புதிய பதிவுகள்
» டென்மார்க் அறவியலாளர்-நீல்ஸ்போர் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள்-அக்டோபர் 7
by ayyasamy ram Today at 8:10 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm
» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am
» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am
» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am
» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am
» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am
» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am
» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகச் செய்திகள்!
Page 16 of 81 •
Page 16 of 81 • 1 ... 9 ... 15, 16, 17 ... 48 ... 81
First topic message reminder :
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி
ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
சான்பிரான்சிஸ்கோவில் நடுவானில் மோதிக்கொண்ட விமானங்கள்
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடுவானில் பறந்து கொண்டிருந்த 2 சிறிய ரக விமானங்கள் ஒன்றோடு ஒன்று திடீரென மோதிக்கொண்டன. இதில் ஒரு விமானம் கடலில் விழுந்தது. மற்றொரு விமானம் அருகில் இருந்த விமானநிலையத்தில் பத்திரமாக தரை இறக்கப்பட்டது.
கடலில் விழுந்த விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 2 விமானங்களிலும் தலா ஒரு விமானி மட்டுமே இருந்தனர். கடலில் விழுந்த விமானத்தின் விமானி கதி என்ன என்பது தெரியவில்லை.
எகிப்தில் 683 பேருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
எகிப்து நாட்டில் முகமது முர்சியின் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து மின்யா நகரில் அவரது சகோதரத்துவ கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர். வன்முறையில் ஏராளமானோர் பலியானார்கள். போலீஸ் அதிகாரிகள் தாக்கபட்டனர் இதில் எகிப்தில் தடைசெய்யப்பட்டுள்ள முஸ்லீம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவரான முகமது பாதீக்கும் அவ்வியக்கத்தின் ஆதரவாளர்கள் 700 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டின் நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.
இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு தற்போது எகிப்தின் மூத்த மத அதிகாரியான தலைமை முப்தியின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் எடுக்கின்ற முடிவு ஜூன் மாத பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன் இதே நீதிபதி 529 பேருக்கு கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கபட்டது இதில் 40 பேர் மரண தண்டைனையை மட்டும் உறுதி செய்தார்.
எகிப்து நாட்டில் முகமது முர்சியின் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து மின்யா நகரில் அவரது சகோதரத்துவ கட்சியினர் போராட்டங்கள் நடத்தினர். வன்முறையில் ஏராளமானோர் பலியானார்கள். போலீஸ் அதிகாரிகள் தாக்கபட்டனர் இதில் எகிப்தில் தடைசெய்யப்பட்டுள்ள முஸ்லீம் சகோதரத்துவ இயக்கத்தின் தலைவரான முகமது பாதீக்கும் அவ்வியக்கத்தின் ஆதரவாளர்கள் 700 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டின் நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.
இவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கு தற்போது எகிப்தின் மூத்த மத அதிகாரியான தலைமை முப்தியின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் எடுக்கின்ற முடிவு ஜூன் மாத பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன் இதே நீதிபதி 529 பேருக்கு கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கபட்டது இதில் 40 பேர் மரண தண்டைனையை மட்டும் உறுதி செய்தார்.
இருவருக்கு புனிதர் பட்டம் : வாடிகனில் பிரமாண்ட விழா
ரோம்: போப் ஜான் பால் மற்றும் போப் 23வது ஜான் ஆகியோருக்கு, வாடிகனில், நேற்று முன்தினம், புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. ஏசுநாதர் காட்டிய வழியில், நன்னெறியில் வாழ்ந்து, அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமை பெற்ற கிறிஸ்தவ பெரியவர்களுக்கு, புனிதர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது.
புனிதர் பட்டம் பெற்றவரின் பெயரால் ஆலயம் எழுப்பி, அவரை வழிபட கத்தோலிக்க திருச்சபை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், வாழ்நாளின் போதும், இறப்புக்கும் பின்பும் அற்புதங்கள் நிகழ்த்திய முன்னாள் போப் இரண்டாவது ஜான்பால் மற்றும் போப் 23வது ஜான் ஆகியோர், நேற்று முன்தினம், புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். வாடிகன் நகரில் நடந்த பிரமாண்ட விழாவில், போப் பிரான்சிஸ் தலைமையில் நடந்த பிரார்த்தனையின் போது, ஜான்பால் மற்றும் ஜான் ஆகியோருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பதவி விலகிய முன்னாள் போப், பெனிடிக்ட் உட்பட, 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
ஈராக்: வாக்குச்சாவடிகளின் மீது மனித குண்டு தாக்குதல்-57 பேர் பலி
அமெரிக்க படைகளின் வெளியேற்றத்துக்குப் பிறகு ஈராக்கில் கடந்த ஓராண்டு காலமாக வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இம்மாதம் 30-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமீப காலமாக தாக்குதல்களும், அதன் விளைவாக உயிரிழப்புகளும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
சுமார் 2 கோடி மக்கள் வாக்களிக்க உள்ள இந்த தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களும், பாதுகாப்பு படையினரும் நேற்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அந்த வாக்குச்சாவடிகளின் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.
மேற்கு பாக்தாத்தில் உள்ள ஒரு வாக்குசாவடியில் நடந்த மனித குண்டு தாக்குதலில் 7 போலீசார் பலியாகினர். பாக்தாத்தின் வடக்கு பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மீதும் மனித குண்டு தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர்.
நாட்டின் பிற பகுதிகளில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் மேலும் 15 பேர் பலியாகினர். உச்சகட்டமாக ஈரான்- ஈராக் எல்லைப்பகுதியான கனாக்கின் நகரில் நிகழ்ந்த மனித குண்டு தாக்குதலில் 30 பேர் உடல் சிதறி பலியாகினர்.
இந்த ஒரு நாள் தாக்குதல் சம்பவங்களில் மட்டும் 57 பேர் பலியாகி, இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், நாளை சராசரி மக்கள் வாக்களிக்கும் போது என்ன அசம்பாவிதம் நேருமோ? என்ற பீதியில் ஈராக் மக்கள் உறைந்துப் போய் உள்ளனர்.
அமெரிக்க படைகளின் வெளியேற்றத்துக்குப் பிறகு ஈராக்கில் கடந்த ஓராண்டு காலமாக வன்முறை தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இம்மாதம் 30-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமீப காலமாக தாக்குதல்களும், அதன் விளைவாக உயிரிழப்புகளும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
சுமார் 2 கோடி மக்கள் வாக்களிக்க உள்ள இந்த தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ராணுவ வீரர்களும், பாதுகாப்பு படையினரும் நேற்று தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அந்த வாக்குச்சாவடிகளின் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தினர்.
மேற்கு பாக்தாத்தில் உள்ள ஒரு வாக்குசாவடியில் நடந்த மனித குண்டு தாக்குதலில் 7 போலீசார் பலியாகினர். பாக்தாத்தின் வடக்கு பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மீதும் மனித குண்டு தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டனர்.
நாட்டின் பிற பகுதிகளில் நடந்த பல்வேறு தாக்குதல்களில் மேலும் 15 பேர் பலியாகினர். உச்சகட்டமாக ஈரான்- ஈராக் எல்லைப்பகுதியான கனாக்கின் நகரில் நிகழ்ந்த மனித குண்டு தாக்குதலில் 30 பேர் உடல் சிதறி பலியாகினர்.
இந்த ஒரு நாள் தாக்குதல் சம்பவங்களில் மட்டும் 57 பேர் பலியாகி, இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், நாளை சராசரி மக்கள் வாக்களிக்கும் போது என்ன அசம்பாவிதம் நேருமோ? என்ற பீதியில் ஈராக் மக்கள் உறைந்துப் போய் உள்ளனர்.
ஆப்கான், வெளிநாட்டு படைகள் கூட்டு தாக்குதல்: பாக். எல்லையில் 60 தீவிரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதரவாளர்களான ஹக்கானி தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பக்திகா மாகாணத்தில் ஜிருக் மாவட்டத்தில் ஆப்கான் படைகளை குறிவைத்து ஹக்கானி தீவிரவாதிகள், அவர்களது ஆதரவாளர்கள் என 300 பேர் நேற்று தாக்குதல் நடத்த முற்பட்டனர்.
அவர்களை எதிர்த்து ஆப்கான் ராணுவமும், மேற்கத்திய படைகளும் எதிர் தாக்குதல் நடத்தின.இருதரப்பிலும் பல மணிநேரம் பலத்த சண்டை நடந்தது. இந்த சண்டையில் குறைந்தது 60 தீவிரவாதிகள் பலியாகிவிட்டதாக ஆப்கானிஸ்தான் உளவுத்துறை கூறியது. ஆனால் இந்தச்சண்டை பற்றி நேட்டோ சர்வதேச படை கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.
ஆப்கானிஸ்தான் நாட்டில், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதரவாளர்களான ஹக்கானி தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பக்திகா மாகாணத்தில் ஜிருக் மாவட்டத்தில் ஆப்கான் படைகளை குறிவைத்து ஹக்கானி தீவிரவாதிகள், அவர்களது ஆதரவாளர்கள் என 300 பேர் நேற்று தாக்குதல் நடத்த முற்பட்டனர்.
அவர்களை எதிர்த்து ஆப்கான் ராணுவமும், மேற்கத்திய படைகளும் எதிர் தாக்குதல் நடத்தின.இருதரப்பிலும் பல மணிநேரம் பலத்த சண்டை நடந்தது. இந்த சண்டையில் குறைந்தது 60 தீவிரவாதிகள் பலியாகிவிட்டதாக ஆப்கானிஸ்தான் உளவுத்துறை கூறியது. ஆனால் இந்தச்சண்டை பற்றி நேட்டோ சர்வதேச படை கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.
தாவூத் குறித்த மோடி கருத்துக்கு பாகிஸ்தான் கண்டனம்
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசும்போது, நான் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானில் இருந்து தாவூத் இப்ராகிமை இந்தியாவிற்கு கொண்டு வருவேன் என கூறியிருந்தார்.
இதற்கு பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் அளித்துள்ள பதிலில், தாவூத் எங்கு வாழ்ந்து வருகிறார் என்பதை முதலில் மோடி முடிவு செய்யட்டும் என்று கூறியுள்ளார். இந்தியாவின் பிரதமராக மோடி வந்தால் அது நாடுகளுக்கு இடையேயான அமைதி கோட்பாட்டில் ஸ்திர தன்மையை வலுவிழக்க செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாவூத்திற்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது என கூறுபவர்கள் மற்றும் பாகிஸ்தான் மண்ணில் சோதனை நடத்தப்படும் என கூறுபவர்கள், இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படும் அளவிற்கு பலவீனமான நாடு அல்ல பாகிஸ்தான் என்பதை உணர வேண்டும். இது போன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை கேட்டு பொறுத்து கொண்டிருக்கும் நாடு அல்ல பாகிஸ்தான் என்பதனையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என கடுமையாக பதிலளித்துள்ளார்.
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசும்போது, நான் ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானில் இருந்து தாவூத் இப்ராகிமை இந்தியாவிற்கு கொண்டு வருவேன் என கூறியிருந்தார்.
இதற்கு பாகிஸ்தான் உள்துறை மந்திரி சவுத்ரி நிசார் அலி கான் அளித்துள்ள பதிலில், தாவூத் எங்கு வாழ்ந்து வருகிறார் என்பதை முதலில் மோடி முடிவு செய்யட்டும் என்று கூறியுள்ளார். இந்தியாவின் பிரதமராக மோடி வந்தால் அது நாடுகளுக்கு இடையேயான அமைதி கோட்பாட்டில் ஸ்திர தன்மையை வலுவிழக்க செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாவூத்திற்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுக்கிறது என கூறுபவர்கள் மற்றும் பாகிஸ்தான் மண்ணில் சோதனை நடத்தப்படும் என கூறுபவர்கள், இது போன்ற அச்சுறுத்தல்களுக்கு பயப்படும் அளவிற்கு பலவீனமான நாடு அல்ல பாகிஸ்தான் என்பதை உணர வேண்டும். இது போன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை கேட்டு பொறுத்து கொண்டிருக்கும் நாடு அல்ல பாகிஸ்தான் என்பதனையும் அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என கடுமையாக பதிலளித்துள்ளார்.
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மதகுருவின் மூக்கு, காதை வெட்டிய பெற்றோர் கைது
ஆப்கானிஸ்தானில் மதகுரு ஒருவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மதகுருவின் மூக்கு மற்றும் காதை வெட்டிவிட்டனர்.
இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களது உரிமைக்காக போராடினர். தலீபான் அரசு 2001 ம் ஆண்டு கவிழ்ந்ததை அடுத்து அமெரிக்கா தலைமையிலான படை அங்கு கால்பதித்ததும் வன்முறைகள் சற்று அடங்கியது. விரைவில் அமெரிக்க படை அங்கிருந்து வெளியேறலாம். இந்நிலையில் பக்லான் மகாணத்தில் உள்ள பக்லான் மர்காசி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு இஸ்லாமிய மதகுருவே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
4 மாதங்களுக்கு முன்னதாக பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த கொடுமையை தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் இஸ்லாமிய மதகுரு முல்லாக்கை தங்களது வீட்டுக்கு கடந்த திங்கள் கிழமை அன்று விருந்திற்கு அழைத்துள்ளனர். முல்லாக் விருந்துக்கு சென்றபோது அவரது மூக்கு மற்றும் காதை சிறுமியின் தந்தை அப்துல் காதர் வெட்டிவிட்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “வெட்டிய காதை பூனை சாப்பிட்டு இருக்கலாம், எனக்கு அதுபற்றி தெரியாது, ஆனால் நான் வெட்டிய மூக்கு தரையில் கிடந்தது” என்று அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து மாகாண போலீசார் பெற்றோர்களை கைது செய்துள்ளனர்.
பழிவாங்கும் நடவடிக்கையாக சிறுமியின் பெற்றோர்கள் மதகுருவின் கையை கட்டிவிட்டு மூக்கு மற்றும் காதை வெட்டியுள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதகுருவோ நான் எந்த ஒரு பாலியல் தொல்லையும் கொடுக்கவில்லை என்று மறுத்துள்ளார். அவருக்கு எதிராகவும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சர்வதேச படைகள் வெளியேறுவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் மதகுரு ஒருவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் மதகுருவின் மூக்கு மற்றும் காதை வெட்டிவிட்டனர்.
இஸ்லாமிய நாடான ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களது உரிமைக்காக போராடினர். தலீபான் அரசு 2001 ம் ஆண்டு கவிழ்ந்ததை அடுத்து அமெரிக்கா தலைமையிலான படை அங்கு கால்பதித்ததும் வன்முறைகள் சற்று அடங்கியது. விரைவில் அமெரிக்க படை அங்கிருந்து வெளியேறலாம். இந்நிலையில் பக்லான் மகாணத்தில் உள்ள பக்லான் மர்காசி பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு இஸ்லாமிய மதகுருவே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
4 மாதங்களுக்கு முன்னதாக பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த கொடுமையை தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் இஸ்லாமிய மதகுரு முல்லாக்கை தங்களது வீட்டுக்கு கடந்த திங்கள் கிழமை அன்று விருந்திற்கு அழைத்துள்ளனர். முல்லாக் விருந்துக்கு சென்றபோது அவரது மூக்கு மற்றும் காதை சிறுமியின் தந்தை அப்துல் காதர் வெட்டிவிட்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “வெட்டிய காதை பூனை சாப்பிட்டு இருக்கலாம், எனக்கு அதுபற்றி தெரியாது, ஆனால் நான் வெட்டிய மூக்கு தரையில் கிடந்தது” என்று அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து மாகாண போலீசார் பெற்றோர்களை கைது செய்துள்ளனர்.
பழிவாங்கும் நடவடிக்கையாக சிறுமியின் பெற்றோர்கள் மதகுருவின் கையை கட்டிவிட்டு மூக்கு மற்றும் காதை வெட்டியுள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதகுருவோ நான் எந்த ஒரு பாலியல் தொல்லையும் கொடுக்கவில்லை என்று மறுத்துள்ளார். அவருக்கு எதிராகவும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சர்வதேச படைகள் வெளியேறுவதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
ஆபாச வலைத்தளங்களுக்கு மூடுவிழா
வளர்ந்து வரும் நாகரிக உலகில் இணையதளத்தின் பங்கு மகத்தானது. இதன் மூலம் வீட்டில் இருந்து கொண்டே பல்வேறு அரிய பெரிய தகவல்களை உடனுக்குடன் பெற முடிகிறது. ஆனால் இத்தகைய இணையதளத்தில் கேடு விளைவிக்கும் சமாச்சாரங்களும் அடங்கியுள்ளன. அவற்றில் முக்கியமானவை ஆபாச வலைத்தளங்கள்.
இத்தகைய வலைத்தளங்களுக்கு பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ளன. அந்தவகையில் சீனாவும் தங்கள் நாட்டில் ஆபாச வலைத்தளங்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனாலும் அங்கு நூற்றுக்கணக்கான ஆபாச வலைத்தளங்கள் சட்டவிரோதமாக மீண்டும் செயல்பட்டு வருகின்றன.இவற்றை மீண்டும் தடை செய்யும் நோக்கில், வலை துய்மை - 2014 என்ற பெயரில் திட்டம் ஒன்றை சீனா வகுத்துள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான ஆபாச சமூக வலைத்தளங்களும் மூடப்பட்டன.
வளர்ந்து வரும் நாகரிக உலகில் இணையதளத்தின் பங்கு மகத்தானது. இதன் மூலம் வீட்டில் இருந்து கொண்டே பல்வேறு அரிய பெரிய தகவல்களை உடனுக்குடன் பெற முடிகிறது. ஆனால் இத்தகைய இணையதளத்தில் கேடு விளைவிக்கும் சமாச்சாரங்களும் அடங்கியுள்ளன. அவற்றில் முக்கியமானவை ஆபாச வலைத்தளங்கள்.
இத்தகைய வலைத்தளங்களுக்கு பல்வேறு நாடுகள் தடைவிதித்துள்ளன. அந்தவகையில் சீனாவும் தங்கள் நாட்டில் ஆபாச வலைத்தளங்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனாலும் அங்கு நூற்றுக்கணக்கான ஆபாச வலைத்தளங்கள் சட்டவிரோதமாக மீண்டும் செயல்பட்டு வருகின்றன.இவற்றை மீண்டும் தடை செய்யும் நோக்கில், வலை துய்மை - 2014 என்ற பெயரில் திட்டம் ஒன்றை சீனா வகுத்துள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான ஆபாச சமூக வலைத்தளங்களும் மூடப்பட்டன.
பாகிஸ்தானின் ராணுவ பலத்தை சந்தேகிக்க வேண்டாம் : தளபதி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ராணுவ பலத்தை யாரும் சந்தேகிக்க வேண்டாம். என அதன் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் தெரிவித்துள்ளார். ராவல் பிண்டியில் நடைபெற்ற தியாகிகள் தினத்தில் இவ்வாறு தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவ தளபதியாக கடந்தாண்டு பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக பேட்டியளித்தார்.
அப்போது கூறியதாவது: காஷ்மீர் பிரச்னை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிரச்னையாக இருந்துவருகிறது. மாநிலத்தில் தியாகிகள் செய்த தியாகங்களை வீண் போக விடமாட்டேன் என கூறினார். பாக் ராணுவம் அமைதியை விரும்புகிறது. அதே நேரத்தில் எந்தவிதமான பிரச்னையையும் சமாளிக்க கூடியது. மேலும் உள்நாட்டை பொறுத்த வரையில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை யே நம்புகிறது என கூறினார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ராணுவ பலத்தை யாரும் சந்தேகிக்க வேண்டாம். என அதன் ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் தெரிவித்துள்ளார். ராவல் பிண்டியில் நடைபெற்ற தியாகிகள் தினத்தில் இவ்வாறு தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவ தளபதியாக கடந்தாண்டு பொறுப்பேற்ற பின்னர் முதன் முறையாக பேட்டியளித்தார்.
அப்போது கூறியதாவது: காஷ்மீர் பிரச்னை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிரச்னையாக இருந்துவருகிறது. மாநிலத்தில் தியாகிகள் செய்த தியாகங்களை வீண் போக விடமாட்டேன் என கூறினார். பாக் ராணுவம் அமைதியை விரும்புகிறது. அதே நேரத்தில் எந்தவிதமான பிரச்னையையும் சமாளிக்க கூடியது. மேலும் உள்நாட்டை பொறுத்த வரையில் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் அரசியலமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை யே நம்புகிறது என கூறினார்.
- Sponsored content
Page 16 of 81 • 1 ... 9 ... 15, 16, 17 ... 48 ... 81
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 16 of 81
|
|