புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கதைகள் -- - Page 9 Poll_c10எனது கதைகள் -- - Page 9 Poll_m10எனது கதைகள் -- - Page 9 Poll_c10 
21 Posts - 70%
heezulia
எனது கதைகள் -- - Page 9 Poll_c10எனது கதைகள் -- - Page 9 Poll_m10எனது கதைகள் -- - Page 9 Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
எனது கதைகள் -- - Page 9 Poll_c10எனது கதைகள் -- - Page 9 Poll_m10எனது கதைகள் -- - Page 9 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
எனது கதைகள் -- - Page 9 Poll_c10எனது கதைகள் -- - Page 9 Poll_m10எனது கதைகள் -- - Page 9 Poll_c10 
1 Post - 3%
viyasan
எனது கதைகள் -- - Page 9 Poll_c10எனது கதைகள் -- - Page 9 Poll_m10எனது கதைகள் -- - Page 9 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கதைகள் -- - Page 9 Poll_c10எனது கதைகள் -- - Page 9 Poll_m10எனது கதைகள் -- - Page 9 Poll_c10 
213 Posts - 42%
heezulia
எனது கதைகள் -- - Page 9 Poll_c10எனது கதைகள் -- - Page 9 Poll_m10எனது கதைகள் -- - Page 9 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
எனது கதைகள் -- - Page 9 Poll_c10எனது கதைகள் -- - Page 9 Poll_m10எனது கதைகள் -- - Page 9 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது கதைகள் -- - Page 9 Poll_c10எனது கதைகள் -- - Page 9 Poll_m10எனது கதைகள் -- - Page 9 Poll_c10 
21 Posts - 4%
prajai
எனது கதைகள் -- - Page 9 Poll_c10எனது கதைகள் -- - Page 9 Poll_m10எனது கதைகள் -- - Page 9 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எனது கதைகள் -- - Page 9 Poll_c10எனது கதைகள் -- - Page 9 Poll_m10எனது கதைகள் -- - Page 9 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
எனது கதைகள் -- - Page 9 Poll_c10எனது கதைகள் -- - Page 9 Poll_m10எனது கதைகள் -- - Page 9 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எனது கதைகள் -- - Page 9 Poll_c10எனது கதைகள் -- - Page 9 Poll_m10எனது கதைகள் -- - Page 9 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனது கதைகள் -- - Page 9 Poll_c10எனது கதைகள் -- - Page 9 Poll_m10எனது கதைகள் -- - Page 9 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனது கதைகள் -- - Page 9 Poll_c10எனது கதைகள் -- - Page 9 Poll_m10எனது கதைகள் -- - Page 9 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கதைகள் --


   
   

Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 17, 2015 8:55 am

First topic message reminder :

ஓட்டைப் படகு.
============
காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் அதன் வழியாகப் பீரிட்டு வந்தது; முதலில் அடைத்திருந்த ஓட்டையில் இருந்த துணியும் பிடுங்கிக்கொண்டது. ஆக நான்கு ஓட்டைகள் வழியாக தண்ணீர் வேகமாக உள்ளே வந்துகொண்டிருந்தது. படகோட்டி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த தத்துவ ஞானி,

"ஓட்டைப்படகிலே மூன்று ஓட்டைப் படகுகள் ஏறிவிட்டன . " என்றார்.

" ஐயா ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? "

" தம்பி ! மனித உடம்பு ஒன்பது ஓட்டைகள் உள்ள படகுதானே ! அதைக் குறிப்பிட்டேன் ! "

" ஐயா ! தத்துவம் பேசுவதற்கு இது நேரம் அல்ல! படகு மூழ்கிக்கொண்டு இருக்கிறது; நாம் மூவரும் தப்பிக்க ஏதாவது வழியுண்டா ? அதைச் சொல்லுங்கள் !"

" தம்பி ! நம்முடைய வாழ்க்கையே ஒரு கடல் போன்றது. இந்தக் கடலைக் கடக்கவேண்டும் என்றால் , நாம் ஏறிச்செல்லும் படகிலே ஓட்டைகள் இருக்கக் கூடாது. முக்கியமாக நான்கு ஓட்டைகள் இருக்கக்கூடாது. அதாவது தாமதம், மறதி, சோம்பேறித்தனம், தூக்கம் ஆகிய நான்கு ஓட்டைகள் இருக்கக் கூடாது ; அவ்வாறு இருந்தால் நடுவழியிலேயே படகு கவிழ்ந்துவிடும். இதை நான் சொல்லவில்லை ; வள்ளுவர் சொல்லுகிறார்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். ( மடியின்மை- 606 )

" ஐயா ! அவசரம் தெரியாமல் மீண்டும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ! திருக்குறள் கேட்பதற்கு இது நேரம் அல்ல. நாம் சாகப் போகிறோம்; தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்! வெட்டிப்பேச்சு வேண்டாம். "

" நாம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்கும் வள்ளுவர் ஒரு வழி சொல்லுகிறார் ! "

" அது என்ன வழி ? "

" அறிவற்றங் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். ( அறிவுடைமை-421 )

அதாவது , அறிவு இருந்தால் , அது நம்மை மரணத்திலிருந்து கூடக் காப்பாற்றும்; மேலும் அந்த அறிவு பகைவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் அரண் போல விளங்கும்."

" ஐயா! இப்போது எப்படி நம்மைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம் ? அதைச் சொல்லுங்கள் !"

உடனே தத்துவஞானி ஓடக்காரனைப் பார்த்து," தம்பி ! படகின் மூலையிலே இருக்கின்ற அந்த நான்கு தகர பீப்பாய்கள் காலியாகத்தானே உள்ளன ? "

" ஆம் ஐயா ! காலியாகத்தான் உள்ளன. "

" அப்படியானால் அதன் வாயிலே இருக்கின்ற மூடியைக் காற்றுப் புகாவண்ணம் இறுக மூடி, அந்த நான்கு பீப்பாய்களையும் பக்கவாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, கயிற்றினால் இறுகக் கட்டு. "

ஓடக்காரனும், நானும் விரைவாக அந்தப் பணியைச் செய்து முடித்தோம்.

" அப்படியே அந்த நான்கு பீப்பாய்களையும் மெதுவாக ஆற்றினுள் இறக்குங்கள்! "

நாங்கள் பீப்பாய்களை ஆற்றினுள் இறக்குவதற்கும், படகு மூழ்குவதற்கும் சரியாக இருந்தது. ஒன்றாகக் கட்டிய பீப்பாய்கள் படகுபோல மிதந்தன. நாங்கள் மூவரும் தட்டுத்தடுமாறி பீப்பாய்கள் மேலே ஏறி அமர்ந்தோம்.பிறகு ஓடக்காரனின் துணையோடு பத்திரமாகக் கரை சேர்ந்தோம்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Sep 13, 2015 10:29 am



" பெண்ணும், பொன்னும் நலம் " என்று பதில் சொன்னார் டாக்டர்.
-
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 13, 2015 5:02 pm

மயிலிறகு
========

"அம்மா ! இந்தக் கதையெல்லாம் என்னிடம் வேண்டாம் ! மயிலிறகு எங்காவது குட்டி போடுமா ? இந்தப் பாட்டி காலத்து கதையெல்லாம் உன்னோடு வைத்துக் கொள் ! என்னிடம் வேண்டாம் ! " - நான்காம் வகுப்புப் படிக்கும் நாகராஜன் தன் தாயிடம் எரிந்து விழுந்தான் .

"டேய் ! உண்மைடா! நீ வேண்டுமானால் செய்து பார் ! இன்றிரவு படுக்கப் போகும்போது உன் நோட்டுப் புத்தகத்தில் ஒரு மயிலிறகை வைத்துவிட்டுப் படு ! காலையில் எழுந்து பார்க்கும்போது , அது குட்டி போட்டிருக்கும் . உனக்கு அதிசயமாக இருக்கும் ! " என்றால் அம்மா அகிலாண்டம் .

" சரி ! " என்று சொல்லிய நாகராஜன் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்து வந்தான் . அம்மா கொடுத்த மயிலிறகின் ஒரு முடியை நோட்டுப் புத்தகத்தின் நடுவில் வைத்து மூடினான் .. தலை மாட்டிலே வைத்துவிட்டு , சிறிது நேரத்தில் தூங்கிப் போனான் .

மணி 12 இருக்கும் . நாகராஜன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் . அகிலாண்டம் மெல்ல அவன் அறைக்குள் நுழைந்தாள் . மகனுடைய நோட்டுப் புத்தகத்தில் இருந்த மயிலிறகை எடுத்து இரண்டாகக் கிள்ளினாள் . அந்த இரண்டு துண்டுகளையும் , அதே பக்கத்தில் வைத்து நோட்டுப் புத்தகத்தை மூடினாள் . சத்தம் போடாமல் , தன் அறைக்கு வந்து படுத்துக் கொண்டாள் .

பொழுது விடிந்தது . நாகராஜன் எழுந்து வந்தான் .

" அம்மா ! காபி ! " என்றான் .

காபியைக் கலந்துகொண்டு வந்த அகிலாண்டம் ," என்னடா ! நாகு !  மயிலிறகு குட்டி போட்டதா ? " என்று கேட்டாள்.

" இன்னும் பார்க்கல ! "

" உன்னோட நோட்டுப் புத்தகத்தை எடுத்துட்டு வா பார்ப்போம் . "

நாகு நோட்டுப் புத்தகத்தை எடுத்துவந்து அம்மாவின் கையில் கொடுத்தான் . அகிலாண்டம் நோட்டுப் புத்தகத்தைத் திறந்து பார்த்தாள்.

" டேய் ! நாகு ! இங்க பாருடா ! மயிலிறகு குட்டி போட்டிருக்கு ! " என்று சொல்லி மகனிடம் காண்பித்தாள் .

" அப்படியா ! என்று சொன்ன நாகு , மிகுந்த ஆச்சரியத்துடன் அந்த இரண்டு துண்டுகளையும் பார்த்தான் .

" அம்மா ! ஒரு நிமிஷம் ! " என்று  சொல்லிவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்தவன் , ஒரு ஸ்கேலை எடுத்துக்கொண்டு வந்தான் . இரண்டு துண்டுகளையும் அளந்து பார்த்தான் . பிறகு கடகடவென்று பலமாகச் சிரித்தான் .

" எண்டா சிரிக்கிறே ? "

" அம்மா ! நீ இப்படி ஏடாகூடமா ஏதாவது பண்ணுவேன்னு எனக்குத் தெரியும் . அதனாலதான் ராத்திரி நீ மயிலிறகின் முடியைக் கொடுக்கும்போது அளந்து வச்சேன் .சரியாக 6 அங்குலம் இருந்தது . இப்போது பாத்தா பெரிய துண்டு 5 அங்குலமும் , சிறிய துண்டு ஒரு அங்குலமும் இருக்கு . ஏம்மா ! குட்டிபோட்டா அம்மாவுக்கு உயரம் குறைஞ்சிடுமா ? நீ என்னைப் பெத்த பிறகு உனக்கு உயரம் குறைஞ்சிடுச்சா ? இல்லையே ! அப்படியேதானே இருக்கே ? இதுமட்டும் எப்படிம்மா ?" என்று கேட்டான் நாகு .

தன்னுடைய அம்மா தன்னை ஏமாற்றியது போல , நாகுவை ஏமாற்ற முடியவில்லையே என்று எண்ணி அகிலாண்டம் ஆனந்தம் அடைந்தாள் . தன் மகனை வாரி அணைத்து உச்சி மோந்தாள் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 13, 2015 5:10 pm

ஏம்மா ! குட்டிபோட்டா அம்மாவுக்கு உயரம் குறைஞ்சிடுமா ? நீ என்னைப் பெத்த பிறகு உனக்கு உயரம் குறைஞ்சிடுச்சா ? இல்லையே ! அப்படியேதானே இருக்கே ? இதுமட்டும் எப்படிம்மா ?" என்று கேட்டான் நாகு .

இந்த காலத்துப் பசங்க படு சுட்டிங்க !
இதை படிக்கும் குட்டி பசங்களுக்கும் , ஒரு பாடம் சொல்லிவிட்டீர் , jagadeesan .
அருமை !

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 15, 2015 3:33 pm

ஒரு கழுகு , தன் குஞ்சுடன் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது .

" அம்மா ! ரொம்பத் தாகமா இருக்கு ! குடிக்கத் தண்ணி வேணும் ! " என்றது குஞ்சு .

" கொஞ்சம் பொறு ! தண்ணி எங்கே இருக்குதுன்னு பார்க்கிறேன் ! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ......அதோ ! அந்த வீட்டின் கொல்லைப்  புறத்திலே உள்ள ஒரு பானையில் கொஞ்சம் தண்ணீர் உள்ளது ! வா ! நாம் போய்க் குடிக்கலாம் ! " என்றது தாய்க் கழுகு .


கழுகும்  ,குஞ்சும்  பறந்து வந்து அந்தப் பானையின் விளிம்பின் மீது அமர்ந்தன !

பானையின் அடியில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது . அது கழுகுக்கும் ,அதன் குஞ்சுக்கும் எட்டவில்லை .

" அம்மா ! தண்ணி எனக்கு எட்டலையம்மா ! " என்று சொல்லி அழுதது கழுகுக் குஞ்சு .

" கவலைப் படாதே ! ஏதாவது ஒரு வழி பிறக்கும் . அதுவரையில் அந்த மரத்தின் கிளை மீது உட்கார்ந்திருப்போம் ; வா ! " என்று சொல்லி தன் குஞ்சுடன் அங்கிருந்த ஒரு மரத்தின் கிளை மீது அமர்ந்தது கழுகு .

சிறிது நேரம் சென்றது . அப்போது அங்கு ஒரு காகம் வந்தது . அதுவும் தண்ணீரைத் தேடி அலைந்து களைத்திருந்தது . பானையின் மேலே ஏறி நின்று பார்த்தது .

பானையின் அடியில் கொஞ்சம் தண்ணீர் இருப்பதைக் கண்டு , மிகுந்த மகிழ்ச்சி கொண்டது. தண்ணீரைக் குடிக்க முயற்சி செய்தது . ஆனால் பாவம் ! காகத்திற்கும் தண்ணீர் எட்டவில்லை .

தண்ணீர் எட்டவில்லையே என்று காகம் வருத்தப்படவில்லை .  அங்குமிங்கும் பார்த்தது . பானைக்குப் பக்கத்தில் கொஞ்சம் கூழாங்கற்கள் குவியலாகக் கிடந்ததைப் பார்த்தது . உடனே செயலில் இறங்கியது . ஒவ்வொரு கல்லாக எடுத்து வந்து பானைக்குள் போட்டது . தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தது . தண்ணீர் பானையின் விளிம்பைத் தொட்டவுடன் , காகம் , மகிழ்வோடு நீரைக் குடிக்க ஆரம்பித்தது .

இந்த தருணத்திற்காகத்தான் கழுகு காத்திருந்தது. மரத்தின் கிளையிலிருந்து சரேலெனக் காக்கையின் மீது பாய்ந்தது . இதைச் சற்றும் எதிர்பாராத காக்கைத் தப்பித்தோம் , பிழைத்தோம் என்று பறந்து மறைந்தது . கழுகு ஆசைதீரத் தண்ணீரைக் குடித்தது . தன் குஞ்சையும் தண்ணீர் அருந்தக் கூப்பிட்டது . குஞ்சு, பறந்துவந்து தாயின் அருகில் அமர்ந்தது. நீர் அருந்தாமல் தாய்க் கழுகையே பார்த்துக் கொண்டிருந்தது .

" ஏன் சும்மா இருக்கிறாய் ? தண்ணீரைக் குடி !"

" அம்மா ! அந்தக் காக்கையின் உழைப்பினால் வந்த நீரை நாம் குடிப்பது பாவம் அல்லவா ! அந்தக் காக்கையையும் நீரைக் குடிக்கும் முன்பாக விரட்டி விட்டாய் ! அடுத்தவர் உழைப்பை நாம்   திருடுவது பாவம் . " என்றது கழுகுக் குஞ்சு .

" ஏய் மூடனே ! பேசாமல் தண்ணீரைக் குடி ; தத்துவம் பேசாதே . தேனீக்கள் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருக்கும் தேனை ,மனிதன் திருடி உண்கிறான் . தன் கன்றுக்காகப் பசு சேமித்து வைத்திருக்கும் பாலை , மனிதன் கறந்து குடிக்கிறான் . அதெல்லாம் தவறு இல்லையென்றால் ,இதுவும் தவறு இல்லை . பிழைக்கின்ற வழியைப் பார் ! பேசாமல் தண்ணீரைக் குடி! " என்று புத்திமதி சொன்னது தாய்க் கழுகு .


தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல் . ( இரவச்சம் - 1065 )

பொருள் :
=======

தெளிந்த நீர்போல சமைத்த கூழே ஆயினும் , தம்முடைய சொந்த முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும் இல்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 9 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக