புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 30 of 81 •
Page 30 of 81 • 1 ... 16 ... 29, 30, 31 ... 55 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
ரஷியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதாரத் தடை
அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையின் தாக்கத்தை அந்நாடு உணரத் தொடங்கியுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எனினும், உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகிறது என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அமெரிக்க வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் திங்கள்கிழமை கூறியதாவது:
ரஷியாவின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையானது எந்த அளவுக்கு அந்நாட்டில் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அந்நாட்டுப் பொருளாதார புள்ளிவிவரங்களின் மூலம் நாங்கள் அறிந்துள்ளோம்.
ரஷியாவின் மத்திய வங்கியானது கோடிக்கணக்கான டாலரை செலவழித்து அந்நாட்டின் பண மதிப்பை ஸ்திரப்படுத்த முயற்சித்து வருகிறது.
ரஷியாவிலிருந்து பெருமளவில் முதலீடுகள் வெளியேறிவருகின்றன.
அதேவேளையில், அந்த நாட்டில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். ஏனெனில், அவர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய முயற்சிக்கிறார்கள்.
தங்களது எல்லைப் பகுதியில் இருந்து உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு கனரக ஆயுதப் பரிமாற்றம் நடைபெறுவதை ரஷியா தடுக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால், அந்த விஷயத்தில் ரஷியா எத்தகைய உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஜோஸ் எர்னஸ்ட் கூறினார்.
அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையின் தாக்கத்தை அந்நாடு உணரத் தொடங்கியுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எனினும், உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷியா தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகிறது என்றும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் அமெரிக்க வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ஜோஸ் எர்னஸ்ட் திங்கள்கிழமை கூறியதாவது:
ரஷியாவின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடையானது எந்த அளவுக்கு அந்நாட்டில் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அந்நாட்டுப் பொருளாதார புள்ளிவிவரங்களின் மூலம் நாங்கள் அறிந்துள்ளோம்.
ரஷியாவின் மத்திய வங்கியானது கோடிக்கணக்கான டாலரை செலவழித்து அந்நாட்டின் பண மதிப்பை ஸ்திரப்படுத்த முயற்சித்து வருகிறது.
ரஷியாவிலிருந்து பெருமளவில் முதலீடுகள் வெளியேறிவருகின்றன.
அதேவேளையில், அந்த நாட்டில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். ஏனெனில், அவர்கள் தங்கள் பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்ய முயற்சிக்கிறார்கள்.
தங்களது எல்லைப் பகுதியில் இருந்து உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு கனரக ஆயுதப் பரிமாற்றம் நடைபெறுவதை ரஷியா தடுக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால், அந்த விஷயத்தில் ரஷியா எத்தகைய உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஜோஸ் எர்னஸ்ட் கூறினார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்க விமானப்படை அதிரடியாக குண்டுகளை வீசி தாக்குதல்
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்க விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈராக்கில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், ஷியா முஸ்லிம் அரசு படையினருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி, தாக்குதல்கள் தொடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 9–ந் தேதி அவர்கள் அதிரடியாக நாட்டின் 2–வது பெரிய நகரமான மொசூலை தங்கள் பிடியின்கீழ் கொண்டு வந்தனர். அதைத் தொடர்ந்து மேலும் தாக்குதல்கள் தொடுத்து நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதி நகரங்களை கைப்பற்றினர். தொடர்ந்து அவர்கள் முன்னேறி வருகின்றனர்.
குர்திஷ் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகரான எர்பில் அருகே அவர்கள் நெருங்கி விட்டனர். அந்தப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச்சாவடி ஒன்றையும் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டனர். ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்த வேண்டும் என்று ஈராக்கும், குர்திசும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.இந்த நிலையில், ஈராக்கில் அமெரிக்கர்களைப் பாதுகாக்கவும், சிறுபான்மையினர் நலனைக் காக்கவும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை குறி வைத்து வான்வழி தாக்குதல் நடத்த உத்தரவிட்டு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நேற்று இரவு அதிரடியாக அறிவித்தார்.
ஈராக்கில் இருந்து 2011–ம் ஆண்டு அமெரிக்க படைகள் வாபஸ் ஆன பின்னர் நடத்தக்கூடிய முதல் வான்வழி தாக்குதலாக இது அமையும். ஈராக்கில் மலைப்பகுதியில் தேவைப்பட்டால்– தீவிரவாதிகளின் முற்றுகையை தகர்த்து எறிவதற்கும், அங்கு சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களைக் காப்பதற்காகவும், ஈராக் மற்றும் குர்திஷ் படைகளுக்கு ஆதரவாக வான்வழி தாக்குதல் நடத்தப்படும் என்று ஒபாமா அறிவித்தார். இதற்கிடையே ஈராக்கில் சின்ஜார் பகுதியில் தவிக்கிற அப்பாவி பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு அமெரிக்க போர் விமானங்கள் உணவு பொட்டலங்களையும், தண்ணீர் பாட்டில்களையும் போட்டன.
இந்நிலையில் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது அமெரிக்க விமானப்படை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தகவலை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் விமானப்படையை சேர்ந்த இரண்டு விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் பீரங்கிகள் மீது அமெரிக்கா குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. பீரங்கிகளை ஏற்றி சென்ற வாகனங்கள் மீதும் அமெரிக்க விமானப்படை குண்டுகளை வீசியுள்ளது.
குர்திஷ்தான் படைகளையும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் முற்றுகையிட்டதை அடுத்து அங்கு அமெரிக்க தாக்குதலை தொடங்கியுள்ளது. ஏர்பில் பகுதியில் அமெரிக்க விமானப்படை விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளது. சிரியா மற்றும் ஈராக் முழுவதும் ஆக்கிரமித்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எங்களது பணியாளர்கள் மற்றும் வசதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்பதை அதிபர் தெளிவாக்கிவிட்டார். என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் கிர்பே தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஈரானில் நொறுங்கி விழுந்த விமானம் - 48 பேர் பலி
ஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 48 பயணிகள் பலியாகியுள்ளனர்.
ஈரானைச் சேர்ந்த பயணிகள் விமானம் கிழக்கு ஈரானின் டபாஸிற்கு செல்லும் வழியில், தெஹ்ரானில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 39 பயணிகள் பலியாகியுள்ளனர். மேலும், 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
IrAn-140 என்னும் அந்த விமானம் பயணிகளுடன் புறப்பட்ட சில நேரத்திலேயே என்ஜின் பழுது அடைந்ததாகவும், தரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன் விமானம் மின்சார கோபுரம் மீது இடித்ததாகவும் தெரிகிறது.
இவ்விபத்தில் விமானத்தில் பயணித்த பயணிகளின் சடலங்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு பாதிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தீவிரவாதத்தை எதிர்த்து போர்: கணவர்களை அனுப்ப நைஜீரிய வீரர்களின் மனைவிகள் எதிர்ப்பு
நைஜீரியாவில் தீவிர இஸ்லாமிய ஆட்சியை செயல்படுத்த விரும்பும் போகோஹரம் தீவிரவாதிகள் அரசை எதிர்த்து வன்முறைக் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ‘மேற்கத்திய கல்வித்தடை’ என்ற பொருள்படும் இவர்களது இயக்கத்தின் பெயருக்கேற்ப அங்குள்ள பெண்களை கடத்திச்சென்று அவர்களின் படிப்பினைத் தடை செய்து வருகின்றனர்.
கடந்த வாரம் இவர்கள் கைப்பற்றிய க்வோசா நகரில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த நகரை மீண்டும் தங்களின் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் ராணுவத் துருப்புகளை அங்கு அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இதனை விரும்பாத இந்த வீரர்களின் மனைவிகள் ஒன்று சேர்ந்து மைடுகுரி நகரத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவ முகாம்களுக்கு சென்று தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ராணுவ உயர்மட்டத்தினரின் மீது பொதுமக்கள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் சமீபத்திய அடையாளம் இது என்று அவர் கூறினார். போகோஹரம் இயக்கத்தினர் நவீன ஆயுதங்களை உபயோகிப்பதாகவும் இதனால் அவர்கள் தங்களை எளிதில் எதிர்கொள்ள முடியும் என்றும் நைஜீரிய வீரர்கள் கருதுகின்றனர்.
மே மாத தாக்குதலின் போது கூட தங்களின் சக வீரர்கள் இறந்ததற்கு ஆட்சேபம் தெரிவித்த இந்த வீரர்கள் தங்களின் படைத் தலைவர் மேஜர் ஜெனரல் அகமது முகமதுவையே சுடத் துணிந்தனர். கடந்த மார்ச் மாதத்தில் போகோஹாரம் இயக்கத்தினரைத் தாக்கியபோது அவர்கள் திருப்பித் தாக்கியதில் தங்களின் வீடுகள் எரிந்து, அப்பாவிக் குழந்தைகளும் பலியாகினர் என்று குறிப்பிட்ட ஒரு பெண் இந்தப் போரில் எங்கள் கணவர்கள் இறந்தால் அரசு எங்களுக்கு எதுவும் செய்யாது என்றும் குறிப்பிட்டார்.
இருப்பினும் க்வோசா நகரத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்துடன் ராணுவத்தினை சீரமைத்து வருவதாக நைஜீரியாவின் உள்துறை அமைச்சர் அபா மோரோ தெரிவித்துள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எபோலா நோய்க்கு ஸ்பெயின் பாதிரியார் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘எபோலா’ வைரஸ் காய்ச்சல் பல்வேறு நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. நைஜீரியா, லைபீரியா, கினியா, சியரா லியோன் ஆகிய 4 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்த கொடிய காய்ச்சலுக்கு இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில், அண்டை நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. எபோலா நோயால் பாதிக்கப்பட்ட பலர் சிறப்பு வார்டுகளில் வைத்து கவனிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், எபோலா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயதான ஸ்பெயின் பாதிரியார் மருத்துவமனையில் இறந்தார். லைபீரியாவில் அரசு சாரா நிறுவனத்திற்காக பணியாற்றியபோது இந்த நோயால் பாதிக்கப்பட்ட பாதிரியார் மிகுவல் பராஜஸ், அங்கிருந்து சிகிச்சைக்காக கடந்த 7-ம் தேதி ஸ்பெயினுக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டார். அவருடன் மற்றொரு பணியாளர் ஜுலியானா போகியும் அழைத்து வரப்பட்டார்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த பாதிரியார் சிகிச்சை பலனின்றி இறந்ததாக மேட்ரிட் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த கொடிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட முதல் ஐரோப்பியர் மிகுவல் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை அச்சுறுத்தி வரும் ‘எபோலா’ வைரஸ் காய்ச்சல் பல்வேறு நாடுகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது. நைஜீரியா, லைபீரியா, கினியா, சியரா லியோன் ஆகிய 4 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்த கொடிய காய்ச்சலுக்கு இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில், அண்டை நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன. எபோலா நோயால் பாதிக்கப்பட்ட பலர் சிறப்பு வார்டுகளில் வைத்து கவனிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், எபோலா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயதான ஸ்பெயின் பாதிரியார் மருத்துவமனையில் இறந்தார். லைபீரியாவில் அரசு சாரா நிறுவனத்திற்காக பணியாற்றியபோது இந்த நோயால் பாதிக்கப்பட்ட பாதிரியார் மிகுவல் பராஜஸ், அங்கிருந்து சிகிச்சைக்காக கடந்த 7-ம் தேதி ஸ்பெயினுக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டார். அவருடன் மற்றொரு பணியாளர் ஜுலியானா போகியும் அழைத்து வரப்பட்டார்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த பாதிரியார் சிகிச்சை பலனின்றி இறந்ததாக மேட்ரிட் சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இந்த கொடிய வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட முதல் ஐரோப்பியர் மிகுவல் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எல்லையில் துப்பாக்கிச் சூடு: இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்
இந்திய ராணுவத்தினர் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம்சாட்டி, பாகிஸ்தான் அரசு அங்குள்ள இந்திய துணை தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, தொடர் அத்துமீறல் நடந்து வருவதால் இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், இந்திய ராணுவத்தினர், எல்லையில் அவ்வப்போது அத்துமீறுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மீறி, இந்திய வீரர்கள் சுட்டதாகவும், அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்ததாகவும் பாகிஸ்தான் திங்கள்கிழமை அன்று குற்றம்சாட்டியது.
இதுகுறித்து கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இந்திய துணை தூதர் கோபால் பாக்லேயிடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சம்மன் அளித்துள்ளது. அதில், இருதரப்பு உறவுகளும் மேம்பட வேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் விரும்பும் இந்த வேளையில் இதுபோன்ற தாக்குதல் சம்பவம் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரையில் இந்திய ராணுவத்தினர் 54 முறை போர்நிறுத்தத்தை மீறியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தினர் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம்சாட்டி, பாகிஸ்தான் அரசு அங்குள்ள இந்திய துணை தூதருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, தொடர் அத்துமீறல் நடந்து வருவதால் இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், இந்திய ராணுவத்தினர், எல்லையில் அவ்வப்போது அத்துமீறுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது.
எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மீறி, இந்திய வீரர்கள் சுட்டதாகவும், அதில் பாகிஸ்தானைச் சேர்ந்த பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்ததாகவும் பாகிஸ்தான் திங்கள்கிழமை அன்று குற்றம்சாட்டியது.
இதுகுறித்து கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் இந்திய துணை தூதர் கோபால் பாக்லேயிடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை சம்மன் அளித்துள்ளது. அதில், இருதரப்பு உறவுகளும் மேம்பட வேண்டும் என்று இரு நாட்டுத் தலைவர்களும் விரும்பும் இந்த வேளையில் இதுபோன்ற தாக்குதல் சம்பவம் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரையில் இந்திய ராணுவத்தினர் 54 முறை போர்நிறுத்தத்தை மீறியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இஸ்ரேல், பாலஸ்தீன அமைதிப் பேச்சு தொடக்கம்
இஸ்ரேல், பாலஸ்தீன தலைவர்கள் இடையே எகிப்து தலைநகர் கெய்ரோ வில் அமைதிப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை தொடங்கியது. இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 72 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.
இந்நிலையில் எகிப்து அரசின் ஏற்பாட்டின் பேரில் கெய்ரோவில் திங்கள்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதலை நிறுத்தாதவரை பேச்சு வார்த்தையில் பங்கேற்கமாட்டோம் என்று இஸ்ரேல் அரசு உறுதியாக தெரிவித்து வந்த நிலையில், சர்வ தேச நெருக்கடி காரணமாக பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் தூதர் ஒருவர் கூறியபோது, எகிப்தில் இப்போது பேச்சுவார்த்தை தொடங்கி யுள்ளது. இந்த முயற்சி தோல்வி அடைந்தால் மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.
ஐ.நா. வரவேற்பு
காஸா பகுதியில் 72 மணி நேர போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருப்பதை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கூறியபோது, 3 நாள் போர் நிறுத்தம் மேலும் நிரந்தரமாக வேண்டும், அதற்கான முயற்சிகளில் ஐ.நா. சபை ஈடுபட்டுள்ளது, இரு தரப்பினருக்கும் இடையில் சுமுக உடன்பாடு எட்டுவதற்கு ஐ.நா. உதவ தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
இஸ்ரேல், பாலஸ்தீன தலைவர்கள் இடையே எகிப்து தலைநகர் கெய்ரோ வில் அமைதிப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை தொடங்கியது. இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 72 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.
இந்நிலையில் எகிப்து அரசின் ஏற்பாட்டின் பேரில் கெய்ரோவில் திங்கள்கிழமை அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதலை நிறுத்தாதவரை பேச்சு வார்த்தையில் பங்கேற்கமாட்டோம் என்று இஸ்ரேல் அரசு உறுதியாக தெரிவித்து வந்த நிலையில், சர்வ தேச நெருக்கடி காரணமாக பேச்சுவார்த்தைக்கு முன் வந்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் தூதர் ஒருவர் கூறியபோது, எகிப்தில் இப்போது பேச்சுவார்த்தை தொடங்கி யுள்ளது. இந்த முயற்சி தோல்வி அடைந்தால் மறைமுகமாக பேச்சு வார்த்தை நடத்தவும் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.
ஐ.நா. வரவேற்பு
காஸா பகுதியில் 72 மணி நேர போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருப்பதை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவரது செய்தித் தொடர்பாளர் கூறியபோது, 3 நாள் போர் நிறுத்தம் மேலும் நிரந்தரமாக வேண்டும், அதற்கான முயற்சிகளில் ஐ.நா. சபை ஈடுபட்டுள்ளது, இரு தரப்பினருக்கும் இடையில் சுமுக உடன்பாடு எட்டுவதற்கு ஐ.நா. உதவ தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
எபோலா வைரஸ் நோய் பலி 1000-ஐ தாண்டியது; சோதனை மருந்தை அனுப்புகிறது அமெரிக்கா
மேற்கு ஆப்பிரிக்காவில், எபோலா வைரஸ் தாக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வேளையில் நோய்க்கான சோதனை மருந்தை லைபீரியாவுக்கு அனுப்ப அமெரிக்கா ஏற்பாடு செய்து வருகிறது.
எபோலா வைரஸ் அபாயகரமாக பரவி வரும் ஆப்பிரிக்காவின் கினியா, லைபீரியா மற்றும் சீயேரா லியோனா ஆகிய நாடுகளில், இந்த நோய் பாதிப்புக்கு உள்ளாகி பலியானோர் எண்ணிக்கை 1,013 ஆக உள்ளது.
இந்த நோயின் தாக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சுகாதாரமான உணவு, தண்ணீர், மருந்து, போக்குவரத்து என அனைத்து வகையிலும் விலை உயர்வு உச்சத்தை தொட்டுள்ளது.
இதனிடையே நைஜீரியாவில் எபோலாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை வழங்கிய செவிலியருக்கு எபோலா தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அரசு தெரிவித்துள்ளது. எபோலா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் உபயோகிக்க பிரத்தியேகமான கையுறைகளை மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு, சீன அரசு வழங்கியுள்ளது.
சோதனை மருந்து வழங்குகிறது அமெரிக்கா
எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டோர் லைபீரியாவில் அதிக அளவில் உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் தனியார் மருந்து நிறுவனம் இந்த நோய்க்கான சோதனை மருந்தை கண்டுபிடித்துள்ளது.
நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட போது, 2 அமெரிக்கர்கள், எபோலா நோயால் பாதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அந்த பரிசோதனை மருந்து வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் சற்று குணமாகி வருவதாக அமெரிக்க சுகாதார மையம் உறுதி செய்தது.
எனவே, இந்த சோதனை மருந்தை, வழங்கும்படி அமெரிக்காவிடம் லைபீரியா அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பரிசோதனைக்குரிய அந்த மருந்து இந்த வாரம் லைபீரியாவுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த தகவலை லைபீரியா அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப் தெரிவித்துள்ளார். முன்னதாக ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனம் நடத்திய கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆப்ப்பிரிக்காவின் கினியா நாட்டு கிராமத்தில் தொடங்கி சியர்ரா லியோன் நாட்டிற்கு பரவிய இந்த வைரஸ் லைபீரியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளிலும் திடர்ந்து தாக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நோய்க்கு தகுந்த மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் பலி எண்ணிக்கை இந்த நாடுகளில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மேற்கு ஆப்பிரிக்காவில், எபோலா வைரஸ் தாக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வேளையில் நோய்க்கான சோதனை மருந்தை லைபீரியாவுக்கு அனுப்ப அமெரிக்கா ஏற்பாடு செய்து வருகிறது.
எபோலா வைரஸ் அபாயகரமாக பரவி வரும் ஆப்பிரிக்காவின் கினியா, லைபீரியா மற்றும் சீயேரா லியோனா ஆகிய நாடுகளில், இந்த நோய் பாதிப்புக்கு உள்ளாகி பலியானோர் எண்ணிக்கை 1,013 ஆக உள்ளது.
இந்த நோயின் தாக்கம் ஆப்பிரிக்க நாடுகளில் மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சுகாதாரமான உணவு, தண்ணீர், மருந்து, போக்குவரத்து என அனைத்து வகையிலும் விலை உயர்வு உச்சத்தை தொட்டுள்ளது.
இதனிடையே நைஜீரியாவில் எபோலாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை வழங்கிய செவிலியருக்கு எபோலா தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அரசு தெரிவித்துள்ளது. எபோலா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும் உபயோகிக்க பிரத்தியேகமான கையுறைகளை மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு, சீன அரசு வழங்கியுள்ளது.
சோதனை மருந்து வழங்குகிறது அமெரிக்கா
எபோலா வைரஸால் பாதிக்கப்பட்டோர் லைபீரியாவில் அதிக அளவில் உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் தனியார் மருந்து நிறுவனம் இந்த நோய்க்கான சோதனை மருந்தை கண்டுபிடித்துள்ளது.
நோய் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட போது, 2 அமெரிக்கர்கள், எபோலா நோயால் பாதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அந்த பரிசோதனை மருந்து வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் சற்று குணமாகி வருவதாக அமெரிக்க சுகாதார மையம் உறுதி செய்தது.
எனவே, இந்த சோதனை மருந்தை, வழங்கும்படி அமெரிக்காவிடம் லைபீரியா அரசு கேட்டுக்கொண்டுள்ளது. பரிசோதனைக்குரிய அந்த மருந்து இந்த வாரம் லைபீரியாவுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த தகவலை லைபீரியா அதிபர் எல்லன் ஜான்சன் சர்லீப் தெரிவித்துள்ளார். முன்னதாக ஜெனீவாவில் உலக சுகாதார நிறுவனம் நடத்திய கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆப்ப்பிரிக்காவின் கினியா நாட்டு கிராமத்தில் தொடங்கி சியர்ரா லியோன் நாட்டிற்கு பரவிய இந்த வைரஸ் லைபீரியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளிலும் திடர்ந்து தாக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். நோய்க்கு தகுந்த மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் பலி எண்ணிக்கை இந்த நாடுகளில் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மலை முகடு மீது செல்ஃபீ எடுக்க முயன்ற போலந்து தம்பதி உயிரிழப்பு
போர்ச்சுகலில், சுற்றுலா சென்ற போலாந்து தம்பதி, மலை முகடு மீது நின்று செல்ஃபீ எடுக்கும் ஆர்வத்தில் அங்கிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
போர்ச்சுகலின் லிஸ்பனில் உள்ள கேபா டீ ரோகா பகுதிக்கு சுற்றுலா சென்ற போலந்து தம்பதியினர், மலைப்பகுதியில் ஆர்வமாக தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மலைமுகடுக்கு சென்று இருவரும் சேர்ந்து செல்ஃபீ படம் எடுத்துக்கொள்ள நினைத்தனர். மலை முகடில் செல்ஃபீ எடுக்க முயன்றபோது அங்கிருந்து தவறி விழுந்து அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தம்பதியினர் இருவரும் தவறி விழும்போது, அவர்களின் 5 மற்றும் 6 வயதுடைய குழந்தைகள் இருவரும் அந்த பகுதியில் இருந்துள்ளனர். இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதும், போர்ச்சுகல் காவல்துறை அதிகாரிகள் தம்பதியினரின் உடல்களை தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு, அவர்களின் உடல்களை திங்களன்று கண்டெடுத்தனர்.
முன்னதாக, இதே போன்று மெக்சிகோவில் செல்ஃபீ எடுக்கும் ஆர்வத்தில், தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுடுவது போன்று போஸ் கொடுத்து, எதிர்பாராத விதமாக சுட்டுக்கொண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
போர்ச்சுகலில், சுற்றுலா சென்ற போலாந்து தம்பதி, மலை முகடு மீது நின்று செல்ஃபீ எடுக்கும் ஆர்வத்தில் அங்கிருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
போர்ச்சுகலின் லிஸ்பனில் உள்ள கேபா டீ ரோகா பகுதிக்கு சுற்றுலா சென்ற போலந்து தம்பதியினர், மலைப்பகுதியில் ஆர்வமாக தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த மலைமுகடுக்கு சென்று இருவரும் சேர்ந்து செல்ஃபீ படம் எடுத்துக்கொள்ள நினைத்தனர். மலை முகடில் செல்ஃபீ எடுக்க முயன்றபோது அங்கிருந்து தவறி விழுந்து அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தம்பதியினர் இருவரும் தவறி விழும்போது, அவர்களின் 5 மற்றும் 6 வயதுடைய குழந்தைகள் இருவரும் அந்த பகுதியில் இருந்துள்ளனர். இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதும், போர்ச்சுகல் காவல்துறை அதிகாரிகள் தம்பதியினரின் உடல்களை தேடும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு, அவர்களின் உடல்களை திங்களன்று கண்டெடுத்தனர்.
முன்னதாக, இதே போன்று மெக்சிகோவில் செல்ஃபீ எடுக்கும் ஆர்வத்தில், தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுடுவது போன்று போஸ் கொடுத்து, எதிர்பாராத விதமாக சுட்டுக்கொண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஈராக் கிளர்ச்சியாளர்களிடமிருந்து 2 நகரங்கள் மீட்பு
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சி படைகளின் முகாம்களை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. இந்த தாக்குதல் மாதக்கணக்கில் நீடிக்கும் என்று பென்டகன் அறிவித்துள்ளது.
ஈராக்கில் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தும் என்று அந்த நாட்டு அதிபர் பராக் ஒபாமா அண்மையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்க போர் விமானங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைகளின் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சில நாள்களாக நீடிக்கும் இந்தத் தாக்குதல் திங்கள் கிழமையும் தொடர்ந்தது.
அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் இர்பில் நகரில் குண்டுகளை வீசின. இதில் பலர் உயிரிழந்ததாகவும் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்ததாகவும் அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்நாட்டுப் போர் காரணமாக வடக்குப் பிராந்திய மலைப் பகுதி களில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு அமெரிக்க ராணுவத் தின் சரக்கு விமானங்கள் மூலம் உணவுப் பொட்டலங்களும் குடிநீர் பாட்டீல்களும் வீசப்பட்டன.
அமெரிக்க ராணுவ உதவியுடன் கிளர்ச்சிப் படைகள் பிடியில் சிக்கியிருந்த சுமார் 20,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக தன்னாட்சி அதிகாரம் பெற்ற குர்து படைகளும் போரிட்டு வருகின்றன. கிளர்ச்சிப் படைகள் கட்டுப்பாட்டில் இருந்த மாக்மூர், கெவர் ஆகிய நகரங்களை அந்தப் படைகள் மீட்டுள்ளன.
பிரான்ஸ் ஆயுத உதவி
இதனிடையே ஈராக்கின் குர்து படைகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்ய பிரான்ஸ் முன்வந்துள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரன்ட் பேபியஸ் கூறியபோது, குர்து படைகள் தங்கள் பகுதியை தற்காத்துக் கொள்ள அதிநவீன ஆயுதங்கள் வழங்க பரிசீலித்து வருகிறோம். இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியனுடன் ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
பிரதமர் மாலிக்குக்கு ஆதரவாக நீதிமன்றம் உத்தரவு
ஈராக்கில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் நூரி அல் மாலிக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. மூன்றாவது முறையாக அவர் பிரதமராக பதவியேற்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு, கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த நாட்டு அதிபர் புவத் மாஸு அதிகாரபூர்வமாக மாலிக்கை பிரதமராக அறிவிக்கவில்லை. மாலிக்குக்கு பதிலாக புதிய பிரதமரை தேர்வு செய்யுமாறு நாடாளுமன்றத்தை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை எதிர்த்து மாலிக் தரப்பில் ஈராக் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாலிக்குக்கு ஆதரவாக திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவின் முழுவிவரம் வெளியிடப்படவில்லை.
இந்த விவகாரத்தால் தலைநகர் பாக்தாதில் போலீஸார், ராணுவம், தீவிரவாத எதிர்ப்புப் படை என பெரும் எண்ணிக்கையில் போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியபோது, நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் பிரதமரும் அதிபரும் சுமுக உடன்பாடு காண வேண்டும். இந்த விவகாரத்தில் உதவி செய்ய அமெரிக்க தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவ உதவியுடன் கிளர்ச்சிப் படைகள் பிடியில் சிக்கியிருந்த சுமார் 20,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது.
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சி படைகளின் முகாம்களை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. இந்த தாக்குதல் மாதக்கணக்கில் நீடிக்கும் என்று பென்டகன் அறிவித்துள்ளது.
ஈராக்கில் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தும் என்று அந்த நாட்டு அதிபர் பராக் ஒபாமா அண்மையில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்க போர் விமானங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைகளின் முகாம்களை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சில நாள்களாக நீடிக்கும் இந்தத் தாக்குதல் திங்கள் கிழமையும் தொடர்ந்தது.
அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் இர்பில் நகரில் குண்டுகளை வீசின. இதில் பலர் உயிரிழந்ததாகவும் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்ததாகவும் அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உள்நாட்டுப் போர் காரணமாக வடக்குப் பிராந்திய மலைப் பகுதி களில் தஞ்சமடைந்துள்ள மக்களுக்கு அமெரிக்க ராணுவத் தின் சரக்கு விமானங்கள் மூலம் உணவுப் பொட்டலங்களும் குடிநீர் பாட்டீல்களும் வீசப்பட்டன.
அமெரிக்க ராணுவ உதவியுடன் கிளர்ச்சிப் படைகள் பிடியில் சிக்கியிருந்த சுமார் 20,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக தன்னாட்சி அதிகாரம் பெற்ற குர்து படைகளும் போரிட்டு வருகின்றன. கிளர்ச்சிப் படைகள் கட்டுப்பாட்டில் இருந்த மாக்மூர், கெவர் ஆகிய நகரங்களை அந்தப் படைகள் மீட்டுள்ளன.
பிரான்ஸ் ஆயுத உதவி
இதனிடையே ஈராக்கின் குர்து படைகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்ய பிரான்ஸ் முன்வந்துள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரன்ட் பேபியஸ் கூறியபோது, குர்து படைகள் தங்கள் பகுதியை தற்காத்துக் கொள்ள அதிநவீன ஆயுதங்கள் வழங்க பரிசீலித்து வருகிறோம். இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியனுடன் ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
பிரதமர் மாலிக்குக்கு ஆதரவாக நீதிமன்றம் உத்தரவு
ஈராக்கில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் நூரி அல் மாலிக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியது. மூன்றாவது முறையாக அவர் பிரதமராக பதவியேற்க முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
ஆனால் பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பு, கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த நாட்டு அதிபர் புவத் மாஸு அதிகாரபூர்வமாக மாலிக்கை பிரதமராக அறிவிக்கவில்லை. மாலிக்குக்கு பதிலாக புதிய பிரதமரை தேர்வு செய்யுமாறு நாடாளுமன்றத்தை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதை எதிர்த்து மாலிக் தரப்பில் ஈராக் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மாலிக்குக்கு ஆதரவாக திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அந்த நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவின் முழுவிவரம் வெளியிடப்படவில்லை.
இந்த விவகாரத்தால் தலைநகர் பாக்தாதில் போலீஸார், ராணுவம், தீவிரவாத எதிர்ப்புப் படை என பெரும் எண்ணிக்கையில் போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர். இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி கூறியபோது, நாட்டில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சூழ்நிலையில் பிரதமரும் அதிபரும் சுமுக உடன்பாடு காண வேண்டும். இந்த விவகாரத்தில் உதவி செய்ய அமெரிக்க தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவ உதவியுடன் கிளர்ச்சிப் படைகள் பிடியில் சிக்கியிருந்த சுமார் 20,000 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 30 of 81 • 1 ... 16 ... 29, 30, 31 ... 55 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 30 of 81
|
|