புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
by heezulia Today at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm
» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Ammu Swarnalatha | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
Jenila | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
prajai | ||||
manikavi | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி
Page 5 of 19 •
Page 5 of 19 • 1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19
First topic message reminder :
சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
சிட்னி - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 31,2012 நிலவரப்படி ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் அணிகளின் இடத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கான அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பிரிவு ஏ: இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து.
பிரிவு பி: தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே, அயர்லாந்து, யு.ஏ.இ.
லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 14-ஆம் தேதி முதல் மார்ச் 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் ஒரு அணி மற்றொரு அணியை ஒரு முறை எதிர்த்து விளையாடும்.
வெற்றிக்கு 2 புள்ளிகள். டை அல்லது முடிவு ஏற்படாத போட்டிகளில் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி. குரூப் ஆட்டங்கள் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் அணிகள் சமநிலை வகித்தால், 1. அதிக வெற்றிகள் பெற்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும், அல்லது, 2. நிகர ரன் விகிதம். இதுவும் சமமாக இருந்தால் 3. இருஅணிகளுக்கும் இடையிலான போட்டியில் வென்ற அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இரு பிரிவுகளிலிருந்தும் 4 முதன்மை அணிகள் வீதம் 8 அணிகள் காலிறுதியில் மோதும். இதில்:
ஏ-பிரிவில் முதலிடம் பெற்ற அணி பி-பிரிவில் 4ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 3-ஆம் இடம் பிடித்த அணி பி-பிரிவில் 2-ஆம் இடம் பிடித்த அணியுடனும்,
ஏ-பிரிவில் 4-ஆம் இடத்தில் உள்ள அணி பி-பிரிவில் 1-ஆம் இடத்தில் உள்ள அணியுடனும் காலிறுதிப் போட்டிகளில் விளையாடும்.
முதல் காலிறுதி மற்றும் 3-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் ஒரு அரையிறுதியிலும் 2-ஆம் காலிறுதி மற்றும் 4-ஆம் காலிறுதியில் வென்ற அணிகள் மற்றொரு அரையிறுதியிலும் (மார்ச் 24 மற்றும் 26) விளையாடும்.
காலிறுதியிலோ அரையிறுதியிலோ ஆட்டம் ‘டை’ ஆனால், குரூப் பிரிவு ஆட்டத்தில் முன்னணியில் இருக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டி மார்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி ரன்கள் அடிப்படையில் ‘டை’ ஆனால், இரு அணிகளும் கோப்பையை பகிர்ந்து கொள்ளும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா அவர்களே!
வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும் !
வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும் !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
தோனி பொறுப்பான ஆட்டம்: மே.இ.தீவுகளை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா
பெர்த்தில் நடைபெற்ற உலகக்கோப்பை பி-பிரிவு ஆட்டத்தில் கடைசி வரை போராடிய மே.இ.தீவுகள் அணியை இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டரின் முக்கியத்துவம் வாய்ந்த அதிரடி அரைசதம் மூலம் 182 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இந்திய அணி சில சமயம் நல்ல பந்துவீச்சுக்கும், சில சமயம் அனாவசியமான ஷாட் தேர்வுலும் துரத்தலை சிக்கலாக்கிக் கொண்டது. ஆனால் கடைசியில் தோனி, அஸ்வின் நிதானிக்க இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சற்றே போராடி வெற்றி பெற்றது.
40-வது ஓவர் முதல் பந்தை சாமுயெல்ஸ் வீச தேர்ட் மேன் திசையில் தோனி அதை பவுண்டரி அடிக்க இந்தியா 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தோனி 56 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றி தேடித் தந்தார். மறுமுனையில் எந்த விதமான அனாவசிய முயற்சியையும் மேற்கொள்ளாமல், பவுண்டரியே இல்லாமல் 16 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். அஸ்வினும், தோனியும் இணைந்து வெற்றிக்கூட்டணியாக 9.4 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்தனர்.
இந்த வெற்றி மூலம் இந்திய அணியின் காலிறுதி வாய்ப்பு உறுதியாகியுள்ளது. பி-பிரிவில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக 8-வது போட்டியை வென்றுள்ளது. இதற்கு முன்னதாக 2003 உலகக்கோப்பையிலும் இந்தியா தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்றது. அந்தச் சாதனை தற்போது சமன் செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக அயர்லாந்து அணியுடன் மார்ச் 10ஆம் தேதி நியூசிலாந்தின் ஹேமில்டனில் இந்திய அணி மோதுகிறது.
துரத்தலை சரியாகத் திட்டமிடாத இந்திய அணி, ஓரளவுக்கு பிட்சின் தன்மையை புரிந்து கொள்ளாமல் ஆடியது போல் தெரிகிறது. கோலி ஆட்டமிழந்த பிறகு இந்தியாவுக்கு பதட்டம் அதிகரித்தது. மே.இ.தீவுகளும் அப்போது நன்றாக வீசிவந்தனர்.
பெர்த்தில் நடைபெற்ற உலகக்கோப்பை பி-பிரிவு ஆட்டத்தில் கடைசி வரை போராடிய மே.இ.தீவுகள் அணியை இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டரின் முக்கியத்துவம் வாய்ந்த அதிரடி அரைசதம் மூலம் 182 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய இந்திய அணி சில சமயம் நல்ல பந்துவீச்சுக்கும், சில சமயம் அனாவசியமான ஷாட் தேர்வுலும் துரத்தலை சிக்கலாக்கிக் கொண்டது. ஆனால் கடைசியில் தோனி, அஸ்வின் நிதானிக்க இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சற்றே போராடி வெற்றி பெற்றது.
40-வது ஓவர் முதல் பந்தை சாமுயெல்ஸ் வீச தேர்ட் மேன் திசையில் தோனி அதை பவுண்டரி அடிக்க இந்தியா 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தோனி 56 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றி தேடித் தந்தார். மறுமுனையில் எந்த விதமான அனாவசிய முயற்சியையும் மேற்கொள்ளாமல், பவுண்டரியே இல்லாமல் 16 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். அஸ்வினும், தோனியும் இணைந்து வெற்றிக்கூட்டணியாக 9.4 ஓவர்களில் 51 ரன்கள் சேர்த்தனர்.
இந்த வெற்றி மூலம் இந்திய அணியின் காலிறுதி வாய்ப்பு உறுதியாகியுள்ளது. பி-பிரிவில் தொடர்ச்சியாக 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பைப் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக 8-வது போட்டியை வென்றுள்ளது. இதற்கு முன்னதாக 2003 உலகக்கோப்பையிலும் இந்தியா தொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்றது. அந்தச் சாதனை தற்போது சமன் செய்யப்பட்டுள்ளது.
அடுத்ததாக அயர்லாந்து அணியுடன் மார்ச் 10ஆம் தேதி நியூசிலாந்தின் ஹேமில்டனில் இந்திய அணி மோதுகிறது.
துரத்தலை சரியாகத் திட்டமிடாத இந்திய அணி, ஓரளவுக்கு பிட்சின் தன்மையை புரிந்து கொள்ளாமல் ஆடியது போல் தெரிகிறது. கோலி ஆட்டமிழந்த பிறகு இந்தியாவுக்கு பதட்டம் அதிகரித்தது. மே.இ.தீவுகளும் அப்போது நன்றாக வீசிவந்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்தியா பெற்றது 'எச்சரிக்கை' வெற்றி
பெர்த்தில் நடைபெற்ற உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்திய அணி பெற்றது ஓர் எச்சரிக்கை வெற்றியே!
பெர்த்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என்றே ரசிகர்கள் நினைத்திருக்கக் கூடும். அவர்களுக்கு இருக்கும் ஒரே மனத்தடை கிறிஸ் கெயில் என்ற ஓர் அதிரடி வீரர் மட்டுமே.
முதலில் ஒன்றைக் கூறுவது உத்தமம்: ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஆட்டத்துக்குப் பிறகு பவுலர்கள் ஆதிக்கம் செலுத்திய போட்டி இந்திய-மே.இ.தீவுகள் போட்டி. இப்படிப்பட்ட பிட்ச்கள்தான் தேவை. அதாவது ஒரு நல்ல கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க வைப்பதன் மூலமே கிரிக்கெட் ஆட்டத்தை வளர்த்தெடுக்க முடியும்.
ஆனால், இன்று இந்திய அணிக்கு ஒரு நல்ல சவாலான பந்துவீச்சையும், பதற்றத்தையும் நெருக்கடியையும் மே.இ.தீவுகள் ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஒட்டுமொத்த ஆட்டத்திலும் ஒரேயொரு அரைசதம் அதுவும் மே.இ.,தீவுகள் பவுலர் ஜேசன் ஹோல்டர் அடித்தது. இந்திய அணியில் ஒருவரும் அரைசதம் எட்டவில்லை. தோனியே அதிகபட்சமாக 45 ரன்களை எடுத்தார்.
பெர்த் பிட்ச் முன்பு போல் இல்லாவிட்டாலும் உலகில் உள்ள மற்ற பிட்ச்களை விட, இங்கு எப்போதும் பவுன்ஸ் அதிகமாகவே இருக்கும். பிரிஸ்பனும் அப்படிப்பட்ட ஆட்டக்களமே.
டாஸில் வென்ற மே.இ.தீவுகள் அணி முதலில் பேட் செய்தது. இதுவும் ஒரு நல்ல முடிவே. அந்த அணி கெயில், சாமுயெல்ஸை நம்பியே இருந்தது. நடுவில் சிம்மன்ஸ், கடைசியில் டேரன் சமி, ஆந்த்ரே ரசல், ஜேசன் ஹோல்டர் போன்ற அதிரடி வீரர்கள். அந்த அணியின் பலம் இதுதான். பலவீனங்கள் ஏகப்பட்டது உண்டு, அதுவும் இன்று வெளிப்பட்டது.
கிறிஸ் கெய்ல் நினைத்தபடி இந்திய பந்து வீச்சு இல்லை. அவருக்கு ஷாட்கள் சரியாக சிக்காமலேயே இருந்தது. டிவைன் ஸ்மித் மோசமான பார்ம் தொடர்ந்து அவர் ஷமி பந்தில் 6 ரன்களில் வெளியேறினார்.
சாமுயெல்ஸ் களமிறங்கியும் ஒன்றும் சுலபமாகிவிடவில்லை. உமேஷ் யாதவ், ஷமி, நல்ல வேகம் மற்றும் திசை மற்றும் அளவுகளில் துல்லியமாக வீசி ஸ்விங் செய்தனர், அவ்வப்போது பவுன்சர்களையும், ஷாட் பிட்ச் பந்துகளையும் வீசி சோதனை கொடுத்தனர்.
கெயில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி வந்து பார்த்தார் ஆனால் சிக்கவில்லை. இந்த நிலையில் ஷமியின் ஃபுல் லெந்த் பந்தை டிரைவ் ஆட பந்து தேர்ட்மேனில் காற்றில் சென்றது வேகமாகச் சென்றது உமேஷ் யாதவ் டைவ் அடித்துப் பார்த்தார் ஆனால் பிடிக்க முடியவில்லை. முதல் வாய்ப்பு நழுவியது. ஆனால் கெயில் இதில் கொஞ்சம் ஆடிப்போனார்.
இந்நிலையில்தான் அவர் யாதவ்வின் அபார ஷாட் பிட்ச் பந்தை புல் ஆட அது மிட் ஆனுக்கும் முன்னால் விழ மோஹித் ஓடி வந்து முயன்றார் முடியவில்லை. தான் அவுட் ஆகிவிடுவோம் என்ற பதட்டத்தில் சிங்கிள் என்ற ஒன்று இருப்பதாகவே கெயில் நினைக்கவில்லை. சாமுயெல்ஸ் அவரைக் காப்பாற்றவே சிங்கிள் ஓடினார். அதாவது கெயிலை எப்படியாவது ரன்னர் முனைக்குக் கொண்டு வரவேண்டும் என்று ஓடினார். ஆனால் கெயில் கவனிக்கவேயில்லை. திடீரென அவர் இந்தப் பக்கம் பார்க்க சாமுயெல்ஸ் தன் பக்கத்தில் இருப்பது கண்டு அதிர்ந்தார். ரன் அவுட்.
இதில் கோபமற்ற அவர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை ஆத்திரத்தில் அடித்தார். ஆனால் அதே போன்ற முயற்சியை எதிர்பார்த்த தோனி சரியாக மிட்விக்கெட்டில் டீப்பில் பீல்டரை நிறுத்த பொறியில் சிக்கினார் கெயில்.
இந்தக் குழப்பத்தில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. இந்திய அணியின் பந்துவீச்சும் மேலும் உத்வேகம் பெற்றது. நல்ல பவுன்ஸ் இருந்தது. பிட்ச் கொஞ்ச சீரற்ற தன்மையுடன் இருந்தது.
கடைசியில் 85/7 என்று மிகவும் மோசமாக போய்விடும் ஆபத்தான நிலையில் இந்திய அணி கோட்டை விட்ட கேட்ச்களினால் ஹோல்டர், டேரன் சமி முதலில் 39 ரன்கள் கூட்டணி அமைக்க, பிறகு ஹோல்டர், டெய்லர் (11) கூட்டணி 51 ரன்களைச் சேர்த்தனர். ஜேசன் ஹோல்டர் தொடர்ச்சியாக தனது 2-வது அரைசதத்தை எட்டினார். ஆனால் அவர் கொஞ்சம் பொறுமை காட்டியிருந்தால் ஸ்கோரை 200 ரன்களுக்கு எடுத்துச் சென்றிருக்கலாம். அவர் கடைசியில் தூக்கிக் கையில் கொடுத்து வெளியேறினார் மேற்கிந்திய தீவுகள் 182 ரன்களுக்கு 45-வது ஓவரில் வீழ்ந்தது.
இந்திய அணி சுமார் 5 கேட்ச்களை விட்டது. இதில் கடைசியில் ஜடேஜா, ரோஹித் சர்மா விட்ட கேட்ச்கள் மிகக்கொடுமையானது. மிக எளிதான கேட்ச்கள் அவை. நல்ல பீல்டிங் அணி என்று இதுவரை கூறிக்கொண்டிருந்தோம், ஆனால் இன்று நெருக்கடியில் பீல்டிங் மீண்டும் சோதனைக்குள்ளானது.
183 சென்டிமென்ட்:
இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 183 ரன்கள், 1983 உலகக்கோப்பையில் இந்தியா எடுத்த ரன் எண்னிக்கை 183. தோனியின் அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோர்183 நாட் அவுட். கங்குலியினுடையதும் 183. இப்படியாக 183 பற்றி நிறைய பேச்சு எழுந்தது. இதைத் தவிர பெர்த் மைதானத்தில் இதற்கு முன் இந்தியா, மே.இ.தீவுகளைச் சந்தித்த போது 126 ரன்கள் என்று இரு அணிகளும் போட்டியை சமன் செய்துள்ளது. இது நடந்தது 1991-92 முத்தரப்பு தொடரில்.
ஆகவே ஆட்டம் டை ஆகும் என்றும் சிலர் கருதினர். மேலும் 1983 உ.கோ. இறுதியில் விவ் ரிச்சர்ட்ஸ் 33 ரன்களில் அவுட் ஆன பிறகு ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. இன்று விராட் கோலி வேறு அதே 33 ரன்களில் அவுட். இருவரும் 3ஆம் நிலை பேட்ஸ்மென்கள். எனவே மே.இ.தீவுகள் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்று ஒரு சென்டிமென்ட்டும் ஓடிக்கொண்டிருந்தது.
இந்திய பேட்டிங் பலவீனத்தை வெளிப்படுத்திய மே.இ.தீவுகள் பந்துவீச்சு:
பவுன்ஸ் பிட்ச்களில் இந்திய அணிக்கு ஷாட் பிட்ச் பந்து வீசினால் இந்திய பேட்ஸ்மென்கள் திணறுவார்கள் என்ற நிலையை என்று இந்திய அணி மாற்றும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
தவன், ரோஹித் சர்மா ஆகியோருக்கு அபாரமான பந்து விழுந்தது. ஆனாலும் கடைசியில் கூடுதல் பவுன்ஸ்தான் வேலையைக் காட்டியது குறிப்பாக தவனுக்கு. ரோஹித் சர்மாவுக்கும் நல்ல பந்துதான் ஆனால் அதே ஷாட் இந்திய பிட்சாக இருந்தால் கவரில் பவுண்டரி, பெர்த் என்பதால்தான் பின்னால் சென்றது.
கோலி அருமையாக ஆடினார். அவர் ஒரு புறம் அனாயசமாக பவுண்டரிகளை அடித்து வந்தார். ஒரு சமயம் ஆஃப் சைடு வீசிய பந்தைக்கூட லெக் திசை இடைவெளியில் பவுண்டரி அடித்தார். கவர் டிரைவ் அவரது பலம். இப்படியாக அவர் 33 ரன்களை எடுத்து பாதுகாப்பாக சென்று கொண்டிருந்த நேரம், ரசல் வீசிய பவுன்சரை ஹூக் செய்து லாங் லெக்கில் கேட்ச் கொடுத்தார்.
இங்கு ஒன்றைப் புரிந்து கொள்வது நலம். பெர்த் மைதானத்தில் பக்கவாட்டு பவுண்டரிகள் நீளம் அதிகம். சரியாக புல்,ஹுக் ஆட முடியாவிட்டால் கேட்ச் போவது இயல்பு. ஆனால் லாங் பவுண்டரியையே தேர்ந்தெடுத்தனர். குறிப்பாக விராட் கோலி, பிறகு ஜடேஜா.
ரஹானே நாட் அவுட்?
ரஹானேவுக்கு நீண்ட நேரம் ஸ்ட்ரைக் கிடைக்காமல் இருந்தது. அவர் அப்போதுதான் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் என்று கொஞ்சம் ஸ்திரமானார். அப்பொது கிமார் ரோச் பந்தை அவர் தேர்ட் மேன் திசையில் தட்டி விட நினைத்தார். பந்து நல்ல வேகம், கொஞ்சம் நல்ல அளவில் விழுந்த பந்து. மட்டையின் வெளிவிளிம்பில் பட்டதாக முறையீடு எழ நடுவர் கையை உயர்த்தினார்.
ஆனால் ரஹானே உடனேயே ரிவியூ செய்தார். அவுட்டாக இருந்தால் ரிவியூ செய்ய மாட்டார். ஏனெனில் பேட்ஸ்மென்களுக்குத் தெரியும் நிச்சயம் 3-வது நடுவர் நமக்கு அவுட் கொடுப்பார் என்று. படாததால்தான் அவர் ரிவியூ செய்தார். நிச்சயமற்ற தனமையே இருந்தது. பந்து பேடில் பட்டதா, பேட், பேடில் பட்டதா, மட்டையின் விளிம்பா என்பதெல்லாம் தெளிவாக தெரியவில்லை. ஆனால் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாக்க வேண்டிய 3ஆம் நடுவர் கள நடுவர் தீர்ப்புக்கு செவி சாய்த்தார்.
அதாவது கள நடுவருக்கு சந்தேகமில்லை என்பதை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் பேட்ஸ்மென் ரிவியூ எதற்கு? எப்படியிருந்தாலும் நடுவர் தீர்ப்புதான் ஜெயிக்கும் என்றால் ரிவியூ தேவையில்லையே? இது ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்புதான். ஆனால், பவுலருக்கு சாதகமாக இருப்பதால் நாம் இதனை உணர்வு ரீதியாக ஆதரிக்கலாம்.
ரெய்னா 22 ரன்களில் வெளியே சென்ற பந்தை விரட்டி அவுட் ஆனார். ஜடேஜா தேவையில்லாமல் நீளமான பவுண்டரியைத் தேர்ந்தெடுத்து ஹுக் ஷாட் ஆடினார். பந்து அவருக்கும் மேலே எழும்பும்போது கட்டுப்பாடு எப்படி கிடைக்கும்? ஆனாலும் அவர் ஆடிவிட்டார். வீழ்ந்தார்.
தோனி இது போன்ற சூழ்நிலைகளில் உண்மையில் தாதா. எவ்வள்வோ போட்டிகளை, குறிப்பாக சிறிய இலக்கு போட்டிகளை இந்தியா டாப் வீரர்கள் சொதப்பலாக்கும்போதும் தோனி வென்று கொடுத்திருக்கிறார். இன்றும் அதுதான் நடந்தது.
மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டரின் புரியாத கேப்டன்சி:
வேகப்பந்து வீச்சாளர் டெய்லருக்கு 2 ஓவர்கள் மீதமுள்ளன. ஹோல்டருக்கு 3 ஓவர்கள் உள்ளன. ரோச், ரசல் ஆகியோருக்கு தலா 2 ஓவர்கள் மீதமுள்ளன. இந்நிலையில் ஸ்மித், சாமுயெல்ஸ் 8.1 ஓவர்களை வீச வேண்டிய அவசியமென்ன? அந்த 8 ஓவர்களில் 32 ரன்கள் சென்றது. ஒருவேளை... ஒருவேளை முன்னணி பவுலர்களை பயன்படுத்தி, தோனியையோ, அஸ்வினையோ எடுத்திருந்தால் இந்தியாவுக்கு மேலும் சிக்கல் அதிகமாகியிருக்கலாம்.
ஏனோ இதனை அவர் செய்யவில்லை. இது ஒரு புரியாத புதிர்தான், சர்ச்சைக்குரியதும் கூட. கிமார் ரோச்சைக் கொண்டு வந்து ஒரு மோது மோதிப்பார்த்திருக்க வேண்டும், அவரிடம் அந்த இயல்பூக்கம் இல்லை. இது நிச்சயம் ஏமாற்றமளிக்கக் கூடிய விஷயமே.
எது எப்படியிருந்தாலும் இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கை மணியை மே.இ.தீவுகள் இன்று ஒலித்துள்ளது. இந்திய அணி எப்போதும் நேர்மறையான பாசிடிவ் அம்சங்களையே ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் பார்க்கும், இன்று முரணாக வெற்றியில் எதிர்மறைக் கூறுகளைக் கண்டு அதனை களைய வேண்டிய நிர்பந்தத்தை மே.இ.தீவுகள் ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியை நாக்-அவுட்டில் வெளியேற்ற நிச்சயம் வேகப்பந்து சாதக ஆட்டக்களங்களையே இனி அமைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே காலிறுதிக்கு முன்பாக இந்தியாவுக்கு இன்னும் 2 ஆட்டங்கள் உள்ளன. அதில் மனத்தளர்வு ஏற்படுமாறு ஆடிவிடக்கூடாது என்பதில் கவனம் தேவை.
பெர்த்தில் நடைபெற்ற உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிராக இந்திய அணி பெற்றது ஓர் எச்சரிக்கை வெற்றியே!
பெர்த்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா எளிதில் வெற்றி பெறும் என்றே ரசிகர்கள் நினைத்திருக்கக் கூடும். அவர்களுக்கு இருக்கும் ஒரே மனத்தடை கிறிஸ் கெயில் என்ற ஓர் அதிரடி வீரர் மட்டுமே.
முதலில் ஒன்றைக் கூறுவது உத்தமம்: ஆஸ்திரேலியா-நியூசிலாந்து ஆட்டத்துக்குப் பிறகு பவுலர்கள் ஆதிக்கம் செலுத்திய போட்டி இந்திய-மே.இ.தீவுகள் போட்டி. இப்படிப்பட்ட பிட்ச்கள்தான் தேவை. அதாவது ஒரு நல்ல கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க வைப்பதன் மூலமே கிரிக்கெட் ஆட்டத்தை வளர்த்தெடுக்க முடியும்.
ஆனால், இன்று இந்திய அணிக்கு ஒரு நல்ல சவாலான பந்துவீச்சையும், பதற்றத்தையும் நெருக்கடியையும் மே.இ.தீவுகள் ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. ஒட்டுமொத்த ஆட்டத்திலும் ஒரேயொரு அரைசதம் அதுவும் மே.இ.,தீவுகள் பவுலர் ஜேசன் ஹோல்டர் அடித்தது. இந்திய அணியில் ஒருவரும் அரைசதம் எட்டவில்லை. தோனியே அதிகபட்சமாக 45 ரன்களை எடுத்தார்.
பெர்த் பிட்ச் முன்பு போல் இல்லாவிட்டாலும் உலகில் உள்ள மற்ற பிட்ச்களை விட, இங்கு எப்போதும் பவுன்ஸ் அதிகமாகவே இருக்கும். பிரிஸ்பனும் அப்படிப்பட்ட ஆட்டக்களமே.
டாஸில் வென்ற மே.இ.தீவுகள் அணி முதலில் பேட் செய்தது. இதுவும் ஒரு நல்ல முடிவே. அந்த அணி கெயில், சாமுயெல்ஸை நம்பியே இருந்தது. நடுவில் சிம்மன்ஸ், கடைசியில் டேரன் சமி, ஆந்த்ரே ரசல், ஜேசன் ஹோல்டர் போன்ற அதிரடி வீரர்கள். அந்த அணியின் பலம் இதுதான். பலவீனங்கள் ஏகப்பட்டது உண்டு, அதுவும் இன்று வெளிப்பட்டது.
கிறிஸ் கெய்ல் நினைத்தபடி இந்திய பந்து வீச்சு இல்லை. அவருக்கு ஷாட்கள் சரியாக சிக்காமலேயே இருந்தது. டிவைன் ஸ்மித் மோசமான பார்ம் தொடர்ந்து அவர் ஷமி பந்தில் 6 ரன்களில் வெளியேறினார்.
சாமுயெல்ஸ் களமிறங்கியும் ஒன்றும் சுலபமாகிவிடவில்லை. உமேஷ் யாதவ், ஷமி, நல்ல வேகம் மற்றும் திசை மற்றும் அளவுகளில் துல்லியமாக வீசி ஸ்விங் செய்தனர், அவ்வப்போது பவுன்சர்களையும், ஷாட் பிட்ச் பந்துகளையும் வீசி சோதனை கொடுத்தனர்.
கெயில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கி வந்து பார்த்தார் ஆனால் சிக்கவில்லை. இந்த நிலையில் ஷமியின் ஃபுல் லெந்த் பந்தை டிரைவ் ஆட பந்து தேர்ட்மேனில் காற்றில் சென்றது வேகமாகச் சென்றது உமேஷ் யாதவ் டைவ் அடித்துப் பார்த்தார் ஆனால் பிடிக்க முடியவில்லை. முதல் வாய்ப்பு நழுவியது. ஆனால் கெயில் இதில் கொஞ்சம் ஆடிப்போனார்.
இந்நிலையில்தான் அவர் யாதவ்வின் அபார ஷாட் பிட்ச் பந்தை புல் ஆட அது மிட் ஆனுக்கும் முன்னால் விழ மோஹித் ஓடி வந்து முயன்றார் முடியவில்லை. தான் அவுட் ஆகிவிடுவோம் என்ற பதட்டத்தில் சிங்கிள் என்ற ஒன்று இருப்பதாகவே கெயில் நினைக்கவில்லை. சாமுயெல்ஸ் அவரைக் காப்பாற்றவே சிங்கிள் ஓடினார். அதாவது கெயிலை எப்படியாவது ரன்னர் முனைக்குக் கொண்டு வரவேண்டும் என்று ஓடினார். ஆனால் கெயில் கவனிக்கவேயில்லை. திடீரென அவர் இந்தப் பக்கம் பார்க்க சாமுயெல்ஸ் தன் பக்கத்தில் இருப்பது கண்டு அதிர்ந்தார். ரன் அவுட்.
இதில் கோபமற்ற அவர் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை ஆத்திரத்தில் அடித்தார். ஆனால் அதே போன்ற முயற்சியை எதிர்பார்த்த தோனி சரியாக மிட்விக்கெட்டில் டீப்பில் பீல்டரை நிறுத்த பொறியில் சிக்கினார் கெயில்.
இந்தக் குழப்பத்தில் தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. இந்திய அணியின் பந்துவீச்சும் மேலும் உத்வேகம் பெற்றது. நல்ல பவுன்ஸ் இருந்தது. பிட்ச் கொஞ்ச சீரற்ற தன்மையுடன் இருந்தது.
கடைசியில் 85/7 என்று மிகவும் மோசமாக போய்விடும் ஆபத்தான நிலையில் இந்திய அணி கோட்டை விட்ட கேட்ச்களினால் ஹோல்டர், டேரன் சமி முதலில் 39 ரன்கள் கூட்டணி அமைக்க, பிறகு ஹோல்டர், டெய்லர் (11) கூட்டணி 51 ரன்களைச் சேர்த்தனர். ஜேசன் ஹோல்டர் தொடர்ச்சியாக தனது 2-வது அரைசதத்தை எட்டினார். ஆனால் அவர் கொஞ்சம் பொறுமை காட்டியிருந்தால் ஸ்கோரை 200 ரன்களுக்கு எடுத்துச் சென்றிருக்கலாம். அவர் கடைசியில் தூக்கிக் கையில் கொடுத்து வெளியேறினார் மேற்கிந்திய தீவுகள் 182 ரன்களுக்கு 45-வது ஓவரில் வீழ்ந்தது.
இந்திய அணி சுமார் 5 கேட்ச்களை விட்டது. இதில் கடைசியில் ஜடேஜா, ரோஹித் சர்மா விட்ட கேட்ச்கள் மிகக்கொடுமையானது. மிக எளிதான கேட்ச்கள் அவை. நல்ல பீல்டிங் அணி என்று இதுவரை கூறிக்கொண்டிருந்தோம், ஆனால் இன்று நெருக்கடியில் பீல்டிங் மீண்டும் சோதனைக்குள்ளானது.
183 சென்டிமென்ட்:
இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 183 ரன்கள், 1983 உலகக்கோப்பையில் இந்தியா எடுத்த ரன் எண்னிக்கை 183. தோனியின் அதிகபட்ச ஒருநாள் போட்டி ஸ்கோர்183 நாட் அவுட். கங்குலியினுடையதும் 183. இப்படியாக 183 பற்றி நிறைய பேச்சு எழுந்தது. இதைத் தவிர பெர்த் மைதானத்தில் இதற்கு முன் இந்தியா, மே.இ.தீவுகளைச் சந்தித்த போது 126 ரன்கள் என்று இரு அணிகளும் போட்டியை சமன் செய்துள்ளது. இது நடந்தது 1991-92 முத்தரப்பு தொடரில்.
ஆகவே ஆட்டம் டை ஆகும் என்றும் சிலர் கருதினர். மேலும் 1983 உ.கோ. இறுதியில் விவ் ரிச்சர்ட்ஸ் 33 ரன்களில் அவுட் ஆன பிறகு ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. இன்று விராட் கோலி வேறு அதே 33 ரன்களில் அவுட். இருவரும் 3ஆம் நிலை பேட்ஸ்மென்கள். எனவே மே.இ.தீவுகள் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்று ஒரு சென்டிமென்ட்டும் ஓடிக்கொண்டிருந்தது.
இந்திய பேட்டிங் பலவீனத்தை வெளிப்படுத்திய மே.இ.தீவுகள் பந்துவீச்சு:
பவுன்ஸ் பிட்ச்களில் இந்திய அணிக்கு ஷாட் பிட்ச் பந்து வீசினால் இந்திய பேட்ஸ்மென்கள் திணறுவார்கள் என்ற நிலையை என்று இந்திய அணி மாற்றும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
தவன், ரோஹித் சர்மா ஆகியோருக்கு அபாரமான பந்து விழுந்தது. ஆனாலும் கடைசியில் கூடுதல் பவுன்ஸ்தான் வேலையைக் காட்டியது குறிப்பாக தவனுக்கு. ரோஹித் சர்மாவுக்கும் நல்ல பந்துதான் ஆனால் அதே ஷாட் இந்திய பிட்சாக இருந்தால் கவரில் பவுண்டரி, பெர்த் என்பதால்தான் பின்னால் சென்றது.
கோலி அருமையாக ஆடினார். அவர் ஒரு புறம் அனாயசமாக பவுண்டரிகளை அடித்து வந்தார். ஒரு சமயம் ஆஃப் சைடு வீசிய பந்தைக்கூட லெக் திசை இடைவெளியில் பவுண்டரி அடித்தார். கவர் டிரைவ் அவரது பலம். இப்படியாக அவர் 33 ரன்களை எடுத்து பாதுகாப்பாக சென்று கொண்டிருந்த நேரம், ரசல் வீசிய பவுன்சரை ஹூக் செய்து லாங் லெக்கில் கேட்ச் கொடுத்தார்.
இங்கு ஒன்றைப் புரிந்து கொள்வது நலம். பெர்த் மைதானத்தில் பக்கவாட்டு பவுண்டரிகள் நீளம் அதிகம். சரியாக புல்,ஹுக் ஆட முடியாவிட்டால் கேட்ச் போவது இயல்பு. ஆனால் லாங் பவுண்டரியையே தேர்ந்தெடுத்தனர். குறிப்பாக விராட் கோலி, பிறகு ஜடேஜா.
ரஹானே நாட் அவுட்?
ரஹானேவுக்கு நீண்ட நேரம் ஸ்ட்ரைக் கிடைக்காமல் இருந்தது. அவர் அப்போதுதான் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் என்று கொஞ்சம் ஸ்திரமானார். அப்பொது கிமார் ரோச் பந்தை அவர் தேர்ட் மேன் திசையில் தட்டி விட நினைத்தார். பந்து நல்ல வேகம், கொஞ்சம் நல்ல அளவில் விழுந்த பந்து. மட்டையின் வெளிவிளிம்பில் பட்டதாக முறையீடு எழ நடுவர் கையை உயர்த்தினார்.
ஆனால் ரஹானே உடனேயே ரிவியூ செய்தார். அவுட்டாக இருந்தால் ரிவியூ செய்ய மாட்டார். ஏனெனில் பேட்ஸ்மென்களுக்குத் தெரியும் நிச்சயம் 3-வது நடுவர் நமக்கு அவுட் கொடுப்பார் என்று. படாததால்தான் அவர் ரிவியூ செய்தார். நிச்சயமற்ற தனமையே இருந்தது. பந்து பேடில் பட்டதா, பேட், பேடில் பட்டதா, மட்டையின் விளிம்பா என்பதெல்லாம் தெளிவாக தெரியவில்லை. ஆனால் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மென்களுக்குச் சாதகமாக்க வேண்டிய 3ஆம் நடுவர் கள நடுவர் தீர்ப்புக்கு செவி சாய்த்தார்.
அதாவது கள நடுவருக்கு சந்தேகமில்லை என்பதை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் பேட்ஸ்மென் ரிவியூ எதற்கு? எப்படியிருந்தாலும் நடுவர் தீர்ப்புதான் ஜெயிக்கும் என்றால் ரிவியூ தேவையில்லையே? இது ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்புதான். ஆனால், பவுலருக்கு சாதகமாக இருப்பதால் நாம் இதனை உணர்வு ரீதியாக ஆதரிக்கலாம்.
ரெய்னா 22 ரன்களில் வெளியே சென்ற பந்தை விரட்டி அவுட் ஆனார். ஜடேஜா தேவையில்லாமல் நீளமான பவுண்டரியைத் தேர்ந்தெடுத்து ஹுக் ஷாட் ஆடினார். பந்து அவருக்கும் மேலே எழும்பும்போது கட்டுப்பாடு எப்படி கிடைக்கும்? ஆனாலும் அவர் ஆடிவிட்டார். வீழ்ந்தார்.
தோனி இது போன்ற சூழ்நிலைகளில் உண்மையில் தாதா. எவ்வள்வோ போட்டிகளை, குறிப்பாக சிறிய இலக்கு போட்டிகளை இந்தியா டாப் வீரர்கள் சொதப்பலாக்கும்போதும் தோனி வென்று கொடுத்திருக்கிறார். இன்றும் அதுதான் நடந்தது.
மே.இ.தீவுகள் கேப்டன் ஜேசன் ஹோல்டரின் புரியாத கேப்டன்சி:
வேகப்பந்து வீச்சாளர் டெய்லருக்கு 2 ஓவர்கள் மீதமுள்ளன. ஹோல்டருக்கு 3 ஓவர்கள் உள்ளன. ரோச், ரசல் ஆகியோருக்கு தலா 2 ஓவர்கள் மீதமுள்ளன. இந்நிலையில் ஸ்மித், சாமுயெல்ஸ் 8.1 ஓவர்களை வீச வேண்டிய அவசியமென்ன? அந்த 8 ஓவர்களில் 32 ரன்கள் சென்றது. ஒருவேளை... ஒருவேளை முன்னணி பவுலர்களை பயன்படுத்தி, தோனியையோ, அஸ்வினையோ எடுத்திருந்தால் இந்தியாவுக்கு மேலும் சிக்கல் அதிகமாகியிருக்கலாம்.
ஏனோ இதனை அவர் செய்யவில்லை. இது ஒரு புரியாத புதிர்தான், சர்ச்சைக்குரியதும் கூட. கிமார் ரோச்சைக் கொண்டு வந்து ஒரு மோது மோதிப்பார்த்திருக்க வேண்டும், அவரிடம் அந்த இயல்பூக்கம் இல்லை. இது நிச்சயம் ஏமாற்றமளிக்கக் கூடிய விஷயமே.
எது எப்படியிருந்தாலும் இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கை மணியை மே.இ.தீவுகள் இன்று ஒலித்துள்ளது. இந்திய அணி எப்போதும் நேர்மறையான பாசிடிவ் அம்சங்களையே ஒவ்வொரு தோல்விக்குப் பிறகும் பார்க்கும், இன்று முரணாக வெற்றியில் எதிர்மறைக் கூறுகளைக் கண்டு அதனை களைய வேண்டிய நிர்பந்தத்தை மே.இ.தீவுகள் ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியை நாக்-அவுட்டில் வெளியேற்ற நிச்சயம் வேகப்பந்து சாதக ஆட்டக்களங்களையே இனி அமைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே காலிறுதிக்கு முன்பாக இந்தியாவுக்கு இன்னும் 2 ஆட்டங்கள் உள்ளன. அதில் மனத்தளர்வு ஏற்படுமாறு ஆடிவிடக்கூடாது என்பதில் கவனம் தேவை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அணிக்காக கால்காப்பு அணியாமல் கீப்பிங் செய்த தோனியின் துணிச்சல்
மே.இ.தீவுகளுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய கேப்டன் தோனி கால்காப்பு அணியாமல் சில பந்துகளை கீப்பிங் செய்து அசத்தினார்.
கிரிக்கெட் ஆட்டத்தில் இது மிகவும் அரிதான காரியமே. காரணம் கால்காப்பு அணியாமல் விக்கெட் கீப்பர்கள் ரிஸ்க் எடுக்கத் துணிய மாட்டார்கள். ஆனால் தோனி இன்று அஸ்வினின் ஒரு ஓவரில் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்தார்.
காரணம் இல்லாமலில்லை, ஏதோ சாகசம் செய்ய அவர் இந்த முடிவை எடுக்கவில்லை. மாறாக ஆட்டத்தின் 14-வது ஓவரில் அஸ்வின் வீசும் போது அவருக்கு நல்ல பவுன்ஸ் இருந்தது. அதனை பயன்படுத்திக் கொள்ள நெருக்கமாக பீல்டர் ஒருவரை நிறுத்த முடிவு செய்தார் தோனி.
அது நடு ஓவர் என்பதால் அந்த நெருக்கமான பீல்டர் கால்காப்பை வரவழைக்க இயலாது. ஓவர் முடிந்தவுடனேயே கால்காப்பை வரவழைக்க முடியும்.
இந்த நிலையில் ரஹானேயை நெருக்கமாக கொண்டு வந்த தோனி, தனது விக்கெட் கீப்பிங் கால்காப்பை கழற்றி ரஹானேயிடம் அளித்தார்.
அஸ்வின் வீசிய 4 பந்துகளை அவர் ஸ்டம்புகளுக்கு அருகில் நின்று கால்காப்பில்லாமல் கீப் செய்து துணிச்சலை வெளிப்படுத்தினார். அதே வேளையில் விக்கெட் எடுக்கும் வாய்ப்பை கால்காப்பு காரணமாக அவர் இழக்க விரும்பவில்லை என்ற அணுகுமுறையையும் வெளிப்படுத்தினார்.
அஸ்வின் ஒரு வேகமான பந்தை வீசி அது தோனியின் கால்காப்பு கவசம் இல்லாத காலைத் தாக்கியிருந்தால்... ஆனால் தோனி அதையெல்லாம் யோசிக்கவில்லை.
கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்கள் செய்யத்துணியாத காரியத்தை தோனி துணிந்து செய்துள்ளார்.
மே.இ.தீவுகளுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் இந்திய கேப்டன் தோனி கால்காப்பு அணியாமல் சில பந்துகளை கீப்பிங் செய்து அசத்தினார்.
கிரிக்கெட் ஆட்டத்தில் இது மிகவும் அரிதான காரியமே. காரணம் கால்காப்பு அணியாமல் விக்கெட் கீப்பர்கள் ரிஸ்க் எடுக்கத் துணிய மாட்டார்கள். ஆனால் தோனி இன்று அஸ்வினின் ஒரு ஓவரில் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்தார்.
காரணம் இல்லாமலில்லை, ஏதோ சாகசம் செய்ய அவர் இந்த முடிவை எடுக்கவில்லை. மாறாக ஆட்டத்தின் 14-வது ஓவரில் அஸ்வின் வீசும் போது அவருக்கு நல்ல பவுன்ஸ் இருந்தது. அதனை பயன்படுத்திக் கொள்ள நெருக்கமாக பீல்டர் ஒருவரை நிறுத்த முடிவு செய்தார் தோனி.
அது நடு ஓவர் என்பதால் அந்த நெருக்கமான பீல்டர் கால்காப்பை வரவழைக்க இயலாது. ஓவர் முடிந்தவுடனேயே கால்காப்பை வரவழைக்க முடியும்.
இந்த நிலையில் ரஹானேயை நெருக்கமாக கொண்டு வந்த தோனி, தனது விக்கெட் கீப்பிங் கால்காப்பை கழற்றி ரஹானேயிடம் அளித்தார்.
அஸ்வின் வீசிய 4 பந்துகளை அவர் ஸ்டம்புகளுக்கு அருகில் நின்று கால்காப்பில்லாமல் கீப் செய்து துணிச்சலை வெளிப்படுத்தினார். அதே வேளையில் விக்கெட் எடுக்கும் வாய்ப்பை கால்காப்பு காரணமாக அவர் இழக்க விரும்பவில்லை என்ற அணுகுமுறையையும் வெளிப்படுத்தினார்.
அஸ்வின் ஒரு வேகமான பந்தை வீசி அது தோனியின் கால்காப்பு கவசம் இல்லாத காலைத் தாக்கியிருந்தால்... ஆனால் தோனி அதையெல்லாம் யோசிக்கவில்லை.
கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பர்கள் செய்யத்துணியாத காரியத்தை தோனி துணிந்து செய்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காலிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா பாக்?
ஆக்லாந்து: உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில், பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இதில் பாகிஸ்தான் அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, காலிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில், 11வது ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடக்கிறது. நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று நடக்கும் 'பி' பிரிவு லீக் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி, பாகிஸ்தானை சந்திக்கிறது. உலக கோப்பை வரலாற்றில், இவ்விரு அணிகள் மோதிய மூன்று போட்டியிலும், தென் ஆப்ரிக்கா வென்றது.
காலிறுதி வாய்ப்பு:
ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் துவக்கிய தென் ஆப்ரிக்கா, இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. பின், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து அணிகளை வீழ்த்தி எழுச்சி கண்டது. இன்றைய போட்டியில் மீண்டும் அசத்தும் பட்சத்தில், 'ஹாட்ரிக்' வெற்றியுடன் காலிறுதிக்கான இடத்தை உறுதி செய்யும்.
இதுவரை சோபிக்காத துவக்க வீரர் குயின்டன் டி காக் (7, 7, 12, 1) எழுச்சி கண்டால் நல்லது. அயர்லாந்துக்கு எதிராக சதமடித்த ஹசிம் ஆம்லா, டுபிளசி மீண்டும் சாதிக்கலாம். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய கேப்டன் டிவிலியர்ஸ், இன்றும் ரன் மழை பொழியலாம். காயத்தில் இருந்து டுமினி மீண்டது பலம். இவர், 'மிடில்-ஆர்டரில்' டேவிட் மில்லருடன் இணைந்து அதிரடி காட்டும் பட்சத்தில், சுலபமாக 400 ரன்கள் எடுக்கலாம்.
வேகப்பந்துவீச்சில் ஸ்டைன் (5 விக்.,), மார்னே மார்கல் (9 விக்.,) கூட்டணி அசத்துகிறது. கைல் அபாட் (6 விக்.,) நல்ல 'பார்மில்' இருப்பதால், பிலாண்டருக்கு இடம் கிடைப்பது சந்தேகம். 'சுழலில்' இம்ராத் தாகிர் (9 விக்.,) அசத்துகிறார்.
கட்டாய வெற்றி:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடம் வீழ்ந்த பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகளை வீழ்த்தி எழுச்சி கண்டது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே காலிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.
பேட்டிங்கில் கேப்டன் மிஸ்பா (221 ரன்) மட்டும் ஆறுதல் தருகிறார். இதுவரை மூன்று அரைசதம் கடந்த இவர், மீண்டும் கைகொடுக்கலாம். 'பார்மின்றி' தவிக்கும் துவக்க வீரர் நசிர் ஜாம்ஷெத் நீக்கப்பட்டு சர்பிராஸ் அகமது வாய்ப்பு பெறலாம். குதிங்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹாரிஸ் சோகைல் விளையாடுவது சந்தேகம். ஒருவேளை இவர் விளையாடாவிட்டால், அனுபவ வீரர் யூனிஸ் கான் வாய்ப்பு பெறலாம்.
வேகப்பந்துவீச்சில் முகமது இர்பான் (5 விக்.,), வாகாப் ரியாஸ் (8 விக்.,), சோகைல் கான் (8 விக்.,) நம்பிக்கை அளிக்கின்றனர். ரஹாத் அலி எழுச்சி காண வேண்டும். 'சுழலில்' அப்ரிதி, ஹாரிஸ் சோகைல் கைகொடுத்தால் நல்லது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உலக கோப்பை காலிறுதியில் இந்தியா: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ”பி” பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி இன்று தனது 4 வது லீக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி 8 புள்ளிகளுடன் காலிறுதிக்கு முன்னேறியது. லீக் போட்டியில் இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ள நிலையிலேயே இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்தியா விளையாடிய 4 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, தனது டிவிட்டரில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் “வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றமைக்கு இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எதிர்வரும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாட இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,” வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றமைக்கு இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்திய அணிக்கு மிகப்பெரிய தொடராக இது உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தென் ஆப்பிரிக்காவை அசத்தலாக வீழ்த்தியது பாகிஸ்தான்
உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், தனது அபாரப் பந்துவீச்சின் காரணமாக, தென் ஆப்பிரிக்க அணியை டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 29 ரன்களில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.
இதன் மூலம், உலகக் கோப்பை காலிறுதிக்கான வாய்ப்பை பாகிஸ்தான் அணி தக்கவைத்தது.
இப்போட்டியில், 47 ஓவர்களில் 232 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 33.3 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களில் சுருண்டு தோல்வியுற்றது.
அந்த அணியின் வெற்றிக்காக போராடிய டிவில்லியர்ஸ் 77 ரன்கள் சேர்த்தார். ஆம்லா 38 ரன்களையும், டூபிளெஸ்ஸி 27 ரன்களையும் சேர்த்தனர். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய முகமது இர்ஃபான், ராஹத் அலி மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சோஹாலி கான் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் இன்னிங்ஸ்:
இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறையில் 47 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 47 ஓவர்களில் 232 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது.
டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே பாகிஸ்தான் அணிக்கு நெருக்குதல் தர ஆரம்பித்தது. 9-வது ஓவரில் துவக்க வீரர் ஷெசாத் ஆட்டமிழந்தார். தொடர்ந்த சர்ஃபராஸ், யூனிஸ் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்த பாடுபட்டது.
சிறப்பாக ஆடிவந்த சர்ஃபராஸ், டுமினி வீசிய 16-வது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அடுத்த ஓவரிலேயே 49 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இதற்குப் பின் மீண்டும் பாகிஸ்தான் ஆட்டம் நிதானமானது. அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மிஸ்பா உல் ஹக் பொறுமையாக விளையாட யூனிஸ் கான் 37 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து ஷோயப் மக்ஸூட் 8 ரன்களுக்கும், உமர் அக்மல் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 37-வது ஓவர் முடிவில் 175 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது.
அரை மணி நேரம் கழித்து தொடர்ந்த ஆட்டதில், அடுத்து களமிறங்கிய அஃப்ரிதி ஒரு சிக்ஸ் அடித்து தனது அதிரடியைத் துவங்க, மறுமுனையில் மிஸ்பா தனது அரை சதத்தை எட்டினார். மீண்டும் மழையால் ஆட்டம் தடைபட்டது. ஒரு மணி நேரம் வரை நீடித்த இந்த மழையால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
மீதம் 7 ஓவர்களே இருக்க, முடிந்த வரை அதிரடியாக ரன் சேர்க்க பாக். முயன்றது. ஆனால் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் திறம்பட வீசியதால் நினைத்த வேகத்தில் ரன் சேர்க்க இயலாமல் போனது.
அஃப்ரிதி 22 ரன்களுடனும், வஹாப் ரியாஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர். மிஸ்பாவும் அடுத்த ஓவரில் 56 ரன்களுக்கு விழ, தொடர்ந்து ஆட வந்த ரஹத் அலி, சோஹைல் கான் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
முடிவில் 47 ஓவர்கள் கூட முழுமையாக ஆடாத பாக். 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டக்வொர்த் லீவிஸ் முறையில் திருத்தியமைக்கப்பட்ட இலக்காக 232 ரன்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், தனது அபாரப் பந்துவீச்சின் காரணமாக, தென் ஆப்பிரிக்க அணியை டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 29 ரன்களில் வீழ்த்தியது பாகிஸ்தான் அணி.
இதன் மூலம், உலகக் கோப்பை காலிறுதிக்கான வாய்ப்பை பாகிஸ்தான் அணி தக்கவைத்தது.
இப்போட்டியில், 47 ஓவர்களில் 232 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 33.3 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களில் சுருண்டு தோல்வியுற்றது.
அந்த அணியின் வெற்றிக்காக போராடிய டிவில்லியர்ஸ் 77 ரன்கள் சேர்த்தார். ஆம்லா 38 ரன்களையும், டூபிளெஸ்ஸி 27 ரன்களையும் சேர்த்தனர். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய முகமது இர்ஃபான், ராஹத் அலி மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சோஹாலி கான் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
பாகிஸ்தான் இன்னிங்ஸ்:
இப்போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆட்டத்தின் இடையே மழை குறுக்கிட்டதால், டக்வொர்த் லூயிஸ் முறையில் 47 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 47 ஓவர்களில் 232 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது.
டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த தென் ஆப்பிரிக்க அணி ஆரம்பம் முதலே பாகிஸ்தான் அணிக்கு நெருக்குதல் தர ஆரம்பித்தது. 9-வது ஓவரில் துவக்க வீரர் ஷெசாத் ஆட்டமிழந்தார். தொடர்ந்த சர்ஃபராஸ், யூனிஸ் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்த பாடுபட்டது.
சிறப்பாக ஆடிவந்த சர்ஃபராஸ், டுமினி வீசிய 16-வது ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அடுத்த ஓவரிலேயே 49 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இதற்குப் பின் மீண்டும் பாகிஸ்தான் ஆட்டம் நிதானமானது. அணியின் நம்பிக்கை நட்சத்திரமான மிஸ்பா உல் ஹக் பொறுமையாக விளையாட யூனிஸ் கான் 37 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
தொடர்ந்து ஷோயப் மக்ஸூட் 8 ரன்களுக்கும், உமர் அக்மல் 13 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 37-வது ஓவர் முடிவில் 175 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்திருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது.
அரை மணி நேரம் கழித்து தொடர்ந்த ஆட்டதில், அடுத்து களமிறங்கிய அஃப்ரிதி ஒரு சிக்ஸ் அடித்து தனது அதிரடியைத் துவங்க, மறுமுனையில் மிஸ்பா தனது அரை சதத்தை எட்டினார். மீண்டும் மழையால் ஆட்டம் தடைபட்டது. ஒரு மணி நேரம் வரை நீடித்த இந்த மழையால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
மீதம் 7 ஓவர்களே இருக்க, முடிந்த வரை அதிரடியாக ரன் சேர்க்க பாக். முயன்றது. ஆனால் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்கள் திறம்பட வீசியதால் நினைத்த வேகத்தில் ரன் சேர்க்க இயலாமல் போனது.
அஃப்ரிதி 22 ரன்களுடனும், வஹாப் ரியாஸ் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து வெளியேறினர். மிஸ்பாவும் அடுத்த ஓவரில் 56 ரன்களுக்கு விழ, தொடர்ந்து ஆட வந்த ரஹத் அலி, சோஹைல் கான் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
முடிவில் 47 ஓவர்கள் கூட முழுமையாக ஆடாத பாக். 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டக்வொர்த் லீவிஸ் முறையில் திருத்தியமைக்கப்பட்ட இலக்காக 232 ரன்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நல்ல பந்துவீச்சுக்கு எதிராக மீண்டும் மூச்சுத்திணறி வீழ்ந்த தென்னாப்பிரிக்கா
ஆக்லாந்தில் நடைபெற்ற மிக முக்கியமான பிரிவு-பி உலகக்கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மீண்டும் ஒரு நல்ல பந்துவீச்சுக்கு எதிராக பாகிஸ்தானிடம் தோல்வி தழுவியது.
உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று கூறப்படும் ஒரு பலமான தென்னாப்பிரிக்க அணி, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் குறிப்பாக நல்ல பந்துவீச்சுக்கு தோல்வி தழுவியுள்ளது.
தோல்விக்குப் பிறகு டிவில்லியர்ஸ் கூறும் போது, “நாங்கள் இன்னமும் இந்தப் பிரிவில் நல்ல நிலையில்தான் இருக்கிறோம். ஆனால் எனக்கு தோற்பது பிடிக்காது. பேட்டிங்கில் நாங்கள் அதிர்ச்சிகரமாக ஆடுகிறோம் என்பதில் ஐயமில்லை. கடந்த சில ஆண்டுகளில் நெருக்கடியிலிருந்து மீண்டு மேல் நிலைக்கு வந்துள்ளோம். இன்னமும் நாங்கள் நல்ல அணிச்சேர்க்கையுடன் உலகக்கோப்பையை நிச்சயம் வெல்வோம் என்றே பலமாக நம்புகிறோம். விளக்கு வெளிச்சத்தில் பேட்டிங் எளிதானதல்ல. இலக்கைத் துரத்துவதற்கு ஏதுவான பிட்ச்தான் இது. வெற்றிபெறாததற்கு எந்த ஒரு காரணத்தையும் கூற முடியாது.” என்றார்.
கேப்டன்சியில் சொதப்பிய டிவில்லியர்ஸ்
“தோற்பது எனக்கு பிடிக்காது” இது டிவில்லியர்ஸ் கூறும் வார்த்தை. ஆனால் அவர் அணிச்சேர்க்கையில் மீண்டும் தவறு செய்தார். பந்துவீச்சு மாற்றங்களிலும் சொதப்பினார். வெர்னன் பிலாண்டரை அணியில் சேர்த்திருந்தால் நிச்சயம் பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருந்ததற்கு பாக். பேட்டிங்கை இன்னமும் விரைவிலேயே வீழ்த்தியிருக்க முடியும், ஆனால் அவர் இம்ரான் தாஹிரை அதிகம் நம்பினார். பகுதி நேர பவுலர்களான டுமினியை விரைவில் கொண்டு வந்து தவறு செய்தார். மேலும் தானே பந்து வீச முடிவெடுத்து சொதப்பினார். இம்ரான் தாஹிர் சோபிக்கவில்லை.
முதல் 10 ஓவர்களில் 35 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று பாகிஸ்தானைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த அவர் கேப்டன்சி முடிவுகளில் செய்த தவறினால் பாகிஸ்தான் ரன் விகிதம் சரமாரியாக அதிகரித்தது. தொடக்கதில் ஷெசாத்துக்கு டேல் ஸ்டெய்ன் பிடித்த கேட்ச் அபாரமானது. ஓடிச் சென்று வலது புறம் பறந்து தாவிப்பிடித்தார்.
யூனிஸ் கான் வேகப்பந்து வீச்சுக்கு குதித்து குதித்து ஆடுபவர். இந்தியாவுக்கு எதிராக குதித்து குதித்தேதான் அவுட் ஆனார். ஆனால் இன்று அவர் இறங்கியவுடன் ஸ்பின்னர்களை கொண்டு வந்து அவரை ரன்கள் எடுக்க அனுமதித்தார். இம்ரான் தாஹிர் வந்தவுடனேயே யூனிஸ் கான் 2 பவுண்டரிகளை விளாசினார். டிவில்லியர்ஸ் ஓவரில் 2 பவுண்டரிகள்.
சர்பராஸ் அகமட் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக ஒரு அருமையான பேட்ஸ்மென், இது தெரியாமல் டுமினியை அவர் தொடர்ந்து கொடுக்க 16-வது ஓவரில் சர்பராஸ் அகமட் மேலேறி வந்து ஆன் திசையில் 2 அருமையான சிக்சர்களை விளாசினார். சரி அவ்வள்வுதான் என்று பார்த்தால் சர்பராஸ் மேலும் தைரியமாக டுமினியை இலக்காக்கி இன்னொரு சிக்சரையும் விளாசினார். 10-வது ஓவர் முடிவில் 24 பந்துகளில் 10 ரன்கள் என்று இருந்த சர்பராஸ் அகமட், டிவில்லியர்ஸின் தவறான கேப்டன்சியை நன்றாகப் பயன்படுத்தி 16-வது ஓவர் முடிவில் 46 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் என்று விறுவிறுப்பு காட்டினார்.
10 ஓவர்களில் 35 என்று இருந்த பாகிஸ்தான் 16-வது ஓவர் முடிவில் 90/1 என்று ஆனது. இங்குதான் தென்னாப்பிரிக்கா தனக்கே சூனியம் வைத்துக் கொண்டது தொடங்கியது. சர்பராஸ் அகமட் 49 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஸ்கொயர் லெக் திசையில் மிக குறுகிய பவுண்டரி அங்கு அடித்துவிட்டு 2வது ரன் எடுக்க முயன்று அவர் மில்லரின் அபாரமான த்ரோவுக்கு இரையானார். இவரைத்தான் உட்கார வைத்து வேடிக்கைப் பார்த்தார் மிஸ்பா.
மீண்டும் ஸ்டெய்ன் கொண்டு வரப்பட்டார். மிஸ்பா உல் ஹக் 7-வது ரன்னை எடுக்கும் போது ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களை எடுத்தார்.
ஆனால், மீண்டும் டிவில்லியர்ஸுக்கு பந்துவீச்சு ஆசைப் பீடிக்க, வந்தார், மிஸ்பா 2 பவுண்டரிகளை விளாசினார். ஆனால், யூனிஸ் கான் 37 ரன்களில் டிவில்லியர்ஸிடம் விக்கெட்டைக் கொடுத்தது அபத்தம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்சூத் 8 ரன்களில் கைல் அபாட் பந்தை நேராக பாயிண்டில் கேட்ச்கொடுத்தார். மிஸ்பா 37 ரன்களை 60 பந்துகளில் எடுக்க உமர் அக்மல் 8 ரன்களில் இருக்க பாகிஸ்தான் 35 ஓவர்களில் 167/4. அதாவது 10 ஓவர்களில் 35/1 பிறகு அடுத்த 25 ஓவர்களில் 132 ரன்கள் மேலும் 3 விக்கெட்டுகள், 10-வது ஓவரிலிருந்து 16-வது ஓவர் வரை நடத்திய சாத்துமுறையின் விளைவு அப்படியே தக்கவைக்கப்பட்டது. உமர் அக்மல் 13 ரன்களில் வெளியேறினார். அப்ரீடி 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மிஸ்பா மீண்டும் ஒரு அரைசதம் எடுத்து 56 ரன்கள் சேர்த்தார்.
மழை குறுக்கிட்டதால் ஓவர்கள் 47-ஆகக் குறைக்கப்பட விக்கெட்டுகள் விழத் தொடங்கின. பாகிஸ்தான் 167/4 என்ற நிலையிலிருந்து 222 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டெய்ன் 10 ஓவர்களில் 30 ரன்கள்தான் 3 விக்கெட்டுகள். அபாட், மொர்கெல் தலா 2 விக்கெட்டுகள். இம்ரான் தாஹிர், டிவில்லியர்ஸ், டுமினி ஆகியோர் வீசிய 18 ஓவர்களில் 115 ரன்கள். ஸ்டெய்ன், மோர்கெல், அபாட் வீசிய 28.4 ஓவர்களில் வெறும் 100 ரன்கள். இதனால்தான் பிலாண்டர் இருந்திருந்தால் பாகிஸ்தான் இன்னமும் மோசமான ரன்களையே எடுத்திருக்க வாய்ப்பிருந்தது. பாகிஸ்தான் 222 ரன்களுக்குச் சுருண்டது.
ஆக்லாந்தில் நடைபெற்ற மிக முக்கியமான பிரிவு-பி உலகக்கோப்பை லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா மீண்டும் ஒரு நல்ல பந்துவீச்சுக்கு எதிராக பாகிஸ்தானிடம் தோல்வி தழுவியது.
உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று கூறப்படும் ஒரு பலமான தென்னாப்பிரிக்க அணி, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் குறிப்பாக நல்ல பந்துவீச்சுக்கு தோல்வி தழுவியுள்ளது.
தோல்விக்குப் பிறகு டிவில்லியர்ஸ் கூறும் போது, “நாங்கள் இன்னமும் இந்தப் பிரிவில் நல்ல நிலையில்தான் இருக்கிறோம். ஆனால் எனக்கு தோற்பது பிடிக்காது. பேட்டிங்கில் நாங்கள் அதிர்ச்சிகரமாக ஆடுகிறோம் என்பதில் ஐயமில்லை. கடந்த சில ஆண்டுகளில் நெருக்கடியிலிருந்து மீண்டு மேல் நிலைக்கு வந்துள்ளோம். இன்னமும் நாங்கள் நல்ல அணிச்சேர்க்கையுடன் உலகக்கோப்பையை நிச்சயம் வெல்வோம் என்றே பலமாக நம்புகிறோம். விளக்கு வெளிச்சத்தில் பேட்டிங் எளிதானதல்ல. இலக்கைத் துரத்துவதற்கு ஏதுவான பிட்ச்தான் இது. வெற்றிபெறாததற்கு எந்த ஒரு காரணத்தையும் கூற முடியாது.” என்றார்.
கேப்டன்சியில் சொதப்பிய டிவில்லியர்ஸ்
“தோற்பது எனக்கு பிடிக்காது” இது டிவில்லியர்ஸ் கூறும் வார்த்தை. ஆனால் அவர் அணிச்சேர்க்கையில் மீண்டும் தவறு செய்தார். பந்துவீச்சு மாற்றங்களிலும் சொதப்பினார். வெர்னன் பிலாண்டரை அணியில் சேர்த்திருந்தால் நிச்சயம் பிட்சில் கொஞ்சம் ஸ்விங் இருந்ததற்கு பாக். பேட்டிங்கை இன்னமும் விரைவிலேயே வீழ்த்தியிருக்க முடியும், ஆனால் அவர் இம்ரான் தாஹிரை அதிகம் நம்பினார். பகுதி நேர பவுலர்களான டுமினியை விரைவில் கொண்டு வந்து தவறு செய்தார். மேலும் தானே பந்து வீச முடிவெடுத்து சொதப்பினார். இம்ரான் தாஹிர் சோபிக்கவில்லை.
முதல் 10 ஓவர்களில் 35 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று பாகிஸ்தானைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த அவர் கேப்டன்சி முடிவுகளில் செய்த தவறினால் பாகிஸ்தான் ரன் விகிதம் சரமாரியாக அதிகரித்தது. தொடக்கதில் ஷெசாத்துக்கு டேல் ஸ்டெய்ன் பிடித்த கேட்ச் அபாரமானது. ஓடிச் சென்று வலது புறம் பறந்து தாவிப்பிடித்தார்.
யூனிஸ் கான் வேகப்பந்து வீச்சுக்கு குதித்து குதித்து ஆடுபவர். இந்தியாவுக்கு எதிராக குதித்து குதித்தேதான் அவுட் ஆனார். ஆனால் இன்று அவர் இறங்கியவுடன் ஸ்பின்னர்களை கொண்டு வந்து அவரை ரன்கள் எடுக்க அனுமதித்தார். இம்ரான் தாஹிர் வந்தவுடனேயே யூனிஸ் கான் 2 பவுண்டரிகளை விளாசினார். டிவில்லியர்ஸ் ஓவரில் 2 பவுண்டரிகள்.
சர்பராஸ் அகமட் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக ஒரு அருமையான பேட்ஸ்மென், இது தெரியாமல் டுமினியை அவர் தொடர்ந்து கொடுக்க 16-வது ஓவரில் சர்பராஸ் அகமட் மேலேறி வந்து ஆன் திசையில் 2 அருமையான சிக்சர்களை விளாசினார். சரி அவ்வள்வுதான் என்று பார்த்தால் சர்பராஸ் மேலும் தைரியமாக டுமினியை இலக்காக்கி இன்னொரு சிக்சரையும் விளாசினார். 10-வது ஓவர் முடிவில் 24 பந்துகளில் 10 ரன்கள் என்று இருந்த சர்பராஸ் அகமட், டிவில்லியர்ஸின் தவறான கேப்டன்சியை நன்றாகப் பயன்படுத்தி 16-வது ஓவர் முடிவில் 46 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 48 ரன்கள் என்று விறுவிறுப்பு காட்டினார்.
10 ஓவர்களில் 35 என்று இருந்த பாகிஸ்தான் 16-வது ஓவர் முடிவில் 90/1 என்று ஆனது. இங்குதான் தென்னாப்பிரிக்கா தனக்கே சூனியம் வைத்துக் கொண்டது தொடங்கியது. சர்பராஸ் அகமட் 49 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஸ்கொயர் லெக் திசையில் மிக குறுகிய பவுண்டரி அங்கு அடித்துவிட்டு 2வது ரன் எடுக்க முயன்று அவர் மில்லரின் அபாரமான த்ரோவுக்கு இரையானார். இவரைத்தான் உட்கார வைத்து வேடிக்கைப் பார்த்தார் மிஸ்பா.
மீண்டும் ஸ்டெய்ன் கொண்டு வரப்பட்டார். மிஸ்பா உல் ஹக் 7-வது ரன்னை எடுக்கும் போது ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களை எடுத்தார்.
ஆனால், மீண்டும் டிவில்லியர்ஸுக்கு பந்துவீச்சு ஆசைப் பீடிக்க, வந்தார், மிஸ்பா 2 பவுண்டரிகளை விளாசினார். ஆனால், யூனிஸ் கான் 37 ரன்களில் டிவில்லியர்ஸிடம் விக்கெட்டைக் கொடுத்தது அபத்தம். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மக்சூத் 8 ரன்களில் கைல் அபாட் பந்தை நேராக பாயிண்டில் கேட்ச்கொடுத்தார். மிஸ்பா 37 ரன்களை 60 பந்துகளில் எடுக்க உமர் அக்மல் 8 ரன்களில் இருக்க பாகிஸ்தான் 35 ஓவர்களில் 167/4. அதாவது 10 ஓவர்களில் 35/1 பிறகு அடுத்த 25 ஓவர்களில் 132 ரன்கள் மேலும் 3 விக்கெட்டுகள், 10-வது ஓவரிலிருந்து 16-வது ஓவர் வரை நடத்திய சாத்துமுறையின் விளைவு அப்படியே தக்கவைக்கப்பட்டது. உமர் அக்மல் 13 ரன்களில் வெளியேறினார். அப்ரீடி 1 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மிஸ்பா மீண்டும் ஒரு அரைசதம் எடுத்து 56 ரன்கள் சேர்த்தார்.
மழை குறுக்கிட்டதால் ஓவர்கள் 47-ஆகக் குறைக்கப்பட விக்கெட்டுகள் விழத் தொடங்கின. பாகிஸ்தான் 167/4 என்ற நிலையிலிருந்து 222 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்டெய்ன் 10 ஓவர்களில் 30 ரன்கள்தான் 3 விக்கெட்டுகள். அபாட், மொர்கெல் தலா 2 விக்கெட்டுகள். இம்ரான் தாஹிர், டிவில்லியர்ஸ், டுமினி ஆகியோர் வீசிய 18 ஓவர்களில் 115 ரன்கள். ஸ்டெய்ன், மோர்கெல், அபாட் வீசிய 28.4 ஓவர்களில் வெறும் 100 ரன்கள். இதனால்தான் பிலாண்டர் இருந்திருந்தால் பாகிஸ்தான் இன்னமும் மோசமான ரன்களையே எடுத்திருக்க வாய்ப்பிருந்தது. பாகிஸ்தான் 222 ரன்களுக்குச் சுருண்டது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திருத்தப்பட்ட இலக்கும் பாகிஸ்தானின் அபார பந்துவீச்சும்:
மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டதால் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 47 ஓவர்களில் 232 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது.
குவிண்டன் டி காக் என்பவரின் மோசமான ஃபார்ம் தொடர்கிறது. அவர் ரன் எடுக்காமல் 7 அடி உயர மொகமது இர்பானின் அபாரமான பந்துக்கு விக்கெட் கீப்பர் சர்பாரிசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பிறகு பாகிஸ்தான் பந்துவீச்சு கொஞ்சம் திசையை இழக்க டுபிளெஸ்ஸி மற்றும் ஆம்லா அணியை மீட்டனர். 6-வது ஓவரில் சொஹைல் கான் வீசும் போது ஆம்லா மிக அருமையாக 3 பவுண்டரிகளை அடித்தார். 7-வது ஓவரை மொகமது இர்பான் வீச லெக் திசை பந்தை டுபிளெஸ்ஸி பவுண்டரி அடித்தார். பிறகு அதே ஓவரில் ஆம்லாவுக்கு இரண்டு தவறுகளைச் இர்பான் செய்ய இரண்டும் பவுண்டரிக்குப் பறந்தது. ஒன்று லெக் திசை பந்து, மற்றொன்று ஷாட் பிட்ச்.
முதல் விக்கெட் 0-வில் விழுந்த சுவடு தெரியாமல் 7 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 51 ரன்கள். அடுத்த ஓவரை இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரஹத் அலி வீச ஒரு பந்து லெக் திசையில் பவுன்சர் மிக எளிதாக புல் ஆடி சிக்சருக்கு விரட்டினார் டுபிளெஸ்ஸி, மீண்டும் ஒரு ஷாட் பிட்ச் பந்து லெக் திசையில் ஒரு பவுண்டரி. பாகிஸ்தான் பந்து வீச்சு மிகவும் கட்டுக்கோப்பை இழந்து வந்த தருணம் இது. இந்த நிலையில்தான் ரஹத் அலி, ஒரு அருமையான பந்தை வீசி டுபிளெஸ்ஸியின் எட்ஜைப் பிடித்தார். 27 ரன்களில் அவர் அவுட் ஆனது திருப்பு முனை ஏற்படுத்தியது.
11-வது ஓவரில் அருமையான இடது கை வீச்சாளர் வஹாப் ரியாஸ் அழைக்கப்பட, 27 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடி வந்த ஆம்லா. கவனம் சிதறிய ஒரு தருணத்தில் ரியாஸ் பந்தை அவர் ஆட பந்து தாழ்வாக விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. 67/3 என்ற நிலையில் பாகிஸ்தான் பந்துவீச்சு உத்வேகம் பெற்றது.
ரைலி ரூசோவ் இறங்கி ஒரு பவுண்டரி அடித்தார். பிறகு வஹாப் ரியாஸின் அருமையான, துல்லிய ஷாட் பிட்ச் பந்தை சரியாக அடிக்காமல் நேராக டீப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரூசோவ்.
மில்லர் களமிறங்கியவுடன் பாகிஸ்தான் பந்துவீச்சில் நெருப்புப் பொறி பறந்தது. மில்லருக்கு பந்துகளை நேராக ஆடிப் பழக்கமில்லை என்று தெரிந்தது. மட்டை எப்போதும் ஃபைன்லெக் திசையிலிருந்து இறங்கியது. இதனால் அவர் தட்டுத் தடுமாறினார். நிறைய ஷாட் பிட்ச் பந்துகளை அவருக்குப் போட்ட ரஹத் அலி திடீரென ஒரு அருமையான பாதம் பெயர்க்கும் யார்க்கரை வீச, அது பின்னங்காலைத் தாக்க எல்.பி.ஆனார். தேவையில்லாமல் ரிவியூ செய்து ஒரு ரிவியூவையும் காலி செய்தார்.
டுமினி களமிறங்கி 2 பவுண்டரிகள் அடித்து 12 ரன்களில் இருந்த போது மொகமது இர்பான் மீண்டும் பந்து வீச வர, பவுன்சர் வீசினார், ஹூக் ஷாட் ஆடினார், தேவையான உயரம் கிடைக்கவில்லை பந்து நேராக வஹாபிடம் கேட்ச் ஆனது. தெ.ஆ. 103/6. ஓவர்கள் 20 முடிந்திருந்தது.
மழையால் ஓவர்கள் குறைக்கப்பட்டதால் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 47 ஓவர்களில் 232 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது.
குவிண்டன் டி காக் என்பவரின் மோசமான ஃபார்ம் தொடர்கிறது. அவர் ரன் எடுக்காமல் 7 அடி உயர மொகமது இர்பானின் அபாரமான பந்துக்கு விக்கெட் கீப்பர் சர்பாரிசிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பிறகு பாகிஸ்தான் பந்துவீச்சு கொஞ்சம் திசையை இழக்க டுபிளெஸ்ஸி மற்றும் ஆம்லா அணியை மீட்டனர். 6-வது ஓவரில் சொஹைல் கான் வீசும் போது ஆம்லா மிக அருமையாக 3 பவுண்டரிகளை அடித்தார். 7-வது ஓவரை மொகமது இர்பான் வீச லெக் திசை பந்தை டுபிளெஸ்ஸி பவுண்டரி அடித்தார். பிறகு அதே ஓவரில் ஆம்லாவுக்கு இரண்டு தவறுகளைச் இர்பான் செய்ய இரண்டும் பவுண்டரிக்குப் பறந்தது. ஒன்று லெக் திசை பந்து, மற்றொன்று ஷாட் பிட்ச்.
முதல் விக்கெட் 0-வில் விழுந்த சுவடு தெரியாமல் 7 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா 51 ரன்கள். அடுத்த ஓவரை இடது கை வேகப்பந்து வீச்சாளர் ரஹத் அலி வீச ஒரு பந்து லெக் திசையில் பவுன்சர் மிக எளிதாக புல் ஆடி சிக்சருக்கு விரட்டினார் டுபிளெஸ்ஸி, மீண்டும் ஒரு ஷாட் பிட்ச் பந்து லெக் திசையில் ஒரு பவுண்டரி. பாகிஸ்தான் பந்து வீச்சு மிகவும் கட்டுக்கோப்பை இழந்து வந்த தருணம் இது. இந்த நிலையில்தான் ரஹத் அலி, ஒரு அருமையான பந்தை வீசி டுபிளெஸ்ஸியின் எட்ஜைப் பிடித்தார். 27 ரன்களில் அவர் அவுட் ஆனது திருப்பு முனை ஏற்படுத்தியது.
11-வது ஓவரில் அருமையான இடது கை வீச்சாளர் வஹாப் ரியாஸ் அழைக்கப்பட, 27 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடி வந்த ஆம்லா. கவனம் சிதறிய ஒரு தருணத்தில் ரியாஸ் பந்தை அவர் ஆட பந்து தாழ்வாக விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனது. 67/3 என்ற நிலையில் பாகிஸ்தான் பந்துவீச்சு உத்வேகம் பெற்றது.
ரைலி ரூசோவ் இறங்கி ஒரு பவுண்டரி அடித்தார். பிறகு வஹாப் ரியாஸின் அருமையான, துல்லிய ஷாட் பிட்ச் பந்தை சரியாக அடிக்காமல் நேராக டீப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ரூசோவ்.
மில்லர் களமிறங்கியவுடன் பாகிஸ்தான் பந்துவீச்சில் நெருப்புப் பொறி பறந்தது. மில்லருக்கு பந்துகளை நேராக ஆடிப் பழக்கமில்லை என்று தெரிந்தது. மட்டை எப்போதும் ஃபைன்லெக் திசையிலிருந்து இறங்கியது. இதனால் அவர் தட்டுத் தடுமாறினார். நிறைய ஷாட் பிட்ச் பந்துகளை அவருக்குப் போட்ட ரஹத் அலி திடீரென ஒரு அருமையான பாதம் பெயர்க்கும் யார்க்கரை வீச, அது பின்னங்காலைத் தாக்க எல்.பி.ஆனார். தேவையில்லாமல் ரிவியூ செய்து ஒரு ரிவியூவையும் காலி செய்தார்.
டுமினி களமிறங்கி 2 பவுண்டரிகள் அடித்து 12 ரன்களில் இருந்த போது மொகமது இர்பான் மீண்டும் பந்து வீச வர, பவுன்சர் வீசினார், ஹூக் ஷாட் ஆடினார், தேவையான உயரம் கிடைக்கவில்லை பந்து நேராக வஹாபிடம் கேட்ச் ஆனது. தெ.ஆ. 103/6. ஓவர்கள் 20 முடிந்திருந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 5 of 19 • 1, 2, 3, 4, 5, 6 ... 12 ... 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 19
|
|