புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 
2 Posts - 5%
prajai
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 
1 Post - 2%
Balaurushya
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 
383 Posts - 49%
heezulia
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 
26 Posts - 3%
prajai
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 
7 Posts - 1%
sugumaran
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம்


   
   

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:11 pm

First topic message reminder :

பதிப்புரை

என்னுரை

முன்னுரை (மாலன்)

முன்னீடு

வம்ச விருத்தி

1. துரி

2. ஒரு சாதம்

3. கிரகணம்

4. விழுக்காடு

5. பீஃனிக்ஸ் பறவை

6. முழு விலக்கு

7. முடிச்சு

8. ஞானம்

9. சிலம்பு செல்லப்பா

10. வம்ச விருத்தி

11. பருத்திப் பூ



 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:35 pm


அதற்கு பிறகு இரண்டு மாதம் சிசு லபோரட்டரியிலேயே வளர்ந்தது. பிறகுதான் சங்கடம். செவிலித்தாயைத் தேட வேண்டும். ரஸ்யாவில் இருந்து ஏழைப்பட்டாளம் இதற்காகவே வருவார்கள். ஒரு பிள்ளையை ஐந்து மாதம் வரை சுமப்பதற்கு சுவை கூலி கேட்பார்கள். ஐந்துமாத முடிவில் பிள்ளையை சிசேரியன் முறையில் வெளியே கொண்டு வந்துவிடுவார்கள். பிறகும் இன்னொரு இரண்டு மாதம் குழந்தை சூட்டுப் பேழையில் வளரும். அதற்குப் பிறகுதான் குழந்தையை கையிலே தூக்கி கொடுப்பார்கள். அப்படித்தான் ஹோர்கன் பிறந்ததாக அவள் கூறினாள்.

"அப்ப, நீ பெறவே இல்லையா?" என்று கேட்டேன், அதிர்ந்துபோய்.

"ஹோர்கன் உங்கள் மகனுடைய கருவும், என்னுடைய கருவும் சேர்ந்து உண்டான பிள்ளை. முழுக்க முழுக்க எங்கள் பிள்ளை; ரஸ்யாக்காரி வெறும் சுவை கூலிக்காரிதான். அவளுக்கு நாங்கள் ஒப்பந்தப்படி ஐந்து மாதங்களுக்கு 20000 யூரோடொலர் கொடுத்தோம். அவளுக்கு இது பெரிய காசு; இரண்டு வருடத்திற்கு போதுமானது" என்றாள். ஸ்வென்காவின் உடம்பின் லாவண்யம் எனக்கு அப்போதுதான் முற்றிலும் புரிந்தது.

அன்று ஜிம்மிலிருந்து வந்து கம்புயூட்டரில் அன்றைய முக்கிய செய்திகளைப் படித்தாள். இங்கே பத்திரிகைகள் வீட்டுக்கு வருவது கிடையாது. சந்தா கட்டிவிட்டால் வேண்டிய செய்திகளை வீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம். எவ்வளவு பேப்பர் மீதமாகிறது?

அடுத்து, கம்புயூட்டரில் வந்த ஈமெயில் கடிதங்களை படித்துவிட்டு திடீரென்று அழத் தொடங்கிவிட்டாள். அர்ஜுன் ஓடிவந்தான். அவனும் பார்த்துவிட்டு திகைத்துப்போய் சிறிது நேரம் நின்றான். பிறகு ஸ்வென்காவைத் தேற்றினான். அவளுடைய அழுகை அடக்க முடியாமல் நீண்டுகொண்டே போனது.

விஷயம் இதுதான். இவர்கள் இரண்டாவது பிள்ளை பெறுவதற்கு போட்ட மனுவை அரசாங்கம் நிராகரித்துவிட்டது. அது ஒரு பெண் குழந்தையாம்; உயரம் ஐந்து அடி எட்டு அங்குலம். கறுப்பு தலை மயிரும், கபிலநிறக் கண்களுமாக இருக்குமாம். கரு உற்பத்தியான நாளிலிருந்து மூன்று வருடமாகிவிட்டதாம். "எப்போ இவர்கள் அனுமதி தரப்போகிறார்கள்? இது என்ன அநியாயம்! என் சிநேகிதிகள் எல்லோருக்கும் கிடைத்துவிட்டதே! எனக்கு மட்டும் ஏன் இப்படி? இதைக் கேட்பாரில்லையா?" என்று விம்மி விம்மி அழுதாள்.

அர்ஜுன் அவளைத் தேற்றி எல்லாவற்றையும் விளக்கினாள். கம்புயூட்டரில் அவர்கள் விண்ணப்பம் இருக்கிறது. ஒவ்வொரு பிறப்பும், இறப்பும் அங்கே பதிவாகிறது. கம்புயூட்டர் இவற்றை கணக்குப் பண்ணிக்கொண்டே வரும், அவர்கள் முறை வந்ததும் அனுமதி தானாகவே கிடைத்துவிடுமென்று ஆறுதல் கூறினான். எனக்கு ஸ்வென்காவை பார்க்கப் பாவமாக இருந்தது. அவளுடைய நெஞ்சுக்குள் இப்படியான ஒரு தீராக கவலை இருக்கும் விஷயம் எனக்கு அன்றுவரை தெரியாது.

இது நடந்து பிறகு ஒரு குளிர் காலத்தையும் நான் முற்றிலும் பார்த்துவிட்டேன். குளிர் காலத்தையும் நான் முற்றிலும் பார்த்துவிட்டேன். குளிர்காலத்தை நினைத்து மிகவும் பயந்துகொண்டே இருந்தேன். ஆனால் தப்பிவிட்டேன். வீட்டை சூரிய சக்தியை பயன்படுத்தி தகுந்த வெப்பநிலையில் வைத்திருந்தார்கள். அத்துடன், நான் இப்பவெல்லாம் ஏரோபிக்ஸ”ம் செய்ய பழகிக்கொண்டேன். என்னுடைய குரு வேறு யார்? சொக்கன்தான். நல்ல ஆரோக்கியமக இருக்க முடிகிறது. சுவாமிக்கும் காற்று மிகவும் சுத்தம். காற்றுச் சூழலைப் பேணுவதற்கு அதிக முக்யத்வம் கொடுக்கிறார்கள். இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கை. எனக்கு சந்தோஷமாக இருந்தது.

ஒருநாள் கம்புயூட்டரில் எனக்கு ஒரு செய்திவந்தது. நான் ஆச்சரியப்பட்டு விட்டேன். அதுதான் எனக்கு முதன்முறை அப்படிச் செய்தி வருவது. விட்டமின் 'டீ' சத்துக் காணாது என்றும், புரதச்சத்தைக் குறைக்கும்படியுந்தான் செய்தி. எனக்கு வியப்புத் தாங்கவில்லை. என் மகன்தான் விளக்கினான். "கம்புயூட்டர், நாங்கள் சாப்பிடுவதைக் கணித்தபடியே இருக்கிறது. அத்துடன் மாதா மாதம் எங்கள் இரத்தம், சிறுநீர், இரத்த அமுக்கம், இதயத்துடிப்பு முதலிய கணிப்புகளை கம்புயூட்டரில் பதிவு செய்து கொண்டே வருகிறோமல்லவா? இவற்றையெல்லாம் கம்புயூட்டர் கிரகித்து அப்பப்போ நோய் வருவதைத் தடுக்க குறிப்புகள் கொடுத்த வண்ணமே இருக்கும். இங்கேயெல்லாம் வருமுன் தடுப்பதில் அரசாங்கம் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுகிறது" என்றான்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:36 pm


ஒருமுறை அர்ஜுன், ஸ்வென்காவையும், என்னையும் கருவங்கிக்கு கூட்டிச் சென்றான். அங்கே சேமித்து வைத்த இவர்களுடைய 'கருநிலை சிசுக்களை' கம்புயூட்டரில் போட்டுப் பார்க்க அனுமதிகிடைத்தது. எல்லாமாக பதினேழு பெண் கருக்கள் தயார் நிலையில் இருந்தன. ஸ்வென்கா, தான் தெரிவு செய்த பெண் குழந்தைக்கு 'காமாட்சி' என்ற பேரைப் பதிவு செய்திருந்தாள். அது என்னுடைய தாயாருடைய பெயர். என் மனம் நெகிழ்ந்தது. அந்தப் பதினேழு குழந்தைகளிலும் காமாட்சிதான் கண்ணைப் பறிக்கும் அழகியாக இருந்தாள். இருபத்தொரு வயது வரைக்கும் கம்புயூட்டரில் அவளுடைய பரிணாம வளர்ச்சியை அவதானித்துக் கொண்டே வந்தோம். விதவிதமன தலை அலங்காரம் செய்து, வெவ்வேறு உடைகளில் அவளைக் கண் குளிரப் பார்த்தோம். டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் அவள் வீராங்கனையாக விளங்குவாளாம்; மனிதவியல் போன்ற பாடங்களில் அவளுக்கு இயற்கையான திறமை இருக்குமாம். அப்படியே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். ஸ்வென்காவின் கண்களில் நீர்த் துளி. எனக்கே அழுகையாக வந்தது.

அப்போது ஸ்வென்கா ஒரு செய்தி சொன்னாள். இப்போதெல்லாம் செவிலித் தாய்மார் மிகவும் மலிவாகக் கிடைக்கிறார்களாம். ரஸ்யா, லட்டின் அமெரிக்கா, அரபு நாடுகளில் இருந்தெல்லாம் பெண்கள் வந்து குவிந்தபடியே இருக்கிறார்கள். சூரியசக்தியின் உபயோகம் உலகத்தில் வேகமாகப் பரவி விட்டதால் அரபு நாடுகளில் எண்ணெய் விலை போகாமல் வறுமை பீடித்து விட்டதாம். அங்கேயெல்லாம் செவிலிப் பெண்களுக்கு பஞ்சமில்லை; ஸ்வீடன் அரசாங்கத்தின் அனுமதியில்தான் பஞ்சமாம்.

அப்ப என் மகன் இன்னொரு ஆச்சரியமான தகவலையும் சொன்னான். ஸ்விடனில் அநேகமாக எல்லோரும் செவிலித் தாய் முறையைத்தான் கையாளுகிறார்கள். குழந்தைகளையும் சிசேரியன் முறையில்தான் பிறக்க வைக்கிறார்கள். இதுதான் தாய்க்கும் சேய்க்கும் சிறந்த முறை என்று கருதப்படுகிறது. இப்பொழுது அமெரிக்க, ஜப்பான் போன்ற இடங்களில் இருந்துகூட சில பெண்கள் வருகிறார்கள். ஒப்பந்தம் இல்லாமல் இலவசமாகவே பிள்ளையைச் சுமக்க அவர்கள் சம்மதிக்கிறார்களாம். ஆனால், பிள்ளை இயற்கை முறையில்தான் பிறக்க வேண்டுமாம்; சிசேரியன் ஆகாதாம். அவர்களக்கு பிள்ளை பெறும் அனுபவத்தை உண்மையிலேயே அனுபவிக்க ஆசை. ஓர் அமெரிக்க பெண்மணி தான் நிஜமாகவே பிள்ளை பெற்ற அனுபவத்தை புத்தகமாக எழுதி நிறையப் பணம் சம்பாதித்து விட்டாளாம்.

"இந்தியா, சீனா, ஸ்ரீலங்கா போன்ற இடங்களிலிருந்து செவிலித் தாய்மார் கிடைக்க மாட்டார்களா?" என்று கேட்டேன், நான்.

"அவையெல்லாம் முன்னேறிய நாடுகள். அங்கேயிருந்தெல்லாம் மலிவாகக் கிடைக்க மாட்டார்கள்," என்றான் அர்ஜுன்.

நாங்கள் திரும்பி வரும்போது நான் இதே யோசனையாக இருந்தேன். நான் என் மகனை வயிற்றிலே பத்து மாதம் சுமந்ததை நினைத்துப் பார்த்தேன். அப்போது எனக்கு வயது முப்பது. மணமுடித்து ஐந்து வருடங்கள். கணக்கில்லாத விரதங்கள் அநுஷ்டித்து, தவமிருந்து 1983ம் ஆண்டு ஆடி மாதக் கலவரத்தில் அவனைப் பெற்றேன். அது எவ்வளவு கஷ்டமான காலம்! தெஹ’வளை ஆஸ்பத்திரியில் என்மகன் பிறந்த இரண்டாவது நாளே கலவரம் தொடங்கிவிட்டது. அந்த வார்டில் நான் ஒருத்தி மாத்திரமே தமிழ். பயந்து நடுங்கிக் கொண்டு இருந்தேன். மூன்றாம் நாள் இரவு நர்ஸ்மார் என்னைச் சுட்டிக்காட்டி எதோ பேசிக் கொண்டிருந்தார். எனக்குப் பயம் பிடித்துவிட்டது. அன்று இரவே ஒருவருக்கும் தெரியாமல் பிள்ளையையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டேன். இன்று கூட அதை நினைக்கும்போது எனக்கு குலை நடுங்கும். அன்று அதை எப்படிச் செய்தேனோ தெரியாது?

பத்து மாதம் சுமப்பது என்பது கதையாகி விட்டது. இப்போது ஐந்து மாதம் என்று ஆகிவிட்டது. விஞ்ஞானிகள் இன்னும் தொடர்ந்து வேலை செய்கிறார்கள். இந்த ஐந்து மாதம்கூட மேலும் சுருங்கி மூன்று மாதம்கூட ஆகலாம்; ஒரு வேளை ஒரேயடியாக பிள்ளைப் பேறே தேவையில்லாமல் போகலாம். விஞ்ஞானம் போகிற போக்கில் என்ன நடக்கும் என்று யாரால் கூற முடியும்?

கார் பல வெறுமையான கட்டிடங்களை தாண்டி போய்க் கொண்டிருந்தது. புதிதாகக் கட்டிடங்கள் கட்டுவது எப்பவோ நின்றுபோன ஒரு காரியம். ஆக, செப்பனிடும் வேலைகள்தான் இப்பவெல்லாம் செய்கிறார்கள். பழைய கட்டிடங்களை என்ன செய்வது என்று அரசாங்கம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. முந்தின வங்கிக் கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், அலுவலகங்கள் எல்லாம் சீந்துவாரின்றிக் கிடந்தன. ஆஸ்பத்திரிகள்கூட குறைந்து விட்டனவாம். எல்லோரும் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளைப் பார்க்கிறார்கள்; வாரத்தில் ஒரு முறைதான் போய் வருகிறார்கள்.

வங்கிகள் பத்திலே ஒன்பது மூடிவிட்டன. காலியான கட்டிடங்களை சமுதாய நலச் சங்கங்களுக்க விட்டுவிட்டார்கள். அனாதைகளே கிடையாது, ஆனபடியால் அனாதை ஆச்சிரமங்களும் இல்லை. முன்பு போல கூன், குருடு, செவிடாகவும் ஒருத்தரும் பிறப்பதில்லை; ஜனத்தொகையும் கூடப் போவதில்லை. ஒரே வழி, கட்டிடங்களையெல்லாம் இடித்துப் பூங்காக்களாக மாற்றுவதுதான்; அதுதான் அரசாங்கம் இது பற்றி தீவிரமாக சிந்தித்து கொண்டு வருகிறதாம். மனிதன் முன்னேற, முன்னேற பிரச்சினைகளும் புதிதாகத் தோன்றிய வண்ணம் இருக்கின்றன.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:36 pm


ஸ்வென்கா இயற்கையிலேயே ஒரு குதூகலமான பெண். ஆனபடியால் பெண் குழந்தை இல்லாத குறையைப் பெரிது படுத்தி எப்பவும் மனதைப்போட்டு வருத்திக் கொள்பவல்ல. இருந்தாலும் சில வேளைகளில் இந்த சோகம் அவளை மிகவும் பாரத்துடன் தாக்கும். அந்த சமயங்களில் ஸ்வென்கா சிறிது ஆடிவிடுவாள். மற்றும்படி தன்னுடைய ஆராய்ச்சியிலும், குடும்பத்தை பராமரிப்பதிலுமே கவனமாக இருந்தாள்.

ஆனாலும் ஸ்வென்கா தன் போராட்டத்தை தளர்த்தவில்லை; தன்னுடைய விண்ணப்பத்தைப் பற்றி அரசாங்கத்துக்கு திருப்பித் திருப்பி நினைவூட்டிக் கொண்டே இருந்தாள். ஆறு வருடங்களாக தன் கோரிக்கை கவனிப்பாரற்று கிடப்பதை வெகு தயவாக பத்து வயது நிரம்பி விட்டது. நாங்கள் எல்லோரும் முற்றிலும் நம்பிக்கை இழந்து விட்டோம்; ஆனால் ஸ்வென்கா அயரவில்லை. அப்பொழுதுதான் ஸ்வென்காவுக்கு மாத்திரமல்ல, இன்னும் எத்தனையோ இளம் தம்பதியருக்கும் விமோசனம் அளிக்கும் வகையில் ஒரு புதிய சட்டம் பிறந்தது.

சட்டம் இதுதான்; எழுபது வயதுக்கு மேலான ஒருவர் கருணை மரணத்தை தழுவுவாராயின் அவர் தன்னால் ஏற்படும் காலி ஸ்தானத்தை தனக்கு நெருங்கிய ரத்த உறவுள்ள ஒருவருக்கு அளிக்கலாம், அவ்வளவுதான். இந்தச் செய்தி அறிக்கையை தொலைக்காட்சியில் திருப்பித் திருப்பிக் காட்டினார்கள். இளம் தம்பதியரும், இளையதலைமுறையினரும் கூட்டம் கூட்டமாக நின்று இந்தச் சட்டத்தை வரவேற்று கொண்டாடினார்கள். சில பார்களிலே இலவச சாம்பெய்ன் வழங்கி குடித்து இரவு முழுக்க ஆடி மகிழ்ந்தார்கள். இந்தச் சட்டம் இவ்வளவு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் கூட எதிர்பார்க்கவில்லை.

இது நடந்த வருடம் 2022. இந்த வருடத்தில் இன்னொரு முக்கியமான சம்பவம் நிகழ்ந்தது. இருநூறு வருடங்களாகத் தொடர்ந்த முடியாட்சி ஒழிந்து கிறிஸ்டீனா ராணி முடி துறந்ததும் இந்த வருடம்தான். சில வாரங்களில் என்னுடைய பிறந்தநாள் வந்தது. நான் இப்பவெல்லாம் சொக்கனுடன் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்வீடிஷ் மொழியில் பேசக்கற்றுக் கொண்டேன். அவன் 'ஹால் காவ்ரன்' என்றால் நானும் திருப்பி 'ஹால் காவ்ரன்' என்று சொல்லி விடுவேன். எங்களுக்குள் எவ்வளவோ ரகஸ்யங்கள். என் மகன் சிறுவயதில் எப்படி இருந்தானோ அப்படியே இவனும் அச்சாக இருந்தான். சொக்கன்தான் சொன்னான், இன்றைக்கு எனக்கு 'பெரிய விருந்து' என்று. நான்தான் முட்டாள்போல அதை முற்றிலும் கிரகிக்க தவறி விட்டேன்.

அன்று இரவு எங்கள் வீட்டில் ஓர் இருபது பேர் மட்டில் கூடிவிட்டார்கள். பெரிய வட்டமான கேக். ஏழு மெழுகுவர்த்திகள் அதை அலங்கரித்தன; ரிப்பன் கட்டியபடி பக்கத்திலே ஒரு கத்தி. நான் என்னிடம் இருந்த சேலைகளில் மிகவும் உயர்ந்ததைக் கட்டிக் கொண்டேன். கண்ணாடியில் பார்த்தேன், எழுபது வயதுபோல் தோற்றமே இல்லை. எனக்கு என் கணவருடைய ஞாபகம் வந்து கண் கலங்கியது.

நான் அறைக்குள் காலடி வைத்ததும் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரித்து என்னை வரவேற்றார்கள். கேக்கை வெட்டினேன். விருந்தினர்கள் ஒவ்வொரு துண்டு எடுத்துக் கொண்டார்கள். அதன் பிறகு சாம்பெய்னும், வெண்ணெய்க் கட்டியும் பரிமாறப்பட்டது.

அப்பொழுதுதான் என் மகனுடைய கண்களைப் பார்த்தேன். அந்தக் கண்களின் ஆழத்தை என்னால் என்றும் காணவே முடியாது. சிறுபிள்ளையாக மடியில் கிடத்தி அவன் கண்களையே நான் பார்த்துக் கொண்டிருந்தது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. என் அன்பு மகனே, உன் கண்கள் என்ன சொல்கின்றன? என் கால்கள் துவண்டன.

என் சிற்றுரையை வழங்க நான் விருந்தினர்களை நோக்கி மெதுவாக நடந்தேன்.

* * *





 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:37 pm

6. முழுவிலக்கு

   கணேசானந்தனுக்கு தன்னுடைய பெயரைப் பிடித்திருந்தது; ஆனால் அது ஆபிரிக்காவுக்கு வரும் வரைக்கும்தான். இங்கே அவனுடைய பெயர் செய்தகூத்தை விவரிக்க முடியாது. போகிற இடமெல்லாம் முழுப் பெயரையும் எழுதும்படி கேட்பார்கள். 'தாமோதிரம்பிள்ளை கணேசானந்தன்' என்று விஸ்தாரமாக இவன் எழுதி முடிப்பதற்கிடையில் அவர்கள் தங்கள் சுருண்ட தலைமுடியை பிய்த்துக் கொண்டு நிற்பார்கள். குடும்பப் பெயர், நடுப்பெயர், கிறிஸ்டியன் பெயர், முதற்பெயர் என்று மாறி மாறி சில வேலைகளில் 'தலையா, பூவா' போட்டு ஒரு பேரை எழுதி வைப்பான். சில சமயங்களில் சண்டை போட்டும் பார்ப்பான். "நான் இந்து; எனக்கு கிறிஸ்டியன் பெயர் கிடையாது" என்று கெஞ்சினாலும் விடமாட்டார்கள். ஏதாவது ஒன்றை எழுதச்சொல்லி நிர்ப்பந்திப்பார்கள்.

   ஒருமுறை உச்சக்கோபத்தில் தன்னுடைய முழுப் பெயரையும் இரண்டு வரிகளில் எழுதி "ஐயோ, என்னுடைய எல்லாப் பெயர்களும் இதற்குள்ளே அடக்கம்; உங்களுக்கு எந்தெந்தப் பெயர் தேவையோ அவற்றை இதிலிருந்து பிய்த்து எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டான். கடைசியில், வந்து பல வருடங்களுக்கு பிறகுதான் இதற்கான ஒரு சுலபமான வழியைக் கண்டுபிடித்தான். 'கணேசானந்தன்' என்ற பெயரை மூன்று பகுதிகளாக பிரித்து 'கணே சா நந்தன்' என்று அமைத்துக் கொண்டான். அவர்கள் விருப்பப்படியே எல்லாப் பெயர்களும் அதனுள் அடக்கம். இவனுக்கும் தொல்லை விட்டது.

   ஆபிரிக்காவிலுள்ள அந்த குடிவரவு அலுவலகத்துக்கு இத்துடன் பலமுறை அவன் வந்து விட்டான். கொடுத்த பாரங்களையெல்லாம் வெகு நேர்த்தியாக பூர்த்தி செய்தான். பெயர்கள் இப்போது தொல்லை கொடுப்பதில்லை. பத்து வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து ஆபிரிக்காவிலேயே தங்கி விட்டதால் நிரந்தரக் குடியுரிமை விரைவிலேயே கிடைத்துவிடும் என்று எதிர்பார்த்தான். மேலதிகாரியைப் பார்ப்பதற்காக அவன் காத்திருந்தான்.

   அலுவலகம் இப்போது கொஞ்சம் சுறுசுறுப்பு அடையத் தொடங்கியிருந்தது. ஒவ்வொருவராக வந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்து பைல்களை இழுத்து தூசு தட்டத் தொடங்கினார்கள். தோடம் பழக் கூடைக்காரி ஒருத்தி உள்ளே வந்து மேசை மேசையாகப் போய் விலைபேசி விற்றடிபயே வந்துகொண்டிருந்தாள். எல்லாமே தோல் žவி வைத்த நேர்த்தியான பழங்கள். தடிமாடு போன்ற ஒருத்தன் வந்து இலவசமாக ஒரு பழத்தை கைவிட்டு எடுத்துவிட்டான். கையை நீட்டி அடித்து அதைப் பறித்து விட்டு இடுப்பிலே கையை வைத்து 'ஆர்த்த குரலெடுத்து' அவளுடைய குலதர்மம் பிசகாமல் அவனைவையத் தொடங்கினாள் அவள். நல்ல நல்ல அசிங்கமான வார்த்தைகளை பொறுக்கியெடுத்து திட்டினாள். ஒருவரும் கண்டு கொள்ளவில்லை. எல்லாரும் தங்கள் தங்கள் தோடம்பழங்களில் கருமமே கண்ணாயிருந்தனர். பழத்தில் சிறு ஓட்டை துளைத்து, ஒரே உறிஞ்சிலே முழுச்சாற்றையும் உளிளிழுத்து, கொட்டைகளை 'தூதூ' என்று காலடியில் துப்பி, நிமிடத்தில் மூன்று நான்கு பழங்களை கணக்குத் தீர்க்கும் கலையில் அவர்கள் சூரர்கள்.

   சங்கீதா ஆபிரிக்காவுக்கு வந்து கணேசானந்தனை பதிவுத் திருமணம் செய்து இரண்டு வருடங்களாகிவிட்டன. ஆனால் இவனுடைய சங்கடம் இன்னும் தீர்ந்தபாடில்லை. நிச்சயமாக குடியுரிமை கிடைக்கும் வரை பிள்ளை பெற்றுக் கொள்வதில்லை என்று சங்கீதா பிரதிக்ஞை செய்திருந்தாள். எத்தனையோ பேர் எத்தனையோ விதமான பிரதிக்ஞை எடுக்கிறார்கள். ஆனால் இவள் மங்கம்மா செய்தது போல் அவசரப்பட்டு இப்படி ஒரு சபதம் செய்து விட்டாளே! இவனும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். காலை முடக்கி முரண்டு செய்யும் மாடுபோல மறுத்து விட்டாள்.

   இவர்களுடைய காதல் யாழ்ப்பாணத்தில் வேம்படியில் அரும்பியது. கணேசானந்தன் அப்பொழுது சென்ட்ரல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவனுடைய பள்ளி விட்டதோ இல்லையோ வேம்படி பள்ளி விடும் நேரமாகப் பார்த்து துடித்துக் கொண்டு சைக்கிளிலே பாய்ந்து போய்விடுவான். மணிக்கூட்டு வீதி வழியாக அவன் வேகமாக மிதிக்கவும் அவள் வரவும் நேரம் சரியாக இருக்கும். வெள்ளை மலரை அள்ளி வீசியதுபோல வெள்ளைச் žருடை தேவதையர்கள் வந்து கொண்டிருப்பார்கள். அவர்களிலே இவள்தான் உயரம். வாழைத்தார் போல திரண்டிருக்கும் கூந்தலை இரட்டைச் சடையாகப் போட்டிருப்பாள். அவளுடைய விசேஷம் கண்கள்தான். சஞ்சலப்படும் கண்கள் என்று சொல்வார்களே, அப்படி ஒரு நிலையில் நில்லாத கண்கள். நிமர்ந்து ஒருமுறை கண்ணை வீசிவிட்டு போய்விடுவாள். அந்தக் காலத்திலேயே விடாமுயற்சிக்கு பேர் போனவன் கணேசானந்தன். ஒரு வருட காலம் இப்படித்தான் கண்ணிலேயே செலவழிந்தது.



 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:37 pm


புட்டுக்கு தேங்காய் போட்டதுபோல விட்டுவிட்டு தொடர்ந்த பெருமை கொண்டது இவர்கள் காதல். பல்கலைக் கழகத்தில் இவன் படிக்கப் போன பின்பு காதல் தொடர வழியின்றி தேங்கிவிட்டது. படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த சமயம்தான் மறுபடி அவளுடைய தரிசனம் கிடைத்தது. கிடுகிடுவென்று வளர்ந்து விட்டாள். கண்கள் முகத்தில் சரிபாதியை அடைத்துக் கொண்டு கிடந்தன. முதல்முறையாக அவளுடன் பேசினான். இரண்டு முறை பல்கலைக் கழக தேர்வு எழுதியும் சரிவரவில்லையாம். பெற்றோருக்கு மாத்தறைக்கு வேலை மாற்றம் கிடைத்தபடியால் கொழும்பு விடுதி ஒன்றில் தங்கி கம்புயூட்டர் படிக்கிறாளாம். கம்புயூட்டர் ஒரு பாஷனாக இருந்த காலம் அது.

அந்த நாலு வருடங்கள் கணேசானந்தனுக்கு நிரந்தரமான வேலையில்லை. தொட்டு தொட்டு தற்காலிகமாக நிறைய வேலைகள் பார்த்தன். சங்கீதா ஒரு வங்கியிலே வேலைக்கு சேர்ந்து விட்டாள். அந்த சமயம்தான் அவனுக்கு ஒரு நண்பனின் உதவியால் ஆபிரிக்காவில் ஒரு வாத்தியார் உத்தியோகம் கிடைத்தது. மூன்று வருட ஒப்பந்தம். நல்ல சம்பளம். சங்கீதாவிடம் தன் காதலை வெளியிடமுன் நிலையான ஒரு வேலை கிடைக்கவேண்டும் என்ற அவன் பிரார்த்தனை நிறைவேறி விட்டது.

புறப்படுமுன் இவன் போய் சங்கீதாவிடம் விடை பெற்றது. ஒரு சுவையான சம்பவம். அதை எத்தனையோ தடவை தனிமையில் நினைத்து நினைத்து அனுபவித்திருக்கிறான். விடுதியிலே இவன் போய் கீழே அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான். மேல் வீட்டிலிருந்து படிகளிலே குதித்து குதித்து அவள் சுபாவப்படி இறங்கி வந்தாள், தேவதை ஒன்று வானுலகில் இருந்து இறங்குவது போல. இவன் இருப்பதை அவள் காணவில்லை. கீழே இருந்த ஒரு நிலைக் கண்ணாடியின் முன் இளைக்க இளைக்க ஒரு செகண்ட் நின்று தலைமுடியை சரி செய்து கொண்டாள்; இமையை நீவி விட்டாள். திரும்பியவள் இவைனைக் கண்டு வெட்கித்துப் போனாள்.

ஒரு பெண் ஒருவனுக்காக தன்னை செம்மைப் படுத்துகிறாள் என்ற நினைவு அவனுக்கு எவ்வளவு களிப்பூட்டும்! அன்று தனிமையில் இருவரும் நெடுநேரம் கதைத்துக் கொண்டு இருந்தார்கள். அடுத்த நாள் அவன் வெளிநாடு போவதாக இருந்தான். அன்று எப்படியும் தன் காதல் மாளிகையின் மேல் கதவைத் தட்டுவது என்ற தீர்மானத்தோடுதான் அவன் வந்திருந்தான். மனத்தில் துணிவு இருந்த அளவுக்கு கையில் பலமில்லை. கடைசியில் பிரியும் சமயத்தில், மைமலான அந்த மழை நாளில் ஒரு மூலையில் அவளை தள்ளிக் கொண்டு போய் வைத்து, உத்தேசமாக அவள் இதழ்களை தேடி ஒரு முத்தம் பதித்துவிட்டான். பெட்டைக்கோழி செட்டைகளைப் படபடவென்று அடிப்பதுபோல் அவள் இரண்டுகைகளாலும் அவன் கழுத்தைக் கட்டி உதறினாள். அவள் தள்ளினாளா அல்லது அணைத்தாளா என்பது கடைசிவரை அவனுக்கு தெரியவில்லை.

பிளேனில் பறக்கும்போது அவளுடைய சிந்தனையாகவே இருந்தான். விமானத்தில் யோசித்து வைத்து பதில் எழுதும்படி அவள் ஒரு விடுகதையும் சொல்லியிருந்தாள். அவர்களடைய காதலுக்கும் அதற்கும் சம்பந்தம் இருக்கிறதாம்.

'ஒரு மரம், ஆனால் இரண்டு பூ அந்த மரம் என்ன? பூ என்ன?'

இவனும் யோசித்து, யோசித்து பார்த்தான்; புரிபடவில்லை. பன்னிரெண்டு வருடம் அவனைக் காக்க வைத்துவிட்டுத்தான் விடையைக் கூறினாள்.

'மரம்: தென்னை மரம். பூ: தென்னம்பூ, தேங்காய்பூ'

அவன் ஆபிரிக்கா போன பிறகு அவர்கள் காதல் வலுப்பெற்றது கடிதங்கள் மூலமாகத்தான். துணிந்து இவன் தன் காதலை பிரகடனப்படுத்தினான். மூன்று வருட ஒப்பந்தக் காலம் முடிந்து இரண்டு மாத விடுப்பில் வந்தபோது எப்படியும் அவளை மணமுடித்து தன்னுடன் அழைத்துப்போவது என்றுதான் வந்திருந்தான். அந்தச் சமயத்திலேதான் அவன் தன் வாழ்நாளிலேயே மறக்க முடியாத ஒரு மிகப்பெரிய தவறு செய்ய நேரிட்டது.

இவனுக்கென்று கலியாணம் பேச பெரிசாய் ஒருவரும் அங்கே இல்லை. சங்கீதாவின் தகப்பனார் சபாபதி நல்ல மனுஷன். தாயும், தகப்பனும் பரிபூரண சம்மதத்தை தந்துவிட்டனர். ஒரே மகளை பிரிந்திருப்பது கஷ்டம்தான்; ஆனால் அவர்கள் அதைத் தாங்குவதற்கும் சித்தமாக இருந்தனர். மடைத்தனமாக காலை இழுத்தது கணேசானந்தன்தான்.

பத்து மணியளவில் இவனை உள்ளே கூப்பிட்டார் அதிகாரி. ஜன்னல்கள் கண்டுபிடிக்கமுன் கட்டிய கட்டிடம் அது. அதைக் கட்டிய கொத்தனாருக்கும் சூரியனுக்கும் ஜென்மப் பகை. கன்னங்கரேலென்று கதிரையை நிறைத்து இருந்த அதிகாரியைப் பார்ப்பதற்கு கண்களைப் பழக்கப்படுத்த சிறிது நேரம் எடுத்தது. முரசு தெரிய பளிச்சென்று பற்களைக் காட்டி சிரித்தார். முகம் சிநேகமாக இருந்தாலும் கண்கள் தீர்க்கமாக கணக்குப் போட்டபடியே இருந்தன.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:37 pm


இந்த அதிகாரியை இதற்கு முன்பும் பல தடவை பார்த்திருக்கிறான்; இருவரும் தங்கள் சேம நலன்களை 'ஹவ்தி பொடி, பொடி பைன், குஸே, குஸே', 'ஹவ்தி பொடி, பொடி பைன், குஸே, குஸே' என்று திருப்பித் திருப்பி சொல்லி விசாரித்துக் கொண்டார்கள். இந்த சேம விசாரிப்பு ஐந்து நிமிடங்கள் வரை தொடர்ந்தது. 'உங்களுடைய நலம் எப்படி?', 'பெற்றோர் நலம் எப்படி?', 'மனைவி நலம் எப்படி?', 'பிள்ளைகள் நலம் எப்படி?', 'பக்கத்து வீட்டுக்காரர் எப்படி?' என்ற இந்த நலன் விசாரிப்புகள் எட்டு முழ வேட்டிபோல முடிவில்லாமல் நீண்டுகொண்டே போகும்.

அதிகாரி கோப்பிலே ஒரு சிறிய சிக்கல் இருக்கிறது என்றும் அதற்கு தான் விரைவிலேயே சட்டவிலக்கு அளிப்பதாகவும் நிரந்தர குடியுரிமை இரண்டே மாதத்தில் கிடைத்துவிடும் என்றும் உறுதி கூறினார்.

கணேசானந்தன் வீட்டுக்கு வந்து நடந்த விபரத்தை மனைவியிடம் கூறினான். அவளுக்கும் சப்பென்று ஆகிவிட்டது. இந்த முறை கட்டாயம் கிடைக்கும் என்று அவள் மிக்க எதிர்பார்போடு இருந்தாள்.

அன்றிரவு சங்கீதா' வ்வூவ்வூவும், ஓக்ரா சூப்பும்' செய்திருந்தாள். இந்த இரண்டு வருடத்திலே அவள் ஆபிரிக்கச் சாப்பாட்டு முறைகளை ஒரு ஆவேசத்துடன் கற்றுத் தேர்ந்து விட்டாள். அவள் ஒரு காரணம் வைத்திருந்தாள். ஆபிரிக்காவிலேயே நிரந்தர பிரஜையாக தங்கிவிடுவது என்று முடிவெடுத்த பிறகு எவ்வளவு žக்கிரம் முடியுமோ அவ்வளவு žக்கிரம் அவளுடைய பழக்கவழக்கங்கள், சாப்பாடு, கலாச்சாரத்துடன் ஒன்றிவிட வேண்டும் என்பது அவள் வாதம். 'உங்களுடைய தேசத்து பழக்கவழக்கங்கள் அவ்வளவு உயர்ந்ததென்றால் ஏன் நாடு விட்டு நாடு வந்தீர்கள்?' என்பதுதான் அவளுடைய கேள்வி.

'வ்வூவ்வூ' என்பது யாழ்ப்பாணத்து களிமாதிரி. ஆனால் பத்து மடங்கு பவர் கூட, விஷயம் தெரியாதவர்கள் அவசரப்பட்டு ஒரு விள்ளல் எடுத்து வாயிலே போட்டால் அது தொண்டைக் குழியிலே போய் அங்கேயே தங்கிவிடும். கீழுக்கும் இறங்காது, மேலுக்கும் போகாது. அது வயிற்றில் போய் சேர்வதற்கிடையில் உயிர் பிரிந்து விடும். இதற்கென்று பிரத்தியேகமான ஒரு சூப். அதுதான் ஓக்ரா சூப்; வழுவழுவென்று இருக்கும். வ்வூவ்வை எடுத்து இந்த சூப்பில் தோய்த்து வாயில் போட்டால் அது அப்படியே நழுவிக் கொண்டு போய் வயிற்றிலே விழுந்துவிடும்.

தொடக்கத்தில் இது நல்லாகத்தான் இருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் சாப்பிட முடியுமா? தேவாமிர்தமென்றாலும் ஒரு நாளைக்கு அலுக்கத்தானே செய்யும். ஒரு நாள் இவன் நாக்கிலே சனி. "மெய்யே, ஒரு நாளைக்கு புட்டு செய்யுமென்; கனநாள் சாப்பிட்டு" என்று சொல்லி விட்டான். அவளுக்கு அது பிடிக்கவில்லை. வெஞ்சினம் கொண்ட வேங்கைபோல žறினாள். "உங்களுக்கு புட்டும் முசுட்டை இலை வறையும், விளைமீனும், பலாப்பழமும் வேணுமெண்டால் என்னத்துக்கு சிலோனை விட்டு வெளிக்கிட்ட நீங்கள். அங்கைபோய் அடிவாங்கிக் கொண்டு குசாலாய் இருக்க வேண்டியதுதானே? இது எங்களுக்கு தஞ்சம் கொடுத்த நாடு. இவர்களுடைய சாப்பாடுதான் இனிமேல் எங்களுடைய சாப்பாடு" என்று அடித்துக் கூறிவிட்டாள். 'அந்தச் சிவபிரானே கேவலம் உதிர்ந்த புட்டுக்காக மண் சுமந்து அரிமர்த்தன பாண்டியனிடம் பொற்பிரம்படி வாங்கினானே! இங்கே நான் கேவலம் சொற் பிரம்படி தானே பெற்றேன்? என்று மல்லாக்காக படுத்துக் மனதை தேற்றிக்கொண்டான். அதற்குப் பிறகு கணேசானந்தனுக்கு புட்டு சாப்பிடும் ஆசையே வேரோடு போய் விட்டது.

புட்டும், தேங்காய்ப்பூவும் போன்ற அவனுடைய காதல் வாழ்க்கை இப்படித்தான் எட்டு வருடங்கள் தேங்காய்ப்பூவாக தேய்ந்து போயிற்று. இரண்டாவது ஒப்பந்தத்தை ஏற்றுவிட்டு கணேசானந்தன் பயணச்žட்டும், விசாவும் ஒழுங்கு பண்ணிய பிறகு தான் அந்த இடி வந்து விழுந்தது. இவள் தன்னை மறந்து விடும்படியும் தனக்கு கலியாணமே வேண்டாமென்றும் எழுதி விட்டாள். எண்பத்திமூன்று கலவரத்தில் சபாபதி அநியாயமாக மனைவியைப் பறிகொடுத்து விட்டார். அதிலிருந்து புத்தி பேதலித்தவர் போல புசத்திக் கொண்டு திரிந்தார். சங்கீதாவால் அவரை அந்த நிலையில் தனித்து விட்டு விட்டு வரமுடியவில்லை. எந்தப் பெண்தான் அப்படி பெற்ற தகப்பனை நிர்க்கதியாக விட்டு வர சம்மதிப்பாள்?

சங்கீதா நக்கீரர் பரம்பரையைச் சேர்ந்தவள் என்பதை முதல் தடவையாக கணேசானந்தன் உணர்ந்தது அப்போதுதான். அவளில் அவன் உயிரையே வைத்திருந்தான். அவளும் அப்படித்தான். ஆனால் அவளுடைய பிடிவாத குணம்தான் அவனால் நம்பமுடியாததாக இருந்தது. அந்த எட்டு வருடங்களும் அவளை அசைக்க முடியவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு அவளுடைய தகப்பனார் இறந்தபோதுதான் கண்­ரில் தோய்த்து ஒரு கடிதம் எழுதியிருந்தாள். அப்பொழுதுதான் முதன்முறையாக அவனுக்கு அவளுடைய காதலின் ஆழம் தெரிந்தது.

குடியுரிமைக்கும், பிள்ளை பெற்றுக்கொள்வதற்கும் என்ன சம்பந்தம்? இப்படி பிடிவாதமாக இருக்கிறாளே? குழந்தைகள் என்றால் அவளுக்கு உயிர். நேரம் போவது தெரியாமல் விளையாடிக்கொண்டிருப்பாள். ஆனால் குடியுரிமை கிடைப்பதற்கிடையில் கருத்தரிக்காமல் இருக்கவேண்டும் என்பதில் எதற்காக இவ்வளவு எச்சரிக்கை? 'பன்னிரெண்டு வருடங்கள் பாழாகிவிட்டதே' என்ற யோசனைகூட இல்லையா அவளுக்கு? என்ன பிடிவாதம்?

மீன்காரி ஒருத்தி அவர்கள் வீட்டுக்கு வாடிக்கையாக வந்துபோவாள். தொடை சைஸ் 'கூட்டா' மீன்களை கூடையிலே வைத்து தூக்கிக்கொண்டு ஒயிலாக நடந்து வருவாள். தலையிலே வைத்த கூடையை கையாலேயே பிடித்துக்கொண்டு வரும் பழக்கமெல்லாம் அங்கே கிடையாது. கரகாட்டக்காரனுடைய கரகம்போல கூடை தலையிலே ஒட்டிவைத்தது போல இருக்கும். இப்படி மீன்காரிகள், நாப்பது கிலோ எடையை தலையில் சுமந்தபடி, மடித்த வில்லுக்கத்தியை நிமித்தியது போன்ற முதுகிலே ஒரு குழந்தையையும் கட்டிக்கொண்டு, 'கை வீசம்மா கை வீசு' என்று இரண்டு கைகளையும் வீசிக் கொண்டு, ஆபிரிக்காவின் சிவப்பு மண் புழுதியை கிளப்பியபடி, பரந்து விரிந்த 'டம்பளா' மரங்களின் நிழலை ஆற அமர அநுபவித்தபடி வரும் இந்த அதிசயத்தை உலகத்திலேயே ஆபிரிக்காவில் மட்டும் தான் பார்க்கலாம்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:38 pm


கூட்டா மீன் குழம்பு நல்ல ருசியாக இருக்கும். பெரிய பெரிய துண்டங்களாக வெட்டித்தான் அதை குழம்பு வைப்பார்கள். ஆபிரிக்காவில் ஒரு மிளகாய் இருக்கிறது. பெயர் 'ஸ்மோல்பெப்பே'. உருண்டையாக, சிவப்பாக பார்த்தால் வெக சாதுவாக இருக்கும். காரம் நாலரைக்கட்டைக்கு தூக்கும். 'பாம்' எண்ணெயோ ரத்தச் சிவப்பாக இருக்கும். பதமாக வெட்டிய மரவள்ளி இலையையும மீன் துண்டங்களையும் இந்த என்ணெயில் மிதக்கவிட்டு, மிளகாயையும் வதக்கிப்போட்டு, கொறுக்காப்புளியும் சேர்த்து, ஒரு குழம்பு வைத்தால் அந்த வாசனையே ஊரைக் கூட்டிவிடும்.

சங்கீதாவுக்கு மீன் என்றால் பிடிக்கும்; அதிலும் மீன்காரியுடன் பேரம் பேசுவது இன்னொரு சுவையான விஷயம். பேரம் என்றால் சங்கீதத்தில் வரும் நிரவல் போல் சூடுபிடித்துக் கொண்டே போகும். அடிமட்ட விலை தரைதட்டியவுடன் மீன்காரி ஆத்தாமல் "யூ லவ்மீ" என்று ஓலமிடுவாள். அவளுடைய பாஷையில் " நீ என்னைக் காதலிக்கிறாயல்லவா! இப்படி என்னை படுத்தலாமா?" என்று பொருள். அப்படி அவள் சரணாகதி அடைந்த பிறகுதான் பேரம் முடிவுபெறும்.

சங்கீதா மீன்காரிக்கு 'யூலவ்மீ' என்றே பெயர் வைத்துவிட்டாள். இவர்களுடைய மீன் பேரச் சண்டையை ஆர்வத்தோடு அவதானித்தபடி இருக்கும் அவள் முகத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும் குழந்தை. அது சிணுங்கி சங்கிதா கண்டதில்லை. இரண்டு கண்களும் இரண்டு வெள்ளி மணிகள்போல மினுங்கும். சங்கீதா அந்தக் குழந்தைகைக்ம் ஒரு பெயர் வைத்திருந்தாள். கரிக்குருவி.

கணேசானந்தன் பள்ளியில் இருந்து வந்ததும் சங்கீதா படபடவென்று வாய்ப்பாடு ஒப்பிப்பது போல அன்றையச் சங்கதிகளைச் சொல்லுவாள். அதிலே கரிக்குருவியைப் பற்றியும் ஒரு அத்தியாயம் கட்டாயம் இருக்கும். அப்பொழுதெல்லாம் கணேசானந்தன், 'இப்படி குழந்தைமேலே ஆசையுள்ளவள் எப்படித்தான் இந்த விஷயத்தில் மட்டும் இவ்வளவு உஷாராக இருக்கிறாளோ!' என்று நினைத்துக் கொள்வான்.

கரிக்குருவி உண்மையிலேயே யூலவ்மீயின் குழந்தையல்ல; அவளுடைய தங்கை ஓனைஸாவின் பிள்ளை. ஓனைஸாவுக்கு வயது பதினைந்துதான்; ஓட்டு மாங்கன்று போல இருப்பாள்; இன்னும் பள்ளியிலே படிக்கிறாள். பள்ளிக்குப் போகும்போதும் வரும்போதும் 'மன்ஸாரே' என்ற மன்மதனின் மோகத்தில் விழுந்து அவனுடன் சரசமாடி செய்து கொண்டே கந்தர்வ திருமணத்தின் பெறுபேறுதான் கரிக்குருவி. கரிக்குருவி பிறந்தபோது ஓனைஸாவின் பெற்றோர்களுக்க அளவற்ற சந்தோசமாம்.

களவாய்ப் போட்ட žட்டுக்காசைத் தைலாப் பெட்டியில் வைத்து காப்பதுபோல விரதம் காக்கும் கற்புக்கரசிகளை ஆபிரிக்காவில் காணமுடியாது. ஒரு பெண் பருவமடைந்ததும் எவ்வளவு žக்கிரம் முடியுமோ அவ்வளவு žக்கிரம் அவள் தன் கருவளத்தை உலகுக்கு காட்டிவிட வேண்டும். ஒருபிள்ளை பெற்றுவிட்டால் அவள் அந்தஸ்து உயர்ந்துவிடும். அவளை முடிப்பதற்கு ஆடர்கள் போட்டி போடுவார்கள். ஒரு பெண்ணின் உண்மையான விலைமதிப்பு அவளுடைய பிள்ளை பெறம் தகுதியை வைத்துத்தான் அங்கே நிர்ணயிக்கப்படுகிறது.

அது ஒரு பெண்வழிச் சமுதாயமானபடியால் அங்கேயெல்லாம் ஒரு ஆணைப்பார்த்து 'உனக்கு எத்தனை பிள்ளைகள்?' என்று மறந்து போயும் கேட்கக்கூடாது. அடிக்க வந்து விடுவார்கள். அவர்களுக்கே அது தெரியாது. கணேசானந்தன் படிப்பிக்கும் பள்ளியிலே இப்படித்தான் அடிக்கடி பெண் பிள்ளைகள் மூன்று, நான்கு மாசங்களுக்கு மறைந்து விடுவார்கள். கேட்டால் 'பிரசவம்' என்று வெகு சாதாரணமாக சொல்லிவிட்டு இவன் தலையை குனிவதைப் பார்த்து சிரிப்பார்கள்.

ஆனால் யூலவ்மீக்கு ஏற்கனவே ஏழு பிள்ளைகள். அவளுக்கு கரிக்குருவியும் வந்து சேர்ந்ததில் கொஞ்சம் கஷ்டம்தான் 'யாராவது இந்தப் பிள்ளையை கேட்டால் கொடுத்துவிடுவேன்' என்று பயமுறுத்திக் கொண்டிருந்தாள். அவளுடைய தங்கை படிப்பை முடிக்கும்வரை கரிக்குருவியை யூலவ்மீதான் வளர்த்தெடுக்க வேண்டுமாம்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:38 pm


கணேசானந்தன் தன் மனைவிக்கும் ஆசிரியையாக ஒரு சிறிய பள்ளியிலே வேலை பிடித்துக்கொடுத்திருந்தான். வங்கியிலே வேலை செய்தவள் இப்படி வந்து ஒரு ஓட்டைப் பள்ளியிலே வேலை பார்க்கவேண்டி வந்துவிட்டதே என்று இவனுக்கு ஆதங்கம்தான். ஆனால் சங்கீதா மிகவும் மகிழ்ச்சியுடனேதான் அந்த வேலையை ஏற்றுக்கொண்டாள். இவளுடைய பாடங்கள் சுகாதாரமும், ஆங்கிலமும். அந்தச் சின்னச் சின்ன முகங்களை பார்த்துக்கொண்டே பாடம் சொல்லிக் கொடுப்பதில் தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்துவிடுவாள். பள்ளி முடிந்ததும் இந்தப் பாலர்களெல்லாம் தங்கள் தங்கள் கதிரைகளைத்தூக்கி தலைமேல் வைத்துக்கொண்டு, புத்தகங்களையும் முதுகில் கட்டியபடி, சிட்டுக்கள் போல கூவிக்கொண்டு வீட்டுக்கு பறந்து போகும்போது இவள் வயிற்றை என்னவோ செய்யும்.

கணேசானந்தன் திருநீலகண்ட நாயனாருடைய திண்டாட்டத்தில் இருந்தான். பரத்தையிடம் இவர் போய் வந்தது தெரிந்ததும் 'எம்மைத் தொடாதீர்; திருநீலகண்டம்மீது ஆணை' என்று சாபம் இட்டுவிட்டாள் மனைவி. கணேசானந்தன் என்ன நாயனாரா தொடாமல் இருக்க? பன்னிரெண்டு வருடம் காத்திருந்து அடைந்த மனைவியை பக்கத்திலே வைத்துக் கொண்டு பிரம்மச்சரியம் கடைப்பிடிப்பது எவ்வளவு கொடூரம்?

குடிவரவு அலுவலகத்து பதிகம் அதிகாரி கூறியது போல இரண்டு மாதத்திலேயே குடியுரிமை பத்திரம் கிடைத்து விட்டது. திருவானைக்காவில் பாடியவுடன் கோயில் கதவு திறந்து கொண்டது அல்லவா? குடியுரிமைச் žட்டு இவன் கையிலே இருந்தது. இனிமேல் எந்தக் கதவுகள் அவனுக்கு சாத்தியிருக்கும்? இரண்டு வருடங்கள் இப்படியாக அநியாயமாகப் பலிபோய் விட்டதே! அவை எப்படிப்பட்ட மகத்தான இரண்டு வருடங்கள் என்பதை பின்னாலேதான் கணேசானந்தன் உணர்ந்து கொள்வான்.

திருவானைக்காவுக்கு டிக்கெட் கிடைத்ததும் கணேசானந்தன் முற்றிலும் மாறிவிட்டான். 'அடையா நெடுங்கதவையே' ஜபித்துக் கொண்டிருந்தான். ஒரே நினைப்புதான் மற்ற-ல்லாம் மறந்துவிட்டான். பள்ளிக்கூடத்தை மறந்தான்; பிள்ளைகளை மறந்தான்; ஹ’ஸ்டரி பாடத்தை மறந்தான். இராவணனுடைய நிலைதான் அவனுக்கும்.

'கரனையும் மறந்தான்; தங்கை மூக்கினைக் கடிந்து நின்றான் உரனையும் மறந்தான்; உற்ற பழியையும் மறந்தான்; வெற்றி அரனையும் கொண்ட காமன் அம்பினால், முன்னைப்பெற்ற வரனையும் மறந்தான்; கேட்ட மங்கையை மறந்திலாதான்'

கம்பரைப் படிக்காத ஆபிரிக்கப் பிரின்ஸ’பாலுக்கு இது எல்லாம் எங்கே விளங்கப் போகிறது? பள்ளிக் கூடம் விட்டதும். கணேசானந்தன் கோடடித்ததுபோல நேராக வீட்டுக்கு ஓடியதன் மர்மம் அவருக்கு புரியவில்லை. ஒருமுறை அவசரமாக நேர அட்டவணை போட வேண்டியிருந்தது. இவன் கவலைப்படாமல் வீட்டுக்கு ஓடிவிட்டான். நேர அட்டவனை போடுவதில் கணேசானந்தன் அடிக்க ஆளில்லை. இந்த திறமையை வைத்துத்தான் அவன் கடகடவென்று ஆபிரிக்காவில் முன்னுக்கு வந்தவன். இவனுடைய பிரின்ஸ’பாலுக்கு இந்த ஒரு விஷயம் மாத்திரம் ஓடாது. India man has magic என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார். ஒருமுறை அவர் அட்டவணை போட்ட விண்ணாணத்தை இப்பவும் சொல்லிச் சொல்லி சிரிப்பார்கள். அந்த அட்டவணையின்படி ஒரு கிளாஸ’ல் மூன்று வாத்திமார்கள் ஒரே சமயத்தில் படிப்பிக்க வந்துவிட்டார்களாம். அதை கணேசானந்தன்தான் பிறகு ஒருமாதிரி சரிக் கட்டினானாம்.

கணேசானந்தனின் பிரயாசை கடைசியில் ஒருநாள் பலித்தது. ஆறே மாத காலத்தில் சங்கீதாவிடம் அவன் ஆவலுடன் எதிர்பார்த்த மாற்றம் தெரியத் தொடங்கியது. முன்பு விரும்பிச் சாப்பிட்டதெல்லாவற்றையும் இப்ப தூக்கி எறிந்தாள். மீன்குழம்பு என்றால் பிடிப்பதில்லை; யூலவ்மீயை தூரத்தில் பார்த்தாலே ஒடி ஒழிந்து கொள்வாள்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:38 pm


ஒரு நல்ல நாளில் தன் மனைவியைக் கூட்டிக் கொண்டு நர்ஸ’ங்ஹோமுக்கு 'செக்கப்பிற்கு' போனான் கணேசானந்தன். பிரசவத்தை அங்கேயே வைப்பதென்று நினைத்திருந்தான். ஆபிரிக்காவில் வசதிகள் அமோகமாக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. வெளிநாடுகளில் படித்த டாக்டர்களும், நர்ஸ்மார்களும்தான் அங்கே வேலை செய்தார்கள். ஆனாலும், 'போதிய உபகரணங்களும், மருந்துகளும் இல்லாவிட்டால்?' என்ற கவலை அவனுக்கிருந்தது.

சங்கீதா இவன் பக்கத்தில் இருந்து நெளிந்தாள். இவன் திரும்பிப் பார்த்தான். இவனுக்காகப் பன்னிரெண்டு வருடங்கள் தவம் செய்தவளல்லவா? எந்தப் பெண்தான் இப்படியான தியாகத்தை செய்ய முன்வருவாள்? நினைக்கும்போதெல்லாம் இவனுக்கு அவள்மேல் அன்பு சுரந்தது.

மெய்கண்டான் கலண்டர் பொய் சொல்லாது. இப்ப அவளுக்கு மூன்று மாதம் தள்ளிப்போய்விட்டது. அடிக்கடி வாந்தி வேறு வருகிறது என்கிறாள். மாங்காய் பிஞ்சையும், 'கோலா நட்டையும்' ஆர்வத்தோடு சப்பியபடியே இருக்கிறாள். நடக்க அவளுக்குத் தெரியாது. துள்ளித்தான் திரிவாள்; இப்போது அடிக்கடி சோர்ந்துபோய் காணப்படுகிறாள்; 'தூக்கம் வருவதில்லை; தலை சுற்றி மயக்கம் வருகிறது' என்று சொல்கிறாள். பாடசாலைக்கு கூட இரண்டு நாளாக போகவில்லை.

அவளுடைய வயிற்றை பார்த்தான். அது ஆலிலை அளவுக்கு சிறுத்து வழுவழென்று இருந்தது. இந்தச் சிறிய வயிற்றிலிருந்து எப்படி இன்னொரு உயிர் வரும்? சடையைப் பார்த்தான். அது எப்போதும் போல் இப்பவும் கருநாகமாக கைப்பிடிக்குள் அடங்காமல் இருந்தது. காதோர மயிர் கற்றைகளை ஆபிரிக்கர்கள் செய்வதுபோல எலிவாலாகப் பின்னி நுனியில் நீளமாக மணிகள் கோத்து கட்டியிருந்தாள். அதுவும் பார்க்க ஒரு அழகாகத்தான் இருந்தது. குனிந்து அவள் காதருகே "உம்மைப் பார்க்க ஒரு சின்னப் பெட்டைபோல இருக்கு" என்று கண்ணைச் சிமிட்டிக் கொண்டு சொன்னான். அவள் கீழ் கண்ணால் பார்த்தபடி தலையை வெடுக்கென்று திருப்ப அந்த மணிகள் கிணுகிணுவென்று ஆடின.

அந்த நேரம் பார்த்து டாக்டர் கையிலே கனரிப்போர்டுகளுடன் அவசரமாக வந்தார். கணேசானந்தன் எதிர்பார்த்ததுபோல 'கன்கிராட்ஜுலேசன்ஸ்' என்று அவர் கூறவில்லை. சிறிது நேரம் இவர்களையே பார்த்தபடி இருந்தார். பிறக மடிபடியும் ரிப்போர்டுகளை சரிபார்த்துக் கொண்டார். இன்னொரு முறை இவர்கள் முகத்தை நோக்கி யோசித்தபடியே மெதுவாக "நீங்கள் எதிர்பார்ப்பதுபோல இல்லை" என்றார். கணேசானந்தன் அதிர்ச்சியடைந்தவனாக "என்ன? கர்ப்பம் இல்லை என்றால் வேறு ஏதாவது வருத்தமா?" என்றான்.

அவர் சிறிது மௌனம் சாதித்துவிட்டு "இல்லை, இல்லை உங்கள் மனைவிக்கு மாதவிடாய் முற்றிலும் நின்றுவிட்டது, அதாவது menopause" என்றார்.

விக்கித்துப்போய் இவர்கள் ஆளையாள் பார்த்துக் கொண்டார்கள். "என்ன டாக்டர், உண்மையாகவா? என் மனைவிக்கு 39 வயதுதான் ஆகிறது" என்றான்.

"ஆசியப் பெண்களுக்கு பொதுவாக 40-45 வயதிலேயே முழுவிலக்கு வந்து விடுகிறது. அவர்கள் பூப்பெய்திய காலத்திலிருந்து அநேகமாக முப்பது வருடங்கள் கருவளம் தொடரும். உங்கள் மனைவி எத்தனையாவது வயதில் பருவமடைந்தார்?" என்றார்.

கணேசானந்தன் தன் மனைவியைப பார்த்தான். அவள் கண்களிலே இப்போது நீர் கட்டிவிட்டது. சன்னமான குரலில் "பத்து" என்றாள்.

"அதுதான் சொன்னேன், முப்பது வருடங்கள் உங்கள் மனைவி கருவளம் உள்ளவராக இருந்திருக்கிறார். இனிமேல் கருத்தரிக்கும் சாத்தியக் கூறு இல்லை" என்றார் டாக்டர்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:38 pm


முதல் முறையாக அவன் மனைவி டாக்டரிடம் வேசினாள். "இதற்கு மருந்துகள் ஒன்றும் இல்லையா, டாக்டர்? நாங்கள் மணம்முடித்து இரண்டே வருடங்கள்தான் ஆகின்றன."

அப்பொழுது டாக்டர் சொன்னார்: "இதற்கு மருந்துகளே இல்லை. அம்மா. ஒரு பெண் பிறக்கும் போதே அவளுக்கு எத்தனை கருமுட்டைகள் என்று அவளுடைய கர்ப்பப் பையில் நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. என்னதான் தலைகீழாக நின்றாலும் அதை மாற்ற முடியாது."

அவனால் தன் மனைவியின் முகத்தை பார்க்கவே முடியவில்லை. திரும்பி வரும்போது வழிநெடுக விம்மிக்கொண்டே வந்தாள். திடீரென்று அவள் அரற்றினாள்: "ஐயோ! பிரம்மா எல்லாருக்கும் தலையிலே எழுதுவான்; எனக்கு மட்டும் கர்ப்பப் பையில் எழுதிவிட்டானே!" என்று இரண்டு கைகளையும் தலையிலே வைத்துக் கோவென்று கதறினாள்.

ஒரு நாள் கணேசானந்தன் நித்திரையாய் இருந்தபோது இவள் அவனை உலுக்கி எழுப்பினாள். அவன் எழும்பி பார்த்தபோது இவள் தலைவிரி கோலமாக அழுதபடி இருந்தாள். "பன்னிரெண்டு வருடங்களாக படித்தேன்; பரீட்சை எழுதவில்லையே! பன்னிரெண்டு வருடங்களாக சமைத்தேன்; சாப்பிடவில்லையே! நான் என்ன செய்ய?" என்று தலையிலே அடிக்கத் தொடங்கி விட்டாள்.

இப்படி அடிக்கடி இவர் தலையிலே அடிக்கத் தொடங்கியதும் கணேசானந்தனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. 'திடீர், திடீர் என்று சன்னதம் வந்ததுபோல இவள் நடக்கிறாளே!இது படுத்தலாமா? இப்படியே கட்டுக்கடங்காமல் போனால் டாக்டரிடம் போய் யோசனை கேட்க வேண்டியதுதான்' என்று முடிவு செய்துகொண்டான்.

சில காலம் இப்படியோ போய்விட்டது. அவள் பேருக்கு மறுபடியும் பள்ளிக்கூடம் போய் வரத் தொடங்கினாள். ஆனால் சிற்சில வேளைகளில் அவளுடைய நிலைகுத்திய பார்வையும், அசாதாரணமான செய்கையும் இவனைக்கூட அச்சப்பட வைத்தன.

ஒரு நாள் அதிகாலை மூன்று மணியிருக்கும். கணேசானந்தன் திடீர் என்று விழிப்பு வந்து எழுந்தான். பக்கத்திலே தடவிப் பார்த்தான். இவளைக் காணவில்லை. தேடிப்போன இவன் கண்ட காட்சி அதிர்ச்சி தருவதாக இருந்தது. சமையலறைக்கும், வரவேற்பறைக்கும் இடையில் உள்ள ஓடையில் இவள் சுவரிலே தலையைச் சாய்த்து உட்கார்ந்திருந்தாள். இவள் உடல் எல்லாம் வேர்த்து தெப்பமாகியிருந்தது.

இவன் ஒன்றுமே பேசவில்லை. பக்கத்திலேபோய் அமர்ந்து கொண்டான். அவள் தலையை வருடினான். சடுதியாக திரும்பி அவனைப் பார்த்து நெஞ்சு சட்டையைப் பிடித்துக் கொண்டு சொன்னாள்; "நீங்கள் என்ன பாவம் செய்தீர்கள்? பன்னிரெண்டு வருடங்கள் எனக்காக காத்திருந்தீர்களே? இதற்காகத்தானா? உங்கள் பிள்ளையை என் வயிற்றில் சுமக்கவேண்டும் என்று தவம் செய்தேனே!என் அசட்டுப் பிடிவாதத்தினால் எல்லாத்தையும் இழந்து விட்டேனே!"

"ச்ž, கண்ணைத் துடையும். ஏதோ உலகம் கவிழ்ந்ததுபோல? இது என்ன?"

"குதிரை போனபின் லாயத்தைப் பூட்டி என்ன பயன்? நான் இப்பொழுது என்ன? பெண்ணா? இல்லை, ஆணா? அல்லது பேடியா? பெண்மை இல்லாத ஒரு பெண்ணை எப்படி அழைப்பது? இனி நான் ஒரு எண்ணிக்கைக்கு மாத்திரமே; என்னால் ஒரு பிரயோசனமும் கிடையாது."

"இது என்ன விசர்க் கதை? எல்லாருக்கும் வருகிறதுதானே! சங்ககாலக் கணக்கின்படி இது ஏழாவது வாசல்; அதாவது 'பேரிளம்பெண்'. இனிமேல்தான் வாழ்க்கையின் ருசியே தெரியப் போகிறது" என்றான் அவன், முகத்தில் வலுக்கட்டாயமாக வரவழைத்த புன்சிரிப்புடன்.

"உங்களுக்கு எங்கே விளங்கப் போகுது? நீங்களும் ஒரு ஆண்தானே! இது கடவுள் எனக்குக் கொடுத்த தண்டனை. எனக்கு வேணும். கடவுளுடைய வரப்பிரசாதத்தை என் ஆணவத்தினால் வேண்டமென்றே இரண்டு வருடங்கள் தள்ளி வைத்தேன். கருவளம் இருந்தபோது நான் அதை மதிக்கவில்லை. ஆபிரிக்கர்கள் அதை எப்படி போற்றுகிறார்கள்! இல்லாவிட்டால் எங்கள் நாட்டு சிறுமைகள் தாங்க முடியாமல் புகலிடம் ஓடி கேட்டு வந்த இந்த நாட்டில் எங்களுக்கு பிறக்கும் பிள்ளை முழு ஆபிரிக்கனாக இருக்க வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தேன். ஆனால் ஒன்றை மறந்து விட்டேனே?"




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக