புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_m10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_m10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
13 Posts - 25%
prajai
நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_m10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_m10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_m10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
Rutu
நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_m10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_m10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%
viyasan
நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_m10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_m10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
10 Posts - 83%
Rutu
நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_m10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_m10நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்தன வருட ராசி பலன்கள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 6:58 am

First topic message reminder :

நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Astrology_aniநந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Tamil_new_year2012

கணித்தவர் : `ஜோதிடக் கலைமணி' சிவல்புரி சிங்காரம்

நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Ariesநந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Taurusநந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Geminiநந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Cancerநந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Leoநந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Virgo
நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Libraநந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Scorpioநந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Sagittariusநந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Capricornநந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Aquariusநந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Pisces






நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 7:23 am


மகரம்

உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)


ஐந்தாமிடத்து குருபார்வை அமைத்து கொடுக்கும் புதுவாழ்க்கை!

மற்றவர்களின் கருத்தை ஒரு போதும் ஏற்காமல், தன் மனம் கூறும் திட்டப்படியே செயல்பட விரும்பும் மகர ராசி நேயர்களே!

`கர' வருடம் முடிந்து `நந்தன' வருடம் தொடங்குகிறது. வருடம் தொடங்கும் போது ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். சுக ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சூரியன் சஞ்சரிக்கிறார். இங்ஙனம் கிரகங்கள் உலா வரும் நிலையில் பிறக்கும் இந்த புத்தாண்டு பிரச்சினைகளை தீர்த்து வைக்குமா? பிறர் போற்றும் அளவிற்கு வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொடுக்குமா? என்றெல்லாம் நீங்கள் நினைக்கலாம்.

ஆவணி 27-க்கு மேல் உங்கள் எண்ணங்கள் எல்லாம் பூர்த்தியாகும் விதத்தில் கிரகங் களின் சஞ்சாரம் அமைந்து இருக்கிறது. அதுவரை சற்று பொறுமையையும், அமைதி யையும் கடைப் பிடிக்கும் சூழ்நிலை உருவாகிறது.

என்ன இருந்தாலும் ராசிநாதனாக சனி அமைந்து வக்ர இயக்கத்தில் இருக்கும்போது, எதிலும் முன்யோசனையுடன் ஈடுபடுவதே நல்லது.

அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், சில மாதங்களில் செவ்வாயும்-சனியும் ஒன்று கூடுவதாலும் உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. செவ்வாயின் துலாம் ராசி சஞ்சாரத்திற்கு பிறகே ஒவ்வொரு காரியங்களும் தடையின்றி நடைபெறும்.

கடமைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் நீங்கள்!

உங்கள் ராசிநாதன் சனியை `மந்தன்' என்று அழைப்பது வழக்கம். `மந்த கதி'யில் இயங்குவதால் `மந்தன்' என்று சொல்வார்கள். எனவே அதன் குணத்தை போல நீங்களும் எதையும் நிதானமாக செய்து முடிவில் வெற்றி பெறுவீர்கள். பழகுவதில் இனிமையாக இருந்தாலும் பேச்சில் கடுமை உண்டு.

கடமைக்கு முக்கியத்துவம் கொடுத்து உரிமைக்கு போராடுவீர்கள். திறமை உங்களுக்கு பளிச்சிடுவது நடுப்பங்கு வயதில் தான்.

உங்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கம் முதல் வைகாசி 3 வரை!

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே, ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லைகள் ஏற்பட்டு அகலும். செவ்வாயும் நீண்ட நாட்களுக்கு அஷ்டமத்திலேயே சஞ்சாரம் செய்கிறார்.

செவ்வாயின் ஆதிக்கம் துலாம் ராசிக்கு வரும் வரை சற்று பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. அதுவரை காரியங்களில் தாமதங்களும், கடமைகளை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கும் சூழ்நிலையும் ஏற்படலாம். துர்க்கை வழிபாடு துயரங்களை தீர்க்கும்.

குருப்பெயர்ச்சி விரயங்களை ஏற்படுத்துமா?

நவக்கிரகங்களில் சுப கிரகமாக விளங்குவது குருவாகும். அந்த குரு உங்கள் ராசியை பொறுத்தவரை 3, 12-க்கு அதிபதியாக விளங்குகிறார். சகாய ஸ்தானத்திற்கும், விரய ஸ்தானத்திற்கும் அதிபதியாக விளங்கும் குரு பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும்போது, சொத்து விற்பனையால் லாபத்தை கிடைக்க செய்வார். சொந்த-பந்தங்களின் கருத்து வேறுபாடுகள் அகலும்.

வரவு-செலவுகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வாரிசுகளுக்கு திருமணம் நடத்தி பார்க்கும் சூழ்நிலை உருவாகும். குருவின் ஆதிக்கம் சிறப்பாக செயல்பட குரு பகவான் கோவில் களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. விரயாதிபதியாக குரு விளங்குவதால், இந்த காலத்தில் கூடுதல் விரயங்களை கொடுக்க நேரிடலாம்.

வியாழ திசை, வியாழ புத்தி நடப்பவர்களும், வியாழக்கிழமை பிறந்தவர்களும் குரு ப்ரீதி செய்து கொள்வது நல்லது. அதோடு, ராகுவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிவதால் சர்ப்ப சாந்தியையும், குரு வாரத்தில் யோகம் தரும் நட்சத்திர நாளில் செய்தால் குழப்பங்களில் இருந்து விடுபட இயலும்.

குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு, 9, 11 ஆகிய இடங்களிலும் பதிவாகிறது. குருவின் பார்வை 1, 9, 11 ஆகிய இடங்களில் பதியும்போது, உடல் ஆரோக்கியத்தில் உள்ள குறைபாடுகள் அகல, மாற்று மருத்துவத்தை மேற்கொள்வது நல்லது. வெற்றிக் கனியை எட்டி பிடிக்க சில வாய்ப்புகள் வந்து அலைமோதும். கன்னி ராசியில் செவ்வாயும், உங்கள் ராசிநாதன் சனியும் இணையும் நேரத்தில் குருவின் பார்வை இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது.

சொத்து பிரச்சினைகள் சுமூகமாக முடியும். தந்தை வழியில் ஏற்பட்ட விரிசல்கள் அகலும். பகை பாராட்டாமல், கோபப்படாமல் பக்குவமாக நடந்து கொள்வதன் மூலம், பல காரியங்களை நீங்கள் முடித்து கொள்ள இயலும். குருவின் பார்வை பதினோராமிடத்தில் பதிவதால், பொருளாதார நிலை உயரும்.

செவ்வாய்-சனி சேர்க்கை காலம்!

வரும் நந்தன ஆண்டில் செவ்வாய், சனி சேர்க்கை காலம் தான் மிகவும் யோசித்து, அருகில் உள்ளவர்களிடமும், ஆன்மிக பெரியவர்களிடமும் ஆலோசனைகளை கேட்டு பக்குவமாக நடந்து கொள்ளவேண்டிய நேரமாகும்.

இரண்டு பகை கிரகங்கள் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடமான பூர்வ-புண்ணிய ஸ்தானத் தில் அல்லவா ஒன்று சேருகிறார்கள்.

எனவே, மனக்குழப்பம் அதிகரிக்கும். இருந்தாலும், குருவின் பார்வை இந்த கூட்டுகிரகத் தின் மீது பதிவதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது.

துயரங்களை போக்குமா துலாம் ராசி சனி!

உண்மையிலேயே துலாம் ராசியில் சனி சஞ்சரிக்கும் போது, துயரங்களை போக்கும். தொட்ட காரியங்களில் வெற்றி பெற வைக்கும். ஆவணி 27-ந் தேதி முதல் அற்புத பலன்கள் உங்களை தேடி வரப்போகின்றது. சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். அனுமன் வழிபாடு உங்களுக்கு ஆனந்தம் வழங்கும்.

வக்ர குரு வளர்ச்சியை கொடுக்குமா?

புரட்டாசி 26-ந் தேதி முதல் தை 24-ந் தேதி வரை ரிஷப ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். இந்த காலம் உங்களுக்கு நற்பலன்களை வழங்கும் காலம் என்றே சொல்ல லாம். காரணம் 3, 12-க்கு அதிபதியான குருபகவான் வக்ரம் பெறுகிறார். 12-க்கு அதிபதி வக்ரம் பெறும்போது, `கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற் கேற்ப தொட்ட காரியங்களில், திட்டமிடாது செய்தால் வெற்றி கிடைக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஓரளவே வெற்றி கிட்டும், சகோதர வழியில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு நல்ல முடிவிற்கு வரும்.

பாம்பு கிரக பெயர்ச்சி பக்கபலமாக இருக்குமா?

கார்த்திகை 17-ந் தேதி துலாம் ராசியில் ராகுவும், மேஷ ராசியில் கேதுவும் சஞ்சரிக்க போகிறார்கள். உங்கள் ராசியை பொறுத்தவரை 4, 9 ஆகிய இடங்களில் அரவு கிரகங்கள் சஞ்சரிக்கும் போது சில நல்ல மாற்றங்களை கொடுக்கும் என்றாலும் சுகக்கேடு களையும் கொடுக்கும்.

விலங்குகளாலும், விஷ ஜந்துக் களாலும் ஆபத்துக்கள் ஏற்பட்டு அகலும். கடன் சுமையால் சில சொத்துக்களை விற்க நேரிடலாம்.

குறிப்பிட்ட ஸ்தலங்களில் சர்ப்ப சாந்திகளை முறையாக செய்து, ராகு- கேதுக்களை திருப்திப்படுத்தினால் தான் செயல்பாடுகளில் இருந்த தாமதம் அகலும். திடீர் தாக்குதல்களில் இருந்து விடுபடுவீர்கள்.

வக்ர சனியால் வளர்ச்சி ஏற்படுமா?

சித்திரை 1-ந் தேதி முதல் ஆனி 6-ந் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ந் தேதி முதல் பங்குனி 31-ந் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் ராசிநாதனாகவும், தனாதிபதியாகவும் சனி விளங்குகிறார். எனவே, எதை யும் யோசித்தும், பூஜித்தும் செய்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் மீண்டும் பழைய பிரச்சினை தலைதூக்கலாம். குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். கொள்கை பிடிப் போடு செயல்பட இயலாது. கடுமையாக முயற்சித்தும் கடைசி நேரத்தில் சில காரியங்கள் கைநழுவி போகலாம்.

இதுபோன்ற வக்ர காலத்தில் வள்ளல்களின் உதவியாலோ, வங்கிகளின் உதவியாலோ கடன் பெற்று வீடு கட்டுதல் போன்ற சுபச்செலவுகளை மேற்கொள்ளலாம். உறவினர் பகை ஏற்படாமல் பார்த்து கொள்வது நல்லது. எள் தீபம் ஏற்றி, இரு கரம் கூப்பி சனிபகவானை வழிபடுவதுதான் சாலச்சிறந்தது.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!

சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று சனிபகவானை வழிபட்டு வருவதோடு, யோக பலம் பெற்ற நாளில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கும் சென்று வயதிற்கேற்ற மாலை அணிவித்து வழிபாடு செய்து வாருங்கள். சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில் உள்ள சொற்கோட்ட விநாயகரையும் வழிபட்டு சொல்லை செயலாக்கி காட்டுங்கள்.

மங்கையர்களுக்கான மகத்தான பலன்கள்!

நந்தன வருடம் மகர ராசியில் பிறந்த பெண்களுக்கு வருட தொடக்கத்திலேயே ராசிநாதன் சனி வக்ரம் பெறுவதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். எதையும் குடும்ப பெரியவர்களை கலந்து ஆலோசித்து செய்வதுதான் நல்லது. கோபத்தை குறைத்து கொள்ளுங்கள். விரயங்கள் அதிகரிக்கும் வருடமாகவே இந்த வருடம் இருக்கிறது. ஆவணி மாதம் வரை செவ்வாயின் ஆதிக்கமும், சனியின் ஆதிக்க மும் சிறப்பான நிலையில் இல்லை. எனவே பொறுமையை கடைப்பிடித்து பெருமையை காண்பது நல்லது. ஆவணிக்கு பிறகு உங்கள் எண்ணங்கள் ஈடேறும். எதிர்பாராத திருப் பங்கள் உருவாகும். பொன்னான வரன்கள் வந்து சேர்ந்து புதிய வாழ்க்கை மலரும். உத்தியோகஸ்தர்களுக்கு உன்னத பதவி வாய்க்கும். அத்தியாவசிய பொருட்களையும், ஆடம்பர பொருட்களையும் வாங்கி சேர்ப்பீர்கள். அடுத்தவர்களுக்காக வாங்கி கொடுத்த தொகையும் வந்து சேரும். சர்ப்ப ப்ரீதிகளை முறையாக மேற்கொண்டால் தகுந்த வாழ்க்கை பாதை உருவாகும்.



நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 7:26 am


கும்பம்

அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)


சூரிய புதல்வன் மாறிவிட்டால் சுகங்கள் எல்லாம் தேடி வரும்!

`மக்கள் சக்தியே மகத்தான சக்தி' என்று நட்பு வட்டத்தை பெருக்கி கொள்ள பிரியப்படும் கும்ப ராசி நேயர்களே!

`கர' வருடம் முடிந்து `நந்தன' வருடம் தொடங்குகிறது. ஆண்டின் தொடக்கத்தில் அஷ்டமத்தில் சனி வக்ரம் பெறுகிறார். 6 க்கு அதிபதி சந்திரன் 11-ல் சஞ்சரிக்கிறார். பஞ்சம ஸ்தானாதிபதி புதன் நீச்சம் பெறுகிறார். சுக ஸ்தானாதிபதி சுக்ரன் மட்டும் சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார்.

எனவே சுகமும், சந்தோஷமும் வந்து சேரும். துடிப்போடு செயல்பட முற்படுவீர்கள். அஷ்டமத்து சனியின் வக்ர இயக்கம் உங்கள் செயல்பாடுகளில் தாமதத்தை உருவாக்கலாம்.

சனி வக்ரம் பெறுவது உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகளை கொடுக்கத் தான் செய்யும். மருந்து, மாத்திரைகளை அதிகம் உட்கொண்டு உடம்பை கெடுத்து கொள்ளாமல் தகுந்த மருத்துவ ஆலோசனைகளை கேட்டு குணப்படுத்தி கொள்வதே நல்லது. செவ்வாய் உங்கள் ராசியை பார்ப்பதால் சகோதர ஒற்றுமை பலப்படும். புதிய திருப்பங்கள் ஏற்பட்டாலும், வாகன மாற்றமும், இடமாற்றம், ஊர்மாற்றம், வீடு மாற்றங்கள் போன்றவை வாயில் தேடி வருவதற்கான சூழ்நிலை உண்டு.

அஷ்டமத்து சனிக்கு பரிகாரமாக திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, பெரிச்சிக்கோவில் போன்ற ஸ்தலங்களுக்கும் சென்று முறையாக அன்னதானம், வஸ்திர தானம், சொர்ண தானம் ஆகியவற்றை கொடுத்து, சனி சந்நிதியில் கவசம் பாடி முறையாக வழிபட்டு வந்தால் முன்னேற்றங்கள் சிறப்பாக அமையும்.

ராகு-கேதுக்களுக்கும் ப்ரீதி செய்து, சர்ப்ப சாந்தி செய்வது நட்பை பலப்படுத்தும்.

சமூக சேவை செய்வதை லட்சியமாக கொண்டவர்கள்

சுறுசுறுப்பாக பணிபுரிபவர்கள் நீங்கள். எதையும் மாறுபட்ட குணத்தில் சிந்திப்பீர்கள். உங்கள் லட்சியம் உயர்வாக இருந்தாலும், பாதி வாழ்க்கைக்கு மேல்தான் பலன் கிடைக்கும். காரணம், உங்கள் ராசிநாதன் சனி ஆவார். பொது வாழ்வில் ஈடுபட்டு, பொறுப்புகளை ஏற்று, சமூக சேவை செய்யும் எண்ணம் உங்களுக்கு இயற்கையிலேயே இருக்கும்.

சாமர்த்தியசாலிகளாக நீங்கள் விளங்கினாலும், சனியின் ஆதிக்கம் அதிகரிக்கும் போது, ஏமாற்றத்தையும் சந்திக்க நேரிடலாம். சொந்த, பந்தங்களின் உறவை ஓரளவோடு வைத்து கொள்வீர்கள்.

குடும்ப ஸ்தானாதிபதியாக குருவும், சுகாதிபதியாக சுக்ரனும் இருப்பதால் இவை இரண்டின் அமைப்பை பொறுத்தே உங்களுக்கு வாழ்க்கை துணை அமையும். குரு, சுக்ர ஆதிக்கம் பார்த்து வரனை தேர்ந்தெடுத்தால் தான், வாழ்க்கை சிறப்பாக இருக்கும். உங்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும்? என்பதை பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கம் முதல் வைகாசி மூன்று வரை!

ஆண்டின் தொடக்கத்தில் அஷ்டமத்தில் சனி சஞ்சரிக்கிறார். சுகஸ்தானத்தில் கேது. எனவே ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. நீங்கள் நன்மை செய்வதாக நினைத்து செய்த காரியம் வேறுவிதமாக மாறலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திடீர் விரயங்கள் திக்கு முக்காட செய்யும். குடும்ப பெரியவர்களின் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்துங்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சநேயரையும், சனிபகவானையும் வழிபடுவதோடு பவுர்ணமி கிரிவலத்திலும் கலந்து கொள்ளுங்கள்.

வாகன யோகம் தரும் குருப்பெயர்ச்சி

நவக்கிரகங்களில் நல்லவர் என்று அழைக்கப்படுவர் குருபகவான். அவர் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சஞ்சரித்து அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிக்கிறார். இதன் விளைவாக, பழைய வாகனங்களை பழுது பார்க்கும் சூழ்நிலையோ, புதிய வாகனங்கள் வாங்கி மகிழும் வாய்ப்போ கிடைக்கும். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை.

2, 11-க்கு அதிபதியாக குரு விளங்குவதால், தனவரவில் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். பழகிய கூட்டாளிகளே ஏமாற்றி விட்டார்களே என்று கவலைப்படுவீர்கள். இந்த காலத்தில் குரு திசை, குரு புத்தி நடப்பவர்கள், வியாழக்கிழமை பிறந்தவர்கள், அர்த்தாஷ் டம குருவிற்கு உரிய பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது.

குரு, கேதுவுடன் கூடியிருப்பதால் சர்ப்ப தோஷ பரிகாரங்களும், ராகு-கேது ப்ரீதியும் செய்வதன் மூலமே நீங்கள் தொல்லைகளில் இருந்து அகல முடியும்.

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. இதன் விளைவாக, சென்ற வருடத்தில் ஏற்பட்ட தொழில் இழப்புகளை ஈடுகட்ட புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்போடு கூட்டு முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். மாமன், மைத்துனர் வழியில் மங்கல நிகழ்ச்சிகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வி.ஆர்.எஸ். பெற்றுக்கொண்டு, விரும்பிய துறையை தேர்ந்தெடுத்து, முன்னேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர்.

செவ்வாய்-சனி சேர்க்கை காலம்!

ஆனி 9-ந் தேதி முதல் ஆடி 29-ந் தேதி வரை உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் செவ்வாயும், சனியும் இணைகிறார்கள். இது அவ்வளவு நல்லதல்ல. இதுபோன்ற காலங்களில் எதையும் பலமுறை யோசித்து செய்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு தொல்லை வரலாம். பெற்றோர் வழியில் மனக்கசப்பு தரும் செய்திகள் வரலாம்.

அங்காரக வழிபாடும், காக வாகனத்தான் வழிபாடும் அன்றாட வாழ்க்கையை நன்றாக அமைத்து கொடுக்கும்.

துயரங்களை போக்குமா துலாம் ராசி சனி!

ஒன்பதில் சஞ்சரிக்கும் சனி ஒளிமயமான எதிர்காலத்திற்கு வித்திடப்போகிறார். பொன், பொருள்கள் உங்களுக்கு சேரும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாகும். அத்தனைக்கும் மேலாக, பொருளாதார நிலை ஒரு படி உயர்ந்து உன்னத நிலையை கொடுக்கும். அந்த நிகழ்வு ஆவணி 27-ல் நிகழவிருக்கிறது.

வக்ர குரு வளர்ச்சியை கூட்டுமா?

புரட்டாசி 26-ந் தேதி முதல் தை 24-ந் தேதி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியை பொறுத்தவரை வக்ரம் பெறுவது நல்லதல்ல. குடும்பத்தில் குழப்பங்கள் அதிகரிக்கும். தன லாபம் வருவதில் தடைகள் உருவாகலாம்.

பயணங்களை திடீர் திடீரென மாற்றி அமைப்பீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் இட மாற்றம், ஊர் மாற்றங்கள் வரலாம். இல்லம் கட்டி குடியேறுவதிலும் தாமதம் ஏற்படும்.

பாம்பு கிரகங்களின் பெயர்ச்சி பக்கபலமாக இருக்குமா?

கார்த்திகை 17-ந் தேதி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் கேதுவும், ஒன்பதாமிடத்தில் ராகுவும் சஞ்சரிக்க போகிறார்கள். இதன் விளைவாக, பூர்வீக சொத்துக்களில் லாபம் கிடைக்கும்.

மூன்றில் சஞ்சரிக்கும் கேது முன்னேற்றத்தில் சில முட்டுக்கட்டைகளை கொடுக்கலாம். குறிப்பாக, சகோதரர்கள் சச்சரவுகளை கொடுக்கலாம். பஞ்சாயத்துக்கள் பாதியிலேயே நிற்கலாம். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் வரும். கோவில் காரியங்களில் ஈடுபாடு செலுத்துவீர்கள்.

புற்று கோவில்களுக்கும், புராதன கோவில்களுக்கும் சென்று சர்ப்ப சாந்தியை செய்தால் அற்புதமான வாழ்க்கை அமையும்.

வக்ர சனியால் வளர்ச்சி ஏற்படுமா?

சித்திரை 1-ந் தேதி முதல் ஆனி 6-ந் தேதி வரையிலும், பிறகு மாசி 4-ந் தேதி முதல் பங்குனி 31-ந் தேதி வரையிலும் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் ராசிநாதனாகவும், பனிரெண்டுக்கு அதிபதியாகவும் சனி விளங்குகிறார். பனிரெண்டுக்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மை தான். `கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்' என்பதற்கேற்ப, திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திறமை மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து உதவிக்கரம் நீட்டுவர். `வெற்றி' என்ற மூன்றெழுத்தை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள். வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும்.

அதே நேரத்தில் ராசிநாதனாகவும் சனி விளங்குவதால், திடீரென உடலில் நோய்கள் தோன்றலாம். எனவே மருத்துவ ஆலோசனைகளை பெற ஒரு தொகையை செலவிடும் சூழ்நிலை உருவாகும். இந்த காலத்தில் திருநள்ளாறு, பெரிச்சிக்கோவில் போன்ற ஸ்தலங்களுக்கு சென்று சனிபகவானை வழிபடுவதோடு, வார வழிபாடாக அனுமன் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!

சனிக்கிழமை தோறும் அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று சனீஸ்வர வழிபாட்டையும், அனுமன் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். சிறப்பு வழிபாடாக கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோவிலுக்கு சென்று அங்குள்ள விஷ்ணுவையும், இலக்குமியையும், மாருதியையும் வழிபட்டு வாருங்கள், வளர்ச்சி கூடும்.

மங்கையர்களுக்கான மகத்தான பலன்கள்!

நந்தன வருடம் கும்ப ராசியில் பிறந்த பெண்களுக்கு, வருட தொடக்கத்தில் அஷ்டமத்து சனியின் ஆதிக்கம் இருப்பதால், எதையும் திட்டமிட்டு செய்ய இயலாது. திடீர், திடீரென குணங்கள் மாறலாம். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகள் பாதியிலேயே நின்று போகலாம். பெரியவர்களின் ஆலோசனைகளை அங்கீகரித்து கொள்வது நல்லது. மக்கட் செல்வங்களால் மனக்கவலை அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்து செல்வ தன் மூலமே ஒற்றுமை பலப்படும். குரு பெயர்ச்சிக்கு பின்னால் தாய் வழி பகைகள் உருவாகலாம். ராகு, கேது பெயர்ச்சிக்கு பிறகு நல்ல காரியங்கள் இல்லத்தில் நடை பெறுவதற்கான அறிகுறி தோன்றும். சனி மற்றும் புதன் திசை, புத்தி நடப்பவர்கள் தக்க பரிகாரத்தை செய்து கொண்டால், வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும்.



நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 11, 2012 7:28 am


மீனம்

பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)


வழிபாட்டால் வளர்ச்சி வரும் வரவும்- செலவும் சமமாகும்!

வெற்றிக்குரிய வழியை கையாள, மற்றவர்கள் மனதைப் புண்படுத்தாமல் பேசும் மீன ராசி நேயர்களே!

`கர' வருடம் முடிந்து `நந்தன' வருடம் தொடங்குகிறது. பிறக்கும் நந்தன சனியின் பார்வையோடும், ஆறாமிடத்துச் செவ்வாயின் ஆதிக்கத்தோடும் பிறக்கிறது. பார்க்கும் சனியினால் நமக்கு நல்ல பலன்கள் கிடைக்குமா? வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகுமா? என்றெல்லாம் வருடம் பிறக்கும் முன்னதாகவே உங்கள் மனதில் எண்ணங்கள் பிறந்து விடும்.

இந்த ஆண்டு ராகு- கேது பெயர்ச்சிக்கு பின்னால், ஓரளவு நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. வந்த அஷ்டமத்துச் சனி மீண்டும் கண்டகச் சனியாகி மீண்டும் அஷ்டமத்துச் சனியாகி ஆண்டு முழுவதும் சஞ்சரிக்கப்போகிறார். எனவே, வருமானத்தை விட இரு மடங்குச் செலவு, வாழ்க்கைத் துணையோடு சச்சரவு, இருமணம் இணையும் திருமணத் தில் தாமதம், என்ற நிலை உருவாக வாய்ப்பு உண்டு.

இருப்பினும், எந்தக் கிரகத்தையும் நாம் துதிப்பாடல்கள் பாடி, வழிபாடுகளைச் செய்தால் அதன் மந்த நிலை மாறும். சனிக்கிழமையன்று ஓரிருவருக்காவது அன்ன தானம் செய்வது நல்லது.

உங்கள் ராசி நாதன் குருவும் இந்த ஆண்டு வக்ரம் பெறுகிறார். எனவே, அந்த வக்ர இயக்கம் வளமாக அமைய, திசை மாறிய தென்முகக் கடவுள் இருக்கும் ஆலயங்களை நோக்கி அடியெடுத்து வையுங்கள். வசைப்பாடுபவர்களைக் கண்டால், விலகிச் செல்லுங் கள். வார்த்தைகளை அளந்து பேசுவதும் வாய்ப்புகளை உபயோகப்படுத்திக் கொள்வதும் உங்கள் புத்திசாலித்தனமாகும்.

மதியுகத்தால் மகிழ்ச்சியை வரவழைத்துக் கொள்பவர்கள்

விருந்தினர்களை உபசரிப்பதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை. சான்றோர்களையும், ஆன்றோர்களையும் அதிகம் பழகி வைத்திருப்பீர்கள். திடீர் கோபமும் உங்களுக்கு வரும். தித்திக்கப் பேசும் நல்ல குணமும் உங்களுக்கு உண்டு.

தர்ம சிந்தனை மிக்க உங்களுக்கு குடும்ப ஸ்தானாதிபதியாக செவ்வாயும், களத்திர ஸ்தானாதிபதியாக புதனும் இருக்கிறார்கள். இந்த இரு கிரகங்களின் அமைப்பைப் பொறுத்தும் தான் உங்களுக்கு வாழ்க்கைத் துணை அமைகிறது.

உங்களுக்கு இந்தப் புத்தாண்டு எப்படியிருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கம் முதல் வைகாசி 3 வரை

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசியை வக்ரச் சனி பார்க்கிறார். செவ்வாய், சூரியன் பரிவர்த்தனையில் இருக்கிறார்கள். எனவே காரியங்கள் கடைசி நேரத்திலேயே கைகூடக் கூடிய வாய்ப்பு உண்டு. பொருளாதாரம் போதுமானதாக இருந்தாலும், விரயங்கள் அதிகரிக் கும். இன்று ஒரு ஊர், நாளை ஒரு ஊர் என்று பயணித்துக் கொண்டேயிருப்பீர்கள். கேது பலத்தால் சகோதர சச்சரவுகள் மேலோங்கும். பொதுவாகவே இந்த ஆண்டில் மீண்டும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் வரப்போவதால், கூடுதல் கவனம் தேவை.

வெற்றிகள் தரும் குருப்பெயர்ச்சி

நவக்கிரகங்களின் நல்ல பலனைக் கொடுப்பவர் குரு பகவான். அவர் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். மூன்றாமிடம் சகாய ஸ்தானமாகும் ராசி நாதனாகவும், பத்துக்கு அதிபதியாகவும் விளங்கும் குரு பகவான் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, நல்ல பலன்களை அள்ளி வழங்குவார். குறிப்பாக, தொழில் வளர்ச்சி மேலோங்கும்.

`மன்னவன் மூன்றில் நிற்க, மாபெரும் மாற்றம் தோன்றும், எண்ணிய காரியங்கள், எல்லாமே வெற்றி பெறும்' என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் வெற்றிக்குரியதாக இருக்கும். உதாசீனப்படுத்தியவர் கள் உங்களோடு வந்திணைவர். சகோதர வழி சச்சரவுகள் மாறும். இருப்பினும், குரு ப்ரீதியும், திசை மாறிய தென்முகக் கடவுள் வழிபாடும் உங்கள் வாழ்க்கையை முன் நோக்கிச் செல்ல வைக்கும்.

மூன்றில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிவாகிறது. அதன் பார்வை பதியும் இடமெல்லாம் புனிதமாகின்றன. எனவே, உங்கள் கல்யாண கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.

தந்தை வழி உறவில் வைத்த பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவிற்கு வரும். தானே முன்நின்று சில விழாக்களை நடத்திப் பார்ப்பீர்கள். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர்.

லாப ஸ்தானத்தில் குருவின் பார்வை பதிவதால், நீங்கள் என்ன தொழில் செய்தாலும் அதில் ஏற்றம் கிட்டும். அரசு வழிச் சலுகைகள் கிடைக்கும். வருடக் கடைசியில் சேமிப்பும் உயர்ந்து செல்வந்தர்களின் பட்டியலில் இடம் பெறும் வாய்ப்பும் உருவாகலாம். பிள்ளைகளுக்காக தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்கிச் சேர்க்க முன் வருவீர்கள்.

செவ்வாய்- சனி சேர்க்கை காலம்

ஆனி 9-ம் தேதி முதல் ஆடி 29-ம் தேதி வைர உங்கள் ராசிக்கு 12-ல் செவ்வாயும், சனியும் ஒன்று கூடுகிறார்கள். இது அவ்வளவு நல்லதல்ல. குடும்பப் பிரச்சினைகள் தலைதூக்கலாம். கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுவது நல்லது. நோயில் இருந்து விடுதலை கிடைத்தாலும் பழைய உடல்நிலையை பெற இயலாது. யோசித்துக் கையெழுத்திடுவது நல்லது. மனக்குழப்பம் அதிகரிக்கும்.

இக்காலம் பொற்காலமாக இருபத்து நான்கு மணி நேரத்தில் ஏதாவது ஒரு அரை மணி நேரமாவது வழிபாட்டிற்கென்று ஒதுக்க வேண்டும். கந்தன் வழிபாடும் மந்தன் வழிபாடும் உங்கள் துயரங்களைப் போக்கும்.

துயரங்களைப் போக்குமா துலாம் ராசிச்சனி

ஆவணி 27-ம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 8-ல் சனி உலா வரப்போகிறார். அஷ்டமத்துச் சனி கஷ்டப்படுத்துமே என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அடுக்கடுக் காகச் சுப காரியங்களைச் செய்ய வைக்கும். அந்நிய தேசப்பயணங்கள் எண்ணியபடி கைகூடும்.

மாற்று இனத்தவர்கள் உங்கள் மகத்தான பணிக்கு ஒத்துழைப்புச் செய்ய முன் வருவர். கரைந்த சேமிப்புகளை மீண்டும் ஈடு செய்வீர்கள். அலுவலகப் பணியில் இருப்பவர் களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பொறுப்புகள் மாறும்.

வக்ர குரு வளர்ச்சியைக் கொடுக்குமா?

புரட்டாசி 26-ம் தேதி முதல் தை 24-ம் தேதி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியைப் பொறுத்த வரை ராசிநாதனாகவும், 10-க்கு அதிபதியாகவும் விளங்கும் குரு வக்ரம் பெறுவது ஒருவழிக்கு நன்மை தான் என்றாலும், ராசி நாதன் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்படும்.

மேலதிகாரிகளின் அனுசரிப்புக் குறையும். திடீர் இடமாற்றம், இலாகா மாற்றம் திகைக்க வைக்கும். வாயில் தேடி வந்த வரன்கள் விட்டுப் போகலாம். எனவே இக்காலத்தில் குரு வழிபாட்டை முறையாகச் செய்வதோடு, யோகபலம் பெற்ற நாளில் வைரவர் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லது.

பாம்புக் கிரகப் பெயர்ச்சி பக்கபலமாக இருக்குமா?

கார்த்திகை 17-ம் தேதி 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இந்த அஷ்டமத்து ராசி அலைச்சலைக் கொடுத்தாலும் ஆதாயத்தையும் சேர்த்து கொடுக்கும். பிற இனத்தாரின் ஒத்துழைப்போடு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். 2-ல் கேது இருப்பதால் யாருக்கும் வாக்கு கொடுக்கும் முன் ஒரு கனம் யோசிப்பது நல்லது.

சர்ப்ப சாந்தி ஹோமங்களைச் செய்தால் அரவு கிரகங்கள் அற்புதப் பலன் தரும்.

வக்ர சனியால் வளர்ச்சி ஏற்படுமா?

சித்திரை 1-ம் தேதி முதல் ஆனி 6-ம் தேதி வரை பிறகு மாசி 4-ம் தேதி முதல் பங்குனி 31-ம் தேதி வரை சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். உங்கள் ராசி அடிப்படையில் 11, 12 ஆகிய இடங்களுக்கு சனி அதிபதியாக விளங்குகிறார். 12-க்கு அதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். `கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜ யோகம்' என்பதற்கேற்ப நல்ல பலன்கள் நடைபெறும். பதவி உயர்வு, இடமாற்றம், எதிர்பார்த்தபடி வந்து சேரும். அதிகாரிகளின் அன்பும், அரவணைப்பும் கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

வங்கிக் கடன்களைக் கொடுத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். லாபாதிபதியாகவும் சனி விளங்குவதால், அதன் வக்ர காலத்தில் பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். வட்டி கட்டும் சூழ்நிலையை உருவாக்கி விடும். கமிஷன் அடிப்படைத் தொழில் புரிவோர் உடனுக்குடன் வரவு செலவுகளைப் பார்த்துக் கொள்வது நல்லது.

வருடம் முழுவதும் வசந்தம் வர வழிபாடு!

வியாழக்கிழமை தோறும் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்று தென்முகக் கடவுளை இன்முகத்தோடு வழிபட்டு வருவது நல்லது. தஞ்சை மாவட்டம் திருக்கடையூருக்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று கள்ள வாரணப் பிள்ளையார், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மனையும் வழிபட்டு வந்தால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையும்.

மங்கையர்களுக்கான மகத்தான பலன்கள்!

நந்தன வருடம் மீன ராசியில் பிறந்த பெண்களுக்கு குடும்ப பொறுப்புகள் கூடும். கொடுக்கல், வாங்கல்களில் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. சனியின் பார்வையில் சில வாய்ப்புகள் கைநழுவிப் போகலாம். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்பட விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியமாகும். நினைத்த போது விரும்பிய பொருளை வாங்கி மகிழும் வாய்ப்பு ராகு - கேது பெயர்ச்சிக்குப் பின்னால் உருவாகும். எந்த செயலையும் நிதானத்தோடு செய்யுங்கள். குல தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு செலுத்துங்கள். தோழியர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் உங்களிடமே வந்து சேரலாம். பொறுமையைக் கடைப்பிடிப்பதோடு, குடும்ப உறுப்பினர்களையும் அனுசரித்துச் சென்றால்தான் நந்தன ஆண்டு நல்ல ஆண்டாக அமையும்.



நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 11, 2012 11:09 am

பகிர்வுக்கு மிக்க நன்றி தல



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Apr 11, 2012 11:20 am

பகிர்வுக்கு நன்றி அண்ணா



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Scaled.php?server=706&filename=purple11
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 11, 2012 11:24 am

பகிர்விற்கு நன்றி .... சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி

கும்ப ராசிக்கு எப்படி இருக்கு ஜோசியரே...

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Apr 11, 2012 11:26 am

நன்றி தல மகிழ்ச்சி




நந்தன வருட ராசி பலன்கள் - Page 2 Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக