவானாக அவதரித்தார். உலக சிருஷ்டி தொழிலை
செய்து வந்த காரணத்தால், பிரம்மதேவரால் வேறு எந்த காரியத்திலும்
ஈடுபட முடியவில்லை. குறிப்பாக இறை பணியை செய்வது, அதற்காக
முழு நேரத்தையும் செலவிடுவது என்பது இயலாமல் போயிற்று.
இதற்காக என்ன செய்யலாம்? என்று சிந்திக்க தொடங்கினார்.
உடனே அவர், கரடியின் வடிவம் கொண்டு ஜாம்பவான் என்ற பெயரில்
பூமியில் தோன்றினார்.//
சின்ன வயசில் கேட்ட கதை. ஆனால் ஒன்றும் நினைவில் இல்லை.
ஜாம்பவானை நினைவூட்டிய ஜாம்பவானுக்கு நன்றி
மேகநாதன் விடுத்த நாக பாணத்திற்கு அனைவரும் மூர்ச்சையுற்ற
நிலையில், அந்த பாணத்தால் பாதிக்கப்படாத ஒரே ஒருவர் ஜாம்பவான்
மட்டுமே. //
//பிரம்மதேவரே, ஜாம்பவானாக அவதரித்தார். உலக சிருஷ்டி தொழிலை
செய்து வந்த காரணத்தால், பிரம்மதேவரால் வேறு எந்த காரியத்திலும்
ஈடுபட முடியவில்லை. குறிப்பாக இறை பணியை செய்வது, அதற்காக
முழு நேரத்தையும் செலவிடுவது என்பது இயலாமல் போயிற்று.
இதற்காக என்ன செய்யலாம்? என்று சிந்திக்க தொடங்கினார்.
உடனே அவர், கரடியின் வடிவம் கொண்டு ஜாம்பவான் என்ற பெயரில்
பூமியில் தோன்றினார்.//
சின்ன வயசில் கேட்ட கதை. ஆனால் ஒன்றும் நினைவில் இல்லை.
ஜாம்பவானை நினைவூட்டிய ஜாம்பவானுக்கு நன்றி
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
கடையை கவனித்துக்கொண்டு விரிவான கருத்துசொல்ல முடியவில்லை அக்கா அதற்காகவே குறியீட்டை பயன்படுத்தினேன் இனிவரும் பதிவுகளில் தங்கள் ஆணைப்படியே நடந்துகொள்கிறேன்..
மெய்பொருள் காண்பது அறிவு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|