புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:18 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:07 am

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_c10 
49 Posts - 59%
heezulia
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_c10 
31 Posts - 37%
mohamed nizamudeen
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_c10 
91 Posts - 61%
heezulia
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_c10 
52 Posts - 35%
mohamed nizamudeen
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 11:35 am

First topic message reminder :

ஜாதகம், குடும்பம், கோத்திரம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும் திருமணங்கள், திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

இன்னொரு புறத்தில் 30 வயதை கடந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள் நண்பர்களுக்குள், `என்னடா நேத்து போன இடம் என்ன ஆச்சு? என் கதையும் உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என்னை வேண்டாம்னு சொல்லிட்டா! நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங்கிறது..` என்று தங்களுக்குள் போன் போட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர்களின் அம்மாக்கள் நிலை அதைவிட மோசம். நெல்லையில் இருந்து சென்னைக்கு போன் போட்டு, `எங்கேயாவது நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க.. பையனுக்கு வயது ஏறிட்டே போகுது!’ என்று கவலைப்படுகிறார்கள்.

இதைவிட எல்லாம் அதிர்ச்சியான விஷயம். பெண் பார்த்து பேசி முடிவு செய்து, நிச்சயதார்த்தம் முடிந்த பின்பும் மாப்பிள்ளை வீட்டார் தினமும் தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்திலும் பெண் வீட்டில் இருந்து போன் வரலாம். `கல்யாணத்தில் விருப்பமில்லை. நிறுத்திடுங்கோன்னு `குண்டு போடலாம்’ என்று பயந்து போயிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

சமூக ஆர்வலர் பார்வதி பாலசுப்பிரமணியன் சொல்கிறார்…

“இளம்பெண்களிடம் சுயநலம் மிகுந்துவிட்டது. மாமனார், மாமியார், மைத்துனர், நாத்தனார்கள் எல்லாம் இருக்கக்கூடாது. கணவர் மட்டுமே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் திருமணம் செய்துகொள்ள அவள் சம்மதித்தாலும் `திருமணம் ஆனதும் இன்னொரு ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டு போய்விட வேண்டும்’ என்று தூரத்தில் தனிக்குடித்தனம் நடத்த நிபந்தனை போடுகிறாள்.

பெண்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதனால் நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அனுசரிக்கவும் வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள். அதை பெண்களின் தன்னம்பிக்கை என்று சொல்வதா அல்லது அடாவடித்தனம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. பெற்றோரும் மகளின் வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருப்பதால் மகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களால் கருத்துசொல்ல முடியவில்லை. அதனால்தான் முதிர்கன்னிகள் அதிகரித்து வருகிறார்கள்.

பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிடம், `வீட்டில் சமைக்கணும்’ என்று சொன்னால், அவள் கேட்டாலே கெட்ட வார்த்தையை கேட்டதுபோல் துடித்துப்போகிறாள். `என் அம்மாவுக்கே நான் சமையல் செய்து போட்டதில்லை. மாமியாருக்கு ஏன் சமைத்து போடவேண்டும்?` என்று கேட்கிறாள்.

இப்போது பெண்கள் ஒவ்வொரு வரனையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள். அதனால் வீட்டுக்கு பெண் பார்க்க வரவேண்டாம் என்று கூறிவிடுகிறார்கள். அவர்கள் வீட்டிற்கும்- பையன் வீட்டிற்கும் நடுவில் இருக்கும் `காபிடே` க்கு வரச்சொல்கிறார்கள். அங்குதான் பெரும்பாலும் பேச்சு நடக்கிறது. அங்குதான் முதன் முதலில் பார்க்கிறார்கள். கோவில்களில் பெண் பார்த்த காலம் போய், காபி ஷாப்களில் பார்க்கும் நிலையில் இன்றைய கல்யாணத்தின் மரியாதை கட்டெறும்பாக தேய்ந்து போய்க்கொண்டிருக்கிறது.

என் உறவுக்கார பையன் ஒருவன் பிரபலமான வெளிநாட்டு வங்கி ஒன்றில் வேலைபார்க்கிறான். அவனுக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை. ஒருமுறை அவனது வங்கிக்கு போன நான் அங்கே அழகழகான பெண்கள் இருப்பதை பார்த்துவிட்டு, `அவர்களில் யாரையாவது காதலித்து கல்யாணம் செய்துகொள்ளேன்’ என்றேன். உடனே அவன், `இந்த பெண்களுக்கு உடைகளும், லிப்ஸ்டிக்கும் வாங்கிக்கொடுத்து ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் செல்வதற்கே என் சம்பளம் போதாது. திருமணம் முடிந்த பின்பும் அவர்கள் சம்பளத்தை அப்படியே வங்கியில் சேமித்துவிடுவார்கள். நம்ம சம்பளத்தில்தான் எல்லாம் நடக்கும். அதனால் நான் காதலிக்கவே மாட்டேன்’ என்று கூறிவிட்டான். இப்போதும் அவனுக்கு பெண் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போது திருமணம் நடக்குமோ தெரியவில்லை..”- என்கிறார், அவர்.

“திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம் நான், `சமைக்கத் தெரிந்த, பொறுப்பாக உங்கள் பெற்றோரைக் கவனித்துக்கொள்ளக்கூடிய, உங்கள் மீதும் அதிக அக்கறை செலுத்தக்கூடிய பெண் தேவையா? அதிகமாக சம்பாதிக்கும் டீகூட போடத் தெரியாத பெண் தேவையா?` என்று கேட்டேன். அவர் என்னைப் பார்த்து, `என்ன மேடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டீங்க. என்னை கவனிச்சுக்கிறது, பெற்றோரை கவனிச்சிக்கிறது எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. பணம் ரொம்ப முக்கியம். அதனால வேலைக்கு போய் நிறைய சம்பளம் வாங்குகிற பெண்தான் வேண்டும்` என்றார். இப்படி ஆண்கள் பணத்தை அடிப்படையாக வைத்து பெண் தேடுவதுபோல், பெண்களும் பணத்தை அடிப்படையாக வைத்துதான் மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இளைஞர்கள், `அம்மாவைப் போல் கவனித்துக்கொள்ளும் பெண் தேவை’ என்கிறார்கள். அவர்கள் என்ன தப்பு செய்தாலும் அதை எல்லாம் அம்மா தாங்கிக்கொண்டு அனுசரித்துப்போவாள். அதுபோல் தன் மனைவியும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த நிலை இப்போது அப்படியேமாறி பெண்களும், `எங்களை அப்பா நன்றாக கவனித்துக்கொள்கிறார். அதனால் அப்பா போன்று பாதுகாக்கும் மாப்பிள்ளை வேண்டும்` என்கிறார்கள். இங்குதான் நெருக்கடி உருவாகிறது. அம்மா மாதிரி பெண்ணும் கிடைக்கமாட்டாள். அப்பா மாதிரி மாப்பிள்ளையும் கிடைக்கமாட்டார்.


பெற்றோரின் நிர்ப்பந்தம், வரனின் அழகு, வருமானம், அவருடைய குடும்பம் போன்றவைகளை எல்லாம் பார்த்து முதலில் பெண் நிச்சயதார்த்தத்திற்கு சம்மதித்துவிடுகிறாள். பின்பு திருமணத்திற்கு முந்தைய கால இடைவெளியில் பையன், பெண் இருவரும் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள். அப்போதுதான் அவளது சிந்தனை பல்வேறு விதங்களில் விரிகிறது. இருவருக்கும் இடையே பொருத்தமில்லாமல் முரண்பாடாக இருக்கும் விஷயங்களை அவள் ஆழ்ந்து கவனிக்கிறாள். அவைகளை திருமணத்திற்கு பின்பு சரிசெய்து விடலாம் என்று பெண்கள் `ரிஸ்க்’ எடுக்க தயார் இல்லாததால், நிச்சயதார்த்தம் முடிந்தாலும் திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள்.

இன்றைய பெண்கள் அவர் களே சம்பாதித்து தன் பெற்றோருக்கும் கொடுக்கும் நிலையில் இருப்பதால் அவளுக்கு பிடிக்கவில்லை என்றால், `உடனே நிறுத்திவிடுங்கள்’ என்று உத்தரவிடுகிறாள். பெற்றோருக்கு அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்றாகிவிட்டது.

முன்பெல்லாம் சமூக அந்தஸ்து, சமூக பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, நல்ல துணை கிடைத்தல், சட்டரீதியான செக்ஸ் தேவை ஈடேறுதல் போன்றவை எல்லாம் பெண்களுக்கு திருமணத்தின் மூலம்தான் கிடைத்தது. இன்று அவை அனைத்தும் திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது என்று சொல்வதற்கில்லை.

பெண்கள் கல்யாணத்தை தவிர்க்க அல்லது கல்யாணத்தைப் பற்றி பயப்பட நிறைய காரணங்கள் இருக்கின்றன. கல்யாணம் செய்துகொண்டால் நிறைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியதிருக்கும். நிறைய கடமைகள் தங்களுக்கு வந்துவிடும் என்று நினைத்து திருமணத்தை தவிர்க்கிறார்கள். இதற்கு `கமிட்மென்ட் போபியா’ என்று பெயர்.

ஒரு சில இடங்களில் தங்களுக்கு வரதட்சணை எதுவும் தேவையில்லை என்று சொல்லும் பையன் வீட்டார், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு `அது கிடைக்குமா.. இது கிடைக்குமா?’ என்று பெண்வீட்டாரிடம் கேட்கத் தொடங்குவார்கள். அதனால் வெறுப்படைந்துபோய் திருமணத்தை நிறுத்திவிடும் பெண்களும் உண்டு. நிச்சயதார்த்தம் நடந்த பின்பு திருமணம் நடக்காமல் போக, பெண்கள் மட்டும் காரணம் அல்ல. ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள்.

சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டிருந்தால்- செக்ஸ்ரீதியான கசப்புகளை சந்தித்திருந்தால்- தாம்பத்ய வாழ்க்கைக்கு தான் பொருத்தமானவள் இல்லை என்று பெண்கள் கருதினால்- அவர்கள் திருமணத்தினை தவிர்த்துவிடுகிறார்கள். அத்தகைய பாதிப்புகள் அனைத்துமே சரிசெய்யக்கூடியவை” -என்கிறார், சூர்யா ஆஸ்பத்திரியின் மனோதத்துவ ஆலோசகர் பிரீத்தி ராவ்.

***

* சம்பவம் ஒன்று: 26 வயதான அழகான அந்த பெண்ணுக்கும், 30 வயதான அஜீத் சாயல் இளைஞனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. விறு விறுப்பாக மணவிழா அழைப்பிதழை வழங்கிக் கொண்டிருந்த மணமகன் வீட்டாரை, முகத்தை தொங்கபோட்டபடி சந்திக்க வந்திருந்தார், மணப் பெண்ணின் அப்பா.

“மன்னிச்சிடுங்க..! நேற்று திடீர்னு என் மகள் `கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்கன்னு` சொன்னாள். காரணத்தைக் கேட்டோம், `உங்க பையனை கட்டிக்கிட்டா அவளோட திருமண வாழ்க்கை தோல்வி யில் முடிஞ்சிடும்ன்னு அவ உள்ளுணர்வு சொல்லுதாம். அழுறாள்… ஆர்ப்பாட்டம் பண்றாள். அவள் எதுவும் தப்பான முடிவு எடுத்திடக்கூடாது. எனக்கு என் பொண்ணு முக்கியம். எப்படியாவது கல்யாணத்தை நிறுத்திடுங்கோ” என்று அவர் கையெடுத்து கும்பிடுகிறார். கல்யாண ஏற்பாடுகள் அப்படியே நிறுத்தப்படுகின்றன.

** சம்பவம் இரண்டு: இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். பரஸ்பரம் இருவரும் பார்த்து பேசி `ஓ.கே’ சொன்ன பிறகுதான் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு இருவரும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தனர். நேரடியாக சந்தித்து பழகவும் செய்தார்கள். அன்று இருவரும் ரசித்து, ருசித்து காபி அருந்திக்கொண்டிருந்தபோது பையன், `நீ காபி பைத்தியம். உன்னை மாதிரி என் அம்மாவும் காபி பைத்தியம். நம்ம கல்யாணத்திற்கு பிறகு தினமும் காலையில் என் அம்மாவுக்கு ஒரு கப் காபி போட்டுக் கொடுக்கவேண்டியது உன் பொறுப்பு’ என்றிருக்கிறான். உடனே அவள் முகம் இறுகிவிட்டது.

மறுநாள் காலையில் தன் வருங்கால கணவருக்கு போன் செய்த அவள், `ப்ளீஸ் நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். நீங்களும், உங்க அம்மாவும் என்னை உங்க வீட்டு சமையல் அறையில் அடைக்கிறதுக்கு முயற்சி பண்றீங்க! நான் உங்க அளவுக்கே படிச்சிருந்தாலும், உங்களை விட அதிகமாக மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். இப்பவே என்னை சமையல் வேலை பார்க்க சொல்றீங்களே, கல்யாணத்திற்குப் பிறகு என்னவெல்லாம் சொல்வீங்க..? வேண்டாம்.. இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம்’ என்றாள். அவர்கள் இருவருக்கும் செல்போனிலே வார்த்தைகள் தடிக்க அவ்வளவுதான் அந்த கல்யாணம் அப்படியே ரத்து செய்யப்பட்டுவிட்டது.

*** சம்பவம் மூன்று: சென்னையில் உள்ள `காபி டே` ஒன்றில் இரு குடும்பத்தாரும் சந்தித்தார்கள். பெண், மாப்பிள்ளை பையன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். ஐந்து நிமிட பேச்சுக்கு பிறகு, `உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து இருக்கிறது. உங்கள் பெயரில் என்னென்ன இருக்கிறது. நமது திருமணத்திற்கு முன்பே உங்கள் பங்கு சொத்துக்களை எல்லாம் பிரித்து வாங்கிவிடவேண்டும். திருமணத்திற்கு பின்பு நாம் வாங்கும் சொத்துக்களை எல்லாம் என் பெயருக்குத்தான் வாங்கவேண்டும். சம்மதமா?’ என்று கேட்க, அந்த இளைஞன் பக்கத்து டேபிளில் இருந்த தன் தாயாரிடம் இதைச் சொல்லத் தயங்க, அந்த தயக்கத்தைக்கூட அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் பில்லுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு எழுந்து போய்விட்டாள். அதோடு அந்த பேச்சுவார்த்தை முடிந்தது.

***

தட்டிக்கழிக்க பல காரணங்கள்…

“இன்றைக்கு நல்ல வரன்களைக்கூட மிகச் சாதாரண விஷயத்திற்காக, பெண்கள் வேண்டாம் என்று தட்டிக்கழித்து விடுகிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு, மாப்பிள்ளை பையன், தன் வருங்கால மனைவியிடம் `நேற்று மாலையில் எங்கே போயிருந்தாய்?’ என்று கேட்டிருக்கிறான், அவள் ஷாப்பிங் போனதாக கூறியுள்ளாள். `யாருடன் போனாய்?’ என்று அவன் யதார்த்தமாக கேட்க, `நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க..!

இப்படி சில்லரைத்தனமா கேள்வி கேட்கிறவங்களை எல்லாம் எனக்கு பிடிக்காது. ரொம்ப ப்ராட்மைன்டட் பையன்தான் எனக்கு வேணும்’ என்று கூறி திருமணத்தை நிறுத்திவிட்டாள். திருமணமாகாத பல இளம்பெண்கள், `எங்களுக்கு லைப்லேயே பிடிக்காத வார்த்தை `காம்ப்ரமைஸ்’. நாங்கள் எதுக்காகவும், யாருக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கமாட்டோம். அப்படி ஒரு வாழ்க்கை தங்களுக்கு தேவையே இல்லை’ என்கிறார்கள்.

சில பெண்களின் அம்மாக்கள் சொல்வதைக் கேட்டால் இதைவிட வேடிக்கையாக இருக்கும். `எங்க பொண்ணுக்கு விட்டுக்கொடுத்து போகிற பழக்கம் கிடையாது. அதனால் தனிக்குடித்தனம் போகிற மாதிரி குடும்பம் இருந்தால் சொல்லுங்கள்’ என்கிறார்கள். எங்க பொண்ணு ரொம்ப `இன்டிபென்ட்டன்ட்’. யாரும் கேள்விகேட்டால் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதை மறந்திடாமல் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லிடுங்கோ’ என்று சொல்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிப்பதால், 30 வயதான பின்பும் மாப்பிள்ளை அமையாத பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது”- என்கிறார், கீதா தெய்வசிகாமணி. இவர் திருமண தகவல் மையம் நடத்துகிறார்.

“நமது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என்ற திடமான நம்பிக்கை இன்றைய பெண்களிடம் இல்லை. `எப்படி அமையுமோ?’, `சரிப்பட்டு வருதான்னு பார்ப்போம்’ என்பது மாதிரியான குழப்பங்களோடுதான் ஒவ்வொரு வரனையும் அணுகுகிறார்கள்.

ஒருவழியாக ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து கல்யாணத்தை நடத்தும்போது, இவர்களது பெற்றோர் 70 வயதைக் கடந்துவிடுகிறார்கள். இதனால் சீரும், சிறப்புமாக நடக்கவேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பின் காரணமாக தானே நடத்திக்கொள்ளவேண்டிய நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.

* கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டிவிடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவ பரிசோதனை என்று அலைச்சல், மன உளைச்சல், பணச் செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

நன்றி-தினத்தந்தி



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வாசகி ஒருவர் வெளியிட்ட கருத்து


என்னமோ திருமண பந்தங்கள் ஏற்படாமல் போவதற்கு பெண்ணும், பெண் வீட்டாரும் மட்டுமே காரணம் என ஒருதலை பட்சமாக எழுதியுள்ளீர்கள் .

மணமகனின் ஒழுக்கங் கெட்ட நடவடிக்கைகள் , சம்பாதிக்க கையாலாகாமல் மாமனார் சொத்து மற்றும் மனைவி சம்பாத்தியத்தில் குளிர் காய எண்ணுதல் , சம்பாதிக்க யோக்கியதை இல்லாவிட்டாலும் மாப்பிள்ளை திமிர் , பந்தா காட்டிக்கொள்ள எண்ணுதல் போன்றவையே திருமணம் நடைபெறாமல் போக முக்கிய காரணங்கள் .

ஒரு காலத்தில் பொருளாதார ரீதியாக பெண்ணுக்கு சுதந்திரம் இல்லாமல் அடிமைப்பட்டு கிடந்தாள் . இன்று பெண் நன்றாக சம்பாதிக்கிறாள் இன்றும் அவள் எல்லோருக்கும் அடிமையாக இருக்கவேண்டும் என்று எண்ணுவது ஆண்களின் உச்ச கட்ட சுயநலத்தைக் காட்டுகிறது .

பெண்ணை கட்டிகொடுத்துவிட்டு , பெண்ணின் பெற்றோர் முதியோர் இல்லம் போய்விடவேண்டும் அல்லது எங்கேயோ எப்படியோ நாசமாய் போய்விட வேண்டும் ஆனால் ஆண்மகனை பெற்ற பெற்றவர்கள் மட்டும் ,வீட்டிற்கு வரும் மருமகளை அடிமையாய் கசக்கி பிழிந்து வேலை வாங்கி , போய் சேருகின்ற காலம் வரை சொகுசாக டீ , காபி , டிபன் சாப்பிட்டுக் கொண்டு போய் சேரவேண்டும் . நன்றாக இருக்கிறதையா இந்த சமூக நீதி !

ஒரு காலத்தில் மனைவியை வேலைக்கு அனுப்பதல் என்பது ஆணிற்கு அவமானம் என்று நினைத்தார்கள் . ஆனால் இன்றோ வேலைக்கு போகும் பெண்தான் வேண்டும் என கேட்டு கல்யாணம் செய்துகொள்கிறார்கள் ஆண்கள் .

நம் இந்திய பண்பாடை ஆண்கள் தங்கள் சுயநலத்திற்காக எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் , ஆனால் பெண்கள் மாத்திரம் மாமனார் , மாமியார் என எல்லா நார்களையும் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டும் அப்படிதானே

பெண்ணை பெற்றவர்கள் முதியோர் இல்லத்திற்கு செல்லும் போது ஆணை பெற்றவர்களும் முதியோர் இல்லத்திற்கு செல்லட்டுமே , என்ன கெட்டுவிடப் போகிறது .

பெரியவர்களை பேணிகாப்பது என்பது மனிதாபிமான செயல் .
இதை நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் , மனுஷியும் செய்யவேண்டும் .

ஆக ஆணின் பெற்றோர் பேணி காக்கப்படவேண்டியவர்கள் என்றால் பெண்ணின் பெற்றோரும் பேணி காக்கப்படவேண்டியவர்கள் தானே

ஒரு பெண்ணிற்கு தன் பெற்றோரை அவர்களது கடைசிகாலத்தில் கவனித்துக் கொள்ள உரிமை இல்லை என கூறும் இந்த மாப்பிளை வர்க்கம் கணவனின் பெற்றோரை மட்டும் அப்பெண் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது கொடூரமான சுயநலச் செயல்

எனவே இந்த ஏற்றத்தாழ்வு நீங்கி ஆண் , பெண் இருவருமே தங்களது பெற்றோரையும் , மாமனார் , மாமியார் அவர்களையும் மதித்து நடக்கவேண்டும் .அவர்களது கடைசிகாலத்தில் நிம்மதியாக அவர்கள் இருக்க வழிவகை செய்யவேண்டும் . அவர்களை காப்பாற்றவேண்டும் . யாரையும் முதியோர் இல்லத்திற்கு அனுப்பக் கூடாது .




aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 8:32 pm

திருவிளையாடல் 8

காதலித்த பெண்ணை திருமணம் செய்த கணவன் தாயாருடன் இணைந்து வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமை படுத்தினார். இதையடுத்து புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து கணவரும்,அவரது தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் விஜய். கூலித்தொழிலாளியான விஜய்க்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரஸ்வதி(21)க்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு முன்பாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பின்னர் விஜய்யும் அவரது தாயார் புஷ்பமும், சரஸ்வதியிடம் 10 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொண்டு வரவேண்டும் என கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனிடையே விஜய்யின் தங்கைகள் தங்கலட்சமி,தங்கராதா,தங்கசெல்வம் ஆகியோரும் சரஸ்வதிக்கு நேர்ந்த கொடுமைக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.இந்நிலையில் மனம் உடைந்த சரஸ்வதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சரஸ்வதியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கூடங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் விஜய்,மாமியார் புஷ்பம் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.







aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 8:35 pm

திருவிளையாடல் 9

தேனி பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரம், சுப்பிரமணிய சிவா தெருவைச் சேர்ந்தவர் ரெங்கநாயகி(28). இவருக்கும் திருப்பூர் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த சுப்புராஜ்(28) க்கும், 2007ல் திருமணம் நடந்தது.

திருப்பூரில் தனிக்குடித்தனம் நடத்தினர். ஒன்றரை வயதில் ஸ்ரீதேவி என்ற பெண் குழந்தை உள்ளது. முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்ததால் கணவர் சுப்புராஜ், அவரது சகோதரர் ரமேஷ்(26), ரமேஷ் மனைவி கலைவாணி, சுப்புராஜ் தாய் சுப்புலட்சுமி ஆகியோர், ரெங்கநாயகியை அடிக்கடி தரக்குறைவாக பேசி வந்தனர்.

ஏழு மாத கர்ப்பினியாக உள்ள அவரை, மீண்டும் பெண் குழந்தை பெற்று விடக்கூடாது என்பதற்காக, பட்டினி போட்டு கொடுமை செய்துள்ளனர்.

இது குறித்து, தேனி அனைத்து மகளிர் போலீசார் கணவன் உட்பட நான்கு பேர் மீதும் வழக்குபதிவு செய்துள்ளனர்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 8:41 pm

திருவிளையாடல் 10


குடியாத்தம்,ஆக. 16

காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக, அவரது மாமியார் உள் பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்த னர். கணவனை தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் பற்றி காவலர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் லெனின் நகர் ராகவேந்திரா தெருவை சேர்ந்த கட்டட தொழி லாளி கிஷோர் குமார் என்பவரும், தாழை யாத் தம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சாந்தி, என்பவரும் காதலித்து வந்தனர்.

அவர்கள் 20-4-2009 அன்று திரு மணம் செய்து கொண் டனர். திருமணத்திற்கு பின் கிஷோர்குமார், சாந் தியின் பெற்றோர் வீட் டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் 15-4-2010 அன்று சாந்திக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஒரு மாதம் கழித்து குழந் தையை எடுத்து கொண்டு சாந்தி தனது மாமியார் வீட்டிற்கு சென்றார். அப் போது மாமியார் மீரா பாய், கணவரின் அண் ணன் செந்தில்குமார் ஆகியோர் சாந்தியை பார்த்து `உள்ளே வராதே என் மகனை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டாய். எங்க ளோடு சேர்ந்து வாழ வேண்டும் என்றால் 5 சவரன் நகை, செயின், மோதிரம், சீர் சாமான் கள் கொண்டு வந்தால் உன்னையும், உன் குடும்பத்தையும் சேர்த்து கொள்வோம்' எனக் கூறியதாக தெரிகிறது.
இந்த தகவலை சாந்தி தனது கணவரிடம் கூறி னார். அதன்பின் கண வர் வீட்டிற்கு வர வில்லை. தனது கணவர், அவரது பெற்றோர் வீட்டில் இருப்பதாக கேள்விப் பட்ட, சாந்தி கடந்த 6ஆம் தேதி அங்கு சென்றார். `உன்னுடன் வாழ என் மகனுக்கு விருப்பம் இல்லை. இனி மேல் இந்த வீட்டிற்கு வந்தால் உன் னையும், உன் குடும்பத் தையும் உயிரு டன் வாழவிட மாட்டோம். கொலை செய்து விடு வோம்' என மிரட்டி யதாக கூறப்படுகிறது.

அப்போது வீட்டிலி ருந்து வெளியே வந்த கிஷோர்குமார், தனது மனைவியிடம் `என் குடும் பத்தார் சொன்னபடி, உன் வீட்டில் இருந்து நகை பொருள்கள் வாங்கி வந்தால் இங்கே வாழ்க்கை. இல்லையென்றால் வாழ முடியாது' என்று கூறி அனுப்பிவிட்டதாக தெரி கிறது.

இதனால் அதிர்ச்சி யடைந்த சாந்தி குடி யாத்தம் அனைத்து மக ளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறை ஆய்வாளர் வேணி யம்மாள் வழக்கு பதிவு செய்து, சாந்தியின் மாமி யார் மீராபாய், கணவரின் அண்ணன் செந்தில் குமார் ஆகியோரை கைது செய் தனர். மேலும் கிஷோர் குமாரை காவல்துறை யினர் தேடி வருகின்றனர்.


aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 8:56 pm

திருவிளையாடல் 11

ராஜபாளையம், பிப். 16-

ராஜபாளையம் சின்ன சுரைக்காய்பட்டி தெருவை சேர்ந்தவர் செந்தூர்கணேஷ் (வயது27). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கலைச்செல்விக்கும் (23) கடந்த 3 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. செந்தூர் கணேஷ் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை கலைச்செல்வி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து கலைச் செல்வி கணவனுடன் கோபித்து கொண்டு அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். கணவனை பிரிந்து தாய் வீட்டில் இருந்து வருகிறோமே, தாலி கட்டிய கணவன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்து உள்ளாரே என்று நினைத்து கலைச்செல்வி மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் நேற்று மாலை உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து கலைச்செல்வியின் தந்தை நாகேந்திரன் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசில் செந்தூர் கணேஷ் மீது புகார் செய்தார். புகாரில் எனது மகளை செந்தூர் கணேஷ் வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு சித்ரவதை செய்து உள்ளார்.

இதற்கு செந்தூர் கணேசின் தந்தை சமுத்திரகனி, தாய் சுப்புதாய், அண்ணன் செந்தூர் பாண்டியன் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர் என்று கூறி யிருந்தார். இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து கலைச்செல்வியின் கணவன் செந்தூர் கணேஷ், மாமனார் சமுத்திரகனி, மாமியார் சுப்புதாய், அண்ணன் செந்தூர் பாண்டியன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu Jul 21, 2011 9:03 pm

திருவிளையாடல் 12

காதலியை மணப்பதற்காக மனைவியை விபசாரி என்று இன்டர்நெட்டில் விளம்பரம் வெளியிட்ட கணவர் கைது செய்யப்பட்டார். அவரது காதலியும் தனது திருமண நிச்சயதார்த்தத்தின்போது சிக்கினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 33). என்ஜினீயரிங், எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், அமைந்தகரையில் கம்ப்ïட்டர் நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரது மனைவி பெயர் நந்தினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பிரியாவும் எம்.பி.ஏ. படித்துவிட்டு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றுகிறார். இவர்களது இனிய இல்லற வாழ்க்கையின் பலனாக ஒரு குழந்தை பிறந்தது. அதன்பிறகு இவர்களது குடும்ப வாழ்க்கையில் புயல் வீசியது.

மகேஷின் அலுவலகத்தில் பணிபுரிந்த சுபாஷினியும் (27) மகேஷும், பரிமாறிக்கொண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் அவர்களுக்குள் காதல் இருந்ததை நந்தினி தெரிந்துகொண்டார். இதனால் கணவர் மகேஷுடன் சண்டை போட்டார். இருவரும் பிரிந்தனர். நந்தினி வில்லிவாக்கத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.

கணவரோடு மீண்டும் சேர்ந்து வாழ நந்தினி எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் நந்தினி வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசில் கணவர் மகேஷ் மீது வரதட்சணை கொடுமை புரிவதாக புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு மகேஷை கைது செய்ய முற்பட்டபோது அவர் முன்ஜாமீன் வாங்கிவிட்டார்.

இந்த நிலையில், நந்தினியிடம் இருந்து விவாகரத்து பெறுவதற்கும் தீவிர முயற்சியில் மகேஷ் இறங்கினார்.

கணவரோடு எப்படியும் சேர்ந்துவிடலாம் என்று அடிமனதில் ஆசைகளோடு இருந்த நந்தினிக்கு கடந்த வாரம் ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. இன்டர்நெட்டில் நந்தினியை விபசார பெண்ணாக சித்தரித்து ஒரு தகவல் வெளியாகியிருந்தது. நந்தினி சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் வெளியிட்டு அவரே அழைப்பதுபோல, `என்னை பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள், என்னோடு தொடர்பு கொள்ளுங்கள்' என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தது.

இந்த தகவலை நந்தினியின் கணவர் மகேஷ் தான் வெளியிட்டுள்ளார் என்று நந்தினி ஆதாரங்களோடு கண்டறிந்தார். உடனடியாக மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நந்தினி சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். கமிஷனர் உத்தரவின்பேரில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் கூடுதல் துணை கமிஷனர் டாக்டர் சுதாகரன், உதவி கமிஷனர் தங்கராஜ் ஆகியோர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

மகேஷ் மீது பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழும், இன்டர்நெட்டில் ஆபாச தகவல்களை வெளியிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. மகேஷை நேற்று முன்தினம் இரவு போலீசார் பிடித்து விசாரித்தனர். கடைசியாக அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மோசமாக தன்னை விளம்பரப்படுத்தினாலும்கூட, மகேஷுடன் சேர்ந்த வாழ விரும்புவதாக நந்தினி தெரிவித்தார். ஆனால் மகேஷ் நான் ஜெயிலுக்கு போகத்தயார் என்றும், தன்மீது போடப்பட்டுள்ள வழக்கை கோர்ட்டில் சந்திப்பேன் என்றும், தவறான தகவலை நான் வெளியிடவில்லை என்றும், நந்தினியோடு இனிமேல் வாழமாட்டேன் என்றும் ஆணித்தரமாக கூறிவிட்டார். இதன்பேரில் மகேஷ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 22, 2011 8:46 am

நான் சொல்லவந்த தை நீங்க புரிந்து கொள்ளவே இல்லைசோகம் இங்கு பேசப்படுவது "நிச்சயித்த கல்யாணங்கள் அதிகம் நிறுத்தப்படுகிறது பெண்களால்" என்பது செய்தி, அதன் சாதக பாதகங்களை தான் நான் சொன்னேன். அதர்க்காண காரணங்களை யோசித்து , ஆராய்ந்து அவ்வாறு நடக்கம்ல் எப்படி தவிர்க்கலாம் என்பதை பேசவேண்டுமே தவிர....

இதர்க்கும் குடிகார கணவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை (கல்யாணமே ஆகல எங்கிருந்து கணவன்? மாமனார் மாமியார் ?) அதிர்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Jul 25, 2011 6:17 pm

krishnaamma wrote:நான் சொல்லவந்த தை நீங்க புரிந்து கொள்ளவே இல்லைசோகம் இங்கு பேசப்படுவது "நிச்சயித்த கல்யாணங்கள் அதிகம் நிறுத்தப்படுகிறது பெண்களால்" என்பது செய்தி, அதன் சாதக பாதகங்களை தான் நான் சொன்னேன். அதர்க்காண காரணங்களை யோசித்து , ஆராய்ந்து அவ்வாறு நடக்கம்ல் எப்படி தவிர்க்கலாம் என்பதை பேசவேண்டுமே தவிர....

இதர்க்கும் குடிகார கணவனுக்கும் எந்த தொடர்பும் இல்லை (கல்யாணமே ஆகல எங்கிருந்து கணவன்? மாமனார் மாமியார் ?) அதிர்ச்சி


அம்மா , முதலில் நான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று எண்ணுகிறேன் .

ஆம் , நீங்கள் மாத்திரம் இவ்வளவு பலமான எதிர்ப்பை தெரிவித்து இருக்காவிடில் நான் இந்த தலைப்பின் கீழ் விவாதத்தை ஏற்படுத்தி இருக்க முடியாது .

எனவே இந்த விவாதம் தொடர்ந்து நடை பெற உதவிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

சரி , இனி விசயத்திற்கு வருவோம் .

அம்மா , நாம் இங்கு எடுத்துக்கொண்ட விவாதத்தின் பொருளை விட்டு விட்டு , அதற்க்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒன்றை பற்றி நான் இங்கு பேசவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .

மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினரின் திருவிளையாடல்களைப் பற்றி நான் நீண்டதொரு கட்டுரைகள் எழுத காரணம் இருக்கிறது .
இந்த கட்டுரைகள் , நாம் விவாதத்திற்க்கு எடுத்துக் கொண்ட தலைப்பிற்கு வழுவூட்டும் காரணிகளாக இங்கே இருக்கின்றன .

அவைகள் எப்படி காரணிகளாக இருக்கின்றன என்பதை நான் விவரிக்கிறேன் . அது என் கடமை .

எனவே மேற்கொண்டு நான் எழுதப் போகும் கட்டுரைகளை படித்து பின் தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்



aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Jul 25, 2011 6:28 pm

மாப்பிள்ளை வர்கத்தார் முன்பொரு காலத்தில் எப்படி இருந்தனர் ? இப்பொழுது எப்படி இருக்கின்றனர் ? என்பதைப் பற்றி சிறிது விளக்காகமாக ஆராய்ந்து பார்போம்

முன்பொரு காலத்தில் , ஒரு குடும்பத்தின் மாப்பிள்ளை என்பவர் அந்த குடும்பத்தின் மீது பாசம் பற்றுதல் வைத்து இருந்தார் .
தன் குடும்பம் , தன் மனைவி குடும்பம் என்று அவர் பிரித்து பார்க்கவில்லை .

தன் மனைவியின் சகோதர சகோதரிகளை தன் சகோதர சகோதரிகளாகவே நினைத்து இருந்தார் எனவே அவர்களது வாழ்வில் ஏற்படும் ஏற்ற , இறக்கங்களின் பொழுதெல்லாம் அவருக்கு துணையாக இருந்தார்

மாமனார் காலமான பின் , மாமியாரை தன் அன்னையாக நினைத்து தன் வீட்டில் அவர்களை பேணி காத்து , மைத்துனர் மற்றும் கொலுந்தியாளை தன் மகன் மகளாக நினைத்து அவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்து அவர்களை கரை சேர்த்தார் .

இன்றைய கொள்ளு தாத்தாகளே அந்தகைய மாண்புமிகு மாப்பிள்ளைகள்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Jul 25, 2011 6:36 pm

அடுத்து வந்த மாப்பிள்ளை தலைமுறையினர் , தன் மாமனார் தனக்கு நன்றாக வரதட்சிணை , சீர் வரிசை செய்ய வேண்டும் என்று எதிர் பார்த்தனர் .

ஆனால் அதற்காக அவர்கள் கட்டிய மனைவியை கொடுமை படுத்தவில்லை .
ஜாடையாக தங்கள் விருப்பத்தை தெரிவித்தார்கள் .

மாமனார் தான் எதிர்பார்தபடி செய்தால் மகிழ்ந்தார்கள் . செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை , கிடைத்தவரைக்கும் போதும் என்று நினைத்தனர் .

மாமியார் , மாமனார் ஆகிய அனைவரும் இன்னமும் சீர் வகைகளை சேர்த்து கொஞ்சம் கூட செய்து இருக்கலாம் . ஆனால் அவ்வாறு பெண்ணின் பெற்றோர் செய்யவில்லை என்பதை அவ்வப்பொழுது கூறி தங்கள் ஆதங்கத்தை வெளிபடுத்துவார்கள் . இதை தவிர பெரிய அளவில் அவர்கள் மருமகளை வாட்டி வதைக்கவில்லை .

இன்றைய தாத்தாக்கள் இத்தகைய மரியாதைக்குரிய மாப்பிள்ளைகள்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Mon Jul 25, 2011 6:50 pm

நண்பரே, தலைப்பின் உள்ள கருத்தை தவிர்த்து குடும்ப
வாழ்க்கையில் என்ன என்ன பிரச்சனை வருகிறது என்ற விவாதம் தான் வலுக்கிறது, நீங்கள் கூறுவதை வைத்து பார்க்கும் போது இது வரை ஆண்கள் கொடுமை செய்தார்கள், இப்போது பெண்கள், பெண் வீட்டார் கொடுமை செய்வது என்ன தப்பு என்பது போல் உள்ளது, இனி ஒரு விதி செய்வோம் என்ற வார்த்தை, பெண் சுதந்திரத்தை பேசுகிறது, இந்த தலைப்பு கொடுமை செய்யும் பெண்கள், பெண் வீட்டார் பற்றியது, வேலைக்கு செல்லும் பெண்ணின் சம்பாதியத்தில் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மாப்பிள்ளை வீட்டாரிடம் இருப்பதை விட பெண் வீட்டாரிடம் அதிகம் பெருகி வருகிறது, முதிர் கண்ணிகள் பெருகும் புதிய விதியை நாம் செய்வோம் என்பது போல் தான் உங்கள் கருத்துக்கள் உள்ளது.

விதி செய்வோம்



சதாசிவம்
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் - Page 5 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக