புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
76 Posts - 45%
ayyasamy ram
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
75 Posts - 45%
mohamed nizamudeen
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 2%
eraeravi
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
Kavithas
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
சிவா
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
bala_t
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%
prajai
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
306 Posts - 43%
heezulia
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
293 Posts - 41%
Dr.S.Soundarapandian
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
6 Posts - 1%
prajai
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%
manikavi
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்!


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 12:54 am

First topic message reminder :

நக்கீரன்


தமிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்கள் இரண்டொன்றைச் செவி மடுத்திருப்பார்கள்.

நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!


திரைப்படத்திலும் வந்து சக்கை போட்ட பாடல் இது. இதை இயற்றியவர் பாம்பாட்டிச் சித்தர்.

பதினெண் சித்தர்கள் என்பது மரபு. ஆனால் அவர்கள் யார் யார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. அதனால் பதினெட்டுக்கும் மேற்பட்ட சித்தர்கள் பெயர்கள் காணப்படுகின்றன.

ஒரு பழம்பாடல் பதிணென் சித்தர்களது பெயர்களை வரிசைப்படுத்துகிறது.

நந்தி, அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீரர்
நற்றவத்துப் புலத்தியர் பூனைக் கண்ணனார்
இடைக்காடர், போகர், புலிக்கையீசர்,
கருவூரார், கொங்கணர், காலாஞ்சி
எழுகண்ணர். அகப்பேய், பாம்பாட்டி
தேரையர், குதம்பையர், சட்டைநாதர்


இந்தச் சித்தர்கள் யார்? அவர்களது வரலாறு என்ன? இவை பெரிதும் மூடு மந்திரமாகவே இருக்கின்றன.

இவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் அதிகம் இல்லை. மாறாக அவர்களைப் பற்றிய செவிவழி கதைகளே மிஞ்சி நிற்கின்றன. இவர்களது காலம் 10 ஆம் நூற்றாண்டுக்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகிறது. திருமூலர் காலம் 10 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.

சித்தர்களால் பாடப்பெற்ற பெரிய ஞானக் கோவை என வழங்கும் சித்தர் பாடல்களின் தொகுப்பு நூல் ஒன்றும் சில மருத்தவ நூல்களும் மட்டுமே இன்று கிடைக்கின்றன. பல பாடல்களும் நூல்களும் மறைந்து விட்டன. இருந்தும் இன்னும் அச்சில் வராத ஏட்டுச் சுவடிகள் ஆயிரக் கணக்கில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சித்து அல்லது சித்தி என்றால் ஆற்றல், வெற்றி, கைகூடல் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. ஒருவர் அசாதாரண செயலைச் செய்தால் அவர் சித்து விளையாட்டு செய்கிறார் என்பது பொருள். ஒருவர் தேர்வில் சித்தி எய்திவிட்டார் என்றால் அவர் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார் என்று பொருள். போன காரியம் சித்தி என்றால் போன வேலை கைகூடிவிட்டது என்று பொருள்.

எனவே சித்தர்கள் என்றால் பேராற்றல் படைத்தவர்கள் என்று பொருள். பொதுவாக அட்டமா சித்திகள் (எண்வகை ஆற்றல்) கைவந்தவர்களே சித்தர்கள் எனப்படுகிறார்கள்.
மகாகவி பாரதியார் கூட தன்னை ஒரு சித்தர் என்று சொன்னார்.

எனக்கு முன்னே
சித்தர் பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன்
இந்த நாட்டில்


என்கிறார். மேலும் தாம் இயற்றிய புதிய ஆத்தி சூடியில் சித்தர் பாணியில்-

அச்சம் தவிர்
ஏறுபோல் நட
தெய்வம் நீ என்றுணர்
நினைப்பது முடியும்


என அடித்துச் சொல்கிறார்.

தமிழ்ச் சித்தர்கள் மருத்துவம், புவியியல், மந்திரம், தந்திரம், ஞானம், யோகம், இரசவாதம் பற்றி பாடல்கள் பாடியுள்ளார்கள். ஆனால் சமுதாயத்தைப் பற்றி யாரும் தனி நூல் இயற்றவில்லை. ஆயினும் அனைத்துச் சித்தர் பாடல்களில் சமுதாய சீர்திருத்த மறுமலர்ச்சிக் கருத்துக்கள் மிகுந்திருப்பதைக் காணலாம்.

தமிழ்ச் சித்தர்களது சித்த மருத்துவம் புகழ்பெற்றது. சித்த மருத்துவத்தில் செடி, கொடி, கனி, கிழங்கு, வேர், பட்டை போன்றவற்றில் இருந்து மட்டும் அல்லாது தங்கம், உப்பு, பாதரசம் (mercury) போன்ற உலோகங்களில் இருந்தும் நவ பாஷாணங்களில் இருந்தும் மருந்து தயாரிகப்படுகிறது.

தமிழ்ச் சித்தர்கள் பக்தி மார்க்கத்தைப் பின்பற்றாது குண்டலினி யோக மார்க்கத்தைப் பின்பற்றினார்கள். உயிர் மட்டுமல்ல. உடலும் நித்தியமானது என்பது இவர்கள் கோட்பாடு. .

சாதி மத பேதத்தை கடுமையாகக் கண்டித்தார்கள். மனித குலம் ஒன்று. தேவனும் ஒன்றே என்றார்கள்.

சைவ சித்தாந்தத்தில் உள்ள சரியை கிரியை இரண்டையும் கண்டித்தார்கள். உருவ வழிபாட்டைச் சாடினார்கள். சுரண்டலையே குறியாகக் கொண்ட பிராமணீய சடங்குகளைக் கடுமையாக எதிர்த்தார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:46 am

'நீ போரில் கொல்லப்பட்டால் சொர்க்கம்! வெற்றி பெற்றால் இராஜயோகம்! ஆகவே போர் செய்யத் துணிந்துவிடு. எழுந்து நில்! (பாரதியார் உரை - அத்.1 - 37) எனப் போர் செய்ய மறுக்கும் அருச்சுனனை போர் செய்ய வைத்த பகவானின் உபதேச நூல்!

பகவத்; கீதைக்கு அருளுரை வழங்கிய அதே சங்கராச்சாரியார்தான் இப்போது காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் என்பவரை பட்டப்பகலில் கூலிப்படை வைத்து வெட்டிக் கொலை செய்தது, கொலைக்கு சதி, சாட்சியங்களை அழித்தது மற்றும் சென்னை இராதாகிருஷ்ணன். மற்றும் அவரது மனைவி ஆகியோரை அதே கூலிப்படையை வைத்து இரண்டாண்டுகளுக்கு முன்னர் (செப்தெம்பர் 2002) கொலை முயற்சி செய்தது ஆகிய வழக்குகளில் முதல் எதிரியாக குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

மண், பெண், பொன் என்ற மூவாசையையும் ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலங்களையும் துறந்து சந்நியாசம் மேற்கொண்ட அவர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச் சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.

'மக்களனைவரும் தங்களுக்குண்டான கடமைகளைச் செய்து அதன் பலனை பகவானுக்குச் சமர்ப்பித்துவிட்டால் அவர்களுக்கு நல்லருளும், இன்பமான வாழ்க்கையும் அமையும்' எனச் சொல்லி சங்கராச்சாரியார் தனது அருளுரையை முடிக்கிறார்.

இப்போது 'கண்ணன் காட்டிய வழியில் கடமையைச் செய்துவிட்டு' அதன் பலனை பகவானுக்கு சமர்ப்பிக்க முடியாமல் அவரே வேலூர் சிறையில் அதை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்!

போரினால் குல நாசம் ஏற்படும் என்றும், குல நாசத்தால் குல தர்மம் அழியும் என்றும், குல தர்மம் அழிவதனால் குலப் பெண்கள் கெட்டுப் போகிறார்கள் என்றும், குல மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பம் உண்டாகிறது என்றும் அருச்சுனன் கேள்வி எழுப்புகிறான். (அத். 1 -39,40,41)

அருச்சுனன் குறிப்பிடும் வர்ணக் குழப்பம் என்ன? போரின் போது படை வீரர்கள் பகை நாட்டுக்குள் புகுவார்கள். பெண்கள் கற்பழிக்கப் படுவார்கள். பெண்களைக் கற்பழிக்கும் போது சாதி வேற்றுமை பார்த்து கற்பழிக்கப்படுவதில்லை. அதனால் கற்பழிப்பால் கற்பம் அடையும் பெண்களுக்குப் பிறந்த பிள்ளைகளை இன்ன வர்ணம்தான் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது.

இதனைத்தான் அருச்சுனன் வர்ணக் குழப்பம் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறான்.

எனவே கீதையில் கையாளப்படும் வர்ண தர்மம் என்பது பிறப்பால் ஏற்படும் சாதியேதான் என்பது துலாம்பரமாகத் தெரிகிறது. எத்தனை கண்ணதாசர்கள் வந்தாலும் அந்த பச்சை உண்மையை மறைக்க முடியாது.

கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. அவர் அர்த்தத்தோடுதான் கண்ணதாசன் என்ற புனைபெயரை தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆயர்பாடி கண்ணனைப் போலவே வாழ்ந்தார்.

கண்ணதாசன் அருமையான கவிஞர். வண்ணத் தமிழும், நல்ல கற்பனையும், வர்ணனையும் கைவரப்பெற்றவர். ஆனால் அவர் ஒரு பக்திவியாபாரி. பக்தியைக் பாடலாகவும் நூல்களாகவும் எழுதி பணம் சம்பாதித்தவர். 'அர்த்தமுள்ள இந்து மதம்' என்ற தலைப்பில் பத்துப் பாகங்கள் எழுதியுள்ளார். பகவத் கீதைக்கும் உரை எழுதியுள்ளார்.

'ஒரு கோப்பையில் என் குடியிருப்பு கோலமயில் என் துணையிருப்பு' என்பது அவர் எழுதிய திரைப்பாடல் மட்டுமல்ல. அவரது சொந்த வாழ்க்கை அனுபவமும் அதுதான். மூன்று மனைவியர்களை மணந்து கொண்டவர். குடி, கூத்தி என்று தலைதெறிக்க ஆடி ஓடி அலைந்து தனது 55 அகவையில் அடங்கியவர்.

அருணகிரிநாதராவது சிவப்பு விளக்கே கதியெனக் கிடந்து பின் திருந்தியவர். கவிஞர் கண்ணதாசன் கடைசிவரை திருந்தவே இல்லை.

கவிஞர் கண்ணதாசனுக்கு அர்த்தமுள்ள இந்துமதம் எழுதுவதற்கு என்ன தகுதி உண்டு எனச் சிலர் கேட்கலாம்.

அவருக்கு எல்லாத் தகுதியும் உண்டு. ஒழுக்கத்துக்கும் இந்து மதத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

'எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண் புகு! எல்லப் பாவங்களின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன்! துயரப்படாதே!' ( அத் 18 -66)

ஒருவன் கொலைகாரனாக இருக்கலாம், குடிகாரனாக இருக்கலாம், கூத்திக்காரனாக இருக்கலாம். அடுத்த வீட்டுக்காரன் மனைவியை கடத்திக் கொண்டு போனவனாக இருக்கலாம், அறம் எதுவும் செய்யாதவனாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் கடவுளை சரண் புகுந்தால் போதும்! பக்தி செய்தால் போதும்! அவன் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுவிக்கப்படுகிறான்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:46 am

இதையே கோயில்களிலும் தேவாலயங்களிலும் மசூதிகளிலும் நாளும்பொழுதும் நாம் பார்க்கிறோம்!

ஒழுங்கம் கெட்டவர்கள்தான் இந்து மதத்தில் இந்திரன் சந்திரன் எனப் போற்றப்படுகிறார்கள். இந்துமதக் கடவுளர் அதற்கு வழிகாட்டியாக இருந்திருக்கிறார்கள்.

இத்தகைய கீதா உபதேசங்கள், வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் கடவுள் பக்தி என்ற பெயரால் மனித குலத்தை வேறுபடுத்தி கூறுபடுத்தி தவறான பாதையில் இழுத்துச் செல்கின்றன.

பாவங்கள் மன்னிக்கப்படும் என்ற நம்பிக்கையில் பாவம் செய்தவன் மீண்டும் பாவம் செய்கிறான். இதையிட்டு படித்த தமிழர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. படியாத பாமரத் தமிழர்களுக்கு சிந்திக்கத் தெரிவதில்லை!

திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் வில்லனாக ஒருவனைச் சித்தரிக்க வேண்டும் என்றால் அவனை பக்திமானாகக் காட்டி. நெற்றியில் விபூதிப்பட்டையும் கழுத்தில் உருத்திராட்சக் கொட்டையும் கட்டிவிடுகிறார்கள்!

சந்நியாசம் வாங்கிய ஜெயேந்திரர், காவி கட்டிய சதுர்வேதி, பிரேமாநந்தா போன்ற போலிச் சாமியார்கள் பகலில் இழித்தவாயர்களுக்கு இதோபதேசம் செய்து விட்டு இரவில் காமவல்லிகளுடன் சரச சல்லாபம் செய்திருக்கிறார்கள்!

'நான் கண்ணன்! நீ ஆண்டாள்! உன்னை ஆட்கொள்ளப் போகிறேன்' என்று சொல்லி பருவ மங்கையர்களை மட்டுமல்ல குடும்பப் பெண்களையும் சதுர்வேதி சாhமியார் கற்பழித்திருக்கிறார்!

இந்த ஒழுக்கக் கேடு இன்று நேற்றல்ல அடிநாள் தொட்டு வந்து கொண்டிருக்கிறது.

பாரதம் ஐந்தாம் வேதம். கோயில்களில் படிக்கப்படும் புனித நூல். பகவத் கீதை அதில்தான் இருக்கிறது.

பரதன் என்ற அரசன் ஆண்டதால் அந்த நாட்டுக்கு பரதம் என்ற பெயர் வந்தது.

பரதன் பரம்பரையில் வந்த ஒரு அரசனது பெயர் குரு. எனவே அவன் சந்ததி குருகுலம் என அழைக்கப்பட்டது.

இந்தக் குரு குலத்தில் பிறந்த சந்தனு என்ற அரசனது மகனின் பெயர். பீஷ்மன்.

சுந்தனு ஒரு நாள் கங்கை ஆற்றில் குளிக்கப் போனான். போகும் வழியில் மீனவர்களது குடியிருப்பில் இருந்து மீன் நாற்றம் வந்தது. அதே நேரம் அங்கே அழகே வடிவான ஒரு பெண் நிற்பதைப் பார்த்தான். பார்த்தவுடன் மோகம் கொண்டான். பெண்ணின் தந்தையிடம் தன் விருப்பத்தைச் சொன்னான்.

மீனவன் படியாதவன் என்றாலும் புத்திசாலி. ‘என் பெண்ணைக் கொடுக்க எனக்குச் சம்மதம். ஆனால் ஒரு நிபந்தனை. எனது மகள் வயிற்றில் பிறக்கும் பிள்ளை அதாவது எனது பேரன் உனக்குப் பின் நாடாளும் அரசன் ஆக முடி சூட்டப் படவேண்டும். இதற்குச் சம்மதம் என்றால் மட்டுமே பெண்ணைத் தருவேன்..’

அரசன் வாட்டத்தோடு அரண்மனை திரும்பினான். அரசனது வாட்டத்துக்கான காரணத்தை அவனது மகன் கேட்டு அறிகிறான். உடனே அவன் மீனவனிடம் போய் ‘எனக்கு அரசு வேண்டாம். அவனது நிபந்தனையின்படி மச்சகந்தியின் (அவளது பெயர்) வயிற்றுப் பிள்ளையே பட்டத்துக்கு வருவான்’ என்றான்.

‘அது சரி. ஆனால் உனக்குப் பிறக்கும் பிள்ளைகள் அரசுரிமை கேட்டு நாளைக்கு சண்டைக்கு வருவார்களே? அதற்கு என்ன சொல்கிறாய்?’

‘அந்தப் பயம் உனக்கு வேண்டாம்! நான் திருமணம் செய்ய மாட்டேன்.’

தந்தைக்காக தனது அரசுரிமையை ஈகை செய்த பீஷ்மனை தேவர்கள் பாராட்டி வானில் இருந்து பூமாரி பொழிந்து வாழ்த்தினார்கள்.

சுந்தனு மச்சகந்தி இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். ஆதில் ஒருவன் போரில் இறந்தான். மற்றவன் சந்ததி இல்லாமல் இறந்தான். மீனவன் கனவு அவன் பேரர்களோடு முடிந்து விட்டது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:48 am

போரில் இறந்த போன சந்தனு மச்சகந்தி இருவருக்கும் பிறந்த சித்திராங்கதன் விசித்திர வீரியன் ஆகிய இரண்டு மகன்களுக்கும் பிள்ளைகள் இல்லை. இதனால் குருகுல அரச வம்சம் சந்ததி இல்லாமல் அழியும் அபாயம் தோன்றியது. மீனவப் பெண்ணான மச்சகந்தி சந்ததி தழைக்க ஒரு உயாயம் செய்தாள்.

பீஷ்மரை அழைத்து சித்திராங்கதன் விசித்திர வீரியன் ஆகிய தம்பிமாரின் மனைவிகளான அம்பிகை அம்பாலிகை (மச்சகந்தியின் மருமக்கள்) இருவருக்கும் பிளை;ளவரம் கொடுக்குப்படி கேட்டுக் கொண்டாள். அதாவது அவர்களைப் புணருமாறு கேட்டாள்.

பீஷ்மன் தான் தந்தைக்குக் கொடுத்த வாக்கை மீறமாட்டேன் என்று உறிதியாகக் கூறிவிட்டான்.

மச்சகந்தி முயற்சியைக் கைவிடவில்லை. சந்தனுவை மணப்பதற்கு முன்னர் பராசரமகரிஷியோடு கூடிப் பிறந்து காட்டில் திரிந்து கொண்டிருந்த தனது மகனை அழைத்து தனது மருமக்களுக்கு பிள்ளைவரம் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டாள். இவன்தான் இந்து மதம் கொண்டாடும் வியாசன். நால் வேதங்களைத் தொகுத்தவன். ஐந்தாவது வேதம் எனப் போற்றப்படும் பாரதத்தை எழுதியவன். அதில் காணப்படும் பகவத் கீதையை எழுதியவன்.

விபசாரத்தில் பிறந்த வியாசன் பாரதத்தையும் பகவத் கீதையையும் எழுத முடியும் என்றால் கவியர் கண்ணதாசன் ஏன் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதக் கூடாது? ஆன காரணத்தால்தான் அர்த்தமுள்ள இந்து மதம் எழுதுவதற்கு குடியும் கூத்தியுமாக வாழந்த கண்ணதாசனுக்கு எல்லாத் தகுதியும் உண்டென்று கூறினேன்.

சரி கதையைத் தொடருகிறேன். வியாசன் மச்சகந்தியின் வேண்டுகோளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு அம்பிகை அம்பாலிகை என்ற இரண்டு பெண்களோடு சேருகிறான்.

இதில் மூத்தவள் அம்பிகை வியாசன் தன்னைப் புணரும்போது பயத்தால் கண்ணை மூடிக் கொண்டாள். அதனால் அவளுக்குப் பிறந்த பிள்ளை குருடாகப் பிறந்தது.

இளையவளான அம்பாலிகையுடன் வியாசன் சேரும் போது அவனது தாடி சடாமுடி இவற்றைக் கண்டு அச்சத்தோடு இருந்தாள். அதனால் அவளுக்குப் பிறந்த பிள்ளை நோயாளியாகப் பிறந்தது.

இன்றைய திரைப்படங்களில் வரும் வில்லன் கதாநாயகியின் கற்பைப் பறிக்கும் போது இயக்குநர் கதாநாயகியின் வேதனையை, வெட்கத்தை, அருவருப்பை, இயலாமையை கை கால், முக மாறுதல்களை அண்மைக் காட்சியில் காட்டுவார்.

இந்தக் கதாநாயகி போலவே அம்பிகை, அம்பாலிகை அந்த இரண்டு பெண்களும் வியாசன் கற்பழித்தபோது அதே வேதனை, வெட்கம், இயலாமை இவற்றால் துடித்திருப்பார்கள். துவண்டு போய் இருப்பார்கள்!

முதல் இரண்டு பிள்ளைகளும் சொட்டையாகப் பிறந்து விட்டன. அரசாள ஒரு ஒழுங்கான பிள்ளை வேண்டும். மச்சகந்தி ஆழ்ந்த யோசனையில் மூழ்கினாள்.

மச்சகந்தி 'முயற்சி திருவினையாக்கும்' என்பதில் நம்பிக்கை கொண்டவள். அவள் காட்டில் வாழ்ந்த வியாசனை மீண்டும் அழைத்து தனது இளைய மருமகள் அம்பாலிகையோடு புணர்ந்து ஒரு ஒழுங்கான பிள்ளையைப் கொடுக்குமாறு கேட்கிறாள்.

வியாசனோடு இன்னொரு முறை கூட வேண்டும் என்பதைக் கேட்ட அம்பாலிகை அருவருப்புக் காரணமாக அச்சம் கொள்கிறாள். தந்திரமாக தனது வேலைக்காரியை வியாசனோடு புணருமாறு அனுப்பி வைக்கிறாள்!

வேலைக்காரி அரசகுமாரி அல்லவே. அவள் மகிழ்ச்சியோடு வியாசனோடு கூடினாள். அவளுக்குப் பிறந்த குழந்தை எந்தக் குறையும் இல்லாது பிறந்தது.

இப்போது உங்களுக்கு மிகுதிக் கதை விளங்கி இருக்கும்.

வியாசனோடு மூத்த மருமகள் கூடிப்பிறந்த குருட்டுப் பிள்ளைதான் திருதராட்டிரன். வியாசனோடு இரண்டாவது மருமகள் கூடிப் பிறந்த நோயாளிக் குழந்தைதான் பாண்டு.

வியாசனுக்கும் வேலைக்காரிக்கும் பிறந்த பிள்ளைதான் விதுரன்.

குருட்டுப் பிள்ளை அரசாளக் கூடாது என்பதால் திருதராட்டிரன் ஒதுக்கப்படுகிறான்.

விதுரன் குறைவற்றுப் பிறந்தாலும் வேலைக்காரிக்குப் பிறந்ததால் ஆட்சி செய்யும் தகுதியை இழக்கிறான்.

எஞ்சிய பாண்டு நோயாளியாக இருந்தாலும் அரச கட்டில் ஏறுகிறான். வேத சாத்திரங்கள் அதனை அனுமதிக்கிறது.

வேத சாத்திரங்கள் விசித்திரமானவை. அவை நாகரிகம் அடையாத அன்றைய மனிதனது வாழ்க்கை முறையை ஒளித்தெறிக்கின்றன.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:48 am

மச்சகந்தி சூத்திர குலம். அவளுக்கும் காட்டில் தவம்செய்து கொண்டிருந்த பராசரமகரிஷிக்கும் பிறந்த வியாசன் சூத்திர குலம். ஆனால் வியாசனுக்கும், சந்தனு-மச்சகந்தி இருவரது மகன்களின் (சித்திராங்கதன், விசித்திரவீரியன்) மனைவியருக்கும் பிறந்த திருதராட்டிரன் சத்திரிய குலம் எனக் கருதப்படுகிறான். குருடன் என்பதால் மட்டும் அவனுக்கு அரசுரிமை மறுக்கப்படுகிறது.

அதே போல் விதுரன் அரண்மனை வேலைக்காரிக்குப் பிறந்த பிள்ளை என்பதால் சூத்திர குலம். அதனால் அவனுக்கு அரசுரிமை மறுக்கப்படுகிறது. ஆனால் திரிதராட்டிரன் போலவே நோயாளியாகப் பிறந்த பாண்டுவுக்கு அரசுரிமை அளிக்கப்படுகிறது.

நோயாளி பாண்டு குந்தியை மணக்கிறான். ஆனால் அவன் குந்தியைக் கூடினால் இறந்து விடுவான் என்பதற்காக அவளும் இன்னொரு மனைவி மாத்திரியும் இந்திரன், வாயு, அக்னி போன்ற தேவர்களோடு கூடி அய்ந்து பிள்ளைகளைப் பெறுகிறார்கள். அவர்கள்தான் பஞ்ச பாண்டவர்கள். பாரதக் கதையின் கதாநாயகர்கள். குந்தி ஆறாவதாக சூரியனைக் காதலித்துப் பெற்ற பிள்ளைதான் கர்ணன்.

பெண்ணுடன் கூடினால் இறக்க நேரிடும் என்று தெரிந்தும் பாண்டு அரண்மனைத தாதி ஒருத்தியுடன் கூடி இறந்து போகிறான்.

பாண்டு இறந்து போனபின் அவனது (?) மக்களில் மூத்தவனான தருமன் பட்டம் ஏற்கிறான்.

தருமன் பட்டம் சூடுவதை திரிதராட்டிரனின் மூத்த மகன் துரியோதனன் எதிர்க்கிறான். ஆட்சி உரிமை தனக்கே என்று வாதிடுகிறான்.

திரிதராட்டிரன் குருடாக இல்லாதிருந்தால் அவன்தான் ஆட்சிக் கட்டில் ஏறியிருப்பான், எனவே அவனுக்குப் பின் முறைப்படி ஆட்சியுரிமை தனக்கே உரித்து என்று துரியோதனன் வாதிட்டான்.

கவுரவர் - பாண்டவர் அரசுரிமைச் சண்டையில் பீஷ்மர் தலையிட்டு துரியோதனர்கள் அஸ்தினாபுரத்திலும் பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்திலும் தனித்தனி அரசு ஆள அமர்த்தப் படுகிறார்கள்.

பாண்டவர் ஆட்சியை போர் செய்தேனும் கைப்பற்ற துரியோதனன் துடிக்கிறான். அவனது மாமன் சகுனி ஆட்சியைப் பிடிக்க குறுக்கு வழி சொல்லிக் கொடுக்கிறான்.

வாளின்றி வேலின்றி அரசைப் பிடிக்க வழி இருக்கும் போது வீணாக ஏன் இரத்தம் சிந்துவான்? ஏன் உயிர்கள் போர்க்களத்தில் பலியாக வேண்டும்?

தருமன் சூதில் மோகம் கொண்டவன். சகுனியோ சூதாட்டக் கலையில் வல்லவன்.

தருமன் சூதாடித் தோற்கிறான். அரசை மட்டுமல்ல, தன்னை, தனது மனைவியை, உடன் பிறந்த சகோதரர்களை வைத்து ஆடி இழக்கிறான்.

தோற்றவர்கள் ஆட்சியை துரியோதனிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறுகிறார்கள்.

பதின்மூன்று ஆண்டுகள் காட்டிலே தலைமறைவாகத் திரிந்தபின் மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்குமாறு பாண்டவர்கள் கேட்கிறார்கள். துரியோதனன் மறுக்கிறான்.

நாடு பிளவுபடுகிறது. கவுரவர் ஒருபுறம். பாண்டவர் மறுபுறம். குருசேத்திர பூமியில் சகோதர யுத்தம் தொடங்குகிறது.

அப்போதுதான் அருச்சுனன் தனது அண்ணன், தம்பி, மாமன், மச்சான், பெரியப்பா சித்தப்பா ஆகியோருக்கு எதிராக சண்டை செய்ய மறுக்கிறான்.

அருச்சுனனது எண்ணத்தை மாற்றி அவனை சண்டைக்கு ஆயத்தம் செய்ய கண்ணன் அவனுக்கு குளையடிக்கிறான். அப்படி கொலை செய்யத் தூண்டும் கருத்துரைகள்தான் பகவத் கீதை. அதனை வியாசன் எழுதி;யதாகச் சொல்லப்பட்டாலும் உண்மையில் பிற்காலத்தில் யாரோ எழுதி பாரதக் கதையோடு சேர்த்திருக்க வேண்டும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:49 am

ஒழுக்கக் கேட்டுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த மகாபாரதம் விளங்குகிறது. ஆரியர்களுடைய பண்பாட்டுக்கு அது 'அற்புத நூலாக' இருக்கலாம். “புண்ணிய நூலாக” இருக்கலாம் 'எண்ணற்ற முத்துக்களும், ரத்தினங்களும் கிடைக்கும் மகாசமுத்திரத்தைப் போன்றதாக' இருக்கலாம் (இராசாசி எழுதிய மகாபாரதம் - பக்கம் 4). ஆனால் அது தமிழ்ப் பண்பாட்டுக்கு முற்றிலும் முரணான ஆபாசக் கதை. அதனைத்தான் கோயிலில் தமிழ்ச் சைவர்கள் படிக்கிறார்கள். படித்து முடித்த பின்னர் கஞ்சி காய்ச்சி ஊற்றுகிறார்கள்.

தமிழர்களுடைய மூளை பிற பண்பாட்டர்களால் விலங்கிடப்பட்டதற்கு இந்தப் பாரதப் படிப்பு நல்ல எடுத்துக் காட்டு.

பாரதக் கதையை படித்தாலும், அருகிருந்து படிக்கக் கேட்டாலும் மோட்சம் கிடைக்கும் என்கிறார்கள். மோட்சம் கிடைக்கிறதோ இல்லையோ நிச்சயமாக ஒழுக்கம் கெடுகிறது.

பாரதத்தை படித்து விட்டு ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் தன்னை வியாசன் என்று நினைத்திருந்தால் அதில் வியப்பில்லை.

இளைய மடாதிபதி விஜேய்ந்திரருக்கு காஞ்சி சங்கர மடத்துக்கு அருகில் இருந்த வீடியோ கடையில் இருந்து நீலப் படங்கள் பூக்கூடைக்குள் மறைத்து அனுப்பப் பட்டதாம். அவர் என்ன செய்வார். கம்பரசத்திலும், கந்தரசத்திலும் வடித்துக் கொடுத்திருந்ததை ஒளி ஒலியில் பார்க்கவும் கேட்கவும் ஆசைப்பட்டிருப்பார்!

கீதா உபதேசங்கள், வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், இதிகாசங்கள் கடவுள் பக்தி என்ற பெயரால் மனித குலத்தை குருடாக்கி தவறான பாதைக்கு இழுத்துச் செல்கின்றன.

பணம் கொடுத்தால், விரதம் இருந்தால், அர்ச்சனை ஆராதனை செய்தால், தேர்த் திருவிழா செய்தால் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சொர்க்கத்துக்கான வாசல் திறக்கப்படும் என்று கூறப்படுவதால் பாவம் செய்தவர்கள் மீண்டும் பாவம் செய்கிறார்கள். ஏனைய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இது பொருந்தும்.

இதையிட்டு படித்த தமிழர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. படியாத பாமரத் தமிழர்களுக்கு சிந்திக்கத் தெரிவதில்லை!

சந்நியாசம் வாங்கிய ஜெயேந்திரர், காவி கட்டிய சதுர்வேதி, தாடி வளர்த்த பிரேமாநந்தா போன்ற போலிச் சாமியார்கள் பகலில் இழித்தவாயர்களுக்கு உபதேசம் செய்து விட்டு இரவில் தங்கள் மடங்களை காமக் களியாட்டக் கூடங்களாக மாற்றுகிறார்கள்! இந்து மதத்தின் பெயரால் இந்த காமலீலைகள் அரங்கேறுகின்;றன!

'நான் கண்ணன்! நீ ராதை! உன்னை ஆட்கொள்ளப் போகிறேன்' என்று சொல்லி பருவ மங்கையர்களை மட்டுமல்ல குடும்பப் பெண்களையும் சதுர்வேதி சாhமியார் கெடுத்திருக்கிறார்!

இதனால்தான் திரைப்படங்களிலும் சின்னத்திரையிலும் வில்லனாக ஒருவனைச் சித்தரிக்க வேண்டும் என்றால் நெற்றியில் விபூதிப் பட்டையும் கழுத்தில் உருத்திராட்சக் கொட்டையும் கட்டி பக்திமானாகக் காட்டுகிறார்கள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 2:04 am

இந்த ஒழுக்கக் கேடு இன்று நேற்றல்ல. அடிநாள் தொட்டு வந்து கொண்டிருகிறது.

பாரதம் ஐந்தாம் வேதம். கோயில்களில் படிக்கப்படும் புனித நூல். அதன் கதாநாயகர்களான பஞ்ச பாண்டவர்கள் மணவினைக்கு புறத்தே பிறந்தவர்கள். குந்தியும் பாண்டுவின் இன்னொரு மனைவியான மாத்திரியும் தேவர்களோடு கூடி அவர்களைப் பெற்றெடுத்தார்கள். குந்தி மணவினைக்கு முன்னர் சூரியனோடு கூடி கர்ணனனைப் பெற்றெடுத்தாள்.

பாஞ்சாலியைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. ஐவருக்கும் ஏக பத்தினி. இது போதாதென்று கர்ணனையும் காதலித்தவள்! அதனால் என்ன? அது ஆரியரது பண்பாட்டில் பெரிய தகுதியாகக் கருதப்பட்டது. அதனால் அவள் 'அம்மன்' ஆனாள்! புத்தி இல்லாத தமிழன் இந்த அம்மனை விழுந்து கும்பிட்டான்! இப்போதும் கும்பிடுகிறான்!

பரதன் என்ற பெயரில் இருந்துதான் பாரதம் என்ற சொல் பிறந்ததாம். இந்தப் பரதன் யார்? சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும் மணவினைக்கு புறத்தே பிறந்தவன். அதற்கு இன்னொரு பெயர் கந்தர்வ விவாகம்!

இந்த சகுந்தலை எப்படிப் பிறந்தவள்? விசுவாமித்திரனுக்கும் இந்திரலோக மேனகைக்கும் மணவினைக்கு புறத்தே பிறந்தவள்!

இந்திரலோகம் என்றவுடன் இந்திரன் நினைவு வருகிறது. முப்பத்து முக்கோடி தேவர்களின் அரசன் இவன். கவுதமமுனிவரின் பத்தினி அகலிகையை ஏமாற்றிக் கற்பளித்தவன். அதனால் அவன் ஆணுறுப்பு அறவும் அவன் உடம்பு முழுதும் ஆயிரம் யோனி தோன்றவும் கவுதம முனிவரால் சபிக்கப்பட்ட சண்டாளன்!

இராமாயணம் எழுதிய வால்மீகி ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன்.

திருமங்கை ஆழ்வார் வழிப்பறி கொள்ளை நடத்தி ஸ்ரீரங்கநாதருக்கு திருப்பணி செய்தவர். இவரே நாகபட்டினம் பவுத்த விகாரையில் இருந்த புத்தரின் தங்கச் சிலையைத் திருடி விற்று அந்தப் பணத்தில் ஸ்ரீரங்கநாதருக்கு விமான திருப்பணி செய்தவர்.

திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனது அமைச்சர். குதிரைகள் வாங்க அரசன் கொடுத்த பணத்தை கோயில் கட்டச் செலவழித்தார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் சோழநாட்டிலே காவிரிப்பூம் பட்டினத்தில் பிறந்தவர். அடியவர் எவராயினும் எதனை விரும்பிக் கேட்டாலும் கொடுத்துவிடுவார். சிவனடியார் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டிய மனைவியை அவர் பின் அனுப்பி வைத்தார்! எதிர்த்த ஊர் மக்களை வாள் கொண்டு வெட்டிச் சாய்த்தார்! இயற்பகை என்பது நல்ல பொருத்தமான பெயர்! நம்பியாண்டார் நம்பி இயற்றிய திருத்தொண்டர் திருவந்தாதி இந்த மூட பக்தரை இப்படிப் புகழ்கிறது.

செய்தவர் வேண்டியதி யாதுங் கொடுப்பர் சிவன்தவனாய்க்
கைத்தவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே
மைதிகழ் கண்ணியை ஈந்தவன் வாய்த்த பெரும்புகழ்வந்
செய்திய காவிரிப் பூம்பட் டினத்துள் இயற்பகையே.


இன்னொரு நாயனார். பெயர் விசாரதருமர். மாடு மேய்ப்பவர். மண்ணியாற்றின் கரையில் மணலில் சிவலிங்கம் செய்து மேய்த்த மாடுகளில் இருந்து பாலைக் கறந்து அதற்கு நீராட்டினார். இப்படி பால் வீணாகப் போவதை கண்டு விசாரதருமரின் தந்தை எச்சதத்தன் பிள்ளையைத் தண்டித்தான். அரனார் வழிபாட்டிற்கு பங்கம் விளைவித்த தந்தையை விசாரதருமர் மழுகொண்டு இரண்டு கால்களையும் வெட்டி வீழ்த்தினார்.

உடனே சிவபெருமான் 'எனக்காக நீ உன்னைப் பெற்ற தந்தையின் கால்களை வெட்டிக் கொன்றாய். யாமே உனக்கு இனித் தந்தையாக இருப்போம்' என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார். பக்தியின் பெயரில் தந்தையை வெட்டிக் கொல்வது பாபம் அல்ல இறைகைங்கரியம் என இக்கதை கூறுகிறது!

கருவூரில் உள்ள ஆனிலை என்ற ஊரில் திருக்கோயில் ஒன்று இருந்தது. திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வழிபடும் சிவனடியார்களுக்கு தீங்கு இழைப்பவர்களை எதிர்த்து வீழ்த்த மழுப்படை தாங்கிய ஒருவர் இருந்தார். அவர் பெயர் எறிபக்த நாயனார்.

ஒரு நாள் ஒரு சிவனடியார் பூக்குடலையோடு திருக்கோயிலுக்கு வழிபாடு செய்ய போய்க் கொண்டிருந்தார். வழியில் சோழ மன்னனின் பட்டத்து யானையை காவிரியில் குளிப்பாட்டிவிட்டு அந்த வழியாக பாகர்கள் நடத்தி வந்து கொண்டிருந்தார்கள். யானை சிவனடியாரின் பூக்கூடையைப் பிடுங்கி பூக்களை வீதியில் சிதறியது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 2:05 am

அந்தச் சமயத்தில் எறிபக்த நாயனார் அந்தப் பக்கம் வந்தார். நடந்ததை அறிந்து காற்றென விரைந்து சென்று தனது மழுவால் யானையின் தும்பிக்கையை வெட்டி விழுத்தினார். அடுத்து குத்துக் கோற்காரர் மூவரையும் பாகர்கள் இருவரையும் கொன்றார். வழக்கம் போல சிவபெருமான் தோன்றி இறந்தவர்களை எழுப்புகிறார். எறிபக்த நாயனார் சிறிது காலம் வாழ்ந்து திருக்கயிலையில் சிவகணங்களுக்கு தலைவரானார். கொஞ்சப் பூக்கள் கொட்டப்பட்டதாற்காக ஆறு உயிர்களை கொன்றவர் நாயனார் என்று அழைக்கப்படுகிறார். பக்தர் என்று போற்றப்படுகிறார். சிவகணங்களுக்கு தலைவர் ஆக்கப்படுகிறார்.

சிறுத்தொண்டர் என்ற நாயனார். அவரது இயற்பெயர் பரஞ்சோதி. சோழ மன்னன் அவையில் அமைச்சராக இருந்தவர். பின்னர் சிவத்தொண்டில் ஈடுபடுகிறார். அவரது மனைவி பெயர் திருவெண்காட்டு சந்தன நங்கை. இவர்களுக்கு பிறந்த பிள்ளைக்கு சீராளதேவர் என்ற பெயர் சூட்டப்பட்டது.

ஒரு நாள் ஒரு சிவனடியார் சிறுத்தொண்டர் வீட்டுக்கு வருகிறார். 'நான் வடதேசத்தை சேர்ந்தவன். நாம் ஆறு மாதத்துக்கு ஒருமுறைதான் உணவு கொள்ளும் இயல்பினோம். அன்று பசுவைக் கொன்று சமைத்து உண்பது நமது வழக்கம். இஃது உமக்கு அருமையன்றோ?' எனக் கேட்கிறார்.

'சிக்கல் இல்லை. என்னிடம் பசுக்கள் இருக்கின்றன. அதில் ஒன்றை வெட்டி கறி சமைக்கலாம்' என விடை பகர்கிறார் சிறுத்தொண்டர்.

சிவனடியார் தாம் பசு என்று குறிப்பிட்டது நரபசு. அந்த 'மெனு' எப்படி தயார் செய்ய வேண்டும் என்று விளக்கம் கொடுக்கிறார். 'சமையலுக்கு வெட்டப்படும் அந்தச் சிறுவன் ஒரு குடிக்கு ஒருவனாய் இருத்தல் வேண்டும். அவனைத் தாய் உவந்து பிடிக்க தாதையும் உவந்தே அரிதல் வேண்டும். இவ்வாறு சமையல் செய்தால் நாம் உண்போம்' என்றார்.

உணவு தயார் ஆகிறது. தலை சமையலுக்கு உதவாது என்பதால் அது விலக்கப்படுகிறது. மற்ற உறுப்புக்கள் எல்லாம் சமைக்கப்பட்டன. சோறும் ஆக்கப்பட்டது.

'நம்முடன் உணவு கொள்வதற்கு பிள்ளை இல்லையோ? அவன் இல்லாமல் நாம் உண்ணோம். அவனைத் தேடி அழைத்து வாரும்"' எனக் கட்டளை இடுகிறார் சிவனடியார்.

சிறுத் தொண்டர் செய்வதறியாது திகைத்து பின்னர் 'சீராளா ஓடி வா!' எனக் கூவி அழைக்கிறார். பள்ளியில் இருந்து ஓடி வருபவனைப் போல் சீராளன் ஓடி வந்தான்.

வழக்கம் போல சிவனடியாராக வந்த சிவபெருமான் மறைந்தருளினார். கதை முடிகிறது.

இந்த அருவருக்கத்தக்க, குப்பைக் கதையெல்லாம் வன்தொண்டர் எழுதிய திருத்தொண்டர் தொகை, நம்பியாண்டார் நம்பி எழுதிய திருவந்தாதி, சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் இவற்றில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்த வகைக் கதைகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன.

கடவுளர்களது மகத்துவத்தை கூற பாடப்பட்டவைதான் புராணங்கள். ஆனால் கடவுள் மகத்துவத்தை நாகரிகமான முறையில், நாலுபேர் மனம் கூசாமல் படிக்குமாறு எடுத்துச் சொல்லக் கூடாதா?

தெய்வீகம், பக்தி என்ற போர்வையில் தேவையற்ற, நாகரிக்கத்துக்கு புறம்பான செயல்களை நல்ல செயல்களாகக் காட்ட இப்படியான புராணக் கதைகளை எழுதுவது சரியா?

கடவுள் தனது பக்தனை சோதிப்பதை எடுத்துக்காட்ட பிள்ளைக் கறி சேட்கும் கதை மூலம் சொல்லப்பட வேண்டுமா? வேறு வழி இல்லையா? பிள்ளைக் கறி கேட்கும் கடவுளைப் பற்றி இந்தக் காலத்து இளைஞர்கள் என்ன நினைப்பார்கள்?

பெற்ற பிள்ளையை நேர்த்தியாக அரிந்து கறி சமைக்கும் சிறுத்தொண்டரது குருட்டு பக்தி பற்றியும் அவரது மனைவியின் பதிபக்தி பற்றியும் ஒழுக்கம் ஒழுக்கக்கேடு, நற்செயல் தீச்செயல் ஆகியவற்றைப் பிரித்துப் பார்க்கும் வல்லமை படைத்தவர்கள் என்ன நினைப்பார்கள்?

வீட்டைச் தூய்மையாக வைத்திருக்க ஒவ்வொரு நாளும் பெருக்குகிறோம். பெருக்குகிற குப்பையை வெளியில் தள்ளுகிறோம். ஒவ்வொரு நாளும் குளித்து உடலில் படிந்துள்ள அழுக்கை சோப் போட்டு அகற்றுகிறோம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 2:05 am

ஆனால் இப்படி இழிவான, காலத்துக்கு ஒவ்வாத குப்பைக் கதைகளை மட்டும் ஏன் வீச மறுக்கிறோம்?

இந்தப் புராணக் கதைகள் தவறானவை, பொருளற்றவை என்று கண்டிக்காமல் அவற்றுக்கு அசட்டுச் சமாதானங்களையும் அர்த்தமற்ற தத்துவப் பேச்சுக்களையும் முரட்டு வியாக்கியானங்களையும், முரண்பட்ட பேச்சுக்களையும் மதவாதிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

நாயன்மார்கள் பற்றிச் சொன்னேன். இதோ ஒரு வைணவ ஆழ்வார் பற்றிய கதை.

இன்றைய தஞ்சை, திருச்சி இணைந்த சோழவள நாட்டில் உள்ள திருமண்டங்குடி என்ற சிற்றூரில் அவதரித்தவர் தொண்டரடி பொடியாழ்வார். இவருக்கு பெற்றோர் ®️விப்பிரநாராயணர்' எனப் பெயரிட்டனர். இந்தப் பெயரில் ஒரு திரைப்படம் கூட வெளிவந்தது.

திருமணத்தில் விருப்பமில்லாத இவர், ஸ்ரீரங்கம் இரங்கநாதப் பெருமானையும், இரங்கநாயகி தாயாரையும் நாளும் வழிபடும் பொருட்டு அத்தக் கோயிலிலேயே தங்கி விட்டார். நந்தவனம் அமைத்து, அன்று மலர்ந்த மலர்களால் மாலை தொடுத்து, பெருமாளுக்கு நாளும் சாத்தி இறைபணி செய்து வந்தார்.

ஸ்ரீரங்கம் அருகிலுள்ளது உத்தமர்கோவில். திருமால், பிரம்மா, சிவன் இணைந்திருக்கும் தலம.; இங்கே தேவதாசி குலத்தில் பிறந்த தேவதேவி என்பவள் தன் மூத்த உடன்பிறப்புடன் வாழ்ந்து வந்தாள். அவள் ஒருமுறை ஸ்ரீரங்கம் வந்த போது, விப்பிரநாராயணரின் நந்தவனத்தைப் பார்த்து அதன் அழகில் சொக்கிப் போனாள்.

இந்த நந்தவனமே இப்படி அழகு என்றால், நந்தவனத்து சொந்தக்காரன் எவ்வளவு அழகாயிருப்பான் என எண்ணிப் பார்த்தாள். அவள் நினைத்தது போலவே விப்பிரநாராயணரும் மிக அழகாக இருந்தார். அந்த இளைஞனை எப்படியும் அடைந்தே தீருவேன் என்று அவள் முடிவு செய்தாள்.

இறைவனுக்கு சேவை செய்யும் ஒருவரை நம் போன்ற தாசிகள் தீண்டுதல் தகாது...' என்று அறிவுரை நல்கினாள் மூத்தவள். தேவதேவி அதைப் பொருட்படுத்தாமல் விப்பிரநாராயணரின் நந்தவனத்தின் நடுவேயிருந்த குடிலுக்கு காவி உடையுடன் பக்தை போல் சென்றாள். அந்த மலர் தோட்டத்தை பராமரிக்கும் பணி செய்ய அனுமதி வேண்டினாள்.

அவளது தோற்றம் கண்டு ஐயம் கொள்ளாத அப்பாவியான விப்பிரநாராயணரும் நந்தவனத்தில் தனியிடத்தில் தங்க அனுமதித்தார். அவள் செடிகளுக்கு ஒவ்வொரு நாளும் தண்ணீர் ஊற்றுதல், மலர் பறிப்பதில் உதவுதல் என விப்பிரரின் நம்பிக்கையைப் பெற்றாள். சில மாதங்கள் கடந்து விட்டன.

ஒருநாள் கடும் மழை மழையில் நனைந்தபடியே நந்தவனத்துக்குள் வந்தார் விப்பிரநாராயணர். தொப்பல், தொப்பலாக நனைந்திருந்த அவரது தலையைத் துவட்டுவது போல் நடித்து, தன்னழகால் மயக்கி வீழ்த்தினாள் தேவதேவி. இரங்கநாதர் மீது இருந்த காதல் தேவ தேவி மீதான காமம் ஆக மாறியது. அதன்பின் அவளே கதியெனக் கிடந்தார் விப்பிரநாராயணர். அவரிடமிருந்த பொருளைக் கவரும் வரை அங்கிருந்த தேவதேவி, காரியம் முடிந்ததும் உத்தமர் கோவிலுக்குப் போய்விட்டாள்.

விப்பிர நாராயணருக்கு அவளது பிரிவைத் தாங்க முடியவில்லை உத்தமர் கோயிலுக்கு அவளைத் தேடி வந்தார் ஆனால், பொருளின்றி அங்கு வர வேண்டாம் என அடித்துச் சொல்லி விட்டாள் தேவதேவி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 2:45 am

சாதி மத பேதங்களை எதிர்ப்பது நாத்திகம் அல்ல!

தன் அடியவனை மேலும் சோதிக்க விரும்பிய இரங்கநாதர் கோவிலில் உள்ள ஒரு தங்கப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு தேவதேவியின் இல்லத்திற்கு ஒரு பணியாளன் வேடத்தில் சென்றார். தன் பெயர் அழகிய மணவாளன் என்றும், அதை விப்பிரநாராயணர் கொடுத்தனுப்பியதாகவும், அன்றிரவு அவர் அங்கு வருவதாகவும் கூறினார். விப்பிரரும் வழக்கம் போல் அங்கு செல்ல அவரை வரவேற்று உபசரித்தாள் தேவதேவி. அன்றிரவு அங்கே தங்க அனுமதித்தாள்.

மறுநாள் கோவிலில் தங்கப் பாத்திரம் காணாமல் போன தகவல் அர்ச்சகர்கள் மூலம் அரசனுக்கு சென்றது. ஏவலர்கள் வீடுகளைச் சோதனையிட்டனர். தேவதேவி வீட்டில் பாத்திரம் சிக்கியது. விசாரணையில் அதை அவளுக்கு விப்பிரநாராயணர் கொடுத்த தகவல் தெரிந்தது.

திருட்டுப் பாத்திரத்தை வாங்கிய குற்றத்துக்காக தேவதேவிக்கு வெறும் அபராதம் மட்டுமே விதிக்கப்பட்டது. ஆனால், திருட்டு வழக்கில் சந்தேகக் கைதியான விப்பிரநாராயணரை சிறையில் அடைத்தான் மன்னன்.

இரங்காநாதர் மன்னனின் கனவில் தோன்றி, நடந்த விபரங்களை எடுத்துரைத்தார். விப்பிரநாராயணரை விடுதலை செய்தான் மன்னன்.

அவர் மனம் திருந்தி, அடியவர்களின் பாதங்களைக் கழுவி, அத்தீர்த்தத்தைப் பருகி, இறைவனின் அருளை மீண்டும் பெற்றார். பக்தர்களுக்காக சிறிய பணிகளையும் சிரமேற்கொண்டு செய்தார். இதனால் "தொண்டரடிப் பொடியாழ்வார்' எனப் பெயர் பெற்று பல்லாண்டு வாழ்ந்து இறைவனோடு கலந்தார்.

இந்தக் கதை கற்பிக்கும் பாடம் என்ன? பக்தனின் தாசி மோகத்தை தீர்த்து வைக்க இரங்கநாதரே பணியாள் போல் வேடம் பூண்டு தங்கப் பாத்திரத்தை விப்பிரநாராயணர் கொடுத்ததாகக் தேவதேவியிடம் கொடுக்கிறார். காவி கட்டிய சந்நியாசி தாசி வீடே கதியெனக் கிடந்து உலைந்தாலும் பருவாயில்லை, அப்படிப்பட்ட ஒருவர் இரங்கநாதரிடம் பக்தி வைத்தால் போதும். அவருக்கு இந்த உலகில் சிற்றின்பமும் அடுத்த உலகில் பேரின்பமும் கிடைக்கும்.

பக்திக் கதைகளை மக்கள் படித்தால் அவர்களிடையே இறையுணர்வு பெருகும், அருள் கிடைக்கும், அன்பு மலரும், ஆணவம் ஒழியும், வீடுபேறு எளிதில் கிடைக்கும் என்கிறார்கள்.

ஆனால் எனக்கு இந்தக் கதைகளைப் படிக்க வயிற்றைக் குமட்டிக் கொண்டு வருகிறது! கடவுள் பக்தியை விளக்க வேறு கதைகள் கிடைக்கவில்லையா? நரமாமிசம் கேட்கும் கடவுள் அதனைச் சமையல் செய்து கொடுக்கும் பக்தர்; இவர்கள்தான் கிடைத்தார்களா?

இன்றைய தலைமுறையினருக்கு பக்தியின் பெயரால் இந்தக் கதைகளைச் சொல்லிக் கொடுத்தால் இந்து சமயம் காட்டுமிராண்டிகளின் சமயம் என நினைப்பார்கள். அப்படி நினைத்தால் அது அவர்கள் குற்றமல்ல.

இப்படி நான் எழுதினால் கைவிரல் விட்டு எண்ணக்கூடிய இந்து மதவாதிகள் புத்தியைத் தீட்டுவதற்குப் பதில் கத்தியைத் தீட்டுகிறார்கள். காஞ்சி சங்கராச்சாரியார் சங்கரராமனைத் தீர்த்துக் கட்டியது போல தீர்த்துக் கட்டிவிடுவோம் என மிரட்டுகிறார்கள்.

முழக்கம் நாத்திக ஏடு. நக்கீரன் நாத்திகன் என நாலாவது தமிழில் திட்டுகிறார்கள்.

எமது அக்கறை எல்லாம் எமது இனம், எமது மொழி, எமது பண்பாடு பற்றியது. எமது இனத்தை தாழ்த்த நினைப்பவர்கள், எமது மொழியை பழிப்பவர்கள், பண்பாட்டைப் இழித்துரைப்பவர்கள் எமது எதிரிகள்.

இப்படியான புராணக் கதைகள் மிகைப்படுத்தி புராணிகர்களால் எழுதப்பட்டவை. அவற்றை பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்று சிலர் சொல்லலாம். அது சரியாகவும் இருக்கலாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 2:46 am

'நன்று புராணங்கள் செய்தார் - அதில்
நல்ல கவிதை பலப்பல தந்தார்
கவிதை மிகநல்ல தேனும் - அக்
கவிதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்
புவிதனில் வாழ்நெறி காட்டி - நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்'


எனப் பாரதியார் புராணக் கதைகள் பொய்யென்று தெளிவாகச் சொல்கிறார்.

"கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போக'


என்று இராமலிங்க அடிகள் பாடுகிறார்.

புராணக் கதைகள் கட்டுக்கதைகளே. அல்லது சிறிய அளவிலான உண்மை வரலாற்று நிகழ்ச்சிள் பல மடங்கு மிகைப் படுத்திக் கூறப்பட்டவை ஆகும். குருட்டு நம்பிக்கைகளை மூடக் கொள்கைகளை பக்தி என்ற போர்வையில் நியாயப்படுத்துவதற்கு புனையப் பட்டவை.

எடுத்துக்காட்டாக ஆரியர்களது நளாயினி கதையைக் கூறலாம். நளாயினி தனது தொழுநோய் பிடித்த கணவனை ஒரு கூடையில் வைத்து தாசி வீட்டுக்குச் சுமந்து செல்கிறாள். இது அவள் ஒரு கற்புக்கரசி என சித்தரிப்பதற்காக கட்டப்பட்ட கதை.

இராமன் மனைவி இராவணனால் கவர்ந்து செல்லப்பட்டு பல ஆண்டுகள் அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டவள். இராவணனைக் கொன்று சீதையை சிறை மீட்ட இராமன் அவளை படம் விரித்த ஒரு பாம்பு போலச் சீறி எழுந்து கோபத்தோடு பார்க்கிறான்.

'ஊண்திறம் உவந்தனை, ஒழுக்கம் பாழ்பட
மாண்டிலை, முறைதிறப்(பு) அரக்கன் மாநகர்
ஆண்டுறைந்(து) அடங்கினை, அச்சம் தீர்ந்(து) இவண்
மீண்ட(து) என் நினை(வு) எனை விரும்பும்! என்பதோ?

(கம்பராமாயணம்-யுத்தகாண்டம் 966)

இராவணனை அழித்ததெல்லாம் உன்னை மீட்கும் பொருட்டு அன்று. எனக்கு நேர்ந்த பழியைத் நீக்கிக் கொள்ளும் பொருட்டே ஆகும். நீ இறந்து படு. இன்றேல் எங்கேயாவது போய்விடு என்றெல்லாம் இராமன் பித்துப் பிடித்தவன் போல் பேசுகிறான். இராமன் இறந்து படு என்று சொன்னதால் சீதை தீக்குளித்து தன் கற்பை எண்பிக்கிறாள்.

ஆனால் இன்று கற்பைப் பற்றிய மதிப்பீடு மாறிவிட்டது. கற்பென்று சொல்ல வந்தால் அது ஆண் பெண் இருவருக்கும் பொதுவில் வைக்க வேண்டும் என்ற கருத்து வேரூறின்றி விட்டது.

இன்று சீதை உயிரோடு இருந்தால் இராமனுக்கு இன்னொரு குழி வெட்டுமாறு இலக்குவனிடம் சொல்லி அதில் இராமனைத் தீக் குளித்து அவனது கற்பை எண்பிக்குமாறு கேட்டிருப்பாள்!

இன்று அருந்ததி இருந்தால் பரத்தமைக்கு எதிரான சட்டம் அவள் மீது பாயும். இன்று சீதை இருந்தால் தற்கொலை செய்ய முயற்சித்த குற்றத்துக்காக கைது செய்யப் பட்டிருப்பாள். தற்கொலை செய்ய தூண்டிய குற்றத்தில் இராமனும் கைது செய்யப்பட்டிருப்பான்.

வேறு விதத்தில் சொன்னால் காலம் மாறும் போது கருத்தும் மாறுகிறது. பழையன கழிந்து புதியன புகுகிறது. அது வழுவல்ல. இன்று பெண் அடிமைத்தனம் முழுமையாக இல்லாவிட்டாலும் பெருமளவு ஒழிக்கப்பட்டு விட்டது. உடன்கட்டை ஏறல், இளம்பெண் திருமணம் சட்டப்படி தடை செய்யப்பட்டுவிட்டன.

இந்து மதம் கொடிய பாபங்கள் என்று சொல்லும் கள், களவு, புலால் உண்ணல் போன்றவற்றை விலக்கும் இந்துக்கள் குறைவு. பெரிய புராணத்தை படிக்கும் அல்லது படித்த இந்துக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதில் சொல்லப்பட்ட கதைகள் அவர்களுக்கு முழுமையாகத் தெரியாது.

ஆனால் பிள்ளைக் கறி சமைத்துக் கொடுத்த சிறுத்தொண்டரையும் கட்டிய மனைவியை சிவனடியாரோடு அனுப்பி வைத்த இயற்பகையையும் கோயிலில் வைத்து வழிபடுகிறார்கள்.

இரணியன் பிரகலாதன் கதை எல்லோருக்கும் தெரியும். கதையைப் படியாவிட்டாலும் அதுபற்றிக் கேள்விப்பட்டிருப்பார்கள். இதுவும் திரைப்படமாக பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக