புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
81 Posts - 45%
ayyasamy ram
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
77 Posts - 43%
prajai
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
6 Posts - 3%
mohamed nizamudeen
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
6 Posts - 3%
Jenila
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
2 Posts - 1%
jairam
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
2 Posts - 1%
kargan86
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
124 Posts - 53%
ayyasamy ram
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
77 Posts - 33%
mohamed nizamudeen
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
10 Posts - 4%
prajai
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
8 Posts - 3%
Jenila
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
4 Posts - 2%
Rutu
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
3 Posts - 1%
jairam
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_m10தீராத விளையாட்டுப் பிள்ளை... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீராத விளையாட்டுப் பிள்ளை...


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 02, 2015 12:58 am

தீராத விளையாட்டுப் பிள்ளை... UpfIiwhRyCve2fsUZ47A+krishna_03_full

தீராத விளையாட்டுப் பிள்ளையான கண்ணபரமாத்மா விளையாடியதெல்லாம் வெறும் விளையாட்டல்ல; தெய்வீகத் திருவிளையாடல்கள்! ஆனால் நாமோ, கண்ண பரமாத்மாவின் சிறுவயது வாழ்க்கையை ஏதோ விளையாட்டுப் போலக் கருதி, பின்னர் அவன் பஞ்சபாண்டவர்களுக்கு அருளியது, மகாபாரத யுத்தத்தில் அவன் புரிந்த லீலைகள், முடிவாக அவன் அருளிய கீதை போன்றவற்றைத்தான் பெரிதாகப் பாராட்டிப் பேசிக்கொண்டு இருக்கிறோம்.

அப்படியானால், அவன் ஓரிடத்தில் பிறந்து ஓரிடத்தில் வளர்ந்து, வெண்ணெய்யைத் திருடித் தின்று, கொக்கு அரக்கன், பாம்பு அரக்கன், அந்த அரக்கன், இந்த அரக்கன் எனக் கொன்று திரிந்ததற்கு வேறு பொருளோ, காரணமோ இல்லையா?

பொழுது போக்குவதற்கும், படமாக வரைவதற்கும், புத்தகங்கள் போட்டு விற்றுக் கல்லாவை நிரப்புவதற்கும், கார்ட்டூன் படங்களாகவும் திரைப்படங்களாகவும் திகிலூட்டும் பின்னணி இசையோடு பார்த்துப் பின்பு மறப்பதற்கும், பலர் பணமாய் சம்பாதிப்பதற்கும், அளவே இல்லாமல் விளம்பரங்களைச் சேர்த்துத் தொலைக்காட்சிமுன் குழந்தைகளை உட்கார வைத்து மூளைச் சலவை செய்வதற்கும், கண்களை உருட்டி, வாயை விரித்துக் கதைகளைக் கூறி சோறு ஊட்டுவதற்குமானதா அவன் பால்ய கால லீலைகள்?

..................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 02, 2015 1:02 am

இப்படிக் கதை கேட்டுச் சோறு உண்ட குழந்தை வளர்ந்து, 'நானும் கொக்கைப் பிடித்துக் கொல்லப் போகிறேன். அடுத்த வீட்டில் வெண்ணெய் திருடப் போகிறேன்’ என்று கிளம்பினால், அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?

இதுவரை எவராவது இதன் உட்பொருள் என்னவென்று விளங்கிக்கொண்டு சொன்னதுண்டா? கம்ஸன் அரக்கர்களை ஏவினான்; கண்ணன் அவர்களைக் கொன்றான். இதுதானே மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. கம்ஸன், கண்ணனைக் கொல்ல அரக்கர்களை ஏவினால், அதனால் நமக்கென்ன? இதை ஏன் நம் பிள்ளைகளுக்குக் கூற வேண்டும்? படமாக, சிலையாக ஏன் பார்க்க வேண்டும்? வேண்டியதில்லையல்லவா? பாகவதத்திலேயே மாமன் மருமகன் பிரச்னையை ஓரிரு வரியில் முடித்திருக்கலாமே..! அப்படியாயின், இதற்கு ஏதோ உட்பொருள் இருக்க வேண்டும்; பெரிய வாழ்வியல் தத்துவங்கள் இருக்க வேண்டும். இல்லாதது ஏதுமில்லை நமது புராண இதிகாசங்களில்!


தீராத விளையாட்டுப் பிள்ளை... UztNYauR4bLo2y5PvMRw+download

பரம்பொருள் பிறப்பெடுத்தால் நிச்சயம் அதன் தன்மை வெளிப்பட்டுத்தான் ஆகும். அவனது ஒவ்வொரு அசைவும், மனித குலத்துக்குப் பாடமாக அமையும்.

அவன் பிறப்பில் இருந்தே பார்ப்போமே! முன்வினை காரணமாக (இதை அப்படியே வைத்துக்கொள்வோம்) பெற்றோர் சிறைச்சாலையில் இருக்க, கண்ணன் பிறப்பு அங்கே நிகழ்கிறது. பின் அங்கிருந்து இடம் பெயர்கிறான். காரணம், மாமன் கொன்றுவிடுவான் என்கிற பயம், பெற்றவர்களுக்கு. இதுதானே பாகவதத்தின் ஆரம்பம்!

இதை மிக எளிதாக நம் ஒவ்வொருவர் வாழ்க்கையோடும் பொருத்திப் பார்க்க முடியும். குழந்தைகளோடு இருக்கும் பெற்றோர்கள் மனதில் இவை பதியவேண்டும். குழந்தைகளுக்கு எப்படி நாம் கண்ணன் கதைகளைக் கூறவேண்டும் என்பதற்காகத்தான் இது. முக்கியமாக, குழந்தைகளுக்கு அரக்கர் கதைகளைக் கூறும்போது, அவை நம் வாழ்க்கையோடு பொருந்துவது போல் சொல்லவேண்டும். அப்போதுதான் அவற்றின் உட்கருத்து குழந்தைகள் மனதில் பதியும். அதுதானே வேண்டும் நமக்கு?

................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 02, 2015 1:04 am

கண்ணன் வெண்ணெயைத் திருடியதுபோல், உங்கள் குழந்தை தன்னுடைய திறமையால், மற்றவரின் உள்ளங்களைத் திருடலாம். கண்ணன் செய்தது அதைத்தான்!

அழகாய் குழந்தை வளர்கிறது, கண்ணனைப் போலே! பள்ளியிலும் வெளியிலும் பாராட்டுகளும் பரிசுகளும் வாங்குகிறார்கள். சும்மா இருப்பார்களா சுற்றி இருப்பவர்கள்? பூதனை போலப் புறப்பட்டு வருவார்கள். வஞ்சப் புகழ்ச்சி மழை பொழிவார்கள். அப்போது செய்ய வேண்டியது என்ன? கண்ண பரமாத்மா பூதனை போக்கிலேயே போய், அவள் கதையை முடித்ததுபோல், இந்த வஞ்சப் புகழ்ச்சிக்காரர்களின் போக்கிலேயே போய், அவர்களையும் அவர்களது சதி வேலைகளையும் வெற்றிகொள்ள வேண்டும்.

தீராத விளையாட்டுப் பிள்ளை... TyEykFsfRmasqAqYslNh+p34c

சரி, இந்தக் கொக்கு அரக்கன் ஏன்? அது என்ன உணர்த்துகிறது? ராட்சதக் கொக்கின் நீண்ட கூரிய அலகு தண்ணீரில் வெகு தூரம் நுழைந்து மீனைப் பிடிப்பதுபோல், பலர் தங்களின் கூரிய வார்த்தைகளால் உங்கள் அடிமனம் வரை போய்த் தைப்பார்கள். உங்கள் ஆற்றலை மெள்ள ஆட்டம் காண வைக்க முயல்வார்கள். கொக்கைப் போலக் காத்திருந்து, நேரம் பார்த்து வீழ்த்த முனைவார்கள். கூரிய சொற்களால் காயப்படுத்துவார்கள். அப்போது, கண்ணபரமாத்மா கொக்கின் அலகைப் பிளந்து கிழித்ததை நினைவுகூர்ந்து, பொறாமைக்காரர்களின் கூரிய சொற்களைக் கிழித்துத் தூரப் போடுங்கள். கொக்கைப் போன்ற இவர்கள் உங்கள் உள்ளத்தின் உரம் கண்டு ஒதுங்கிப் போவார்கள்; ஒடுங்கிப் போவார்கள்.

.......................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 02, 2015 1:05 am

அதென்ன பாம்பு அரக்கன்..? பாம்பைப்போல் அழகாகப் படம் எடுத்து மயக்கி, 'மடார்’ என்று கவ்வி இழுக்க உலகத்தில் பலர் இருக்கிறார்கள். 'நான் இவனை எப்படிக் கொண்டு வருகிறேன் பாருங்கள்; இவனை என்னிடம் விட்டுவிடுங்கள்’ என்று சுருட்டிப் பிடித்து முடக்கப் பார்ப்பார்கள். அவற்றுக்கெல்லாம் மயங்கி மாட்டிக்கொள்ளவே கூடாது. பாம்பின் விஷ மூச்சைப் போன்றது இவர்களது இனிக்கும் பேச்சு. அதற்கு நாம் மயங்கினோமோ போச்சு! ஓங்கி அதன் தலையில் ஒரு தட்டு தட்டி அடக்கிவிட்டு, உங்கள் சாதனையை நோக்கிப் பயணப்படுங்கள் குழந்தைகளே!

தீராத விளையாட்டுப் பிள்ளை... HPeA5bncRORAjlm7ZLoe+download(1)

கழுதை அரக்கனைப்போல் எட்டி உதைக்கவும், குதிரை அரக்கனைப்போல் திமிறித் தாக்கவும், சுழற்காற்றாக வாழ்க்கையைப் புரட்டிப் போடவும் பலர் காத்திருப்பார்கள். இவர்களையெல்லாம் கண்ணன் காட்டிய பாதையில் போய் சாதுர்யமாகக் கடப்பதே நம் நோக்கமாக இருக்க வேண்டும்.

எல்லாம் சரி! யானை ஒன்று தாக்க வருமே, அது? ஆம்! மிகப் பெரிய அசுர பலத்தோடு அதிகாரம், ஆணவம், பதவி என்ற பல யானைகள், நம்மைச் சுற்றிப் பிடித்துச் சுழற்றி அடித்து, நசுக்கக் காத்துக்கொண்டுதான் இருக்கும். அவற்றை நமது உறுதியாலும், நேர்மை மற்றும் இறைபக்தியாலும் வீழ்த்திவிடலாம்.

அவ்வளவு பெரிய மதங்கொண்ட ராட்சத யானையைச் சின்னக் கண்ணன் தும்பிக்கையைப் பிடித்துத் தூக்கியடித்தது இந்த உண்மையை நமக்கு உணர்த்துவதற் குத்தானே தவிர, வேறெதற்கும் இல்லை. கண்ணன் இப்படியாக லீலைகள் நிகழ்த்தியது இதையெல்லாம் நமக்குச் சொல்லத்தான். இவற்றை வளர்ந்து பெரியவனாகித்தான் நம்மால் சாதிக்க முடியும் என்றில்லை; பள்ளி, கல்லூரிக் காலங்களிலேயே இதுபோன்ற சவால்களை மேற்சொன்னவற்றின் துணையோடு முறியடித்து வெற்றிநடை போடமுடியும். அதனால்தான் கண்ணன் சிறுவனாக இருக்கும்போதே இவற்றைச் செய்து காட்டினான்.

..................................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 02, 2015 1:07 am

அவன் இறைவன். பாதை காட்டுவதும் அவன்தான்; பாடம் கூறுவதும் அவன்தான். அவனைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங் கள். வெறுமனே அரக்கர்களைக் கொல்வது அவன் வேலையல்ல. அந்த அரக்கர்கள் யாரும் இல்லாமலேயே, அவனால் வளர்ந்திருக்க முடியாதா? யோசித்துப் பாருங்கள். பிறப்பிலிருந்து இந்தப் பள்ளி, கல்லூரிப் பருவம் என்பது நமது வாழ்க்கையில் எவ்வளவு முக்கிய மானது! எத்தனை இனிமையானது! ஆனாலும், இடையிடையே இதுபோன்ற சோதனைகளும் வரும். அவற்றை எதிர்கொண்டு சமாளிக்க, உதாரணங்களுடன் விளக்கி உள்ளத்தில் உரமேற்றவே இந்தத் திருவிளையாடல்கள்.

தீராத விளையாட்டுப் பிள்ளை... MMTPxCPdQk2j60neiFEL+krishna_desktop_3600x2400_hd-wallpaper-1162022

அவன் அர்ஜுனனுக்குச் சொன்னது மட்டும்தான் கீதை என்று எண்ணிவிடாதீர்கள். அவனது வாழ்க்கை முழுவதுமே கீதைதான்; பாடம்தான். பாடம் என்றால் பலருக்கு வேப்பங் காயாகக் கசக்குமல்லவா? எனவேதான், அதைச் சுவாரஸ்யமாக நமக்குக் காட்ட, அவன் சில வண்ணங் களைச் சேர்த்துக் கொண்டான் (வனமாலி அல்லவா!). புரிந்து நடக்க வேண்டியது நமது கடமை.

.........................



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 02, 2015 1:11 am

தீராத விளையாட்டுப் பிள்ளை... XsPcLeZnTuX8Xb5JJvdf+86


இத்தனை களேபரங்களுக்கு நடுவிலும் அவன் தன் பெற்றோரை யும், பெரியவர்களையும் மதித்த பாங்கைக் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள். அவர்கள் மனதில் ஆழமாய்ப் பதிய வையுங்கள். இத்தனை அரக்க குணங்களையும் தாண்டி வந்து சாதித்து, தடைபோட முயன்றவர்களை வியப்பிலாழ்த்தி, இந்த உலகம் உய்ய, நாம் பிறந்த நாடு முன்னேற, கீதை அளவுக்கு இல்லாவிட்டாலும், சில உயர்ந்த தத்துவங்களை, உண்மைகளை, பொன்மொழிகளை, வழிகாட்டுதல்களை நம்மாலும் அளிக்க முடியும் என்பதுதான் ஸ்ரீகண்ணபிரான் நமக்கெல்லாம் உணர்த்தும் பாடம்; காட்டும் வாழ்க்கை நெறி!

'அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்பதுபோல, நமது முயற்சிகள் அத்தனைக்கும் அந்தக் கண்ணனே துணை இருப்பான் என்கிற உறுதியான நம்பிக்கையோடு நடைபோடுங்கள்.

நிச்சயம் நாரணன் உங்கள் கூடவே இருப்பான்!

பத்மவாசன் - சக்தி விகடன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82064
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Mar 02, 2015 8:22 am

நல்ல பதிவு..
-


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக