புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கதைகள் -- - Page 7 Poll_c10எனது கதைகள் -- - Page 7 Poll_m10எனது கதைகள் -- - Page 7 Poll_c10 
21 Posts - 70%
heezulia
எனது கதைகள் -- - Page 7 Poll_c10எனது கதைகள் -- - Page 7 Poll_m10எனது கதைகள் -- - Page 7 Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
எனது கதைகள் -- - Page 7 Poll_c10எனது கதைகள் -- - Page 7 Poll_m10எனது கதைகள் -- - Page 7 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
எனது கதைகள் -- - Page 7 Poll_c10எனது கதைகள் -- - Page 7 Poll_m10எனது கதைகள் -- - Page 7 Poll_c10 
1 Post - 3%
viyasan
எனது கதைகள் -- - Page 7 Poll_c10எனது கதைகள் -- - Page 7 Poll_m10எனது கதைகள் -- - Page 7 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கதைகள் -- - Page 7 Poll_c10எனது கதைகள் -- - Page 7 Poll_m10எனது கதைகள் -- - Page 7 Poll_c10 
213 Posts - 42%
heezulia
எனது கதைகள் -- - Page 7 Poll_c10எனது கதைகள் -- - Page 7 Poll_m10எனது கதைகள் -- - Page 7 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
எனது கதைகள் -- - Page 7 Poll_c10எனது கதைகள் -- - Page 7 Poll_m10எனது கதைகள் -- - Page 7 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது கதைகள் -- - Page 7 Poll_c10எனது கதைகள் -- - Page 7 Poll_m10எனது கதைகள் -- - Page 7 Poll_c10 
21 Posts - 4%
prajai
எனது கதைகள் -- - Page 7 Poll_c10எனது கதைகள் -- - Page 7 Poll_m10எனது கதைகள் -- - Page 7 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எனது கதைகள் -- - Page 7 Poll_c10எனது கதைகள் -- - Page 7 Poll_m10எனது கதைகள் -- - Page 7 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
எனது கதைகள் -- - Page 7 Poll_c10எனது கதைகள் -- - Page 7 Poll_m10எனது கதைகள் -- - Page 7 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எனது கதைகள் -- - Page 7 Poll_c10எனது கதைகள் -- - Page 7 Poll_m10எனது கதைகள் -- - Page 7 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனது கதைகள் -- - Page 7 Poll_c10எனது கதைகள் -- - Page 7 Poll_m10எனது கதைகள் -- - Page 7 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனது கதைகள் -- - Page 7 Poll_c10எனது கதைகள் -- - Page 7 Poll_m10எனது கதைகள் -- - Page 7 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கதைகள் --


   
   

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 17, 2015 8:55 am

First topic message reminder :

ஓட்டைப் படகு.
============
காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் அதன் வழியாகப் பீரிட்டு வந்தது; முதலில் அடைத்திருந்த ஓட்டையில் இருந்த துணியும் பிடுங்கிக்கொண்டது. ஆக நான்கு ஓட்டைகள் வழியாக தண்ணீர் வேகமாக உள்ளே வந்துகொண்டிருந்தது. படகோட்டி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த தத்துவ ஞானி,

"ஓட்டைப்படகிலே மூன்று ஓட்டைப் படகுகள் ஏறிவிட்டன . " என்றார்.

" ஐயா ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? "

" தம்பி ! மனித உடம்பு ஒன்பது ஓட்டைகள் உள்ள படகுதானே ! அதைக் குறிப்பிட்டேன் ! "

" ஐயா ! தத்துவம் பேசுவதற்கு இது நேரம் அல்ல! படகு மூழ்கிக்கொண்டு இருக்கிறது; நாம் மூவரும் தப்பிக்க ஏதாவது வழியுண்டா ? அதைச் சொல்லுங்கள் !"

" தம்பி ! நம்முடைய வாழ்க்கையே ஒரு கடல் போன்றது. இந்தக் கடலைக் கடக்கவேண்டும் என்றால் , நாம் ஏறிச்செல்லும் படகிலே ஓட்டைகள் இருக்கக் கூடாது. முக்கியமாக நான்கு ஓட்டைகள் இருக்கக்கூடாது. அதாவது தாமதம், மறதி, சோம்பேறித்தனம், தூக்கம் ஆகிய நான்கு ஓட்டைகள் இருக்கக் கூடாது ; அவ்வாறு இருந்தால் நடுவழியிலேயே படகு கவிழ்ந்துவிடும். இதை நான் சொல்லவில்லை ; வள்ளுவர் சொல்லுகிறார்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். ( மடியின்மை- 606 )

" ஐயா ! அவசரம் தெரியாமல் மீண்டும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ! திருக்குறள் கேட்பதற்கு இது நேரம் அல்ல. நாம் சாகப் போகிறோம்; தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்! வெட்டிப்பேச்சு வேண்டாம். "

" நாம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்கும் வள்ளுவர் ஒரு வழி சொல்லுகிறார் ! "

" அது என்ன வழி ? "

" அறிவற்றங் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். ( அறிவுடைமை-421 )

அதாவது , அறிவு இருந்தால் , அது நம்மை மரணத்திலிருந்து கூடக் காப்பாற்றும்; மேலும் அந்த அறிவு பகைவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் அரண் போல விளங்கும்."

" ஐயா! இப்போது எப்படி நம்மைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம் ? அதைச் சொல்லுங்கள் !"

உடனே தத்துவஞானி ஓடக்காரனைப் பார்த்து," தம்பி ! படகின் மூலையிலே இருக்கின்ற அந்த நான்கு தகர பீப்பாய்கள் காலியாகத்தானே உள்ளன ? "

" ஆம் ஐயா ! காலியாகத்தான் உள்ளன. "

" அப்படியானால் அதன் வாயிலே இருக்கின்ற மூடியைக் காற்றுப் புகாவண்ணம் இறுக மூடி, அந்த நான்கு பீப்பாய்களையும் பக்கவாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, கயிற்றினால் இறுகக் கட்டு. "

ஓடக்காரனும், நானும் விரைவாக அந்தப் பணியைச் செய்து முடித்தோம்.

" அப்படியே அந்த நான்கு பீப்பாய்களையும் மெதுவாக ஆற்றினுள் இறக்குங்கள்! "

நாங்கள் பீப்பாய்களை ஆற்றினுள் இறக்குவதற்கும், படகு மூழ்குவதற்கும் சரியாக இருந்தது. ஒன்றாகக் கட்டிய பீப்பாய்கள் படகுபோல மிதந்தன. நாங்கள் மூவரும் தட்டுத்தடுமாறி பீப்பாய்கள் மேலே ஏறி அமர்ந்தோம்.பிறகு ஓடக்காரனின் துணையோடு பத்திரமாகக் கரை சேர்ந்தோம்.


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 03, 2015 1:57 pm

TWIST கதைகளை எழுதும்போது மிகவும் கவனமாக எழுதவேண்டியுள்ளது . இந்தக் கதையைப் பொருத்தவரையில் நான் செய்த தவறு ," காபி எஸ்டேட் ஓனர் கனகலிங்கம் " என்று தலைப்பு கொடுத்தது தான் . வேறுதலைப்பு கொடுத்திருந்தால் TWIST ரசிக்கும்படி இருந்திருக்கும் .

கிருஷ்ணம்மா ,ரமணியன் ஆகியோரின் பின்னூட்டத்திற்கு நன்றி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Aug 03, 2015 2:04 pm

பெண் பார்க்க வந்தபோது.
==========================
வெள்ளையடிக்கப்பட்டு புது மெருகோடு வீடு விளங்கியது. பெண் பார்ப்பதற்காக பக்கத்து ஊரிலிருந்து வந்திருந்தார்கள். வீட்டின் முன்புறத்தில் இருந்த ஹால், விருந்தினர்களால் நிரம்பி இருந்தது. வீட்டிலிருந்த பெண்கள் சிற்றுண்டி கொடுப்பதற்காக ஏற்பாடு செய்துகொண்டு இருந்தார்கள். வீடு கல்யாண களை கட்டியிருந்தது.

மாப்பிள்ளை நல்ல உயரம்; சிவப்பு நிறம்; கோட்டும் சூட்டும் அணிந்திருந்தார். அவருக்கு வலதுபுறம் அவருடைய அப்பாவும், இடதுபுறம் அவருடைய அம்மாவும் அமர்ந்து இருந்தார்கள். மற்ற உறவினர்கள் அவரைச் சுற்றி அமர்ந்திருந்தார்கள்.மணப்பெண்ணின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.

அம்மா அவர்களிடம்," என் பெண்ணைப் பாத்துட்டு , எல்லாம் இருந்து டிபன் சாப்பிட்டுப் போகணும். " என்று கேட்டுக் கொண்டார்.

அருகில் தூண்மறைவில் நின்றுகொண்டு மாப்பிள்ளையைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். காஞ்சிப் பட்டுடுத்திக் கஸ்தூரித் திலகமிட்டுத் தேவதைபோல் இருந்த என்னை , மாப்பிள்ளை வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.எனக்கு குப்பென்று வியர்த்தது. சட்டென்று என்னைத் தூண் மறைவில் முற்றிலுமாக மறைத்துக் கொண்டேன்.

உள்ளே வந்த அம்மா," கமலா! விமலா! சீக்கிரம் வாங்க! விருந்தாளிகளுக்குக் காபியும், டிபனும் கொண்டுபோய் கொடுங்க!" என்று கேட்டுக் கொண்டார். கமலா என்னைப் பார்த்து சிரித்தாள். கமலா என்னுடைய உயிர்த் தோழி. சிறுவயது முதற்கொண்டே நானும், அவளும் இணைபிரியாத தோழிகள். நானும், கமலாவும் வந்திருந்த விருந்தாளிகளுக்குக் காபியும், டிபனும் எடுத்துக்கொண்டு போனோம். கமலா , மாப்பிள்ளைக்கு டிபன் கொடுத்தாள். மாப்பிள்ளை என்னை ஓரக் கண்ணால் பார்ப்பதைக் கவனித்தேன்.உடனே மாப்பிள்ளையின் அப்பா,

" டேய்! பொண்ணை நல்லா பாத்துக்கடா!" என்று சொன்னார். மாப்பிள்ளை வெட்கத்தில் நெளிந்தார். மற்ற விருந்தாளிகளுக்கு டிபன் கொடுத்துவிட்டு அவசர அவசரமாகத் தூணின் மறைவிலே நின்றுகொண்டேன். உடம்பில் லேசான நடுக்கம் தோன்றியது. எல்லோரும் காபி குடித்து முடித்தபின், மாப்பிள்ளை, அவருடைய அப்பாவின் காதிலே ஏதோ சொன்னார். உடனே அவர் அம்மாவை நோக்கி,

" பையன் , பொண்ணு கூடத் தனியா ரெண்டு வார்த்தை பேசணும்னு சொல்றான் ." என்று சொன்னார்.

" அதுக்கென்ன ! தாராளமா பேசட்டும்." என்று அம்மாவும் அனுமதி கொடுத்தார். உடனே மாப்பிள்ளை என்னை நோக்கி வந்தார். எனக்குத் தலை சுற்றி மயக்கம் வருவதுபோல இருந்தது. கெட்டியாகத் தூணைப் பிடித்துக் கொண்டேன். உடனே அம்மா,

" மாப்பிள்ளை! எம் பொண்ணு கமலா இங்க இருக்கா! அவ விமலா; பக்கத்து வீட்டுப் பொண்ணு. தாயில்லாத பொண்ணு; அவளும் என்னை ' அம்மா " ன்னுதான் கூப்பிடுவா! நீங்க அவசரமா வந்ததாலே எம் பொண்ணோட போட்டோவை உங்களுக்கு அனுப்ப முடியல; அதுதான் இந்தக் குழப்பத்துக்குக் காரணம்." என்று சொல்லி விளக்கினாள். மாப்பிள்ளை பேய் அறைந்ததுபோல நின்றார்.


நீதி: பெண் பார்க்க வரும்போது, மணப்பெண்ணின் அருகில் , அவளைவிட அழகான பெண்களை அனுமதிக்க வேண்டாம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 5:50 pm

M.Jagadeesan wrote:TWIST கதைகளை எழுதும்போது மிகவும் கவனமாக எழுதவேண்டியுள்ளது . இந்தக் கதையைப் பொருத்தவரையில் நான் செய்த தவறு ," காபி எஸ்டேட் ஓனர் கனகலிங்கம் " என்று தலைப்பு கொடுத்தது தான் . வேறுதலைப்பு கொடுத்திருந்தால் TWIST ரசிக்கும்படி இருந்திருக்கும் .

கிருஷ்ணம்மா ,ரமணியன் ஆகியோரின் பின்னூட்டத்திற்கு நன்றி .  

ஆஹா......என் பின்னுட்டத்தால் தங்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும் ஐயா..உங்களின் ட்விஸ்ட் ஐ நான் ஊகித்துவிட்டேன் என்று மகிழ்ந்தேன் .அவ்வளவுதான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 03, 2015 5:55 pm

//நீதி: பெண் பார்க்க வரும்போது, மணப்பெண்ணின் அருகில் , அவளைவிட அழகான பெண்களை அனுமதிக்க வேண்டாம்.//

இது சரிதான் ஐயா, என்றாலும் பெண் பார்க்க வரும்போது கண்டிப்பாக பெண்ணை தனியாக நிற்க வைத்து இவள் தான் பெண் என்று சொல்லணும், பையனையும் அப்படித்தான் சுட்டிக்காட்டணும். ஏன் என்றால் அவனும் நண்பர்களுடன் வந்து விடுவானே? புன்னகை....பெரியவர்கள் இதை செய்ய சிலசமையம் தவறும்போது குழப்பங்கள் தான் வரும் புன்னகை
.
.
நல்ல கதை புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Aug 07, 2015 12:21 pm

இடம் மாறிய கொடை
======================
வேலைக்காரி முனியம்மா தலையைச் சொறிந்துகொண்டு அகிலாண்டத்தின் முன்னே வந்து நின்றாள்.

"என்ன முனீமா? தலையைச் சொறியரே!"

"ஒரு 200 ரூவா காசு இருந்தா குடும்மா! பையனுக்கு உடம்புக்கு முடியல! டாக்டர் கிட்ட கூட்டிப்போவணும்"

"காபிப்பொடி வாங்கக்கூடக் காசில்லாம காஞ்சிபோய்க் கிடக்கிறேன். எங்கிட்ட பத்து பைசாக் கூடக் கிடையாது.வேலையைப் பாரு!" என்று கடிந்துகொண்டாள் அகிலாண்டம்.

அகிலாண்டத்தின் வீட்டுவேலையை முடித்துவிட்டு வெளியேறினாள் முனியம்மா. அவள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் பக்கத்து வீட்டுப் பங்கஜம் உள்ளே நுழைந்தாள்.

"வா பங்கஜம்!" என்று வரவேற்ற அகிலாண்டம் பங்கஜத்திற்கு சூடாகக் கும்பகோணம் டிகிரி காப்பிப் போட்டுக்கொடுத்தாள்.

"என்ன பங்கஜம்?" வந்த காரணத்தைக் கேட்டாள் அகிலாண்டம்.

"இந்த மாசம் ஜி.ஆர்.டி நகைக்கடைக்கு 500 ரூபா தவணைப்பணம் கட்டணும். உங்கிட்ட கேட்டுப் போகலாம்ணு வந்தேன். ஆனா பாவம் உன் வீட்டுக்காரருக்கு 5000 ந்தான் சம்பளம். அதான் உங்கிட்ட எப்படிக் கேக்குறதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்"

"அதென்ன பங்கஜம் அப்படிச் சொல்லிட்டே! நீ ஆயிரம் கேட்டாலும் என்னால கொடுக்கமுடியும்" என்று சொல்லி 500 ரூபாய் கொண்டுவந்து பங்கஜத்திடம் கொடுத்தாள் அகிலாண்டம். பணத்தைப் பெற்றுக்கொண்ட பங்கஜம் நன்றி சொல்லிவிட்டு தன் வீட்டிற்குப் போய்விட்டாள்.

அன்று மாலை ஐந்து மணி இருக்கும்.

அகிலாண்டத்தின் வீட்டிற்கு வந்த முனியம்மா," பிச்சாத்து காசு 200 ரூவா கேட்டதுக்கு இல்லேன்னு சொல்லிட்டே! பக்கத்து வீட்டு பங்கஜம் மாமிகிட்ட 200 ரூவாதான் கேட்டேன்.மவராசி 500 ரூவா கொடுத்தா! அவ நல்லா இருக்கணும்; அவ புள்ளகுட்டிங்க எல்லாம் நல்லா இருக்கணும்" என்று வாழ்த்தியபடியே வெளியே சென்றாள்.

அதிர்ந்து போனாள் அகிலாண்டம்.(முனியம்மா பங்கஜம் வீட்டிற்கும் வேலைக்காரி)



      .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 08, 2015 6:43 am

இதுதான் நடைமுறை ,அய்யா .
கதை அருமை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Aug 08, 2015 5:20 pm

சூனியக்கிழவி
=================
அந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் ஓர் அழகான தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தில் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கின. அந்த மலர்த்தோட்டத்தை ஒரு சூனியக்கிழவி பராமரித்து வந்தாள்.

அந்த ஊரில் அன்பே உருவான கணவன்,மனைவி இருவர் வசித்து வந்தனர். ஒருநாள் கணவன் சூன்யக்கிழவியின் தோட்டத்தின் வழியே செல்ல நேரிட்டது. அந்த மலர்த் தோட்டத்தில் இருந்த வண்ணமலர்கள் அவன் கண்ணைப் பறித்தன. தன் மனைவிக்குக் கொடுப்பதற்காக அங்கிருந்த ஒரு பெரிய ரோஜா மலரைப் பறித்தான். திடீரென்று இடியும் மின்னலும் தோன்றின. அவன் முன்பாக சூனியக்கிழவி தோன்றினாள்.

சூனியக்கிழவியைப் பார்த்து அவன் நடுங்கினான். தன்னுடைய மந்திர சக்தியினால் அவனை மறைந்துபோகச் செய்தாள்.

கணவனுக்காக அவனுடைய மனைவி நீண்ட நேரம் காத்திருந்தாள். கணவன் வராது போகவே அவனைத் தேடிப் புறப்பட்டாள்.அவள் வீட்டைவிட்டு வெளியே காலடி எடுத்து வைத்தவுடனேயே பூமி அதிர்ந்தது. சூனியக்கிழவி அவளுக்கு முன்பாகத் தோன்றினாள்.சூனியக்கிழவி அவளிடம்,

"உன் கணவனைத் தேடி அலையாதே! அவன் உனக்குக் கிடைக்கமாட்டான்.இதைக் கேட்டவுடன் அவன் மனைவி அழத்தொடங்கினாள்.

"என் தோட்டத்தில் புகுந்து என் அனுமதியில்லாமல் ஒரு ரோஜா மலரைப் பறித்தான்.ஆகவே அவனை ஒரு ரோஜா மலராக மாற்றிவிட்டேன். என்னுடைய சாபத்தால் அவன் பகல் முழுவதும் ரோஜாவாக இருப்பான்;இரவில் மனித உருவத்தில் இருப்பான்."

இதைக்கேட்ட அவனது மனைவி சூனியக்கிழவியிடம் தன் கணவனுக்குக் கருணை காட்டுமாறு வேண்டினாள்.கிழவி அவளிடம் ,"நாளைக்குக் காலையில் தோட்டத்தில் வந்து என்னைப் பார்" என்று சொல்லி மறைந்துவிட்டாள்.

மறுநாள் சூரிய உதயத்தில் அவள் கிழவியைப் பார்க்கத் தோட்டத்திற்குச் சென்றாள்.அங்கிருந்த ஒரு செடியில் மூன்று ரோஜா மலர்கள் இருந்தன. கிழவி, அந்தப் பெண்ணைப் பார்த்து," இந்த மூன்று ரோஜா மலர்களில் ஒன்று உன் கணவன்; அந்த மலரை நீ சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.உனக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே அளிக்கப்படும். உன் கணவன் இருக்கும் மலரை நீ தேர்ந்தெடுக்கத் தவறினால் நீ அவனை இழப்பாய்; அவனை என்றுமே பெறமுடியாது" என்று சொல்லி கிழவி மறைந்துவிட்டாள்.

அந்தப் பெண் தன் கணவன் இருக்கும் மலரை சரியாகத் தொட்டாள். உடனே அந்த அதிசயம் நடந்தது. அவளுக்கு முன்பாக அவள் கணவன் தோன்றினான்.

கேள்வி: எப்படி அவள் தன் கணவன் இருக்கும் மலரைக் கண்டுபிடித்தாள்?




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 08, 2015 6:25 pm

என்ன jagadeesan சர் ,
மூளைக்குணவு ஆரம்பித்து , பயனுள்ள கணக்குகள் பல கொடுத்தீர் .
இப்போது கதையிலும் மூளைக்கு உணவா?

பதில் : அன்று புதிதாக பூத்த மலர் தான் தனது கணவனாக இருக்கவேண்டும் என்று
கண்டு பிடித்து இருப்பாள் , ஏனென்றால் இரவெல்லாம் அவன் மனித உருவில் இருந்திருப்பான் .
மற்ற பூக்களில் காலை வேளை சிறு பனித்துளிகள் இருந்திருக்கலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 12, 2015 8:32 am

காலம் மாறியது
=================
பயந்துகொண்டே கதவைத் தட்டினார் தர்மலிங்கம்.

கதவைத் திறந்தான் பூபதி. தர்மலிங்கத்தைக் கண்டவுடன் கடுங்கோபம் அடைந்தான் பூபதி."பணம் கேட்டு வீட்டுப்பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கிறேன்ல, ஒருதடவ சொன்னா புத்தியில ஏறாதா?" பொரிந்து தள்ளினான் பூபதி.

"இல்ல தம்பி, வீட்டுல கொஞ்சம் பணக்கஷ்டம், அதான்.." என்று இழுத்தார் தர்மலிங்கம்.

"யாருக்குத்தான் பணக்கஷ்டம் இல்ல. சிக்கனமா இருக்கணும்னு உனக்குத் தெரியாதா? பணம் கையில இருந்தா தாம் தூம்னு செலவு பண்ணவேண்டியது; பணம் இல்லாட்டி இங்க வந்து தலைய சொரியவேண்டியது;ஒன்னாந்தேதியான ஐயாவுக்கு மூக்குல வேர்த்திருமோ? பணக்கஷ்டம்னா யார்கிட்டயாவது போய்க் கடன் கேளு. நகைநட்டு இருந்தா அடகு வை. நேத்துகூட வந்தியாமே! எம் பொண்டாட்டி சொன்னா. வீட்ல தனியா இருக்குற பொம்பளகிட்ட உனக்கு என்ன பேச்சு? மரியாத கெட்டுரும்.உன்னையெல்லாம் வீட்டுக்குள்ளாற நுழையவிட்டதே தப்பு. போய்யா வெளிய" என்று சொல்லி பூபதி கதவை சாத்தினான்.

ஆறு மாதமாக வீட்டுவாடகை தராமல் இப்படி இழுத்தடிக்கிறானே என்று தர்மலிங்கம் தள்ளாடியபடியே நடந்து சென்றார்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 16, 2015 8:25 am

புது செருப்பு
==============
" விசாலம் ! வாசலில் விட்டிருந்த என் செருப்பைக் காணோம்! நீ பாத்தியா?" என்று தன் மனைவியிடம் கேட்டார் தணிகாசலம்.

" நல்லாத் தேடிப் பாருங்க! அங்கதான் இருக்கும்!"

" இல்ல விசாலம்! நல்லாத் தேடிப் பாத்துட்டேன்!எங்கேயும் காணோம்; நீயும் கொஞ்சம் வந்து தேடிப்பாரு !"

இருவரும் ஒரு மணி நேரமாகத் தேடியும் செருப்புக் கிடைக்கவில்லை. தணிகாசலம் மிகவும் வருத்தப்பட்டார். போன மாசம்தான் ஐந்நூறு ரூபாய் கொடுத்து அந்த செருப்பை வாங்கினார். இன்னும் புது மெருகு குலையாமல் இருந்தது.

' போனால் போகட்டும் விடுங்க! பென்ஷன் வந்தவுடன் புது செருப்பு வாங்கிக் கொள்ளலாம்." என்று விசாலம் சொன்னாள்.

செருப்புத் தொலைந்து ஒரு வாரமாயிற்று. " நாளைக்குப் பென்ஷன் வந்துவிடும்; புது செருப்பு வாங்கிக் கொள்ளலாம்." என்று தணிகாசலம் நினைத்துக் கொண்டார்.

மாலை மணி ஐந்து இருக்கும். தணிகாசலத்தைத் தேடி அவரது நண்பர் சுந்தரவதனம் வந்திருந்தார்.

' என்னப்பா! செருப்புக் கிடைத்ததா?"

" இல்லை சுந்தரம் ! "

" விட்டுத் தள்ளு; நாய் ஏதாவது தூக்கிக்கொண்டு போயிருக்கும்! வேற ஒன்னு புதுசா வாங்கிக்க ! சரி வா! கோவிலுக்குப் போயிட்டு வரலாம்!"

இருவரும் கோவிலுக்குச் சென்றனர்.தணிகாசலம் செருப்பில்லாமல் வெறுங்காலுடன் நடந்து வந்தார். சுந்தரம் செருப்பைக் கோவிலுக்கு வெளியில் விட்ட பிறகு இருவரும் கோவிலுக்குள் நுழைந்தனர். சுவாமி தரிசனம் முடிந்த பிறகு , கோவிலில் சிறிது நேரம் அமர்ந்திருந்தனர். பொதுவான சில விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.

இருவரும் வீட்டுக்குப் புறப்பட்டனர். செருப்பை விட்ட இடத்தில் , தணிகாசலத்தின் செருப்பைக்கண்ட சுந்தரம் , மிகுந்த வியப்படைந்தார். தணிகாசலத்தைக் கூப்பிட்டு

" தணிகாசலம்! இதோ பாருப்பா! உன் செருப்பு இங்க இருக்கு !"

மிகுந்த ஆவலுடன் சென்ற தணிகாசலம் , தொலைந்துபோன தன்னுடைய செருப்பு , அங்கே இருக்கக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார். அதை அணிந்து கொள்ள காலை நீட்டியவர் ,சட்டென்று பின்னுக்கு இழுத்துக் கொண்டார்.

" என்னப்பா ! தணிகாசலம்! தயங்காம போட்டுக்கிட்டு வா! அது உன்னுடைய செருப்பு! என்ன யோசனை ?"

" இல்லப்பா! இது என்னுடைய செருப்பு என்றாலும், தற்போது வேறு ஒருவனுடைய பொறுப்பில் உள்ளது. எனவே இதை எடுத்து நான் அணிந்துகொண்டால், அது திருடியதற்குச் சமம். அப்புறம் அவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் ? மேலும் ஒருவர் அணிந்த செருப்பை மற்றவர் அணிவது சுகாதாரமல்ல! நாளைக்கு வேறு செருப்பை வாங்கிக் கொள்கிறேன் !" என்றார் தணிகாசலம்.

அப்போது கோவிலுக்கு உள்ளே இருந்து வந்த இருவரில் ஒருவன் , தணிகாசலத்தின் செருப்பை அணிந்துகொண்டு புறப்பட்டான். சிறிதுதூரம் சென்ற பிறகு அவன் தன் நண்பனைப் பார்த்து,

" அந்தப் பெரிசுங்க என்னோட செருப்பைப் பாத்து ஏதோ பேசினதைக் கவனிச்சுயா? நல்லவேளை! சரியான நேரத்துல வந்துட்டோம்! இல்லன்னா அந்தப் பெருசுங்க என்னோட செருப்பைத் தள்ளிகிட்டு போயிருப்பானுங்க !"

இதைக்கேட்ட தணிகாசலம், தன் நண்பரிடம்," சுந்தரம்! இதுதான் உலகம்! புரிந்துகொள்!" என்றார்

Sponsored content

PostSponsored content



Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக