புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 
68 Posts - 53%
heezulia
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Guna.D
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_m10 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம்


   
   

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:11 pm

First topic message reminder :

பதிப்புரை

என்னுரை

முன்னுரை (மாலன்)

முன்னீடு

வம்ச விருத்தி

1. துரி

2. ஒரு சாதம்

3. கிரகணம்

4. விழுக்காடு

5. பீஃனிக்ஸ் பறவை

6. முழு விலக்கு

7. முடிச்சு

8. ஞானம்

9. சிலம்பு செல்லப்பா

10. வம்ச விருத்தி

11. பருத்திப் பூ



 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:22 pm


துரி சிறு வயதிலே செய்த கூத்தை இங்கே வர்ணிக்க முடியாது. அது வந்த நாளில் இருந்து எங்கள் வீட்டு நடைமுறைகள் எல்லாம் மாறிவிட்டன. எங்கள் எல்லோருடைய செயல்பாடுகளும் அதை மையமாக வைத்துத்தான் நடந்தன. அதற்கு பால் பருக்குவது, சாப்பாடு ஊட்டுவது, குளிக்க வார்ப்பது என்று எல்லாவற்றையும் போட்டி போட்டுக்கொண்டு செய்தோம். என் மகனுடன் செய்த ஒப்பந்தப்படி துரியன் கழிவு உபாதைகளை அவனே பார்த்துக்கொண்டான். படுக்கப் போகுமுன் பத்திரிகைகளையெல்லாம் பரப்பி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டோம். பனிக்குளிர் அடிக்கும் இரவு நேரங்களில் என் மகன் துரியைக் கூட்டிக்கொண்டு வெளியேவிட்டு நடுக்கத்துடன் காத்துக்கொண்டிருப்பான். அந்தக் காட்சி என் மனதை வெகுவாக உருக்கிவிடும்.

சில வேளைகளில் துரி தவறுதலாக விலையுயர்ந்த கார்பெட்டில் ஒன்றுக்குப் போய்விடும். நாங்கள் அதை அதட்டும்போது அது மிகவும் நொந்துபோகும். அவமானப்பட்டு போய் உடலைக் கூனிக்குறுகி ஒரு மூலையிலே அனுங்கிக்கொண்டே ஒளியப் பார்க்கும். அது புத்திசாலியான நாய் என்றாலும் சிறுபிள்ளைகளுக்கே உரிய விஷமத்தோடு அது செய்த லீலைகளுக்கு அளவில்லை.

முதலில் இருந்தே சில ரூல்ஸை நாங்கள் துரிக்காக ஏற்படுத்திக் கொண்டோம். அதிலே ஒன்று துரிக்கு நாங்கள் சாப்பிடும் உணவு கொடுப்பதில்லை என்பது தான். காலையிலே இரண்டு கப் பால்; பின்னேரம் ஐந்து மனியளவில் டின்னிலே வரும் நாய் உணவை அளவோடு எடுத்து துரியுடைய பிளேட்டில் போட்டு விடுவோம். அது பாய்ந்தடித்து சாப்பிடாது; வைத்து வைத்து வேண்டியபோது சாப்பிட்டுக் கொள்ளும். ஒரு நாய் தன் சாப்பாட்டிற்காக கெஞ்சுவதோ, வாயைப் பார்த்துக்கொண்டு நிற்பதோ அதனுடைய தன்மானத்திற்கு இழுக்கு என்பது எங்கள் கருத்து.

குட்டி நாயான துரிக்கு குழந்தைப்புத்தி சுபாவம் அதிகம். பதுங்கி பதுங்கி வந்து நாங்கள் அணியும் 'சொக்ஸை' திருடிக் கொண்டுபோய் தோட்டத்திலே புதைத்துவிடும். இப்படியாக எங்கள் சொக்ஸ் எல்லாம் அதிதீவிரமாக மறைந்துகொண்டு வந்தன. ஒருநாள் பிடிபட்டு விட்டது. 'எங்கே? என்று உறுக்கி கேட்டதும் தோட்டத்திலேபோய் பரபரப்பாகத் தோண்டியது. சுந்தரமூர்த்தி நாயனார் பரவையரை 'இம்பிரெஸ்' செய்வதற்காக ஆற்றிலே போட்ட பொற்காச திருவாரூர் தாமரைக்குளத்தில் எடுத்துக் கொடுத்தாரல்லவா? எங்களுடைய துரியும் எங்களை இம்பிரெஸ் செய்ய எடுத்துக்கொண்ட முயற்சிகளெல்லாம் படுதோல்வியடைந்தன. அதற்குப் பிறகு நாங்கள் எல்லாரும் எங்கள் சொக்ஸை கண்ணும் கருத்துமாக காவாந்து செய்யத் தொடங்கினோம்.

ஆனால் இதை எதிர்பார்த்த துரி இன்னொருபடி முன்னேறி விட்டது. ஒருநாள் இரவு என் மகனுடைய காலணியை கடித்து வைத்திருந்தது. அன்று நாங்கள் இது எங்களுக்கு ஒப்பான விஷயம் இல்லை என்பதை மிகவும் கஷ்டப்பட்டு துரிக்கு விளங்க வைத்தோம். ஆனால், அடுத்த நாலாம் நாளே என்னுடைய நூற்றி நாற்பது டொலர் சப்பாத்தை இது கடித்து ஓட்டை போட்டுவிட்டது. இது ஒரு சீரியஸ் விஷயம் என்பதை துரிக்கு எப்படி உணர்த்துவது? அடுத்த நாள் சாப்பாட்டு நேரத்துக்கு துரியினுடைய பிளேட்டில் உபயோகத்தில் இல்லாத பழைய சப்பாத்துகள், செருப்புகள் எல்லாவற்றையும் போட்டு அதன் முன்னால் வைத்தோம். துரி திடுக்கிட்டு விட்டது. இரண்டு நாள் தொடர்ந்து இப்படியே செய்து கொண்டு வந்தோம். அதுவும் சிவபட்டினியாகக் கிடந்தது. இந்தச் சம்பவத்திற்கு பிறகு துரி சப்பாத்தை கண்டால் பக்கமாக ஓடும்.

துரியை வாங்கும்போது எங்களுக்கு அதனுடைய பெடகிறி கார்டையும் தந்திருந்தார்கள். பெடிகிறி கார்டு என்பது அந்த நாயுடைய பூர்வாங்கத்தை கூறும் அட்டை. அது ஒரு ஓஸ்ட்ரேலியன் செப்பர்ட். அதனுடைய மூதாதையர் ஸ்பெயினில் இருந்து ஓஸ்ரேலியா போய் அங்கேயிருந்து நூறு வருடங்களுக்கு முன்பாக அமெரிக்காவுக்கு வந்தவை. பிறக்கும்போதே ஒட்டிய வாலுடன் பிறக்கும் இந்த நாய்கள் ஓட்ஸ்ரேலியாவில் ஆட்டு மந்தைகளை சீராக வைத்திருப்பதற்கு ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்டவை. நீலநிறக் கண்களும், மடிந்த காதுகளும், மெத்தென்று பத்தையாக இருககும் மயிரும் இந்தச் சாதி நாயை சட்டென்று இனம் காட்டி விடும். அறுபது பவுண்ட் எடையும் இரண்டு அடி உயரமும் கொண்ட இது மனிதனுக்கு கடவுளால் அளிக்கப்பட்ட விசுவாசமான ஒரு தோழன்.

துரியுடைய மேல்முடி சொக்லேட் கலரில் அடர்த்தியாக இருக்கும். முகமும் கீழ்கால்களும் மாத்திரம் தேக்குமர நிறம்; அதன் கழுத்துக்குக் கீழே கொஞ்சம் வெள்ளைப் பிரதேசம். கண்கள் கனிந்து இருக்கும்; அண்ணாந்து பார்க்கும்போது 'என்னை அணை' என்று கெஞ்சவதுபோல தோன்றும். கண்களுக்கு மேலே இரண்டு வட்டங்கள். அது படுத்து நித்திரை கொள்ளும்போதும் கண் விழித்திருக்கிறது போன்ற பிரமையை உண்டு பண்ணும். ஆட்டு மந்தைகளை மேய்க்கும்போது ஆடுகள் இது தூங்கும்போதும் விழித்திருக்கிறது என்று நினைத்து மயங்கி பயபக்தியோடு செயல்படுமாம்.

மேய்ச்சலில் இருக்கும்போது இது மந்தையை சுற்றிச் சுற்றி வந்து ஆடுகளின் கால்களை மெல்லக் கடித்து அவற்றை ஒழுங்கு படுத்தும். அந்தப் பழக்கத்தை இது இன்னும் முற்றிலும் மறக்கவில்லை. நாலைந்து பேரோடு இது ஆட்களைச் சுற்றிச்சுற்றி வந்து குதிக்காலை மெல்லக் கடித்து ஒழுங்குபண்ணப் பார்க்கும். இன்னொரு பரம்பரை விசேஷமும் இதற்கு உண்டு. ஆட்டு மந்தையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு போக வேண்டுமென்றால் இது சுற்றி வந்து போகாது. ஒரு ஆட்டின் மேலேறி அந்தக் கரை போய் சேர்ந்து விடும். இந்தப் பழக்கம் இன்னமும் இதன் ரத்தத்தில் ஊறி இருக்கிறது. ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு போவதற்கு இன்றுகூட இது தன் குலாசாரப்படி எதிர்ப்பட்ட தெல்லாவற்றையும் ஏறிப் பாய்ந்து பாய்ந்து தான் போய்ச் சேரும்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:22 pm


நான் வளர்த்த நாய்களில் துரி போன்ற அறிவுக் கூர்மையுள்ள நாயை நான் கண்டது கிடையாது. ஆனாலும் அதற்கு ஒரு வயதுப் பிராயம் முடிவதற்கிடையில் தகுந்த ட்ரெயினரிடம் பயிற்சி கொடுப்பதென்று முடிவு செய்தோம். ட்ரெயினர் சொன்ன வாசகம் எனக்கு இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. 'நாய்கள் நல்ல புத்திகூர்மை உடையவை. அவைக்கு ட்ரெயினிங் தேவையில்லை. ட்ரெயினிங் எல்லாம் உங்களுக்குத்தான்' என்று அந்த மெக்ஸ’க்கோக்காரன் என்னைச் சுட்டிக்காட்டி கூறினான். எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.

நாலே நாலு வார்த்தைகள்தான் எங்களுக்கு கற்பித்தான். அதன் பிறகு துரியில் எவ்வளவு மாற்றம். 'கம்'வா என்பது; 'சிட்' இரு என்பது; 'ஸ்டே' நில் என்பது; இவை எல்லாவற்றையும் நானும் துரியும் வெகு சிரத்தையாகக் கற்றுக்விட்டோம். வீட்டுப்பாடம் கூட சரியாக செய்தோம். ஆனால் 'ஹ“ல்' என்பது எங்கள் இரண்டு பேரையும் வாட்டி எடுத்துவிட்டது. இடது கையிலே நாயுடைய சங்கிலியை பிடித்துக்கொண்டு நாயையும் இடது பக்கமாக நடத்திச் செல்லவேண்டும். செய்து பார்த்தால் தெரியும் வினை. நடக்கும்போது நாய் என்னுடைய குதிக்காலுடனேயே வந்து கொண்டிருக்க வேண்டும். நான் நிற்கும்போது அதுவும் நிற்க வேண்டும்; நடக்கும்போது அதுவும் நடக்கவேண்டும். கொஞ்சம் முந்தியும் போகக்கூடாது. பிந்தியும் வரக்கூடாது. நாயுடைய வேகத்துக்கு ஏற்ப நான் என்னுடைய வேகத்தை மட்டுப்படுத்த பார்ப்பேன். மெக்ஸ’கோக்காரன் கத்துவான். நாய்தான் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும்; நானல்ல. காசையும் கொடுத்து இந்த மெக்ஸ’கோக்காரனிடம் இப்படி பேச்சு வாங்க வேண்டியிருக்கிறதே என்று நான் என்னை நொந்து கொள்வேன். கடைசியில் ஒருவாறாக பரீட்சையில் இருவருமே பாஸாகி விட்டோம்.

இது தவிர மெக்ஸ’கோக்காரன் ஒரு விஸ’லும் தந்திருந்தான். அந்த விஸ’லை ஊதினால் சத்தமே கேட்காது. அந்தச் சத்தம் நாய்க்கு மாத்திரம்தான் கேட்கும். அது எங்கே இருந்தாலும் ஓடி வந்து விடும். அதற்கு பிறகு துரியுடன் வாக் போவதும், பார்க்கிற்கு போய் விளையாடுவதும் எனக்கும் என் மகனுக்கும் சொர்க்க வாசலைத் திறந்துவிட்டதுபோல ஆகிவிட்டது. இந்த நாலு வார்த்தைகளும் எங்களுக்கு ஒரு புதிய உலகத்தை அறிமுகப்படுத்திவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.

'போ' என்று சொல்வதற்கு மெக்ஸ’கோக்காரன் ட்ரெயினிங் இல்லை என்றும், நாயை அந்தவார்த்தை குழப்பும் என்றும் கூறியிருந்தான். 'போ' என்ற வார்த்தை உண்மையில் தேவையில்லை என்பதை நாங்கள் வெகுநாள் கழித்துத்தான் கண்டு கொண்டோம்.

எங்கள் வீட்டிற்கு விருந்தினர் வந்தால் துரி அவசரமாக வந்து அவர்களை ஒருமுறை முகர்ந்து பார்க்கும். பிறகு போய் விடும். அதனுடைய கம்ப்யூட்டர் மூளையில் விருந்தினருடைய மணம் பதிவாகி எஜமானருக்கு இவர்கள் வேண்டியவர்கள் என்ற செய்தி ஆயுளுக்கும் நிச்சயமாகிவிடும். சூப்பர் மார்க்கட் போனால் துரி எங்களுக்காக வெளியே காத்து நிற்கும். எவ்வளவுதான் அதற்கு தொந்தரவு வந்தாலும் அசையாது. ஒரேஒரு முறை மாத்திரம் அதற்கு ஒரு சோதனை ஏற்பட்டது.

துரி இப்படி ஒருநாள் வெளியே இருக்கும் சமயம் பார்த்து சடை வைத்து சிலுப்பிய பெண் நாய் ஒன்று அதை மயக்கி விட்டது. வேத அத்யயனத்தில் கவனமாயிருந்த ரிஷ்யசிருங்கரைப்போல விஷபானுபவங்கள் தெரியாமலே இது வளர்ந்து விட்டது. இதற்குமுன் இப்படியான உணர்ச்சிகளை அது அனுபவித்ததில்லை. அந்தச் சடை நாயைக் கண்டதும் அதன் பின்னாலேயே சுற்றிக் கொண்டு போய் விட்டது. நாங்கள் துரியைத் தேடிக் கண்டுபிடித்தபோது எங்களை அந்நியர்போல பார்த்தது. 'ங், ங்' என்று அழுதுகொண்þ எங்களுடன் வேண்டா வெறுப்பாக வந்தது. அந்தச் சடைக்கார சிறுக்கி துரியின் மனத்தை அப்படி கெடுத்துவிட்டது.

அப்போது நான் ஒரு துரோகமான காரியத்தை செய்யவேண்டி வந்தது. கடவுளால் படைக்கப்பட்ட ஒரு ஜ“வனின் பால் உணர்ச்சியுடன் விளையாட எனக்கு என்ன உரிமை இருக்கிறது. சுயநலம் கருதி மிருக வைத்தியரிடம் போய் துரிக்கு 'நலம் அடித்து' (பால்நீக்கம்-neutering) வந்தோம். ஆண் நாய்கள் பெண் நாய்களுக்குப் பின் தறிகெட்டு அலையாமல் இருந்து வீட்டை நலமாகக் காப்பதற்காக யாழ்ப்பாணத்தில் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வந்த உபாயம். நாங்கள் செய்த துரோகம் தெரியாது என் செல்லக்கட்டி துரி எங்களை நக்கியபடியே விசுவாசமாக பின் தொடர்ந்தது என் மனதை மிகவும் கஷ்டப்படுத்தியது.

ஒருநாள் இப்படித்தான் துரியை காரிலேயே விட்டுவிட்டு கண்ணாடியையும் உயர போட்டுவிட்டு ஒரு அவசர காரியமாக டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ணு ஒன்றுக்குள் போய்விட்டேன். 'ஐந்து நிமிடங்களில் வந்து விடுவேன்' என்று தான் நினைத்திருந்தேன். அங்கே கனநாள் காணாத ஒரு நண்பரை கண்டு நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டு இருந்துவிட்டேன். அவருடைய வற்புறுத்தலுக்கு இணங்கி அவருடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு திரும்பும்போதுதான் துரியினுடைய ஞாபகம் சடுதியாக வந்தது.

அது ஒரு கோடைகாலம். பதைத்துக்கொண்டு நான் ஓடிவந்தபோது காரைச் சுற்றி இரண்டு மூன்று பேர்; ஓரு போலீஸ்காரர். பாண் போறணை பேல வேகிக் கொண்டிருக்கும் காரிலே இப்படி வாயில்லாத பிராணியை விட்டுப்போவது எவ்வளவு பாபமான காரியம் என்பது எனக்குத் தெரியும். தவறுதலாக நடந்துவிட்டது என்று பொலீஸ்காரரிடம் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். ஆனால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு துரியிடம் மன்னிப்பு கேட்பேன்? துரி முகத்தை உயர்த்தி நீர் கசிந்த கண்களால் என்னைப் பார்த்துவிட்டு தலையை என் மடியில் உரசி தன் மன்னிப்பை அறிவித்தது; ஆனால் நான மாத்திரம் என்னை மன்னிக்கவே இல்லை.

இந்த சமயத்தில்தான் துரி தன் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு பாடத்தைக் கற்றது. நாங்களும் தான். எங்கள் வீட்டில் பின்னால் மரங்களடர்ந்த ஒரு தோப்பு இருந்தது. மரங்களென்றால் கவையாகிக் கொம்பாகி வளர்ந்த ஓக் மரங்களும், அமெரிக்கன் ஹைவே போன்று வளைவே இல்லாத சிவப்பு மரங்களும் அந்தத் தோப்பை நிறைத்து இருந்தன. நிமிர்த்தி வைத்த நாதஸ்வரம் போன்ற டக்ளஸ் மரங்களில் வண்ணக்கலர் மரங்கொத்திகள் நேர் நேராய் ஓட்டைகள் துளைத்து அவற்றிலே வரப் போகும் பனிக் காலத்துக்கு ஓக் விதைகளைச் சேமித்து வைத்திருப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தேன் சிட்டுகளும், மரங்கொத்திகளும், கொண்டைக் குருவிகளும், ஹம்மிங் பறவைகளும் அங்கே நிரந்தரமாக குடியிருந்தன. அவைகளுடைய சலசலப்பு அதிகாலை வேளையிலேயே எங்களையெல்லாம் எழுப்பிவிடும்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:24 pm


துரிக்கென்று ஒரு சிறிய மரக்கதவு ரப்பர் வளையம் போட்டு எங்கள் வீட்டு சுவரிலே பொருந்தியிருந்தோம். துரி வேண்டிய நேரம் போகவும் வரவும் அது வசதியாக இருந்தது. துரி அடிக்கடி வெளியே போய் தன் கீழ் பிரஜைகளாகிய அணில்களுக்கும், தேன் சிட்டுகளுக்கும், மரங்கொத்திகளுக்கும் காட்டும் முகமாக ராஜநடை நடந்து தன் ராஜ்யத்தை பரிபாலனம் செய்து திரும்பும். அவையும் இதைக் கண்டவுடன் 'கீ, கீ,' என்று சத்தமிட்டு மரியாதை செய்து ஒதுங்கி நிற்கும். துரி இப்படி புது லாடம் அடித்த குதிரைபோல தலையை நிமிர்த்தி நகர் வலம் வரும்போது அந்தந்த மூலைகளில் ஓரொரு சொட்டு சிறுநீர் தெளித்து தன் எல்லைகளை திரும்பவும் வலியுறுத்தி வைக்கும்.

ஒரு நாள் இரவு பதினொரு மணியிருக்கும். என் மகன் ஹைஸ்கூல் சோதனைக்கு விழுந்து விழுந்து படித்துக் கொண்டிருந்தான். நானும் மனைவியும் தொலைக்காட்சி பார்த்தவாறு இருந்தோம். எங்கள் காலடியில் துரி கதகதப்பாக படுத்திருந்தது. திடீரென்று ஒரு வாடை வீசியது. நாங்கள் இதற்கு முன்பு அறிந்திராத ஒரு நெடி. நாங்க ளஆளையாள் பார்ப்தற்கிடையில் துரி விசுக்கென்று எழும்பி நாய்க்கதைவை தள்ளிக்கொண்டு வெளியே பாய்ந்தது அங்கே வேவு பார்க்க வந்த வரிபோட்ட தேவாங்கு (Stiped Skunk) ஒன்றை துரி துரத்தியபடி போய்க் கொண்டிருந்தது. ஒரு நொடிதான் அந்தக் காட்சியை பார்த்தாலும் மனதை விட்டகலாத காட்சியது. அந்த தேவாங்கு ஒன்றரை அடி உயரம் தான் இருக்கும். கறுப்பு நிறத்தில் முதுகிலே மட்டும் வெள்ளைக்கோடு; அத்தோடு குஞ்சம் கட்டியதுபோல அடர்த்தியான வால் அதற்கு.

'இனி ஆத்தாது' என்று தெரிந்ததும் தேவாங்கு பக்கவாட்டில் நின்று கால்களைத்தூக்கி இப்படியான ஆபத்து சமயங்களுக்கென்று கடவுளால் கொடுக்கப்பட்ட, பின்னாங்கால்களுக்கிடையில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத இரு சுரப்பைகளில் இருந்து ஒரு திரவத்தை பீச்சியடித்தது. துரியின் கண்களை நோக்கித்தான் இந்த திரவம் வந்தது. துரி எவ்வளவு முயன்றும் அதனால் இதைத் தவிர்க்க முடியவில்லை. துரி புல்தரையிலே விழுந்து உருண்டு உருண்டு கதறியது.

நாங்கள் ஓடி அதனிடம் வந்தபோது வெளிர் மஞ்சள் கலரிலே இருந்த அந்தத் திரவம் அதன் உடம்பு பூராவும் பரவி விட்டது. 'ஓ,ஓ' என்று ஓலமிட்டு ஊரைக் கூட்டியது. நாங்கள் துரியைக் கிட்ட அணுகாதபடி அந்த நெடி எங்களையும் தாக்கியது. ரப்பரை எரிக்கும்போது வருமே அப்படியாக நாசித்துவாரத்தை அரித்துக் கொண்டு போகும்படியான துர் நெடி அது. துரியை உள்ளே கொண்டு வந்து அது ஓலமிட, ஓலமிட குளிக்க வார்த்து அதன் வேதனையை தீர்க்க முயன்றோம். முடியவில்லை. கடைசியில் தக்காளிப் பழச்சாறு பிழிந்து அதில் அதை முக்கி முக்கி எடுத்தோம். மூன்று நாள் வரை அதன் ரணம் ஆறவில்லை; வீட்டைச் சுற்றி அப்பியிருந்த மணமும் போகவில்லை. தேவாங்கு அதற்குப் பிறகு என்ன நினைத்ததோ தெரியவில்லை. துரியின் ராஜ்யத்தில் அதனடைய மணம் கமழும் படையெடுப்பு மீண்டும் நடைபெறவேயில்லை.

ஆனால் இந்த சமயத்தில்தான் துரி வேறொரு நிரந்தரமான எதிரியைத் தேடிக் கொண்டது. பின் தோட்டத்திலே பறவைகளுக்காக ஒரு தட்டிலே எப்பவும் தண்­ர் வைத்திருக்கும். பறவைகளும், அணில்களும், தேன்சிட்டுகளும் வந்து இந்த தண்­ரைக் குடித்து இளைப்பாறி செல்லும். சில வேளைகளில் இந்த தண்­ர் மண் கலந்து சேற்றுத் தண்­ர் போல கலங்கி இருக்கும்.

முதலில் நான் இது பற்றி சட்டை செய்யவில்லை. ஆனால் நாளாக நாளாக எனக்கு அதிசயமாக இருந்தது. இரவிலே தெளிந்த ஓடைபோல இருக்கும். தண்­ர் இப்படி சகதியாவது எப்படி?

ஒருநாள் தற்செயலாக இதற்கான விடை கிடைத்தது. நடுச்சாமம் போல நாங்கள் பின்னால் வைத்திருக்கும் குப்பை வாளியை அடிக்கும் சத்தம் கேட்டது. நல்ல நிலா எரியும் மோகனமான இரவு வேளை அது. ஒரு றக்கூன் (Reccoon) வந்து குப்பை வாளியை உருட்டி கையை விட்டு எதையோ தேடிக் கொண்டு இருந்தது. கையிலே கிடைத்த மிச்சம் மீதி பழவகையை கொண்டுவந்து தண்­ரிலே அலம்பி சாப்பிட்டது. ஒரு சிறிய நாய் அளவுக்கு உயரமாக அது இருந்தது. கறுப்பும் வெள்ளையும் கலந்த நிறம். வாலிலேயும், கண்களிலும் மஞ்சளும் வெள்ளையுமான வளையங்கள். இதன் கண்களுக்கு மேலே இருந்த கறுப்புவட்டம் முகமூடி போட்டது போல பார்க்க அழகாக இருந்தது.

இது ஒரு இரவுப்பட்சணி. பழங்கள், தானியங்கள், தவளை, குருவி முட்டை போன்றவற்றை தேடியெடுத்து சாப்பிடும். ஆனால் இதில் ஒரு விசேஷம். எடுப்பவற்றை தண்­ரில் கழுவித்தான் இது சாப்பிடும். மிருகங்களிலேயே றக்கூனுக்குத்தான் இப்படி சுகாதாரத்தில் இவ்வளவு ஈடுபாடு. கரடியைப்போல இந்த ரக்கூனும் எல்லாவிதமான சாப்பாடும் ஒருவித தயக்கமுமின்றி சாப்பிட வல்லது.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:24 pm


தானம் தன்பாடுமான இருந்த துரிக்கு இப்படியாக றக்கூன் வந்து தன்னுடைய ராஜ்யத்தில் தலையிடுவது பிடிக்கவில்லை. அன்றிலிருந்து அதிதீவிரமாக அது தன்னுடைய கடமைகளை கவனிக்கத் தொடங்கியது. இரவு நேரங்களில் றக்கூன் ரகசியமாக வந்து குப்பை வாளியைத் தட்டி உணவு தேடுவதும், கிடைப்பதை தண்­ரில் அலம்பி சாப்பிடுவதும், ஆற்ற முடியாத ஆவேசத்துடன் துரி துரத்திப் போவதும் இப்போது வழக்கமாகி விட்டது. அச்சவாரம் குடுத்து பிடித்த இணுவில் தவில் செட் 'டம்டம்' என்றுவிடாப்பிடியாக அடிப்பதுபோல நடு இரவு வேளைகளில் தவறாமல் குப்பை வாளி சத்தம் நீட்டுக்கு கேட்கத் தொடங்கியது. அந்த நேரங்களில் துரி பிய்த்துக் கொண்டு நாய்க் கதவு வழியாக ஓடுவதும், நாய்க் கதவு டக்கென்ற சத்தத்துடன் திறப்பதும், மூடுவதும் இப்பவெல்லாம் என் காதுகளுக்கு கேட்டுக் கேட்டு பழக்கமாகி விட்டது.

துரியோதனனுக்கும் வீமனுக்கும் நடந்தது போன்ற இந்த துவந்த யுத்தம் முடிவேயின்றி ஒவ்வொரு இரவும் நடைபெற்றது. பகல் நேரங்களில் நிர்ப்பந்தமாக ஒத்தி வைக்கப்பட்டு இரவு நேரங்களில் பழைய மூர்க்கத்துடன் இது தொடர்ந்தது. துரியும், றக்கூனும் அந்த ஆவேசமான இரவு நேரங்களுக்காகவே வாழ்வதுபோல எனக்குப் பட்டது. துரி பகல் நேரங்களில் மூசி மூசி நித்திரை கொண்டு இரவுநேரங்களுக்காக தன்னைத் தயார் செய்து கொண்டது.

எங்கள் வீதியில் ஆயிரம் பஸ்கள் ஓடியபடியே இருக்கும். ஆனால் என் மகன் வரும் பள்ளிக்கூட பஸ் சத்தம் மட்டும் துரிக்கு நிதர்சனமாகத் தெரிந்துவிடும். ஓடிப்போய் வாசலில் நின்று அவனைக் கூட்டி வரும். அவன் வந்த பிறகு அவனுடைய காலுக்கு பின்னலேயே போய்க்கொண்டிருக்கும். வெளியே போய் அவனுடன் விளையாடவும், பிறகு அவன் வந்து படிக்கும்போது அவன் காலின் கீழ் படுத்திருக்கவும், காலை நேரங்களில் அவன் காலை நக்கி எழுப்பவும், வாசலிலே விழும் பேப்பரை ஓடி எடுத்துக்கொண்டு வரவும் பழகியிருந்தது.

நண்பனாக, ஆசானாக,விளையாட்டுப் பிள்ளையாக எங்கள் வீட்டை துரி முழுக்க ஆக்கிரமித்த இந்த இனிமையான நேரத்தில்தான் என் மகன் இப்படி சடுதியாக எங்களையெல்லாம் விட்டு கல்லூரிக்கு படிக்கச் செல்ல வேண்டி வந்தது. அதற்குப் பிறகு துரி முற்றிலும் ஒரு புதிய துரியாக மாறிவிட்டது. நானும், மனைவியும் எவ்வளவோ முயன்று எங்கள் மகனுடைய இடத்தை ஈடுகட்ட முயன்றோம். முதலில் என் மகன் இரண்டு கிழமைக்கு ஒருமுறை வந்து போனான்; பிறகு, மாதத்திற்கு ஒருமுறை என்றானது. அதற்குப் பிறகு ஒவ்வொரு செமஸ்டர் முடிவிலும் வந்து போகத் தலைப்பட்டான்.

துரி கொஞ்சம் கொஞ்சமாக இந்த புதுச் சூழ நிலையை ஏற்று அதற்கேற்றமாதிரி தன்வாழ்க்கையை அமைத்துக் கொண்டது. என் மகன் கல்லூரியை முடித்து நல்லதொரு தனியார் கம்பெனியில் வேலையில் சேர்ந்து விட்டான். இப்பொழுது அவன் வேலை பார்க்கும் இடமோ இன்னும் தூரமானது. வீட்டிற்கு வந்து சேர்வதற்கு அரை நாள் எடுக்கும். சில வேளைகளில் டெலிபோனில் கூப்பிடும்போது துரியைப் பற்றி கேட்பான்; நாங்களும் அவ்வப்போது துரியைப் பற்றிய புதினங்களைச் சொல்லி வைப்போம்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:25 pm

சூரியன் யாருடைய உத்தரவையும் எதிர்பாராமல் மாலை நேரங்களில் ஒளிவது போல சொல்லாமல் கொள்ளாமல் துரியனுடைய யௌவனப் பிராயத்து சேட்டைகளும் மறையத் தொடங்கின. முந்திய வீர்யம்போய் சில மாற்றங்கள் தென்பட்டன. விடியும்போது அதனால் முன்புபோல் துள்ளிக்கொண்டு எழும்பமுடிவதில்லை. கால்களை நிமிர்த்தி வளைத்து மெதுவாகத்தான் சோம்பல் முறித்தது. இருந்தாலும் அது தன் கடமைகளைச் சரிவர செய்வதில் குறியாகவிருந்தது. தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தில் மற்ற பிராணிகளோ, பறவைகளோ ஆக்கிரமிக்காமல் இருப்பதில் மிக்க கவனமாக செயல்பட்டது. ஓர் அணிலையோ, குருவியையோ துரத்தியபின் மிகக் கெப்பருடன் நடந்து தன்னுடைய ராஜ்யத்தின் மூலைகளில் போய் ஒவ்வொரு சொட்டு சிறுநீர் பாய்ச்சி சுற்றுலா வந்து கம்பீரமாக படுத்துக் கொள்ளும்.

   இந்த நேரங்களில் றக்கூன் துரியை ஒரு புதுவிதமான மூர்க்கத்துடன் தாக்கத் தலைப்பட்டது. அடிக்கடி வந்து தொல்லை கொடுத்தது. துரி அடக்க முடியாத ஆங்காரத்துடன் எழும்பி அதைத் துரத்திவிட்டு மீண்டும் வந்து படுத்துக்கொள்ளும். மறுபடியும் றக்கூன் வேண்டுமென்றே வந்து இதைச் சீண்டத் தொடங்கியது. அது வேகத்துடன் மரத்திலேறும் வல்லமை படைத்ததால் துரி தொண்டை வறளக் குரைத்தும், உறுமியும் தன் பாத்தியதையை நிலை நாட்டிவிட்டே திரும்பும்.

   ஒரு நாள் தருணம் பார்த்து துரியினுடைய பரம எதிரியான றக்கூன் ஒரு வஞ்சகமான சூழ்ச்சி செய்தது. அதிகாலை ஐந்து மணி இருக்கும். 'டங்டங்' என்று வாளிச் சத்தம் கேட்டது. துரி வழக்கம்போல் தன் வாசல் வழியாக பாய்ந்து ஓடியது. அது அப்படி கடக்கும்போது அதன் கதவு 'டக்' என்று சத்தத்துடன் திறந்து மூடிக்கொள்ளு. றக்கூனும் இங்கும் அங்கும் ஓடுவது போல் பாய்ச்சல் காட்டிவிட்டு வழக்கம்போல் மரத்தில் ஏறாமல் வேலியிலே அது செய்துவைத்த ஒர் ஒட்டை வழியாக பாய்ந்து போனது. யுத்தத்தின் உத்வேகத்தில் அறிவு மழுங்க துரியும் அதைத் துரத்திக்கொண்டு ரோட்டைக் கடந்து ஒடியது. அந்த நேரம் பார்த்து வேகமாக வந்த ஒரு கார் துரியின் மேல் ஏறிவிட்டது.

   நான் ஓடிப்போய் துரியை அள்ளி எடுத்தபோது அதனுடைய மூச்சு இழைபோல ஓடிக்கொண்டிருந்தது. அதன் பனித்த கண்கள் என்னையே பார்த்தபடி இருந்தன. எனது நீண்டகால நண்பனான துரியினுடைய கடைசி சுவாசம் என் கைகளில் மெதுவாக ஊர்ந்து முடிந்தது. துரியோதனன் என்ற தலை வணங்கா மன்னன் அறியாயமாக இடது தொடையில் அடிபட்டு இறந்ததுபோல துரியும் தனது இடது தொடை நசுக்கப்பட்டு என் மடியில் உயிரை நீத்தது.

   என் மகனுக்கு உடனேயே டெலிபோனில் அறிவித்தேன். அன்று பின்னேரமே அவன் வந்துவிட்டான். ஒரு பழைய கம்பளியில் துரியை சுற்றி பின் தோட்டத்தில் ஒரு கிடங்கு தோண்டி அங்கே புதைத்தோம். கண்களை பிறங்கையால் துடைத்தபடி துரியை புதைத்த இடத்தில் அதன் ஞாபகமாக என் மகன் ஒரு 'ஓக்' செடியை நட்டு வைத்தான்.

   அன்று இரவும் குப்பை வாளிச் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து தண்ணியில் சளசளவென்று அலம்பும் ஓசை வந்தது. வழக்கமாக நாய்க் கதவு 'படக்' என்று திறக்கும் ஓசையும் அதைத் தொடர்ந்து துரி சறுக்கி சறுக்கி ஓடும் சத்தமும் கேட்கும். இனிமேல் துரியின் உயிர்ப்பு என் காதுகளுக்கு கேட்கப்போவதில்லை.

   ஓ! என் இனிய நண்பனே! நீயும் தொடையிலே அடிபட்டு இறக்கக்கூடும் என்கிற சிறு சமுசயமாவது எனக்கு இருந்திருந்தால் 'துரியோதனன்' என்கிற பேரை உன்மீது சுமத்த நான் பிரியப்பட்டிருக்க மாட்டேனே!

   * * *




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:26 pm

   2. 'ஒரு சாதம்'

   பாதையை நிறைத்து பனி மூடியிருந்தது. கனடாவின் அன்றைய வெட்பநிலை மைனஸ் 20 டிகரி. டாக்சி மெதுவாக ஊர்ந்து 32ம் நம்பர் வீட்டு வாசலில் போய் நின்றது. வீட்டின் பெயர் 'ஒரு சாதம்' என்று போட்டிருந்தது.

   ஹோட்டலில் இருந்து அங்கே வர பரமனாதனுக்கு இருபது டொலர் ஆகிவிட்டது. காசைக் கொடுத்துவிட்டு ஓவர் கோட், மப்ளர், தொப்பி, பூட்ஸ் என்ற சம்பிரமங்களுடன் கையிலே பையையும் தூக்கிக்கொண்டு டாக்சியில் இருந்து பனி சறுக்காத இடமாக காலை வைத்து சிவதாண்டவம் செய்து ஒரு மாதிரி இறங்கிவிட்டான்.

   வீட்டினுள்ளே சிவலிங்கம் ஒரு சாரமும், பனியனுமாக நின்றான். கனடாவில் வீடுகளை அந்தமாதிரிக் கட்டியிருந்தார்கள்; குளிர் அண்டவே முடியாது. பரமனாதன் 'ஸ்ரிப் ரீஸ்' போல ஒவ்வொன்றாகக் கழற்றி வாசலிலே குவித்தான்; ஓவர் கோர்ட், மப்ளர், தொப்பி, பூட்ஸ், அப்பா! அரைவாசி பாரம் குறைந்து விட்டது.

   சிவலிங்கத்தின் மனைவி பூர்ணிமா வந்தாள். அவளுடைய அழகு அழிவில்லாத அழகுதான். சிவலிங்கமும் பூர்ணிமாவும் பரிமாறிய காதல் கடிதங்களை எல்லாம் அந்தக் காலத்தில் எடிட் செய்ததே பரமனாதன்தான். பதின்மூன்று வருடங்களுக்கு பிறகு அவர்களை பரமனாதன் முதன் முறையாக கனடாவில் பார்க்கிறான். சிவலிங்கத்துக்கு இப்போது இரண்டு பெண் குழந்தைகள்; மூத்தவளுக்கு வயது பன்னிரண்டு இருக்கலாம்; அடுத்தவளுக்கு நாலு.

   பரமனாதன் கேட்டான்: "இது என்ன புது விதமான வீட்டுப் பேர்? 'ஒரு சாதம்' என்று வைத்திருக்கிறாய்?"

   "அதுவா? இந்தப் பனிக் குளிரில் வீடு தேடி வாறவைக்கும் ஒரு பிடி சாதமாவது போட வேணும் என்ற பிடிவாதத்தில் வைத்த பேர்," என்றான் சிவலிங்கம். இதைக் கேட்டுக் கொண்டிருந்த அவனுடைய மூத்த மகள் 'களுக்' என்று சிரித்துக்கொண்டே உள்ளே ஓடிவிட்டான்.

   'சாதம்' என்ற வார்த்தையைக் கேட்ட பரமனாதனுக்கு கதையை மாற்றப் பிடிக்கவில்லை. கடந்த பத்து நாட்களாக ஹோட்டலில்தான் அவன் வாசம். ரொட்டியும், வெண்ணெயும், பழங்களுமாகச் சாப்பிட்டு, சாப்பிட்டு அவனுக்கு அலுத்துப் போய்விட்டது. கனடாவின் படுபயங்கரக் குளிருக்கு அவனுடைய வயிறு 'கொண்டா, கொண்டா' என்று கேட்டுக் கொண்டிருந்தது. சாதத்தை அவன் அங்கே கண்ணால் கூட காணவில்லை. "என்ன? சோறு கறி வகைகள் எல்லாம் இங்கே தாராளமாகக் கிடைக்குமா?" என்றான் பரமனாதன். அவன் மனமானது சம்பா அரிசிச் சோற்றையும், மீன் குழம்பு கறியையும் நினைத்துப் பறந்தது.

   இதற்கு பூர்ணிமா, "இதென்ன இப்பிடிக் கேக்கிறியள்? இது ஒரு சின்ன யாழ்ப்பாணம்தான்; யாழ்ப்பாணத்தில் கிடைக்காததுகூட இங்கே கிடைக்கும். அப்ப பாருங்கோ" என்றாள். பதமனாதனுடைய வாய் அப்பவே ஊறத் தொடங்கி விட்டது.

   அப்போதெல்லாம் சிலோனில் பரமனாதனும் சிவலிங்கமும் அடிக்கடி 'கிரின்லாண்ட்ஸ’ல்' சாப்பிடுவார்கள். சிவலிங்கத்தின் காதல் உச்சக் கட்டத்தில் இருந்த காலம் அது. இருவரும் சார்டர்ட் அக்கவுண்டண்ட் சோதனைக்கு படித்துக் கொண்டிருந்தார்கள். சிவலிங்கம் படிக்கவே மாட்டான்; பெட்டையின் பின்னாலேயே அலைந்து கொண்டிருந்தான்.

   படிப்பைத் தவிர மற்ற எல்லாம் செய்து வந்தான்; படிக்காத புத்தகங்கள் இல்லை; எல்லாம் அறிவு சார்ந்த புத்தகங்கள். அந்தக் காலத்திலேயே அறிவு ஜ“வி. ஒரு விஷயத்தை ஒருக்கால் சொன்னால் பிடித்துக் கொண்டு விடுவான். அபாரமான ஞாபக சக்தி. அவனோடு வாதம் செய்து வெல்வது என்பது நடக்காத காரியம்.

   எல்லோரும் அதிசயிக்கும் படி ஒரே முறையில் சோதனை பாஸ் பண்ணிவிட்டான். அவன் முழு மூச்சாகப் படித்தது என்னவோ இரண்டு வாரங்களே! மிகப் பெரிய தனியார் கம்பெனி ஒன்றில் சேர்ந்து கிடுகிடுவென்று மேலுக்கு வந்து விட்டான். பூர்ணிமாவை, பெற்றோரை எதிர்த்து மணமுடித்தான். அவனுடைய வாழ்க்கையானது இப்படி அந்தரலோக சுகபோகத்தில் சென்று கொண்டிருந்த போதுதான் 1977 கலவரம் வந்தது. இவனுக்கு ஒரு பிரம்மாண்டமான வீடு கம்பெனி கொடுத்திருந்தது; அத்துடன் நாலு வேலைக்காரர்கள், தோட்டக்காரன், டிரைவர், காவல்காரன் என்று பலபேர்.



 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:26 pm


அந்தக் கம்பணியிலே பத்தாயிரத்துக்கு மேலான பேர் வேலை செய்தார்கள். அங்கே வேலை செய்த தமிழர்களை விரல்விட்டு எண்ணலாம். எல்லாம் சிங்களவர்கள். இவனுடைய பதவியோ மிகமிக உயர்ந்தது. கலவரம் வந்தபோது எல்லாவற்றையும் துறந்து விட்டு 'உயிர் தப்பினால் போதும்' என்று இந்தியாவுக்கு பூர்ணிமாவுடன் ஓடி வந்து விட்டான்.

அங்கே சிவலிங்கம் பட்ட இன்னல்களை இங்கே விவரிக்க இயலாது. ஒரு உயர்ந்த பதவியில் சகல சௌகரியங்களுடனும் வாழ்க்கை நடத்திவிட்டு அகதியாக வந்து இம்சைப் படுகிற அவதி சொல்லி விளங்காது. கடைசியில், எவ்வளவோ கஷ்டப்பட்டு, அவனும் பூர்ணிமாவும் கனடாவுக்கு அகதிகளாக வந்து தஞ்சம் புகுந்தார்கள். இத்தனை வருடங்களுக்கு பிறகு பரமனாதன் முதன் முறையாக அவர்களைப் பார்க்கிறான்.

பசி பிடுங்கியது பரமனாதனுக்கு. ஆனால் பூர்ணிமா அவர்களுடன் இருந்து சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தாள். சாப்பாடு அடுக்குகள் ஒன்றையும் காணவில்லை. முதலில் பரமனாதனுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது; பிறகு திகில் பிடித்துவிட்டது. 'சாப்பாட்டே ஒரு வேளை கிடைக்காதோ? என்று நெஞ்சு அடிக்கத் தொடங்கி விட்டது.

பூர்ணிமா சடுதியாகச் சொன்னாள்: "இஞ்சருங்கோ! டூ போர் ஒன்ளை (241) டெலிபோனில் கூப்பிடுவமா?" பரமனாதன் பாவம், ஒன்றும் புரியாமல் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். சிவலிங்கம் விளங்கப்படுத்தினான்: "டூ போர் வன் நம்பரை டயல் பண்ணி ஒரு பெரிய பீஸா ரொட்டி ஓடர் பண்ணினால், ஒரு காசுக்கு இரண்டு ரொட்டி கொண்டு வந்து கொடுப்பார்கள்; ஒன்று பெரிசு, மற்றது சிறிசு. சிறிய ரொட்டி இலவசம். டூ போர் வன் (ஒரு காசுக்கு இரண்டு). பதினைந்து நிமிடங்களுக்கிடையில் வீட்டிற்கே கொண்டு வந்து தருவார்கள். அது பிந்தினால் ரொட்டி இலவசம். அதைத் தான் பூர்ணிமா கேட்கிறா? ஓடர் பண்ணுவமா?"

பரமனாதனுக்கு இடி விழுந்தது. "என்னடா! வந்திறங்கியவுடன் ஏதோ ஒரு பிடி சாதம் என்றெல்லாம் கதைத்தாய். இப்ப மெல்ல ரொட்டிக்கு தாவப் பார்க்கிறாயே!" என்றான்.

"ஓ, ஓ மறந்து விட்டேன். சாதம்தான், சாதம் தான்" என்று கூறிவிட்டு மனைவியைப் பார்த்தான், சிவலிங்கம், பூர்ணிமாவும் புன்சிரிப்புடன் மறுபடியும் டயல் பண்ணத் தொடங்கினாள்.

சிவலிங்கம் விஸ்தாரமாக கனடாக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்த போதே சாப்பாடு வந்த விட்டது பரமனாதனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. 'ஆஹா! என்ன சாப்பாடு. சம்பா அரிசிச் சோறு, மீன்குழம்பு, கத்தரிக்காய் பொரியல், மாசுச் சம்பல், முருங்கைக்காய் கூட்டு, இது என்ன கனடாவா, அல்லது யாழ்ப்பாணமா? ருசி, மணம் எல்லாம் தூக்கி அடித்தது. இவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்து விட்டார்களே?"

எல்லோருமாக மேசையில் சுற்றி வர இருந்து சுடச்சுட சாப்பிட்டார்கள். பரமனாதனுக்கும் உலகமே மறந்து விட்டது. அவன் பசிக்காகச் சாப்பிடுகிறவன் அல்ல;ராக்குக்காகச் சாப்பிடும் பேர்வழி! விட்டு வைப்பானா?

பூர்ணிமா சொன்னாள்: "இங்கே புருசன் பெண் சாதி இரண்டு பேருமே அநேகமாக வேலைக்குப் போகினம். அதனாலே இஞ்ச கன குடும்பங்களில் இப்பிடித்தான் ஓடர் பண்ணிச் சாப்பிடுகினம். நல்ல சாப்பாடு, விலையும் பரவாயில்லை."

"நாங்கள் இங்கு வந்த மூட்டம் அகதிகள் உதவிப் பணத்தில்தான் மிகவும் சிக்கனமாக சீவித்தனாங்கள்; பிள்ளைகள் கனடா உணவு பழகி விட்டார்கள். இப்படி நாங்கள் ஓடர் பண்ணிச் சாப்பிடுவது இப்ப கொஞ்ச நாளாய்த்தான்" என்றான் சிவலிங்கம்.

சாப்பாடு முடியுந் தறுவாயில் பூர்ணிமா, "உங்கடை ப்ரண்டு வீட்டுப் பேரைப் பற்றி கேட்டார். நீங்கள் ஏதோ சொல்லி சமாளித்து போட்டியள். இவருக்கு நாங்கள் இஞ்ச வந்து பட்ட பாட்டைக் கட்டாயம் சொல்ல வேணும்" என்றாள சிவலிங்கத்திற்கு விஸ்தாரமாக கதை சொல்லுவது என்றால் அளவற்ற பிரியம், விடுவானா?

"இஞ்ச எல்லோருக்கும் நடக்கிறது போலத்தான் எங்களுக்கும் நடந்தது. ஆனால் எங்கடை கஷ்டம் கொஞ்சம் வித்தியாசமானது; அனுபவித்தால்தான் தெரியும்.

"இருபத்தைந்து வருடங்களுக்கு முன் சிலோனில் நடந்த சம்பவம் இது. அப்ப ஒரு கம்பனிக்கு கணக்காய்வு (Audit) செய்யப் போயிருந்தேன். அங்கே பொன்னுச்சாமி என்றொரு கிழவர் நாற்பது வருடமாகவே வேலை பார்த்து வந்தார். பேரேடுகளைத் தயாரித்து ரயல் பாலன்ஸ் எடுத்து கணக்காய்வாளரிடம் (Auditor) கொடுப்பது அவர் பொறுப்பு. கணக்கு எழுதுவதில் அவர் புலி. எந்தக் கஷ்டமான சிக்கல் என்றாலும் அவிழ்த்து விடுவார்.

"நாற்பது வருட காலமாக வராத ஒரு கஷ்டம் அவருக்க அப்போது வந்தது. அவருடைய ரயல் பாலன்ஸ் அந்த வருடம் பொருந்தவில்லை; ஒரு சதம் வித்தியாசத்தில் நொட்டிக் கொண்டு நின்றது.

"பொன்னுசாமிக்கு இது ஒரு பெரிய சவால். இதை எப்படி அவர் ஏற்பார்? இரவு பகலாகக் கண் விழித்து முழுக கணக்குகளையும் இன்னொரு முறை சரி பார்த்தார். அந்த ஒரு சதத்தை அவரால் கண்டு முடியவில்லை. பெரிய மானப் பிரச்சனையாக இது உருவெடுத்து விட்டது. கணக்காய்வு தள்ளிப்போய்க் கொண்டே வந்தது. ரயல் பாலன்ஸ் சரி வராமல் கணக்குகளை முடிக்க முடியாதே?

"ஏர்னஸ்ட் ஹெமிங்வே எழுதிய ஒரு கதை படித்திருப்பாய். ஒரு கிழவன் தன் சிறு வள்ளத்தில் மீன் பிடிக்கப் போனான். தூண்டில் போட்டு மீனைப் பிடித்து விட்டான். ஆனால் அகப்பட்டதோ ஒரு ராட்சச மீன். பலத்த போட்டி. கிழவன் மீனை விடுவதாக இல்லை; மீனும் பிடி கொடுப்பதாக இல்லை. இந்தச் சண்டை நாள் கணக்காக நீடிக்கிறது. ஒன்றில் மீன் சாக வேண்டும் அல்லது கிழவன் சாக வேண்டும். அப்படியான ஒரு நிலை.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:26 pm


"அது போலத்தான் பொன்னுச்சாமிக்கும் பேரேட்டுக்கும் நடந்த போராட்டம் முடிவில்லாமலே நீண்டு கொண்டு போனது. ஒரு திங்கள் காலை நான் போகிறேன். பொன்னுச்சாமி தலைவிரி கோலமாய் என் முன்னே வந்து நிற்கிறார். அவர் கண்கள் எல்லாம் சிவந்து காணப்படுகின்றன. சனி, ஞாயிறு விடுமுறைக்கு அவர் வீட்டுக்கே போகவில்லை. இரவு பகலாக பேரேடுகளை மீண்டும் மீண்டும் சரி பார்த்திருக்கிறார்.

"அவருடைய கண்கள் கீழே பார்த்தபடி இருந்தன. தன் பைக்குள் கையை விட்டு ஒரு சதக் காசை எடுத்து என் மேசை மேல் வைத்தார். 'தம்பி, இந்த ஒரு சதத்தை வைத்துக் கொள்ளுங்கள். என்னால் இந்த வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியவே இல்லை. இது எனக்கு ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி. என்னை விட்டு விடுங்கள்' என்றார். பொன்னுச்சாமியுடைய கஷ்டம் எனக்கு அப்பொழுது முற்றாக விளங்கவில்லை. ஆனால் அதே போன்ற ஒரு சங்கடம் எனக்கம் இங்கே கனடாவில் ஏற்பட்டது.

"நாங்கள் அகதிகளாக வந்து சீரழிந்த கதை நீண்டு கொண்டே போகும். அதை விட்டுவிடுவோம். என்னுடைய விண்ணப்பத்தை எழுதிக் கொண்டு கம்பனி கம்பனியாக ஏறி இறங்கினேன். நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களைத் தபாலிலும் அனுப்பினேன். அகதிகள் உதவிப் பணத்தில் சிக்கனமாக வாழ்க்கை நடத்தினோம்.

"இங்கே பெண்களுக்கு வேலை கிடைப்பது வெகு சுலபம். பூர்ணிமாவுக்கு வேலை கிடைத்து விட்டது. ஆனால் அவள் அப்போது கர்ப்பம். அதனால் வேலையை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

"சில பேர் எனக்கு குறுக்கு மூளை சொல்லித் தந்தார்கள். கனடா அரசாங்கத்தை ஏமாற்றி உதவித்தொகை அதிகரிப்பதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன; அதில் ஒன்று மனைவியை தற்காலிகமாக நீக்கிவைப்பது. என் மனம் உடன்படவில்லை. சொந்த நாட்டிலிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வந்து தஞ்சம் புகுந்த நாட்டை இப்படி ஏமாற்றுவதா?

"கனடாவில் மீண்டும் ஒருமுறை படித்து கணக்காளர் தேர்வு எழுதி முடித்தேன். வேலை கிடைப்பது இப்போது இன்னும் கஷ்டமாகி விட்டது. விஷயம் இதுதான். என்னுடைய படிப்புக்கும், அனுபவத்துக்கும் ஏற்ற வேலை எடுத்த வீச்சே தரமாட்டார்களாம். கீழ் மட்டத்தில் சேர்ந்து படிப்படியாகத் தான் உயரவேணும். அப்படிக் கீழ்மட்டத்தில் எடுப்பதற்கும் கம்பனிகள் பயப்பட்டன.

"நீ சொன்னால் நம்ப மாட்டாய், கடைசியில் எனக்குக் கிடைத்த வேலை வாட்ச்மேன் உத்தியோகம்தான். அதற்கும்கூட எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன். தெரியுமா? ஒரு இந்தியக்காரர், சுந்தரம் என்று பேர், அவர்தான் எனக்கு அந்த வேலையை எடுத்துக் கொடுத்தார். அதற்கென்று பிரத்தியேகமான பயிற்சிகள் எல்லாம் தந்தார்கள். எங்கள் ஊரில் சைக்கிள் கடை வைத்திருந்தவர்களும், பேப்பர் போட்ட பெடியன்களும் BMW காரில் இங்கே உலா வந்து கொண்டிருந்தார்கள். நான் இவ்வளவு படித்துவிட்டு இப்படியாக காவல்கார வேலை செய்து வேண்டி வந்து விட்டதே! விதியே என்று நொந்து கொண்டேன்.

"எங்கள் கம்பெனி பிரெஸ’டெண்ட் போகும். போதும் வரும் போதும் நான் அவருக்கு தவறாமல் சலாம் செய்வேன். அவருடைய கவனத்தை எப்படியும் ஈர்க்க வேண்டும் என்பதில் ஆர்வமாக செயல்பட்டேன். அவருடைய கடைக்கண் பார்வைபட்டால் என் கஷ்டமெல்லாம் தீர்ந்து விடுமே!

"என் வேலையோ மிகவும் கடுமையானது. முன் பின் எனக்கு அப்படி வேலை செய்து பழக்கவில்லை. இரவு முழுவதும் ரோந்து வந்து மெஷ’னைப் பஞ்ச் பண்ணிய படியே இருக்க வேண்டும். பனியென்றால் ஓவர் கோட்டையும், பூட்சையும் மேலாடைகளையும் மீறி குளிர் உள்ளே போய் உயிரைத் தொடும்.

"ஒருநாள் என் வீட்டுக்கு போய் காலுறையைக் சுழற்றியபோது காலுறையெல்லாம் இரத்தம். பூர்ணிமா அழுது விட்டாள். அன்று இரவு வெகு நேரமாக ஒரு விண்ணப்பம் தயாரித்தேன் எங்கள் கம்பெனி பிரெஸ’டெண்டுக்கு. எப்படியும் ஒரு சின்ன வேலையாவது போட்டுத் தருமாறு என் தகுதிகளை எல்லாம் காட்டி விளக்கினேன். தருணம் பார்த்திருந்து ஒருநாள் அதை அவர் கையிலும் சேர்த்து விட்டேன்.

"அதன்பிறகு ஒவ்வொரு நாளும், அவர் போகும் போதும் வரும் போதும், அவருடைய முகத்தையே பார்த்தபடி இருப்பேன். ஏதாவது ஒருநாள் அவர் வாயிலிருந்து நல்ல வார்த்தை வருமா என்று பார்த்துப் பார்த்து ஏமாந்தேன்.

"அந்தச் சமயத்தில்தான் James Gleick எழுதிய Chaos என்ற புத்தகம் வெளியாகி எங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அறிவு ஜ“விகளுக்காக மட்டுமே எழுதப்பட்ட புத்தகம் அது என்று உனக்குத் தெரியும்.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:27 pm


"நான் சிலோனில் இருந்தபோது புத்தகங்களை வாங்கி வாங்கி குவிப்பேன். வாங்கின புத்தகங்களை இரவு பகலாக வாசித்து முடித்து விடுவேன். இங்கே புத்தகங்களின் விலையோ எக்கச்சக்கம். ஒரு புத்தகம் கூட வாங்க முடிவதில்லை. புத்தக கடைகளைப் பார்த்துப் ஏங்குவேன்.

"ஒருநாள் பிரெஸ’டெண்ட் கையில் அந்த Chaos புத்தகத்தைப் பார்த்தேன். அடுத்த நாளே புத்தகக் கடையில் போய் நானும் ஒன்று வாங்கி விட்டேன். விலையோ 12 டொலர். பூர்ணிமா என்னுடன் சண்டை போட்டாள், எங்கள் வரும்படிக்கு அது ஒரு அநாவதியமான செலவு என்று. புத்தகத்தை முதலில் இருந்து கடைசிவரை மூன்று தடவை படித்தேன்; சில பகுதிகளைக் கரைத்தும் குடித்து விட்டேன்.

"அதற்குப் பிறகு அந்தப் புத்தகத்தை வைத்துக் கொண்டு உலாவத் தொடங்கினேன். பிரஸ’டெண்ட் வரும் சமயம் பார்த்து புத்தக அட்டை தெரியக்கூடியதாக பிடித்த பிடியே அங்குமிங்கும் அலைந்தேன்.

"என்னுடைய யுக்தி ஒருநாள் பலித்தது. அவரசமாய் போன பிரெஸ’டெண்ட் நின்று உற்றுப் பார்த்துவிட்டு 'ஆஹா! James Gleick?' என்றார். அவர் வாய் மூடு முன் நான் அந்த எழுத்தாளர் கூறிய தத்துவங்கள் பற்றி என் கருத்தை எடுத்து விட்டேன். குளத்தின் நடுவே ஏற்படும் சிறு சலனம் எப்படி விரிந்து விரிந்து கரையை அடைகிறதோ அதே போன்று வளிமண்டலத்தில் ஏற்படும் அணுப்பிரமாணமான சிறு மாற்றம்கூட வானிலையை ஏன் பூதாகரமாகப் பாதிக்கிறது என்பதைப் பற்றி விளக்கினேன். அதனால்தான் கிரகணம். நீர்மட்ட ஏற்ற இறக்கம் பற்றியெல்லாம் கச்சிதமாக முன்கூட்டியே கூறிவிடும் விஞ்ஞானம், பருவ நிலையை மாத்திரம் முன்னறிவித்தல் செய்வதற்கு திக்குமுக்காடுகிறது என்பது பற்றி கூறினேன்.

"'எங்கள் நாட்டில் ஓளவையார் என்று ஒரு மிகப் படித்த பெண் புலவர் இருந்தார். அவர் ஒரு அரசனை வாழ்த்தப் போய் 'வரப்புயர' என்று மட்டும் கூறி பேசாமல் இருந்து விட்டார். அதன் தாற்பரியத்தை பின்பு அவரே விளக்கினார்.'

'வரப்புயர, நீர் யாரும் நீர் உயர, நெல் உயரும் நெல் உயர, குடி உயரும் குடி உயர, கோல் உயரும் கோல் உயர, கோன் உயர்வான்?

"'ஒரு துளி காரியம் எப்படிப் பிரம்மாண்டமான ஒரு தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதற்கு இது சான்று. இது எனக்கு மிகவும் பிடித்தமானது ஒரு கருத்து' என்று மூச்சுவிடாமல் சொல்லி நிறுத்தினேன். பிரெஸ’டெண்ட் ஆடி விட்டார். 'அட! மிக நல்ல வியாக்கியானமாய் இருக்கிறதே! குட், குட்' என்று சொல்லிவிட்டு வேகமாய் போய் விட்டார்.

"அடுத்த நாள் எனக்கு ஓர் அதிசயம் காத்திருந்தது. கணக்காளர் பிரிவில் ஒரு அடிமட்ட வேலை எனக்கு கிடைத்து விட்டது. எனக்குண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வேலை என்பது பத்தாம் வகுப்பு படித்தவனை பாலர் வகுப்பில் போட்டதுபோலத்தான். ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை இரண்டு நாள் வேலையை இரண்டு மணி நேரத்தில் முடித்து விடுவேன். ஒய்வு நேரங்களில் மற்றவர்களுடைய வேலையையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வேன். இரண்டு மாதத்தில் அந்தப் பிரிவு வேலையெல்லாம் எனக்கு தண்ணிபட்ட பாடு.

"என்னுடைய செக்ஷனில் எல்லோரிடமும் கம்ப்யூட்டர் இருந்தது; எனக்கு மட்டும் இல்லை. செக்ஷன் தலைவரிடம் வழவழவென்று ஒரு கம்ப்யூட்டர். அந்த வழியால் போகும்போதெல்லாம் அதைத் தொட்டுத் தடவி விட்டுத்தான் போவேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் மற்றவர்களுடைய கம்ப்யூட்டரில் வரும் சிறிய பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து வைப்பேன்.

"இதற்கிடையில், ஐம்பது டொலருக்கு நான் ஒரு ஓட்டை கம்ப்யூட்டர் வாங்கி விட்டேன். மற்ற கம்ப்யூட்டர்கள் பென்ஸ் கார் என்றால் இதை 'திருக்கல்வண்டி' என்று சொல்லலாம். அவ்வளவு மெதுவாகப் போகும். கம்பெனியில் சிக்கலான சில வேலைகளை வீட்டில் கொண்டு வந்து இதில் தட்டி சரி செய்து விடுவேன்.

"அப்போது ஒரு நாள் எங்கள் செக்ஷன் தலைவர் சில நாள் லீவு போட்டார். அந்தப் பகுதி வேலைகள் எல்லாத்தையும் நான் பார்க்கும்படி வந்தது. விடுவேனா? அதிலும் அந்த கம்புயூட்டரில் வேலை செய்யக் கொடுத்து வைக்க வேணுமே? அப்படி வேலை செய்யும்போதுதான் ஒரு நாள் கவனித்தேன்; கம்புயூட்டர் பிரிண்ட் பண்ணும்போது ஒரு சதம் தவறியிருந்தது.

"இது பெரிய விஷயமில்லை. ஆனால் இது திருப்பித் திருப்பி நடந்தது. என்ன செய்தும் போகவில்லை. குத்துக்கரணம் அடித்து வித்தை காட்டினாலும் அந்த ஒரு சத வித்தியாசம் போவதாகத் தெரியவில்லை.

"கம்புயூட்டர் என்பது கணக்குகளைச் சரியாகவும், வேகமாகவும் போடுவதற்கென்றே பிறவியெடுத்தது. இப்படி பிழை நடக்கலாமா? 'விடேன், தொடேன்' என்று நான் இந்த ரகஸ்யத்தை உடைக்க முற்பட்டேன்.

"ஒரு நாள் பிரெஸ’டெண்ட் தனியாக இருக்கும் சமயம் பார்த்து அவர் முன்பு போய் நின்றேன். அந்த ஆதிமூலத்துக்குள் என் போன்ற சாதாரண மனிதப் பதர்கள் காலடி எடுத்து வைக்க முடியாது என்றாலும் நான் துணிந்து போய்விட்டேன்.

"முதலிலேயே மன்னிப்பு கோரி, இப்படி அடிக்கடி வரும் ஒரு சத வித்தியாசத்தைப் பற்றி அவரிடம் விஸ்தரித்தேன். அவர் அதைப் பொறுமையாக கேட்டுவிட்டு, புன்சிரிப்புடன் 'அதை பார்த்து விட்டாயா? உண்மைதான். நாங்கள் கடந்த ஆறு வருடங்களாக முயன்றும் அந்த ஒரு சதம் உரைப்பதை நீக்க முடியவில்லை. சில வெளி இடத்து நிபுணர்கள்கூட வந்து பிழையைத் திருத்துவதற்காக எண்பதாயிரம் டாலர்வரை செலவு செய்துவிட்டோம். இது தவிர, இது என்ன, ஒரு சதம் தானே! இதை ஆர் நுணுக்கமாகப் பார்க்கப் போகிறார்கள். இது வேஸ்ட் என்று முடிவு செய்து விட்டோம். இதில் கவனத்தைத் திருப்பாதே' என்றார்."

அந்த நேரம் பார்த்து சிவலிங்கத்தின் மூத்த மகள் வந்து கணக்குப் பாடத்தில் ஒரு சந்தேகம் கேட்டாள். சிவலிங்கம் பொறுமையாக அவளுக்கு அந்தக் கணக்கை விளக்கப்படுத்தினான்; பிறகு மறுபடியும் தொடர்ந்தான்:




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jun 28, 2013 3:27 pm


"மகாத்மாகாந்தி இங்கிலாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக லண்டன் பயணமானார். எப்போதும்போல சாதாரண இந்தியக் குடிமகன் போல நாலு முழத்துண்டும், மேற்போர்வையும், செருப்புடனும் வெளிக்கிட்டார். அவருடைய உணவுப் பழக்கமோ உலகம் அறிந்தது. பேரிச்சம் பழம், ஆட்டுப் பால், வெண்ணெய் இப்படி வெகு எளிமையானது. இங்கிலாந்து அரசாங்கம் அவருடைய சாப்பாட்டில் அக்கறை கொண்டு ஒரு ஆட்டையும் கப்பலில் அவருடன் லண்டன் வரவழைத்திருந்தது. அப்போது லண்டன் பேப்பர்களில் இப்படி ஒருசெய்தி வந்ததாம்: 'மகாத்மா காந்தியை அவர் ஏற்றுக்கொண்ட ஏழ்மை நிலையில் வைத்திருப்பதற்கு இங்கிலாந்து அரசு நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பவுண் செலவு செய்ய வேண்டி இருக்கிறது.'

"அது போலத்தான் இந்தக் கதையும் இருந்தது. நான் தைரியத்தையெல்லாம் வரவழைத்துக்கொண்டு. 'ஐயா, எனக்கு ஒரு முறை இதைப் பார்க்க அனுமதி கொடுப்பீர்களா?' என்று கேட்டேன்.

"அவர் சிறிது யோசித்தபடி இருந்தார். அந்த ஒரு நிமிடத்தில் என் மூச்சு ஓடாமல் நின்றது. கடைசியில் என்ன நினைத்தாரோ 'சரி' என்று கூறிவிட்டார்.

"அன்றிரவு என் போராட்டம் ஆரம்பித்தது. கிழவனுக்கும் மீனுக்கும் நடந்தது போன்ற போராட்டம்; பீமனுக்கும் ஜராசந்தனுக்கும் நடந்த துவந்தயுத்தம் போன்று முடிவில்லாத ஒரு யுத்தம்.

"170 பக்கங்கள் கொண்ட ப்ரோகிராம் அது. நுணுக்கமாக, வரிவரியாக அதைச் சோதித்தபடியே வரவேண்டும். மூலை முடிக்கெல்லாம் தடவித் தடவி தேடிக் கொண்டே வருகிறேன். எங்கோ ஒரு மூலையில் அந்த தவறு ஒளித்திருந்துகொண்டு என்னைப் பார்த்தபடியே இருக்கிறது.

கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஜானகியை கரதலத்தில் கவர்ந்த காதல் உள்ளிருக்கம் என நினைந்து உடல்புகுந்து தடவியதோ ஒருவன் வாளி!

என்ற கம்பனுடைய பாடல் ஒன்று இருக்கிறது. ஜானகியைக் கவர்ந்த காதல் எங்கே ஒளிந்த்திருக்கிறது என்று ராவணுனுடைய உடலை கூரிய அம்பினால் ஒட்டை போட்டு, ஒட்டை போட்டு தடவிப் பார்க்கிறோம் ராமனுடைய பாணம். அதுபோலத்தான் எங்கேயோ ஒளிந்திருக்கும் அந்த பிழையைத் துருவித் துருவி தேடிப் பார்க்கிறேன். என் கண்ணுக்கு அது தென்படவே இல்லை.

"என் நண்பர்கள் என்னைப் பார்த்து பரிகசிப்பதுண்டு; கம்புயூட்டரை இயக்க முன் நான் வழக்கம்போல சொல்லும் ஸ்தோத்திரத்தைச் சொல்லி துதிக்கிறேன்:

மனிதனை உய்விப்பதற்காக அவதரித்த கம்புயூட்டரே! உனக்கு அநேக கோடி வணக்கங்கள்! உன்னுடைய விஸ்வரூபத்தின் முன் நான் சிறுதுளி. உன் பரிபூரண கடாட்சம், என் மீது பாயட்டும்! சகல கதவுகளையும் திறந்து உன் ரகஸ்யங்களை என் வசமாக்குவாயாக! உன் வாசலிலே புக அநுமதி கேட்டு நிற்கிறேன். நமஸ்காரம்! நமஸ்காரம்!

இப்படியாக அதை வணங்கி இயக்குகிறேன். அது கிர்ரென்ற சத்தத்துடன் உயிர் பெறுகிறது. தன் பரந்த உலகத்தை என் முன்னே விரிக்கிறது. ஒவ்வொரு கதவாகத்தட்டி விடையைத் தேடிக்கொண்டே வருகிறேன். விடையும் என் கைக்குள் சிக்காமல்தப்பிக் கொண்டே போகிறது.

"ஒரு நாள் அல்ல, இரண்டு நாள் அல்ல. பல நாட்கள் இப்படியாக பயனின்றி ஓடி விட்டன. கந்தோரிலிருந்து வந்ததும் நேராகப் போய் கம்புயூட்டரின் முன் இருந்து விடுவேன். இரவு இரண்டு மணி, மூன்று மணி வரை வேலை செய்வேன். களைத்துப் போய் அப்படியே படுத்து தூங்கியும் இருக்கிறேன். மறு நாளும் இது போலவே போய் விடும். ஆனால் அந்த ஒரு சதம் என் கைக்குள் அகப்படாமல் தப்பிக்கொண்டு வந்தது.

"நான் உண்பதில்லை; வடிவாக உறங்குவதில்லை. வேறு ஒன்றிலும் கவனமில்லை. என் புத்தியெல்லாம் இதிலேயே செலவழிந்தது. உன்மத்தம் என்று சொல்வார்களே, அப்படியான ஒருநிலைதான். கம்புயூட்டர் தேவதை என்னை உதாசீனப்படுத்தி அலைக்கழித்துக் கொண்டிருந்தாள்."

இந்த இடத்தில் சிவலிங்கம் கதையை நிற்பாட்டிவிட்டு மனைவி கொண்டு வந்து வைத்த காபியை சிறிது பருகினான்; பிறகு மறுபடியும் தொடர்ந்தான்:

"நாங்கள் கலாசலையில் படித்தபோது வேதியியல் பேராசிரியர் கூறியது உனக்கு ஞாபகமிருக்கிறதா? பென்சீனுடைய (Benzene) அணு அடுக்கு முறையைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் பட்டபாடு. அதிலும் பிரடெரிக் கேகுலே என்ற விஞ்ஞானி ஒன்றல்ல. இரண்டல்ல ஏழு வருடங்கள் இதற்காகப் போராடினார். எப்படித்தான் படம் போட்டாலும் ஆறு கார்பன் அணுக்களையும், அறு ஹைட்ரஜன் அணுக்களையும் விகிதமுறை தவறாமல் அவரால் அடுக்க முடியவில்லை.




 வம்ச விருத்தி - அ.முத்துலிங்கம் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக