புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 
53 Posts - 42%
heezulia
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 
304 Posts - 50%
heezulia
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 
21 Posts - 3%
prajai
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_m10 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது


   
   

Page 18 of 21 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20, 21  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Mar 08, 2014 12:16 pm

First topic message reminder :

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.

மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.

MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


--வெப்துனியா




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:37 am

காத்திருக்கும் உறவினர்கள் அலறல், அழுகை, ஆவேசம்!

காணாமல் போன மலேசிய விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் பீஜிங் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். ஏர்லைன்ஸ் திடீரென அவர்களை வீட்டிற்குச் செல்லுமாறும் விமானம் குறித்த தகவல்களை வீட்டிலிருந்தே தெரிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியது. இதனால் உறவினர்கள் ஆவேசத்தில் கூச்சலிட்டு, அலறி, அழுது தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

"நாங்கள் என்ஙே செல்வது?" என்கிறார் ஒரு உறவினர். "எங்கள் குடும்பத்தவர்களை யார் மீட்டுக் கொடுப்பார்கள்?" என்று மற்றவர்களும் உணர்ச்சிவசப்பட்டு மனம் உடைந்து அழத் தொடங்கியுள்ளனர்.

பீஜிங் விடுதியில் காணாமல் போன விமானப் பயணிகளை மலேசிய ஏர்லைன்ஸ் லிடோ என்ற விடுதியில் தங்க ஏற்பாடுகள் செய்திருந்தது. அதாவது மார்ச் மாதம் முதல் இவர்கள் இங்குதான் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த உதவி மையத்தை மூடுவதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் விமானம் குறித்த எந்த ஒரு உருப்படியான தகவலையும் மலேசிய அரசால் அளிக்க முடியவில்லை. இதனையடுத்தே உறவினர்களை விடுதியை காலி செய்து வீட்டிற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. பில் பழுத்து விடும் என்ற நிலையிலேயே விமான நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

மலேசியன் ஏர்லைன்ஸ் சி.இ.ஓ. இந்த அறிவிப்பை வீடியோ மூலம் வெளியிட்டபோது ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. பிறகு சீஅன் மொழிபெயர்பாளர் வந்து புரிய வைத்துள்ளார்.

தேடுதல் பணி தொடரும் பயணிகளை ஒருநாளும் மறந்து விடமாட்டோம் என்று சீஅன் மொழிபெயர்ப்பாளர் கூறிய பிறகே லிடோ விடுதியில் அமைதி திரும்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உறவினர்கள் உடைந்து போனதற்குக் காரணம் சீனாவின் சில இடங்களில் இன்னமும் இன்டெர்னெட் வசதி இல்லை, செய்தித் தொடர்புகளும் மிகவும் தாமதமாகவே வந்து சேர்கின்றனர்.

மலேசிய ஏர்லைன்ஸ் உயிர்ழந்தோர் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை கொடுக்கத் தொடங்கிவிட்டது. சர்வதேச உடன்படிக்கைகளின் படி உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 1,50,000 டாலர்கள் முதல் 1,75,000 டாலர்கள் வரை கொடுக்கவேண்டும், குடும்பத்தினர் மேலும் இழப்பீடு கோரி வழக்கு தொடரலாம். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 03, 2014 4:45 am

மலேசிய விமானப் பயணிகளுக்கு இறுதிச் சடங்கு: உறவினர்கள் அறிவிப்பு

கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பிய ஒரு மணி நேரத்தில் மாயமாக மறைந்தது.

ஆஸ்திரேலியாவின் தலைமையின் கீழ் எட்டு நாடுகள் விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் 50 நாட்களுக்கும்மேல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. இருப்பினும் பலன் எதுவும் கிட்டாத நிலையில் தேடுதல் வேட்டையை முடிவுக்குக் கொண்டு வந்ததாகவும், வரும் வாரங்களில் ஆழ்கடல் பகுதியில் தேடுதல் வேட்டையைத் தொடங்க தீர்மானித்துள்ளதாகவும் ஆஸ்திரேலியாவின் தேடுதல் ஒருங்கிணைப்பு மையம் கடந்த 30-ம் தேதி தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து பீஜிங்கிலும், கோலாலம்பூரிலும் ஆதரவு மையங்களில் காத்திருக்கும் உறவினர்களை உண்மை நிலையை ஏற்றுக்கொள்ளுமாறும், ஆதரவு மையங்களை தாங்கள் மூட இருப்பதாகவும் மலேசிய அரசு அறிவித்துள்ளது.

அந்நாட்டு துணை வெளியுறவுத்துறை அமைச்சரான ஹம்சா சைனுதின் காணமற்போன பயணிகளின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட உலக மக்கள் இதற்கான விடையை எதிர்பார்ப்பதாகவும், இதற்கான ஒரு அறிக்கை வெளிவர வேண்டிய தருணத்திற்காக அனைவரும் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனினும், பயணிகளின் உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஊர்களுக்குத் திரும்பச்சென்று இந்த பதில்களுக்காகக் காத்திருக்குமாறும் அவர் கூறினார்.

தேடல் நிகழ்வுகள் குறிப்பிட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும் என்றும், தகுதியானவர்களுக்குத் தகுந்த இழப்பீடு அளிக்கப்படும் என்றும் மலேசிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பீஜிங் மையத்தில் உள்ள சில குடும்பங்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பியுள்ள நிலையில் சிலர் வெளியேற மறுக்கின்றனர். சில பயணிகளின் உறுப்பினர்கள் இந்த வார இறுதியில் அவர்களுக்கான இறுதி சடங்குகளை செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

எட்டு வாரங்கள் கடந்த நிலையில் காணாமற்போன பயணிகளுக்காக நடத்தப்படும் முதல் சடங்கு நிகழ்வுகள் இவையாகும் என்று தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 12:23 am


எம்எச்370 – தீராத சர்ச்சையும் சந்தேகமுமாகத் தொடரும் டன் கணக்கான மங்குஸ்தீன், கல்லியம் மின்கல சரக்குப் பட்டியல்

காணாமல் போன எம்.எச். 370 விமானம் குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து, அந்த அறிக்கையிலிருந்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

எம்எச் 370இல், 4,566 டன் மங்குஸ்தீன் பழங்கள் ஏற்றப்பட்டன என அறிக்கையோடு இணைக்கப்பட்டிருந்த சரக்குப் பட்டியல் தெரிவிக்கின்றது.

அந்த மங்குஸ்தீன், சரக்கு விவரப் பட்டியலின்படி அதன் மதிப்பு வெ.51,367.50 என்றும் அதை மலேசியாவைச் சேர்ந்த ஒருவர் பெய்ஜிங்கிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு அனுப்பும் வகையில் பதிவு செய்திருந்தார் என்றும் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

ஆனால், மங்குஸ்தீன் பழங்களோ நீண்ட நாட்களாக வைக்க முடியாத தன்மை கொண்டவை. பருவ காலப் பழமான இந்தப் பழம் மார்ச் மாதத்தில் மலேசியாவில் கிடைக்காது – அதுவும் டன் கணக்கில் கிடைக்காது என்பதுதான் அனைவருக்கும் எழுந்துள்ள முதல் சந்தேகம்.

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லியல் மின்கலம் குறித்த சர்ச்சைகள்

அத்துடன் கல்லியம் மின்மயத் துகள் (Lithium ion) மின்கலங்கள் (பேட்டரிகள்) 200 ஏற்றப்பட்டிருந்தன என்றும் சரக்குப் பட்டியல் விவரங்கள் தெரிவிக்கின்றன. அவற்றின் எடை 2,453 டன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் 200 மின்கலங்கள் அவ்வளவு எடையைக் கொண்டிருக்காது என்றும் தகவல் ஊடகங்கள் சந்தேகம் கிளப்பியுள்ளன. இதனால் இவற்றோடு வேறு பொருட்கள் ஏதும் சேர்க்கப்பட்டிருந்ததா, என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

அந்த கல்லியம் மின்மயத்துகள் மின்கலங்களின் மதிப்பு வெ.32,082,48 என்றும் அவை சீக்கிரம் தீப்பிடிக்கக் கூடிய அபாயமுள்ள பொருள் என்பதால் அவை கவனமாக கையாளப்பட வேண்டும் எனும் எச்சரிக்கை வாசகங்களோடு அவை ஏற்றப்பட்டன என்றும் சரக்குப் பட்டியல் விவரம் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையில்தான், இந்த சரக்குகளை ஏற்றியிருந்த எம்.எச். 370 விமானம் கடந்த மார்ச் 8இல் அதிகாலை 239 பயணிகளுடன் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குப் புறப்பட்ட போது காணாமல் போனது.

இதனால், சரக்குப் பட்டியலில் குறிப்பிடப்பட்டபடி உண்மையிலேயே மங்குஸ்தீன் பழங்களும் கல்லியம் மின்கலங்களும் ஏற்றப்பட்டனவா, அல்லது வேறு பொருட்கள் மறைமுகமாக ஏற்றப்பட்டனவா –

அப்படி ஏற்றப்பட்டிருந்தால் அந்த மர்மப் பொருட்கள் என்ன –

அந்த பொருட்களுக்கும், விமானம் காணாமல் போனதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா –

என்பது போன்ற சந்தேகங்களும், சர்ச்சைகளும் இன்னும் தொடர்கின்றன.



 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon May 05, 2014 11:47 am

மர்மம் என்று விலகும் என்றே தெரியவில்லை



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 11, 2014 3:12 am


எம்.எச்.370 : இந்தியப் பெருங்கடலில்தான் விழுந்ததா? துன் மகாதீரும் கேள்வி எழுப்புகிறார்!


எம்.எச். 370 விமானத்தைப் பற்றி இதுவரை வாய் திறக்காமல் மௌனம் காத்து வந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தற்போது தனது சந்தேகத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

மாஸ் நிறுவனத்தின் காணாமல் போன விமானம் எம்எச் 370 அதன் பயணத்தை உண்மையிலேயே இந்தியப் பெருங்கடலில் முடித்துக்கொண்டதா என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தனது வலைத் தளப் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவ்வளவு பெரிய விமானம் பல துண்டுகளாக உடையாமல் அப்படியே ஆழ்கடலில் மூழ்க முடியுமா என டாக்டர் மகாதீர் இன்று வெளியிட்ட தனது வலைப்பதிவில் கேட்டுள்ளார்.

“கண்ணாடி, அலுமினியம், டைட்டானியம், கூட்டுப் பொருட்களினால் ஆன கனமான அவ்விமானம் கடலினுள் மூழ்கி உடையாமல் இருக்குமா?” என்றும்,

“கடல் அமைதியாக இருந்தால்கூட அந்த விமானம் உடைந்திருக்கும். ஆனால், அந்த விமானம் உடையாமல் அப்படியே மூழ்கியிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. அது சாத்தியமா?” என்றும் மகாதீர் கேள்விக் கணைகள் தொடுத்துள்ளார்.

“ஆனால், இது நாள்வரை அவ்விமானம் உடைந்ததைக் குறிக்கும் அறிகுறி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை” என்றார் துன் மகாதீர்.

போயிங் நிறுவனமும் காரணமா?


எம்எச்370 காணாமல் போன விஷயத்தில் அவ்விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கு எதிராகவும் துன் மகாதீர் குறைகூறலைத் தொடக்கியுள்ளார்.

அவ்விமானத்தின் தகவல் தொடர்பு சாதனம் செயலிழந்து போனதற்கு அவ்விமானத்தைத் தயாரித்த நிறுவனத்தைப் பொறுப்பாக்க வேண்டும் என்றும் விமானம் காணாமல் போன விஷயம் தொடர்பில் அது மௌனம் சாதிப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.

“இவ்விஷயத்தில் போயிங் மிகவும் அமைதியாக உள்ளது. தனது விமானத்தில் தகவல் தொடர்பு முறையும் விமான இருப்பிடத்தை கண்காணிக்கும் முறையும் எப்படி செயலிழக்கக்கூடும் என்பது குறித்து அந்நிறுவனம் விளக்கம் ஏதும் தரவில்லை” என்றும் துன் மகாதீர் தனது வலைப் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவ்விமானத்தைக் கண்டுபிடிக்கும் வரை, அதன் தகவல் தொடர்புத் துறை எவ்வாறு செயலிழந்தது என்பதைத் தீர்மானிக்கும் வரை போயிங் விமானங்கள் பயணம் செய்ய ஆபத்தானவை என அனைவரும் முடிவெடுக்க வேண்டும் என்றும் தனது வாதத்தை தனது கட்டுரையில் துன் மகாதீர் முன் வைத்துள்ளார்.




 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Sun May 11, 2014 3:36 pm

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 அல்ல...! மர்ம ஏர்லயன்ஸ் MH370...!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 14, 2014 2:38 am

மாயமான மலேசிய விமான தேடுதல் பணிக்கு ஆஸ்திரேலிய பட்ஜெட்டில் ரூ.501.88 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு


மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நகர் நோக்கி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த விமானம் நடுவானில் மாயமானது.  இதில், பயணம் செய்த 239 பேரின் நிலைமை தெரியவில்லை.  விமானத்தை தேடும் பணி தொடர்ந்து 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

ரூ.501.88 கோடி நிதி ஒதுக்கீடு

விமானத்தை தேடும் பணியில் ஆஸ்திரேலியா நாடும் ஈடுபட்டுள்ளது.  நீண்ட நாட்களாக தொடரும் தேடுதல் பணிக்காக கூடுதல் நிதியை ஒதுக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது.  இதற்காக ஆஸ்திரேலிய பட்ஜெட்டில் ரூ.501.88 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் நடைபெறும் தேடுதல் பணி தொடரும் நிலையில், அடுத்த 2 வருடங்களில் ரூ.334.96 கோடி நிதி ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு துறையிடம் வழங்கப்படும்.

கூட்டு கழக ஒருங்கிணைப்பு மையம்

கடந்த மார்ச் 30ந்தேதி அமைக்கப்பட்ட கூட்டு கழக ஒருங்கிணைப்பு மையம் அடுத்த இரு வருடங்களில் ரூ.11.16 கோடி விமான தேடுதல் பணிக்காக செலவிடும்.  இதேபோன்று விமான விமானங்கள் மற்றும் கப்பல்கள் ஆகியவற்றை அனுப்பி தேடுதல் பணி மேற்கொண்ட பாதுகாப்பு துறை ரூ.155.75 கோடி நிதியை அடுத்த இரு வருடங்களில் பெறும்.

விமான தேடுதல் பணிக்கான மொத்த செலவு தொகையானது எவ்வளவு காலம் அந்த பணி நடைபெறும் மற்றும் பிற நாடுகளால் எவ்வளவு பணம் வழங்கப்படும் என்ற அடிப்படையில் அமையும்.

கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Wed May 14, 2014 11:34 am

மாஸ் ஏர்லைன்ஸ் மர்ம ஏர்லைன்ஸ்   மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 3838410834 புன்னகை 



கிருஷ்ணா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 18, 2014 10:45 pm


“யாரோ எதையோ மறைக்கிறார்கள்” – போயிங் மீதும் சந்தேகத்தை எழுப்புகின்றார் மகாதீர்!

காணாமல் போன எம்.எச். 370 விமானம் குறித்து முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனது பிரத்தியேக இணையப் பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரையில், போயிங் நிறுவனத்திடமும் சி.ஐ.ஏ. எனப்படும் அமெரிக்க மத்திய உளவுத் துறையிடமும் கேள்வி எழுப்பப்பட வேண்டுமென்று அவர் கூறியுள்ளார்.

“யாரோ எதையோ மறைக்கிறார்கள். மாஸ் எனப்படும் மலேசிய ஏர் லைன்சின் மீதும் மலேசியா மீதும் மட்டும் பழிபோடுவது நியாயமல்ல. மாறாக, போயிங் மீதும் சிஐஏ மீதும் சந்தேகம் எழுகின்றது” என்ற தோரணையில் அவர் தனது இணையப் பக்கத்தில் எழுதியுள்ளார்.

போயிங் நிறுவனத்திற்கு தெரிந்திருக்கலாம்

“விமானங்கள் பாதுகாப்பாக தரையிறங்கலாம் அல்லது விபத்துக்குள்ளாகலாம். ஆனால், விமானங்கள் காணாமல் போவதில்லை. தற்போது மிகவும் சக்திபடைத்த தொடர்புத் துறை தொழில் நுட்பங்கள் மூலம் விமானங்களால் தடையின்றி செயல்பட முடியும்” என்று கூறியிருக்கும் மகாதீர்,

“விமானத்தின் தொடர்பு செயல்பாடுகள் வேண்டுமென்றே செயல் இழக்கச் செய்யப்பட்டுள்ளது. துணைக் கோளத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டிய விமானப் பயண பதிவுகள் எங்கே” என்றும் எழுப்பியுள்ளார்.

போயிங் நிறுவனம் காரணமா?

“எம்.எச்.370 விமானம் போயிங் 777 விமானமாகும். அதனைத் தயாரித்தது போயிங். ஆகவே விமானத்தின் தொடர்புத்துறை மற்றும் ஜி.பி.எஸ். எனப்படும் பயணப் பாதையைக் காட்டும் கருவிகளை விமானத்தில் பொருத்தியதும் போயிங்தான். அவற்றை செயல் இழக்கச் செய்தால் செய்தால் போயிங்கிற்கு நிச்சயம் அதுகுறித்து தெரியும். அவற்றை சுலபமாக செயல் இழக்கச் செய்யவும் முடியாது. விமானத்தை விமானியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து தானாக இயங்கச் செய்யும் தொழில் நுட்ப சாதனத்துக்கான உரிமத்தை போயிங் நிறுவனம் 2006ஆம் ஆண்டு பெற்றுள்ளது” என்றும் மகாதீர் தனது கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

“அதன்படி பார்த்தால் எம்.எச்.370 விமானக் கட்டுப்பாட்டை போயிங்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் வெளியில் இருந்தவாறு தங்களின் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ள முடியும். இந்த சூழ்நிலையில் விமான பாகங்களையும், எண்ணெய் கசிவுகளையும் கண்டுபிடிப்பது என்பது பண விரயம்தான்” என்றும் மகாதீர் சாடியுள்ளார்.

“பயங்கரவாத முறியடிப்புக்காக நிலத்தில் இருந்தவாறு விமானத்தைத் தானாக இயங்கச் செய்வதாக கூறப்படும் முறையை போயிங் விளக்க முன்வர வேண்டும். விமானிகள் கொந்தளிப்பான கடலில் தரையிறங்கினார்கள் என்பதை தம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை” என்றும் மகாதீர் தெரிவித்துள்ளார்.

“இந்த விவகாரத்தில் யாரோ எதையோ மறைக்கின்றார்கள். போயிங் அல்லது சி.ஐ.ஏ. பற்றி ஊடகங்கள் எதனையும் எழுத மாட்டார்கள் என்பதால், எனது இணையப் பக்கத்தில் இதைப்பற்றி எழுதியிருக்கின்றேன்” என்றும் மகாதீர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றார்.



 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Mon May 19, 2014 11:53 am

 மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது - Page 18 SHOT-down1905201401

லண்டன்,

'இராணுவ பயிற்சியின்போது மாயமான மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது' புத்தகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த பெண் சந்திரிகா சர்மா உள்பட 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8–ந்தேதி நடுவானில் மாயமானது. நடுவானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை.

இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற யூகத்தின் பேரில், ‘புளுபின்–21’ என்ற நீர்மூழ்கி ‘ரோபோ’வை கொண்டு நடந்துவரும் தேடுதல் வேட்டையிலும் பலன் இல்லை. மலேசிய விமானம் மாயமான விவகாரத்தில் ‘திடீர்’ திருப்பம் ஏற்பட்டது. இதில் அல்கொய்தா ஆதரவு தீவிரவாதிகள் 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தாய்லாந்து - அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சியின் போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்றும் பின்னர் இந்த தகவல் மூடிமறைக்கப்பட்டுள்ளது என்றும் மாயமான விமானம் குறித்து எழுதப்பட்ட புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த உறவினர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது குறித்து புத்தகம் வெளி வந்துள்ளது.

"விமானம் MH370: மர்மம்" என்ற புத்தகம் ஆஸ்திரேலியாவில் விற்பனைக்கு வருகிறது என்று இணையதள தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனை சேர்ந்த ஆங்கிலோ அமெரிக்க பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் நைஜல் கவ்தோர்னெ இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அவர்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்று கிட்டத்தட்ட நிச்சயமாக எதுவும் தெரிந்திருக்காது என்று கவ்தோர்னெ தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தை சேர்ந்த ஆயில் ரிக் தொழிலாளி மைக் மெக்கே நேரடியாக நடந்த சம்பவத்தை பார்த்ததாக குறிப்பிட்டு இந்த புத்தகத்தில் நைஜல் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். மாயமான மலேசிய விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்ததை அடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் மாயமானபோது தெற்கு சீன கடலில் தாய்லாந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் மற்ற பணியாளர்கள் இணைந்து போர் பயற்சி நடத்தினர். அப்போது விமானம் ஒன்று எரிந்து தாய்லாந்து வளைகுடா பகுதியில் விழுந்ததை மைக் மெக்கே பார்த்துள்ளார் என்று இரண்டையும் ஒப்பிட்டு கவ்தோர்னெ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பயிற்சியின் துப்பாக்கி சூடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


-- dinathanthi

Sponsored content

PostSponsored content



Page 18 of 21 Previous  1 ... 10 ... 17, 18, 19, 20, 21  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக