புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10 
70 Posts - 53%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 71 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 71 of 81 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 76 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 71 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 17, 2018 7:03 am

கம்யூட்டர் பயன்படுத்தாத ஜப்பான் அமைச்சர்
-
உலகச் செய்திகள்!  - Page 71 Tamil_News_large_2146890
-
டோக்கியோ :
யுஎஸ்பி டிரைவ் பற்றிய கேள்விக்கு பதிலளித்த,
முறைகேடு குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜப்பானிய அமைச்சர்
ஒருவர், தான் கம்யூட்டரே பயன்படுத்துவதில்லை என
பதிலளித்துள்ளார்.

தகவல் திருட்டு:

ஜப்பான்
சைபர் பாதுகாப்பு துணை தலைவரும், 2020ம் ஆண்டு
டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் மற்றும்
பாராலிம்பிக் விளையாட்டு துறை அமைச்சருமாக
இருப்பவர் யோஷிடாகா சகுரதா (68).

ஜப்பான் அணுசக்தி நிலையங்களில் யுஎஸ்பி டிரைவ்கள்
பயன்படுத்தப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டதாக
ஜப்பான் பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

இதற்கு பதிலளித்த யோஷிடாகா, நான் எனது 25 வது வயது
முதல் எனது துறை ஊழியர்களுக்கும், செயலாளர்களுக்கு
அறிவுறுத்தல் மட்டுமே வழங்கி வருகிறேன்.

நானாக கம்யூட்டர்களை பயன்படுத்தியதில்லை என
தெரிவித்துள்ளார்.

யோஷிடாகாவின் இந்த பதிலால் அதிருப்தி அடைந்த
எதிர்க்கட்சிகள், கம்யூட்டர்களையே தொடாத ஒருவர்
சைபர் பாதுகாப்பு கொள்கைகளுக்கு பொறுப்பாளராக
இருப்பது நம்ப முடியாததாக உள்ளது என
தெரிவித்துள்ளன.

இது போன்று பொறுப்பற்ற முறையில் பதிலளிக்க
அவருக்கு வெட்கமாக இல்லையா என பலரும்
யோஷிடாகாவை சமூக வலைதளங்களில் கடுமையாக
விமர்சித்து வருகின்றனர்.

சைபர் பாதுகாப்பு துறை துணை தலைவராக யோஷிடாகா
மாற்றப்பட்டு ஒரு மாதம் மட்டுமே ஆகிறது.

சமீபத்தில் நடந்த தேர்தலில் பிரதமர் ஷின்சோ அபேயின்
கட்சி மீண்டும் தேர்வானதை அடுத்து அமைச்சரவை மாற்றி
அமைக்கப்பட்ட போது தான் யோஷிடாகா சைபர் பாதுகாப்பு
துறை பொறுப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
---------------------------------
தினமலர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 17, 2018 7:11 am

ayyasamy ram wrote:சி.என்.என்., நிருபருக்கு அனுமதி

வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன், பத்திரிகையாளர்
கூட்டத்தில் விவாதம் செய்ததால், வெளியேற்றப்பட்ட,
சி.என்.என்., பத்திரிகை நிருபர் ஜிம் அகோஸ்டா, வெள்ளை
மாளிகையில் நடக்கும் நிருபர் கூட்டங்களில் பங்கேற்க,
அந்நாட்டு நீதிமன்றம் தற்காலிக அனுமதி அளித்துள்ளது.
-
------------------------
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1286063
நிதிமன்றம் அனுமதி தந்து விட்டால் மட்டும் நிருபரால் வெள்ளை மாளிகையில் நுழைந்து எளிதில் நியூஸ் சேகரித்து வந்து விட சாத்தியம் உள்ளதா?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 20, 2018 7:15 am

வியட்நாம்:
பழமையான இந்து கோவிலுக்கு ராம்நாத் கோவிந்த் சென்றார்
-
உலகச் செய்திகள்!  - Page 71 201811200238429352_Vietnam-Ramnath-Govind-went-to-the-old-Hindu-temple_SECVPF
-
ஹனோய்,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசுமுறை பயணமாக வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு சென்றுள்ளார். தற்போது வியட்நாமில் இருக்கும் அவர் நேற்று அங்குள்ள குவாங் நாம் மாகாணத்துக்கு உட்பட்ட டய் பு கிராமத்துக்கு அருகே உள்ள பழமையான இந்து கோவிலுக்கு சென்றார். அங்கு அவர் தனது வருகையின் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டார்.


இந்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் ‘என் மகன்’ கோவில் காம்ப்ளக்ஸ் என அழைக்கப்படும் இந்த கோவிலில் கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் சிவன் சிலைகள் நிறுவப்பட்டு உள்ளன. கி.பி. 4 மற்றும் 14-ம் நூற்றாண்டுக்கு இடையே சம்பா பேரரசர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் தற்போது பாழடைந்து காணப்படுகிறது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் வருகையையொட்டி அந்த கோவிலில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளை பார்வையிட்ட ராம்நாத் கோவிந்த், அவற்றை ஏற்பாடு செய்தவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த தகவல்களை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 20, 2018 8:59 pm

Code:


இந்திய கலாசாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் ‘என் மகன்’ கோவில் காம்ப்ளக்ஸ் என அழைக்கப்படும் இந்த கோவிலில் கிருஷ்ணர், விஷ்ணு மற்றும் சிவன் சிலைகள் நிறுவப்பட்டு உள்ளன. கி.பி. 4 மற்றும் 14-ம் நூற்றாண்டுக்கு இடையே சம்பா பேரரசர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் தற்போது பாழடைந்து காணப்படுகிறது.

நம் இந்து கடவுள் வியட்நாமில்
அற்புதம்
நன்றி ஐயா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 20, 2018 9:15 pm

நல்ல திரி அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 21, 2018 6:41 am


அமெரிக்க ஆஸ்பத்திரியில் துப்பாக்கிச்சூடு -
பெண் டாக்டர் உள்பட 4 பேர் பலி

சிகாகோ,

அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கி வன்முறைக் கலாசாரம் வளர்ந்து வருகிறது. அங்கு துப்பாக்கிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை 13 ஆயிரம் பேர், துப்பாக்கிச்சூடுகளில் பலியாகி உள்ளனர். 25 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பணியில் இருந்தபோது 250 போலீஸ் அதிகாரிகளும் சுடப்பட்டுள்ளனர்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அங்கு இல்லினாய்ஸ் மாகாணம், சிகாகோ நகரில் உள்ள மெர்சி ஆஸ்பத்திரியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், அந்த நகரையே உலுக்கி உள்ளது.

அந்த ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த பெண் டாக்டர் டாமரா ஓ நீல் என்பவருக்கும், மற்றொரு ஆணுக்கும் இடையே உள்ளூர் நேரப்படி பகல் சுமார் 3 மணிக்கு வாகனம் நிறுத்துமிடத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது அங்கு டாக்டர் டாமராவின் நண்பர் வந்து அவர்களிடையே சமரசம் செய்து வைக்க முயற்சித்துள்ளார். ஆனால் அந்த ஆண், உடனடியாக தான் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து டாக்டர் டாமராவை கண் இமைக்கும் நேரத்தில் சுட்டு வீழ்த்தினார். ரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்தார்.

உடனே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து சேர்ந்த நேரத்தில், துப்பாக்கி ஏந்திய அந்த நபர், ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தார். அங்கு அவர் கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார். இதில் அந்த ஆஸ்பத்திரியில் மருந்தாளுனராக பணியாற்றி வந்த டெய்னா லெஸ் என்ற பெண் குண்டு பாய்ந்து பலியானார்.

அதைத் தொடர்ந்து துப்பாக்கி ஏந்திய நபருக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது. இந்த சண்டையின்போது சாமுவேல் ஜிம்னெஸ் என்ற போலீஸ் அதிகாரி பலியானார்.

மற்றொரு போலீஸ் அதிகாரி மீதும் அந்த நபர் சுட்டார். ஆனால் அந்த போலீஸ் அதிகாரி தப்பித்து விட்டார்.

இந்த சம்பவத்தின் முடிவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் பலியானார். அவர் போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு இரையானாரா அல்லது தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தாரா என்பது உறுதிபட தெரியவில்லை. இருப்பினும் ஒரே நேரத்தில் 4 பேர் அங்கு துப்பாக்கிச்சூட்டில் பலியானது, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவருக்கும் அவரது துப்பாக்கிச்சூட்டில் முதல் பலியான பெண் டாக்டர் டாமராவுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததாகவும், டாமராவை அவர் திருமணம் செய்து கொள்ள நிச்சயித்திருந்ததாகவும் முரண்பட்ட தகவல்கள் கூறுகின்றன.

இருப்பினும் இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணி என்ன என்பது உறுதி படத்தெரியவில்லை.

இந்த துப்பாக்கிச்சூடு குறித்து சிகாகோ நகர மேயர் ரேஹம் இமானுவேல் விடுத்துள்ள அறிக்கையில், “இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் நகரத்தின் ஆன்மாவே கண்ணீர் சிந்துகிறது” என உருக்கமுடன் கூறி உள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியான மருந்தாளுனர் டெய்னா லெஸ் (வயது 25), கடந்த ஜூலை மாதம்தான் பணியில் சேர்ந்துள்ளார், பலியான போலீஸ் அதிகாரி சாமுவேல் ஜிம்னெசுக்கு (28) திருமணமாகி குழந்தை உள்ளது என தகவல்கள் கூறுகின்றன.

இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

தினத்தந்தி

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 21, 2018 6:58 am

அங்கு சர்வசாதாரணமாக துப்பாக்கி சூடு
நடப்பது அசாதாரணமாக உள்ளது.

சகிப்புத்தன்மை அற்ற சூழலே இந்த மாதிரி
துர்சம்பவம் நடக்க காரணம்.

எதுவாகிலும் உயிர் இழப்பு வருத்தமளிக்கிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 26, 2018 9:49 pm

உலகச் செய்திகள்!  - Page 71 24-11-2018%20sg-electric%20buses
--
இன்னும் ஈராண்டுகளில் 60 மின்சாரப் பேருந்துகள்
சிங்கப்பூர் சாலைகளில் செல்வதைக் காண லாம்.


அந்தப் பேருந்துகள் மூலம் சத்தமில்லாத சொகுசு நிறைந்த
பயணத்தை அவற்றில் பயணம் செய்பவர்கள் அனுபவிக்கலாம்
என நிலப் போக்குவரத்து ஆணை யம் நேற்று தெரிவித்தது.

இப்பேருந்துகள் 50 மில்லியன் வெள்ளி செலவில் உருவாகும்
என்றும் அது தனது அறிக்கையில் குறிப்பிட்டது.

மின்சாரப் பேருந்துகள் அடுத்த ஆண்டு முதல் சிங்கப்பூருக்கு
வரத்தொடங்கும் என்றும் 2020 ஆம் ஆண்டில் இறுதிக்கட்ட
பேருந்துகள் வந்து சேரும் என்றும் தெரிவித்த ஆணையம்,
பேருந்துகள் சேவை புரிய வேண்டிய வழித் தடங்கள் பின்னர்
அறிவிக்கப்படும் என்றது. சந்தையில் தற்போது நிலவும்
வெவ்வேறு தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிக்கும் நோக்கில்
பல தரப்பட்ட விநியோகிப்பாளர்களுக்காக ஆணையம்
ஏலக்குத்தகையை வழங்கி உள்ளது.

பிஒய்டி (சிங்கப்பூர்) என்னும் நிறுவனம் 20 ஓரடுக்கு மின்சாரப்
பேருந்துகளை விநியோகிக்கும். இதற்கான ஏலக்குத்தகை
தொகை $17 மில்லியன். வாகனத் தயாரிப்பு நிறுவனமான
பிஒய்டி சீனாவின் ஷென்ஷென் நகரைத் தளமாகக்கொண்டது.
-
------------------------
தமிழ்முரசு, சிங்கப்பூர்

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 27, 2018 9:39 am

அமெரிக்காவின் இன்சைட் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது
-
நாசா:
அமெரிக்காவின் இன்சைட் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக
தரையிறங்கியது. செவ்வாய்கிரகத்தை ஆய்வு செய்யும்
பொருட்டு அமெரிக்கா அனுப்பிய 9வது விண்கலம் இதுவாகும்.

கடந்த மே மாதம் முதல் 6 மாதங்களாக 548 மில்லியன் கி.மீட்டர்
தொலைவு பயணித்து செவ்வாயை சென்றடைந்துள்ளது.

செவ்வாய்கிரகத்தை ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்கா
பெரும் முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக
பல்வேறு முயற்சியில் இந்த கிரகத்தை பற்றிய முழு அளவில்
தகவல் எதுவும் கிடைக்காமல் உள்ளது.

செவ்வாய் கிரகத்தை மிக ஆழமாக ஆய்வு செய்யும் விதமாக
இன்சைட் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விண்கலம்
வெற்றிகரமாக கால்பதித்துள்ளது. கால் பதித்ததும்
முதல்படத்தை அனுப்பி வைத்தது.

இந்த இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் நிலவும்
வெப்பம், நீர் ஆகியன குறித்து மிக துல்லியமான தகவலை
நாசாவுடன் பரிமாறும். இன்சைட் இறங்கும் காட்சி நியூயார்க்
டைம் சதுக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
-
--------------------------
தினமலர்



Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 27, 2018 8:33 pm

Code:


செவ்வாய்கிரகத்தை ஆய்வு செய்யும் பணியில் அமெரிக்கா
பெரும் முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளாக
பல்வேறு முயற்சியில் இந்த கிரகத்தை பற்றிய முழு அளவில்
தகவல் எதுவும் கிடைக்காமல் உள்ளது.

செவ்வாய் கிரகத்தை மிக ஆழமாக ஆய்வு செய்யும் விதமாக
இன்சைட் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விண்கலம்
வெற்றிகரமாக கால்பதித்துள்ளது. கால் பதித்ததும்
முதல்படத்தை அனுப்பி வைத்தது.


இனி செவ்வாய் தோஷம் பற்றி என்ன
பேசுவோம்?
அறிவியல் வளர்ச்சி அபாரம்.
போற்றுவோம்.


Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 71 of 81 Previous  1 ... 37 ... 70, 71, 72 ... 76 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக