புதிய பதிவுகள்
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10 
61 Posts - 42%
mohamed nizamudeen
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10 
292 Posts - 42%
heezulia
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_m10சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாதி மதப் பேயை விரட்டிய சித்தர்கள்!


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 12:54 am

First topic message reminder :

நக்கீரன்


தமிழ்ச் சித்தர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். சித்தர்கள் பற்றிக் கேள்விப்படாதவர்கள் கூட சித்தர் பாடல்கள் இரண்டொன்றைச் செவி மடுத்திருப்பார்கள்.

நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!


திரைப்படத்திலும் வந்து சக்கை போட்ட பாடல் இது. இதை இயற்றியவர் பாம்பாட்டிச் சித்தர்.

பதினெண் சித்தர்கள் என்பது மரபு. ஆனால் அவர்கள் யார் யார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. அதனால் பதினெட்டுக்கும் மேற்பட்ட சித்தர்கள் பெயர்கள் காணப்படுகின்றன.

ஒரு பழம்பாடல் பதிணென் சித்தர்களது பெயர்களை வரிசைப்படுத்துகிறது.

நந்தி, அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீரர்
நற்றவத்துப் புலத்தியர் பூனைக் கண்ணனார்
இடைக்காடர், போகர், புலிக்கையீசர்,
கருவூரார், கொங்கணர், காலாஞ்சி
எழுகண்ணர். அகப்பேய், பாம்பாட்டி
தேரையர், குதம்பையர், சட்டைநாதர்


இந்தச் சித்தர்கள் யார்? அவர்களது வரலாறு என்ன? இவை பெரிதும் மூடு மந்திரமாகவே இருக்கின்றன.

இவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புக்கள் அதிகம் இல்லை. மாறாக அவர்களைப் பற்றிய செவிவழி கதைகளே மிஞ்சி நிற்கின்றன. இவர்களது காலம் 10 ஆம் நூற்றாண்டுக்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகக் கருதப்படுகிறது. திருமூலர் காலம் 10 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம்.

சித்தர்களால் பாடப்பெற்ற பெரிய ஞானக் கோவை என வழங்கும் சித்தர் பாடல்களின் தொகுப்பு நூல் ஒன்றும் சில மருத்தவ நூல்களும் மட்டுமே இன்று கிடைக்கின்றன. பல பாடல்களும் நூல்களும் மறைந்து விட்டன. இருந்தும் இன்னும் அச்சில் வராத ஏட்டுச் சுவடிகள் ஆயிரக் கணக்கில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சித்து அல்லது சித்தி என்றால் ஆற்றல், வெற்றி, கைகூடல் என்று ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. ஒருவர் அசாதாரண செயலைச் செய்தால் அவர் சித்து விளையாட்டு செய்கிறார் என்பது பொருள். ஒருவர் தேர்வில் சித்தி எய்திவிட்டார் என்றால் அவர் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார் என்று பொருள். போன காரியம் சித்தி என்றால் போன வேலை கைகூடிவிட்டது என்று பொருள்.

எனவே சித்தர்கள் என்றால் பேராற்றல் படைத்தவர்கள் என்று பொருள். பொதுவாக அட்டமா சித்திகள் (எண்வகை ஆற்றல்) கைவந்தவர்களே சித்தர்கள் எனப்படுகிறார்கள்.
மகாகவி பாரதியார் கூட தன்னை ஒரு சித்தர் என்று சொன்னார்.

எனக்கு முன்னே
சித்தர் பலர் இருந்தாரப்பா!
யானும் வந்தேன் ஒருசித்தன்
இந்த நாட்டில்


என்கிறார். மேலும் தாம் இயற்றிய புதிய ஆத்தி சூடியில் சித்தர் பாணியில்-

அச்சம் தவிர்
ஏறுபோல் நட
தெய்வம் நீ என்றுணர்
நினைப்பது முடியும்


என அடித்துச் சொல்கிறார்.

தமிழ்ச் சித்தர்கள் மருத்துவம், புவியியல், மந்திரம், தந்திரம், ஞானம், யோகம், இரசவாதம் பற்றி பாடல்கள் பாடியுள்ளார்கள். ஆனால் சமுதாயத்தைப் பற்றி யாரும் தனி நூல் இயற்றவில்லை. ஆயினும் அனைத்துச் சித்தர் பாடல்களில் சமுதாய சீர்திருத்த மறுமலர்ச்சிக் கருத்துக்கள் மிகுந்திருப்பதைக் காணலாம்.

தமிழ்ச் சித்தர்களது சித்த மருத்துவம் புகழ்பெற்றது. சித்த மருத்துவத்தில் செடி, கொடி, கனி, கிழங்கு, வேர், பட்டை போன்றவற்றில் இருந்து மட்டும் அல்லாது தங்கம், உப்பு, பாதரசம் (mercury) போன்ற உலோகங்களில் இருந்தும் நவ பாஷாணங்களில் இருந்தும் மருந்து தயாரிகப்படுகிறது.

தமிழ்ச் சித்தர்கள் பக்தி மார்க்கத்தைப் பின்பற்றாது குண்டலினி யோக மார்க்கத்தைப் பின்பற்றினார்கள். உயிர் மட்டுமல்ல. உடலும் நித்தியமானது என்பது இவர்கள் கோட்பாடு. .

சாதி மத பேதத்தை கடுமையாகக் கண்டித்தார்கள். மனித குலம் ஒன்று. தேவனும் ஒன்றே என்றார்கள்.

சைவ சித்தாந்தத்தில் உள்ள சரியை கிரியை இரண்டையும் கண்டித்தார்கள். உருவ வழிபாட்டைச் சாடினார்கள். சுரண்டலையே குறியாகக் கொண்ட பிராமணீய சடங்குகளைக் கடுமையாக எதிர்த்தார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:12 am

சோழ பாண்டிய பேரரசுகள் மறைந்த மர்மம் என்ன?

தேவாரம் பாடிய ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் குறிப்பிட்ட தலங்களை பிற்காலச் சோழர்கள் (விஜயாலயன் (கி.பி. 846-881) முதல் மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி.1180-1218) வரை) கற்றளிகளாக மாற்றிக் கட்டினர்.

மேலும் புதிதாகவும் காவிரிக் கரையின் வளமிக்க பகுதிகளில் சிவாலயங்கள் பலவற்றைக் கட்டினர்.

உருவ வழிபாடும் இவர்கள் காலத்திலேயே அதிகரித்தன. சிவனுக்கு மட்டும் முப்பதற்கும் அதிகமான வடிவங்கள் வடிக்கப்பட்டன.

சோழர் கட்டிய கோயில்களில் முதலாம் இராச இராசன் (கி.பி.985-1012) கட்டிய தஞ்சைப் பெருவுடையார் கோயில் மிகவும் புகழ் படைத்தது.

அவனது மகன் முதலாம் இராசேந்திரன் எண்ணிறந்த கோயில்களைக் கட்டியும் புதுப்பித்தும் திருப்பணி செய்தான். அதில் கங்கை கொண்ட கோழீச்சுரர் கோயில் ஒன்றாகும். அதற்கு 2,150 கூலம் நெல்லும், 65 கழஞ்சி பொன்னும் நிவந்தமாக கொடுத்தான்.

முதலாம் இராசேந்திரனின் இராசகுருவாக இருந்த சர்வசிவ பண்டிதருக்கும் அவர் மாணாக்கர்களுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை ஏராளமான நெல் அளித்தான்.

இந்த சர்வசிவ பண்டிதரே தஞ்சைப் பெரிய கோயிலில் பூசை செய்தவர். அவருடைய சீடர்கள், சீடர்களின் சீடர்கள், ஆரியதேசம், மத்தியதேசம், கௌடதேசம் ஆகிய இடங்களில் வாழ்ந்தவர்களுக்கும் முதலாம் இராசேந்திரன் கொடை அளித்தான். (டாக்டர் மங்களமுருகேசன் எழுதிய "சோழர் வரலாறு" பக்கம் 234)

தமிழகத்தில் சோழநாட்டில் உள்ளது போல் சேர சோழ பாண்டிய நாடுகளில் கோயில்கள் இருக்கவில்லை. சோழநாட்டில் மட்டும் சுமார் 3,000 சிவாலயங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பான்மை பிற்காலச் சோழர் காலத்தில் கட்டப்பட்டவையாகும்.

பேரோடும் புகழோடும் ஆட்சி செய்த சோழர் பரம்பரை மூன்றாம் இராசேந்திர சோழன் ( கி.பி.1246-1279) காலத்தில் வீழ்ச்சியுற்றது.

நூற்றுக் கணக்கான கோயில்களைப் புதிப்பித்தும், புதிதாகக் கட்டியும், ஆயிரக்கணக்கான பிராமணர்களை வட நாட்டில் இருந்து இறக்குமதி செய்து அவர்களுக்கு நிவந்தமாக ஆயிரக்கணக்கான அக்கிரகாரங்கள், சதுர்வேதிமங்கலங்கள் போன்ற குடியிருப்புக்களை இறையிலி நிலங்களாகக் கொடுத்தும், மூவர் பாடிய தேவாரங்களைத் திருமுறை ஆகவும் ஆழ்வார்களின் பாடல்களை நாலாயிரதிவ்வியப் பிரபந்தம் ஆகவும் தொகுத்தும், ஆறுகால பூசைகள், வேள்விகள், திருவிழாக்கள் போன்ற புண்ணிய பணிகள் செய்தும் பிற்கால சோழ வம்சம் 434 ஆண்டுகளே நீடித்தது.

கங்கை கொண்ட, கடாரம் வென்ற, திக்கெட்டும் வெற்றி கொண்டு கடல்கடந்தும் பேராட்சி செய்த சோழப் பேரரசு பொலிவிழந்து, புகழிழந்து, அரசியல் சூழ்ச்சிக்கு பலியாகி வீழ்ச்சியுற்றது. அதன் வீழ்ச்சிக்கு வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக் காட்டும் காரணிகள் பின்வருமாது.

1) செல்வாக்குப் படைத்த குறுநில மன்னர்கள் தன்னிச்சையாக நடந்து கொண்டது.

2) சமயப் பூசல்கள். விசிட்டாத்துவைதம் பரப்பியவரும் தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்று சமயத்துறையில் மாபெரும் புரட்சி செய்த வைணவப் பெரியார் இராமனுசர் நாடுகடத்தப்பட்டார். தில்லை கோவிந்தராசர் சிலை கடலில் தூக்கி எறியப்பட்டது.

3) இராசத்துரோகம் மற்றும் சிவத்துரோகம். கோயில் சிலைகளையும் பொருளையும் அர்ச்சகர்களே களவாடினார்கள்.

4) வர்ணதரும அடிப்படையிலான சாதிப்பாகுபாடு மேலும் ஆழ வேரூன்றியது. பார்ப்பனர்கள் செல்வாக்கு சமூகத்தில் கொடி கட்டிப் பறந்தது. அரசர் வணிகர் இருசாராரும் பார்ப்பனர்களைப் போற்றிக் கொண்டாடினர். வுpரதம், வேள்வி, மறுபிறப்பு, சொர்க்கம், புண்ணியம் போன்ற சமய சிந்தனைகள் வேரூன்றிவிட்ட பிறகு அந்தக் கருத்துக்கு சொந்தக்காரர்கள் செல்வாக்குப் பெற்றது வியப்பல்ல. மறுபுறம் பார்ப்பனர் அல்லாத சாதியாரிடம் வலங்கை இடங்கைப் பிரிவுகள் இருந்தன. வலங்கை இடங்கை பிரிவுகள் ஒவ்வொன்றிலும் 98 குலங்கள் இருந்தன. வர்ண தர்மத்துக்கு இறைச தந்தையின் தொழிலை பிள்ளை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டது.

5) கோயில்கள் கட்டி அவற்றைப் பராமரித்ததில் அரச கருவூலம் வெறுமையானது.

6) பாண்டியர் படையெடுப்பு

மூன்றாம் இராசேந்திர சோழனை போரில் தோற்கடித்த இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ( கி.பி.1238-1251) இரண்டாம் பாண்டியப் பேரரசை வலிமைப் படுத்தினான்.

அவனைத்தொடர்ந்து சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி.1253-1274), மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி.1268-1310) அரியணை ஏறினர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:12 am

குலசேகரனுக்கு சுந்தரபாண்டியன் வீரபாண்டியன் என இரண்டு மகன்கள் இருந்தார்கள். சுந்தரபாண்டியன் பட்டத்தரசியின் மகன். வீரபாண்டியன் மற்றொரு அரசியின் மகன்.

குலசேகரன் சுந்தரபாண்டியனின் திறமையை மெச்சி குலசேகரன் அவனுக்கு இளவரசர் பட்டம் கட்டினான். அதனால் ஆத்திரம் அடைந்த வீரபாண்டியன் மன்னனை கொலை செய்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றினான்.

சுந்தரபாண்டியன் மதுரையை விட்டு ஓடினான். இது நடந்தது கி.பி. 1310 ஆம் ஆண்டாகும்.

அஞ்சி ஓடிய சுந்தரபாண்டியன் தில்லிக்குச் சென்று அலாவுதீன் கில்ஜியின் படை உதவியை நாடினான். கில்ஜி தனது படைத்தளபதி மாலிக்கபூர் தலைமையில் படை அனுப்பினான்.

மாலிக்கபூர் வழியில் காணப்பட்ட இந்துக் கோயில்களை எல்லாம் கொள்ளையடித்தான். அவனது படையை எதிர்கொள்ள அஞ்சிய வீரபாண்டியன் மதுரையை விட்டு ஓடி காட்டுக்குள் மறைந்து கொண்டான். கண்ணனூரில் தங்கி இருந்த மாலிக்கபூர்படையில் அங்கு வாழ்ந்த 20,000 முஸ்லிம்கள் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

சிதம்பரம் (பிரம்மஸ்த்பூரி) இந்துக் கோயிலில் பெரும் செல்வம் இருப்பதைக் கேள்விப்பட்ட மாலிக்கபூர் அதைத் தாக்கி பொருட்களைக் கொள்ளையடித்தான். கோயிலைப் பாதுகாத்த வீரர்கள் மற்றும் கோயிலில் பணிபுரிந்த பிராமணர்கள் கொல்லப்பட்டார்கள். பொன்னாலான பல இலிங்கங்களும் வேத நாராணயன் சிலையும் கைப்பற்றப்பட்டன. கோயில் இடிக்கப்பட்டு தரைமட்டம் ஆக்கப்பட்டது.

அடுத்து திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயில் மீது படையெடுத்து அங்கு இருந்த பெருமாளின் படிமத்தையும் மற்றும் விலையுயர்ந்த படிமங்களையும் கைப்பற்றி அவற்றை தில்லிக்கு அனுப்பி வைத்தான். கோயில் இடித்து தரைமட்டமாகக்கப்பட்டது.

மாலிக்கபூரின் படையெடுப்பின் போது 512 யானைகள், 20,000 குதிரைகள், 800 மணங்கு பொன், முத்துக்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன.

மாலிக்கபூர் வீரபாண்டியனைத் தோற்கடித்து சுந்தரபாண்டியனை ஆட்சியில் அமர்த்தினான். ஆனால் அவன் மாலிக்கபூருக்கு அஞ்சி தனது சித்தப்பாவான விக்கிரமபாண்டியன் உதவியோடு மாலிக்கபூரைத் தாக்கி புறமுதுகு காணச் செய்தான்.

மீண்டும் சுந்தரபாண்டியன் வீரபாண்டியன் இருவருக்கும் இடையில் அரியணைப் போட்டி ஏற்பட்டது. 1323 இல் உலூக்கான் படையெடுப்பில் பாண்டிய நாடு சுல்தானியர் வசமானது.

சோழப் பேரரசின் வீழ்ச்சிக்குரிய அதே காரணிகளே பாண்டிய அரசின் வீழ்ச்சிக்கும் காரணிகளாக அமைந்தன. சோழர் காலத்தில் காணப்பட்ட வலங்கை இடங்கைப் பிரிவுகளும், 98 கிளைப் பிரிவுகளும் காணப்பட்டன.

தமிழினம் வர்ணதர்மம் விதைத்த சாதி நோயினால் தாறுமாறாக பிளவுண்டு ஒற்றுமையின்றி கிடந்த காரணத்தால் அதனை எதிரிகள் எளிதில் அடிமைப்படித்தினர்.

பின்னர் தமிழகத்தை ஆண்ட விசயநகர கிருஷ்ணதேவராயன் தன் 'அமுக்த மாலதிய" என்ற நூலில் அரசாங்கத்திலுள்ள சிவில், இராணுவப் பதவிகளைப் பார்ப்பனர்களுக்கே வழங்கவேண்டு என்று எழுதியுள்ளான். (சோழர்களின் அரசியல் கலாச்சார வரலாறு-பாகம் 2 பக்கம் 60) இவன் 15 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவன்.

பின்னர் 1799 இல் சுதேசி மக்களுக்கான சட்டங்களைத் தொகுத்த கவர்னர் ஜெனரல் சர் வில்லிய ஜோன்ஸ் என்பான் மனு சாத்திர முதலியவற்றின் அடிப்படையில் தொகுத்ததுதான் ர்iனெர டுயற. அவன்தான் சட்டத்திற்கும் மதத்திற்கும் முதல்முறையாக இந்து என்ற பெயரை வைத்தவன்.

இரண்டு கிழமைகளுக்கு முன்னர் தசரதா விழா கொண்டாடப்பட்டது. பாளையங்கோட்டையில் நடந்த தசரதா திருவிழாவில் எல்லா அம்மன்களும் சப்பரத்தில் திருவீதி உலா வந்தனர். இதில் என்ன புதுமை? வழக்கமாக நடப்பதுதானே? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. கொஞ்சம் பொறுங்கள்!

இவை சாதாரணன அம்மன்கள் அல்ல. சாதி அம்மன்கள்! யாதவர் உச்சினி மாகாளி, யாதவர் தூத்துவாரி, விஸ்வகர்மா அம்மன், தேவர் உலகம்மன், பிள்ளைமார் முத்தாரம்மன், உலகம்மன் என்று எழுதி வைக்கப்பட்டிருந்தது!

இதன் பொருள் என்ன? அந்தந்த சாதி அம்மன்கள் அந்தந்த சாதி மக்களுக்குத்தான் அருள்பாலிப்பார் என்பதுதானே?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:12 am

இந்த 21 ஆம் நூற்றாண்டில் இப்படியான காட்டு மிராண்டிகள் இருக்கிறார்கள் என்றால் முதலாம் இராச இராசன், முதலாம் இராசேந்திரன் காலத்தில் எந்தவிதமான காட்டு மிராண்டிகள் இருந்திருப்பார்கள்? 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று பாடிய பாரதியார் காலத்தில் எத்தனை காட்டுமிராண்டிகள் இருந்திருப்பர்? தமிழ்ச் சித்தர்கள் காலத்தில் எத்தனை மூடர்கள் இருந்திருப்பார்கள்?

காந்தியாரும் சாதியை ஒழிப்பதற்குப் பதில் தாழ்ந்த சாதியினருக்கு ஒரு புதுப் பெயர் சூட்டினார். அரிசனர் என்பதுதான் அந்தப் பெயர். அரி என்றால் படைப்புக் கடவுளான திருமால்.

அரிசனர்கள் ஆலயங்களில் நுளைய எடுத்த முயற்சி ஓரளவு வெற்றி கண்டது.

ஆனால் சாதி இந்துக்களின் மனக்கதவுகளைத் திறக்கும் முயற்சி தோல்வி கண்டது.

சிருங்கேரி சங்கராச்சியாரை தரிசிக்க விஜய நகர மன்னன் வந்தான். அப்பொழுது குளிர் காய்ச்சலில் நடுங்கிக் கொண்டு இருந்தார் சங்கரர்.

மரப்பலகையில் மன்னன் அமர்ந்தான். தனக்காகப் போடப்பட்டு இருந்த மனைப் பலகையை எடுத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டார். சங்கரர் சிறிது நேரத்தில் அந்தப் பலகை நடுங்க ஆரம்பித்ததாம்.

மன்னன் விழிப்புடன் அதனை நோக்கினான். விளக்கமும் கேட்டான். அதற்கு சங்கரர் என்ன சொன்னார்?

'எனக்கு வந்த குளிர் காய்ச்சலை உம்மைச் சந்திப்பதற்காக அந்தப் பலகைக்குச் சிறிது நேரம் மாற்றினேன். அதனால்தான் அந்தப் பலகை நடுங்குகிறது' என்றாராம்..

'பலகைக்கு அதனை மாற்றாமல் நிரந்தரமாக உங்களுக்கு ஏற்பட்ட அந்த உபாதையை முற்றிலுமாக விலக்கி வைக்க முடியாதா?' என்று அரசன் கேட்டான்.

'கூடாது. கர்மப் பலனை யாராக இருந்தாலும் அனுபவித்தே ஆக வேண்டும்' என்று பதில் சொன்னாராம் சங்கரர். (ஆதாரம்"விஜயபாரதம்" 8.10.2004)

கர்ம பலனை மாற்றக் கூடாது என்றால் சிறிது நேரமோ, அதிக நேரமோ அந்தப் பலனை பலகைக்கு மாற்றியது எப்படிச் சரியாகும்"?

இவர் செய்த கர்மத்திற்கு அந்தப் பலகை என்ன 'பாவம்" செய்தது? அது ஏன் காய்ச்சலை அனுபவிக்க வேண்டும்"?

கர்ம பலனை நிலைநிறுத்த வேண்டும் அந்த நம்பிக்கையை மக்களிட திணிக்க வேண்டும் என்கிற உள் நோக்கம்தான் இதற்குள் திணிக்கப்பட்டுள்ளது.

கீழ்சாதி - கர்ம பலனின் விளைவு!
தீண்டாமை - கர்மபலனின் தீண்டல்!


இவற்றை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான் இதற்குள் பதுங்கி இருக்கும் சூழ்ச்சி. அதிலும் சங்கர மடங்களை நிறுவிய ஆதி சங்கரர் பிராமணிய மேலாண்மையின் அடிநாதமான நால் வர்ணதர்மத்தை பூலோகத்தில் நிலை நாட்டவே கலியுகத்தில் அவதாரம் எடுத்தவராம்.

'சில நேரங்களில் மட்டும் கிருஷ்ண பகவான் ஞானோபதேசம் செய்தால் போதுமானதாக இருக்கிறது. மற்ற சமயங்களில் அவர் ஆயர்பாடியில் லீலை செய்தார், துவாரகையில் ராச்சியபாரம் செய்தார், பஞ்ச பாண்டவர்களுக்காகத் தூது போனார். கலிகாலத்தில் இப்படிச் செய்தால் போதாது. அதிக இருட்டு இருப்பதால் நிறைய விளக்கு வேண்டும். ஒரு வாழ்நாள் முழுவதும் ஞானோபதேசம் ஒன்றுக்காகவே அவதாரம் செய்ய வேண்டும்' என்று பரமேசுவரன் எண்ணினார்.

சகல வித்தைகளுக்கும் நாயகனான அந்த சதாசிவனே ஆதிசங்கரர் ஆக அவதரித்தாராம். (காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சியார் எழுதிய 'தெய்வத்தின் குரல்'). வருணதர்மத்துக்கு மெருகூட்டிய கலியுக அவதாரத்தை, கண்கண்ட தெய்வத்தை அடுத்த வாரம் அண்மைக் காட்சியில் பார்ப்போம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:16 am

வர்ண தர்மத்தை மீள் நிலைநாட்டிய ஆதி சங்கரர்

சாட் சாத் அந்த சதாசிவனே ஆதிசங்கரராக அவதரித்தார் என்றும் சங்கரர் சிவ அவதாரமே என்பதற்கு யசுர் வேதத்திலேயே ஆதாரம் இருக்கிறது என்றும் அவர் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார் என்றும் காஞ்சி சங்கராச்சியார் சொல்கிறார்.

சிவன் அவதாரம் எடுத்தாரா? இது புதுக் கதையாக இருக்கிறதே? காத்தல் கடவுளான திருமால்தானே அவதாரம் எடுப்பதில் பெயர் போனவர்? அவதாரம் அவரது துறையாயிற்றே என்று நீங்கள் கேட்கக் கூடும்.

சிவன் அவதாரம் எடுத்ததற்கான காரணத்தை காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சியார் சொல்லியிருக்கிறார். அதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

'சில நேரங்களில் மட்டும் கிருஷ்ண பகவான் ஞானோபதேசம் செய்தால் போதுமானதாக இருக்கிறது.. கலிகாலத்தில் இப்படிச் செய்தால் போதாது. பழைய யுகங்களில் அசுரர்கள் என்ற தனியான இனத்தவர்கள் இருந்து தேவர்களை வருத்துவார்கள். அவர்களைக் கொல்ல விட்ணு ஆயுதபாணிகாக வருவார்.

ஆனால் கலியுகத்தில் அசுரர்கள் தனியாக இல்லை. எல்லா மனிதர்களது மனதிலும் அசுரன் புகுந்து விட்டான். இதனால் யாரை அழிப்பது யாரை விட்டுவிடுவது? எனவே விட்ணு அவதாரம் இப்போது வேண்டாம் எனறு பரமேசுவரன் கருதி ஒரு பிராமணக் குடும்பத்தில் அவதரித்தார்.

அதாவது அதிக இருட்டு இருப்பதால் நிறைய விளக்கு வேண்டும். ஒரு வாழ்நாள் முழுவதும் ஞானோபதேசம் ஒன்றுக்காகவே அவதாரம் செய்ய வேண்டும் என்று பரமேசுவரன் எண்ணினார். உடனே ஆதி சங்கரராக அவதரித்தார்' என்று சங்கராச்சியார் சொல்கிறார்.

இப்வாறு சிவன் அவதாரம் எடுத்தார் என்பதை சைவ சித்தாந்திகள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். போயும் போயும் பிரமனாலும் விட்டுணுவாலும் அடியும் முடியும் காண முடியாத சிவபெருமான் இந்த மனிதர்கள் (நரகர்கள்) வாழும் உலகத்தில் பிறந்தார் என்பது அவருக்கு இழுக்கு என்று அவர்கள் நினைக்கிறார்கள். ( தெய்வத்தின் குரல்)

இப்போது புராணப் புளுகை விட்டுவிட்டு உண்மைக்கு வருவோம். அந்த உண்மை என்னவென்றால் சங்கரர் கேரளாவில் (அன்றைய சேர நாடு) காலடி என்னும் சிற்றூரில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் (கி.பி. 788-820) ஒரு நம்பூதிரி பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.

சிறு வயதிலேயே வேதங்களையும் உபநிடதங்களையும் படித்துத் தேறிய சங்கரர் வியாசர் அருளிய பிரம்மசூத்திரம், வேத ரிஷிகள் அருளிய பத்து உபநிடதங்கள், கண்ணன் அர்ச்சுனனுக்கு உபதேசித்த கீதை ஆகிய மூன்று நூல்களுக்கும் உரை இயற்றினார். இவைகள் 'பாஷ்யம்' எனப்படும். இந்நூலின் மூலக் கருத்துக்களையே மையமாகக் கொண்டு அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சங்கரர் அநேக வேதாந்த நூல்களை இயற்றியுள்ளார். அவைகள் 'பிரகரண கிரந்தங்கள்' எனப்படும்.

இவை தவிர குழந்தைகளுக்கு இதே கருத்தும், பக்தியும் கொண்ட 'கணேச பஞ்ச ரத்னம்'போன்ற தோத்திரங்களையும் இயற்றியுள்ளார்.

சங்கரருக்கு வேத உபநிடதங்களுக்கு உரை எழுத வேண்டிய அவசியம் இருந்தது. வேத உபநிடதங்கள் அனைத்தையும் ஒருவர் படித்து பொருள் அறிந்து கொள்வது மிக அரிதான செயல். அதைவிட அரிது அவற்றை மற்றவர்களுக்கு எடுத்து விளக்குவது.

பாதராயணர் என்பவர் வேத உபநிட கருத்துக்களை நீக்கி அதனை வேதாந்த சூத்திரம் (பிரம்ம சூத்திரம்) ஆக வெளியிட்டார். ஆனால் அது சுருக்கமாக சூத்திர வடிவில் இருந்ததால் தெளிவுக்குப் பதில் குழப்பத்தையும் வேற்றுமையையும் விளைவித்தது.

வேத உபநிடங்களில் காணப்படும் தெளிவின்மையையும் முரண்பாட்டையும் நீக்கப் பலர் முயன்றனர். அவர்களில் முதன்மையானவர் சங்கரர். பிரம்ம சூத்திரத்துக்கு சங்கரர் எழுதிய பாடியமே வேதாந்த மதத்திற்கு பிரமாண நூலாகும்.

பிரமமும் உயிரும் (ஆன்மா அல்லது ஜீவன்) உலகமும் ஒன்றா அல்லது வேறு வேறா என்று நடந்த விவாதத்தில் பிரமமே மூலப் பொருள் என்றும் உயிர்களும் உலகமும் அந்த பிரமத்தின் தோற்றமே என்றும் நம் கண் முன்னே காணப்படும் உலகம் ஒரு மாயத் தோற்றம் (மாயாவாதம்) என்பதும் சங்கரரின் வாதமாகும். இதுவே அத்துவைதம் என்ற தத்துவமாகும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:17 am


சங்கரர் தாம் எழுதிய நூல்கள் அனைத்திலுமே பிராமணர்கள் மிகவும் மேம்பட்டவர்கள் எனற முடிவான கருத்தை முன் வைக்கிறார்.

சங்கரர் கருத்துப்படியும் வேதம் மற்றும் ஸ்ம்ருதிகள் சமுதாயத்தை பிராமணன், சத்திரியன், வைசிகன், சூத்திரன் என நான்கு வர்ணங்களாக பிரிக்கிறது.

இவர்கள் முறையே பிரமனது தலை, தோள், தொடை, கால் இவற்றில் இருந்து படைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதில் சூத்திரன் (தமிழர்கள் எல்லோருமே சூத்திரர்கள்) மற்ற மூவருக்கும் தொண்டு செய்வதே அவனது சுய தர்மமாகும்.

சூத்திரன் தத்துவஞானம் பெறுவதற்கு உரியவன் அல்லன்.

சூத்திரனுக்கு உபநயனம் கிடையாது.

சூத்திரன் சுடுகாட்டுக்குச் சமம். அவன் இருக்கும் இடத்தில் வேதம் ஓதக் கூடாது.

வேதத்தை சூத்திரன் ஒளிந்திருந்து கேட்டால் அவன் காதில் இரும்பைக் காய்ச்சி ஊத்த வேண்டும்.

சூத்திரனுக்கு ஞானத்தை உப தேசிக்கக் கூடாது. வேதம் படிப்பது, வேள்வி செய்வது, தானம் வாங்குவது பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு. (பிரம்மசூத்திரம் 13 -34).


மனு சொன்னது போல் உழைப்பைத் தவிர சூத்திரன் எதைச் செய்தாலும் அவனுக்குப் பயனில்லை.

மேற்கண்ட பிரம்ம சூத்திர விளக்கம் உழைக்கும் மக்களைப்பற்றி சங்கரர் எவ்வளவு இழிவான, மனித நேயமற்ற, பிற்போக்கான கருத்துக்களை கொண்டிருந்தார் என்பதை அறிய உதவுகிறது.

உழைக்காத மேல் வர்ணத்தவரான பிராமணர்கள் உழைக்கும் வர்ணத்தவரான சூத்திரர்களது உழைப்பை சுரண்டுவதற்காகவே இந்த வேத ஸ்மிருதிகள் எழுதப்பட்டுள்ளன.

'அடிமைகள், மேற்தட்டு மக்களுக்கு அளித்த இன்பத்தையும் பெருமகிழ்ச்சியையும் ஒளிவு மறைவு இல்லாமல் ரிக்வேதம் கூறுகிறது. கடவுள் அருளியதென்றும் மிகப் புனிதமானதென்றும் இந்துக்காளால் கருதம் வேத இலக்கியங்களில் இந்தப் பாடல்கள் உள்ளன. (எஸ்.ஏ. டாங்கே எழுதிய 'பண்டைக்கால இந்தியா' பக்கம் 170-171)

இந்த இலட்சணத்தில் 'வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க' என்றும் 'நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க' என்றும் ஏன் சேக்கிழார் நால்வேதத்தை புகழ்ந்த பாடினார் என்பது விளங்கவில்லை. அவர் சூத்திரர் என்பதால் வேதத்தைப் படிக்க அவருக்கு வாய்ப்பே இருந்திருக்காதே!

டாக்டர் அப்பேத்கார் சாதி வேற்றுமைகளையும் தீண்டாமையையும் மனு நீதியாகக் கொண்டார் என்பதற்காக மனுஸ்மிருதியை நாடெங்கும் தீயிட்டுக் கொளுத்தினார்.

'ஆதி சங்கரர் வேதம் முழுமயையும் ஒப்புக் கொண்டார். வேதம் கூறும் சகல தெய்வங்களையும், வேதம் விதிக்கும் சகல கர்மாக்களையும் ஒப்புக்கொண்டார். அவற்றின் லஷி;யமாக வேத சிராஸன உபநிஷத்தின் முக்கிய தாத்பரியமான ஜீவனும் பிரமமும் ஒன்றே என்ற அத்துவைதத்தை ஸ்தாபித்தார். ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பிறகு வைதிக தர்மத்தை நிலைநாட்டிய ஸ்ரீ ஆதி சங்கரரும் ஜெகத்குரு என்ற விருதைப் பெற்றார். ' என்கிறார் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியார். (ஒரு தெய்வத்தின் குரல்)

ஆதி சங்கரர் அத்வைதம் பேசினாலும் நடைமுறை வாழ்க்கையில் சாதியையும் தீண்டாமையையும் கடைப்பிடித்தார் என்பதற்கு அவரின் வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் ஒரு நிகழ்ச்சி சான்றாக இருக்கிறது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:18 am

ஒரு நாள் சங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர்கள் புடைசூழ விசுவநாதர் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

ஆதி சங்கரர் நம்பூதிரி பிராமணர். பிராமணரைக் கண்டால் மற்றக் கீழ்ச் சாதியார் பத்து முழம் விலகி அவர்களுக்கு வழிவிட வேண்டும். சூத்திரர் நிழல் பட்டாலே தீட்டு என்பது மனு தர்மம்!

அப்போது ஒரு புலையனும் புலைச்சியும் சங்கரர் சென்று கொண்டிருக்கும் திசைக்கு எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்தார்கள். புலையனும் புலைச்சியும் விலகி அவருக்கு வழிவிடவில்லை. வழிவிடுவபவர்கள் போலவும் தெரியவில்லை. சங்கரர் அவர்களை விலகிப் போகுமாறு கைகளால் சைகை செய்தார்.

'நம்முடய ஆச்சாரியார் போகிற வழியில் குறுக்கே வந்து விட்டார்கள். போதாக் குறைக்கு கையில் நான்கு நாய்களை புலையன் பிடித்திருக்கிறான்! போ! போ! விலகிப் போ! எட்டிப் போ" என்று சங்கரரின் சீடர்கள் கூவினார்கள்.

புலையன் சிரித்தான்! "அத்வைதம் அத்வைதம் என்று சொல்லிவிட்டு என்னை விலகிப் போக சொல்கிறீர்கள்? இது பெரிய முரண்பாடு அல்லவா? எல்லாம் ஒரே சத்தியமான கடவுளின் தோற்றம்தான் என்கிறது உங்கள் அத்வைதம். அவ்வாறெனில் உங்களைப் போலவே நாங்களும் அந்த சத்தியத்தின் தோற்றம்தான.; உடல் நமக்கு வேறு வேறானாலும், உடலுக்குள் இருக்கிற பரமாத்மா ஒன்று தான். இந்த உடம்பைப் பற்றிய எண்ணத்தை விலக்கி விட்டுப் பரமாத்மாவாக இருக்க வேண்டும் என்று தான் இந்த ஆசிரியர் உபதேசிக்கிறார்.

அப்படியிருக்க, உங்கள் உடம்பின் அருகிலிருந்து எங்கள் உடம்பு விலகிப் போக வேண்டும் என்று சொல்வதில் பொருள் இல்லை. உங்கள் உடம்புக்குள் உள்ள ஞான ஒளியிலிருந்து எங்கள் உடம்பிலுள்ள ஞான ஒளி விலக வேண்டும் என்று நீங்கள் கருதினால் அதுவும் அர்த்த மற்றதாகும். ஏனெனில் இந்த ஞான ஒளிகள் அனைத்தும் ஒன்றுதான். ஒருவன் நம்மை அடித்தால் வேறொருவன் நம்மை அடிப்பதாக நினைப்பது தவறு. நாமே நம்மை அடித்துக் கொள்கிறோம் என்பதுதான் சத்தியம். தன்னை விட்டு தான் எப்படி விலக முடியும்?' இப்படி ஆணித்தரமாகக் கேட்டான் அந்தப் புலையன்.

உடனே சங்கரர் இப்பேர்ப்பட்ட ஞான நிலயை அடைந்தவன் புலையனாக இருக்கமுடியாது! காசிவிஸ்வநாதரும் விசாலாட்சி அம்மையாரும் தம்மைப் சோதிக்க வந்துள்ளனர் என்பதை ஞான திருஷ்டியில் உணர்ந்து 'மனீஷா பஞ்சகம்' என்ற ஐந்து சுலோகங்களைப் பாடினார். உடனே புலையன் நின்ற இடத்தில் விஸ்வநாதப் பெருமான் நின்றார். புலைச்சி விசாலாட்சியானாள். நான்கு நாய்களும் நால் வேதமாயின!

'என் மறு உருவம் ஆன சங்கரா! வாய்ப் பேச்சில் மட்டும் வேதாந்தம் கூறாமல் வாழ்வியலிலும் நீ நடத்திக் காட்டுபவன் என்று உலகறியவைக்க இந்த நாடகம் ஆடினேன்' என்று ஆசி வழங்கி காசி விசுவநாதரும் விசாலாட்சியும் மறைந்தனர் என்று கதை முடிகிறது. (தெய்வத்தின் குரல்)

இந்தக் கதையில் கூட சிவனாரின் மறு அவதாரமான சங்கரர் ஞான நிலை அடைந்தவன் புலையனாக இருக்க முடியாது என்ற முடிவோடு இருந்தார் என்ற உண்மையே சொல்லப்பட்டுள்ளது.

வேதம் இன்றி வர்ண தர்மம் இல்லை. வர்ண தர்மம் இன்றி வேதம் இல்லை. வேதத்திற்கும் வர்ண தர்மத்திற்கும் உட்பட்டதே சங்கரரின் அத்வைதம்.

'ஸ்ரீகிருஷ்ணனுக்குப் பிறகு வைதிக தர்மத்தை நிலைநாட்டிய ஸ்ரீ ஆதி சங்கரரும் ஜெகத்குரு என்ற விருதைப் பெற்றார்' என்று காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியார் சொல்வது முக்காலும் உண்மை.

அந்த கிருஷ்ண பரமாத்மா வர்ண தர்மம் பற்றி என்ன சொன்னார்?

"சதுர்வர்ணயம் மாயா ஸ்ருஷ்டம் குண-கர்ம விபாகச:
தஸ்ய கர்த்தாரமபி மாம் வித்த்யகர்த்தார-மவ்யயம்"

( கீதை அத். 4- சுலோகம் 13)

'நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை, அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ண தர்ம உற்பத்தியாளனாகிய (கர்த்தா) என்னால் கூட முடியாது' (Though I am the creator of the four fold caste, know Me to be incapable of action or change).

கீதை சாமானிய நூல் அல்ல. அது நால் வேதங்களையும் பிழிந்து வடிகட்டிய சாறு. தொட்டதற்கு எல்லாம் இந்து மதவாதிகள் கையில் எடுக்கும் போர்வாள்.

இந்து மதத்தையும் அதன் அடிநாதமான சாதி அமைப்பையும் வரலாற்றுப் பின்னணியில் சரிவரப் புரிந்து கொண்டாலே அதற்கெதிரான தமிழ்ச் சித்தர்களது போராட்டத்தின் வலிமை தெரியும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:39 am

சங்கர மடங்கள் வர்ண தர்மத்தையும் பிராமணியத்தையும் கட்டிக் காக்கின்றன!

சென்ற கிழமை 'நான்கு வருணங்கள் என்னால் உண்டாக்கப்பட்டவை, அவரவர்களுக்குரிய கருமங்களை அவரவர் மீறாமல் செய்யவேண்டும். அதனை மாற்றிச் செயல்பட வைக்க அந்த வர்ணதர்ம உற்பத்தியாளனாகிய என்னால் கூட முடியாது' என்று கிருஷ்ண பரமாத்மா ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்திருந்ததைப் பார்த்தோம்.

நான்கு வருணங்களையும் தானே உண்டாக்கியதாக கிருஷ்ண பரமாத்மா கூறுவது அருட் செயல் அல்ல. ஆண்டவன் அவதாரத்துக்கு அழகும் அல்ல.

இந்த உலகத்தில் என்றென்றும் வேற்றுமையை நிலை நிறுத்தவும், ஏற்றத் தாழ்வு என்னும் கொடுமையைத் தொடர்ந்து நடத்த பேருதவி செய்யவுமே கிருஷ்ண பரமாத்மாவின் உபதேசம் உதவும்.

ஒரு சமூகத்தில் உள்ள பெரும்பான்மையினர் அடிமைகளாக நெற்றி வெயர்வை சிந்தி உழைக்கவும் அந்த உழைப்பை ஏனைய வருணத்தார் உண்டு களிக்கவும் வழிவகுக்கும் ஒரு ஏற்பாட்டுக்கு தானே கர்த்தா என்று சொல்லும் ஒருவன் கடவுளாகவோ, கடவுள் அவதாரமாகவோ இருக்க முடியாது. அவன் ஒரு ஓரவஞ்சகனாக, நீதி நியாயம் அற்றவனாகவே இருக்க முடியும்.

சூத்திரர்கள், கடைப்பட்டோர், பாவிகள், மூடர் என்று ஒதுக்கி மனித இனத்திலே வேற்றுமை வளர்க்கும் ஒருவன் எப்படி கடவுளாய், கடவுள் அவதாரமாய் இருக்க முடியும்?

இப்படி உழைப்பதற்கு ஒரு பெருங் கூட்டத்தையும் அந்த உழைப்பை உறுஞ்சுவதற்கென்றே ஒரு சிறு கூட்டத்தையும் கடவுள் படைக்கிறார் என்ற வருணதர்ம ஏற்பாடு உலகத்திலேயே மதத்தின் பெயரால் ஏற்பாடு செய்யப்பட்ட மிகக் கொடுமையான ஏற்பாடாகும்.

'கடவுளின் சதுர்வர்ணக் கட்டளையை அனுசரிப்பதைக் காட்டிலும், நிறைவேற்றுவதைக் காட்டிலும் உயர்ந்தது எதுவுமில்லை. அவைகளை மீறுவதை விடத் தாழ்ந்தது எதுவுமில்லை' என கீதையில் கிருஷ்ண பரமாத்மா உபதேசிக்கிறார்.

'நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும், குணமற்றதெனினும் சுய தர்மமே சிறந்தது. சுய தர்மத்தில் இறந்து விடினும் நன்றேயாம். பரதர்மம் பயத்துக்கு இடமானது.' ( கீதை 3-35 பாரதியார் உரை)

'சுயதர்மம் பரதர்மம் இவற்றை அறியாதவர்களிடத்தில் அவர்களுடைய கடமைகளைப்பற்றி அறிவுடையோன் எந்தவிதமான குழப்பத்தையும், சந்தேகத்தையும் உண்டாக்கிவிடக் கூடாது. எனவே, நீ சூத்திரர்களைத் தூண்டிவிட்டால் நீ அழிவாய்.'

'ந புத்தி பேதம் ஜனமே-தஜ்ஞானம் கர்மஸங்கினாம்
ஜோஷயேத் ஸர்வகர்மாணி வித்வான் யுக்த: ஸமாசரன்'
( கீதை 3-26)

கீதையில் கர்மம் என்ற சொல் செயல், கடமை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

கடமை என்ற பொருளில் பயன்படுத்தப்படும்போது அது சதுர் வர்ண (நான்கு சாதி) அமைப்பு முறையைக் குறிக்கிறது.

அது போல தர்மம் என்ற சொல்லும் சதுர்வர்ணத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படி ஒழுகும் 'கடமை'யை குறிக்கிறது.

திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர் உரைப் பாயிரத்தில் 'அவற்றுள் அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும் விலக்கியன ஒழி;த்தலும் ஆம்' என எழுதி வைத்திருக்கிறார்.

இப்படி எழுதி வைத்திருப்பது 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்' என்று சொன்ன வள்ளுவருக்குச் செய்யப்பட்ட இரண்டகமாகும்.

ஏணி வைத்தாலும் கீதை திருக்குறளை எட்ட முடியாது. இரண்டும் இரு துருவங்கள்.

கீதை ஒரு குலத்துக்கு ஒரு தர்மம் கற்பிக்கும் மத நூல்.

குறள் மானிட விழுமியங்களையும் ஒழுக்கங்களையும் கற்பிக்கும் பொது நூல்.

'யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிப்-பவதி பாரத
அப்ப்யுத்தான - மதர் மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம் - யஹம்'
( கீதை 4-7)

'எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்குகிறதோ அப்போது ஒவ்வொரு யுகத்திலும் நான் அவதரிக்கிறேன்.'

அடுத்த சுலோகம் (4-8) எதற்காக கிருஷ்ண பகவான் அவதாரம் எடுக்கிறார் என்பதை சொல்கிறது.

நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை (தர்மத்தை) நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன். (பாரதியார் உரை)



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:39 am

இதில் தர்மம் என்ற சொல் வர்ண தர்மத்தைக் குறிக்கிறது. அந்த தர்மத்தைக் காப்பாற்றவே கடவுள் அவதாரம் எடுக்கிறாராம். சாதி தர்மத்தைக் காப்பாற்ற எவ்வளவு பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்பதை மேற்படி சுலோகம் எடுத்துக் காட்டுகிறது.

'சுயதர்மம் என்பது ஒரு வர்ணத்துக்கு அல்லது சாதிக்கு விதிக்கப்பட்ட கடமைகளை ஒருவன் அரைகுறையாகச் செய்வது மற்றவர்களுக்குரிய சுயதர்மத்தை முழுமையாகச் செய்வதிலும் பார்க்க நல்லது' என்கிறது கீதை.

'ஒருவன் பிறரது சுயதர்மத்தை செய்து பெருவாழ்வு வாழ்வதைக் காட்டிலும் தனது சாதி தர்மக் கடமைகளைச் செய்து மரணத்தை அடைவது மேலானதாகும்' என்று அதே கீதை நவில்கிறது.

நான்கு வர்ணங்களையும் அவற்றுக்கு உரிய தொழில்களையும் கிருஷ்ண பரமாத்மா தெளிவாகக் கூறியிருக்கிறார்.

'பரந்தபா! பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி வகுக்கப்பற்றனவாம். (கீதை 18-41 பாரதியார் உரை)

அகக் காரணத்தை அடக்குதல், புறக் காரணத்தை அடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆத்திகம் .... இவை இயல்பிலே தோன்றும் பிராமண கர்மங்களாம். (மேற்படி 18-42)

சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை, இறைமை ... இவை இயற்கையிலே தோன்றும் சத்திரிய கர்மங்களாகும். ( மேற்படி 18-43)

உழவு, பசுக் காத்தல், வாணிகம் இவை இயற்கையிலேயே பிறக்கும் வைசிய கர்மங்களாம்.

தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையால் ஏற்பட்ட தொழில். (மேற்படி 18-44)

இவ்வாறு உபதேசம் செய்து அருச்சுனன் தனது சுயதர்மமான போரைச் செய்யத் தூண்டுகிறான் கண்ணன். தனது பேச்சைக் கேளாமல், அகங்காரத்தால் அருச்சுனன் மறுப்பானாகில் அவன் பெரிய நாசத்தை அடைவான் எனக் கண்ணன் பயமுறுத்துகிறான்.

குருசேத்திர களத்தில் அருச்சுனன் தனக்கு முன்னால் அவனது சகோதரர்களையும். சுற்றத்தாரையும், மாமன், மைத்துனர்களையும், சித்தப்பன், பெரியப்பன்மார்களையும் அவர்களது பிள்ளைகளையும் பாட்டன்மார்களையும் பார்க்கிறான்.

'அவர்களோடு போரிட்டு அவர்களை அழிப்பதென்றால் எமது பண்டைய குலதர்மம் அழிந்துவிடும். அந்த தவறைச் செய்பவன் நரகத்திற்குத்தான் போவார்கள்' என கிருஷ்ண பரமாத்மாவைப் பார்த்து தனது கருத்தைச் சொல்கிறான்.

ஆனால் கிருஷ்ண பரமாத்மாவோ 'அவர்களை நீ கொல்வதனால்தான் நரகத்துக்குப் போகமாட்டாய். பண்டைய குலதர்மத்தை (போர்த் தொழிலை) அழித்த பாவத்திற்காக, குலநாசம் என்கிற மாபெரும் குற்றத்திற்காக நரகத்துக்குப் போவாய்' என்கிறான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:39 am

முடிவாக ஒரு கருத்தை கண்ணன் சொல்கிறான். அவனது கடைசி ஆயுதம் அது!

'எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு, எல்லாப் பாவங்களின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.'
(மேற்படி 18-66)

இதன் பொருள் ஒருவனுக்கு பக்தி இருந்தால் போதும். அவன் அறச் செயல் எதையும் செய்ய வேண்டியதில்லை. நல்லொழுக்கத்தைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டியதில்லை. பக்தி செலுத்தினால் எல்லாப் பாவங்களும் போய்விடும்.

இப்படிப்பட்ட கருத்துக்கள் சமூகத்தில் எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எந்தப் பாவத்தையும் செய்யலாம். கடவுள் மீது பக்தி செலுத்தினால் போதும். அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும். அவர்களுக்கு முக்தி கிடைக்கும். சிவராத்திரி கதையொன்றே இதற்குத் தக்க சான்றாகும்.

கீதைகள், புராணங்கள், இதிகாசங்கள், உபன்யாசங்கள் மனிதர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்கின்றன.

ஆதி சங்கரர் போலவே அவரால் தோற்றுவிக்கப்பட்ட சங்கர மடங்களும் வர்ண தர்மத்தையும் பிராமணியத்தையும் கட்டிக் காப்பதில் இற்றைவரை கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றன.

வர்ண தர்மம் சேமகரமானது என்றும் இந்து மதம் ஒன்றில் மட்டுமே இந்த வர்ண தருமம் இருக்கிறது என்றும் ஏனைய மதங்களில் இல்லை என்றும் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்! (தெய்வத்தின் குரல்)

'யோசித்துப் பார்த்தால் நம் தேசத்திலும்கூட பழைய வர்ண தர்மங்களில் பிடிப்புக் குறைந்துபோய் எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்ற அபிப்பிராயம் வந்தபிற்பாடுதான் மத உணர்ச்சி குன்றி நாஸ்திகம் அதிகமாகி இருக்கிறது என்று தெரிகிறது. சந்தேகத்துக்கு இடம் இன்றித் தெரிகிறது.

இதில் வேடிக்கையான விஷயமாக இருக்கிறது. அதாவது ஒரு மதம் சனங்களைப் பலவிதமாகப் பிரித்து வைக்கிறது என்றால் அதில்தான் பரஸ்பரக் கட்டுக்கோப்பும் ஐக்கியமும் இல்லாமல் இருக்கும் என நினைக்கிறோம். இப்படிப்பட்ட மதம்தான் சண்டையால் தனக்குள்ளே உளுத்துப்போயவிழுந்து விடும் என்று தோன்றுகிறது.

ஆனால் பலவகுப்பாக சமுதாயத்தை வர்ண தர்மத்தில் பிரிந்து வைத்திருக்கிற நம் மதமோ இன்றளவும் என்னை யார் என்ன செய்துவிட முடியும் என்று மூச்சைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு உயிர் வாழ்கிறது.

ஆயிரம் பதினாராயிரம் வருஷமாக வர்ண தர்மத்தைப் பின்பற்றியும் நம் மதம் இத்தனை ஜீவ களையுடன் இருந்து வந்ததன் மர்மம் என்ன? எமது சாஸ்திரங்களை ரஷித்துக் கொண்டிருக்கும் ஸவதர்மம்.....' என்கிறார். (தெய்வத்தின் குரல்)

சித்ர்களும், விவேகானந்தரும், காந்தியும், பாரதியும், வள்ளலாரும் எந்த வர்ண தர்மத்தை இந்து மதத்தின் சாபக்கேடு, கறை, கருப்புப் புள்ளி என்றெல்லாம் சொல்கிறார்களோ அதுவே இந்து மதத்திற்கு ஜீவ களையாக இருக்கிறது என்கிறார்!

நாம் சுண்ணாம்பு என்பதை சங்கராச்சாரியார் வெண்ணெய் என்கிறார்!

நாம் நஞ்சு என்பதை அவர் அமிர்தம் என்கிறார்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 29, 2009 1:45 am

ஒழுக்கத்துக்கும் இந்து மதத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை!

'பகவான் வர்ணாச்சிரம தர்மம் பற்றிக் கூறுகிறார் என்றே வைத்துக் கொள்வோம். அதிலொன்றும் தவறில்லையே! விருப்பு வெறுப்பின்றிப் பார்த்தால் 'வருண ஆச்சிரம தர்மம்' என்பது நால்வகை அறநெறியைக் குறிக்கும் வர்ணாச்சிரமப் பிரிவு சாதிகளில் மேல்தட்டு, கீழ்த்தட்டுக்களை உண்டாக்குவதற்கு ஏற்பட்டதல்ல. ஒரு சமுதாயத்தின் மொத்தத் தேவையே நான்கு வகையான தொழில் வர்க்கங்கள்தாம்' என்கிறார் கவிஞர் கண்ணதாசன். கண்ணன் அருளிய பகவத் கீதை என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வர்ண தர்மம் என்பது பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு என்பதை கண்ணன் கீதையில் திரும்பத் திரும்பச் சொல்கிறான்.

பாவிகள் என்னைப் பணிவார் ஆயினும்,
மாதரேனும், வைசியரேனும்
சூத்திரரும் பரகதி பெறுவார்.
அப்படியிருக்க தூய்மை யார்த்த
அந்தணரும் ராஜரிஷிகளும்
எனக்கு அன்பராயின், என்னே? ஆதலால்
நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய
இவ்வுலகப் பிறவி யெய்திய நீ
என்னை வழிபடக் கடவாய்! (பாரதியார் உரை அத் 9-32)

இனிக் கவிஞர் கண்ணதாசனின் உரையைப் பார்ப்போம்.

'அர்ச்சுனா! தாழ்ந்தவர்கள் என்று கூறப்படுவோரும், மாதர்களும், வணிகர்களும், நாலாம் வருணத்தவரும் (சூத்திரர்) கூட என்னை வணங்கினால் நல்ல கதியை அடைவார்கள். அப்படியிருக்க நற்குடிப்பிறந்த பிராமணர்களும் பக்தி மிக்க ராஜரிஷிகளும் அதே உயர்ந்த கதியை அடைவார்கள் என்பதற்கு வேறு சாட்சியா வேண்டும்? ஆகவே அழியக் கூடிய துன்பம் நிறைந்த இந்த உலகில் நீ இருப்பதால் என்னையே வழிபடுவாயாக. (அத் 9-32)

வேத சாத்திரங்கள் பெண் பாபயோனியில் பிறந்ததாகச் சொல்கிறது. அதனால் அவர்களுக்கு பரகதி இல்லை. அவர்கள் பரகதி அடைய வேண்டும் என்றால் பூமியில் ஆணாகப் பிறந்து வந்தால்த்தான் உண்டு.

இதன் காரணமாகவே இந்த சுலோகத்தில் பெண்கள், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஒரு பக்கமும் அந்தணர் எதிர்ப் பக்கத்திலும் வைத்துப் பேசப்படுகிறார்கள்.

கண்ணதாசன் நாடோடி திரைப்படத்துக்கு எழுதிய பாடலில் படைத்தவன் பேரில் சாதி வைத்ததை சாடுகிறார். உண்மையில் அவ்வையார் சாதியைச் சாடிப் பாடிய 'சாதியிரண்டொழிய வேறில்லை .............இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்' என்ற பாடல் கருத்தைத் தழுவியே இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

'கொடுப்பவனே மேல் சாதி
கொடுக்காதவனே கீழ் சாதி
படைத்தவன் பேரால் சாதி வைத்தான்
பாழாய்ப் போன இந்தப் பூமியியே'


எனவே கண்ணதாசன் பகவத் கீதைக்கு எழுதிய முன்னுரைiயில் கூறியிருப்பது வர்ண தர்மத்துக்கு அவர் உரை என்ற பெயரில் மேற்கொண்ட பூச்சு ஆகும். அப்படிப் பூசி மெழுகாது விட்டால் இந்து மதவாதிகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஒரு பக்தி நூலில் கடவுளின் அவதாரமான பரந்தாமனே வர்ண தர்மத்தை தானே உண்டாக்கியதாகவும் ஆனால் தான் நினைத்தால் கூட அதனை மாற்ற முடியாது என்று வெளிப்படையாக உபதேசம் செய்யும் வெட்கக் கேட்டை கண்ணதாசன் ஒத்துக் கொண்டதாக முடிந்துவிடும்.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் கண்ணதாசனின் பகவத் கீதைக்கு அருளுரை வழங்கி இருப்பவர் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியா சுவாமிகள்.

பொருத்தமான ஆள்தான் பொருத்தமான நூலுக்கு அருளுரை வழங்கியுள்ளார். பகவத் கீதை பகவானே தனது பக்தனை கொலை செய்யுமாறு உபதேசம் செய்யும் நூல்!

கொலைசெய்தல் சத்திரியனான அர்ச்சுனனது சுயதர்மம் என்று எடுத்துரைக்கும் நூல்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக