புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
by ayyasamy ram Today at 7:15 am
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm
» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
Karthikakulanthaivel |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 8 of 100 •
Page 8 of 100 • 1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பாஸ்ட்புட் கொடுமை!
எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிற்கு, குழந்தை பிறந்து நான்கு நாட்களில், அது, இறந்து விட்டது. அக்குழந்தைக்கு கேன்சராம். தாய்க்கு, கர்ப்பையில் கேன்சர் பாதிப்பு இருந்திருக்கிறது. அது, குழந்தையை பலி வாங்கி விட்டது.
கேன்சருக்கு காரணம், அந்த பெண், கர்ப்பமாக இருந்த போது, இயற்கை உணவை அறவே புறக்கணித்து, கடையில் விற்கும் ரெடிமேட் உணவுகள், திரும்ப திரும்பச் சுட வைத்த எண்ணெயில் பொரித்த பண்டங்கள், பேக்கரி பொருட்கள், சிப்ஸ் என்று, இவைகளையே, அதிகம் சாப்பிட்டு வந்துள்ளார். இதன் விளைவே, கர்ப்பபை புற்று நோய்.
'மேல்நாட்டு மோகத்தில், மக்கள் தாங்களாகவே நோயைத் தேடி கொள்கின்றனரே...' என்று, அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மிகவும் வேதனைப்பட்டார். இதைத் தான், 'சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்வது' என்று கூறுவர்.
இனிமேலாவது, இளம் தலைமுறையினர் நம்நாட்டு உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பரா!
nandri - பத்மா திருமலை, கோவை.
எனக்கு தெரிந்த ஒரு பெண்ணிற்கு, குழந்தை பிறந்து நான்கு நாட்களில், அது, இறந்து விட்டது. அக்குழந்தைக்கு கேன்சராம். தாய்க்கு, கர்ப்பையில் கேன்சர் பாதிப்பு இருந்திருக்கிறது. அது, குழந்தையை பலி வாங்கி விட்டது.
கேன்சருக்கு காரணம், அந்த பெண், கர்ப்பமாக இருந்த போது, இயற்கை உணவை அறவே புறக்கணித்து, கடையில் விற்கும் ரெடிமேட் உணவுகள், திரும்ப திரும்பச் சுட வைத்த எண்ணெயில் பொரித்த பண்டங்கள், பேக்கரி பொருட்கள், சிப்ஸ் என்று, இவைகளையே, அதிகம் சாப்பிட்டு வந்துள்ளார். இதன் விளைவே, கர்ப்பபை புற்று நோய்.
'மேல்நாட்டு மோகத்தில், மக்கள் தாங்களாகவே நோயைத் தேடி கொள்கின்றனரே...' என்று, அவருக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மிகவும் வேதனைப்பட்டார். இதைத் தான், 'சொந்தக் காசில் சூன்யம் வைத்துக் கொள்வது' என்று கூறுவர்.
இனிமேலாவது, இளம் தலைமுறையினர் நம்நாட்டு உணவு பழக்கத்தை கடைப்பிடிப்பரா!
nandri - பத்மா திருமலை, கோவை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
'அதற்கு' முன் அனுபவம் தேவையா?
சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றின், சில காட்சிகளைப் பார்த்து அதிர்ந்து போனேன். அதில் காமெடியன், 'கத்திச் சண்டையில் தோற்கலாம், கட்டில் சண்டையில் தோற்கக்கூடாது...' என, ஒரு ஆண்மகனுக்கு அதுவும், தன் தங்கையை விரும்பும் காதலனுக்கு அறிவுரை கூறி, அவனை, 'பலான' இடத்திற்கு, முன் அனுபவம் பெற அழைத்துச் செல்வதாக நீளுகிறது காட்சி.
அது நகைச்சுவை காட்சிதான் என்றாலும், எதற்கும் ஒரு எல்லை இல்லையா? இப்படி எல்லா ஆண்மகனும், முன் அனுபவம் தேடி புறப்பட்டால், எய்ட்சில் தான், முடியும். இதையே பெண்கள் செய்தால், இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா?
அன்றைக்கு நகைச்சுவை என்றால், அறிவு சார்ந்து இருக்கும். என்.எஸ்.கே., போன்றோர் மகுடம் சூட்டிய அந்த கலையில், இப்போது இரட்டை அர்த்த வசனங்களும், மலிவான யோசனைகளுமே முன்வைக்கப்படுகின்றன. நாட்டுப்பற்றோடு, தேசிய உணர்வையும் ஊட்டிய சினிமா, இன்றைக்கு வெறும், 'டைம் பாசாகி' விட்டது, கவலையளிக்கிறது.
இறுதியாக... நீங்கள் சந்தனமா மணக்க வேண்டாம் காமெடியன்களே... தீயா வேலை செய்றோம்கிற பேரில், நாயா வேலை செய்து, சமூகத்தை நாறடிக்க வேணாமே... என, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி - வாரமலர் - யாழினி கவுதம், காரைக்குடி.
சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்றின், சில காட்சிகளைப் பார்த்து அதிர்ந்து போனேன். அதில் காமெடியன், 'கத்திச் சண்டையில் தோற்கலாம், கட்டில் சண்டையில் தோற்கக்கூடாது...' என, ஒரு ஆண்மகனுக்கு அதுவும், தன் தங்கையை விரும்பும் காதலனுக்கு அறிவுரை கூறி, அவனை, 'பலான' இடத்திற்கு, முன் அனுபவம் பெற அழைத்துச் செல்வதாக நீளுகிறது காட்சி.
அது நகைச்சுவை காட்சிதான் என்றாலும், எதற்கும் ஒரு எல்லை இல்லையா? இப்படி எல்லா ஆண்மகனும், முன் அனுபவம் தேடி புறப்பட்டால், எய்ட்சில் தான், முடியும். இதையே பெண்கள் செய்தால், இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா?
அன்றைக்கு நகைச்சுவை என்றால், அறிவு சார்ந்து இருக்கும். என்.எஸ்.கே., போன்றோர் மகுடம் சூட்டிய அந்த கலையில், இப்போது இரட்டை அர்த்த வசனங்களும், மலிவான யோசனைகளுமே முன்வைக்கப்படுகின்றன. நாட்டுப்பற்றோடு, தேசிய உணர்வையும் ஊட்டிய சினிமா, இன்றைக்கு வெறும், 'டைம் பாசாகி' விட்டது, கவலையளிக்கிறது.
இறுதியாக... நீங்கள் சந்தனமா மணக்க வேண்டாம் காமெடியன்களே... தீயா வேலை செய்றோம்கிற பேரில், நாயா வேலை செய்து, சமூகத்தை நாறடிக்க வேணாமே... என, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி - வாரமலர் - யாழினி கவுதம், காரைக்குடி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நோ தீபாவளி, நோ பொங்கல்!
தீபாவளி பண்டிகையன்று, வாழ்த்துகள் பரிமாறிக் கொள்வதற்காக, கையில் ஸ்வீட் பாக்சோடு, நண்பர் ஒருவர் வீட்டுக்கு நேரில் சென்றிருந்தேன். குடியிருப்பில், நண்பரின் வீடு மட்டுமே கலகலப்பின்றி இருந்தது. வீட்டுக்குள், நான் கண்ட காட்சி, என்னை வியப்பில் ஆழ்த்தியது!
அக்கம் பக்கத்து வீட்டிலுள்ள, சமவயது பிள்ளைகளெல்லாம் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, ஆனந்தமாக கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், நண்பரின் பிள்ளைகளோ புத்தகமும், கையுமாக இருந்தனர். என் பார்வையை புரிந்து கொண்ட நண்பர், 'இந்த ஆண்டு எங்களுக்கு நோ தீபாவளி, நோ பொங்கல்...' என்றார்.
'ஏன்?' என்று கேட்டேன்.
'மகள், பிளஸ் 2 படிக்கிறாள்; மகன் பத்தாவது படிக்கிறான். இருவருமே, இந்த ஆண்டு, போர்டு எக்சாம் எழுத இருக்கிறார்கள். பரிட்சையில் நல்ல மார்க் எடுத்தால்தான், டிரஸ், ட்ரீட், என்டர்டெயின்மென்ட் எல்லாமே...' என நண்பர் கூற, அவரது பிள்ளைகளின் கண்களில், எதையோ, 'மிஸ்'செய்றோம் என்ற ஏக்கம் தெரிந்தது!
பெற்றோரே... பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த உங்களின் கனவு நியாயமானதாக இருக்கலாம். ஆனால், அதை செயல்படுத்துவதில், இத்தனை கண்டிப்பும், கறார்த்தனமும் தேவைதானா? கல்வியை ஊட்டுவது, இனிப்பாக இருக்க வேண்டுமேயல்லாமல், திணிப்பாக இருக்கக் கூடாது!
நன்றி - வாரமலர்- பாலா சரவணன், சென்னை.
தீபாவளி பண்டிகையன்று, வாழ்த்துகள் பரிமாறிக் கொள்வதற்காக, கையில் ஸ்வீட் பாக்சோடு, நண்பர் ஒருவர் வீட்டுக்கு நேரில் சென்றிருந்தேன். குடியிருப்பில், நண்பரின் வீடு மட்டுமே கலகலப்பின்றி இருந்தது. வீட்டுக்குள், நான் கண்ட காட்சி, என்னை வியப்பில் ஆழ்த்தியது!
அக்கம் பக்கத்து வீட்டிலுள்ள, சமவயது பிள்ளைகளெல்லாம் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, ஆனந்தமாக கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், நண்பரின் பிள்ளைகளோ புத்தகமும், கையுமாக இருந்தனர். என் பார்வையை புரிந்து கொண்ட நண்பர், 'இந்த ஆண்டு எங்களுக்கு நோ தீபாவளி, நோ பொங்கல்...' என்றார்.
'ஏன்?' என்று கேட்டேன்.
'மகள், பிளஸ் 2 படிக்கிறாள்; மகன் பத்தாவது படிக்கிறான். இருவருமே, இந்த ஆண்டு, போர்டு எக்சாம் எழுத இருக்கிறார்கள். பரிட்சையில் நல்ல மார்க் எடுத்தால்தான், டிரஸ், ட்ரீட், என்டர்டெயின்மென்ட் எல்லாமே...' என நண்பர் கூற, அவரது பிள்ளைகளின் கண்களில், எதையோ, 'மிஸ்'செய்றோம் என்ற ஏக்கம் தெரிந்தது!
பெற்றோரே... பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த உங்களின் கனவு நியாயமானதாக இருக்கலாம். ஆனால், அதை செயல்படுத்துவதில், இத்தனை கண்டிப்பும், கறார்த்தனமும் தேவைதானா? கல்வியை ஊட்டுவது, இனிப்பாக இருக்க வேண்டுமேயல்லாமல், திணிப்பாக இருக்கக் கூடாது!
நன்றி - வாரமலர்- பாலா சரவணன், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெண் பார்க்க செல்கிறீர்களா?
அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, என் நண்பரிடம் இருந்து போன் வந்தது. எங்கள் ஊரில் உள்ள கோவிலுக்கு, உடனடியாக வருமாறு அழைத்தார். என்ன விஷயம் என்று புரியாமல், நானும் அங்கு சென்றேன். அங்கு என் நண்பரும், மற்றும் அவரின் குடும்பத்தாரும், ஒரு இடத்தில் ஒன்று கூடியிருந்தனர். அப்போது, ஏற்கனவே அங்கு வந்திருந்த, மற்றொரு குடும்பத்தார், சற்று தொலைவில் அமர்ந்திருந்தனர்.
என் நண்பரின் அம்மா, அங்கிருந்த பெண், ஒருவரைக் காட்டி, 'பிடித்திருக்கிறதா?' என, அவரிடம் கேட்டார். அவரும் பிடித்திருக்கிறது என்று சொன்னவுடன், அவர் அங்கு சென்று, ஒரு பெண்ணிடம் பூவும், ஸ்வீட் பாக்சும் கொடுத்து, பேசிவிட்டு வந்தார். நடப்பது எதுவும் புரியாத நான், என்னவென்று விசாரித்தேன்.
அதற்கு அவர், சற்று தொலைவில் இருக்கும் பெண் தான், எங்க வீட்ல எனக்கு திருமணத்திற்கு பார்த்து வச்சிருக்கிற பொண்ணு என்றும், போட்டோவை பார்த்து, எங்கள் வீட்டில் சம்மதித்து விட்டனர். ஆனால், வரனை நேரில் பார்க்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதனால் தான், நேற்றே அப்பெண் வீட்டாரிடம், குடும்பத்துடன் கோவிலுக்கு வருமாறும், அங்கு பெண்ணை பார்த்துக் கொள்கிறோம் என்றும், கூறி விட்டோம்.
பெண் பார்க்க போகிறோம் என, ஒரு கூட்டத்தையே கிளப்பி கொண்டு போய், பெண்ணை பார்த்து, ஏதேனும் காரணத்தால் நின்று போனால், அந்த பெண்ணுக்கும், அவர் குடும்பத்திற்கும் ஏற்படும் மனகஷ்டத்திற்கும், கேலிப் பேச்சுக்கும் யார் பதில் சோல்வது!
மேலும், அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக பேசுவர். அதனால் தான், இம்மாதிரி பொது இடங்களில் சென்று பார்த்து விட்டு, பின், திருமணம் செய்ய சம்மதம் இருந்தால் மட்டும், அவர்கள் வீட்டிற்கு, உற்றார் உறவினரை அழைத்துக் கொண்டு போக முடிவெடுத்தோம்' என்று கூறினார். நண்பரின் இந்த யோசனை சரியென தோன்றியது.
நன்றி - வாரமலர்-- கா.கந்தசாமி, விருதுநகர்.
அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, என் நண்பரிடம் இருந்து போன் வந்தது. எங்கள் ஊரில் உள்ள கோவிலுக்கு, உடனடியாக வருமாறு அழைத்தார். என்ன விஷயம் என்று புரியாமல், நானும் அங்கு சென்றேன். அங்கு என் நண்பரும், மற்றும் அவரின் குடும்பத்தாரும், ஒரு இடத்தில் ஒன்று கூடியிருந்தனர். அப்போது, ஏற்கனவே அங்கு வந்திருந்த, மற்றொரு குடும்பத்தார், சற்று தொலைவில் அமர்ந்திருந்தனர்.
என் நண்பரின் அம்மா, அங்கிருந்த பெண், ஒருவரைக் காட்டி, 'பிடித்திருக்கிறதா?' என, அவரிடம் கேட்டார். அவரும் பிடித்திருக்கிறது என்று சொன்னவுடன், அவர் அங்கு சென்று, ஒரு பெண்ணிடம் பூவும், ஸ்வீட் பாக்சும் கொடுத்து, பேசிவிட்டு வந்தார். நடப்பது எதுவும் புரியாத நான், என்னவென்று விசாரித்தேன்.
அதற்கு அவர், சற்று தொலைவில் இருக்கும் பெண் தான், எங்க வீட்ல எனக்கு திருமணத்திற்கு பார்த்து வச்சிருக்கிற பொண்ணு என்றும், போட்டோவை பார்த்து, எங்கள் வீட்டில் சம்மதித்து விட்டனர். ஆனால், வரனை நேரில் பார்க்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது. அதனால் தான், நேற்றே அப்பெண் வீட்டாரிடம், குடும்பத்துடன் கோவிலுக்கு வருமாறும், அங்கு பெண்ணை பார்த்துக் கொள்கிறோம் என்றும், கூறி விட்டோம்.
பெண் பார்க்க போகிறோம் என, ஒரு கூட்டத்தையே கிளப்பி கொண்டு போய், பெண்ணை பார்த்து, ஏதேனும் காரணத்தால் நின்று போனால், அந்த பெண்ணுக்கும், அவர் குடும்பத்திற்கும் ஏற்படும் மனகஷ்டத்திற்கும், கேலிப் பேச்சுக்கும் யார் பதில் சோல்வது!
மேலும், அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக பேசுவர். அதனால் தான், இம்மாதிரி பொது இடங்களில் சென்று பார்த்து விட்டு, பின், திருமணம் செய்ய சம்மதம் இருந்தால் மட்டும், அவர்கள் வீட்டிற்கு, உற்றார் உறவினரை அழைத்துக் கொண்டு போக முடிவெடுத்தோம்' என்று கூறினார். நண்பரின் இந்த யோசனை சரியென தோன்றியது.
நன்றி - வாரமலர்-- கா.கந்தசாமி, விருதுநகர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிளாஸ்டிக் பையை ஒழிக்க...
சமீபத்தில், மும்பையில், ஒரு பிரபல டிபார்ட்மென்ட் கடையில், பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க, ஒரு நூதன முறையைப் பின்பற்றுவதைக் கண்டேன்.
வாடிக்கையாளர்கள், தங்கள் தேவைக்கேற்ப துணிப் பைகளை, சைஸ் வாரியாக, 50ரூபாய், 100ரூபாய் என, டெபாசிட் செய்து பெற்றுக் கொண்டு, பொருட்களை பெற்றுச் செல்லலாம். பின்னர், தாங்கள் எடுத்துச் சென்ற பையை திருப்பி தந்து, டிபாசிட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இங்கு, பிளாஸ்டிக் பை உபயோகம் இல்லை. கடைக்காரர்களும், பையை திருப்பித் தர, வாடிக்கையாளர்களை வற்புறுத்துவதில்லை. வாடிக்கையாளர்களும், மகிழ்ச்சியாக பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
எல்லாக் கடைகளிலும், இதைப் போலவே பின்பற்றலாமே? பிளாஸ்டிக் பைகளின் உபயோகம், மிகவும், குறைய வாய்ப்புள்ளது.
நன்றி - வாரமலர்- கே.ஸ்ரீனிவாசன், சென்னை.
சமீபத்தில், மும்பையில், ஒரு பிரபல டிபார்ட்மென்ட் கடையில், பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க, ஒரு நூதன முறையைப் பின்பற்றுவதைக் கண்டேன்.
வாடிக்கையாளர்கள், தங்கள் தேவைக்கேற்ப துணிப் பைகளை, சைஸ் வாரியாக, 50ரூபாய், 100ரூபாய் என, டெபாசிட் செய்து பெற்றுக் கொண்டு, பொருட்களை பெற்றுச் செல்லலாம். பின்னர், தாங்கள் எடுத்துச் சென்ற பையை திருப்பி தந்து, டிபாசிட்டை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இங்கு, பிளாஸ்டிக் பை உபயோகம் இல்லை. கடைக்காரர்களும், பையை திருப்பித் தர, வாடிக்கையாளர்களை வற்புறுத்துவதில்லை. வாடிக்கையாளர்களும், மகிழ்ச்சியாக பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
எல்லாக் கடைகளிலும், இதைப் போலவே பின்பற்றலாமே? பிளாஸ்டிக் பைகளின் உபயோகம், மிகவும், குறைய வாய்ப்புள்ளது.
நன்றி - வாரமலர்- கே.ஸ்ரீனிவாசன், சென்னை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யாராவது படிச்சிங்களா நண்பர்களே !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சென்னையில் இருக்கும் உறவுக்காரரின் மகள் திருமணத்துக்கு, உறவினர்கள் புடைசூழ சென்று வந்தோம்.
அடுத்த வாரமே, அங்கிருந்து, எங்கள் அனைவருக்கும், தனித்தனியே கடிதம் வந்தது.
'திருமணத்திற்கு வந்திருந்து, சிறப்பாக நடத்தி வைத்ததற்கு நன்றி. அந்நேர அவசரத்தால், தங்களுக்குச் செய்ய வேண்டிய விருந்தோம்பலில், ஏதேனும் குறை ஏற்பட்டிருந்தால், மன்னியுங்கள். இன்னொரு முறை, தாங்கள் நிதானமாக வந்து, தங்கி, எல்லா இடங்களையும் சுற்றிப் பார்க்க வேண்டும்...' என்று, பெண்ணின் பெற்றோர் எழுதியிருந்தனர்.
கல்யாணத்துக்கு வந்த அனைவருக்கும், சோம்பல் படாமல் இப்படி கடிதம் எழுதியது மட்டுமல்லாமல், மணமகன், மணமகளுடன் எடுத்துக் கொண்ட போட்டோவையும், பிரின்ட் போட்டு, ஒவ்வொருவருக்கும் அனுப்பியிருந்தனர். இத்தனைக்கும், இருவருமே வேலைக்குப் போகிறவர்கள்.
கல்யாண வீட்டில், ஒவ்வொருவரையும் கவனிப்பது, இயலாத காரியம் தான். ஆனால், இப்படி ஒரு அற்புதமான கடிதம், அந்தக் குறையை இல்லாமல் செய்து விடுகிறது பாருங்கள்!
நன்றி - வாரமலர் - உ.சுல்தானா, கீழக்கரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தனியார் நிறுவனத்தில், பணிபுரியும் நண்பர் ஒருவர், சமீப காலமாக, இரவு வேலை முடிந்ததும், நேரே வீட்டிற்குச் செல்லாமல், தெருமுனையில் உள்ள கடையின், படியில் அமர்ந்திருப்பதை கவனித்தேன்.
'இரவு, 10:00 மணியை தாண்டியும், ஏன் வீட்டிற்கு செல்லாமல், இப்படி உட்கார்ந்து இருக்கீறீர்கள்?' எனக் கேட்டதற்கு. அவர் சொன்ன பதில், என்னை வியப்பில் ஆழ்த்தியது.
அவர், தினமும், இரவு வேலை முடிந்ததும் உற்சாக பானம் அருந்துவதால், வீட்டிற்கு சென்றதும், குழந்தைகள், அவர் மீது வரும் வாடை குறித்து விசாரிக்கின்றனராம். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாததால், இப்படி உட்கார்ந்திருந்து தாமதமாக போகிறாராம். குழந்தைகள் துாங்கிய பின், அவர் மனைவி, மொபைலில் அழைத்து, 'சிக்னல்' கொடுத்த பின் தான் வீட்டிற்குச் செல்கிறாராம்.
குழந்தைகளின் பாசத்தையும், அன்பையும் தாண்டி, 'குடி' தேவைதானா? வேலை முடித்து, அப்பா எப்போது வருவார் என, ஏங்கும் பிள்ளைகளின் தவிப்பை, இது போன்ற அப்பாக்கள், இனியாவது தெரிந்து, திருந்துவரா?
நன்றி - வாரமலர் - வே.விநாயகமூர்த்தி, வெட்டுவான்கேணி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கு தெரிந்த தனியார் பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் இது: அன்று வகுப்பறையில், ஆசிரியை மாணவர்களிடம், 'மறக்க முடியாத கோபமோ அல்லது மன்னிக்க முடியாத கோபமோ, யார் மீதேனும் உங்களுக்கு இருக்கிறதா, சந்தர்ப்பம் கிடைத்தால், யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா?' என்று கேட்டார்.
எல்லா மாணவர்களும், ஒரே குரலில், 'ஆமாம்...' என்றனர். ஒவ்வொருவரையும் தனித் தனியே அருகில் அழைத்த ஆசிரியை, 'மன்னிக்கவும், மறக்கவும் முடியாத அளவுக்கு, எத்தனை கோபங்கள் உள்ளன...' என்று கேட்டார். ஒவ்வொருவரும் பத்து, பதினைந்து என்று அடுக்கிக் கொண்டே போயினர்.
இதையெல்லாம் அமைதியாக கேட்ட ஆசிரியை, அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு சிறு பையைக் கொடுத்து, வகுப்பறையின் மூலையில் இருந்த தக்காளி கூடையைச் சுட்டிக்காட்டி, 'நீங்கள் சொன்ன எண்ணிக்கைப்படி, கூடையில் உள்ள தக்காளிகளை எடுத்து, உங்களுக்குக் கொடுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்...' என்றார். மாணவர்களும், தங்களது பையில் தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர்.
பின், அவர்களிடம், 'இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும்; துாங்கும் போதும் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்...' என்று உத்தரவிட்டார். புரிந்தும், புரியாமலும் மாணவர்கள் தலையாட்டினர்.
ஓரிரு நாட்கள் சென்றன; ஒரு குறையும் இல்லை. ஆனால், அதற்கு அடுத்து வந்த நாட்களில், தக்காளிகள் அழுகி, நாறத்துவங்கின. நாற்றம் அடிக்கும் மூட்டையுடன், வெளியே செல்ல கூச்சப்பட்ட மாணவர்கள், ஆசிரியையிடம் சென்று, மூட்டைகளைத் துாக்கி எறிய அனுமதி கேட்டனர்.
மெல்லப் புன்னகைத்த ஆசிரியை, 'இந்த தக்காளியைப் போன்று தான், உங்கள் மனதுக்குள் இருக்கும் பகைமை உணர்வும், பழி வாங்கும் குணமும் அழுகி, நாறி கொண்டிருக்கிறது. எனவே, பகை - பழியை மறந்து, மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளியையும் தூக்கி எறியுங்கள்...' என்றார். மாணவர்களுக்கு தெளிவு பிறந்தது.
அப்போதே, தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள், தங்களுக்குள் இருந்த பகை, பொறாமையை மறந்து, ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். இந்த தக்காளி கதை மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களான நமக்கும் தான்!
நன்றி - வாரமலர் -- எம்.பூபதி, மதுரை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சூப்பர் லkrishnaamma wrote:
எனக்கு தெரிந்த தனியார் பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் இது: அன்று வகுப்பறையில், ஆசிரியை மாணவர்களிடம், 'மறக்க முடியாத கோபமோ அல்லது மன்னிக்க முடியாத கோபமோ, யார் மீதேனும் உங்களுக்கு இருக்கிறதா, சந்தர்ப்பம் கிடைத்தால், யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா?' என்று கேட்டார்.
எல்லா மாணவர்களும், ஒரே குரலில், 'ஆமாம்...' என்றனர். ஒவ்வொருவரையும் தனித் தனியே அருகில் அழைத்த ஆசிரியை, 'மன்னிக்கவும், மறக்கவும் முடியாத அளவுக்கு, எத்தனை கோபங்கள் உள்ளன...' என்று கேட்டார். ஒவ்வொருவரும் பத்து, பதினைந்து என்று அடுக்கிக் கொண்டே போயினர்.
இதையெல்லாம் அமைதியாக கேட்ட ஆசிரியை, அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு சிறு பையைக் கொடுத்து, வகுப்பறையின் மூலையில் இருந்த தக்காளி கூடையைச் சுட்டிக்காட்டி, 'நீங்கள் சொன்ன எண்ணிக்கைப்படி, கூடையில் உள்ள தக்காளிகளை எடுத்து, உங்களுக்குக் கொடுத்த பையில் போட்டுக் கட்டுங்கள்...' என்றார். மாணவர்களும், தங்களது பையில் தக்காளிகளைப் போட்டு மூட்டையாகக் கட்டிக் கொண்டனர்.
பின், அவர்களிடம், 'இந்த மூட்டையை எப்போதும் உங்களுடன் வைத்திருக்க வேண்டும்; துாங்கும் போதும் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்...' என்று உத்தரவிட்டார். புரிந்தும், புரியாமலும் மாணவர்கள் தலையாட்டினர்.
ஓரிரு நாட்கள் சென்றன; ஒரு குறையும் இல்லை. ஆனால், அதற்கு அடுத்து வந்த நாட்களில், தக்காளிகள் அழுகி, நாறத்துவங்கின. நாற்றம் அடிக்கும் மூட்டையுடன், வெளியே செல்ல கூச்சப்பட்ட மாணவர்கள், ஆசிரியையிடம் சென்று, மூட்டைகளைத் துாக்கி எறிய அனுமதி கேட்டனர்.
மெல்லப் புன்னகைத்த ஆசிரியை, 'இந்த தக்காளியைப் போன்று தான், உங்கள் மனதுக்குள் இருக்கும் பகைமை உணர்வும், பழி வாங்கும் குணமும் அழுகி, நாறி கொண்டிருக்கிறது. எனவே, பகை - பழியை மறந்து, மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளியையும் தூக்கி எறியுங்கள்...' என்றார். மாணவர்களுக்கு தெளிவு பிறந்தது.
அப்போதே, தக்காளி மூட்டைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள், தங்களுக்குள் இருந்த பகை, பொறாமையை மறந்து, ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். இந்த தக்காளி கதை மாணவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களான நமக்கும் தான்!
நன்றி - வாரமலர் -- எம்.பூபதி, மதுரை.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Page 8 of 100 • 1 ... 5 ... 7, 8, 9 ... 54 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 100
|
|