புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 
2 Posts - 5%
Ammu Swarnalatha
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 
1 Post - 2%
prajai
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 
383 Posts - 49%
heezulia
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 
26 Posts - 3%
prajai
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம்


   
   

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 4:41 pm

First topic message reminder :

பதிப்புரை

என்னுரை

முன்னுரை (மாலன்)

முன்னீடு

வம்ச விருத்தி

1. துரி

2. ஒரு சாதம்

3. கிரகணம்

4. விழுக்காடு

5. பீஃனிக்ஸ் பறவை

6. முழு விலக்கு

7. முடிச்சு

8. ஞானம்

9. சிலம்பு செல்லப்பா

10. வம்ச விருத்தி

11. பருத்திப் பூ



 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 5:10 pm


"என்ன?"

"பிள்ளை பிறந்து ஆண் என்றால் 'அரவிந்தன்' என்றும் பெண் என்றால் 'அபிராமி' என்றும் அகரவரிசையில் பேர் வைப்பதாக தீர்மானம் பண்ணினோமே? அது எவ்வளவு பிழை? நாங்கள் மனத்தளவில் மாறவில்லையென்றுதானே அர்த்தம்."

கணேசானந்தனுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவள் சொல்வதில் ஞாயம் இருப்பதாகப்பட்டது.

"பெண் எவ்வளவு கேவலமாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். முதலில் பருவம் அடையும் தொல்லை; பிறகு மாதா மாதம் வரும் உபத்திரவம். கர்ப்பம் அடையும்போது ஒன்பது மாதம் அவள் பிள்ளையை சுமக்கிறாள். அதைத் தொடர்ந்து அவள் படும் பிரசவ வேதனை. ஆனால் இது எல்லாவற்றிலும் கேவலமானது அவளுக்கு ஏற்படும் பெண்மை நீக்கம் தான். இந்த அவஸ்தையெல்லாம் ஆணுக்கில்லையே!"

இப்படியான நேரங்களில் கணேசானந்தன் ஆறுதல் கூற முயற்சிப்பதில்லை. அது வியர்த்தம். ஆற்றோட்டத்துடன்தான் போய் அடுத்த கரையை அடைய வேண்டும் என்பது அவன் சித்தாந்தம். ஆனால் அவனுடைய மனைவி கூறியது முற்றிலும் உண்மைதான் என்று அவனுக்குப்பட்டது. ஒரு பசுஞ்சோலை கருகி அவன் கண் முன்னே பாலைவனமாகிக் கொண்டிருந்தது; பருவத் தோப்பொன்று மூப்பை நோக்கி அடியெடுத்து வைத்தது. ஓளவையார் ஒரு பெண் புலவரல்லவா? அவருக்குக் கூடவா இந்தக் கொடுமை புலவரல்லவா? அவருக்குக் கூடவா இந்தக் கொடுமை தென்படவில்லை? 'கொடிது, கொடிது வறுமை கொடிது' என்று தானே அவர் பாடினார்.

ஒரு பிராயத்திலே பெண்ணுக்கு ஏற்படும் இந்த அநீதி பற்றியல்லவா அவர் பாடியிருக்க வேண்டும்?

உள்ளிழுத்த தலையை ஆமை மெள்ள மெள்ள வெளியே விடுவதுபோல் சங்கீதாவும் மெதுவாக வெளியே வரலானாள். பள்ளிக்கு புதுத் தென்புடன் வந்து போனாள். தன் உடைகளிலும் ஒப்பனைகளிலும் முன்புபோல் கவனம் செலுத்தினாள். இடைக்கிடை அந்த வீட்டில் அவளுடைய குபீர் சிரிப்பு மறுபடியும் ஒலிக்கத் தொடங்கியது.

கோப்பி என்றால் ஐரிஷ் கோப்பி, துருக்கி கோப்பி, இந்தியா கோப்பி என்று இப்படி பலவகை உண்டு. ஆனால் 'முட்டை கோப்பி' என்பது இந்த உலகத்திலேயே யாழ்ப்பாணத்தில்தான் அகப்படும். இந்த அதிகாலை வேளையில் கடந்த ஐந்து நிமிடங்களாக சங்கீதா அதைத்தான் போட்டு 'இந்த அடி' அடித்துக் கொண்டிருந்தாள். தாய்மார்கள், சாமத்தியப்பட்ட பெண்களுக்கும், புதுமணப் பெண்கள் தங்கள் கணவன்மாருக்கும் தவறாமல் கொடுத்துவந்த பாரம்பரியமான காயகல்பம் இது. சங்கீதா இவ்வளவு கர்மசிரத்தையாக முட்டைக்கோப்பி போடுவது அவனுக்கு அதிசயமாயிருந்தது.

ஆனால் இதைவிட அதிசயம் அன்று பள்ளியிலிருந்து திரும்பி வந்தபோது அவனுக்கு அங்கே காத்திருந்தது. அவன் வீட்டிலிருந்து ஓர் ஆபிரிககப்பாடல் மெல்லிய குரலில் ஒலித்தது.

ராலம் தாங் கீ
ரா ஆ லம்
ரெல் பாபா கோட் தாங் கீ
வட் ஈ டு பாஃர் மீ
ஐகோ ரெல்
தாங் கீ

'கடவுளே நன்றி, என்னை மீட்டதற்கு நன்றி' என்ற 'கிறியோல்' பாடலை முணுமுணுத்தபடி சங்கீதா சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள். அதிலே இன்னொரு விசேஷம், இவள் முதுகிலே ஒட்டிக் கொண்டு லப்பாத் துணியினால் விரிந்து கட்டப்பட்டிருந்தது ஒரு ஆபிரிக்கக் குழந்தை. அது வேறு யாருமில்லை, கரிக்குருவிதான். கறுத்த உருண்டையான கண்கள் அதற்கு. அற்தக் கண்களை மலர்த்தி தலையை இரண்டு பக்கமும் ஆட்டி அசைந்து கொண்டிருந்தது.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 5:11 pm

சங்கீதா கால்களை தரையில் தேய்த்து தேய்த்து உடம்பை அசைத்து பாட்டிற்கேற்ப ஆடிக்கொண்டிருந்தாள். பரத நாட்டியத்திற்கு பரம சத்துரு ஆபிரிக்க நடனம். பரத முனிவர் பரதநாட்டிய சாஸ்திரம் எழுதும்போது இடையின் கீழ்ப்பகுதி அசையாமல் நேராக நிற்க வேண்டும் என்பதை 'அண்டர்லைன்' பண்ணி எழுதி இருந்தார். ஆபிரிக்க நடனம் அப்படியல்ல. இடைக்குமேல் உடம்பு நேராக நிமிர்ந்து நிற்கும்; வேலையெல்லாம் பிருஷ்டத்துக்குத்தான் பெண்டுலம் போல அது இடமும் வலமும் அசைந்து மனசை அலங்கோலப்படுத்தும்.

   சங்கீதா அப்படித்தான் தன்னை மறந்து ஆடிக் கொண்டிருந்தாள். இந்த மாதிரி குதூகலத்தை கணேசானந்தன் அவளிடம் கண்டு பல மாதங்களாகிவிட்டன. அன்றிரவு அவர்கள் படுக்கைக்கு சென்றபோது 'கரிக்குருவியை' படுக்கையின் நடுவே அவள் கிடத்தியிருந்தாள், "அப்ப, என்ன பேர் வைத்திருக்கிறீர்? அபிராமியா?" என்றான் அவன், கண்களைச் சிமிட்டிக்கொண்டே. "ச்ž, இல்லை; 'அய்சாத்து', என்ன இனிமை பாருங்கோ! அசல் ஆபிரிக்க பேர்."

   "ஆஹா" இதுவும் அகர வரிசைதான்; அப்ப இன்னும் பதினொரு பேருக்க இடமிருக்கு."

   "ஏன், மெய்யெழுத்தையும் சேர்ப்பதுதானே! 'அய்சாத்து' என்றால் ஆபிரிக்க பாஷையில் என்ன பொருள் தெரியுமா?" என்றாள் சங்கீதா. அவள் கண்கள் என்றுமில்லாதபடி வெட்டிக் கொண்டு இருந்தன.

   "நீயே சொல்" என்றான் அவன், அவள் கண்களை அள்ளியபடியே.

   "நம்பிக்கை" என்றாள் சங்கிதா, மந்தகாசமாக சிரித்தபடி.

   சிறிது நேர மௌனத்திற்க பிறக அவன் சொன்னான்: "கடவுள் பெண்மைக்குத்தான் ஒர் எல்லை வைக்கமுடியும்; ஆனால் தாய்மையை எடுக்க முடியாதல்லவா?"

   இப்படிச் சொல்லிக்கொண்டே அவளை மெல்ல தன் பக்கம் இழுத்தான். அவள் சிணுங்கிக்கொண்டே நெருங்கினாள்.

   அவள் முகத்திலே பெண்மை வந்து கவிழ்ந்தது.

   * * *




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 5:12 pm

7. முடிச்சு

   கிரேக்க புராணங்களில் கூறியுள்ள கோர்டியன் முடிச்சு என்பது ப்ரிகியா தேசத்து அரசன் கோர்டியஸ’னால் போடப்பட்ட முடிச்சாகும். கோர்டியஸ் அரசனாவதற்க முன்பு சாதாரண குடியானவனாக இருந்தவன். ஒருநாள் அவன் தன் வண்டியை ஒட்டிக்கொண்டு முதன் முறையாக ப்ரிகியா நகரத்துக்குள் நுழைந்தபோது தெய்வ வாய்மொழிப் பிரகாரம் அவனை அரசனாக அந்த நாட்டு மக்கள் ஏற்றுக் கொண்டனர். தன் நன்றிக் கடனாக žயஸ் என்ற கடவுளுக்கு அந்த வண்டியை கோர்டியஸ் அர்ப்பணித்து வண்டியின் நுகத்தடியைச் சேர்த்து ரு முடிச்சுப் போட்டான். அந்த முடிச்சானது கடுஞ்சிக்கல்கள் கொண்ட ஒரு நூதனமான முடிச்சு. அந்த முடிச்சினை அவிழ்ப்பார் ஆசியாவுக்கு மகுடாதிபதியாவர் என்பது தொன்று தொட்டு வந்த வாக்கு. ஆண்டாண்டு காலமாக அந்த முடிச்சை அவிழ்க்க பலதும் முனைந்து தோற்றப் போயினர். மாவீரன் அலெக்சாந்தர் இதனைக் கேள்வியுற்று அந்த முடிச்சின் முன்னால் வந்து நின்றான்; நிதானமாகப் பார்த்தான்; தன் உடைவாளை உருவி ஓங்கி ஒரே வீச்சில் முடிச்சை இரு கூறாக்கினான்.

   - கைக்கிரோசொப்ட் - என் காத்தா

   நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது கந்தையா வாத்தியார் கொடுத்த கணக்கு இதுதான்; "இரண்டு மரங்களுக்கிடையிலிருக்கும் தூரம் பத்து மைல். ஒரு மரத்திலிருந்து ஒரு மனிதன் மணிக்கு ஐந்து மைல் வேகத்தில் மற்ற மரத்தை நோக்கி நடக்கிறான். அதே நேரத்தில் மற்ற மரத்தில் இருந்து புறப்பட்ட நாய் ஒன்று மணிக்கு இருபது மைல் வேகத்தில் மனிதனை நோக்கி ஓடுகிறது. நாய் மனிதனிடம் வந்து சேர்ந்ததும் திரும்பவும் தான் புறப்பட்ட மரத்தை நோக்கி போகிறது. மரம் வந்ததும் திரும்பவும் மனிதனை நோக்கி ஓடுகிறது. இப்படியோ மாறி மாறி அது ஓடிக்கொண்டேயிருக்கிறது. கடைசியில் மனிதனும் நாயும் மற்ற மரத்தடியில் வந்து சேருகிறார்கள். நாய் ஓடிய தூரம் எவ்வளவு?"

   கந்தையா வாத்தியார் இதைச் செய்பவருக்கு ஒரு ரூபா கொடுப்பதாக அறிவித்திருந்தார். கடந்த இரண்டு வாரங்களாக 'நேரமும், தூரமும்' கணக்குகளை உச்சந் தலையில் அடித்தடித்து உள்ளே இறக்கியிருந்தார். ஆனால் இந்த நாய்க் கணக்கு என்னை நாயாய் அலைத்துவிட்டது. இரண்டு நாளாக இதைத் தூக்கிக்கொண்டு திரிந்தேன். அப்பதான் இந்த 'மண்டையன்' வந்தான். சூல்கொண்ட தேங்காய் போல அவனுக்கு பெரிய தலை. தலை முழுக்க அவனுக்கு மூளை என்று பரவலாக ஒரு பேச்சுமிருந்தது. இரண்டு கால்களையும் பரப்பிவைத்து, கைகளை பின்னால் கட்டிக்கொண்டு "என்ன கணக்கு?" என்றான். நான் சொன்னேன். யோசிப்பதுபோல் கொஞ்சம் கண்ணை மூடி "இன்னொருக்கால் சொல்" என்று அதிகாரம் செய்தான், நானம் 'சிவனே' என்று இன்னொரு முறை கூறினேன். அவன் "ஆ! விடை நாப்பதுமைல்" என்றான். நான் "எப்டி, எப்டி?" என்று பறந்தேன். மண்டையன் ஏளனமான ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு சொன்னான்: "பத்து மைல் தூரத்தை மனிதன் இரண்டு மணி நேரத்தில் கடக்கிறான். நாயின் வேகமோ மணிக்கு இருபது மைல்; இரண்டு மணியில் நாய் நாற்பது மைல் தூரத்தைக் கடக்கும்."

   நான் வாயைப் பிளந்து கொண்டு சிறிது நேரம் திகைத்துப் போய் நின்றேன். இந்தச் சிறிய கணக்கை என்னாலே செய்ய முடியவில்லையே? அந்த நேரம் கந்தையா வாத்தியார் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. "எந்தவொரு சிக்கலான கணக்குக்கும் இலகுவான ஒரு பாதை இருக்கிறது; உன் விவேகத்தால் அந்தப் பாதையை நீ கண்டு பிடிக்க வேண்டும்."

   கணக்கிலே நான் படு புலியென்றாலும் இப்படி பலதரம் புல்லை சாப்பிட வேண்டி வந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் எனக்கு நானே தேறுதல் கூறிக்கொள்வேன். கலாசாலையில் முதல் வருடம் படிக்கும்போது இப்படித்தான் ஒரு கணக்கு என் காலை வாரி விட்டது.

   "ஒரு காதலன் தன் காதலியோடு ஆற்றின் ஓட்டத்துக்கு எதிராக படகிலே போகிறான். ஆற்றின் வேகம் மணிக்கு பத்து மைல்; படகின் வேகமோ மணிக்கு ஐந்து மைல். காதலரை வருடிய தென்றல் காற்று காதலன் போட்டிருந்த தொப்பியை நீரிலே தள்ளி விடுகிறது. (ஏன் இவன் காதல் செய்வதற்கு தொப்பி போட்டுக்கொண்டு போனான், முட்டாள்) காதல் வேகத்தில் நேரம் கழித்து பதைபதைத்து தொப்பியைத் தேடுகிறான். காணவில்லை. படாரென்று படகைத் திருப்பிக்கொண்டு (கருமி, கருமி) வந்த வழியோ போகிறான். எவ்வளவு மணி நேரத்தில் அவன் தொப்பியை மீட்பான்?"

   இந்தக் கணக்கிலேயும் நான் அதே தவறைத்தான் செய்தேன். மூளையைக் கசக்கி விடையைத் தேடினேன். ஆற்றிலே போட்டுவிட்டு குளத்திலே தேடினால் விடை கிடைத்து விடுமா? அடுத்த நாள் எங்கள் பேராசிரியர் கணக்கை விளக்கிய போது தான் 'அடே' என்று எனக்குப் பட்டது; அவமானமாகப் போய்விட்டது. விடை: அரை மணிநேரம் [ இந்த விடை காரணத்தை இங்கே விளக்கினால் இதுவே ஒரு கணக்குப் புத்தகமாகிவிடும். மேலே தொடருவோம்.]



 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 5:12 pm


சாதாரண மனிதர்களுக்குத்தான் இப்படியென்றில்லை. ஒரு விஞ்ஞானிக்கு நடந்ததைப் பார்ப்போம்... பாரிஸ் நகரில் ஜோர்ஜ் உர்பெய்ன் என்று ஒரு தலைசிறந்த விஞ்ஞானி இருந்தார். இவர் பல வருடங்களாக மூளையைச் செலவழித்தும், பணத்தை இறைத்தும் மிக அரிதான நாலு தனிமங்களை பொடிசெய்து குழம்பாக்கி பிறகு அவற்றை விஞ்ஞான முறைப்படி வேறுபடுத்தி தனிமங்களை கண்டுபிடிக்கும் அபூர்வ வித்தையைத் தெரிந்து வைத்திருந்தார். இவர் இந்தக் குழம்பைத் தூக்கி நளாயினி போல தலையிலே வைத்துக்கொண்டு ஒவ்வொரு விஞ்ஞானியாகத் தேடிச்சென்றார். இந்தக் குழம்பைத் தனிப்படுத்தி தனிமங்களின் பெயரைச் சொல்லும்படி இவர் மற்ற விஞ்ஞானிகளுக்கு சவால் விட்டார்.

ஹென்றி க்வியின் மொஸ்லே என்ற ஆங்கிலேய விஞ்ஞானி மாத்திரம் யாருமே எதிர்பாராத விதமாக ஒரு காரியம் செய்தார். அந்தக் குழம்பின் எலக்ட்ரான்களைப் பாய்ச்சி அதிலிருந்து புறப்பட்ட எக்ஸ்ரே அலைகளின் நீளத்தை கணித்து அந்த நாலு தனிமங்களின் பெயர்களையும் கடகடவென்று இரண்டே நிமிடத்தில் கூறிவிட்டாராம். இருபத்தியாறு வயதுகூட நிரம்பாத இளைஞர் மொஸ்லே. உர்பெய்ன் ஆடி விட்டார்; இத்தனை வருடத்து ஆராய்ச்சிகள் எல்லாம் வியர்த்தமானதில் அவருக்கு தாங்கமுடியாத வருத்தம்தான். எனினும் விஞ்ஞானத்துக்கு ஒரு புது வழி கிடைத்து விட்டதே என்று மகிழ்ந்து போனாராம்.

சாதாரண விஞ்ஞானிகளை விடுவோம்; கடவுளருக்கு வருவோம். நாதருடைய கையிலே ஒரு அழகிய மாம்பழம் இருந்தது. விநாயகர் அந்தப் பழம் வேணுமென்று 'தாம் தாம்' என்று குதித்தார்; முருகன் தனக்குத்தான் வேணுமென்று அடம் பிடித்தார். நாரதர் சொன்னார்: "யார் முதலில் உலகத்தை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத் தான் பழம்." முருகன் யோசிக்கவில்லை. அந்தக்கணமே மயில் வாகனத்தை உலகத்தை வலம்பர புறப்பட்டார். பிள்ளையார் 'டொங்கு, டொங்கு' என்று எலியிடம் ஓடினார். எலி அவரை ஏற்றிக் கொண்டு இரண்டு அடி வைப்பதற்கிடையில் 'மூசுமூசு' என்று மூச்சு வாங்கியது. அப்படியே நசுங்கி நிலத்தோடு படுத்து விட்டது. "என்ன நின்று விட்டாயா? இப்ப முருகன் ஆபிரிக்காவின் மேல் போய்க் கொண்டிரு கிறானே! நான் இங்கே வாசற்படி கூடத் தாண்டவில்லை" என்று பெருமூச்சு விட்டார். "ஸ்வாமி, நீங்கள் கொஞ்சம் ஓவர் வெயிட்; காரட் ஜுஸ் மட்டும் இனி சாப்பிட்டு பாருங்கள்" என்றது எலி. விநாயகருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. உடனே வேறு ஒரு யுக்தி பண்ணினார். "அம்மையும், அப்பனுமல்லவோ உலகம்; நான் அவர்களை வலம் வந்தாலே போதுமானது" என்று நினைத்து அம்மையப்பனை வலம்வந்து மாம்பழத்தை கையிலே வாங்கும் தருணம் முருகன் மயிலிலே வீச்சாக வந்து 'சடன் பிரேக்' போட்டு நின்றார். விநாயகர் அவ்வளவுக்கும் நிற்பாரா, என்ன? தும்பிக்கையை எட்டிப் பழத்தைப் பறித்துக் கொண்டு மெள்ள நகர்ந்து விட்டார்.

நான் இப்படியான ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு பெரும் அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருந்தேன். நான் ஹாவார்டில் படித்துக் கொண்டிருந்த போது எங்கள் பேராசிரியர் அடிக்கடி கூறுவார். 'பூட்டுச் செய்தவன் சாவியும் செய்திருப்பான்" என்று சாவியைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன். மனக்கண்ணினால் ஐந்தாம் வகுப்பில் இருந்து பட்டப்படிப்பு வரை நான் படித்தது எல்லாவற்றையும் அலசிப் பார்த்து விட்டேன். இதிகாசங்களையும், புராணங்களையும் தேடியாகிவிட்டது. கணிதவியலையும், பொருளியலையும் ஆராயவும் தவறவில்லை.

மனிதர்கள் இரண்டுவிதமானவர்கள். முதலாவது ரகம், சாதாரணமான நேரங்களில் சாதாரண வேலை செய்வார்கள், கழுத்தைப் பிடிக்கும் நெருக்கடி சமயம் சுடர்விட்டு பிரகாசிப்பார்கள். இரண்டாவது ரகம், சாதாரண நேரங்களில் அசாதாரண திறமையுடன் செயல் படுவார்கள். ஆனால் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் தலையை தொங்கப்போட்டுக் கொண்டு செய்வதறியாமல் திகைப்பார்கள்.

இதில் இரண்டாவது ரகம் இதிகாசத்தில் கர்ணன். வில் வித்தையில் கர்ணன் அர்ஜுனனைவிட ஒரு இழைமேல் என்றே சொல்லலாம். ஆனால் உக்கிரமான போர் நடந்து கொண்டிருக்கும் சமயங்களில், பாவம் கர்ணன் செய்வதறியாது தடுமாறி நின்று போய் விடுவான். இந்தக் கால உதாரணம் வேண்டுமென்றால் டென்னிஸ் வீரன் கோரன் இவானி ஸேவிக்கை சொல்லலாம். இவனுடைய சர்வீஸ் 135 மைல் வேகத்தில் போகும். கண் வெட்டுவதற்கிடையில் மளமளவென்று புள்ளிகளைக் குவித்து விடுவான். ஆனாலும் என்ன பயன்? வெற்றித் தேவதை அணைக்கவரும் நேரத்தில், பாவம் இவனுக்கு கைகால்கள் சோர்ந்துவிடும். சர்வீஸ் 'பொத், பொத்' என்று விழும் எதிராளி தட்டிக்கொண்டு போய்விடுவான். இவன் விளையாட்டைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அழுகையாக வரும்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 5:12 pm


நான் முதலாவது ரகம். அசாதாரண நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதுதான் என் விசேஷத் திறமை. அதற்காகவே படித்துப் பட்டம் பெற்றவன். சூறாவளி என்றால் அதற்கு ஒரு மையம் இருக்கும்; மகாவிருட்சகம் என்றால் அதற்கு ஒரு ஆணி வேர் இருக்கும். எந்தவிதமான சங்கடத்துக்கும் ஒரு உயிர் மையம் இருக்கும். அதைத்தான் தேடிக் கொண்டிருந்தேன்.

மறுபடியும் பேராசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. ஒரு பெரிய பாழடைந்த பத்து மாடிக் கட்டிடம். இதை உடைத்தெறிய உத்தரவு வந்து விட்டது. நாங்கள் தகர்ப்பு விற்பன்னர்களைக் கூட்டி இந்தக் காரியத்தை ஒப்படைக்கிறோம். இது சாதாரண காரியமில்லை. ஒரு கட்டிடத்தைக் கட்டுவதிலும் பார்க்க மிகவும் சிரமமானது. அவர்கள் இந்தக் கட்டிட வரைபடத்தை முதலில் ஆராய்ச்சி செய்து கட்டிடத்தைத் தாங்கம் ஆதார மையங்களில் வெடி மருந்துகளைப் பொருத்துவார்கள். அது வெடித்ததும் கட்டிடம் ஆடாமல், அசங்காமல் சொன்னபடி கேட்டு அதே இடத்தில் வேறு சேதம் விளைவிக்காமல் பொத்தென்று வந்து விழும். உன்னுடைய வில்லங்கங்களை ஒட்டுமொத்தமாக தீர்க்க வேண்டுமானால் பிரச்சனையின் உயிர்நாடியைக் கண்டுபிடிக்க வேணும். அல்லாவிடின் மலேரியாக் காய்ச்சல்காரனுக்கு மாதவிடாய் நிற்க மருந்து கொடுத்தது போல அனர்த்தம்தான் விழையும்.

விஷயம் இதுதான். மிகவும் பெரிய ஒரு கம்பனியின் மானேஜிங் டைரக்டராக நான் இரண்டு வருட காலத்திற்கு முன்பாக பதவி உயர்வு பெற்றிருந்தேன். எனக்கு வயது முப்பத்தைந்து; எனக்கு முன்பு இருந்தவர் வயதானவர்; திடீரென்று மாரடைப்பில் இறந்து போனார். கம்பெனி இயக்குனர்கள் என் பேரில் முழு நம்பிக்கை வைத்து இந்தப் பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்திருந்தனர். எல்லாம் நல்லாய்த்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று சனிதிசை பிடித்து ஆட்டத் தொடங்கியது.

விற்பனைகள் சரியத் தொடங்கின. தொழிலாளர்கள் அதிருப்தி காட்டி முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். முன்பிருந்த மானேஜிங் டைரக்டரின் மருமகன், ஜெயந்தன் என்பவன் கம்பெனிக்கு எதிராக நாசகார வேலைகள் பார்க்கிறானாம். இவன் என்னுடைய பதவியில் கண்வைத்து ஆவலாக எதிர்பார்த்து இருந்தவன் சில இயக்குணர்களையும் தன் கைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறானாம். பங்கு மார்க்கெட்டில் கம்பெனியின் பங்குகள் சரியத் தொடங்கின. ஆனால் இது எல்லாத்தையும் விட மோசம் கிட்டடியில் வந்த செய்திதான்.

கம்பனியின் முழுமூச்சு ஏற்றுமதிதான். அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சரக்கு மாத்திரம் எழுபது வீதம். சமீப காலங்களில் வந்த ஓடர்களை முற்றிலும் நிறைவேற்ற முடியாமல் கம்பனி தத்தளித்தது. எதிராளிக் கம்பனி ஒன்று இந்த ஓடரில் ஒருபகுதியை தன் வசமாக முயற்சிகள் செய்து வந்தது. இது அவர்களுக்கு போனால் வேறுவினையே வேண்டாம்; கம்பெனியை இழுத்து மூட வேண்டியதுதான்.

தலைக்குமேலே தண்ணி போய்விட்டது. இனி என்ன செய்யலாம் என்று மூக்கைப் பிடித்துக் கொண்டு யோசித்த போதுதான் திருவண்ணாமலை ஞாபகம் வந்தது. அங்கே மகாயோகி இருக்கிறார். எனக்கு இப்டியான இக்கட்டுகள் வரும்போது அவரிடம்தான் ஓடுவேன். இதே மாதிரி இரண்டு முறை முன்பு போயிருக்கிறேன். அவர் அறிவுரை, ஆசியென்றொல்லாம் வழங்க மாட்டார்; உங்கள் சிந்திக்கும் திறனைத் தூண்டி விடுவார்.

அடுத்த நாளே திருவண்ணாமலை போய் விட்டேன். இரண்டு நாளாக யோகியாரை எங்குதேடியும் காணக் கிடைக்கவில்லை. கடைசியில் யாரோ சொன்னார்கள் யோகியார் பதினாறு கால் மண்டபத்தில் இருப்பதாக, யோகியாரிடம் ஓடினேன். அவர் சிரித்தபடியே இருந்தார். அந்தச் சிரிப்பிலே எத்தனையோ அர்த்தங்கள் எனக்கு தெரிந்தன. ஸ்வாமியைப் பார்த்தவுடன் எனக்கு வந்த காரியம் எல்லாம் மறந்துவிட்டது; அது மாத்திரமல்ல, என் கஷ்டமெல்லாம் அர்த்தம் இல்லாததாகவும் பட்டது. என் கண்கள் பனித்துவிட்டன. ஸ்வாமி என்னையே பார்த்தபடி இருந்தார்.

"ஆதிமூலத்தை அறிந்து விட்டாயா?" என்றார்.

"ஸ்வாமி, அதைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்; நீங்கள்தான் காட்டவேணும்" என்றேன்.

"மடையா, நான் என்னத்தைக் காட்டுவது? நீதான் தேடிப் பிடிக்க வேணும்" என்றார்.

"ஸ்வாமி, எனக்கு சமீபத்தில் பதவி உயர்வு கிடைத்தது...."

"என்ன, சாயுஜ்யபதவியா?" என்றார், ஸ்வாமி சிரித்தபடி.

"இல்லை, இது சாதாரண பதவிதான். மிக நல்லாக முன்னேறி வந்த கம்பனி காரணமின்றி படபடவென்று சரியத் தொடங்கி விட்டது. நாலா பக்கத்திலும் இருந்து எனக்கு தொல்லைகள். தலை நிமிர்த்தவே முடியவில்லை; மீழும் வழியும் தெரியவில்லை" என்றேன்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 5:13 pm


"நாலா பக்கமும் பிரச்சனைகள் இல்லை; பிரச்சனையின் மூலம் ஒன்றுதான். நீதான் நாலு பக்கமும் பார்க்கிறாய். ஸ்பெய்ன் நாட்டில் நடக்கும் மாட்டுச் சண்டை பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா?"

"சொல்லுங்கள், ஸ்வாமி"

"மேரடோர் என்பவன் எருதுடன் சண்டை போட்டு அதைக் கொல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட வீரன். எருதுக்கும் இவனுக்கும் ஒரு நீண்ட போர் நடக்கும். இறுதியில் எருது களைத்து, தலையைத் தாழ்த்தி சோர்ந்துபோய், ஆனால் கடைசி மூச்சின் ஆங்காரத்தோடு சண்டைபோடும். எருது தலை குனிந்திருக்கும் அந்தக் கணத்தில் மேரடோர் என்பவன் தன் நீண்ட வாளை உருவி மாட்டின் தோள் பட்டைகளில் இடையே உள்ள ஒரு நுண்ணிய துவாரத்தில் வாளை நுழைத்து அதன் ஆதார நாடியை சேதித்து விடுவான். இந்த நேரம்தான் மகத்தான உண்மையான நேரம். எருது அந்தக் கணமே விழுந்து இறந்து விடும்."

"ஸ்வாமி, எனக்கு எல்லாம் புரிகிறது. ஆனால் அந்த ஆதாரநாடி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையே? திசை தெரியாத பறவைபோல அல்லவா சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றேன்! ஒரு வழி காட்ட முடியாதா?"

ஸ்வாமி யாரோ பக்தர்கள் கொடுத்துவிட்டுப் போன ஒரு žப்பு வாழைப்பழத்தில் இருந்து இரண்டு பழங்களைப் பிய்த்தார். "இந்தா, இதைக் கொண்டுபோ. இரண்டு நாளைக்கு இதுதான் உனக்கு சாப்பாடு. கொஞ்சம் பால் வேண்டுமானால் மட்டும் பருகலாம். மூன்றாம் நாள் காலை இங்கிருந்து போய் விடு" என்றார். நானும் பழத்தை எடுத்துக்கொண்டு என்னுடைய மடத்தை நோக்கி புறப்பட்டேன்.

அடுத்த நாள் காலை. ஒரு பழமும் ஒரு அண்டா பாலும் சாப்பிட்ட பிறகும் பசியும் ஆறவில்லை; பிரச்சனையும் தீரவில்லை. நான் படித்ததெல்லாவற்றையும் மறுபடி அசைபோட்டு பார்த்தேன். பீட்டர் ட்ரக்கர் கூறியதையும், கென்னத் கல்பிரெய்த் சொன்ன சித்தாந்தங்களையும், பிரடெரிக் டெய்லர் எழுதி வைத்ததையும் நினைவுகூர்ந்து பார்த்தேன். மனமானது சுழன்று சுழன்று வந்ததே ஒழிய ஒரு பிடியும் கிடைக்கவில்லை.

சிந்திப்பது மூன்று வகைப்படும். ஒன்று செக்கு மாட்டு வகை; ஒன்றையே திருப்பித் திருப்பி அசைபோடுவது. இது பிரயோசனமில்லாமல் நீன்று கொண்டே போகும். இரண்டாவது தொடர் சங்கிலி சிந்தனை முறை. இது ஒன்றைத் தொடர்ந்து இன்னொன்றாக தர்க்க ரீதியாக வருவது. மூன்றாவது பரவல் சிந்தனை. அறிவியலுக்கு ஆதாரமான பல சித்தாந்தங்களை பரவல் சிந்தனை மூலம்தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். ஆகாய விமானத்தை கண்டுபிடத்த ரைட் சகோதரர்களாகட்டும், பெனிசிலினைக் கண்டுபிடித்த அலெக்சாந்தர் பிளெமிங் ஆகட்டும் பரவல் சிந்தனை மூலம்தான் தங்கள் மகா கண்டுபிடிப்புகளை உலகத்திற்கு அளித்தார்கள்.

இத்தாலி மகாவிஞ்ஞானி கலீலியோ ஒரு நல்ல கிறிஸ்துவர். அவர் தன் சித்தாந்தங்களை வெளியிட்டபோது அவை அன்றைய கிறிஸ்துவ நம்பிக்கைகளுக்கு முரணாக இருந்தன. இருந்தும் அவர் கருத்துக்களை அவசரமாக பகிரங்கப் படுத்திவிட்டார். தேவாலயத்து மதகுருக்களுக்கு அவர் கூறியது சங்கடமாக இருந்தது. வேறு என்ன? அவர் 'பூமி சூரியனைச் சுற்றி வருகிறது' என்று அபத்தமான உளறினால் அவர்களுக்கு கோபம் வராமல் என்ன செய்யும்? அவருக்கு அறுபத்தொன்பது வயது நடக்கும் போது தேவாலயத்தினர் அவரைக் சிறையில் இட்டனர்; சொன்னதை மறுதலிக்கும்படி வற்புறுத்தினர். கலீலியோ "பூமி சூரியனை சுற்றவில்லை, பூமி சூரியனை சுற்றவில்லை" என்று உரத்துச் சொல்லிவிட்டு மனத்திற்குள், தனக்குள் பூமிக்கும் மட்டுமே கேட்கும்படி, "என்றாலும் சுற்றுகிறது" என்று கூறினாராம்.

உலகத்தின் இன்றைய முன்னேற்றத்திற்க காரணம் கலீலியோ போன்ற விஞ்ஞானிகளின் பரவல் சிந்தனைகள் மூலம் பிறந்த அருமையான கண்டுபிடிப்புகள்தான். நான் தேடிக்கொண்டிருக்கும் விடையும் இப்படியான சிந்தனைகளில்தான் தங்கியிருக்கிறது என்று எனக்குப்பட்டது. மனதைக் குவித்து 'ஏகாக்கிரக சிந்தனை' என்று சொல்வார்களே அப்படி நேர்ப்படுத்தினேன்.

மறுபடியும் யோசித்துப் பார்த்தேன். தொழிற்சாலையில் போதிய ஓடர்கள் வந்து குவிந்தன; உற்பத்தி வேகமும் குறைந்ததாகத் தெரியவில்லை. விற்பனைகள் சரிவதின் காரணமென்ன? ஜெயந்தன் செய்யும் நாச வே€லைகளாக இருக்குமா? அவன் இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் கம்பெனியிலிருந்து ஒரு பெண்ணாக கூட்டிக்கொண்டு திரிகிறானே, இதற்கு நேரம் இருக்குமா?

ஜெயந்தனுடன் நேர் மோதலை நான் தவிர்த்துவந்தேன். ஒருமுறை கேட்டுவிட்டேன்: "ஜெயந்தன், நீ என்ன இப்படி ஒரு நாளைக்கு ஒரு பெண்ணுடன் சுற்றுகிறாயே! இது உனக்கும் நல்லதல்ல. பெண்ணுக்கும் நல்லதல்ல; கம்பெனிக்கும் நல்லதல்ல?"




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 5:13 pm


அதற்கு அவன் கூறிய பதில் விசித்திரமாக இருந்தது. "எனக்கு பதின்மூன்று வயதாகியதிலிருந்து நான் இப்படி ஒரு விரதம் காத்து வருகிறேன். எப்பவும் கன்னிப் பெண்கள் பாதுகாப்பில் இருக்கவேண்டுமென்பதுதான் அது. எனக்கு கிடைக்கம் அந்தப் பாதுகாப்பை இப்படி சடுதியாக துறக்கச் சொல்கிறாயே. இது நியாயமா? நீ அதற்குப் பொறுப்பேற்பாயா?" என்றான். நான் அவனுக்கு பைத்தியம் முற்றிப் போய்விட்டது என்று நினைத்து பேசாமல் இருந்துவிட்டேன்.

உண்மையிலேயே இவன் பைத்தியக்காரத்தனமான வேலைகள் செய்வானோ? தொழிலாளர்களுக்கு வேண்டிய சலுகைகளெல்லாம் செய்து கொடுத்திருக்கிறோமே! சக தொழிலாளருடன் ஒப்பிடும்போது இவர்களடைய சம்பளமும் வருமானமும் மிகக் கூடுதலாகவல்லவா இருக்கிறது! இருந்தும் அவர்களுடைய அதிருப்தியை தூண்டிவிடுவதற்கு இவன் காரணமாக இருப்பானோ?

திருப்பித் திருப்பி செக்குமாடு போலத்தான் சிந்தனை சுழன்று கொண்டே வந்தது. இரண்டு நான் இரண்டு யுகம் போல சென்றது. மிஞ்சியது பசியும் களைப்பும்தான். மூன்றாம் நாள் அதிகாலையே எழுப்பிவிட்டேன். நான் வந்தது வியர்த்தம் போலத்தான் பட்டது. பிரச்சனை அப்படியே கொழுக்கட்டைபோல் முழுசாக இருந்தது. நல்ல பசி. சாப்பிட்டுவிட்டு திரும்புவோம் என்ற முடிவோடு புறப்பட்டேன்.

பாதையோரத்தில் அந்தக் கிழவி சுடச்சுட தோசை வார்த்து விற்றுக் கொண்டிருந்தாள். நான் போனபோது அங்கே ஒரு சிறுமி மாத்திரம் தோசையை ஒரு பெட்டியில் அடுக்கிவிட்டு அதை மூல முயற்சி செய்து பார்த்தாள். வாழை இல் நேராக நட்டுக்கொண்டு நின்றது. அப்போ அந்த சிறுபெண் "பாட்டி, வாழை இலையை மடித்துவீடு, மடித்துவிடு" என்று மணியடிப்பது போல சொல்லிக் கொண்டிருந்தாள். அதைக் கேட்டுக்கொண்டிருந்த எனக்கு மூளையிலே ஒரு மின்பொறி தட்டியது "அப்படியும் இருக்குமா?" என்று மனசு போட்டு அடித்துக்கொண்டது.

அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு உடனேயே புறப்பட்டேன். வழிநெடுக சிந்தனை தொடர்ந்தது. ஒரு பெரிய கேள்விக்கு சிறிய விடை கொடு பபதும் ஒரு சிறிய கேள்விக்கு பெரிய விடையொன்று தருவதும் சில வேளைகளில் நடப்பதுதான். மிகவும்படித்து இறுமாந்த ஓளவைக் கிழவி ஒரு மாடுமேய்க்கும் சிறுவனிடம் தோற்கவில்லையா? கிழவி, சிறுவன்தானே என்று பாராமல் அவனுடைய கேள்விக்கு ஆழ்ந்து யோசித்திருந்தால் சரியான விடை கூறியிருப்பாள் அல்லவோ? ஓளவையார் பழத்தை எடுத்து "பூ, பூ" என்று ஊதியபோது சிறுவன், "என்ன பாட்டி! பழம் சுடுகிறதா?" என்று கேட்டு சிரித்த அந்தத் தருணத்தில் ஒளவையாருடைய மனம் என்ன பாடு பட்டிருக்கும்? ஒரு கணத்திலும் கணம் சிந்திக்கத் தவறியதன் விளைவல்லவா இது?

தொழிற்சாலையை வந்து அடைந்ததும் முதல் வேலையாக கணக்கு வழக்குகளைச் சரி பார்த்தேன். நான் நினைத்தது சரிதான். ஓடர்கள் எல்லாம் உரிய காலத்தில் தொழில்சாலையில் முடிக்கப்பட்டு விட்டன. ஏற்றுமதியில் தான் பிரச்சனை. துறைமுகத்திலே தேக்கம்; துறைமுகத்துக்கு எடுத்துப் போகும் வாகனங்களின் பற்றாக்குறை; ஆனபடியால் தொழிற்சாலை கிடங்கிலும் ஏற்றுமதிப் பொருட்கள் குவிந்து கிடந்தன.

எங்கள் தொழிற்சாலையில் நாங்கள் உற்பத்தி செய்தது உயர்ந்த ரச சமையல் பாத்திரங்கள். சமையல் பாத்திரங்கள் என்றால் சாதாரண வீட்டு சமையல் பாத்திரங்கள் அல்ல. இவையோ மிகப்பெரிய ஹோட்டல்களிலும் சமையல் விடுதிகளிலும் பாவிக்கும் உறுதியான எஃகுப் பாத்திரங்கள்; செப்பு அடித்தகடுவைத்த பென்னம்பெரிய பாத்திரங்கள். நாலு பருமன்களின் ஒன்பது ரக பாத்திரங்களை நாங்கள் செய்து கொண்டிருந்தோம். இதற்காக தயாரித்த விசேஷமான பெரிய அட்டைப் பெட்டிகளில் அவற்றைப் போட்டு அடைத்து ஏற்றுமதி செய்வதுதான் வழக்கம்.

இந்தப் பாத்திரங்களின் கைபிடிகள் பெரிதாக மேலே நீட்டிக்கொண்டு நிற்கும் முதல் வேலையாக கம்பனி வரைபட வல்லுனரைக் கூப்பிட்டு இந்தப் பாத்திரங்களின் கைபிடிகளை மடித்துவிடக் கூடியதாக செய்ய முடியுமா என்று கேட்டேன். அவர் சிறிது நேரம் யோசித்தார். அவருடைய சிந்தனையும் என்னுடையதுபோல ஒரே நேர்க்கோட்டில் போயிருக்கவேணும். ஒரு புன்சிரிப்பை உதிர்த்துவிட்டு ஒன்றும் பேசாமலே போய்விட்டார். அடுத்த நாள் அவர் கொண்டு வந்த புது டிசைனில் ஒரு பாத்திரத்தை செய்து பார்த்தோம். அது நல்லாகவே வந்திருந்தது.

அதிர்ஷ்டவசமாக 'பக்கிங்' பெட்டிகளில் ஒரு சிறு மாற்றம்தான் செய்ய வேண்டியதாக இருந்தது. அறுநூறு கன அடியில் முன்பெல்லாம் நூறு பாத்திரங்கள் அடைத்து அனுப்ப முடிந்தது. இந்தப் புது டிசைன்படி நூற்றி நாற்பத்திமூன்று பாத்திரங்கள் அடைக்கக் கூடியதாக இருந்தது. எங்கள் வாடிக்கைக்காரர்கள் இந்தப் புது டிசைனை வரவேற்றார்கள்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 5:13 pm


என்னுடைய ஊகம் சரிதான். உற்பத்தி குறையவில்லையென்றாலும் ஏற்றுமதியில்தான் பிரச்சினை. தொழில்சாலையில் இருந்து கப்பலுக்கு போவதில் சுணக்கம்; துறைமுகத்தில் கப்பலில் ஏற்றுமதி செய்வதில் தடங்கள். பாத்திரங்களின் கைபிடியை மடக்குவதால் இப்போது முந்திய கனஅளவில் கூடிய பாத்திரங்களை அனுப்பக்கூடியதாக இருந்தது.

எங்கள் புது டிசைனை நடைமுறைக்கு கொண்டு வந்தேன். கிடுகிடென்று துறைமுகத்தில் தேங்கியிருந்த பெட்டிகள் குறையத் தொடங்கின. தொழில் சாலை சூடு பிடித்தது. ஆறே மாதத்தில் தேங்கி நின்ற பொருட்கள் எல்லாம் கப்பலேறிவிட்டன. ஓடர்கள் வரவர அவை உற்பத்தியாக்கப்பட்டு அதே வேகத்துடன் 'பக்' செய்யப்பட்டு அனுப்பப்பட்டன. ஏற்றுமதியின் வேகம் பார்த்து புது ஓடர்களும் வந்து குவிந்தன.

இதற்கிடையில் தொழிற்சாலை போனஸ் முறையிலும் சிறு மாற்றம் கொண்டு வரப்பட்டது. முன்பெல்லாம் உற்பத்தியில் போனஸ் கொடுக்கப்பட்டது. இப்போதோ ஏற்றுமதி அல்லது விற்பனை என்ற அடிப்படையில் கூடிய விகிதத்தில் போனஸ் வழங்கப்பட்டது. விளைவு? தொழிலாளரிடம் கூடிய ஒற்றுமை இருந்தது; எல்லோரும் ஒரே நோக்கத்தோடு பாடுபட்டார்கள்; தேக்கம் என்பதே அரிதாகிவிட்டது.

எங்கள் வரைபட வல்லுனரின் பெயர் சின்னபாரதி. அவருடைய தகப்பனார் பாரதியின் ரஸ’கனாக இருந்திருக்கக் கூடும் அவர் அதிசயித்துப் போனார். அவர் முப்பது வருடமாக அங்கே வேலை பார்த்து வருகிறார். அவர் கேட்டார்: "இத்தனை வருட காலமும் ஏன் ஒருவரும் இது பற்றி சிந்திக்கவில்லை?"

அதற்கு நான், "சில பேர் சில விஷயங்களை ஓர் இக்கட்டான சமயம் வரும்போதுதான் கண்டு கொள்கிறார்கள். இப்படியான கஷ்டம் எங்களுக்கு முன்பு வந்ததில்லையோ" என்றேன்.

ஆனால் எனக்கு இன்னுமொரு வேலை இருந்தது. இழந்துபோன ஓடர்களை மீட்பதற்கும், புது ஓடர்களைத் தொடர்ந்து ஸ்திரப்படுத்துவதற்கம்: வாடிக்கைக்காரர்களின் நன்மதிப்பை பெறுவதற்கும் ஒது புதுவித அணுகுமறை தேவைப்பட்டது. ஜெயந்தன் அதற்கு மிகவும் தகுந்த ஆளாகப் பட்டார். அமெரிக்க, ஐரோப்பா போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து கம்பனிக்கு ஒரு புதுமுகத்தை தயார் பண்ணவேண்டிய பொறுப்பை அவரிடம் கொடுக்க முடிவு செய்தேன்.

சின்னபாரதி இதைக் கேள்விபட்டதும் அசந்துவிட்டார். அவர் அனுபவஸ்தர்; நம்பகமானவர். அவருடைய அறிவுரைகளை நான் அவ்வப்போது கேட்பதுண்டு. அவர் சொன்னார்: "ஜெயந்தனுடைய அசைந்தாடும் நெஞ்சில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. அவனிடம் இப்படியொரு பொறுப்பை ஒப்படைக்கலாமா? அரபுக் குதிரைபோல் நிமிர்ந்து திரியும் வெள்ளைக்கார மோகினிகளின் கண் வீச்சிலே இவனுடைய புத்தி சிதறிவிடுமே! இது இன்னும் žரழிவையல்லவோ கொண்டு வரும்."

ஆனால் என்னுடைய உள்மனதுக்கு நான் செய்வது சரிபோல பட்டது. துணிந்து இந்தக் காரியத்தை ஜெயந்தனிடம் ஒப்படைத்தேன். ஜெயந்தனுக்கு அளவற்ற மகழ்ச்சி. அவருக்கு இப்படியாக கம்பனி செலவில் உலகம் சுற்றுவது மிகவும் பிடித்த காரியமாகப் போய்விட்டது. இதுதவிர இன்னுமொரு முக்கிய காரணமும் இருந்தது.

அவருடைய மாதச் சம்பளத்தை தவிர அவர்பிடிக்கும் ஓடர்களின் பிரகாரம் அவருக்கு ஒரு ஸ்பெஷல் போனஸ் இப்போதெல்லாம் வழங்கப்பட்டது. ஜெயந்தன் ஒரு வருடத்தில் பத்து மாதங்கள் வெளியே தங்கினார். ஓடர்கள் வந்து குவிந்த வண்ணமே இருந்தன. தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வெகுமும்முரமாக வேலையில் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு வேறு விஷயங்களுக்கு நேரமே இல்லை. ஏற்றுமதி போனஸ் மூலம் அவர்கள் வரும்படி நல்லாக விரிவடைந்திருந்தது.

என்னுடைய கல்யாண குணங்களில் சிரேட்டமானது அடக்கம். என் எதிரிகள் எத்தனை 'மகா மேதாவி' என்றும் 'அறிவுஜ“வி' என்றும் திட்டும்போதெல்லாம் நான் மறுப்பதில்லை; பேசாமல் இருந்துவிடுவேன். ஆனபடியால் என்னுடைய தனித்திறமையால் கம்பனியை அதலபாதாளத்தில் இருந்து மீட்டு விட்டேன் என்று நான் சொல்லிக்கொள்ளமாட்டேன். அது தற்பெருமைபோல் தோன்றும்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 5:14 pm

ஆறு மாதத்தில் கம்பனி இழந்த விற்பனைகளை எல்லாம் மீட்டுவிட்டது. நடப்பு வருடத்து விற்பனை முந்திய வருடத்து அதிகரித்து விட்டது. மூன்று வருடங்களில் கம்பனியின் விற்பனை இரண்டு மடங்காகி விட்டது; லாபம் எழுபது வீதம் கூடிவிட்டது. பங்கு விலைகள் கிறுகிறென்று ஏறிவிட்டன. இயக்குனர்கள் எல்லாம் ஒன்றுகூடி என் திறமையை சிலாகித்தார்கள். கம்பனியை இன்னும் தொழிற்சாலையை விரிவு செய்யவும், புது மெசின்கள் வாங்கவும் ஆலோசனைகள் தர வெளிநாட்டு நிபுணர்கள் தருவிக்கப்பட்டார்கள்.

   இப்படியாக என்னுடைய வாழ்க்கைத் தேர் அந்தரலோகத்தில் பவனி வந்தது. அரம்பையர் சாமரம் வீசி பன்னீர் தெளித்தனர். தேவதூதர்கள் துந்துபி முழங்கினார்கள்; தேவதூதிகள் தும்புரு (அது என்ன தும்புரு?) வாசித்தார்கள். இந்த மயக்கத்தில் வெள்ளை முயல் போன்ற மேகக்கூடட்டங்களில் சங்சரித்துக் கொண்டிருந்த போதுதான் நான் எதிர் பார்க்காத சம்பவம் ஒன்று நடந்தது.

   அரசாங்கம் திடீர் என்று கொண்டுவந்த ஒரு புதிய சட்டத்தினால் கம்பனியின் ஏற்றுமதிகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டன. எங்களுக்கு கிடைத்த சில சலுகைகள் நீக்கப்பட்டன. பார்த்துக் கொண்டிருக்கும்போதே கம்பனி கடகடவென்று கவிழத் தொடங்கியது. இந்த சமயத்தில் நான் கற்ற வித்தை ஒன்றும் பயன் தரவில்லை. தலைக்குமேல் தண்ணி போனபின் எனக்கு மறுபடியும் திருவண்ணாமலை ஞாபகம்தான் வந்தது. ஓடோடியும் சென்றேன்.

   அங்கே யோகியார் என்னை எதிர்பார்த்து இருந்தது போல புன்சிரிப்புடன் வரவேற்றார். இந்த முறை எனக்கு வாழைப்பழம்கூட இல்லை; வெறும் தண்ணி தான். யோகியார் நான் சொன்ன எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டார். பிறகு என் கண்களைப் பார்த்தபடி பேசத் தொடங்கினார்.

   அது இன்னொரு கதை

   கடிதத்திலே ஆர்வமுள்ள வாசகர்களக்கு மாத்திரம்: பிரஸ்தாபிக்கப்பட்ட கணக்குக்கு விடை

   ஆற்றை உறைய வைக்க வேண்டும் அதன்பிறகு படகின் வேகம் மணிக்கு பதினைந்து மைல். தொப்பி விழுந்தபோது அது ஆற்றில் அப்படியே இருக்கும். அரைமணியில் ஏழரை மைல் போனபடகு திரும்பவும் அதே தூரத்தை கடக்க அரை மணி ஆகும்.

   * * *




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 5:15 pm

8. ஞானம்

   அமெரிக்காவின் நாஷனல் சயன்ஸ் பவுண்டேஷனின் ஆதரவில் நாங்கள் இருவரும் மேற்க ஆபிரிக்காவின் சியாரா லியோனுக்கு வந்திருந்தோம். எங்கள் பி.எச்.டி படிப்பில் இது ஒரு முக்கியமான கட்டம். அபூர்வ குரங்கு ஜாதியான கொலபஸ் பற்றிய ஆராய்ச்சிக்காக கடந்த ஐந்துவருடங்களாக பி.எச்.டி மாணவர்கள் ஆபிரிக்காவுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். இம்முறை நானம் டேமியனும் இந்த ஆராய்ச்சிக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தோம். டார்வினில் சித்தாந்தப்படி குரங்குகள் எங்கள் மூதாதையரல்லவா? அந்த கோட்பாட்டில் உள்ள ஓட்டைகள் சிலவற்றை இந்த ஆராய்ச்சி நிரப்பும் என்று நாங்கள் நம்பினோம். இது என்னுடைய இரண்டாவது வருடம்; டேமியனுக்கு இதுதான் முதல் தடவை.

   கலவரத்தின் உச்சத்தில் மடியைப் பிடித்தபடி ஐரோப்பா, அமெரிக்காவென்று அகதிகளாக தெறித்து ஓடி, நிலைமை žரடைந்த சமயங்களில் திரும்பவும் யாழ்ப்பாண மண்ணில் மிதித்து, தமது மூத்த தலைமுறையினரை பார்த்து அதிசயித்து, ஆராய்ந்து, மூக்கின்மேல் விரலை வைத்து வியந்து 'இது என்ன கோணாக் கோணாக் காய்?' என்று கேட்டு, 'இதுதான் கோத்தை வித்த புளியங்காய்' என்று பதிலடிபட்டு, மூக்கின்மேல் வைத்த விரலை எடுத்து, ஆராய்ச்சிக்கான குறிப்புகளை மூட்டைகட்டிக் கொண்டு சலியாது திரும்புபவர்கள்போல, நாங்களும் எங்களுக்கு கிடைத்த நிதியுதவியில் சகல ஆராய்ச்சிகளையும் இரண்டே மாதங்களிலே பூர்த்தி செய்து எங்கள் பூரிவீக கடியினரின் மூலஸ்தானத்து ரகஸ்யங்களை உலகத்துக்கு 'ஆசை பற்றிய அறைய' வந்திருந்தோம்.

   டேமியன் அமெரிக்கனாக இருந்தாலும் உயரத்தில் சராசரிதான். மெலிந்த தேகம். புத்திக் கூர்மையான கண்கள். எதையும் ஆராய்ந்து அறியும் வேட்கை இயல்பாகவே அவனுக்கு இருந்தது. கால்கள் ஒரு இடத்தில் நிற்காது. எப்பவும் சாகசமாக எதையும் சாதிப்பதற்கு தருணம் பார்த்திருப்பான். கற்பாறைகளை வெறும் கையால் பிடித்து ஏறும் வித்தையில் கெட்டிக்காரன். அதற்கேற்ற உடல்வாகு அவனுக்கு இருந்தது. பெண்களும், ஆண்களும் சமமாக பங்கேற்கும் விளையாட்டு இந்த உலகத்திலேயே இது ஒன்றுதான். இதற்கு உடல் அமைப்பு சிறியதாகவும், கைவலிமை பெரியதாகவும் இருக்க வேண்டும். இந்த தகுதி டேமியனுக்கு இருந்தது. செங்குத்தான பாறைகளில் வெறும் கைகளை மூலாதாரமாகப் பற்றி இவன் கிறுகிறுவென்று ஏறும்போது பார்ப்பவர்கள் நெஞ்சம் துணுக்குறும். இரண்டு மாதகாலம் ஆபிரிக்கக் காட்டில் வேலை செய்வதற்க அளவில்லாத ஆர்வத்தை அள்ளிக்கொண்டு இவன் என்னோடு வந்திருந்தான்.

   இந்த இரண்டு மாத காலமும் நாங்கள் நடுக்காட்டில் கடைபரப்பி கொலபஸ் குரங்குகளின் பூர்வீகத்தையும், சமுதாய வாழ்க்கை விபரங்களையும் அவதானித்து குறிப்புகள் சேகரிக்க வேண்டும். புலம்பெயர்வு, உணவுமுறை, குடும்பம், குட்டிகளைப் பராமரித்தல் எல்லாம் இவற்றில் இடங்கும். இறுதியில் அந்தப் பிராந்தியத்தில் உள்ள கொலபஸ் குருங்குகளைக் கைபற்றி PIT முறையில் அடையாள எண்ணிட்டு அவைகளைப் பற்றிய குறிப்புகளை கம்புயூட்டரில் பதிந்துகொண்டு காட்டிலேயே அவைகளை திருப்பி விட்டுவிட வேண்டும். அடுத்த வருட தொடர் ஆராய்ச்சியில் இந்தக் குரங்குகளின் புலம் பெயர்வு, பழக்கவழக்க மாற்றங்கள் எல்லாம் இலகுவில் தெளிவாகி விடும்.

   PIT என்றால் Passive Integrated Transponders. குரங்குகளைப் பிடித்ததும் இஞ்செக்ஷன் மூலம் குண்டூசி தலையளவு பருமனுள்ள துகளை அந்தக் குரங்குகளின் தோலின் கீழே செலுத்திவிடவேண்டும். எங்கள் ஊர்களில் மாடுகளை சாய்த்துப் போட்டு, கொல்லனுடைய உலையில் பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் நாமம் சுடுவதுபோல இதுவும் ஒரு அடையாள நம்பர் முறைதான். ஆனால் இந்த முறையில் குரங்கு சூடுபட்டு துடிக்கத் தேவையில்லை. அந்தக் குரங்கின் நம்பர் அந்தத் துகளில் இருக்கும். இதற்கென்று இருக்கும் எலக்ட்ரோனிக் கருவியை அந்த குரங்குக்கு கிட்ட கொண்டு வந்ததும் அந்த நம்பர் பளிச்சென்று தெரியும். குரங்குக்கு ஒரு நோவும் இல்லாமல் அந்தத் துகள் அதன் உடம்பில் ஆயுள் பரியந்தமும் இருக்கும். அந்த நம்பரில் குரங்கு பற்றிய விபரங்களெல்லாம் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கல்லூரி கம்புயூட்டரில் பதிவாகிக் கொண்டிருக்கும்.

   நாங்கள் காட்டிலேயே வாழ்ந்து எங்கள் வேலைகளை கண்ணும் கருத்துமாக பல வாரங்கள் தொடர்ந்தோம். ஒரு விக்கினமும் இன்றி ஆராய்ச்சிகள் நன்றாக நடைபெற்று முடியுந் தறுவாயில் இருந்தன. எங்கள் குடிசையிலே எங்கே பார்த்தாலும் கத்தை கத்தையாக குறிப்புகளும், டயரிகளும், புத்தகங்களம், கோப்புகளுமாக கிடந்தன. இனிமேல் எல்லாக்குறிப்புகளையும் žர்படுத்தி கலிபோர்னியாவில் போய ஆய்வைத் தொடர வேண்டியதுதான். குரங்குகளைப் பிடிக்கவேண்டி தருணம் இறுதியில் வந்தது. தலைக் குடிமகனிடம் போய் முந்திய வருடம்போல குரங்குகளைப் பிடிக்க வேண்டிய உதவிகள் செய்யுமாறு கேட்டுக் கொள்வதென்று தீர்மானித்தோம். அங்கேதான் எங்களுக்கு ஒரு வில்லங்கள் காத்திருந்தது.

   நாங்கள் அவரைப் பார்க்கப் போனபோது அவர் முன் விறாந்தையில் இருந்த ஒரு 'வலை ஏணையில்' (Hammock) ஒய்யாரமாக சாய்ந்துகொண்டு இருந்தார். கறுப்பு மலையை உருட்டிவிட்டது போல இருந்தது அந்தக் காட்சி. வண்ணப்பூக்கள் போட்ட நீண்ட வெள்ளை அங்கியும், அதே கலர் தொப்பியும் அணிந்திருந்தார். அவருடைய வாய் ஓயாது 'கோலாநட்டை' சப்பியபடியே இருந்தது. மேலே கூரையில் இரண்டு கோழிகள் காலில் கட்டப்பட்டு தலை கீழாக தொங்கிக்கொண்டு இருந்தன. அவை அடிக்கடி செட்டைகளை அடிக்கும்போது மெல்லிய காற்று வந்து அவருடைய பிரும்மாண்டமான உடம்பை ஆற்றியது. கோழிகள் களைப்படைந்து ஓய்வெடுக்கும்போது இவர் தன் கையிலிருக்கும் 'பாம்' ஓலைவிசிறியால் விசிறிக் கொண்டார். அப்போது அவர் முகத்திலே அப்பிக் கொண்டிருந்த இலையான்கள் எல்லாம் ஒன்றுகூடி எழுந்து ஒரு வட்டம் அடித்துவிட்டு திரும்பவும் வந்து தங்கள் தங்கள் 'žட்களில்' உட்கார்ந்து கொண்டன.



 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக