புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கதைகள் -- - Page 8 Poll_c10எனது கதைகள் -- - Page 8 Poll_m10எனது கதைகள் -- - Page 8 Poll_c10 
21 Posts - 70%
heezulia
எனது கதைகள் -- - Page 8 Poll_c10எனது கதைகள் -- - Page 8 Poll_m10எனது கதைகள் -- - Page 8 Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
எனது கதைகள் -- - Page 8 Poll_c10எனது கதைகள் -- - Page 8 Poll_m10எனது கதைகள் -- - Page 8 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
எனது கதைகள் -- - Page 8 Poll_c10எனது கதைகள் -- - Page 8 Poll_m10எனது கதைகள் -- - Page 8 Poll_c10 
1 Post - 3%
viyasan
எனது கதைகள் -- - Page 8 Poll_c10எனது கதைகள் -- - Page 8 Poll_m10எனது கதைகள் -- - Page 8 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது கதைகள் -- - Page 8 Poll_c10எனது கதைகள் -- - Page 8 Poll_m10எனது கதைகள் -- - Page 8 Poll_c10 
213 Posts - 42%
heezulia
எனது கதைகள் -- - Page 8 Poll_c10எனது கதைகள் -- - Page 8 Poll_m10எனது கதைகள் -- - Page 8 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
எனது கதைகள் -- - Page 8 Poll_c10எனது கதைகள் -- - Page 8 Poll_m10எனது கதைகள் -- - Page 8 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது கதைகள் -- - Page 8 Poll_c10எனது கதைகள் -- - Page 8 Poll_m10எனது கதைகள் -- - Page 8 Poll_c10 
21 Posts - 4%
prajai
எனது கதைகள் -- - Page 8 Poll_c10எனது கதைகள் -- - Page 8 Poll_m10எனது கதைகள் -- - Page 8 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எனது கதைகள் -- - Page 8 Poll_c10எனது கதைகள் -- - Page 8 Poll_m10எனது கதைகள் -- - Page 8 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
எனது கதைகள் -- - Page 8 Poll_c10எனது கதைகள் -- - Page 8 Poll_m10எனது கதைகள் -- - Page 8 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எனது கதைகள் -- - Page 8 Poll_c10எனது கதைகள் -- - Page 8 Poll_m10எனது கதைகள் -- - Page 8 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனது கதைகள் -- - Page 8 Poll_c10எனது கதைகள் -- - Page 8 Poll_m10எனது கதைகள் -- - Page 8 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனது கதைகள் -- - Page 8 Poll_c10எனது கதைகள் -- - Page 8 Poll_m10எனது கதைகள் -- - Page 8 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது கதைகள் --


   
   

Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun May 17, 2015 8:55 am

First topic message reminder :

ஓட்டைப் படகு.
============
காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது. உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் அதன் வழியாகப் பீரிட்டு வந்தது; முதலில் அடைத்திருந்த ஓட்டையில் இருந்த துணியும் பிடுங்கிக்கொண்டது. ஆக நான்கு ஓட்டைகள் வழியாக தண்ணீர் வேகமாக உள்ளே வந்துகொண்டிருந்தது. படகோட்டி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
இதைப் பார்த்த தத்துவ ஞானி,

"ஓட்டைப்படகிலே மூன்று ஓட்டைப் படகுகள் ஏறிவிட்டன . " என்றார்.

" ஐயா ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? "

" தம்பி ! மனித உடம்பு ஒன்பது ஓட்டைகள் உள்ள படகுதானே ! அதைக் குறிப்பிட்டேன் ! "

" ஐயா ! தத்துவம் பேசுவதற்கு இது நேரம் அல்ல! படகு மூழ்கிக்கொண்டு இருக்கிறது; நாம் மூவரும் தப்பிக்க ஏதாவது வழியுண்டா ? அதைச் சொல்லுங்கள் !"

" தம்பி ! நம்முடைய வாழ்க்கையே ஒரு கடல் போன்றது. இந்தக் கடலைக் கடக்கவேண்டும் என்றால் , நாம் ஏறிச்செல்லும் படகிலே ஓட்டைகள் இருக்கக் கூடாது. முக்கியமாக நான்கு ஓட்டைகள் இருக்கக்கூடாது. அதாவது தாமதம், மறதி, சோம்பேறித்தனம், தூக்கம் ஆகிய நான்கு ஓட்டைகள் இருக்கக் கூடாது ; அவ்வாறு இருந்தால் நடுவழியிலேயே படகு கவிழ்ந்துவிடும். இதை நான் சொல்லவில்லை ; வள்ளுவர் சொல்லுகிறார்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். ( மடியின்மை- 606 )

" ஐயா ! அவசரம் தெரியாமல் மீண்டும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ! திருக்குறள் கேட்பதற்கு இது நேரம் அல்ல. நாம் சாகப் போகிறோம்; தப்பிக்க ஒரு வழி சொல்லுங்கள்! வெட்டிப்பேச்சு வேண்டாம். "

" நாம் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பிப்பதற்கும் வள்ளுவர் ஒரு வழி சொல்லுகிறார் ! "

" அது என்ன வழி ? "

" அறிவற்றங் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். ( அறிவுடைமை-421 )

அதாவது , அறிவு இருந்தால் , அது நம்மை மரணத்திலிருந்து கூடக் காப்பாற்றும்; மேலும் அந்த அறிவு பகைவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றும் அரண் போல விளங்கும்."

" ஐயா! இப்போது எப்படி நம்மைக் காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம் ? அதைச் சொல்லுங்கள் !"

உடனே தத்துவஞானி ஓடக்காரனைப் பார்த்து," தம்பி ! படகின் மூலையிலே இருக்கின்ற அந்த நான்கு தகர பீப்பாய்கள் காலியாகத்தானே உள்ளன ? "

" ஆம் ஐயா ! காலியாகத்தான் உள்ளன. "

" அப்படியானால் அதன் வாயிலே இருக்கின்ற மூடியைக் காற்றுப் புகாவண்ணம் இறுக மூடி, அந்த நான்கு பீப்பாய்களையும் பக்கவாட்டில் ஒன்றன்பின் ஒன்றாக வைத்து, கயிற்றினால் இறுகக் கட்டு. "

ஓடக்காரனும், நானும் விரைவாக அந்தப் பணியைச் செய்து முடித்தோம்.

" அப்படியே அந்த நான்கு பீப்பாய்களையும் மெதுவாக ஆற்றினுள் இறக்குங்கள்! "

நாங்கள் பீப்பாய்களை ஆற்றினுள் இறக்குவதற்கும், படகு மூழ்குவதற்கும் சரியாக இருந்தது. ஒன்றாகக் கட்டிய பீப்பாய்கள் படகுபோல மிதந்தன. நாங்கள் மூவரும் தட்டுத்தடுமாறி பீப்பாய்கள் மேலே ஏறி அமர்ந்தோம்.பிறகு ஓடக்காரனின் துணையோடு பத்திரமாகக் கரை சேர்ந்தோம்.


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 16, 2015 9:10 am

ஞாயிற்றுக் கிழமையின்  சிற(செரு)ப்பு கதை .
நன்றாக இருந்தது .
ஆனால் அது தனதுதான் என்று கூற ,எப்பிடி முடியும் என்று தெரியவில்லை .
சந்தையில் அதே கம்பனி ,100 கணக்கில் செருப்புகளை விட்டு இருக்கலாம் .
இருப்பினும் , உலகம் இதுதான் , என அழகாக கூறி உள்ளீர் .
ரசித்தேன் ஆகவே எந்தன் கருத்தையும் பகிர்ந்தேன் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Aug 16, 2015 12:43 pm

கல்யாண மண்டப வாசலில் நூற்றுக் கணக்கான ஜோடி செருப்புகள் விடப்படுகின்றன . ஆனால் ஒவ்வொரு ஜோடியும் வித்தியாசமாகத்தான் இருக்கும் ; அதனால்தான் நம்முடைய செருப்பை எளிதில் கண்டறிந்து , அணிந்துகொண்டு வந்துவிடுகிறோம் .

பாம்பறியும் பாம்பின் கால் என்பது பழமொழி . எனவே தணிகாசலத்தின் காலறியும் அவருடைய செருப்பு எதுவென்று !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 16, 2015 12:53 pm

அதுவும் சரிதான்  புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 19, 2015 8:45 pm

அவன்கண் விடல்
==================
" விசாலம்! விசாலம்!! " தன் மனைவியைக் கூப்பிட்டார் பீதாம்பரம்.
" என்னங்க?"

" இன்னிக்கி கரண்ட் பில் கட்டணும்; கடைசி நாள். கோடிவீட்டுக் கோவிந்தசாமி நமக்குப் பணம் தரணும்; அத வாங்கியாரச் சொல்லு."

' தெரியுங்க; பணம் வாங்கிட்டு வர சின்னவன் மாசியை அனுப்பியிருக்கேன்."

" சின்னவனையா அனுப்பியிருக்கே? அவனுக்கு அவ்வளவா வெவரம் பத்தாதே; பெரியவன் காசியை அனுப்பியிருக்கலாமில்ல? "

பீதாம்பரம் சொல்லி வாயை மூடுவதற்குள் மாசி வீட்டிற்குள் நுழைந்தான்.

" என்னடா மாசி! கோவிந்தசாமி பணம் கொடுத்தாரா? "

" இல்லப்பா! அவரு வீட்டுல இல்ல; வெளியில போயிருக்காராம்; அவரோட சம்சாரம் சொன்னாங்க "

" எங்க போனாராம்? எப்ப வருவார்னு கேட்டியா?"

"இல்லப்பா!"

" என்னடா இது; ஒரு மனுஷன் வெளிய போயிருக்கார்னு சொன்னா, அவரு எங்க போயிருக்காரு, எப்ப வருவார்னு விசாரிக்கமாட்டியா?

உங்க அண்ணன் காசிய கூப்பிடு "

"என்னப்பா? " என்று கேட்டுக்கொண்டே காசி வந்தான்.

" இன்னிக்கி கரண்ட் பில் கட்ட கடைசி நாள்; கோடி வீட்டு கோவிந்தசாமி பணம் தரணும். போயி வாங்கிட்டு வா!"

" சரிப்பா! " என்று சொல்லிவிட்டு காசி வெளியில் சென்றான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் காசி திரும்பி வந்தான். அப்பாவிடம்,
" அப்பா! கோவிந்தசாமி பணம் கொடுத்துவிட்டார். பணத்தை வாங்கிக்கொண்டு அப்படியே கரண்ட் பில்லையும் கட்டிவிட்டேன். இந்தாங்கப்பா மீதி பணம் " என்று சொல்லி பணத்தையும், பில்லையும் அப்பாவிடம் கொடுத்தான் காசி.

" கோவிந்தசாமி வீட்டில் இல்லையென்று உன் தம்பி மாசி சொன்னானே? "

" ஆமாம் அப்பா! நான் போனபோது கூட அவர் வீட்டில் இல்லை. வெளியில் போயிருப்பதாக அவருடைய சம்சாரம் சொன்னாங்க. அந்த அம்மாகிட்ட அவரோட செல் நம்பர் வாங்கி அவருக்கு போன் செய்தேன். பேங்கில் இருப்பதாகச் சொன்னார். தான் வீட்டிற்கு வருவதற்கு இரவு எட்டு மணி ஆகும் என்றும், உடனடியாக பேங்கிற்கு வந்து பணத்தை வாங்கிக்கொண்டு போகும்படியும் சொன்னார். எனவே பேங்கிற்குச் சென்று அவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு, அப்படியே கரண்ட் பில்லையும் கட்டிவிட்டு வருகிறேன்." என்றான் காசி.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

என்பது குறள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 19, 2015 9:59 pm

நல்ல கதை, அந்த பிள்ளை நல்ல சாமர்த்தியக்காரன் புன்னகை..................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
.
.
.
ஐயா, அந்த ஸ்ரீவில்லிபுத்தூர் திரி இல் பதில் போட்டுவிட்டேன், நீங்க பார்க்கலையா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 3:50 am

அய்யா இன்று தான் நேரம் கிடைத்தது . உங்கள் அனைத்து கதைகளையும் இன்று முழு மூச்சாக படித்துவிட்டேன் அய்யா . ரொம்ப நாளாக எண்ணி இருந்தேன் இன்று தான் முடிந்தது .
அனைத்தும் அருமை . எனக்கு காபி எஸ்டேட் , திருடன் , இடம் மாறிய கொடை , ஜானு , பயணத்திற்கு தயார் ,நோய் கொடுத்த டாக்டர் , முதியோர் இல்லம் , கல்லாதான் ஒட்பம்(நீங்க எங்கே அந்த சின்ன பையனுக்கு அரசாங்க பதவி கொடுத்து விடுவீங்களோன்னு பார்த்தேன் ) , போன்ற கதைகள் மிகவும் பிடித்திருந்தது அய்யா .
ஜானு கதை எ பா மு (எதிர் பாரத முடிவு )... அருமை ....
காபி எஸ்டேட் கதையின் முடிவு நான் எதிர்பார்கலை . மற்றவர்கள் கண்டுபிடித்து விட்டார்கள் என்றாலும் எனக்கு எ . பா . மு. தான் .
அனைத்தும் அருமை அய்யா . வாழ்த்துக்கள் .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu Aug 20, 2015 9:41 pm

என்னுடைய கதைகளை ரசித்துப் படித்த ஷோபனாசஹஸ் அவர்களுக்கு நன்றி !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Thu Aug 20, 2015 9:42 pm

M.Jagadeesan wrote:என்னுடைய கதைகளை ரசித்துப் படித்த ஷோபனாசஹஸ் அவர்களுக்கு நன்றி !
மேற்கோள் செய்த பதிவு: 1158339
மிக்க சந்தோசம் அய்யா . மிக்க நன்றி .

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 13, 2015 8:11 am

வாயும் வயிறுமாக
===============
விமானத்தில் இருந்து இறங்கிவந்த அந்தப் பெண்ணின் நடையில் ஒரு தள்ளாட்டம் இருந்தது; வயிறு பெருத்துக் காணப்பட்டதால் அவளால் நடக்க இயலவில்லை. கண்களில் ஒரு கலவரம் தெரிந்தது. சிரமப்பட்டு நடந்தாள். நடக்கும்போதே அவளுக்கு மூச்சு வாங்கியது. "அம்மா ! அப்பா ! என்று முனகிக்கொண்டே நடந்தாள். அவளின் நிலைகண்டு அங்கிருந்த சிலர்,

" ஏம்மா! வாயும் வயிறுமா இருக்குற நீ இப்படித் தனியே வரலாமா? துணைக்கு யாரையாவது கூட்டிகிட்டு வரலாமில்ல? ஒன்னுகிடக்க ஒன்னு ஆச்சுன்ன என்னம்மா பண்ணுவே?" என்று ஆதங்கத்துடன் கேட்டனர்.

சட்டென்று அந்தப்பெண் மயங்கி விழுந்தாள். அவளுடைய உடமைகள் அங்கே சிதறிக் கிடந்தன. விமான நிலைய அதிகாரிகள் பதட்டமடைந்தனர். அவசரமாக அவளை அருகிலிருந்த பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இரண்டுமணி நேரத்திற்குப்பின் அங்குவந்த அதிகாரிகள் டாக்டரைப் பார்த்து

" என்ன டாக்டர்! தாயும் சேயும் நலமா ?" என்று கேட்டனர்.

" பெண்ணும், பொன்னும் நலம் " என்று பதில் சொன்னார் டாக்டர்.

" ஒ பெண் குழந்தையா ! சுகப் பிரசவம்தானே?"

" பொன்னும் " என்று நான் சொன்னது பெண் குழந்தை அல்ல. தங்க நாணயங்களை! அந்தப் பெண் கர்ப்பவதி அல்ல. நிறைய தங்க நாணயங்களை விழுங்கியதால்தான் வயிறு பெருத்துக் காணப்பட்டாள்." என்று கூறி தங்க நாணயங்களைக் காட்டினார்.

கஸ்டம்ஸ் அதிகாரிகள் விரைந்துவந்து அவள்மீது வழக்குப் பதிவு செய்தனர்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 13, 2015 10:17 am

பொன்மகள் வந்தாளோ ? எனது கதைகள் -- - Page 8 3838410834 எனது கதைகள் -- - Page 8 103459460
அவள் நடை ஒருமாதிரி இருந்தாலும் , உங்கள் நடை நன்றாக இருக்கிறது
எதிர்பார்த்த முடிவுதான் jagadeesan !!
உங்கள் டச் தெரிகிறது !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 8 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக