புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 90 of 100 •
Page 90 of 100 • 1 ... 46 ... 89, 90, 91 ... 95 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அம்மாவின், 'அட்வைஸ்!'
என் உறவினரின் மகனுக்கு, திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது, அவனுக்கு அவன் தாய் கூறிய அறிவுரை இது... திருமணத்திற்கு தயாராக உள்ள எல்லா ஆண்களுக்கும் இது தேவையான அறிவுரை என்பதால், அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:
* மகனே... மறந்தும் கூட என்னை, உன் மனைவியோட ஒப்பிட்டு பார்க்காதே! உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 26 ஆண்டு கால அனுபவம் இருக்கு; ஆனா, உன் மனைவிக்கு, உன்னை மாதிரியே இந்த வாழ்க்கை புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான், அவங்க அம்மாவும், அவளை பார்த்து பார்த்து வளர்த்திருப்பாங்க. இச்சூழ்நிலைக்கு பழக அவளுக்கு நாட்கள் ஆகலாம். அதற்கு பின், அவள், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக இருப்பாள்.
* மனைவியானவள், உன்னுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள வந்துள்ள தோழி; அவள், உன் அம்மா இல்லை. உன் அம்மாவுக்கு உன்னை கவனிப்பது மட்டும் தான் வேலை; ஆனா, உனக்கு, அவளை கவனிப்பது முக்கியம். நீங்க ரெண்டு பேரும், ஒருத்தருக்கு ஒருத்தர் அக்கறை வைத்து, அன்பு செலுத்துவது முக்கியம்.
* உன் வாழ்க்கையின் நல்லது - கெட்டது அனைத்திலும், உடனிருந்து பங்கு கொள்ளப் போகிறவள் மனைவி. அவளை மதிக்க வேண்டும். அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடு.
* பிறந்து, வளர்ந்து மகிழ்ந்திருந்த வீட்டை விட்டு, நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருப்பவள் மனைவி. அவள், இந்த வீட்டில் இயல்பா இருக்க நீ தான் உதவணும். சின்ன சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம். அதை கவனித்து, அவள் பிறந்த வீட்டில் இருப்பதை போல உணர வைக்கணும்.
* காதலிக்க வயசு தடையே இல்ல. எப்பவும் உன் மனைவியை, சந்தோஷமா வச்சுக்கோ... வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டு பேரையும், எப்பவும் இளமையா உணர வைக்கும். உங்க அப்பா என்னை எப்படி நடத்தறாரோ, அது போல, நீயும், உன் மனைவியை கவுரவமா மதித்து குடும்பம் நடத்து.
— இப்படி கூறினார்.
திருமணத்திற்கு முன், பெண்களுக்கு மட்டுமே அறிவுரைகள் வழங்கி வரும் நிலையில், என் உறவினப் பெண்மணி, தன் மகனுக்கு வழங்கிய அறிவுரையை, திருமணம் செய்து கொள்ளவிருக்கும் அனைத்து ஆண்களும் கடைப்பிடிப்பது, இனிய இல்லறத்திற்கு வழிகோலும்!
பிரேமா கார்த்திகேயன், கொளத்தூர்.
என் உறவினரின் மகனுக்கு, திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது, அவனுக்கு அவன் தாய் கூறிய அறிவுரை இது... திருமணத்திற்கு தயாராக உள்ள எல்லா ஆண்களுக்கும் இது தேவையான அறிவுரை என்பதால், அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்:
* மகனே... மறந்தும் கூட என்னை, உன் மனைவியோட ஒப்பிட்டு பார்க்காதே! உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 26 ஆண்டு கால அனுபவம் இருக்கு; ஆனா, உன் மனைவிக்கு, உன்னை மாதிரியே இந்த வாழ்க்கை புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான், அவங்க அம்மாவும், அவளை பார்த்து பார்த்து வளர்த்திருப்பாங்க. இச்சூழ்நிலைக்கு பழக அவளுக்கு நாட்கள் ஆகலாம். அதற்கு பின், அவள், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக இருப்பாள்.
* மனைவியானவள், உன்னுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள வந்துள்ள தோழி; அவள், உன் அம்மா இல்லை. உன் அம்மாவுக்கு உன்னை கவனிப்பது மட்டும் தான் வேலை; ஆனா, உனக்கு, அவளை கவனிப்பது முக்கியம். நீங்க ரெண்டு பேரும், ஒருத்தருக்கு ஒருத்தர் அக்கறை வைத்து, அன்பு செலுத்துவது முக்கியம்.
* உன் வாழ்க்கையின் நல்லது - கெட்டது அனைத்திலும், உடனிருந்து பங்கு கொள்ளப் போகிறவள் மனைவி. அவளை மதிக்க வேண்டும். அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடு.
* பிறந்து, வளர்ந்து மகிழ்ந்திருந்த வீட்டை விட்டு, நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருப்பவள் மனைவி. அவள், இந்த வீட்டில் இயல்பா இருக்க நீ தான் உதவணும். சின்ன சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம். அதை கவனித்து, அவள் பிறந்த வீட்டில் இருப்பதை போல உணர வைக்கணும்.
* காதலிக்க வயசு தடையே இல்ல. எப்பவும் உன் மனைவியை, சந்தோஷமா வச்சுக்கோ... வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டு பேரையும், எப்பவும் இளமையா உணர வைக்கும். உங்க அப்பா என்னை எப்படி நடத்தறாரோ, அது போல, நீயும், உன் மனைவியை கவுரவமா மதித்து குடும்பம் நடத்து.
— இப்படி கூறினார்.
திருமணத்திற்கு முன், பெண்களுக்கு மட்டுமே அறிவுரைகள் வழங்கி வரும் நிலையில், என் உறவினப் பெண்மணி, தன் மகனுக்கு வழங்கிய அறிவுரையை, திருமணம் செய்து கொள்ளவிருக்கும் அனைத்து ஆண்களும் கடைப்பிடிப்பது, இனிய இல்லறத்திற்கு வழிகோலும்!
பிரேமா கார்த்திகேயன், கொளத்தூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கிட்டத்தட்ட நாங்களும் கிருஷ்ணாவுக்கு மேலே உள்ளமாதிரி அட்வைஸ் செய்தோம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெண்களை உற்சாகப்படுத்தலாமே!
என் தோழியை சந்திக்க, அவளது வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டில் அவள் இல்லை; நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருப்பதாக தோழியின் அம்மா கூறவே, என்ன நிகழ்ச்சி, எங்கே நடக்கிறது என்று விசாரித்து, அந்த இடத்திற்கு சென்றேன்.
அங்கே மேடையின்றி, பேனரின்றி இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கூடியிருந்தனர். என்னை பார்த்ததும் கை குலுக்கி, மகளிர் தின வாழ்த்துகளை பகிர்ந்த தோழி, மற்றவர்களுக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தாள்.
நிகழ்ச்சி மிக எளிமையாக இருந்தாலும், வலிமையான கருத்துகளை விவாதித்தனர். அப்பகுதியை சேர்ந்த பெண் டாக்டர், பெண் தாசில்தார் மற்றும் ஆசிரியைகள் சிறந்த ஆலோசனைகளை வழங்கினர்.
இறுதியில், இட்லிக்கடை நடத்தி, தன் பிள்ளைகளை படிக்க வைத்து வரும் விதவைத் தாய் ஒருவர் பேசியது, அனைவரையும் நெகிழச் செய்தது.
சிறிது நேரமே நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், பெண்களின் எழுச்சி, வளர்ச்சி பற்றிப் பேசியது, மிகுந்த மனநிறைவையும், தன்னம்பிக்கையையும் தந்தது. புத்தாண்டு மற்றும் காதலர் தினம் என்ற நமக்கு ஒத்துவராத கலாசாரங்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக, பெண்களை ஊக்கப்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தினால், சமுதாயத்தில் பெண்களின் நிலை நிச்சயம் மாறும்!
ஆர்.சுகன்யா, அரசரடி.
என் தோழியை சந்திக்க, அவளது வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டில் அவள் இல்லை; நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருப்பதாக தோழியின் அம்மா கூறவே, என்ன நிகழ்ச்சி, எங்கே நடக்கிறது என்று விசாரித்து, அந்த இடத்திற்கு சென்றேன்.
அங்கே மேடையின்றி, பேனரின்றி இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் கூடியிருந்தனர். என்னை பார்த்ததும் கை குலுக்கி, மகளிர் தின வாழ்த்துகளை பகிர்ந்த தோழி, மற்றவர்களுக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தாள்.
நிகழ்ச்சி மிக எளிமையாக இருந்தாலும், வலிமையான கருத்துகளை விவாதித்தனர். அப்பகுதியை சேர்ந்த பெண் டாக்டர், பெண் தாசில்தார் மற்றும் ஆசிரியைகள் சிறந்த ஆலோசனைகளை வழங்கினர்.
இறுதியில், இட்லிக்கடை நடத்தி, தன் பிள்ளைகளை படிக்க வைத்து வரும் விதவைத் தாய் ஒருவர் பேசியது, அனைவரையும் நெகிழச் செய்தது.
சிறிது நேரமே நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், பெண்களின் எழுச்சி, வளர்ச்சி பற்றிப் பேசியது, மிகுந்த மனநிறைவையும், தன்னம்பிக்கையையும் தந்தது. புத்தாண்டு மற்றும் காதலர் தினம் என்ற நமக்கு ஒத்துவராத கலாசாரங்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக, பெண்களை ஊக்கப்படுத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தினால், சமுதாயத்தில் பெண்களின் நிலை நிச்சயம் மாறும்!
ஆர்.சுகன்யா, அரசரடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விளையாட்டும் முக்கியமே!
தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியையான என் தோழியை சமீபத்தில் சந்தித்த போது, மாணவியர் விளையாட்டில் ஆர்வம் காட்டாதது குறித்து ஆதங்கப்பட்டவள், 'பெரும்பாலான உயர் வகுப்பு மாணவியர் விளையாட்டு வகுப்பையே வெறுக்கிறாங்க. வெயிலில் நின்று, உடற்பயிற்சி செய்வதும், விளையாடுவதும், அவங்களுக்கு வேப்பங்காயாய் கசக்குது.
ஏதாவது, நொண்டிச் சாக்கு சொல்லி, விளையாட்டு வகுப்பில் இருந்து 'எஸ்கேப்' ஆகின்றனர். இதற்கு, பெற்றோரும் உடந்தை. 'என் பொண்ணுக்கு, 'ஸ்கின்' அலர்ஜி, வெயில் ஒத்துக்காது, மயக்கம் வரும்...' என்று டாக்டர் சர்டிபிகேட் வாங்கி கொடுக்கிறாங்க.
'டீன் - ஏஜ் மாணவியர், வீட்டிலும் விளையாடுறதில்ல; பள்ளியில் விளையாடினாலாவது உடற்பயிற்சி கிடைக்கும் என்று எடுத்துச் சொன்னாலும், செவிடன் காதில் ஊதிய சங்காகத் தான் இருக்கிறது...' என்று அலுத்துக் கொண்டாள்.
முன்பெல்லாம் பெண் குழந்தைகள், வீட்டு வேலை செய்தனர். அதுவே, அவர்களுக்கு உடற்பயிற்சியாகவும் அமைந்தது. ஆனால், இன்றோ உடல் உழைப்பும் இல்ல; விளையாட்டும் கிடையாது. இதனால், வளர்ந்த பின், கர்ப்பப்பை தொந்தரவுகளும், குழந்தை பேறின்மையும், அதிகரிக்கிறது. பெற்றோரே... இனியாவது உங்கள் பெண் குழந்தைகளை, ஆரோக்கியமாக வளருங்கள்!
எச்.தஸ்மிலா, கீழக்கரை.
தனியார் பள்ளி உடற்பயிற்சி ஆசிரியையான என் தோழியை சமீபத்தில் சந்தித்த போது, மாணவியர் விளையாட்டில் ஆர்வம் காட்டாதது குறித்து ஆதங்கப்பட்டவள், 'பெரும்பாலான உயர் வகுப்பு மாணவியர் விளையாட்டு வகுப்பையே வெறுக்கிறாங்க. வெயிலில் நின்று, உடற்பயிற்சி செய்வதும், விளையாடுவதும், அவங்களுக்கு வேப்பங்காயாய் கசக்குது.
ஏதாவது, நொண்டிச் சாக்கு சொல்லி, விளையாட்டு வகுப்பில் இருந்து 'எஸ்கேப்' ஆகின்றனர். இதற்கு, பெற்றோரும் உடந்தை. 'என் பொண்ணுக்கு, 'ஸ்கின்' அலர்ஜி, வெயில் ஒத்துக்காது, மயக்கம் வரும்...' என்று டாக்டர் சர்டிபிகேட் வாங்கி கொடுக்கிறாங்க.
'டீன் - ஏஜ் மாணவியர், வீட்டிலும் விளையாடுறதில்ல; பள்ளியில் விளையாடினாலாவது உடற்பயிற்சி கிடைக்கும் என்று எடுத்துச் சொன்னாலும், செவிடன் காதில் ஊதிய சங்காகத் தான் இருக்கிறது...' என்று அலுத்துக் கொண்டாள்.
முன்பெல்லாம் பெண் குழந்தைகள், வீட்டு வேலை செய்தனர். அதுவே, அவர்களுக்கு உடற்பயிற்சியாகவும் அமைந்தது. ஆனால், இன்றோ உடல் உழைப்பும் இல்ல; விளையாட்டும் கிடையாது. இதனால், வளர்ந்த பின், கர்ப்பப்பை தொந்தரவுகளும், குழந்தை பேறின்மையும், அதிகரிக்கிறது. பெற்றோரே... இனியாவது உங்கள் பெண் குழந்தைகளை, ஆரோக்கியமாக வளருங்கள்!
எச்.தஸ்மிலா, கீழக்கரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மனை வாங்குவோர் கவனத்திற்கு!
சில ஆண்டுகளுக்கு முன், புறநகரில் வீட்டு மனை ஒன்றை வாங்கிப் போட்டிருந்தார் நண்பர். அதை பார்த்து வருவதற்காக, சமீபத்தில், என்னையும் அழைத்துச் சென்றார். பக்கத்து மனைக்காரர், நண்பரின் மனையில், இரண்டு அடி அகலத்துக்கு, ஆக்கிரமிப்பு செய்து, கட்டடம் எழுப்பியிருந்தது தெரிய வந்தது.
'என்ன இப்படி செய்துட்டீங்க...' என்று நண்பர் கேட்டதற்கு, 'நாங்கள் சரியாத்தான் கட்டியிருக்கோம்; மத்தவங்க இடத்தை ஆக்கிரமிக்க வேண்டிய அவசியம் இல்ல...' என்று கறாராக பேசினார்.
உடனே, சர்வேயரை வரவழைத்து, இரண்டு பேரின் மனைகளை அளந்ததில், பக்கத்து மனைக்காரரின் அத்துமீறல் தெரிந்தது.
'வீடு கட்டிக் கொடுத்த பில்டர் தப்பு செய்துட்டான்...' என்று பழியை திசை திருப்பிய பக்கத்து வீட்டுக்காரர், 'இரண்டு அடிக்கான பணத்தை கொடுக்கட்டுமா அல்லது அந்த இடம் வரைக்கும் இடிச்சுடட்டுமா...' என்று கேட்க, நண்பர் கூலாக, 'வேணாம்... எங்க இடத்துல கட்டியிருக்கீங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கணும்ன்னு தான் அளந்து காட்டினேன்...' என்றார் பெருந்தன்மையுடன்!
'பணம் வாங்கியிருக்கலாமே...' என்றேன்.
'தவறு என் மேலயும் இருக்கு; மனையை வாங்கிப் போட்டு, வருஷக் கணக்கா திரும்பிப் பாக்காமல் இருந்துட்டேன். அவ்வப்போது போய் பார்த்திருந்தால், பக்கத்து மனைக்காரர் வீடு கட்டும் போது, ஆரம்பத்திலேயே இதை தடுத்திருக்கலாம். குறைந்தபட்சம், என் இடத்தின் எல்லைகளில் அடையாளக் கல் நட்டு வைத்திருக்கலாம்; அதையும் செய்யல. நஷ்ட ஈடாக பணத்தை வாங்கலாம் தான்; ஆனா, எதிர்காலத்தில், அங்கே வீடு கட்டி குடியேறும் போது, அவரிடம் சுமூகமாக உறவாட முடியாது. அக்கம் பக்கத்தினரிடையே, நல்ல நட்புடன் இருப்பது அவசியம். அதற்காக, கொஞ்சம் விட்டுக் கொடுத்து தான் போகணும்...' என்றார்.
அவர் கூறியதை ஏற்றுக் கொண்டேன்.
சின்ன சம்பத், சென்னை.
சில ஆண்டுகளுக்கு முன், புறநகரில் வீட்டு மனை ஒன்றை வாங்கிப் போட்டிருந்தார் நண்பர். அதை பார்த்து வருவதற்காக, சமீபத்தில், என்னையும் அழைத்துச் சென்றார். பக்கத்து மனைக்காரர், நண்பரின் மனையில், இரண்டு அடி அகலத்துக்கு, ஆக்கிரமிப்பு செய்து, கட்டடம் எழுப்பியிருந்தது தெரிய வந்தது.
'என்ன இப்படி செய்துட்டீங்க...' என்று நண்பர் கேட்டதற்கு, 'நாங்கள் சரியாத்தான் கட்டியிருக்கோம்; மத்தவங்க இடத்தை ஆக்கிரமிக்க வேண்டிய அவசியம் இல்ல...' என்று கறாராக பேசினார்.
உடனே, சர்வேயரை வரவழைத்து, இரண்டு பேரின் மனைகளை அளந்ததில், பக்கத்து மனைக்காரரின் அத்துமீறல் தெரிந்தது.
'வீடு கட்டிக் கொடுத்த பில்டர் தப்பு செய்துட்டான்...' என்று பழியை திசை திருப்பிய பக்கத்து வீட்டுக்காரர், 'இரண்டு அடிக்கான பணத்தை கொடுக்கட்டுமா அல்லது அந்த இடம் வரைக்கும் இடிச்சுடட்டுமா...' என்று கேட்க, நண்பர் கூலாக, 'வேணாம்... எங்க இடத்துல கட்டியிருக்கீங்கன்னு நீங்க தெரிஞ்சுக்கணும்ன்னு தான் அளந்து காட்டினேன்...' என்றார் பெருந்தன்மையுடன்!
'பணம் வாங்கியிருக்கலாமே...' என்றேன்.
'தவறு என் மேலயும் இருக்கு; மனையை வாங்கிப் போட்டு, வருஷக் கணக்கா திரும்பிப் பாக்காமல் இருந்துட்டேன். அவ்வப்போது போய் பார்த்திருந்தால், பக்கத்து மனைக்காரர் வீடு கட்டும் போது, ஆரம்பத்திலேயே இதை தடுத்திருக்கலாம். குறைந்தபட்சம், என் இடத்தின் எல்லைகளில் அடையாளக் கல் நட்டு வைத்திருக்கலாம்; அதையும் செய்யல. நஷ்ட ஈடாக பணத்தை வாங்கலாம் தான்; ஆனா, எதிர்காலத்தில், அங்கே வீடு கட்டி குடியேறும் போது, அவரிடம் சுமூகமாக உறவாட முடியாது. அக்கம் பக்கத்தினரிடையே, நல்ல நட்புடன் இருப்பது அவசியம். அதற்காக, கொஞ்சம் விட்டுக் கொடுத்து தான் போகணும்...' என்றார்.
அவர் கூறியதை ஏற்றுக் கொண்டேன்.
சின்ன சம்பத், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மாத்தி யோசிக்கலாமே!
அரசு பணியில், கடைநிலை ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற உறவினரைப் பார்க்க, கடந்த மாதம் அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன். அச்சமயம், தன் வீட்டு வாசலில், டூ வீலரை நிறுத்தியிருந்தவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் உறவினர். காரணம், அவரது வீட்டை ஒட்டி வட்டாட்சியர் அலுவலகம் இருந்ததால், இடப் பற்றாக்குறையால், இவர் வீட்டு முன்பாக, வாகனங்களை நிறுத்தியிருந்தனர்.
உறவினரை சமாதானப்படுத்தி, 'இதற்காக ஏன் கோபப்பட்டு, டென்ஷன் ஆகுறீங்க... வீட்டிற்கு முன் சிறிய அளவில் ஸ்டேஷனரி மற்றும் தேநீர் கடை போடுங்க; வருமானம் தூள் கிளப்பும்...' என்று யோசனை கொடுக்க, அவரும் அதை ஒரே வாரத்தில் செயல்படுத்தினார்.
இன்று, பென்ஷனுடன் கூடுதலாக, 10,000 ரூபாய் சம்பாதிக்கிறார். அத்துடன், தினமும், சுறுசுறுப்பாக வேலை செய்வதால், ஆரோக்கியத்துடன் உள்ளார். நண்பர்களே... நாம் நினைத்தால் இடையூறுகளையும், வெற்றியாக மாற்ற முடியும்!
வே.செந்தில்குமார், கொங்கணாபுரம்.
அரசு பணியில், கடைநிலை ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற உறவினரைப் பார்க்க, கடந்த மாதம் அவரது வீட்டிற்கு சென்றிருந்தேன். அச்சமயம், தன் வீட்டு வாசலில், டூ வீலரை நிறுத்தியிருந்தவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தார் உறவினர். காரணம், அவரது வீட்டை ஒட்டி வட்டாட்சியர் அலுவலகம் இருந்ததால், இடப் பற்றாக்குறையால், இவர் வீட்டு முன்பாக, வாகனங்களை நிறுத்தியிருந்தனர்.
உறவினரை சமாதானப்படுத்தி, 'இதற்காக ஏன் கோபப்பட்டு, டென்ஷன் ஆகுறீங்க... வீட்டிற்கு முன் சிறிய அளவில் ஸ்டேஷனரி மற்றும் தேநீர் கடை போடுங்க; வருமானம் தூள் கிளப்பும்...' என்று யோசனை கொடுக்க, அவரும் அதை ஒரே வாரத்தில் செயல்படுத்தினார்.
இன்று, பென்ஷனுடன் கூடுதலாக, 10,000 ரூபாய் சம்பாதிக்கிறார். அத்துடன், தினமும், சுறுசுறுப்பாக வேலை செய்வதால், ஆரோக்கியத்துடன் உள்ளார். நண்பர்களே... நாம் நினைத்தால் இடையூறுகளையும், வெற்றியாக மாற்ற முடியும்!
வே.செந்தில்குமார், கொங்கணாபுரம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இப்படியும் ஒரு கணவர்!
என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், வீட்டில் அவர் மட்டுமே சம்பாதிப்பவர் என்பதால், தன் குடும்பத்தாரிடம் சர்வாதிகாரமாக நடந்து கொள்வார். அத்துடன், தாம் சம்பாதிக்கும் பணத்தை பீரோவில் வைத்து பூட்டிக் கொள்வார். அவ்வப்போது வீட்டுச் செலவுக்கான பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, வேலைக்கு செல்லும் போது பீரோவை பூட்டி, சாவியை எடுத்துச் சென்று விடுவார்.
அண்மையில், அவர் வெளியூர் சென்றிருந்த போது, அவருடைய எட்டு வயது மகளுக்கு, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. கையில் பணம் இல்லாமல் திண்டாடிய அந்த பெண், பக்கத்து வீடுகளில் கடன் வாங்கி, குழந்தையின் மருத்துவ செலவை சமாளித்தாள்.
மனைவியை கூட நம்பால், பணத்தை பூட்டி வைக்கும் ஜென்மங்கள், இதைப் படித்த பிறகாவது திருந்த வேண்டும்!
கே.அருணாசலம், தென்காசி.
என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், வீட்டில் அவர் மட்டுமே சம்பாதிப்பவர் என்பதால், தன் குடும்பத்தாரிடம் சர்வாதிகாரமாக நடந்து கொள்வார். அத்துடன், தாம் சம்பாதிக்கும் பணத்தை பீரோவில் வைத்து பூட்டிக் கொள்வார். அவ்வப்போது வீட்டுச் செலவுக்கான பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, வேலைக்கு செல்லும் போது பீரோவை பூட்டி, சாவியை எடுத்துச் சென்று விடுவார்.
அண்மையில், அவர் வெளியூர் சென்றிருந்த போது, அவருடைய எட்டு வயது மகளுக்கு, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. கையில் பணம் இல்லாமல் திண்டாடிய அந்த பெண், பக்கத்து வீடுகளில் கடன் வாங்கி, குழந்தையின் மருத்துவ செலவை சமாளித்தாள்.
மனைவியை கூட நம்பால், பணத்தை பூட்டி வைக்கும் ஜென்மங்கள், இதைப் படித்த பிறகாவது திருந்த வேண்டும்!
கே.அருணாசலம், தென்காசி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199411krishnaamma wrote:இப்படியும் ஒரு கணவர்!
என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர், வீட்டில் அவர் மட்டுமே சம்பாதிப்பவர் என்பதால், தன் குடும்பத்தாரிடம் சர்வாதிகாரமாக நடந்து கொள்வார். அத்துடன், தாம் சம்பாதிக்கும் பணத்தை பீரோவில் வைத்து பூட்டிக் கொள்வார். அவ்வப்போது வீட்டுச் செலவுக்கான பணத்தை மட்டும் கொடுத்து விட்டு, வேலைக்கு செல்லும் போது பீரோவை பூட்டி, சாவியை எடுத்துச் சென்று விடுவார்.
அண்மையில், அவர் வெளியூர் சென்றிருந்த போது, அவருடைய எட்டு வயது மகளுக்கு, கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. கையில் பணம் இல்லாமல் திண்டாடிய அந்த பெண், பக்கத்து வீடுகளில் கடன் வாங்கி, குழந்தையின் மருத்துவ செலவை சமாளித்தாள்.
மனைவியை கூட நம்பால், பணத்தை பூட்டி வைக்கும் ஜென்மங்கள், இதைப் படித்த பிறகாவது திருந்த வேண்டும்!
கே.அருணாசலம், தென்காசி.
ம்ம்.. ரொம்ப சரி..மேலும் அவர் வந்ததும் எல்லோரும் எத்தனை கேவலமாய் பார்ப்பார்கள்?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாரம்பரிய உடை அணியலாமே!
கடந்த சில வாரங்களுக்கு முன், திருமண அழைப்பிதழ் கொண்டு வந்தார், என் உறவினர். அழைப்பிதழைப் பிரித்து பார்த்த போது, அதில், சிறிய அட்டை ஒன்று இணைக்கப்பட்டு, 'அனைவரும் பாரம்பரிய ஆடைகளை அணிந்து வந்து, திருமண தம்பதியை வாழ்த்த விரும்புகிறோம்...' என்று எழுதப்பட்டிருந்தது.
அதேபோன்றே, திருமண நாளன்று, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என, அனைவரும் புடவை, வேட்டி - சட்டை, பாவாடை - தாவணி மற்றும் பட்டுப்பாவாடை - சட்டை அணிந்து வந்து அமர்க்களப்படுத்தினர்.
இதுகுறித்து உறவினரிடம் பேசிய போது, அவர், 'பார்ப்பதற்கு அழகாக தெரிவதுடன், மரியாதையையும் பெற்றுத் தருவது நம் பாரம்பரிய உடைகள்; இதை, இம்மாதிரி விசேஷங்களில் அனைவரும் அணியும் போது, அதைப் பார்பவர்களுக்கு, அழிந்து வரும் நம் கலாசாரத்தை நினைவுப்படுத்தும்...' என்றார்.
இதைக் கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. இம்முயற்சிக்கு அவருக்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றேன். பாரம்பரிய உடைகளை அணிவதால், அதன் அருமையும், அழகும் வெளிப்படும்; இதை அனைவரும் பின்பற்றலாமே!
ரா.முத்தம்மா தேவி, திருப்பூர்.
கடந்த சில வாரங்களுக்கு முன், திருமண அழைப்பிதழ் கொண்டு வந்தார், என் உறவினர். அழைப்பிதழைப் பிரித்து பார்த்த போது, அதில், சிறிய அட்டை ஒன்று இணைக்கப்பட்டு, 'அனைவரும் பாரம்பரிய ஆடைகளை அணிந்து வந்து, திருமண தம்பதியை வாழ்த்த விரும்புகிறோம்...' என்று எழுதப்பட்டிருந்தது.
அதேபோன்றே, திருமண நாளன்று, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என, அனைவரும் புடவை, வேட்டி - சட்டை, பாவாடை - தாவணி மற்றும் பட்டுப்பாவாடை - சட்டை அணிந்து வந்து அமர்க்களப்படுத்தினர்.
இதுகுறித்து உறவினரிடம் பேசிய போது, அவர், 'பார்ப்பதற்கு அழகாக தெரிவதுடன், மரியாதையையும் பெற்றுத் தருவது நம் பாரம்பரிய உடைகள்; இதை, இம்மாதிரி விசேஷங்களில் அனைவரும் அணியும் போது, அதைப் பார்பவர்களுக்கு, அழிந்து வரும் நம் கலாசாரத்தை நினைவுப்படுத்தும்...' என்றார்.
இதைக் கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. இம்முயற்சிக்கு அவருக்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றேன். பாரம்பரிய உடைகளை அணிவதால், அதன் அருமையும், அழகும் வெளிப்படும்; இதை அனைவரும் பின்பற்றலாமே!
ரா.முத்தம்மா தேவி, திருப்பூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199413krishnaamma wrote:பாரம்பரிய உடை அணியலாமே!
கடந்த சில வாரங்களுக்கு முன், திருமண அழைப்பிதழ் கொண்டு வந்தார், என் உறவினர். அழைப்பிதழைப் பிரித்து பார்த்த போது, அதில், சிறிய அட்டை ஒன்று இணைக்கப்பட்டு, 'அனைவரும் பாரம்பரிய ஆடைகளை அணிந்து வந்து, திருமண தம்பதியை வாழ்த்த விரும்புகிறோம்...' என்று எழுதப்பட்டிருந்தது.
அதேபோன்றே, திருமண நாளன்று, ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என, அனைவரும் புடவை, வேட்டி - சட்டை, பாவாடை - தாவணி மற்றும் பட்டுப்பாவாடை - சட்டை அணிந்து வந்து அமர்க்களப்படுத்தினர்.
இதுகுறித்து உறவினரிடம் பேசிய போது, அவர், 'பார்ப்பதற்கு அழகாக தெரிவதுடன், மரியாதையையும் பெற்றுத் தருவது நம் பாரம்பரிய உடைகள்; இதை, இம்மாதிரி விசேஷங்களில் அனைவரும் அணியும் போது, அதைப் பார்பவர்களுக்கு, அழிந்து வரும் நம் கலாசாரத்தை நினைவுப்படுத்தும்...' என்றார்.
இதைக் கேட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. இம்முயற்சிக்கு அவருக்கு வாழ்த்துகள் கூறி விடைபெற்றேன். பாரம்பரிய உடைகளை அணிவதால், அதன் அருமையும், அழகும் வெளிப்படும்; இதை அனைவரும் பின்பற்றலாமே!
ரா.முத்தம்மா தேவி, திருப்பூர்.
நல்ல ஐடியா ............டிரஸ் code இங்கும் உதவுகிறதா? ...........பலே பலே !
Page 90 of 100 • 1 ... 46 ... 89, 90, 91 ... 95 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 90 of 100
|
|