by T.N.Balasubramanian Yesterday at 9:16 pm
» பெண்கள் அழகாக இருந்தால்தான் கூடுதல் சம்பளம் கிடைக்கும்- சர்ச்சையை ஏற்படுத்திய திமுக எம்எல்ஏ பேச்சு
by T.N.Balasubramanian Yesterday at 5:23 pm
» 1410 கிலோ எடையுள்ள காரை தனது தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 4:42 pm
» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» பிணம் பேச மாட்டேங்குது...!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:05 pm
» கங்கையில் 'டைவ்': 73. வயது மூதாட்டி சாகசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» ஒய்ஃபுக்கு அர்த்தம் இப்பதான் தெரிஞ்சுது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm
» இன்னலே வரே - மலையாளப் படம்
by T.N.Balasubramanian Yesterday at 12:55 pm
» சிறுகதைத் திறணாய்வு : புதுமைப்பித்தனின் ‘குற்றவாளி யார்?’
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 pm
» மிதாலி ராஜுக்கு பிரதமர் மோடி கடிதம்
by T.N.Balasubramanian Yesterday at 12:40 pm
» மயக்கமா இருக்குது டாக்டர்...!
by T.N.Balasubramanian Yesterday at 12:35 pm
» டெஸ்டில் ஒரே ஓவரில் 29 ரன்கள்… மரண மாஸ் காட்டிய பும்ரா; உலக சாதனை!
by T.N.Balasubramanian Yesterday at 12:33 pm
» நாட்காட்டி கூறிடும் நற்செய்திகள்/ சிறு மருத்துவ குறிப்புகள். ( தொடர்பதிவு)
by T.N.Balasubramanian Yesterday at 12:25 pm
» இயல்பானதை குறைத்து மதிப்பிடாதே! - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:44 am
» சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும் இந்து உப்பு !!
by ayyasamy ram Yesterday at 10:42 am
» தினம் ஒரு மூலிகை - ஆற்றலரி
by ayyasamy ram Yesterday at 8:54 am
» இன்டர்செப்டர் - ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சாகன் சாக்னே - பஞ்சாபி படம்
by ayyasamy ram Yesterday at 8:50 am
» ஜெயேஷ்பாய் ஜோர்தார் -இந்திப் படம்
by ayyasamy ram Yesterday at 8:49 am
» மருத்துவமனைக்கு ஆய்வுக்கு சென்றபோது நோயாளிக்கு ரத்த தானம் கொடுத்து உதவிய மந்திரி
by ayyasamy ram Yesterday at 6:05 am
» தோனி மூட்டு வலி சிகிச்சைக்காக ரூ 40 மட்டும் வாங்கிய டாக்டர்
by ayyasamy ram Yesterday at 5:55 am
» 18 ஆயிரம் பறவை இனங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 9:01 pm
» அறுபதைக் கடந்தபின் வாழ்வில்...
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:59 pm
» நுாதன முறையில் பண மோசடி
by Dr.S.Soundarapandian Sat Jul 02, 2022 8:54 pm
» கடனா? சொத்தா? (சிறு கதை )
by krishnaamma Sat Jul 02, 2022 8:38 pm
» இதுதான் இன்றைய பெண்களின் தாய்மார்களின் வசனம்!
by krishnaamma Sat Jul 02, 2022 8:25 pm
» உருவு கண்டு (சிறுகதை)
by krishnaamma Sat Jul 02, 2022 8:22 pm
» பணிந்தவர்களும் - துணிந்தவர்களும் !
by krishnaamma Sat Jul 02, 2022 8:19 pm
» நதிகளை பாதுகாப்போம்! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:53 pm
» கோவில்பட்டி கடலை மிட்டாயை இனிவீட்டில் இருந்தபடியே பெறலாம்.
by krishnaamma Sat Jul 02, 2022 7:52 pm
» இந்தியாவும் வல்லரசுதான்…! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:52 pm
» ரசிப்பதற்கு ஒன்றுமில்லை…! - ஹைகூ
by ayyasamy ram Sat Jul 02, 2022 7:50 pm
» நினைத்தாலே கிடைக்கும் மஹா பெரியவா அனுக்கிரகம்
by krishnaamma Sat Jul 02, 2022 7:46 pm
» பளக்க தோசம்...பளக்க தோசம்....அப்டீன்னா என்னா?
by krishnaamma Sat Jul 02, 2022 7:43 pm
» பிளாஸ்டிக் கன்டெய்னர்களில்எது ஆபத்தானது?
by krishnaamma Sat Jul 02, 2022 7:40 pm
» விளையாட்டு தொடர்பான பாடல்கள் :)
by krishnaamma Sat Jul 02, 2022 7:34 pm
» முருகன் பக்தி பாடல்கள் - தொடர் பதிவு
by krishnaamma Sat Jul 02, 2022 7:29 pm
» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:51 pm
» ஒற்றைத் தலைமை வேணும்ங்கிறான்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:45 pm
» மேனேஜரின் வீட்டுச்சாவி ஸ்டெனோவிடம்…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:43 pm
» ஜோக்ஸ் சொல்றேன்னு கொல்றாங்க…!!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm
» தலைவர் சரக்கும் பானிபூரியும் சாப்பிட்டிருக்காரு…!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:41 pm
» தூக்கத்திலே தவழ்கிற வியாதி..!
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:40 pm
» தினம் ஒரு மூலிகை - ஆளி விதை
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:08 pm
» கம்பு தானியத்தில் அவல், கேக், ரஸ்க் செய்முறை
by ayyasamy ram Sat Jul 02, 2022 6:07 pm
» கொரோனாவுக்கு எதிரான நாட்டின் முதல் 'எம்.ஆர்.என்.ஏ.' தடுப்பூசிக்கு ஒப்புதல்
by T.N.Balasubramanian Sat Jul 02, 2022 7:08 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 02/07/2022
by mohamed nizamudeen Sat Jul 02, 2022 7:02 am
» சகுன பயம்! - ஹைகூ கவிதைகள்
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:41 pm
» மரணச்சுனை - கவிதை
by ayyasamy ram Fri Jul 01, 2022 5:28 pm
No user |
ayyasamy ram |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Pradepa |
|
சிவகங்கை மாவட்டச் செய்திகள்

சிவகங்கை மாவட்டச் செய்திகள்

இங்கு சிவகங்கை மாவட்டச் செய்திகள் தொகுத்து வழங்கப்படும்!
(மற்ற மாவட்டங்களுக்கு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உங்கள் மாவட்டச் செய்திகளை நீங்கள் தொகுத்து வழங்கலாம்)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Dr.S.Soundarapandian likes this post
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்க பள்ளிகளுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்களுக்கு இணையம் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழைகளாக உள்ளதால், அவர்களிடம் மொபைல், லேப்டாப், டெஸ்க்டாப் போன்றவை இல்லை.
இதனால் அவர்களால் இணையவழி வகுப்புகளில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்று வருகின்றனர். இணையம் மூலம் வகுப்பு நடத்துவோர் முறையாக வகுப்புக்கான கால அட்டவணையை வாட்ஸ்அப் மூலம் அனுப்பிவிடுகின்றனர். இதனால் அவர்கள் வகுப்புகளை முறையாக கவனிக்கின்றனர்.
ஆனால் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் கல்வி தொலைக்காட்சியில் வரும் கால அட்டவணையை முறையாக கண்காணிப்பதில்லை. இதனால் வகுப்புகளை முறையாக கவனிப்பதில்லை.
இதையடுத்து #தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி தலைமைஆசிரியர் சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்கள் கண்ணில்படும்படி கல்வித் தொலைக்காட்சி கால அட்டவணையை ஒட்டி வருகின்றனர்.
மேலும் பாட ஒப்படைகள் (வீட்டு பாடம்) முறையாக செய்கின்றனரா என்பதையும் வீடு, வீடாக சென்று கண்காணித்து வருகின்றனர். இது பெற்றோரிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Dr.S.Soundarapandian likes this post
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
நன்றி சிவா அவர்களே!

சிவா likes this post
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
மேற்கோள் செய்த பதிவு: 1349193Dr.S.Soundarapandian wrote:நான் சிவகங்கை மாவட்டக்காரன் என்ற முறையில் , இப் பதிவு கூடுதல் மகிழ்ச்சி தருகிறது!
நன்றி சிவா அவர்களே!
![]()
நீங்களுமா? மகிழ்ச்சி.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Dr.S.Soundarapandian likes this post
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்

வழக்கமாக அலுவலகங்களில் கோப்புக்கள் தயாரிக்கும் போது அதில் திருத்தம் இருந்தால் அல்லது தவறு இருந்தால் அவற்றை கிழித்து விட்டு புதியதாக ஆவணங்கள் தயார் செய்யப்படும். வேண்டாதவற்றை கிழித்து குப்பை தொட்டியில் போடுவார்கள்.
அதுபோல் தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் தொடர்பான ஆவணங்கள், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்பது தொடர்பான கடிதங்களிலும் தவறுகள் இருந்ததால் அதற்கு பதிலாக வேறு கடிதங்கள் புதிதாக தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு விட்டது. இந்த ஆவணங்களை கிழித்து குப்பை தொட்டியில் போட்டு இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் அப்படியே போட்டுள்ளார்கள். இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Dr.S.Soundarapandian likes this post
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
தேவகோட்டை அருகே உள்ள சண்முகநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்தபெருமாள்(வயது 60). தொழில் அதிபர். இவரது தந்தை சேவுகன். இவருடன் உடன்பிறந்த சகோதரர்கள் 4 பேர். இவர்களுக்கு சொந்தமான பொது சொத்துக்கள் உள்ளன.
இந்த சொத்துக்கள் பிரிவினை ஆகாமல் இருந்தது. இந்த சொத்துக்களை போலி ஆவணங்கள் தயாரித்து பெத்தபெருமாள் உறவினரான வீரப்பன் என்பவர் சண்முகநாதபுரத்தை சேர்ந்த காளிமுத்து என்பவருக்கு விற்றதாக கூறப்படுகிறது.
இதற்கு தேவகோட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் ராமநாதனும் உடந்தையாக இருந்ததாராம். இதுகுறித்து ஆறாவயல் போலீஸ் நிலையத்தில் பெத்த பெருமாள் புகார் செய்தார். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் வீரப்பன், காளிமுத்து, ராமநாதன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Dr.S.Soundarapandian likes this post
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
இளையான்குடி அருகே உள்ள பகைவரை வென்றான் கிராமத்தைச் சோ்ந்த கவிதா என்பவா் தனது குழந்தைகளுடன் புதன்கிழமை அளித்துள்ள மனு விவரம்:
எனது கணவா் ஜெயக்குமாா் (42) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மலேசியா நாட்டுக்கு வேலைக்குச் சென்றாா். கரோனா பரவல் காரணமாக வேலையில்லாததால், அவா் நாடு திரும்புவதற்கு பல்வேறு முயற்சி மேற்கொண்டாா். இருப்பினும் அவரால் இந்தியாவுக்கு வர முடியவில்லை.
எனவே, வெளிநாட்டில் உள்ள தனது கணவரை மீட்டுத் தர வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Dr.S.Soundarapandian likes this post
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
நன்றி சிவா அவர்களே !
சிவா likes this post
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்





* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 32595
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 12054
சிவா likes this post
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியை சேர்ந்தவர், மகாலிங்கம் (வயது 42). இவர் தேவகோட்டை ரஸ்தா அருகில் வெல்டிங் பட்டறை நடத்தி வந்தார்.
இவர் நேற்று காலை 8 மணி அளவில் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தனது பட்டறைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை 3 பேர் ஒரு வேனில் பின்தொடர்ந்தனர். அங்குள்ள ஒரு கல்லறைத்தோட்டம் அருகே சென்றபோது மகாலிங்கத்தை வழிமறித்த அவர்கள் வேனிலிருந்து இறங்கினர். கண் இமைக்கும் நேரத்தில் பட்டா கத்தியால் மகாலிங்கத்தை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் துடித்துடித்து இறந்தார். பின்னர் அவர்கள் அதே வேனில் தப்பிச் சென்றனர்.
2 பேர் போலீசில் சரண்
இது பற்றி தகவல் அறிந்ததும் காரைக்குடி தெற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கல்லல் செல்லும் வழியில் கீரணிப்பட்டி அருகே சாலையோரத்தில் நின்றிருந்த வேனை போலீசார் கைப்பற்றி விசாரித்தனர்.
இந்த நிலையில் தேவகோட்டை சிவன் கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக் (34) சுந்தரபாண்டியன் (21) ஆகிய 2 பேர் இந்த கொலை வழக்கில் காரைக்குடி தெற்கு போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதில் தொடர்புடைய மற்றொருவரான மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார். இது குறித்து காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை சூப்பிரண்டு வினோஜி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பெண் தொடர்பான பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதமே இந்த கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. கொலையான மகாலிங்கத்துக்கு மனைவியும், 10-ம் வகுப்பு படிக்கும் மகனும், 8-ம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
செலுகை கிராமத்தைச் சோ்ந்த வேலு மகன் பெத்து என்ற தென்னரசு (29). இவரும், இவரது சகோதரா் காளிதாஸ் (31), உறவினா்களான சுரேஷ் (32), கணேசன் (34) ஆகிய 4 பேரும் சனிக்கிழமை மாலை செலுகை கிராமத்தில் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனராம்.
அப்போது அங்கு வந்த சில மா்ம நபா்கள் பெத்து என்ற தென்னரசுடன் தகராறில் ஈடுபட்டு, அவரையும், அவருடன் வந்த மற்ற 3 பேரையும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனா்.
இதில் பலத்த காயமடைந்த பெத்து என்ற தென்னரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மற்ற மூவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக தேவகோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில் சிவனூரைச் சோ்ந்த தங்கவேலு மகன் மணிகண்டன் (40), செலுகை கிராமத்தைச் சோ்ந்த காளிமுத்து மகன் பெத்து (35) ஆகிய இருவரும் தொழில் போட்டியில் இந்த கொலையை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, மணிகண்டன், பெத்து ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிந்த தேவகோட்டை தாலுகா போலீஸாா் அவா்கள் இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
மனைவியை கிண்டல் செய்ததால் வாலிபரை குத்தி கொன்றதாக உறவினருடன் கைதானவர் போலீசில் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வாலிபர் படுகொலை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே உள்ள செலுகை கிராமத்தை சேர்ந்த வேலு மகன் தென்னரசு(வயது 22). பக்கத்து கிராமமான சிவனூரை சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவர்கள் 2 பேரும் பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு ஓட்டி வந்தனர். இதனால் இருவருக்கும் இடையே தொழில் போட்டி இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தென்னரசு, அவரது அண்ணன் காளிதாஸ், நண்பர்கள் இளங்குளம் கணேசன், குருப்புலி சுரேஷ் ஆகியோர் செலுகையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மணிகண்டன் மற்றும் அவரது உறவினர் பெத்து (35) ஆகியோர் இவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் இருதரப்பினரும் மோதி கொண்டனர். இந்த சம்பவத்தில் தென்னரசு கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். மற்ற 3 பேருக்கும் கத்திக்குத்து விழுந்தது. உடனே அங்கிருந்து மணிகண்டன், பெத்து ஆகியோர் தப்பி ஓடி விட்டனர்.
மனைவியை கிண்டல் செய்ததால்..
படுகாயம் அடைந்த மற்ற 3 பேரும் திருவாடானை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கொலை செய்யப்பட்ட தென்னரசு உடலை கைப்பற்றிய தேவகோட்டை தாலுகா போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிைலயில் கொலை வழக்கு தொடர்பாக தப்பி ஓடிய மணிகண்டன், பெத்துவை போலீசார் கைது செய்தனர்.
போலீசில் பெத்து அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் ஏற்கனவே திருமணமான பெண்ணை திருமணம் செய்து இருந்ததால் தென்னரசுவும், அவரது நண்பர்களும் கிண்டல் செய்து வந்தனர். சம்பவத்தன்று இதை எனது அக்காள் தட்டி கேட்டார். இதில் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த நான், உறவினர் மணிகண்டனுடன் சேர்ந்து மனைவியை கேலி செய்த ஆத்திரத்தில் தென்னரசுவை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டோம். தடுக்க வந்தவர்களையும் கத்தியால் தாக்கி விட்டு தப்பி விட்டோம் என்று கூறி இருந்தார். இதையடுத்து கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
காரைக்குடி பகுதியில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடு, மாடு, கோழி, மீன், நண்டு, வெள்ளைப்பன்றி போன்ற இறைச்சி விற்பனை அதிகமாக இருக்கும். அதனை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதும். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் இறைச்சிக்காக அலைமோதியது.
இந்த நிலையில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள் குழு மற்றும் நகராட்சி சுகாதார அதிகாரிகள், போலீசார் இறைச்சி கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
நகராட்சி மீன் அங்காடி, கழனிவாசல், வாட்டர் டேங்க், பர்மா காலனி, சந்தைப்பேட்டை, கீழ ஊருணி, செஞ்சை, அரியக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ரசாயனம் தடவிய மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
மீன்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்காக சில வியாபாரிகள் மீன்களில் ரசாயனத்தை தடவி விற்பனை செய்வது வழக்கம். இவை உடல் நலத்திற்கு மிகவும் கெடுதலானது. இதைத் தொடர்ந்து ரசாயனம் தடவிய 100 கிலோ மீனை டாக்டர் பிரபாவதி பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். அதன்படி மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த மீன்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து உணவு பாதுகாப்பு குழுவினர் நகரின் பல்வேறு இடங்களில் சோதனைகளை தொடர்ந்தனர். அப்போது தடை செய்யப்பட்ட 1 கிலோ பாலிதீன் பைகளை நகராட்சி சுகாதார அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
Re: சிவகங்கை மாவட்டச் செய்திகள்
தேவகோட்டை அருகே இஸ்திர்க்கோட்டையை சேர்ந்த மாயழகு மகன் ராஜீவ்காந்தி. இவருக்கும் வடுகனி கிராமத்தை சேர்ந்த ராதிகா (வயது30) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.தற்போது ராதிகா அவரது தாய் வீட்டில் தனது குழந்தையுடன் வசித்து வருகிறார். கணவன்-மனைவிக்கு இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ராதிகா தேவகோட்டையில் உள்ள பஸ் நிலையம் அருகில் தையல்கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று தேவகோட்டை செல்ல வடுகனி பஸ் நிறுத்தத்தில் ராதிகா காத்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ராஜீவ்காந்தி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராதிகாவை வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் காயம் அடைந்த அவரை தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜீவ்காந்தியை தேடி வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|