புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm

» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm

» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm

» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am

» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am

» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am

» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am

» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am

» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am

» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am

» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am

» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am

» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm

» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm

» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm

» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm

» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am

» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am

» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am

» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am

» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am

» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm

» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm

» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm

» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm

» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm

» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am

» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am

» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
95 Posts - 66%
heezulia
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
28 Posts - 19%
Dr.S.Soundarapandian
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
5 Posts - 3%
prajai
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
473 Posts - 52%
heezulia
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
302 Posts - 33%
Dr.S.Soundarapandian
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
30 Posts - 3%
mohamed nizamudeen
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
26 Posts - 3%
T.N.Balasubramanian
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
20 Posts - 2%
i6appar
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
16 Posts - 2%
Anthony raj
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
13 Posts - 1%
prajai
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
12 Posts - 1%
kavithasankar
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10தேசியச் செய்திகள் - Page 9 Poll_m10தேசியச் செய்திகள் - Page 9 Poll_c10 
5 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேசியச் செய்திகள்


   
   

Page 8 of 20 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 23, 2015 12:11 am

First topic message reminder :

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம்

பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதுடன், என்.எச் 57, 80, 107 ஆகிய நெடுச்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

புயலினால் ஏற்பட்ட மொத்த சேதத்தின் அளவு பற்றி முழுமையான விபரங்கள் தெரியவில்லை. புயலின் வேகத்தில் அப்பகுதியில் இருந்த குடிசைகள் முற்றிலுமாக சேதம் அடைந்துள்ளன.

இந்த புயலால் அராரியா, சுபால், காதிகர் மற்றும் மாதேபுரா போன்ற மாவட்டஙகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாதிப்பின் அளவு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் உயிர் இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியை பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிடுகிறார்.



தேசியச் செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 12:28 am

எல்லாமே என் அம்மாதான்: உருகும் பிரணாப் முகர்ஜி

ஆசிரியர் தினத்தையொட்டி பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று ஒரு நாள் ஆசிரியராக இருந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.

இதற்கான நிகழ்ச்சி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நடந்தது. இதில் பங்கேற்பதற்காக 10–ம் வகுப்பு, 11–ம் வகுப்பு மாணவ– மாணவிகள் 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

முதலில் இந்திய வரலாறு பற்றிய பாடம் நடத்தினார். தொடர்ந்து தனது அரசியல் அனுபவங்கள் பற்றி பேசினார். அரசியல் அமைப்பு சட்டம் பற்றியும் உரையாற்றினார். அப்போது நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது பொருளாதார சீர் திருத்தங்களின் அவசியம் பற்றியும், அதில் நரசிம்மராவின் பங்கு பற்றியும் குறிப்பிட்டார்.

பின்னர் பிரணாப் முகர்ஜி, “நான் ஒரு மந்திரியாகவோ, ஜனாதிபதியாகவோ உங்கள் முன் இப்போது இல்லை. நான் உங்கள் முகர்ஜி, உங்களை சந்திப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய சிறந்த ஆசிரியர் என் அம்மாதான். நான் மிகவும் சேட்டைக்காரன் என்பதால் அம்மாவிடம் அடிக்கடி அடி வாங்குவேன். ஆனால், அடித்து முடித்த கொஞ்ச நேரத்திலேயே, என்னிடம் வந்து, அன்போடும் அக்கறையோடும், காலையிலிருந்து மாலை வரை நடந்த எல்லாவற்றையும் வரிசையாக என்னிடம் சொல்லுமாறு கேட்பார். என்னுடைய அனைத்து வெற்றிக்கும் காரணம் என்னுடைய அம்மாதான். கண்டிப்பாக உங்கள் அம்மாதான் உங்களுக்கு சிறந்த ஆசிரியராக இருக்க முடியும்” என்றார்.

மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள மிராடி என்ற கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களான கமாடா கிங்கர் முகர்ஜிக்கும் ராஜிலெட்சுமிக்கும் மகனாகப் பிறந்தார் பிரணாப் முகர்ஜி. தந்தையின் காலம் சிறைச்சாலை மற்றும் கட்சி அலுவலகத்தை சுற்றியே இருந்தது. இதனால், அவர் தாய்தான் அவரை கடும் சிரமங்களுக்கிடையில் கவனித்துக்கொண்டார்.



தேசியச் செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 10:48 pm

கசகசா தூள் விற்பனைக்கான தடைக்கு இடைக்காலத் தடை

கசகசா தூள் மற்றும் ஓபியம் விற்பனைக்கு ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு, உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்கள் வழங்கும் மருந்துச் சீட்டின் பேரில் கசகசா தூள், கஞ்சா இலை ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இந்நிலையில் சண்டீகரைச் சேர்ந்த ஒரு தன்னார்வ அமைப்பு, இவற்றின் விற்பனைக்குத் தடை விதிக்குமாறு கோரி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தது.

அந்த வழக்கை விசாரித்த ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் இப்பொருள்களின் விற்பனைக்குத் தடை விதித்து கடந்த ஜூன் 30ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி ராஜஸ்தான் மாநிலத்தில் கசகசா தூள், கஞ்சா இலை ஆகியவற்றின் மொத்த விற்பனைக்கான உரிமம் பெற்றுள்ள, தினேஷ் கோஸ்வாமி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

அந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கண்ட பொருள்களின் விற்பனைக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு, இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.



தேசியச் செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2015 10:55 pm

எல்லையில் 10 தீவிரவாதிகளை வீழ்த்திய ஜவான் வீரமரணம்

காஷ்மீரில் 11 நாட்களில் 10 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்ற ராணுவத்தின் சிறப்புப் படை கமாண்டோ தீவிரவாதிகளால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் தாக்குதல் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தினர் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவியபோது அவர்களை எதிர்த்த சிறப்புப் படை கமாண்டோ வீரமரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தின் சிறப்பு கமாண்டோப்படைப் பிரிவு வீரர் லான்ஸ் நாயக் மோகன்நாத் கோஸ்வாமி, காஷ்மீரில் பயங்கரவாத தடுப்புப்பிரிவில் பணியாற்றி காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகளுக்கு தேடுதல் வேட்டை நடத்தி கடந்த 11 நாட்களில் 10 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றார்.

மேலும், உதாம்பூரில் நடந்த வேட்டையில் முகமது நவீத் யாகூப் என்று என்ற தீவிரவாதியை உயிருடன் பிடிக்க இவர் காரணமாக இருந்தார். தொடர்ந்து ஹாந்த்வாரா என்ற இடத்தில் நடந்த சண்டையின் போது அவர் தீவிரவாதிகளால் சுடப்பட்டு வீரமரணம் அடைந்தார். இதனை ராணுவத் தரப்பு உறுதி செய்துள்ளது.

வீரமரணம் அடைந்த மோகன்நாத் என்ற வீரர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர். அவரது உடல் இறுதி மரியாதைக்காக அவரது சொந்த கிராமமான இந்திரா நகருக்கு கொண்டு செல்லும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. வீரர் மோகன்நாத்துக்கு மனைவி மற்றும் 7வயது மகள் உள்ளனர்.



தேசியச் செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 5:08 pm

பர்கான்வானி ஏரியாவில் செல்போன் டவரில் பாகிஸ்தான் கொடியை அகற்றிய ராணுவ வீரர் தேசிய கொடியை பறக்கச் செய்தார்

ஸ்ரீநகர், காஷ்மீரில் பார்கான் வானி ஏரியாவில் செல்போன் டவரில் ஏற்றப்பட்டிருந்த பாகிஸ்தான் கொடியை அகற்றிய ராணுவ வீரர் இந்திய தேசிய கொடியை பறக்கச் செய்தார்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதி பர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து வன்முறை நீடித்து வருகிறது. வன்முறையில் இதுவரைக்கும் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

நேற்று நாடு முழுவதும் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. ஜம்மு காஷ்மீரிலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் பர்கான் வானியின் ஏரியாவான திராலில் உயரமான செல்போன் டவரில் ஏற்றப்பட்டு இருந்த பாகிஸ்தான் கொடியை ராணுவ வீரர் அகற்றினார். அவர் உயரமான டவரில் ஏரி இந்திய தேசிய கொடியை பறக்கச் செய்தார்.

இச்சம்பவம் முழுவதும் வீடியோவாக எடுக்கப்பட்டது. இந்த வீடியோ நேற்று முதல் வைரலாக சமூக வலைதளங்களில் பரவிவருகிறது



தேசியச் செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 7:37 pm

கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

முதல்–மந்திரி கெஜ்ரிவாலுக்கு இன்று 48–வது பிறந்த தினம் ஆகும். இதையொட்டி பிரதமர் மோடி அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில், ‘‘டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ பிரார்த்திக்கிறேன்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

பிரதமரின் வாழ்த்துக்கு கெஜ்ரிவால் உடனடியாக டுவிட்டர் பதிவில் நன்றி தெரிவித்தார். அதில் உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி எனக் கூறப்பட்டு இருந்தது.டெல்லி அரசை செயல்படவிடாமல் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார் என்று சமீப காலமாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வரும் நிலையில் அவருக்கு மோடி வாழ்த்து தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்–மந்திரியுமான மம்தா பானர்ஜியும் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.



தேசியச் செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 7:38 pm

காஷ்மீரில் நிலவி வரும் வன்முறையால் ஆப்பிள் பழங்களின் விலை அதிகரிக்கும் அபாயம்

நாட்டின் மொத்த ஆப்பிள் பழ உற்பத்தியில் 70 சதவீதத்தை காஷ்மீர் கொண்டுள்ளது. இந்நிலையில், அங்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் நிலவி வரும் வன்முறையால் ஆப்பிள் வரத்து குறைந்துள்ளது. கடந்த ஆண்டைவிட 30 சதவீதம் அளவுக்கு விலையும் தற்போது உயர்ந்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் ஆப்பிள் பழங்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் இருப்பதாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பழ உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது இமாச்சல பிரதேசத்தில் இருந்து உற்பத்தியாகும் ஆப்பிள் பழங்களின் வரத்து கைகொடுத்து வரும் நிலையில், புதுடெல்லியில் மொத்த விலை சந்தையில் 25 கிலோ ஆப்பிள் பெட்டி ரூ.2000 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. வழக்கமாக ஒரு நாளைக்கு 350 லாரிகளில் 12 டன் ஆப்பிள்கள் வரத்து இருக்கும். ஆனால், தற்போது 200 லாரிகளில் மட்டுமே வரத்து உள்ளது.

காஷ்மீரில் இருந்து ஆப்பிள்கள் வரும் வரை விலை அதிகரித்தே காணப்படும். காஷ்மீர் வன்முறை நீடித்தால் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு பழங்கள் வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.



தேசியச் செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 18, 2016 6:00 pm

புதுடெல்லி பேக்கரியில் வெடிப்பு சம்பவம்: 3 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி, புதுடெல்லியில் பேக்கிரி ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர் என்று தீயணைப்பு படை அதிகாரிகள் கூறிஉள்ளனர்.

புதுடெல்லியின் குரெஜி பகுதியில் பேக்கரி ஒன்றில் அதிகாலை 5.30 மணி அளவில் 20 ஊழியர்கள் வேலை செய்துக் கொண்டிருந்த போது வெடிப்பு நேரிட்டது. சமையல் அறையின் அருகே வேலையில் ஈடுபட்டு இருந்தவர்கள் காயம் அடைந்தனர்.

விபத்து தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் உடனடியாக நான்கு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் பணியை தொடங்கினர். தீயணைப்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர். அவர்களில் 3 பேர் உயிரிழந்தனர்.

மூவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிப்பு சம்பவத்திற்கான காரணத்தை அறிய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



தேசியச் செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 18, 2016 6:04 pm

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது: மோடிக்கு எழுதிய கடிதத்தில் சித்தராமையா திட்டவட்டம்

பெங்களூரு: தென்மேற்கு பருவமழை போதிய அளவிற்கு பெய்யாததால் காவிரியில் இருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவிட முடியாத நிலையில் இருப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை 10% குறைவாகவே கிடைத்துள்ளதாக சித்தராமையா குறிப்பிட்டுள்ளார். இதனால் காவேரி அணைகளில் நீர்இருப்பு சராசரியாக பாதி அளவே இருப்பதாக கூறியுள்ள அவர், காவிரி படுகையில் வழக்கமான 7 லட்சம் ஹெக்டேர் நெல் சாகுபடிக்கு பதிலாக இந்த ஆண்டு 2.24 ஹெக்டேர் பயிர்கள் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த 2 மாதங்களில் பருவமழை போதிய அளவில் பெய்யாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய சித்தராமையா, நீர்ப்பற்றாக்குறை காரணமாக மாநிலத்தில் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவி்த்துள்ளார். காவிரி நீர் நம்பி இருக்கும் நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால், பெங்களூரு நகரத்தில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் குடிநீருக்காக அன்றி, விவசாயத்திற்காக காவிரி அணைகளில் இருந்து நீர் திறப்பது இயலாத காரியம் என அவர் தமது கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்



தேசியச் செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 20, 2016 8:59 pm

உலகிலேயே 72 பிரிவு இஸ்லாமிய மக்களும் ஒற்றுமையுடன் ஒன்றாக வாழும் ஒரே நாடு இந்தியா மட்டுமே; ராஜ்நாத் சி்ங் பேச்சு

திராங்கா யாத்திரையில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசியவை பின்வருமாறு:-

கடந்த காலங்களில் இந்திய எல்லையில் சீனா, பாகிஸ்தான் நாடுகள் அத்துமீறல்களையும், ஆக்ரோஷத்தையும் காட்டிய போதெல்லாம் நம் மக்கள் ஒற்றுமையுடன் இணைந்து அவர்களுக்கு சவால் விடுத்தார்கள். மதத்தின் பெயரால் நம் மக்களை பிரிக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முயற்சித்தார்கள். சுதந்திர போராட்ட தியாகிகளான அஸ்ஃபாகுல்லா கான்- ராம்பிரசாத் பிஸ்மில் நட்புறவையே அவர்கள் பிரிக்க முயற்சித்து பிறகு தோற்றுப்போனார்கள்.

அதேபோல் தற்போதும் சிலர் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் இடையே வேற்றுமையை பரப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்கள் தோல்வியையே சந்திக்கிறார்கள். இந்திய மக்களை யாராலும் பிரிக்க முடியாது. நம் இந்தியாவை சிறந்த ஒரு நாடாக உருவாக்க வேண்டும் என மக்கள் விரும்பினால் அவர்கள் அனைவரும் மதம், இனம், சாதியை கடந்து ஒற்றுமையுடன் இணைந்திருக்க வேண்டும்.

72 பிரிவுகளை சார்ந்த அனைத்து இஸ்லாமிய மக்களும் ஒன்றாக இணைந்து ஒற்றுமையுடன் வாழும் ஒரே நாடு இந்தியா மட்டுமே என்பதை இந்திய முஸ்லிம்கள் நன்றாக அறிவார்கள். இது போன்று இஸ்லாமிய நாடுகளிலும் கூட பார்க்க முடியாது. அதேபோல், அனைத்து பிரிவு கிறிஸ்துவ மக்களும் ஒன்றாக இணைந்து வாழும் நாடு இந்தியாதான்.

பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீரில் அமைதியை குலைக்க முயற்சித்து வருகிறது. ஒரு நாட்டில் தீவிரவாதியாக இருப்பவர் மற்றொரு நாட்டில் கதாநாயகனாக இருக்க முடியாது. ஒரு பிரச்சனைக்கு வன்முறை போராட்டங்கள் ஒருபோதும் தீர்வாக முடியாது. முதலில் அமைதி ஏற்பட்டால் மட்டுமே பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.

இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்



தேசியச் செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 20, 2016 9:00 pm

பிராட்பேண்ட் இணையதளத்தின் குறைந்தபட்ச வேகத்தை 4 மடங்கு வரை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்

தற்போது இந்தியாவில் பிராட்பேண்ட் இணையதளத்தின் வேகம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. குறிப்பாக, டவுண்லோடு செய்வதி்ல் இது தாமதத்தை ஏற்படுத்துகிறது. நாட்டில் வயர்லெஸ் நெட்வொர்க் அபரிமிதமாக முன்னேறி வரும் நிலையில் பிராட்பேண்ட் இணையதளத்தையும் தரம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சராசரி குறைந்தபட்ச பிராட்பேண்ட் இண்டர்நெட் வேகத்தில் தென் கொரியா 29 MBPS வேகத்துடன் முதலிடத்தில் உள்ளது. நார்வே 21.3 MBPS, சுவீடன் 20.6 MBPS வேகத்துடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தற்போது இந்தியாவில் குறைந்தபட்சமாக பிராட்பேண்ட் இணையதளத்தின் வேகம் 512 KBPS ஆக உள்ளது. இதை 4 மடங்கு வரை அதிகரித்து 2 MBPS ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தகவல்தொடர்பு அமைச்சகம் செய்து வருவதாக மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.



தேசியச் செய்திகள் - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 8 of 20 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 14 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக