புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10 
14 Posts - 70%
heezulia
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10 
8 Posts - 2%
prajai
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10 
4 Posts - 1%
mruthun
என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_m10என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை  - Page 22 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன்-எம்.எம்.செந்தில்-ன் கதை


   
   

Page 22 of 28 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 28  Next

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Nov 28, 2013 8:01 pm

First topic message reminder :

M.M.S.ன் கதை

இது என் கதை

கவிதை எழுதுவது - எனக்கு
பொழுது போக்கு என்றாலும்
நான் வந்த பாதையை
திரும்பி பார்த்த போது
நமது கதையை ஒரு
கவியாய் எழுதினால் என்ன?
என்றெனக்கு தோன்றியதன்
விளைவே இந்த என் கதை!!

எங்கள் ஊரில் அநேகம் பேரால்
இவன் குடி எனும் மடியில்
தலை வைத்து படுத்தே
மடிந்துவிடுவான் ஒருநாள்
என்று "பாராட்டப்பட்டவன்"?

எங்காவது செல்லும்போது
எதிரிகள் இவனை
துண்டு துண்டாய் வெட்டி
வீசி விடத்தான் போகிறார்கள்
என்ற வார்த்தைகளையும்
என் செவி வழியே கேட்டவன் நான் !

இப்போது
எங்கள் ஊரில் வருமானவரி கணக்கு
வைத்திருக்கும் சிலரில் - இதோ
நானும் வந்திணைந்து விட்டேன்!!

எப்படி வந்தது இந்த மாற்றம்
எதை, எதை கடந்து வந்தேன்
அனைத்தையும் என் ஈகரை
குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறன்!

எனது இந்த கதை - உங்களில்
யாரையேனும் பண்படுத்தினால்
அது ஈகரை எனும் இணைய
அரசியின் பெருமையே அன்றி
வேறெதுவும் இல்லை !

மாறாக புண்படுத்தினால்
அதன் முழு பொறுப்பையும்
நான் ஏற்றுக் கொள்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 13, 2014 5:42 pm

M.M.SENTHIL wrote:கிட்டத்தட்ட அனைத்தயும்
சொல்லிவிட்டேன் என்று
நினைக்கிறேன்!
இப்படித்தான் வாழ வேண்டும்
என்று எனக்கு
கொள்கை ஏதும் இல்லை,
திருடக்கூடாது
அடுத்தவரை ஏமாற்றி
பொழைக்க கூடாது!!
நாலு நாள் பொழச்சாலும்
நல்ல பொழப்பா இருக்கணும்,
மத்தபடி ஏதும் இல்லை!!
அந்த நல்ல பொழப்பை
என் மகள் வந்த பின்தான்
நான் பிழைக்க ஆரம்பித்துள்ளேன்!!
இனி கட்டையில் போகும்வரை
அப்படியே இருந்துவிட்டு போகிறேன்!!

நல்வழியை விட்டு கெட்ட வழியில் என் மனதை தடம் புரளச் செய்து விடாதே இறைவா என்று தினமும் இறைவனை வேண்டுங்கள். நல்லதே நடக்கும் செந்தில்புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 13, 2014 5:56 pm

என் வாழ்க்கையை திரும்பி
பார்த்து வந்தேன் இத்தனை நாள்,
தற்காலிகமாக முடிவுரை
எழுதும் முன்,
என் சொந்தங்கள் இருவர்க்கு
ஒரு சவால்!!
நீ உன் வாழ்வில்
என்றுமே உயரப் போவதில்லை
என்று கேலி பேசிய அத்தை,
உனக்கும், மணமாகி நீயும்
குழந்தை பெற்று? ம்...
இதெல்லாம் நடக்குமா?
என்றென்னை கேவலப்படுத்திய
என் சின்னம்மா!
இவர்கள் இருவருக்குத்தான்
என் சவால்,
முதலில் அத்தைக்கு
என் வாழ்வில் என்றுமே
நான் உயரப் போவதில்லை
என்று சபித்த அத்தையே,
இன்று என்ன ஆனது
உந்தன் மகனின் நிலை,
நான் குடிகாரனாய்
இருந்த சமயத்திலும்
சொந்தங்களை விட்டுக்
கொடுத்து பேசியதில்லையே,
நீ மட்டும் அன்று ஏன்
அப்படி பேசினாய்!!
கடன்காரந்தானே நீ என்றாயே
இதோ இன்று கூட நான்
வங்கியில் பத்து லட்சம்
கடன் கேட்டுவிட்டுதான் வருகிறேன்!!
அந்த கடனை வாங்க
எனக்கு தகுதி இருப்பதாய்
மேலாளர் சொன்னார்,
இனிமேலாவது ஒருவரை
அப்போதைய நிலை கண்டு
கேவலம் சொல்லாதே,
குப்பையில் இருப்பவனும்
நாளை குபேரனாகலாம்,
குபேரன் ஒருநாள்
குப்பைக்கு வரலாம்!!
சவால் என்றேனே அது
என்ன என்கிறாயா?
இன்னும் இரண்டு வருடம்
கழித்துப் பார்ப்போம்,
வங்கிக் கணக்கில்
வரவு எவ்வளவு என்று,
உங்களை விட நான்
ஒரு ரூபாயேனும் அதிகம்
வைத்திருப்பின் – உங்கள்
வார்த்தை உங்களுக்கே
நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்!!
இந்த இரண்டு வருட இடைவெளி
என் கதையை தங்கள் மகன்
படிக்க நேரின் – அவனும்
மீண்டு வர கொடுத்த கால அவகாசம்!!





M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 13, 2014 5:59 pm

ஜாஹீதாபானு wrote:
நல்வழியை விட்டு கெட்ட வழியில் என் மனதை தடம் புரளச் செய்து விடாதே இறைவா என்று தினமும் இறைவனை வேண்டுங்கள். நல்லதே நடக்கும் செந்தில்புன்னகை

இறைவன் விசித்திரமானவன் என்று நான் ஏற்கனவே சொல்லியுள்ளேன் மேடம், இறைவன் நல்லதையே செய்வான், நம்புகிறேன். உங்கள் ஆசிர்வாதம் எனக்கு உதவட்டும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Feb 13, 2014 6:04 pm

M.M.SENTHIL wrote:என் வாழ்க்கையை திரும்பி
பார்த்து வந்தேன் இத்தனை நாள்,
தற்காலிகமாக முடிவுரை
எழுதும் முன்,
என் சொந்தங்கள் இருவர்க்கு
ஒரு சவால்!!
நீ உன் வாழ்வில்
என்றுமே உயரப் போவதில்லை
என்று கேலி பேசிய அத்தை,
உனக்கும், மணமாகி நீயும்
குழந்தை பெற்று? ம்...
இதெல்லாம் நடக்குமா?
என்றென்னை கேவலப்படுத்திய
என் சின்னம்மா!
இவர்கள் இருவருக்குத்தான்
என் சவால்,
முதலில் அத்தைக்கு
என் வாழ்வில் என்றுமே
நான் உயரப் போவதில்லை
என்று சபித்த அத்தையே,
இன்று என்ன ஆனது
உந்தன் மகனின் நிலை,
நான் குடிகாரனாய்
இருந்த சமயத்திலும்
சொந்தங்களை விட்டுக்
கொடுத்து பேசியதில்லையே,
நீ மட்டும் அன்று ஏன்
அப்படி பேசினாய்!!
கடன்காரந்தானே நீ என்றாயே
இதோ இன்று கூட நான்
வங்கியில் பத்து லட்சம்
கடன் கேட்டுவிட்டுதான் வருகிறேன்!!
அந்த கடனை வாங்க
எனக்கு தகுதி இருப்பதாய்
மேலாளர் சொன்னார்,
இனிமேலாவது ஒருவரை
அப்போதைய நிலை கண்டு
கேவலம் சொல்லாதே,
குப்பையில் இருப்பவனும்
நாளை குபேரனாகலாம்,
குபேரன் ஒருநாள்
குப்பைக்கு வரலாம்!!
சவால் என்றேனே அது
என்ன என்கிறாயா?
இன்னும் இரண்டு வருடம்
கழித்துப் பார்ப்போம்,
வங்கிக் கணக்கில்
வரவு எவ்வளவு என்று,
உங்களை விட நான்
ஒரு ரூபாயேனும் அதிகம்
வைத்திருப்பின் – உங்கள்
வார்த்தை உங்களுக்கே
நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்!!
இந்த இரண்டு வருட இடைவெளி
என் கதையை தங்கள் மகன்
படிக்க நேரின் – அவனும்
மீண்டு வர கொடுத்த கால அவகாசம்!!

 சூப்பருங்க சூப்பருங்க 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Postகிருஷ்ணா Thu Feb 13, 2014 6:08 pm

சவாலில் வெற்றி பெற வாழ்த்துக்கள் செந்தில் :-) நீங்கள் முன்னேற இந்த மனப்பாண்மை நிச்சயமாக வேண்டும். இந்த சவால்தான் உங்கள் முன்னேற்றத்தின் தூண்டுகோல்.



கிருஷ்ணா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Feb 13, 2014 6:27 pm

-
Where there is will there is away...
-
மனமிருந்தால் மார்க்கமுண்டுன்னும் சொல்லலாம்..!
-


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 13, 2014 9:56 pm

தங்கள் மகனை விட நான்
ஒரு ரூபாய் குறைவெனில்
நான் செய்யும் தோழில்
அத்தனையும் விட்டு, விட்டு
தங்கள் மகனிடம்
வேலைக்கு வருகிறேன்,
கழிப்பறை சுத்தம் செய்யும் வேலையாயினும்!!
அடுத்ததாய் சின்னம்மா,
நீங்கள் பேசிய அற்ப பேச்சை
மீண்டும் நான் பதிய விரும்பல,
மணமுடித்தேன் – இதோ
இரண்டரை வயதில் எனக்கு மகள்,
ஆண்மை பற்றி பேசினாயோ
என் ஊனம் பற்றி பேசினாயோ
எதையும் நானறியேன்,
இப்போது நான் சமுகத்துக்கு
குடும்பஸ்தன் – என் பிள்ளைக்கு
ஒரு தகப்பன்!
உன் பேச்சை பொய்யாக்கி விட்டேன்
நீ செத்தாலும் உன் முகத்தை
காண கூடாது – என் மனதில்
அப்படி ஒரு வெறி!
எடுத்தெறிந்து பேசிவிட்டாய்
சொல்லை மிக கடுமையாய்
பிரயோகித்து விட்டாய்,
அசிங்கமல்லவா – நான்
உனக்கு மகன் முறையல்லவா!!
நீ பெற்றால்தான் பிள்ளையா,
சின்னம்மா என நான் அழைக்கும்போது
எனக்கும் நீ தாய்தானே?
உனக்கு ஒத்த புள்ள
நான் சபிக்க விரும்பல,
என் சாபம் பலிக்குமுன்னு
பேசவும் தோணல!
முப்பத்தி ரண்டு பல்லுல
ஒரு பல்லு பலிச்சாலும்
பாவம் எனக்குத்தான்!!
சொந்தத்துல சண்டை வந்தா
இன்னொரு நாள் சேரமாட்டோமா?
சிறு பிள்ளை என் புத்தியில் உறைத்தது
உனக்கேன் உறைக்கவில்லை!
இப்போது பார்த்தாயா
இந்த பழனியம்மாள் பேரன்
நல்லவனாகி விட்டேன்,
உன் மகன் பேரைக் கெடுத்து
ஊரை விட்டு ஓடிப்போய்,,,,,,,
என்னென்னமோ நடந்து விட்டது
இந்த ஐந்து வருடத்தில்,
உனக்கும் இப்போது ஒரு சவால்
ஊரையும், உறவினரையும் கூட்டி
நான் மணமாலை சூடியது போல்,
உன் மகனுக்கும் செய்யேன் பார்க்கிறேன்!!
உனக்கு வலிக்க வேண்டும்
என நான் சொல்லவில்லை
என் வலியை கொஞ்சம்
இறக்கி வைக்கிறேன்!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 13, 2014 10:11 pm

என் வாழ்வை நான்
திரும்பி பார்த்து விட்டேன்
என நினைக்கிறேன்,
என்னைப் பற்றி கொஞ்சம்:
கோபக்காரன் இன்றுவரை,
மகள் வந்த பின் பாதியளவு
குறைந்து விட்டதை உணர்கிறேன்!
பாசம் வைத்து விட்டால்
உயிரையும் கொடுப்பேன்,
உண்மை அன்புக்கு அடிமை!!
கோபமோ, அழுகையோ
அதை கொட்டிவிடுவேன்!!
கோபம் ஆண்களுக்கானது
அழுகை பெண்களுக்கானது
என்பதில் உடன்பாடில்லை,
இருவருக்கும் இரண்டுமே வேண்டும்!!
ஆணாகிலும் அழ வேண்டிய நேரத்தில்
கண்டிப்பாக அழுது விட வேண்டும்,
நான் அப்படியே!!
கோபம் கொப்பளிக்கும்போது
அமைதிப் படுத்த மாட்டேன்
அதையும் காட்டி விடுவேன்!!
செய்யும் தொழிலில்
நஷ்டம் வந்தாலும்
மனம் தளராமல்
மீண்டும் உழைப்பேன்
அடுத்த இலக்கை நோக்கி!!
கொஞ்சம் கவிதை எழுத தெரியும்,
பேச்சில் நல்ல வார்த்தைகளை
தேர்ந்தெடுத்து பேசுவேன்!!
மனம் வாடும்போது
புத்தகம் படிப்பேன்!!
தினமும் என் பாட்டி பழனியம்மாள்
படத்தின் முன் நின்று
முந்தைய நாள் குறைகள்
ஏதேனும் இருப்பின் – அதை
சரியாக்க இந்த பேரனுக்கு
நல்ல அறிவைக் கொடு என்று பேசி நிற்பேன்!!
குடும்பம் வேறு
வியாபரம் வேறு,
குடும்பத்துக்காய்
அதிக நேரம் செலவிடுவேன்!
வியாபாரம் எனும்போது
குடும்பத்தை கொஞ்சம் மறந்து விடுவேன்!!
இன்னும் எத்தனை
இன்னல் வந்தாலும்
எதிர்த்து நிற்கும்
தில் இருக்கிறது!!
என் பெயர் செந்தில் குமார்
என்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்,
ஏனெனில் அதில் “தில்” வருவதால்!!
மற்றபடி வாழ்க்கையை
ரசித்து வாழும்
ஆயிரக் கணக்கானோரில்
நானும் ஒருவனே!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Feb 13, 2014 10:22 pm

மனைவி, மகள் பற்றி:

மனைவி அமைவது
இறைவன் கொடுத்த வரம்
என்பது உண்மையான கூற்றெனில்
எனக்கு இறைவன்
நல்ல வரத்தை கொடுத்துள்ளான்!!
என் மனதை நன்கு புரிந்து
அவளை மாற்றிக் கொள்ளும்
வித்தைக்காரி என் மனைவி!!
மனதிலுள்ளதை
மறைக்காமல் சொல்லுவாள்,
அன்பால் என்னை வெல்லுவாள்!!
சகிப்புத்தன்மை அதிகம்
எடுத்தெறிந்து பேசாதவள்,
எதையும் ஆழமாய்
யோசிக்க வேண்டும்
ஒவ்வொரு செயலிலும்
என்ற எண்ணம் கொண்டவள்!!
மொத்தத்தில் மனைவி
எனக்கு சரியான துணைவி!!
அடுத்ததாய் மகள்
அப்பன் எட்டடி பாய்ந்தா
குழந்தை பதினாறடி பாயும் என்பார்கள்,
நான் எட்டடிக்கும் மேல்
பாய்ந்திருக்கிறேன்,
என் மகள் என்னைவிட அதிகம்!!
துடுக்குத்தனம்
என்னைப் போலவே கோபம்!!
எனக்கும் என் செல்லத்துக்கும்
இரண்டு ஒற்றுமை இருக்கிறது
ஒன்று
சிரித்தாள் இரு பக்கமும்
விழுகின்ற கன்னக் குழி,
மற்றொன்று இடது கை ரேகை
ஒரே மாதிரி நேர் கோட்டில் இருக்கும்!!
மற்றபடி என் எண்ணத்தின் நகல்,
என் குணத்தின் அசல்!!




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 14, 2014 12:55 pm

அருமை செந்தில் முற்றுமா? தொடருமா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 22 of 28 Previous  1 ... 12 ... 21, 22, 23 ... 28  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக