புதிய பதிவுகள்
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:43

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
1 Post - 1%
prajai
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
12 Posts - 2%
prajai
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
9 Posts - 2%
jairam
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நம்ம குலதெய்வம் Poll_c10நம்ம குலதெய்வம் Poll_m10நம்ம குலதெய்வம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம குலதெய்வம்


   
   

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue 23 Jun 2015 - 11:54

இந்த திரியில் உங்களுக்கு தெரிந்த உங்கள் குலதெய்வம் களின் வரலாற்றை பதிவு செய்யலாம்

குலதெய்வங்களைப் பற்றி அறிய முற்பட்ட போது கிடைத்த பழையனூர் நீலியின் கதை. இந்தக் கதையுடன் வெள்ளாலர்களைப் பற்றிய தகவலும் வருகிறது என்பது கவணிக்கத் தக்கது. நீலியை இசக்கி என சில இனத்தவர் வழிபட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதும் திருவாலங்காட்டிலிருந்து பழையனூர் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதும் செய்தி.


நம்ம குலதெய்வம் ZY2OAceRhVkPZGSxlVjg+659px-isakki

காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக வாழ்ந்து வந்தான். கணவனுக்கு நீலி ஒரு குறையையும் வைக்கவில்லை. என்றாலும் அந்த வணிகன் அடிக்கடி பாலியல் தொழில் புரிபவர்களின் வீட்டுக்கு சென்று வந்தான். நீலிக்கு இது பிடிக்கவில்லை. கண்டித்தாள். வணிகன் இதை பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து தனது லீலைகளை நடத்தி வந்தான். நீலியும் விடவில்லை. அவனை கண்டிப்பதையும் நிறுத்தவில்லை. தனது சந்தோஷத்துக்கு இடையூறாக நீலி இருப்பதால், சுபயோக சுபதினத்தில் அவளை அவன் கொன்று விட்டான்.

நீலி பேயாக மாறி அவனை பழிவாங்க அலைந்து கொண்டிருந்தாள். இந்த விஷயம் வணிகனுக்கு தெரிந்ததும் சாமியாரை தேடி ஓடினான். அவரிடமிருந்து ஒரு மந்திரவாளை பெற்றுக் கொண்டான். எங்கு சென்றாலும் அந்த வாளுடனேயே சென்றான்.

ஒருநாள் பழையனூருக்கு வியாபார விஷயமாக அவன் சென்றபோது, பேய் உருவில் இருந்த நீலி அவனை துரத்த ஆரம்பித்தாள். ஆனால், அவளால் அவனை எதுவும் செய்யமுடியவில்லை. அவனிடமிருந்த மந்திரவாள் அவளை தடுத்தது. உடனே நீலி, கள்ளிக்கொம்பை ஒடித்து அதை குழந்தையாக மாற்றினாள். தானும் ஒரு அழகிய பெண்ணாக மாறினாள். குழந்தையை இடுப்பில் சுமந்தபடி அவனை பின்தொடர்ந்தாள். வணிகன் பயந்துவிட்டான். நேராக பழையனூரில் உள்ள 70 வேளாளர்கள் அடங்கிய சபையில் முறையிட்டான். அழகிய பெண்ணாக உருமாறி இருந்த நீலி அழுதாள். இவர் என் கணவர். தாசி வலையில் விழுந்து என்னையும் எங்கள் குழந்தையையும் நிர்கதியாக விட்டுவிட்டார். எங்களை சேர்த்து வையுங்கள்…” என்று கதறினாள் .

இதை கேட்டு வணிகன் அலறினான். ” பொய். இவள் என் மனைவியே அல்ல. பேய்!” என ஓலமிட்டான். ஆனால், குழந்தை ஓடிச்சென்று அவனை கொஞ்சியது. ”அப்பா…” என்றழைத்து முத்தமிட்டது . இதனை பார்த்த வேளாளர்கள் வணிகன் பொய் சொல்வதாக நினைத்தனர். ”சரி, இன்றிரவு நீங்கள் மூவரும் இங்கேயே தங்குங்கள். நாளை காலையில் மற்ற விஷயங்களை பேசிக் கொள்ளலாம்” என்றபடி வணிகனையும், குழந்தையுடன் இருந்த அந்தப் பெண்ணையும் ஒரே அறையில் தங்க வைத்தனர். முரண்டு பிடித்த வணிகனை அடக்கினர். போகும்போது மறக்காமல் வணிகனிடமிருந்த அந்த மந்திர வாளை வாங்கி சென்றனர். ”உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள் எழுபது பேர் இருக்கும்போது இந்த வாள் எதற்கு? உங்களுக்கு ஏதாவது ஆபத்தென்றால் நாங்கள் எழுபது பேரும் தீக்குளிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு சென்றனர்.

வணிகனின் கையைவிட்டு மந்திரவாள் சென்றதும் அழகிய பெண்ணாக உருமாறியிருந்த நீலி, தன் உருவத்துக்கு வந்தாள். வணிகனை கொன்று பழி தீர்த்தாள். மறுநாள் வணிகனை காப்பாற்ற முடியாமல் போனதற்காக எழுபது வேளாளர்களும் தீக்குளித்து இறந்தார்கள்.



சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 23 Jun 2015 - 11:59

நல்ல தலைப்பை துவங்கி உள்ளீர்,..
திருமணம் செய்யும் போது குலம், கோத்திரம் பார்ப்பார்களே அந்த குலம் (குல தெய்வம்) இது தானா?

அதாவது ஒரே குலதெய்வமாக இருந்தால் அவர்கள் பங்காளிகள்.திருமணம் செய்ய கூடாது, இது தானே? வேறு எதாவது இது போன்று சுவாரஸ்யங்கள் உள்ளதா...அனைவரும் தெரிவிக்கலாமே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
rajaalways
rajaalways
பண்பாளர்

பதிவுகள் : 159
இணைந்தது : 05/01/2015

Postrajaalways Tue 23 Jun 2015 - 12:03

குலதெய்வம் என்பது வேறொன்றும் இல்லை, நம் முன்னோர்களே

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 23 Jun 2015 - 12:07

rajaalways wrote:குலதெய்வம் என்பது வேறொன்றும் இல்லை, நம் முன்னோர்களே
நானும் அப்படித்தான் கேள்விப்பட்டேன்..



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அருண்பிரகாஷ்
அருண்பிரகாஷ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 04/07/2014

Postஅருண்பிரகாஷ் Tue 23 Jun 2015 - 12:54

நல்ல பதிவு...வாழ்த்துக்கள், என் குலதெய்வம் "கருப்பாய் அம்மாள்". கருப்பாய் அம்மாள் பற்றிய வரலாறு தெரிந்தவர்கள் சொல்லவும்.
நன்றி,.

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue 23 Jun 2015 - 14:44

குல தெய்வம் பற்றி நான் இணையத்தில் படித்த கட்டுரை

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது பங்குனி உத்திர நாளில் குலதெய்வ கோயிலில் வணங்கினால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.  

எப்போது வழிபடுவது?

கிராம கோவில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை திருவிழா நாட்களிலும், குல தெய்வ சிறப்பு பூஜைகளை ஒன்றாக இணைத்து செய்வதுண்டு குடும்பத்தில் நடை பெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேச நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் பழக்கம் இருக்கிறது.

திருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன்பு நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து ஆட்டு கிடாவெட்டி பொங்கல் வைத்து விழாவை போல சிறப்பாக வழிபாடு செய் கின்றார்கள்.

வழிபாடு பலன்கள்...........

குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.

அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.

திருச்செந்தூர் முருக கடவுளே குலதெய்வம்..........

பெற்றோர்கள் சொல்லாத காரணத்தாலும், இடம் பெயர்ந்து விட்ட காரணத்தாலும் பலர், தங்களது குலதெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பார்கள். ஜோதிடர்கள் அதற்கு பரிகாரங்கள் கூறி இருந்தாலும் நாம் வணங்குவது, உண்மையிலேயே நம் குல தெய்வம்தானா என்ற நெருடல் சிலருக்கு இருந்து கொண்டே இருக்கும்.

இப்படி தவிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் வீணாக கவலைப்பட வேண்டியதில்லை. திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக மனதில் ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்தால் போதும். நிச்சயம் பலன்கள் கிடைக்கும்.

பகவத் கீதை தரும் விளக்கம்.......    

குல தெய்வ வழிபாடு பற்றி பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள விளக்கம் வருமாறு:- யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழி நடத்துகிறேன், செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள். அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கி விட்டு இறை நெறியில் செல்வதும் எல்லோராலும் முடியாது.

உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார். வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபடப்பட்டனர். இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குல தெய்வங்கள். எனவே குலதேவதையை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற் றுக்கொண்டே இறை நிலை அடையும் வாய்ப்பு உள்ளது.  

ராசிப்படி குலதெய்வம்.....

ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பை தெரிந்து கொள்ள முடியும். இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.
ராசி -  குலதெய்வம்
மேஷம் -   மதுரைவீரன்
ரிஷபம் - ஐயனார்
மிதுனம் -  காளியம்மன்
கடகம் -  கருப்பன்னசாமி
சிம்மம் -  வீரபத்திரன்
கன்னி -  அங்காளம்மன்
துலாம் -  முனீஸ்வரன்
விருச்சிகம் - பெரியாச்சி
தனுசு -  மதுரைவீரன்
மகரம்-  ஐயனார்
கும்பம் -  காளியம்மன
மீனம் -  மதுரைவீரன்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Tue 23 Jun 2015 - 14:49

குலதெய்வம் அறியாதவர்கள் இப்படி செய்யலாம் என்று கூறுகிறார்கள்..

குலதெய்வத்தை கண்டுபிடிக்க,

....................................................................................................................
நம்மில் பலபேர்களுக்கு குலதெய்வம் யார், எங்கு இருகின்றார், அவரை வீட்டிற்கு அல்லது வாழுகின்ற இடத்திற்கு வரவழைக்கும் முறை என்ன என்பது தெரியாது. இந்தப்பதிவில் எளிமையான, அனுபவப்பூர்வமான முறையை விளக்கியுள்ளோம். பயன்படுத்தி வெற்றி கொள்க.

1.நீங்கள் வாழக்கூடிய ஊரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று விநாயகர்,ஒன்பது கோள்கள், பலிபீடம், கொடிமரம், நந்தி தேவர் இவர்களுக்கு ஒரு நெய் விளக்கு ஏற்றி வணங்கவும்.

2. சிவபெருமானுக்கு அவர் பெயருக்கே ஒரு அர்ச்சனை செய்யவும். பூசை செய்கின்ற குருக்களிடம் 11 ரூபாய் பணத்தை கொடுத்து சிவபெருமான் பாதத்தில் வைக்கச் சொல்லுங்கள்.

3. " ஐயா சிவபெருமானே (தாத்தா பெயர்) அவர்களின் பேரனும், (அப்பா பெயர்) அவர்களின் புதல்வனுமாகிய (உங்கள் பெயர்) அடியேனுக்கு என்னுடைய குலதெய்வம் யார் என்பதும் அவர் எங்கு இருகின்ற்றர் என்பதும் தெரியவில்லை. என் சார்பிலும் என் வம்சாவளியின் சார்பிலும் இந்தக் கோரிக்கையையும், காணிக்கையையும் பெற்றுக்கொண்டு என் குலதெய்வம் என் வீட்டிற்கு வரவும், எங்களுக்கு அருளாசிகள் வழங்கவும், எங்களை காத்துக்கொள்ளவும் அருளிடுக" என்று மனமுருகி வேண்டிக்கொள்க.

4. உங்கள் ஊரில் நல்ல செயல்பாட்டில் உள்ள முனீசுவரர், காளியம்மன், கருப்பர் கோவிலுக்குச் சென்று அவர்களையும் மேற்சொன்னது போலவே வணங்க வேண்டும்.

5. உங்கள் ஊரில் ஊர்த்தெய்வமாக இருக்கும் (உதாரணம்: மதுரை- மீனாட்சி அம்மன், காஞ்சி- காமாட்சி, காரைக்குடி- முத்தாலம்மன், சென்னை- சென்னியம்மன், பட்டுக்கோட்டை- நாடியம்மன், திருச்சி- உறையூர் வெக்காளியம்மன்) தெய்வத்தையும் மேற்சொன்ன முறையில் வணங்க வேண்டும்.

6. உங்கள் வீட்டில் எந்தவிதமான எதிர்மறை சக்திகளை வணங்குபவர்களிடமிருந்து வாங்கிய எந்திரங்கள், தகடுகள், தாயத்துகள், எலுமிச்சை பழம், மை... போன்ற எந்த ஒரு பொருள் இருந்தாலும் அதை எல்லாம் அகற்றி எரித்து விடவும்.

7. அருவி நீர், ஊற்று நீர், கோவில் கிணற்று நீர் போன்ற ஏதாவது புனித தீர்த்தத்தை கொண்டு வீட்டை சுத்தம் செய்து குங்கிலியம், நாய்க்கடுகு, வெண்கடுகு, மருதாணி விதை, மிளகு முதலியவைகளை அரைத்து செய்யப்பட்ட சாம்பிராணி புகை காட்டவும்.

8. வீட்டு வாசலில் மஞ்சள் நீர் தெளித்து அழகான கோலம் போடவும். வீட்டு வாசலில் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி நிலையின் இருபுறமும் வைக்க வேண்டும்.

9. அன்றைய இரவு ஐந்து முகங்கள் கொண்ட குத்து விளக்கை சுத்தமான நல்லெண்ணெய், பசுவின் நெய் கொண்டு நிரப்பி, 5 திரிகள் இட்டு அலங்கரித்து வைக்கவும். குத்து விளக்கின் இருபுறமும் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி வைக்க வேண்டும்.

10. குத்து விளக்கின் முன்புறம் ஒரு தலைவாழை இலையில் நீங்கள் விரும்பி உண்ணும் உணவுகளை படையலாக இடவும். வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைக்கவும். இந்த வெற்றிலை பாக்கில் சுண்ணாம்பு தடவி வைக்க வேண்டியது கட்டாயம்.

11. இலையில் 2 லட்டுகள் வைக்கவும், ஒரு சொம்பில் மஞ்சள் நீர், ஒரு சொம்பில் பானக்கம், ஒரு சொம்பில் பால், ஒரு சொம்பில் குடிநீர் வைக்கவும்.

12. குளித்துவிட்டு மஞ்சள், சிவப்பு, வெள்ளை, நீலம், பச்சை வண்ணங்களில் உள்ள உடையை அணிந்து கொள்ளவும். கறுப்பு கூடவேகூடாது. விபூதி, மஞ்சள், குங்குமம், நெற்றியில் முறைப்படி பூசிக்கொள்ள வேண்டும்.

13. பெண்களும் இதுபோல் தயாரான பின்பு கையில் ஆரத்தி தட்டு எடுத்துக் கொண்டு வாசலுக்கு செல்ல வேண்டும். ஆண்கள் கையில் ஒரு எலுமிச்சை பழத்தை நறுக்கி குங்குமம் தடவி, வாசலில் வாசலின் வெளிப்புறத்தை நோக்கியவாறு நின்று கொண்டு " எங்களுடைய குலதெய்வம் எங்கிருந்தாலும், எங்கள் மீது ஏதேனும் குற்றம் குறை இருந்தால் மன்னித்து ஏற்றுக்கொண்டு, அனைத்து கட்டுக்களையும் அறுத்துக்கொண்டு, எழுச்சி பெற்று, செழுச்சி பெற்று, எங்களையும் எங்கள் வம்சாவழிகளையும் காக்க எழுந்தருள்க" என்று சொல்லி பழத்தை பிழிந்து விடவும்.

14. வாசலின் முன் புறத்தில் 3 சூடங்களை ஏற்றி "எல்லோரும் வருக" என்று சொல்லி ஆரத்தி, கற்பூர தீபம் காட்டவும். அப்படியே சூடத்தட்டோடு குத்துவிளக்கின் முன்பாகச் சென்று அமர்ந்து குத்து விளக்கை ஏற்றவும்.

15. கருப்பர்களில் மூத்தவரான பதினெட்டாம்படிக் கருப்பரை மனதில் நினைத்துக் கொள்ளவும். அவரையே குருவாக நினைத்து கீழ்க்கண்ட குரு வாசகத்தை 24 நிமிடங்கள் மனமுருகச் சொல்லுங்கள்.
ஓம் குரு வாழ்க; ஓம் குருவே துணை;ஓம் குருவே எல்லாம்;
ஓம் குருவே அனைத்தும்; ஓம் குருவே சரணம்.
தாத்தா பதினெட்டாம்படிக் கருப்பர் அவர்களே (தாத்தா பெயர்) அவர்களின் பேரனும், (அப்பா பெயர்) அவர்களின் புதல்வனுமாகிய (உங்கள் பெயர்) அடியேனுக்கு என்னுடைய குலதெய்வம் யார் என்பதும் அவர் எங்கு இருகின்றார் என்பதும் தெரியவில்லை. நீங்களே என் குலத்திற்குரிய தெய்வத்தை இந்தப் பூசையின் மூலமாக வலிமை பெற்று, வளம் பெற்று, புத்துயிர் பெற்று, மீண்டும் ஆட்சி பீடத்தில் அமரச் செய்து அருளாட்சி செய்யச் செய்திடல் வேண்டும்.
என் சார்பிலும் என் வம்சாவளியின் சார்பிலும் இந்தக் கோரிக்கையை பெற்றுக்கொண்டு என் குலதெய்வம் என் வீட்டிற்க்கு வரவும், எங்களுக்கு அருளாசிகள் வழங்கவும், எங்களை காத்துக்கொள்ளவும் அருளிடுக"
ஓம் குரு வாழ்க; ஓம் குருவே துணை;ஓம் குருவே எல்லாம்;
ஓம் குருவே அனைத்தும்; ஓம் குருவே சரணம்.

16, பூசையின் முடிவில் வணங்கப்பட்ட தெய்வங்கள் அனைவருக்கும் படைத்தது வைத்து இருக்கும் படையலை காணிக்கையாக்கி தூப தீபம் காட்டி பூசையை நிறைவு செய்யவும். அனைத்து தெய்வங்களுக்கும் நன்றி சொல்லுங்கள்.

17. பூசையின் முதல் நாளன்றே உங்கள் குலதெய்வம் உங்களைத்தேடி வந்துவிடும். நம்பிக்கையோடு 48 நாட்கள் இதே பூசையை செய்யும்போது உங்கள் குலதெய்வம் எப்படி இருந்தாலும் எங்கு இருந்தாலும் வந்துவிடுவது உறுதி.

18. 7 தலைமுறையாக வராத குலதெய்வம் இந்தப்பூசையால் அவர்களை தேடி வந்தது. நம்பிக்கையோடு செய்யுங்கள். வெற்றி உண்டாகட்டும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 23 Jun 2015 - 15:22

தமிழ்நேசன்1981 wrote:குலதெய்வம் அறியாதவர்கள் இப்படி செய்யலாம் என்று கூறுகிறார்கள்..

குலதெய்வத்தை கண்டுபிடிக்க,
மேற்கோள் செய்த பதிவு: 1147195

அருமை அருமை தமிழ்நேசன் , இந்த தகவல்கள் எங்கிருந்து நீங்கள் பெற்றீர்கள்.

எனது நண்பர்கள் சிலர் குலதெய்வம் யாரென்று தெரியாமல் திருப்பதி வேங்கடஜலபதியை குலதெய்வமாக வழிபடுகிறார்கள்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue 23 Jun 2015 - 15:24

ராஜா wrote:
தமிழ்நேசன்1981 wrote:குலதெய்வம் அறியாதவர்கள் இப்படி செய்யலாம் என்று கூறுகிறார்கள்..

குலதெய்வத்தை கண்டுபிடிக்க,
மேற்கோள் செய்த பதிவு: 1147195

அருமை அருமை தமிழ்நேசன் , இந்த தகவல்கள் எங்கிருந்து நீங்கள் பெற்றீர்கள்.

எனது நண்பர்கள் சிலர் குலதெய்வம் யாரென்று தெரியாமல் திருப்பதி வேங்கடஜலபதியை குலதெய்வமாக வழிபடுகிறார்கள்
உங்க குல தெய்வம் பேரு சொல்லுங்க ராஜா அண்ணா! புன்னகை



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue 23 Jun 2015 - 15:34

சரவணன் wrote:உங்க குல தெய்வம் பேரு சொல்லுங்க ராஜா அண்ணா! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1147200


அரியலூர் / பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயல்பாடி என்ற சிற்றூரில் உள்ள

"வைகைக்கரை ஆண்டவர் - அய்யனார் " , "பச்சையம்மாள்" "கருப்பு" இவர்கள் தான் எங்கள் குலதெய்வங்கள் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக