புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
by mohamed nizamudeen Yesterday at 10:34 pm
» ஜூலை 25- ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:21 pm
» அருளை வாரி வழங்கும் சக்திபீடங்கள்
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» அம்பாளுடன் தட்சிணாமூர்த்தி
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 5:16 pm
» அதோ அந்தப் பறவை போல…
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» கார்கால மேகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» இன்பம் யாதெனில்…
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» புதுக்கவிதைகள்...
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» நெகிழி தவிர்! - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» நினைவலைகள்…
by ayyasamy ram Yesterday at 11:41 am
» ஆதலின் …காதல்….
by ayyasamy ram Yesterday at 11:40 am
» நெஞ்சு பொறுக்குதில்லையே…
by ayyasamy ram Yesterday at 11:38 am
» செங்கதிரே நில்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:37 am
» யோசித்துப் பார் மனிதா- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:36 am
» ஓரு மனதின் எதிரொலி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:35 am
» பார்த்தும் பார்க்காமலும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:34 am
» பொழைப்புக்காய் அலைவதே…
by ayyasamy ram Yesterday at 11:33 am
» பதில் தேடி அலையும் பயணம்…
by ayyasamy ram Yesterday at 11:29 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» கிளி பேசுது...!
by ayyasamy ram Yesterday at 4:21 am
» அம்மா சொன்ன புத்திமதிகள்...!
by ayyasamy ram Yesterday at 4:14 am
» ஆராய்ச்சி பண்ணினா அது புளித்த மாவு!
by ayyasamy ram Yesterday at 4:11 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 26
by ayyasamy ram Yesterday at 4:11 am
» ரேணுகா செல்வம் அவர்களின் நாவல்கள் இருந்தால் பகிரவும் தோழமைகளே.
by Safiya Yesterday at 12:52 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Jul 25, 2024 11:44 pm
» நகைச்சுவை மன்னன் சார்லி சாப்ளின் கூறிய தத்துவங்கள்
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:44 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:41 pm
» ஹாஸ்டல் ஹுடுகாரு பெக்கிதாரே (கன்னடம்)
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:38 pm
» இன்றைய செய்திகள்- ஜூலை 25
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:36 pm
» ஆமா! என் பொண்டாட்டி ஒத்துக்க மாட்டா! …
by Dr.S.Soundarapandian Thu Jul 25, 2024 8:34 pm
» கூட்டுக் குடும்ப கதையை சொல்லும் படம்
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:26 am
» வாமிகாவுடன் இணைந்தார் சமந்தா
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:24 am
» இசையமைப்பாளர் ஆனார் மதன் கார்க்கி
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:22 am
» பராரி படத்துக்கு சர்வதேச விருது
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:20 am
» கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது அமையும்?
by ayyasamy ram Thu Jul 25, 2024 8:09 am
» இன்றைய செய்திகள்- ஜூலை 24
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:14 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:13 pm
» புதினா கோலா
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:17 pm
» கேரட் துவையல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:15 pm
» பீட்ரூட் சட்னி
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:14 pm
» சர்க்கரை வள்ளிக்கிழங்கு வறுவல்
by ayyasamy ram Wed Jul 24, 2024 1:13 pm
» அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Wed Jul 24, 2024 11:02 am
» எடை இழப்பிற்கு உதவும் சப்போட்டா
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:58 am
» தபால் துறையில் 44 ஆயிரம் பணியிடங்கள்...
by ayyasamy ram Wed Jul 24, 2024 10:55 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:34 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jul 23, 2024 11:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
Balaurushya |
| |||
T.N.Balasubramanian |
| |||
Srinivasan23 |
| |||
Guna.D |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்!
Page 5 of 100 •
Page 5 of 100 • 1, 2, 3, 4, 5, 6 ... 52 ... 100
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
கணவரை பங்கு போடும் தோழி!?
நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.
அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் வாங்கிக் கொடுத்திருக்கிறார். விஷயம் இத்தோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.
முன்பெல்லாம், என் சமையலை பாராட்டுகிறவர் இப்போது, அடிக்கடி குறை கூறி, தோழியின் சமையலை, "ஆஹா... ஓஹோ' என்கிறார். அவள், சமையலை, தூண்டிலாகப் போட்டு, என் கணவரை வளைத்து விட்டது புரிந்தது. வழியில் போன ஓணானை மடியில் விட்ட கதையாக இப்போது, நான் அவதிப்படுகிறேன்.
தோழியரே... நீங்களும் என்னைப்போல் வெகுளியாக இருக்காதீர்கள்; அம்மா வீட்டில் அதிக நாட்கள் தங்காதீர்கள்! இன்றைக்கு வாய் ருசிக்கு ஆசைப்படுகிறவர், நாளை வாழ்க்கை ருசிக்கும் ஆசைப்படலாமல்லவா?
நன்றி வாரமலர் — யாழ் நிலா, கழனிவாசல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெண்ணுக்கு பெண்ணே எதிரியா?
சமீபத்தில், என் நண்பர், தன் பெண்ணிற்கு, பி.காம்., படித்து முடித்தவுடன் வேலை கிடைத்து விட்டது என்று, சந்தோஷத்துடன், அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். சில நாட்களுக்கு முன், அவரது வீட்டிற்கு செல்ல நேர்ந்தது. நண்பர் மிகவும் சோகமாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், மனதை அதிர வைத்தது.
நண்பரின் மகள், முதல் வகுப்பிலிருந்து கல்லூரி வரை, பெண்கள் பயிலும் கல்வி நிறுவனத்திலேயே படித்துள்ளார். இதை தெரிந்து கொண்ட, அவரது சக பெண் ஊழியர்கள், "அய்யே... உனக்கு ஒன்றுமே தெரியாதா... ஏதாவது மாலுக்கு போயிருக்கிறாயா... மாமா, மாமா பையன் போன்றவர்களுடன், "பைக்'கில் வெளியில் சென்றுள்ளாயா...' எனக் கேட்டும், யூ-டியூபில் மோசமான வீடியோவை போட்டுக்காட்டி, "இது போல பார்த்திருக்கிறாயா, உன் அண்ணனின் நண்பர்களை தொட்டு பேசியிருக்காயா...' எனக் கேட்டு, சீண்டி, கிண்டல் செய்துள்ளனர்.
இதை விட கொடுமை, சில பெண்களின் தாயாருக்கு, தங்கள் பெண்ணுக்கு ஆண் நண்பர் உள்ள விவரம் தெரியுமாம். மேலும், அம்மாவிடம் சொல்லிவிட்டே சினிமாவிற்கு செல்வதாகவும் கூறியுள்ளனர்.
இதனால், மிகவும், "அப்செட்' ஆன அந்தப் பெண், பெற்றோரிடம் தயங்கி தயங்கி, இந்த விவரங்களை கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல், ஒரு வித தாழ்வு மனப்பான்மையுடனே இருந்துள்ளார். அவரை, மருத்துவரிடம் அழைத்து சென்று, கவுன்சிலிங் அளித்து, தற்போது குணமாகி வருவதாகவும், பத்தொன்பது வயதிலேயே, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டதாகவும், நண்பர் தெரிவித்தார். இதை கேட்டு, மிகவும் வேதனை அடைந்தேன்.
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என, இதனால் தான் கூறினர் போலும்!
nandri vaaramalar — ராமச்சந்திரன், பீளமேடு.
சமீபத்தில், என் நண்பர், தன் பெண்ணிற்கு, பி.காம்., படித்து முடித்தவுடன் வேலை கிடைத்து விட்டது என்று, சந்தோஷத்துடன், அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தார். சில நாட்களுக்கு முன், அவரது வீட்டிற்கு செல்ல நேர்ந்தது. நண்பர் மிகவும் சோகமாக இருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம், மனதை அதிர வைத்தது.
நண்பரின் மகள், முதல் வகுப்பிலிருந்து கல்லூரி வரை, பெண்கள் பயிலும் கல்வி நிறுவனத்திலேயே படித்துள்ளார். இதை தெரிந்து கொண்ட, அவரது சக பெண் ஊழியர்கள், "அய்யே... உனக்கு ஒன்றுமே தெரியாதா... ஏதாவது மாலுக்கு போயிருக்கிறாயா... மாமா, மாமா பையன் போன்றவர்களுடன், "பைக்'கில் வெளியில் சென்றுள்ளாயா...' எனக் கேட்டும், யூ-டியூபில் மோசமான வீடியோவை போட்டுக்காட்டி, "இது போல பார்த்திருக்கிறாயா, உன் அண்ணனின் நண்பர்களை தொட்டு பேசியிருக்காயா...' எனக் கேட்டு, சீண்டி, கிண்டல் செய்துள்ளனர்.
இதை விட கொடுமை, சில பெண்களின் தாயாருக்கு, தங்கள் பெண்ணுக்கு ஆண் நண்பர் உள்ள விவரம் தெரியுமாம். மேலும், அம்மாவிடம் சொல்லிவிட்டே சினிமாவிற்கு செல்வதாகவும் கூறியுள்ளனர்.
இதனால், மிகவும், "அப்செட்' ஆன அந்தப் பெண், பெற்றோரிடம் தயங்கி தயங்கி, இந்த விவரங்களை கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல், ஒரு வித தாழ்வு மனப்பான்மையுடனே இருந்துள்ளார். அவரை, மருத்துவரிடம் அழைத்து சென்று, கவுன்சிலிங் அளித்து, தற்போது குணமாகி வருவதாகவும், பத்தொன்பது வயதிலேயே, மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டதாகவும், நண்பர் தெரிவித்தார். இதை கேட்டு, மிகவும் வேதனை அடைந்தேன்.
பெண்ணுக்கு பெண்ணே எதிரி என, இதனால் தான் கூறினர் போலும்!
nandri vaaramalar — ராமச்சந்திரன், பீளமேடு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தோழி போட்ட போடு!
எம்.காம்., - ஐ.சி.டபிள்யூ.ஏ., படித்த என் தோழிக்கு, சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மாப்பிள்ளையும், பெரிய படிப்பு படித்திருப்பார் என்று எண்ணி, மாப்பிள்ளையின் படிப்பு பற்றி விசாரித்தேன். அவள் சொன்ன பதில், என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. மாப்பிள்ளை, ரயில்வேயில், நல்ல வேலையில் இருந்தாலும், பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர்!
"உன்னை விட, குறைவாக படித்தவரை மணக்க, எப்படி சம்மதித்தாய்?' என்று கேட்டதற்கு, "வருங்காலத்தில், ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், தன்னை காப்பாற்றிக் கொள்ள உதவும் ஆயுதமே படிப்பு. அவர், நல்ல வேலையில் உள்ளார். என் அளவு படிப்பில்லாவிட்டால் என்ன? என்னை கண் கலங்காமல் வைத்துக் கொள்வார் என, நம்புகிறேன். அதற்கு மேல் தகுதி வேண்டுமா...' என்றாளே பார்க்கலாம்! படித்த பெண்கள் அனைவரும், இது போல செய்யத் துணிவரா?
nandri - vaaramalar — எம்.பார்வதி, திண்டுக்கல்.
எம்.காம்., - ஐ.சி.டபிள்யூ.ஏ., படித்த என் தோழிக்கு, சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மாப்பிள்ளையும், பெரிய படிப்பு படித்திருப்பார் என்று எண்ணி, மாப்பிள்ளையின் படிப்பு பற்றி விசாரித்தேன். அவள் சொன்ன பதில், என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. மாப்பிள்ளை, ரயில்வேயில், நல்ல வேலையில் இருந்தாலும், பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர்!
"உன்னை விட, குறைவாக படித்தவரை மணக்க, எப்படி சம்மதித்தாய்?' என்று கேட்டதற்கு, "வருங்காலத்தில், ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், தன்னை காப்பாற்றிக் கொள்ள உதவும் ஆயுதமே படிப்பு. அவர், நல்ல வேலையில் உள்ளார். என் அளவு படிப்பில்லாவிட்டால் என்ன? என்னை கண் கலங்காமல் வைத்துக் கொள்வார் என, நம்புகிறேன். அதற்கு மேல் தகுதி வேண்டுமா...' என்றாளே பார்க்கலாம்! படித்த பெண்கள் அனைவரும், இது போல செய்யத் துணிவரா?
nandri - vaaramalar — எம்.பார்வதி, திண்டுக்கல்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிரிட்ஜ் தயாரிப்பாளர்களே...
நண்பரின் வீட்டுக்கு, ஒரு நண்பகலில் சென்றிருந்தேன். விருந்தினரை உபசரிக்கும் பொருட்டு, அவரது வீட்டு வரவேற்பறையில் இருந்த பிரிட்ஜிலிருந்து, ஜூஸ் எடுத்து வந்தார். அந்த பிரிட்ஜின் கோலத்தைப் பார்த்ததும் பகீரென்றது. ஆம், அதன் தட்டையாக இருந்த மேற்பரப்பின் மீது, சாப்பிட்ட தட்டு, தலை வாரிய சீப்பு, தேங்காய் எண்ணெய் குப்பி, குளியல் சோப்பு, மாத்திரைகள், ஒரு கீரைக்கட்டு ஆகியவை பரப்பி வைக்கப்பட்டிருந்தன. நண்பரின் மனம் நோகக் கூடாதே என்று ஜூசை வாங்கி, ஜலதோஷம் என்று கூறி, நாசூக்காக குடிக்காமல் தவிர்த்தேன்.
குறைந்த இடவசதியுள்ள பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்களில், பிரிட்ஜின் மேற்பரப்பு இதுபோன்று தான் பயன்படுத்தபடுகிறது. மேற்பரப்பு அரைக்கோள வடிவத்திலோ, முக்கோண வடிவத்திலோ அமைந்திருந்தால், பிரிட்ஜின் மேற்பரப்பின் மீது தட்டுமுட்டு சாமான்கள் வைப்பது தவிர்க்கப்படும். ஸ்டெபிலைசர் வைப்பதற்கு என, ஒரு சிறிய பகுதியை மட்டும் அதில் தட்டையாக வைக்கலாம். பிரிட்ஜ் தயாரிப்பாளர்கள் கவனத்தில் கொள்வார்களா?
nandri - vaaramalar — எம்.சத்யநாராயணன், சைதாப்பேட்டை.
நண்பரின் வீட்டுக்கு, ஒரு நண்பகலில் சென்றிருந்தேன். விருந்தினரை உபசரிக்கும் பொருட்டு, அவரது வீட்டு வரவேற்பறையில் இருந்த பிரிட்ஜிலிருந்து, ஜூஸ் எடுத்து வந்தார். அந்த பிரிட்ஜின் கோலத்தைப் பார்த்ததும் பகீரென்றது. ஆம், அதன் தட்டையாக இருந்த மேற்பரப்பின் மீது, சாப்பிட்ட தட்டு, தலை வாரிய சீப்பு, தேங்காய் எண்ணெய் குப்பி, குளியல் சோப்பு, மாத்திரைகள், ஒரு கீரைக்கட்டு ஆகியவை பரப்பி வைக்கப்பட்டிருந்தன. நண்பரின் மனம் நோகக் கூடாதே என்று ஜூசை வாங்கி, ஜலதோஷம் என்று கூறி, நாசூக்காக குடிக்காமல் தவிர்த்தேன்.
குறைந்த இடவசதியுள்ள பெரும்பாலான நடுத்தரக் குடும்பங்களில், பிரிட்ஜின் மேற்பரப்பு இதுபோன்று தான் பயன்படுத்தபடுகிறது. மேற்பரப்பு அரைக்கோள வடிவத்திலோ, முக்கோண வடிவத்திலோ அமைந்திருந்தால், பிரிட்ஜின் மேற்பரப்பின் மீது தட்டுமுட்டு சாமான்கள் வைப்பது தவிர்க்கப்படும். ஸ்டெபிலைசர் வைப்பதற்கு என, ஒரு சிறிய பகுதியை மட்டும் அதில் தட்டையாக வைக்கலாம். பிரிட்ஜ் தயாரிப்பாளர்கள் கவனத்தில் கொள்வார்களா?
nandri - vaaramalar — எம்.சத்யநாராயணன், சைதாப்பேட்டை.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
படிப்போம், பரிசளிப்போம்!
என் நண்பர் ஒருவர், விபத்துக்குள்ளாகி, முழங்கால் சிதைந்து, இரண்டு மாதம் மருத்துவமனையில் இருந்தார். அவரை பார்க்க ஹார்லிக்ஸ் மற்றும் பழங்களுக்கு பதிலாக, "நெப்போலியன் வரலாறு' என்ற புத்தகத்தை வாங்கிச் சென்றேன். உடன் வந்த நண்பர், "வேணாம்டா... பயன் பெறுகிற மாதிரி ஏதாச்சும் வாங்கிட்டுப் போ... அவன பத்தி நல்லா தெரியும். தினசரி பேப்பரே படிக்க மாட்டான். அவன் படித்ததே, ஒன்பதாம் வகுப்பு வரைதான். புத்தக ஆர்வம் துளியும் இல்லாதவன். அவன், இந்த புத்தகத்த குப்பையில தான் போடுவான்...' என்றார்.
சொன்னவர் கையில் ஹார்லிக்ஸ் இருந்தது. மருத்துவமனை நெருங்க நெருங்க, என் முடிவை முற்றிலும் மாற்றி விட்டார். அந்த பக்கம் பைக்கில் வந்த, என் மாமா பையனிடம், புத்தகத்தை வீட்டில் கொடுக்கும்படி சொல்லிவிட்டு, மருத்துவமனைக்கு அருகே இருந்த கடையில், ஒரு போன்வீட்டா வாங்கிக் கொண்டேன். நண்பரை சந்தித்து, நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தோம். கிளம்பும் போது சொன்னேன், "மாப்ள... உனக்கு, "நெப்போலியன் வரலாறு' புத்தகம் கொடுக்கலாமுன்னு, நெனைச்சேன். இவந்தான் வேண்டாம் கொடுத்தா குப்பையில போட்டுருவான்னு சொன்னான்...' என்றேன்.
அதற்கான பதில், அவனிடமிருந்து வரவில்லை. அவனின் மனைவியிடமிருந்து வந்தது. "மெத்த படிச்சவங்கதாண்ணே, புத்தகத்த மதிக்க மாட்டாங்க. புத்தகத்து மேல, லேசா கால் பட்டா கூட, நாங்க தொட்டு கும்புடுவோம். படிப்போட அரும உங்கள விட, எங்களுக்கு தான் நல்லா தெரியும். நெப்போலியனப் பத்தி கொஞ்சம் படிச்சுருக்கேன். முழுசா படிக்கணும்ன்னு ஆசை. இவரு படிக்காட்டி என்ன, நான் படிச்சு சொல்லிட்டு போறேன்...' என்றார்.
நம் அன்பளிப்பு, ஒரு அன்பரை நோக்கி மட்டுமே இருக்கிறது. அவரை சார்ந்தவரை பற்றி, நாம் யோசிப்பதே இல்லை.
ஒவ்வொரு வீட்டிலும், வாசிக்க விரும்புபவர்கள் இருக்கவே செய்கின்றனர். நம் கண்களுக்குத் தான் தெரிவதில்லை. உடனே வீட்டுக்குப் போய், அந்த புத்தகத்தை எடுத்து வந்து, கொடுத்த பின் தான் திருப்தியாக இருந்தது. பரிசளிக்க, புத்தகத்தை விட சிறந்தது எதுவுமில்லை.
nandri vaaramalar — சக.முத்துக்கண்ணன், தேனி.
என் நண்பர் ஒருவர், விபத்துக்குள்ளாகி, முழங்கால் சிதைந்து, இரண்டு மாதம் மருத்துவமனையில் இருந்தார். அவரை பார்க்க ஹார்லிக்ஸ் மற்றும் பழங்களுக்கு பதிலாக, "நெப்போலியன் வரலாறு' என்ற புத்தகத்தை வாங்கிச் சென்றேன். உடன் வந்த நண்பர், "வேணாம்டா... பயன் பெறுகிற மாதிரி ஏதாச்சும் வாங்கிட்டுப் போ... அவன பத்தி நல்லா தெரியும். தினசரி பேப்பரே படிக்க மாட்டான். அவன் படித்ததே, ஒன்பதாம் வகுப்பு வரைதான். புத்தக ஆர்வம் துளியும் இல்லாதவன். அவன், இந்த புத்தகத்த குப்பையில தான் போடுவான்...' என்றார்.
சொன்னவர் கையில் ஹார்லிக்ஸ் இருந்தது. மருத்துவமனை நெருங்க நெருங்க, என் முடிவை முற்றிலும் மாற்றி விட்டார். அந்த பக்கம் பைக்கில் வந்த, என் மாமா பையனிடம், புத்தகத்தை வீட்டில் கொடுக்கும்படி சொல்லிவிட்டு, மருத்துவமனைக்கு அருகே இருந்த கடையில், ஒரு போன்வீட்டா வாங்கிக் கொண்டேன். நண்பரை சந்தித்து, நிறைய நேரம் பேசிக் கொண்டிருந்தோம். கிளம்பும் போது சொன்னேன், "மாப்ள... உனக்கு, "நெப்போலியன் வரலாறு' புத்தகம் கொடுக்கலாமுன்னு, நெனைச்சேன். இவந்தான் வேண்டாம் கொடுத்தா குப்பையில போட்டுருவான்னு சொன்னான்...' என்றேன்.
அதற்கான பதில், அவனிடமிருந்து வரவில்லை. அவனின் மனைவியிடமிருந்து வந்தது. "மெத்த படிச்சவங்கதாண்ணே, புத்தகத்த மதிக்க மாட்டாங்க. புத்தகத்து மேல, லேசா கால் பட்டா கூட, நாங்க தொட்டு கும்புடுவோம். படிப்போட அரும உங்கள விட, எங்களுக்கு தான் நல்லா தெரியும். நெப்போலியனப் பத்தி கொஞ்சம் படிச்சுருக்கேன். முழுசா படிக்கணும்ன்னு ஆசை. இவரு படிக்காட்டி என்ன, நான் படிச்சு சொல்லிட்டு போறேன்...' என்றார்.
நம் அன்பளிப்பு, ஒரு அன்பரை நோக்கி மட்டுமே இருக்கிறது. அவரை சார்ந்தவரை பற்றி, நாம் யோசிப்பதே இல்லை.
ஒவ்வொரு வீட்டிலும், வாசிக்க விரும்புபவர்கள் இருக்கவே செய்கின்றனர். நம் கண்களுக்குத் தான் தெரிவதில்லை. உடனே வீட்டுக்குப் போய், அந்த புத்தகத்தை எடுத்து வந்து, கொடுத்த பின் தான் திருப்தியாக இருந்தது. பரிசளிக்க, புத்தகத்தை விட சிறந்தது எதுவுமில்லை.
nandri vaaramalar — சக.முத்துக்கண்ணன், தேனி.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
தீபாவளிக்கு எனக்கும் நெப்போலியன் புத்தகம் கொடுத்திடாதீங்க. (தமாசு)
அருமையான தொடர் பதிவுகள். பிரிட்ஜ் காரவுக கவனிப்பார்களாக
அருமையான தொடர் பதிவுகள். பிரிட்ஜ் காரவுக கவனிப்பார்களாக
![படித்ததில் பிடித்தது :) -- புல் டேங்க்கிற்கு பெட்ரோல் நிரப்பாதீர்கள்! - Page 5 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி அசுரன்அசுரன் wrote:தீபாவளிக்கு எனக்கும் நெப்போலியன் புத்தகம் கொடுத்திடாதீங்க. (தமாசு)
அருமையான தொடர் பதிவுகள். பிரிட்ஜ் காரவுக கவனிப்பார்களாக![]()
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி, என் இரண்டு வயது குழந்தையை குளிக்கவைப்பதற்காக சின்ன ஸ்டூலின் மீது உட்காரவைத்தார். பிறகு கொதிக்கும் நீரை குழந்தை அருகில் வைத்துவிட்டு, நீரை விளாவுவதற்காக பக்கெட்டை எடுத்தார். அதற்குள் ஸ்டூல் மீது இருந்தபடியே வெந்நீரை இழுத்துவிட்டாள் குழந்தை. கொதிக்கும் நீர் உடலில் பட்டதால் இரண்டு கைகளும் கொப்பளித்துவிட, துடித்துவிட்டாள் என் மகள்.
சத்தம் கேட்டு நானும் என் கணவரும் பாத்ரூமுக்கு விரைய, என்ன செய்வதென்று தெரியாமல் விக்கித்து நின்றிருந்தார் அந்த அம்மா. உடனே குழந்தைக்கு முதலுதவி செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். இதுபோன்ற கவனக்குறைவான செயலை செய்யக்கூடாது என அவருக்கு எடுத்துச் சொன்னோம். சின்னக் குழந்தைகள் இருக்கும் இடத்தில் கூர்மையான பொருட்கள், மின்சாதனங்கள், மருந்து பொருட்கள் போன்றவற்றை அவர்கள் கைக்கு எட்டாத இடத்தில் வைப்பது நல்லது. இது என்ன புது செய்தியா என்று யோசிக்கலாம். ஆனால் எப்போது இப்படி கவனத்துடன் இருக்கிறோமா என்று யோசிப்பதே இல்லை. தோழிகளே, எதிலும் வரும் முன் காப்பதே நலம்தானே!
நன்றி : நம் தோழி - அனு ஜெய், கோயமுத்தூர்.
சத்தம் கேட்டு நானும் என் கணவரும் பாத்ரூமுக்கு விரைய, என்ன செய்வதென்று தெரியாமல் விக்கித்து நின்றிருந்தார் அந்த அம்மா. உடனே குழந்தைக்கு முதலுதவி செய்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். இதுபோன்ற கவனக்குறைவான செயலை செய்யக்கூடாது என அவருக்கு எடுத்துச் சொன்னோம். சின்னக் குழந்தைகள் இருக்கும் இடத்தில் கூர்மையான பொருட்கள், மின்சாதனங்கள், மருந்து பொருட்கள் போன்றவற்றை அவர்கள் கைக்கு எட்டாத இடத்தில் வைப்பது நல்லது. இது என்ன புது செய்தியா என்று யோசிக்கலாம். ஆனால் எப்போது இப்படி கவனத்துடன் இருக்கிறோமா என்று யோசிப்பதே இல்லை. தோழிகளே, எதிலும் வரும் முன் காப்பதே நலம்தானே!
நன்றி : நம் தோழி - அனு ஜெய், கோயமுத்தூர்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என் எதிர் வீட்டு சிறுமிக்கு கையில் எது கிடைத்தாலும் வாயில் போட்டு சுவைக்கும் பழக்கம். ஒருநாள் ஏதோ ஒரு மருந்து பாட்டிலை வாயில் வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தாள். நான் பதறிப்போய் பார்த்தபோது, காயங்களைச் சுத்தம் செய்யும் மருந்தை வாயில் வைத்திருக்கிறாள். உடனே குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சமீபத்தில்கூட தண்ணீர் என நினைத்து நெயில் பாலீஷ் ரிமூவரை குடித்த குழந்தை, ஐந்து ஆண்டுகளாக அனுபவித்து வரும் கொடுமையைப் படித்தேன். சில நிமிட கவனக்குறைவு, வாழ்நாள் முழுவதையும் சோதனைக்குள்ளாக்கிவிடும் தோழிகளே. எப்போதும் குழந்தைகள் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி : நம் தோழி -சுப்புலட்சுமி முத்தையா, திருநெல்வேலி
நன்றி : நம் தோழி -சுப்புலட்சுமி முத்தையா, திருநெல்வேலி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என் சகோதரியின் இரண்டு வயது மகள் இறந்த செய்தி அறிந்து, அதிர்ந்து போய் ஓடினேன். குழந்தை இறந்ததற்கான காரணம் அறிந்ததும் என் ரத்த ஓட்டமே நின்றுவிட்டது. செல்போனுக்கு சார்ஜ் போட்ட என் சகோதரி, சார்ஜ் ஆனதும் சுவிட்ச்சை அணைக்காமல் செல்போனை மட்டும் எடுத்துவிட்டு வேறு வேலை பார்க்கச் சென்றிருக்கிறாள்.
அப்போது அந்தப் பக்கம் வந்த குழந்தை, மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த சார்ஜர் பின்னை மிதிக்க, சார்ஜரின் உள்ளே ஷார்ட் சர்க்கியூட் ஆகி, மின்சாரம் தாக்கி இறந்திருக்கிறாள். பலரது வீடுகளிலும் இப்படித்தான் செல்போன் சார்ஜர் எப்போதும் இணைப்பிலேயே இருக்கும். அதற்கென்ன அதிக மின்சாரமா செலவாகப்போகிறது என்ற அலட்சியம் வேறு. சார்ஜ் போட்டு முடித்ததுமே இணைப்பை எடுத்திருந்தால் இந்த அவலம் நேர்ந்திருக்காதே!
நன்றி : நம் தோழி- அ. தர்மசம்வர்தினி, அறந்தாங்கி
அப்போது அந்தப் பக்கம் வந்த குழந்தை, மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த சார்ஜர் பின்னை மிதிக்க, சார்ஜரின் உள்ளே ஷார்ட் சர்க்கியூட் ஆகி, மின்சாரம் தாக்கி இறந்திருக்கிறாள். பலரது வீடுகளிலும் இப்படித்தான் செல்போன் சார்ஜர் எப்போதும் இணைப்பிலேயே இருக்கும். அதற்கென்ன அதிக மின்சாரமா செலவாகப்போகிறது என்ற அலட்சியம் வேறு. சார்ஜ் போட்டு முடித்ததுமே இணைப்பை எடுத்திருந்தால் இந்த அவலம் நேர்ந்திருக்காதே!
நன்றி : நம் தோழி- அ. தர்மசம்வர்தினி, அறந்தாங்கி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அலட்சியத்தின் பரிசு அவஸ்தை!
தேங்காய் எண்ணெய் பாட்டிலுடன் மாடிப்படியேறியபோது, கைதவறி பாட்டிலை கீழே போட்டுவிட்டேன். பிளாஸ்டிக் பாட்டில் என்பதால் உடையவில்லை, ஆனால் மூடி திறந்து எண்ணெய் கொட்டிவிட்டது. அதை துடைப்பதற்காக துணியெடுக்க சமையலறைக்குச் சென்றேன். அதற்குள் கீழே வேகமாக இறங்கி வந்த என் பேத்தி, எண்ணெயில் வழுக்கி விழுந்துவிட்டாள். பின்மண்டையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தோம்.
எண்ணெய் கொட்டியதுமே, அருகில் கிடந்த துணியை எடுத்து அதன் மீது போட்டிருக்கலாம். அல்லது மேலே இருக்கிறவர்களுக்கு எண்ணெய் கொட்டிய விஷயத்தைச் சொல்லி, பேத்தியை இறங்கவிடாமலாவது செய்திருக்கலாம். அதற்குள் அவள் இறங்கி வரவா போகிறாள் என்ற அலட்சியத்தால் வந்த வினை இது. சின்ன அசட்டைகூட எத்தனை பெரிய ஆபத்தில் முடிந்துவிடுகிறது பாருங்கள் தோழிகளே! இனி நீங்களும் கவனமாக இருப்பீர்கள்தானே?
நன்றி : நம் தோழி- மா. பாக்கியம், ஈரோ
தேங்காய் எண்ணெய் பாட்டிலுடன் மாடிப்படியேறியபோது, கைதவறி பாட்டிலை கீழே போட்டுவிட்டேன். பிளாஸ்டிக் பாட்டில் என்பதால் உடையவில்லை, ஆனால் மூடி திறந்து எண்ணெய் கொட்டிவிட்டது. அதை துடைப்பதற்காக துணியெடுக்க சமையலறைக்குச் சென்றேன். அதற்குள் கீழே வேகமாக இறங்கி வந்த என் பேத்தி, எண்ணெயில் வழுக்கி விழுந்துவிட்டாள். பின்மண்டையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தோம்.
எண்ணெய் கொட்டியதுமே, அருகில் கிடந்த துணியை எடுத்து அதன் மீது போட்டிருக்கலாம். அல்லது மேலே இருக்கிறவர்களுக்கு எண்ணெய் கொட்டிய விஷயத்தைச் சொல்லி, பேத்தியை இறங்கவிடாமலாவது செய்திருக்கலாம். அதற்குள் அவள் இறங்கி வரவா போகிறாள் என்ற அலட்சியத்தால் வந்த வினை இது. சின்ன அசட்டைகூட எத்தனை பெரிய ஆபத்தில் முடிந்துவிடுகிறது பாருங்கள் தோழிகளே! இனி நீங்களும் கவனமாக இருப்பீர்கள்தானே?
நன்றி : நம் தோழி- மா. பாக்கியம், ஈரோ
Page 5 of 100 • 1, 2, 3, 4, 5, 6 ... 52 ... 100
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 100
|
|