புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10 
3 Posts - 6%
Baarushree
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10 
2 Posts - 4%
prajai
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10 
2 Posts - 4%
சிவா
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10 
1 Post - 2%
viyasan
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10 
1 Post - 2%
Rutu
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10 
2 Posts - 15%
Rutu
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_m10பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு


   
   

Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jun 23, 2014 7:14 pm

First topic message reminder :

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு

சஹானா சாரல் தூவுதோ   என்று பாடிக்கொண்டே , வீட்டினுள் ஆனந்த் (மகன் )நுழைந்தான் .
பஹாமாஸ் நம்மை அழைத்ததோ ? என்று அவனை வரவேற்றேன் .

என்ன திவ்யா (பேத்தி )எல்லாத்தையும் சொல்லிடுத்தா ? என்றான் .
திவ்யா (10 வயது ) ரகசியம் என்று கூறி எல்லா விஷயத்தையும் கூறி விடுவாள் .
கடந்த முறை வந்த போது ஒரு சித்திரம் வரைந்து , ரகசியம் -என்று கூறி , கண் எதிரிலேயே ,
எங்கள்  பெட்டியில் வைத்து  ஊருக்கு போய்  பார்க்கவும் என்றவள் ,
படத்தில் உங்கள் இருவர் படமும் இருக்கிறது வரைந்து  இருக்கிறேன்
ஊருக்கு போய் பார்க்கணும் என்று கூறி , பெட்டியில் இருந்து எடுத்து காண்பித்து
அழகாக வரைந்து இருக்கேனா ,தாத்தா  ? என்று கேட்டவள், உடைத்த குட்டுதான் இதுவும்.

பஹாமாஸ் எங்கே இருக்கு ? எப்போ போறோம் ? என்று ,மனைவி வினவ ,  
டல்லஸ்(டெக்சாஸ் ) சிலிருந்து தென் கிழக்கே ப்ளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை இருக்கிறது . அங்கெ இருந்து தெற்கு நோக்கி போனால் கரிபியன் தீவுகள் , வட அட்லாண்டிக் சமுத்திரத்தில் பல தீவு கூட்டங்கள் இருக்கின்றன . செயின்ட் மார்டீன் ,செயின்ட் தாமஸ் , பஹாமாஸ்  முதலிய தீவுகள் உண்டு. அலை இல்லா ஆழமில்லா சுத்தமான கடல். மீன்கள் கிளிஞ்சல்கள் அழகிய கூழாங்கற்கள் நீரின் அடியில் கண்ணுக்குத் தெரியும் . கேட்டால் ஏதோ மாதிரி இருக்கும். ஆனால் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்க மாட்டோமா என்று இருக்கும் .
ஜூன்  7 , சனி அன்று கிளம்பி ஜூன் 14 தேதி திரும்புவோம் சனிக்கிழமை கிளம்பி மறு சனிக்கிழமை
வரை கடல் வாசம்  என்றான் ஆனந்த்.
8 நாட்கள் படகுலே என்ன பண்ணறது ,வெயில் ,மழை, காத்து ஹூஹ்மும் நான் வரவில்லை என்று
கூறிவிட்டாள் , மனைவி.

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 SBjxqaldR2MDqe8IbH4t+Norwegian_Getaway_2014-01-11
படகு இல்லை, அம்மா,புதிய கப்பல் , மொத்தம் 16 அடுக்கு மாளிகை , தனி தனி ரூம் , 4000 பேர் பயணிக்கலாம் , கப்பலை சரியான முறையில் கொண்டு செல்ல கேப்டன் (விஜயகாந்த் இல்லை ) , டீம் ,சமையல் ,ரூம்களை ,வசதிகளை சரிபார்க்க ஆட்கள் என 1680 பேர்கள். 8 நாளில் 3 நாட்களில் மூன்று தீவுகள் , நாள் முழுதும் விளையாட்டு போட்டிகள் முதலியன , 8 நாள் போய்  விட்டு வந்து திரும்பவும் போலாமா என்று கேட்பாய் என்று கூற , ஓகே  ஆனது.
இதன் நடுவே பஹாமாஸ் இறங்கி சுற்றிப் பார்க்க , விசா வேண்டி , எங்கள்  பாஸ்போர்ட்  அனுப்பவேண்டிய அவசியம் . மயாமியில் அவர்கள் தூதரகத்துக்கு அனுப்பி ,திரும்பி பெற 12 நாட்கள் . போதிய அவகாசம் இருந்தது . அமெரிக்க பிரஜையான மகன், மருமகள் ,பேத்திக்கு பஹாமாஸ் போக விசா அவசியம் இல்லை. அங்கிகரிக்கப்பட்ட போட்டோ id  இருந்தால் போதுமானது .

எல்லா ஏற்பாடுகளும் நல்ல முறையில் நடந்து கொண்டு இருக்கும் நிலையில் , நடக்கக்கூடாதது  , நடந்தது.--
மனம் போன போக்கிலே ,கால் போகலாமா என்ற கவிஞர் வரிகள் நினைவில் உசலாடியது.

(கப்பல் மேலும் முன்னேறும் )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 21, 2014 1:40 pm

அருமை ஐயா சொர்க்கத்தில் இருந்தது போல் இருக்கிறது உங்களின் வர்ணனை...

எங்கே போனாலும் விடாது கருப்பு போல ஏதாவது ஒரு விஷயம் எங்களை நினைவுபடுத்தியது பெருமை.


இன்னும் தொடரட்டும்...............



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 22, 2014 9:11 pm

தல யுடன் சந்திப்பு .
விளையாட்டுகள் , எல்லா வயதினருக்கும் தேவையான விளையாட்டுகள் . முதியவர் ,நடுத்தர வயதினர் ,இளம்வயதினர் ,குழந்தையர்களுக்கு ஏற்ற விளையாட்டுகள்
நீச்சல் தவிர , ஸ்கை  வாக்கிங், wall scaling , trampoline ,மினி Golf ,பிங்க்பாங் , செஸ் , fitness  மையம் ,
Spa ,Detox மையம் ,Bingo கார்டு விளையாட்டு , அதை தவிர Casino , அதில் விளையாட்டுகள் . ( சூதாட்டம் என்றே கூறலாம் --காசு பேசுகிறது )
கற்றுக்கொள்ள பியானோ , Jive , Salsa ,Samba, Rummba  வகுப்புகள் .
உங்களை சகல விதத்திலும் ஈடுபடவைக்கக்கூடிய விளையாட்டுகள் . நாம் தான் தேவை அறிந்து ,தேர்ந்து எடுத்து , ஈடுபடவேண்டும் .

சில போட்டோக்கள் ,பார்வைக்கு .
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 4AemBhJSS4WqzidOSnyk+DSC_0006
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 OPzaZNsPSbe5SXs77g40+DSC_0036
பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 9p4v8vgzT6GqXlWGW6TY+DSC_0065

பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 Is4PUz12RZ2bXAcwbjAD+DSC_0067

அன்று காலை 1015 மணிக்கு டேக் 8 இல் கேப்டனுடன்    சந்திப்பு
ஏற்கனவே கூறி இருந்த கப்பல் பற்றிய விஷயங்கள் அவர் கூறியதே .
இருப்பினும் இத்துடன் படித்தால் , கப்பலை பற்றிய முழுமை பெறும்  என நினைக்கிறன் .
கப்பலை பற்றிய சில விவரங்கள்.
நார்வேஜியன் கெட்டவே  (Getaway)என்ற பெயர் .எடை 146000 டன்ஸ், நீளம் 1070 அடி, அதிக பட்ச அகலம் ( Maximum beam )170 அடி டீசல் எலெக்ட்ரிக்  சக்தி , வேகம் 21.5 Nautical mile   (1 Nm =1.8 km) சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் , முழுதும் குளிரூட்டப்பட்ட (பரந்த வெளி டெக்குகள் தவிர ) கப்பல் .
முழுதும் கம்பளம் விரிக்கப்பட்ட தரைதளம் . 18 தளங்கள் . பயணிகள் இருப்பிடம் 8 முதல் 14 தளங்கள் வரை .கடலை பார்த்த அறைகள் ,உட்பக்க அறைகள் , ஒருவர் , இருவர், இருவர் குழந்தைகளுடன் , மூன்று , நான்கு பேர் தங்கும் வசதிகளுடன் அறைகள் .  கப்பலின் முன்பக்கம் ஒன்று, பின் பக்கம் ஒன்று என ரெண்டு லாபிகள் . ஒவ்வொரு லாபியிலும் 6 லிப்ட்கள் பயணிகள் முழு கொள்ளளவு 3969. எப்போதும் மிளிரும் உயிருள்ள நட்பு புன்னகையுடன்  சிப்பந்திகள் /அதிகாரிகள் 1648
கப்பல் MeyerWerft  GMBH  ஜெர்மனியில் கட்டப்பட்டு  ஜனவரி 2014 , உரிமையாளர்கள் வசம் சௌதாம்ப்டன் ,ரொட்டெர்டெம்மில் கொடுக்கப்பட்டது, . Bud Light   "ஒளிரும் விளக்கு " என்ற செல்லப் பெயருடன்   , நியுயார்க் வந்து , பெப்ரவரி மாதம் மியாமி துறைமுகம் வந்தது . 3 பரிசோதனை ஓட்டங்களுக்கு பிறகு வியாபார ரீதியாக பயணிகளை ஏற்றி செல்ல ஆரம்பித்தது Getaway  என்று பெயர் சூட்டப்பட்டது  .தற்போது ஒவ்வொரு சனி மாலை  மியாமியில் கிளம்பி, செயின்ட் மார்டின் ,செயின்ட் தாமஸ் (us virgin islands ), பஹாமாஸ் சுற்றுலா சென்று சனியன்று காலை மியாமி வந்தடைகிறது . அன்று மாலையே அடுத்த பயணம் . இடைவெளி கிடையாது ,தொடர்ந்து உல்லாச பயணிகளின் தேவைக்காகவே  அர்பணிக்க படுகின்ற சேவை. எங்கள்  சமையல் அறையில் , அடுப்பு எரிந்து கொண்டே இருக்கிறது . அணைப்பது இல்லை . உல்லாச பயணிகளை , உள்ளே வரவேற்பதில் இருந்து பிரியா  விடை  அளிக்கும் வரை ,காலியான வயிறுடன் இருப்பதை நாங்கள் விரும்புவதில்லை என்றார் . (வள்ளலார் வழித்தோன்றல்களோ  என நினைத்துக் கொண்டேன்) .  
2015 முதல்  இக்கப்பல் பஹாமாஸ் ,ஜமைக்கா ,ஜியார்ஜ் டவுன் ,மெக்ஸிகோ  என்று எங்களுடைய EPIC  என்ற கப்பல் போகின்ற தடத்தில் செல்ல போகிறோம் என்றார் .
வேறு சந்தேகங்கள் , நான் பதில் அளிக்கக்கூடிய , கேள்விகள் வரவேற்கப்படுகின்றன என்றார், தமாஷாக -Jovial Captain .

பல கேள்விகள் -பதில்கள்  உலா வந்தாலும்  என்னை கவர்ந்த கேள்விகள்  .

கடல் நடுவில் ( இறங்கி கப்பலை தள்ள முடியுமா என்று கானா பாலா வின் சந்தேகத்தை யாரும் கேட்கவில்லை ) , எல்லா திசைகளிலும் நீர் . போகவேண்டிய இடம் எப்படி போகிறீர்கள் .?
பழைய நட்சத்திர  நிலை கண்டு திசை  அறிதல் தொடங்கி ,திசை மானி ,wireless வரை வந்து ,இப்போது எல்லாம் satellite மூலம் குளோபல் positioning system (GPS ) ரொம்பவே முன்னேற்றமடைந்த வழிமுறைகள் என்றார் .

எங்கள் கூடவே வந்த பேத்தி திவ்யா ,
" Captain , one Doubt , when you are all here , who will take care of the ship ? "
Captain: "Good question, young lady. When I was your age and travel by flight and whenever the pilot comes out of cockpit, I had similar doubts."
கேப்டன் என்ற முறையில் கப்பலை திறமையாக செலுத்துதல் அவசியமான ஒன்று என்றாலும் , மற்ற செயல்பாடுகள் , வழி நடாத்துதல் , பயணிகள் சௌகரியங்கள் , உணவு தேவைகள் , உல்லாச கேளிக்கைகள் ,குழந்தைகள் விளையாட்டு தேவைகள் , பாதுகாப்பு விதிகள் ,சரியாக செயல்படுத்தப்படுகின்றனவா, பயணிகளுடன் ஒன்று இணைந்து அவர்களில் நானும் ஒருவனே என்ற எண்ணத்தை உருவாக்குதல் எந்தன் கடமை . அதே சமயம் எல்லா இடத்திலும் 100% கவனம் செலுத்த முடியாது என்பதால் ,என் இடத்தை செவ்வனே நிரப்பக்கூடிய  தேர்ந்து எடுக்கப்பட்ட அதிகாரிகள்  உள்ளனர் என்றார்


நன்றி கூறி கேப்டன் விடை பெற்றாலும் , மனதில் பதிந்தது ஒன்று .

இரு கரை நடுவே கப்பல் செலுத்தும் கேப்டனும் அவருடன் கூட இருக்கும் சிறப்பு மிக்க அதிகாரிகளும் , நற்பெயர் பெற எவ்வளவு உழைக்கிறார்கள் என்பதை அறிகையில்,ஈகரை யை செவ்வனே நடத்தி செல்லும் சிவாவும் சிறப்பு மிக்க தலைமை நடத்துனர்கள் ராஜா ,பாலாஜி ,இனியவன் ஆதிரா போன்றோரின் உழைப்பு ---கேப்டனின் கூற்றை பிரதிபலித்தது .

இரு கரை நடுவே கப்பல் செலுத்தும் கேப்டனும்  ஒரு சிவாவே
ஈகரைதனை நடத்தும் சிவாவும் ஒரு கேப்டனே



ரமணியன்


பறக்கும் விமானத்தை கையால் தொடுவோம் அடுத்து



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Jul 23, 2014 2:57 pm

நார்வேஜியன் கெட்டவே - பிரமிப்பு + பிரம்மாண்டம்.

உல்லாச பயணிகளை , உள்ளே வரவேற்பதில் இருந்து பிரியா  விடை  அளிக்கும் வரை ,காலியான வயிறுடன் இருப்பதை நாங்கள் விரும்புவதில்லை என்றார் . (வள்ளலார் வழித்தோன்றல்களோ  என நினைத்துக் கொண்டேன்) .

 சூப்பருங்க  சூப்பருங்க 

ஈகரை யை செவ்வனே நடத்தி செல்லும் சிவாவும் சிறப்பு மிக்க தலைமை நடத்துனர்கள் ராஜா ,பாலாஜி ,இனியவன் ஆதிரா போன்றோரின் உழைப்பு ---கேப்டனின் கூற்றை பிரதிபலித்தது .

இரு கரை நடுவே கப்பல் செலுத்தும் கேப்டனும்  ஒரு சிவாவே
ஈகரைதனை நடத்தும் சிவாவும் ஒரு கேப்டனே

 பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 3838410834



பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jul 23, 2014 3:29 pm

T.N.Balasubramanian wrote: நம்மை பழக்கப்படுத்தி ,  கவிதை ரூபத்தில் தன்  கதை கூறி, நம்மை உருக வைத்த MM செந்தில் . சிறப்பு கவிஞர் , மனத்திரையில் தோன்றினார்.  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1074670

அய்யா, நன்றி.

ஈகரையில் என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்த நீங்கள், கடல் வழி உல்லாச பயணத்திலும் நினைத்துள்ளீர்கள் எனும் போது மகிழ்ச்சி.. ஒரு குடும்ப நபராய் பெருமைப் படுகிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 23, 2014 6:36 pm

கானா பாலா மாதிரியே நம்ம சிவாவும் நல்லாவே கானா பாடுவார் அய்யா - நீங்க கேட்டதில்லையா?

வார இறுதியில் சுருதி சேர்த்து தாளம் தப்பாம நல்லா பாடுவார் - திங்கள் முதல் வெள்ளி வரை இவரை தபலா போல பாவித்து வாசிக்க ஒரு கூட்டமே கூடிடும் டும் டும் டும்...




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 23, 2014 7:40 pm

இன்று தான்படித்தேன் ஐயா புன்னகை அருமையான நடை, தொடருங்கள் படிக்க காத்திருக்கோம் புன்னகை  ரிலாக்ஸ் ரிலாக்ஸ் 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 25, 2014 6:49 am

M.M.SENTHIL wrote:
T.N.Balasubramanian wrote: நம்மை பழக்கப்படுத்தி ,  கவிதை ரூபத்தில் தன்  கதை கூறி, நம்மை உருக வைத்த MM செந்தில் . சிறப்பு கவிஞர் , மனத்திரையில் தோன்றினார்.  

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1074670

அய்யா, நன்றி.

ஈகரையில் என் வாழ்க்கையை திரும்பிப் பார்த்த நீங்கள், கடல் வழி உல்லாச பயணத்திலும் நினைத்துள்ளீர்கள் எனும் போது மகிழ்ச்சி.. ஒரு குடும்ப நபராய் பெருமைப் படுகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1075424

சில விஷயங்கள் அடி மனதில் பதிந்து இருக்கும் .
சமயம் வரும்போது கிளர்ந்து மேலெழும் .
அது போல் தான் இதுவும் .
ஈகரையுடன் இணைய முடியாது இருந்த நாட்கள் .
கண்ணில் (கணினி ) இருந்து மறைந்து இருந்தாலும் ,
கருத்தில் இருந்து மறையா ஈகரையும் உறவுகளும்
நன்றி .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 25, 2014 6:52 am

யினியவன் wrote:கானா பாலா மாதிரியே நம்ம சிவாவும் நல்லாவே கானா பாடுவார் அய்யா - நீங்க கேட்டதில்லையா?

வார இறுதியில் சுருதி சேர்த்து தாளம் தப்பாம நல்லா பாடுவார் - திங்கள் முதல் வெள்ளி வரை இவரை தபலா போல பாவித்து வாசிக்க ஒரு கூட்டமே கூடிடும் டும் டும் டும்...
மேற்கோள் செய்த பதிவு: 1075455
அப்படியா , அடுத்த முறை மலேசியா போகும்போது ரசிக்க வேண்டியது தான்
அல்லது இங்கு வரும்போது ,கோழி அமுக்குவது போல் அமுக்கவேண்டியது தான்


ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 25, 2014 6:58 am

விமந்தனி wrote:நார்வேஜியன் கெட்டவே - பிரமிப்பு + பிரம்மாண்டம்.

உல்லாச பயணிகளை , உள்ளே வரவேற்பதில் இருந்து பிரியா  விடை  அளிக்கும் வரை ,காலியான வயிறுடன் இருப்பதை நாங்கள் விரும்புவதில்லை என்றார் . (வள்ளலார் வழித்தோன்றல்களோ  என நினைத்துக் கொண்டேன்) .

 சூப்பருங்க  சூப்பருங்க 

ஈகரை யை செவ்வனே நடத்தி செல்லும் சிவாவும் சிறப்பு மிக்க தலைமை நடத்துனர்கள் ராஜா ,பாலாஜி ,இனியவன் ஆதிரா போன்றோரின் உழைப்பு ---கேப்டனின் கூற்றை பிரதிபலித்தது .

இரு கரை நடுவே கப்பல் செலுத்தும் கேப்டனும்  ஒரு சிவாவே
ஈகரைதனை நடத்தும் சிவாவும் ஒரு கேப்டனே

 பஹாமாஸ் -கடல் வழிச்செலவு - Page 7 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1075412

நன்றி விமந்தினி ,
வர்ணனை ,மிகை ஒன்றும் இல்லை என நினைக்கிறேன் .
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 25, 2014 7:05 am

ஜாஹீதாபானு wrote:அருமை ஐயா சொர்க்கத்தில் இருந்தது போல் இருக்கிறது உங்களின் வர்ணனை...

எங்கே போனாலும் விடாது கருப்பு போல ஏதாவது ஒரு விஷயம் எங்களை நினைவுபடுத்தியது பெருமை.


இன்னும் தொடரட்டும்...............
மேற்கோள் செய்த பதிவு: 1075035

ஈடு இணை இல்லா ஈகரையின் மதிப்பே அதுதான் .

ரமலான் நோன்பு நன்முறையில் சென்று கொண்டு இருக்கும் என நம்புகிறேன் .
இப்போது , இங்கு எனது மகன் வீட்டிற்கு அடுத்த வீட்டில் ஒரு இஸ்லாமிய குடும்பம் உள்ளனர் .
சிறந்த நண்பர்கள் ரமலான் நோன்பு அனுசரிக்கின்றனர் .(அவர்களின் 8 வயது பெண் கூட .)

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 7 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக