புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10 
72 Posts - 54%
heezulia
உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10 
44 Posts - 33%
mohamed nizamudeen
உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_m10உலகச் செய்திகள்!  - Page 6 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகச் செய்திகள்!


   
   

Page 6 of 81 Previous  1 ... 5, 6, 7 ... 43 ... 81  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 12, 2013 3:05 pm

First topic message reminder :

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி

உலகச் செய்திகள்!  - Page 6 Bus-accidentre-212

ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 3:41 pm

ஜெர்மனி: 3-வது முறையாக பிரதமராகிறார் மெர்க்கல்

உலகச் செய்திகள்!  - Page 6 JHGGerPJTom9QT8i4EzJ+merkel 

நீண்ட இழுபறிக்குப் பின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து ஜெர்மனியில் கூட்டணி அரசு அமையவுள்ளது.

இதையடுத்து, ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஏஞ்சலா மெர்கல் 3-வது முறையாக பிரதமர் ஆகிறார்.

ஜெர்மனியில் கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 631 இடங்களில் ஆளுங்கட்சியான கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (சிடியூ) 311 இடங்களைக் கைப்பற்றியது. இது 41.5 சதவிகிதம் ஆகும்.

ஆனால், ஆட்சியமைக்க 50 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதால், மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்ற சிடியூ கட்சி முடிவு செய்தது. இதையடுத்து, சமூக ஜனநாயகக் கட்சியுடன் (எஸ்பிடி) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை எஸ்பிடி கட்சி முன்வைத்தது.

இதற்கு சிடியூ கட்சி சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து, 5 வாரங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை புதன்கிழமை முடிவுக்கு வந்தது. இதற்கான உடன்படிக்கையில் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஏஞ்சலா மெர்க்கல், எஸ்பிடி தலைவர் சிக்மர் கபிரியேல் ஆகியோர் கையெழுத்திட்டனர். பின்னர், அவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 3:42 pm

இந்திய நீதித் துறைக்கு ஹேம்ராஜின் மனைவி நன்றி

நொய்டாவில் ஆருஷி மற்றும் அவரது வீட்டு வேலைக்காரர் ஹேம்ராஜ் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தல்வார் தம்பதிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்த இந்திய நீதித் துறைக்கு நேபாளத்தில் வாழும் ஹேம்ராஜின் மனைவி நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கும்கலா செய்தியாளர்களிடம் பேசுகையில், பெரிய போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக உணர்கிறேன். இனி ஒரு புதிய வாழ்க்கையை நான் துவங்குவேன். நல்ல தீர்ப்பை வழங்கிய நீதித் துறைக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Nov 28, 2013 3:43 pm

போரில் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கெடுப்பு : பணிந்தது இலங்கை

இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, இலங்கையில் நடந்த போரின் போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களைப் பற்றிய கணக்கெடுப்பை இலங்கை அரசு துவக்கியுள்ளது.

இலங்கையில் நடந்த போரின் போது பல்லாயிரக் கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது. இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், போரில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும், காமன்வெல்த் மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் வலியுறுத்தினார்.

ஆனால், அதற்கு அப்போது அசைந்து கொடுக்காத ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசு, போரில் பாதிக்கப்பட்டவர்களை பற்றிய விவரங்களை இலங்கை அரசு பதிவு செய்யவில்லை என்றால், அதனை உலக நாடுகள் செய்ய வேண்டியிருக்கும் என்று கேமரூன் மீண்டும் எச்சரித்த நிலையில், போரின் போது இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் பணியை இலங்கை அரசு துவக்கியுள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 11:27 am

அமெரிக்கப் படைக்கு கர்ஸாய் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் சிறுவன் பலியானதற்கு அதிபர் ஹமீத் கர்ஸாய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஹெல்மோன்ட் பகுதியில் வியாழக்கிழமை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் தலிபான்களுக்கு எதிராக ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது 12 வயது சிறுவன் உயிரிழந்தான். 2 பெண்கள் காயமடைந்தனர். இதுகுறித்து நேட்டோ படையினர் அந்தப்பகுதியில் விசாரணை நடத்துவார்கள் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அதிபர் ஹமீத் கர்ஸாய் தெரிவிக்கையில், ""ஆப்கானிஸ்தானில் கடந்த 12 ஆண்டுகளாக அமெரிக்கப் படைகளின் தலையீடு இருந்து வருகிறது. இந்நிலையில் ஹெல்மோன்ட் பகுதியில் தலிபான்களுக்கு எதிராக நேட்டோ படையினர் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். 2 பெண்கள் காயமடைந்துள்ளனர். இது மிகவும் கண்டனத்துக்குரியது. ஆப்கன் மக்களை அமெரிக்கப் படைகள் மதிப்பதில்லை'' என்றார்.

வாஷிங்டனில் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க படைகள் ஆப்கûற்ன விட்டு வெளியேறியாக வேண்டும்.

இந்நிலையில், 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகும் ஆப்கனில் அமெரிக்க படைகள் தொடர்வதற்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஆப்கானிஸ்தானை அமெரிக்கா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 11:28 am

வங்கதேச தேர்தல்: ஒத்திவைக்கக் கோரி எதிர்க்கட்சியினர் இன்று பேரணி

வங்கதேசத்தில் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி எதிர்க்கட்சியான வங்கதேச தேசியக் கட்சி (பிஎன்பி) மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சனிக்கிழமை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.

தலைநகர் டாக்காவில் மாலை 3 மணியளவில் இந்தப் பேரணி துவங்கும் என்று பிஎன்பி கட்சியின் இணை பொதுச் செயலாளர் ருஹுல் கபீர் ரிஸ்வி தெரிவித்தார்.

இதனிடையே, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மறுத்துள்ள பிரதமர் ஹசீனா, திட்டமிட்ட நாளில் தேர்தல் நடைபெறும் என்றும், நாட்டு மக்கள் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக நடைமுறைக்கு பங்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், திட்டமிட்டபடி ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் காஜி ரகிபுத்தீன் அஹமது வியாழக்கிழமை தெரிவித்தார்.

தேர்தலைக் கண்காணிக்க பிரதமர் ஹசீனா அமைத்துள்ள அனைத்துக் கட்சியினர் அடங்கிய குழவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பிஎன்பி கட்சியினர், கட்சி சாரா குழு ஒன்றினை அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தில் 21 பேர் உயிரிழப்பு: இதனிடையே, எதிர்க்கட்சிகளால் புதன்கிழமை தொடங்கப்பட்டு வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்த 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 21 பேர் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 11:28 am

பேய் விரட்டும் சடங்கில் குழந்தை உயிரிழப்பு: பெற்றோருக்கு சிறை

மலேசியாவில் பேய் விரட்டும் சடங்கில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக பெற்றோர் உள்பட 3 பேருக்கு சிறைதண்டனை விதித்து பினாங்கு மாகாணத்தில் உள்ள உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

பெற்றோர் மற்றும் அவர்களின் உறவினர் ஆகியோருக்கு ஓராண்டு ஜெயில் மற்றும் 10,000 ரிங்கிட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.93 லட்சம்) அபராதமும் விதிக்கப்பட்டது.

மலேசிய நாட்டின் வடக்கு பினாங்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேய் விரட்டும் சடங்கு நடைபெற்றது. இதில், சுவா வான் ஸýயன் (2) என்ற குழந்தையுடன், அதன் பெற்றோர் உள்பட 8 பேர் பங்கேற்றனர். அவர்கள், போர்வையால் மூடப்பட்டனர்.

இதையடுத்து வெகுநேரம் நடைபெற்ற அந்த சடங்கில், அந்தக் குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது. இது தொடர்பாக பெற்றோர் மற்றும் உறவினர் ஆகிய 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 2008ஆம் ஆண்டில் முஸ்லிம் தம்பதி இருவர் புகைப்பழக்கம் மற்றும் நோய்களில் இருந்து குணமடைவதற்காக என்று கூறி சடங்கு நடத்தப்பட்டது. அப்போது, இருவரும் அவர்களது குடும்பத்தினரால் அடித்துக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 11:29 am

தாய்லாந்தில் ராணுவ தலைமையகம் முற்றுகை

தாய்லாந்தில் ஷினவத்ரா அரசுக்கு எதிராக தொடர்ந்து 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், வெள்ளிக்கிழமை அந்நாட்டின் ராணுவத் தலைமையகத்தை முற்றுகையிட்டனர்.

ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ராணுவத் தலைமையக வளாகத்திற்குள் நுழைந்ததாக ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி விலகக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள், அவரது கட்சியான பியூ தாய் கட்சியின் தலைமை அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

இதனால் பியூ தாய் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றி பெற்ற பிரதமர் ஷினவத்ரா, போராட்டத்தை கைவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வருமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால், அரசுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை வகிக்கும் சுதீப் தாக்சுபன், ஷினவத்ராவின் அழைப்பை நிராகரித்துள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 11:29 am

ஆங் சான் சூகிக்கு ஆஸ்திரேலியாவில்  டாக்டர் பட்டம்

மியான்மர் எதிர்க் கட்சித் தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகிக்கு ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு 6 நாள்கள் சுற்றுப் பயணமாக சூகி சென்றுள்ளார். அவருக்கு கான்பெரா நகரில் உள்ள ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் சார்பில் சிறப்பான சமூக சேவையில் ஈடுபட்டதற்காக கௌரவ டாக்டர் பட்டம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

இந்த டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட சூகி கூறியது:

போராட்டப் பாதையின் இறுதிக்கு நாங்கள் வந்துவிட்டோம் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் இன்னும் போராட்டத்தின் தொடக்கத்தில்தான் இருக்கிறோம். நாங்கள், எங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதையில் நடக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. உலக நாடுகள் எங்களின் கனவுகளை நனவாக்குவதற்கு உதவும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது. கடினமான உழைப்பின் மூலம் எங்களது இலக்கை அடைவோம் என்று சூகி தெரிவித்தார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84215
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 30, 2013 11:39 am

உலகச் செய்திகள்!  - Page 6 SJHdL5hPQvu3YXHKe36R+myanmar-princess-91113-150
-

60 ஆண்டுகளுக்கு முன்பு மியான்மரில் இளவரசியாக
வலம் வந்தவர் ஹிடெக் சு பாயா ஜி என்பவர்
-
அவருக்கு இப்போது 90 வயது ஆகிறது
-
தற்போது குடிசையில் வாழ்வதாக கூறுகிறார்.
தான் இளவரசியாக வசதியுடன் வாழ்ந்த காலத்தை
இளமைக்கால நினைவுடன் கழிப்பதாக தெரிவிக்கிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 30, 2013 12:49 pm

வறுமையில் 90 வயது மியான்மர் இளவரசி



Sponsored content

PostSponsored content



Page 6 of 81 Previous  1 ... 5, 6, 7 ... 43 ... 81  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக