புதிய பதிவுகள்
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 20:43

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:37

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
64 Posts - 48%
heezulia
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
3 Posts - 2%
prajai
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
1 Post - 1%
Shivanya
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
206 Posts - 39%
mohamed nizamudeen
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
15 Posts - 3%
prajai
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
9 Posts - 2%
jairam
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_m10திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள்


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu 21 Jul 2011 - 13:05

ஜாதகம், குடும்பம், கோத்திரம், அந்தஸ்து அது இது என்று ஆயிரம் பார்த்து பேசி முடிக்கப்படும் திருமணங்கள், திடீரென பெண்களால் தடுத்து நிறுத்தப்படுகின்றன.

இன்னொரு புறத்தில் 30 வயதை கடந்துவிட்ட இளைஞர்களில் பலர் தங்கள் நண்பர்களுக்குள், `என்னடா நேத்து போன இடம் என்ன ஆச்சு? என் கதையும் உன் கதை மாதிரிதான். அந்தப் பொண்ணும் என்னை வேண்டாம்னு சொல்லிட்டா! நமக்கெல்லாம் என்னடா குறை. ஏன் நல்ல பொண்ணு அமையவே மாட்டேங்கிறது..` என்று தங்களுக்குள் போன் போட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இளைஞர்களின் அம்மாக்கள் நிலை அதைவிட மோசம். நெல்லையில் இருந்து சென்னைக்கு போன் போட்டு, `எங்கேயாவது நல்ல பொண்ணு இருந்தா சொல்லுங்க.. பையனுக்கு வயது ஏறிட்டே போகுது!’ என்று கவலைப்படுகிறார்கள்.

இதைவிட எல்லாம் அதிர்ச்சியான விஷயம். பெண் பார்த்து பேசி முடிவு செய்து, நிச்சயதார்த்தம் முடிந்த பின்பும் மாப்பிள்ளை வீட்டார் தினமும் தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரத்திலும் பெண் வீட்டில் இருந்து போன் வரலாம். `கல்யாணத்தில் விருப்பமில்லை. நிறுத்திடுங்கோன்னு `குண்டு போடலாம்’ என்று பயந்து போயிருக்கிறார்கள்.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

சமூக ஆர்வலர் பார்வதி பாலசுப்பிரமணியன் சொல்கிறார்…

“இளம்பெண்களிடம் சுயநலம் மிகுந்துவிட்டது. மாமனார், மாமியார், மைத்துனர், நாத்தனார்கள் எல்லாம் இருக்கக்கூடாது. கணவர் மட்டுமே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒருவேளை அப்படிப்பட்ட கூட்டுக் குடும்பத்தில் திருமணம் செய்துகொள்ள அவள் சம்மதித்தாலும் `திருமணம் ஆனதும் இன்னொரு ஊருக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டு போய்விட வேண்டும்’ என்று தூரத்தில் தனிக்குடித்தனம் நடத்த நிபந்தனை போடுகிறாள்.

பெண்கள் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதனால் நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. அனுசரிக்கவும் வேண்டியதில்லை என்று நினைக்கிறார்கள். அதை பெண்களின் தன்னம்பிக்கை என்று சொல்வதா அல்லது அடாவடித்தனம் என்று சொல்வதா என்று தெரியவில்லை. பெற்றோரும் மகளின் வருமானத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருப்பதால் மகளின் விருப்பத்திற்கு மாறாக அவர்களால் கருத்துசொல்ல முடியவில்லை. அதனால்தான் முதிர்கன்னிகள் அதிகரித்து வருகிறார்கள்.

பெண் பார்க்கப் போகும்போது மாப்பிள்ளை வீட்டார் பெண்ணிடம், `வீட்டில் சமைக்கணும்’ என்று சொன்னால், அவள் கேட்டாலே கெட்ட வார்த்தையை கேட்டதுபோல் துடித்துப்போகிறாள். `என் அம்மாவுக்கே நான் சமையல் செய்து போட்டதில்லை. மாமியாருக்கு ஏன் சமைத்து போடவேண்டும்?` என்று கேட்கிறாள்.

இப்போது பெண்கள் ஒவ்வொரு வரனையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள். அதனால் வீட்டுக்கு பெண் பார்க்க வரவேண்டாம் என்று கூறிவிடுகிறார்கள். அவர்கள் வீட்டிற்கும்- பையன் வீட்டிற்கும் நடுவில் இருக்கும் `காபிடே` க்கு வரச்சொல்கிறார்கள். அங்குதான் பெரும்பாலும் பேச்சு நடக்கிறது. அங்குதான் முதன் முதலில் பார்க்கிறார்கள். கோவில்களில் பெண் பார்த்த காலம் போய், காபி ஷாப்களில் பார்க்கும் நிலையில் இன்றைய கல்யாணத்தின் மரியாதை கட்டெறும்பாக தேய்ந்து போய்க்கொண்டிருக்கிறது.

என் உறவுக்கார பையன் ஒருவன் பிரபலமான வெளிநாட்டு வங்கி ஒன்றில் வேலைபார்க்கிறான். அவனுக்கு பல இடங்களில் பெண் பார்த்தும் அமையவில்லை. ஒருமுறை அவனது வங்கிக்கு போன நான் அங்கே அழகழகான பெண்கள் இருப்பதை பார்த்துவிட்டு, `அவர்களில் யாரையாவது காதலித்து கல்யாணம் செய்துகொள்ளேன்’ என்றேன். உடனே அவன், `இந்த பெண்களுக்கு உடைகளும், லிப்ஸ்டிக்கும் வாங்கிக்கொடுத்து ஹோட்டலுக்கு சாப்பிட அழைத்துச் செல்வதற்கே என் சம்பளம் போதாது. திருமணம் முடிந்த பின்பும் அவர்கள் சம்பளத்தை அப்படியே வங்கியில் சேமித்துவிடுவார்கள். நம்ம சம்பளத்தில்தான் எல்லாம் நடக்கும். அதனால் நான் காதலிக்கவே மாட்டேன்’ என்று கூறிவிட்டான். இப்போதும் அவனுக்கு பெண் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்போது திருமணம் நடக்குமோ தெரியவில்லை..”- என்கிறார், அவர்.

“திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம் நான், `சமைக்கத் தெரிந்த, பொறுப்பாக உங்கள் பெற்றோரைக் கவனித்துக்கொள்ளக்கூடிய, உங்கள் மீதும் அதிக அக்கறை செலுத்தக்கூடிய பெண் தேவையா? அதிகமாக சம்பாதிக்கும் டீகூட போடத் தெரியாத பெண் தேவையா?` என்று கேட்டேன். அவர் என்னைப் பார்த்து, `என்ன மேடம் இப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டீங்க. என்னை கவனிச்சுக்கிறது, பெற்றோரை கவனிச்சிக்கிறது எல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லை. பணம் ரொம்ப முக்கியம். அதனால வேலைக்கு போய் நிறைய சம்பளம் வாங்குகிற பெண்தான் வேண்டும்` என்றார். இப்படி ஆண்கள் பணத்தை அடிப்படையாக வைத்து பெண் தேடுவதுபோல், பெண்களும் பணத்தை அடிப்படையாக வைத்துதான் மாப்பிள்ளையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இளைஞர்கள், `அம்மாவைப் போல் கவனித்துக்கொள்ளும் பெண் தேவை’ என்கிறார்கள். அவர்கள் என்ன தப்பு செய்தாலும் அதை எல்லாம் அம்மா தாங்கிக்கொண்டு அனுசரித்துப்போவாள். அதுபோல் தன் மனைவியும் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த நிலை இப்போது அப்படியேமாறி பெண்களும், `எங்களை அப்பா நன்றாக கவனித்துக்கொள்கிறார். அதனால் அப்பா போன்று பாதுகாக்கும் மாப்பிள்ளை வேண்டும்` என்கிறார்கள். இங்குதான் நெருக்கடி உருவாகிறது. அம்மா மாதிரி பெண்ணும் கிடைக்கமாட்டாள். அப்பா மாதிரி மாப்பிள்ளையும் கிடைக்கமாட்டார்.


பெற்றோரின் நிர்ப்பந்தம், வரனின் அழகு, வருமானம், அவருடைய குடும்பம் போன்றவைகளை எல்லாம் பார்த்து முதலில் பெண் நிச்சயதார்த்தத்திற்கு சம்மதித்துவிடுகிறாள். பின்பு திருமணத்திற்கு முந்தைய கால இடைவெளியில் பையன், பெண் இருவரும் சந்திக்கிறார்கள். பேசுகிறார்கள். அப்போதுதான் அவளது சிந்தனை பல்வேறு விதங்களில் விரிகிறது. இருவருக்கும் இடையே பொருத்தமில்லாமல் முரண்பாடாக இருக்கும் விஷயங்களை அவள் ஆழ்ந்து கவனிக்கிறாள். அவைகளை திருமணத்திற்கு பின்பு சரிசெய்து விடலாம் என்று பெண்கள் `ரிஸ்க்’ எடுக்க தயார் இல்லாததால், நிச்சயதார்த்தம் முடிந்தாலும் திருமணத்தை நிறுத்தி விடுகிறார்கள்.

இன்றைய பெண்கள் அவர் களே சம்பாதித்து தன் பெற்றோருக்கும் கொடுக்கும் நிலையில் இருப்பதால் அவளுக்கு பிடிக்கவில்லை என்றால், `உடனே நிறுத்திவிடுங்கள்’ என்று உத்தரவிடுகிறாள். பெற்றோருக்கு அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை என்றாகிவிட்டது.

முன்பெல்லாம் சமூக அந்தஸ்து, சமூக பாதுகாப்பு, பொருளாதார பாதுகாப்பு, நல்ல துணை கிடைத்தல், சட்டரீதியான செக்ஸ் தேவை ஈடேறுதல் போன்றவை எல்லாம் பெண்களுக்கு திருமணத்தின் மூலம்தான் கிடைத்தது. இன்று அவை அனைத்தும் திருமணத்தின் மூலம் மட்டுமே கிடைக்கிறது என்று சொல்வதற்கில்லை.

பெண்கள் கல்யாணத்தை தவிர்க்க அல்லது கல்யாணத்தைப் பற்றி பயப்பட நிறைய காரணங்கள் இருக்கின்றன. கல்யாணம் செய்துகொண்டால் நிறைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியதிருக்கும். நிறைய கடமைகள் தங்களுக்கு வந்துவிடும் என்று நினைத்து திருமணத்தை தவிர்க்கிறார்கள். இதற்கு `கமிட்மென்ட் போபியா’ என்று பெயர்.

ஒரு சில இடங்களில் தங்களுக்கு வரதட்சணை எதுவும் தேவையில்லை என்று சொல்லும் பையன் வீட்டார், நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு `அது கிடைக்குமா.. இது கிடைக்குமா?’ என்று பெண்வீட்டாரிடம் கேட்கத் தொடங்குவார்கள். அதனால் வெறுப்படைந்துபோய் திருமணத்தை நிறுத்திவிடும் பெண்களும் உண்டு. நிச்சயதார்த்தம் நடந்த பின்பு திருமணம் நடக்காமல் போக, பெண்கள் மட்டும் காரணம் அல்ல. ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள்.

சிறுவயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டிருந்தால்- செக்ஸ்ரீதியான கசப்புகளை சந்தித்திருந்தால்- தாம்பத்ய வாழ்க்கைக்கு தான் பொருத்தமானவள் இல்லை என்று பெண்கள் கருதினால்- அவர்கள் திருமணத்தினை தவிர்த்துவிடுகிறார்கள். அத்தகைய பாதிப்புகள் அனைத்துமே சரிசெய்யக்கூடியவை” -என்கிறார், சூர்யா ஆஸ்பத்திரியின் மனோதத்துவ ஆலோசகர் பிரீத்தி ராவ்.

***

* சம்பவம் ஒன்று: 26 வயதான அழகான அந்த பெண்ணுக்கும், 30 வயதான அஜீத் சாயல் இளைஞனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. விறு விறுப்பாக மணவிழா அழைப்பிதழை வழங்கிக் கொண்டிருந்த மணமகன் வீட்டாரை, முகத்தை தொங்கபோட்டபடி சந்திக்க வந்திருந்தார், மணப் பெண்ணின் அப்பா.

“மன்னிச்சிடுங்க..! நேற்று திடீர்னு என் மகள் `கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்கன்னு` சொன்னாள். காரணத்தைக் கேட்டோம், `உங்க பையனை கட்டிக்கிட்டா அவளோட திருமண வாழ்க்கை தோல்வி யில் முடிஞ்சிடும்ன்னு அவ உள்ளுணர்வு சொல்லுதாம். அழுறாள்… ஆர்ப்பாட்டம் பண்றாள். அவள் எதுவும் தப்பான முடிவு எடுத்திடக்கூடாது. எனக்கு என் பொண்ணு முக்கியம். எப்படியாவது கல்யாணத்தை நிறுத்திடுங்கோ” என்று அவர் கையெடுத்து கும்பிடுகிறார். கல்யாண ஏற்பாடுகள் அப்படியே நிறுத்தப்படுகின்றன.

** சம்பவம் இரண்டு: இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள். பரஸ்பரம் இருவரும் பார்த்து பேசி `ஓ.கே’ சொன்ன பிறகுதான் நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு இருவரும் செல்போனில் பேசிக்கொண்டே இருந்தனர். நேரடியாக சந்தித்து பழகவும் செய்தார்கள். அன்று இருவரும் ரசித்து, ருசித்து காபி அருந்திக்கொண்டிருந்தபோது பையன், `நீ காபி பைத்தியம். உன்னை மாதிரி என் அம்மாவும் காபி பைத்தியம். நம்ம கல்யாணத்திற்கு பிறகு தினமும் காலையில் என் அம்மாவுக்கு ஒரு கப் காபி போட்டுக் கொடுக்கவேண்டியது உன் பொறுப்பு’ என்றிருக்கிறான். உடனே அவள் முகம் இறுகிவிட்டது.

மறுநாள் காலையில் தன் வருங்கால கணவருக்கு போன் செய்த அவள், `ப்ளீஸ் நாம கல்யாணம் பண்ணிக்க வேண்டாம். நீங்களும், உங்க அம்மாவும் என்னை உங்க வீட்டு சமையல் அறையில் அடைக்கிறதுக்கு முயற்சி பண்றீங்க! நான் உங்க அளவுக்கே படிச்சிருந்தாலும், உங்களை விட அதிகமாக மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். இப்பவே என்னை சமையல் வேலை பார்க்க சொல்றீங்களே, கல்யாணத்திற்குப் பிறகு என்னவெல்லாம் சொல்வீங்க..? வேண்டாம்.. இந்த கல்யாணம் வேண்டவே வேண்டாம்’ என்றாள். அவர்கள் இருவருக்கும் செல்போனிலே வார்த்தைகள் தடிக்க அவ்வளவுதான் அந்த கல்யாணம் அப்படியே ரத்து செய்யப்பட்டுவிட்டது.

*** சம்பவம் மூன்று: சென்னையில் உள்ள `காபி டே` ஒன்றில் இரு குடும்பத்தாரும் சந்தித்தார்கள். பெண், மாப்பிள்ளை பையன் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். ஐந்து நிமிட பேச்சுக்கு பிறகு, `உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து இருக்கிறது. உங்கள் பெயரில் என்னென்ன இருக்கிறது. நமது திருமணத்திற்கு முன்பே உங்கள் பங்கு சொத்துக்களை எல்லாம் பிரித்து வாங்கிவிடவேண்டும். திருமணத்திற்கு பின்பு நாம் வாங்கும் சொத்துக்களை எல்லாம் என் பெயருக்குத்தான் வாங்கவேண்டும். சம்மதமா?’ என்று கேட்க, அந்த இளைஞன் பக்கத்து டேபிளில் இருந்த தன் தாயாரிடம் இதைச் சொல்லத் தயங்க, அந்த தயக்கத்தைக்கூட அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் பில்லுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு எழுந்து போய்விட்டாள். அதோடு அந்த பேச்சுவார்த்தை முடிந்தது.

***

தட்டிக்கழிக்க பல காரணங்கள்…

“இன்றைக்கு நல்ல வரன்களைக்கூட மிகச் சாதாரண விஷயத்திற்காக, பெண்கள் வேண்டாம் என்று தட்டிக்கழித்து விடுகிறார்கள். நிச்சயதார்த்தம் முடிந்த பின்பு, மாப்பிள்ளை பையன், தன் வருங்கால மனைவியிடம் `நேற்று மாலையில் எங்கே போயிருந்தாய்?’ என்று கேட்டிருக்கிறான், அவள் ஷாப்பிங் போனதாக கூறியுள்ளாள். `யாருடன் போனாய்?’ என்று அவன் யதார்த்தமாக கேட்க, `நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க..!

இப்படி சில்லரைத்தனமா கேள்வி கேட்கிறவங்களை எல்லாம் எனக்கு பிடிக்காது. ரொம்ப ப்ராட்மைன்டட் பையன்தான் எனக்கு வேணும்’ என்று கூறி திருமணத்தை நிறுத்திவிட்டாள். திருமணமாகாத பல இளம்பெண்கள், `எங்களுக்கு லைப்லேயே பிடிக்காத வார்த்தை `காம்ப்ரமைஸ்’. நாங்கள் எதுக்காகவும், யாருக்காகவும் காம்ப்ரமைஸ் பண்ணிக்கமாட்டோம். அப்படி ஒரு வாழ்க்கை தங்களுக்கு தேவையே இல்லை’ என்கிறார்கள்.

சில பெண்களின் அம்மாக்கள் சொல்வதைக் கேட்டால் இதைவிட வேடிக்கையாக இருக்கும். `எங்க பொண்ணுக்கு விட்டுக்கொடுத்து போகிற பழக்கம் கிடையாது. அதனால் தனிக்குடித்தனம் போகிற மாதிரி குடும்பம் இருந்தால் சொல்லுங்கள்’ என்கிறார்கள். எங்க பொண்ணு ரொம்ப `இன்டிபென்ட்டன்ட்’. யாரும் கேள்விகேட்டால் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காது. அதை மறந்திடாமல் மாப்பிள்ளை வீட்டாரிடம் சொல்லிடுங்கோ’ என்று சொல்கிறார்கள். இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிப்பதால், 30 வயதான பின்பும் மாப்பிள்ளை அமையாத பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது”- என்கிறார், கீதா தெய்வசிகாமணி. இவர் திருமண தகவல் மையம் நடத்துகிறார்.

“நமது திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும் என்ற திடமான நம்பிக்கை இன்றைய பெண்களிடம் இல்லை. `எப்படி அமையுமோ?’, `சரிப்பட்டு வருதான்னு பார்ப்போம்’ என்பது மாதிரியான குழப்பங்களோடுதான் ஒவ்வொரு வரனையும் அணுகுகிறார்கள்.

ஒருவழியாக ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்து கல்யாணத்தை நடத்தும்போது, இவர்களது பெற்றோர் 70 வயதைக் கடந்துவிடுகிறார்கள். இதனால் சீரும், சிறப்புமாக நடக்கவேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பின் காரணமாக தானே நடத்திக்கொள்ளவேண்டிய நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள்.

* கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டிவிடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவ பரிசோதனை என்று அலைச்சல், மன உளைச்சல், பணச் செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாகிறார்கள்.

நன்றி-தினத்தந்தி



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண் வாசகி ஒருவர் வெளியிட்ட கருத்து


என்னமோ திருமண பந்தங்கள் ஏற்படாமல் போவதற்கு பெண்ணும், பெண் வீட்டாரும் மட்டுமே காரணம் என ஒருதலை பட்சமாக எழுதியுள்ளீர்கள் .

மணமகனின் ஒழுக்கங் கெட்ட நடவடிக்கைகள் , சம்பாதிக்க கையாலாகாமல் மாமனார் சொத்து மற்றும் மனைவி சம்பாத்தியத்தில் குளிர் காய எண்ணுதல் , சம்பாதிக்க யோக்கியதை இல்லாவிட்டாலும் மாப்பிள்ளை திமிர் , பந்தா காட்டிக்கொள்ள எண்ணுதல் போன்றவையே திருமணம் நடைபெறாமல் போக முக்கிய காரணங்கள் .

ஒரு காலத்தில் பொருளாதார ரீதியாக பெண்ணுக்கு சுதந்திரம் இல்லாமல் அடிமைப்பட்டு கிடந்தாள் . இன்று பெண் நன்றாக சம்பாதிக்கிறாள் இன்றும் அவள் எல்லோருக்கும் அடிமையாக இருக்கவேண்டும் என்று எண்ணுவது ஆண்களின் உச்ச கட்ட சுயநலத்தைக் காட்டுகிறது .

பெண்ணை கட்டிகொடுத்துவிட்டு , பெண்ணின் பெற்றோர் முதியோர் இல்லம் போய்விடவேண்டும் அல்லது எங்கேயோ எப்படியோ நாசமாய் போய்விட வேண்டும் ஆனால் ஆண்மகனை பெற்ற பெற்றவர்கள் மட்டும் ,வீட்டிற்கு வரும் மருமகளை அடிமையாய் கசக்கி பிழிந்து வேலை வாங்கி , போய் சேருகின்ற காலம் வரை சொகுசாக டீ , காபி , டிபன் சாப்பிட்டுக் கொண்டு போய் சேரவேண்டும் . நன்றாக இருக்கிறதையா இந்த சமூக நீதி !

ஒரு காலத்தில் மனைவியை வேலைக்கு அனுப்பதல் என்பது ஆணிற்கு அவமானம் என்று நினைத்தார்கள் . ஆனால் இன்றோ வேலைக்கு போகும் பெண்தான் வேண்டும் என கேட்டு கல்யாணம் செய்துகொள்கிறார்கள் ஆண்கள் .

நம் இந்திய பண்பாடை ஆண்கள் தங்கள் சுயநலத்திற்காக எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் , ஆனால் பெண்கள் மாத்திரம் மாமனார் , மாமியார் என எல்லா நார்களையும் கட்டிக் கொண்டு மாரடிக்க வேண்டும் அப்படிதானே

பெண்ணை பெற்றவர்கள் முதியோர் இல்லத்திற்கு செல்லும் போது ஆணை பெற்றவர்களும் முதியோர் இல்லத்திற்கு செல்லட்டுமே , என்ன கெட்டுவிடப் போகிறது .

பெரியவர்களை பேணிகாப்பது என்பது மனிதாபிமான செயல் .
இதை நிச்சயம் ஒவ்வொரு மனிதனும் , மனுஷியும் செய்யவேண்டும் .

ஆக ஆணின் பெற்றோர் பேணி காக்கப்படவேண்டியவர்கள் என்றால் பெண்ணின் பெற்றோரும் பேணி காக்கப்படவேண்டியவர்கள் தானே

ஒரு பெண்ணிற்கு தன் பெற்றோரை அவர்களது கடைசிகாலத்தில் கவனித்துக் கொள்ள உரிமை இல்லை என கூறும் இந்த மாப்பிளை வர்க்கம் கணவனின் பெற்றோரை மட்டும் அப்பெண் கவனித்துக் கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பது கொடூரமான சுயநலச் செயல்

எனவே இந்த ஏற்றத்தாழ்வு நீங்கி ஆண் , பெண் இருவருமே தங்களது பெற்றோரையும் , மாமனார் , மாமியார் அவர்களையும் மதித்து நடக்கவேண்டும் .அவர்களது கடைசிகாலத்தில் நிம்மதியாக அவர்கள் இருக்க வழிவகை செய்யவேண்டும் . அவர்களை காப்பாற்றவேண்டும் . யாரையும் முதியோர் இல்லத்திற்கு அனுப்பக் கூடாது .



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 21 Jul 2011 - 13:22

ஆத்மா, நானே இதப்ப்ற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என நினைத்து இருந்தேன், நீங்க போட்டு விட்டீர்கள். அதாவது பேபரிலேயே வந்துவ்ட்டது இந்த பிரச்சனை. இந்த பெண் விட்டார் ரொம்ப மோசமாக தான் போகிறார்கள். நானும் பல இடங்களில் கடைசி நிமிஷத்தில் நிற்க்கும் கல்யாணங்கள் பற்றி கேள்விப்படுகிறேன். எங்க காலத்துல பெண்ணை வெச்சுண்டு எங்க அப்பா அம்மா கஷ்டப்பட்டா, இப்ப மாறிவிட்டது பிள்ளையை வெச்சுண்டு கஷ்டப்பட வேண்டி இருக்கு. காரணமே இல்லாமல் நிறுத்தாரா , காரணம் சொல்லக்கூட மாட்டேன் என்கிறார்கள்.நான் சில கருத்துகளை பின்னர் எழுதுகிறேன் .



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Thu 21 Jul 2011 - 14:09

krishnaamma wrote:ஆத்மா, நானே இதப்ப்ற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என நினைத்து இருந்தேன், நீங்க போட்டு விட்டீர்கள். அதாவது பேபரிலேயே வந்துவ்ட்டது இந்த பிரச்சனை. இந்த பெண் விட்டார் ரொம்ப மோசமாக தான் போகிறார்கள். நானும் பல இடங்களில் கடைசி நிமிஷத்தில் நிற்க்கும் கல்யாணங்கள் பற்றி கேள்விப்படுகிறேன். எங்க காலத்துல பெண்ணை வெச்சுந்து என்ன அப்பா அம்மா கஷ்டப்பட்டா, இப்ப மாறிவிட்டது பிள்ளையை வெச்சுண்டு கஷ்டப்பட வேண்டி இருக்கு. காரணமே இல்லாமல் நிறுத்தாரா , காரணம் சொல்லக்கூட மாட்டேன் என்கிறார்கள்.நான் சில கருத்துகளை பின்னர் எழுதுகிறேன்


அம்மா , நீங்கள் கட்டுரையின் முதல் பாதியை மட்டும் படித்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் .

கட்டுரையின் இரண்டாம் பாதியில் பெண் வாசகி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து எழுதியிருப்பதையும் படித்தீர்களா ?

அந்த வாசகி கூறுவதிலும் உண்மை இருக்கத் தானே செய்கிறது .

ஒரு நாளிதழின் இணைப்பு புத்தகத்தில் வெளியான செய்தி ஒன்றை இங்கே அளிக்கிறேன் . படித்துவிட்டு சொல்லுங்கள் பெண் வீட்டார் திருமணத்தை நிறுத்துவது தவறா என்று

மாப்பிள்ளை வந்து பெண்ணை பார்க்கும் படலம் முடிந்த பின் , பெண்ணின் தந்தை மாப்பிள்ளையை அவரது வீட்டில் போய் பார்க்கவேண்டும் என்று நினைத்து மாப்பிள்ளையின் ஊருக்கு சென்று இருக்கிறார் .

இவர் சென்ற நேரம் அந்த மாப்பிள்ளை வீதியில் நின்று கொண்டு இருந்தார் . அன்று மழை பெய்து இருந்தது . சாலையில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கி இருந்தது . அந்த பள்ளத்தில் இருந்த தவளைகளின் மீது சிறுவர்கள் கற்களை எறிந்து அவைகளை துடிக்க துடிக்க கொன்று கொண்டு இருந்தனர் .

இந்த மாப்பிள்ளை என்ன செய்து இருக்கவேண்டும் ?

அந்த சிறுவர்களிடம் இப்படி செய்யாதீர்கள் இது மிகவும் பாவம் . தவளையும் ஓர் உயிர் தான் அப்படியிருக்க அதனை துன்புறுத்தாதீர் என்று அவர் சொல்லியிருக்கவேண்டும் . அதுதானே மனிதாபிமானம்

ஆனால் இவர் என்ன செய்தார் தெரியுமா ? சிறுவர்களிடம் இருந்து கஷ்டப்பட்டு தப்பி வெளியே வந்த ஓரிரு தவளைகளின் மீது கற்களை எறிந்து அவைகள் துடித்து இறப்பதை பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தார் .

இதை பார்த்த பெண்ணின் தந்தைக்கு ஒரே அதிர்ச்சி .

ஒரு உயிரை , கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் கொன்று விளையாடும் மனிதன் தன் மகளை துன்புறுத்தமாட்டான் என்று என்ன நிச்சயம் ?

சக உயிரை துன்புறுத்தும் இவன் நமக்கு மாப்பிள்ளையாக வேண்டாம் என்று நினைத்து திருமணத்தை நிறுத்தி இருக்கிறார் .

இந்த கதையை எழுதிய மாப்பிள்ளை ,

பெண்ணின் பெற்றோரே , இனிமேல் மாப்பிள்ளை பார்க்க வருவதற்க்கு முன் தகவல் சொல்லிவிட்டு வாருங்கள் அப்பொழுதான் நாங்கள் தயார் நிலையில் இருக்கமுடியும் என்று எழுதி இருக்கிறார்

அப்படியெனில் அவர் தன் தவறை இன்னுமும் உணரவில்லை .
அதாவது அவர் உயிர்களை துடி துடிக்க கொன்றது தவறில்லையாம்
அதை பெண்ணின் தந்தை பார்த்து திருமணத்தை நிறுத்தியது தான் தவறாம்

இனிமேல் நீங்கள் வரும்முன் தகவல் சொன்னால் நாங்கள் எங்கள் காட்டுமிராண்டிதனங்களை மறைத்துக் கொண்டு நல்லவன் போல வேஷம் போட ஏதுவாக இருக்கும் என்கிறார் அந்த மாப்பிள்ளை


எனக்கு தெரிந்த ஒரு இடத்தில் திருமணம் நிச்சயம் வரை சென்று நின்றது .

பெண்ணின் தந்தையிடம் ஏன் என்று கேட்டேன் ?

அவர் சொன்னார் , நாங்கள் அந்த மாப்பிள்ளையை திருமணத்திற்கு முடிவு செய்தபின் தான் தெரிந்தது , அந்த மாப்பிள்ளை பெரிய குடிக்காரர் தினமும் இரவு குடித்துவிட்டு சாலையில் விழுந்து கிடப்பாராம் . அவரது குடும்பத்தார் ஒவ்வொரு சாலையாக சென்று அவர் எங்கே விழுந்து கிடக்கிறார் என்று பார்த்து அவரை தூக்கி வருவார்களாம் . இது தினமும் நிகலும் நிகழ்வு

இதை கேள்விபட்டபின் பெண் வீட்டார் எப்படி திருமணத்திற்க்கு ஒத்துக் கொள்வர்

யாராவது கண்ணை திறந்துகொண்டே போய் பாதாளத்தில் விழுவார்களா ?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 21 Jul 2011 - 14:32

ஆத்மா, பெண்களை குறைகூறி இதில் நிறைய கருத்துக்கள் இருந்தது...நான் எதிர்ப்பு மேர்க்கோல் போடலாம்னு நினைத்தேன்..ஆனால், ஏற்கனவே ஒரு பெண் அவளின் எதிர்ப்பை தெரிவித்து உள்ளார்...அதை நான் ஆமோதிக்கிறேன்.
பெண்கள் மட்டுமே அனைத்திர்க்கும் காரணமில்லை.

காதிலிக்கும் போது சொல்வதை சில ஆண்கள் திருமணத்திர்க்கு பின் நிறைவேற்றுவது இல்லை....இன்றும் திருமணமான பெண்ணையும், குழந்தையும் தனியே விட்டுவிட்டு அம்மாவின் சம்மததிர்க்காக காத்திருக்கும் கேடுகெட்ட ஆண்களும் உள்ளனர்...

அம்மா, காதலிக்கும்போது வேண்டாம் என்றாள்...திருமணம் ஆனா பின்னும் அந்த பெண் வேண்டாம் என்கிறாள்,ஒரு குழந்தை பிறந்த பின்னும் வேண்டவே வேண்டாம் என்கிறாள்...இவள் ஒரு நல்ல தாயா...எனக்கே தெரியல....காரணம் சமூதாயம் கேவல படுத்துமா, பெண் வீட்டில் பெக்ரௌண்ட் சரி இல்லையாம்....

ஒரு பெண்ணை பெற்றவள், ஒரு பெண்ணையும், அவளுக்கு பிறந்த ஒரு பெண் குழந்தையையும் தவிக்க விட்டு சுய கவ்ரவத்தோடு இருக்காங்க..அந்த தாயின் பின்னே மறைந்து வாழ்கிறான் மகன்...
இப்போ அந்த பெண்ணின் நிலை தனிமை....

இதேர்க்கென்ன பதில் சொல்வார்கள்!






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu 21 Jul 2011 - 14:32

இதுக்குத்தான் பட்டணத்துல சைட்டடிக்கணும் கிராமத்துல பொண்ணு எடுக்கணும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 21 Jul 2011 - 14:34

balakarthik wrote:இதுக்குத்தான் பட்டணத்துல சைட்டடிக்கணும் கிராமத்துல பொண்ணு எடுக்கணும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பட்டினத்திலுள்ள ஆண்களை கட்டிக்கொள்ளும் அந்த கிராம பெண்களும் இதையே நினைத்தால் பின் உங்கள் நிலைமை... தனிமை தான்....






எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu 21 Jul 2011 - 14:36

உமா wrote:
balakarthik wrote:இதுக்குத்தான் பட்டணத்துல சைட்டடிக்கணும் கிராமத்துல பொண்ணு எடுக்கணும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பட்டினத்திலுள்ள ஆண்களை கட்டிக்கொள்ளும் அந்த கிராம பெண்களும் இதையே நினைத்தால் பின் உங்கள் நிலைமை... தனிமை தான்....


சரண்டர் சரண்டர் சரண்டர் :வணக்கம்:



ஈகரை தமிழ் களஞ்சியம் திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள் -அதிர்ச்சியில் அலைபாயும் இளைஞர்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 21 Jul 2011 - 14:38

balakarthik wrote:
உமா wrote:
balakarthik wrote:இதுக்குத்தான் பட்டணத்துல சைட்டடிக்கணும் கிராமத்துல பொண்ணு எடுக்கணும் நல்ல பதிவு வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பட்டினத்திலுள்ள ஆண்களை கட்டிக்கொள்ளும் அந்த கிராம பெண்களும் இதையே நினைத்தால் பின் உங்கள் நிலைமை... தனிமை தான்....


சரண்டர் சரண்டர் சரண்டர் :வணக்கம்:

அன்பு மலர்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 21 Jul 2011 - 14:49

கணிப்பக முழுவதும் தான் படித்தேன், அதர்க்குள் எங்க கிருஷ்ணா லைன் ல வந்துட்டான் அது தான் கட் பண்ணிட்டு போய்விட்டேன்புன்னகை பிறகு எழுதுவதாக கூறி சென்றுவிட்டேன். எப்பவுமே 2 கை தட்டினா தான் சத்தம் தவறுகள் இரு பக்கமும் உண்டு. உங்களின் அடுத்த போஸ்ட் ம படித்தேன். அந்த பையனுக்கு வக்காலத்து வாங்கலை நான். ஆண்கள் அவளவு பெரும் நல்லவ என்றும் சொல்லலை நான் . ஆனால் பெண்களின் குணம் ரொம்ப மாறிவிட்டது இதை யார்ம் மறுக்க முடியாது தானே?

எங்க அம்மா சொல்வா, "ஆம்பிள்ளை எவ்வளவு சம்பாதித்தாலும் என் பணம் என சொல்ல மாட்டானாம், ஆனால் அவன் சம்பாதித்த பணத்திலேயே சிறுவாடு கட்டி வைத்தத்தை பெண் என்னுது என்பளாம் " அப்படிப்பட்ட பெண்கள் இன்று கைநிறைய சம்பாதிக்கும் போது...........( மறுபடி சொல்கிறேன் நான் எல்லோரையும் சொல்ல வில்லை ) பொதுவாக மன மாற்றம் வந்து விட்டது என்று சொல்கிறேன்.

"அவன் என்ன உசத்தி நான் என்ன மட்டம் "என்கிற மன்ப்பன்மை வந்து விட்டது. காப்பி போடு என்றால், கல்யாணத்தை நிறுத்து, சொத்து தான் பேரில் வாங்கலை என்றால் கல்யாணத்தை நிறுத்து என்ன இதெல்லாம் ? கேட்கவே கேவலமாக இல்லை?

அதற்க்கு மேலே அந்த பெண்ணை பெற்றவள் கோபம் பொண்ணு சொன்னதை கேட்ட மாட்டாளாம், அவ நினத்தத்தை தான் செய்வாளாம் ஒத்துக்கும் மாப்பிள்ளை வேண்டுமாம். சீ சீ? ஒரு படத்தில் விஷால் சொல்வார், அம்பிளங்கள.அடக்க நினைக்காதீங்க நீங்க அன்பா இருந்த அவனே அடங்கி போவான், அடக்க நினத்தால்.... என்று அது போல எந்த காலத்திலும் பெண்களுக்கு அடக்கம் வேண்டும்.

ஒன்று சொல்வார்கள் "டில்லிக்கு ராஜா வனாலும் தல்லிக்கு பிட்டை தானே " என்று அது போல் என்ன பேசினாலும் பெண்கள் தானே பெற்று கொடுக்கணும்? இல்ல அதுக்கும் முறை வைப்பார்களா?

ஆனால் நான் சொல்ல வந்தது என்ன வென்றால், காரணமே இல்லாமல் நிறுத்துவது என்பதை பற்றி தான். அந்த பெண் என்ன நாகரிகத்துடன் எழுதி இருக்கா? நீங்க அவளுக்கு வக்காலத்து வாங்க? பையன்கள் எப்பவுமே தங்கள் அப்பா அம்மா வை விட பெண்டாட்டி இன் அப்பா அம்மாக்கு மதிப்பு அதிகம் தருவா.அதுவும் ஒரு பெண் அல்லது இரண்டுமே பெண் ஆகி விட்டால் அந்த அக்கறை அதிகம் இருக்கும். அதை கூட தெரிந்து வைத்துக்கொள்ளாமல் அந்த பெண் மட்டமாக கமெண்ட் அடிக்கிறாள், இவளை என்னமோ அடிமையாக விற்பது போல் நீங்க் கேட்கிறீர்கள் அதை படிக்கலையா என ? இந்த மாதிரி பெண்களால் தானே முதியோர் இல்லம் பெருகுகிறது? தன் அம்மா அப்பாக்கு ஒரு நியாயம் அகமுடையானின் அம்மா அப்பா கு வேறு ஒரு நியாயம் என இருக்கும் இவளை போன்ற பெண்களால் தானே இந்த அவலம் ? இதில் இவளுக்கு பேச்சு வேறு கோபம்

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 21 Jul 2011 - 15:01

krishnaamma wrote:கணிப்பக முழுவதும் தான் படித்தேன், அதர்க்குள் எங்க கிருஷ்ணா லைன் ல வந்துட்டான் அது தான் கட் பண்ணிட்டு போய்விட்டேன்புன்னகை பிறகு எழுதுவதாக கூறி சென்றுவிட்டேன். எப்பவுமே 2 கை தட்டினா தான் சத்தம் தவறுகள் இரு பக்கமும் உண்டு. உங்களின் அடுத்த போஸ்ட் ம படித்தேன். அந்த பையனுக்கு வக்காலத்து வாங்கலை நான். ஆண்கள் அவளவு பெரும் நல்லவ என்றும் சொல்லலை நான் . ஆனால் பெண்களின் குணம் ரொம்ப மாறிவிட்டது இதை யார்ம் மறுக்க முடியாது தானே?

எங்க அம்மா சொல்வா, "ஆம்பிள்ளை எவ்வளவு சம்பாதித்தாலும் என் பணம் என சொல்ல மாட்டானாம், ஆனால் அவன் சம்பாதித்த பணத்திலேயே சிறுவாடு கட்டி வைத்தத்தை பெண் என்னுது என்பளாம் " அப்படிப்பட்ட பெண்கள் இன்று கைநிறைய சம்பாதிக்கும் போது...........( மறுபடி சொல்கிறேன் நான் எல்லோரையும் சொல்ல வில்லை ) பொதுவாக மன மாற்றம் வந்து விட்டது என்று சொல்கிறேன்.

"அவன் என்ன உசத்தி நான் என்ன மட்டம் "என்கிற மன்ப்பன்மை வந்து விட்டது. காப்பி போடு என்றால், கல்யாணத்தை நிறுத்து, சொத்து தான் பேரில் வாங்கலை என்றால் கல்யாணத்தை நிறுத்து என்ன இதெல்லாம் ? கேட்கவே கேவலமாக இல்லை?

அதற்க்கு மேலே அந்த பெண்ணை பெற்றவள் கோபம் பொண்ணு சொன்னதை கேட்ட மாட்டாளாம், அவ நினத்தத்தை தான் செய்வாளாம் ஒத்துக்கும் மாப்பிள்ளை வேண்டுமாம். சீ சீ? ஒரு படத்தில் விஷால் சொல்வார், அம்பிளங்கள.அடக்க நினைக்காதீங்க நீங்க அன்பா இருந்த அவனே அடங்கி போவான், அடக்க நினத்தால்.... என்று அது போல எந்த காலத்திலும் பெண்களுக்கு அடக்கம் வேண்டும்.

ஒன்று சொல்வார்கள் "டில்லிக்கு ராஜா வனாலும் தல்லிக்கு பிட்டை தானே " என்று அது போல் என்ன பேசினாலும் பெண்கள் தானே பெற்று கொடுக்கணும்? இல்ல அதுக்கும் முறை வைப்பார்களா?

ஆனால் நான் சொல்ல வந்தது என்ன வென்றால், காரணமே இல்லாமல் நிறுத்துவது என்பதை பற்றி தான். அந்த பெண் என்ன நாகரிகத்துடன் எழுதி இருக்கா? நீங்க அவளுக்கு வக்காலத்து வாங்க? பையன்கள் எப்பவுமே தங்கள் அப்பா அம்மா வை விட பெண்டாட்டி இன் அப்பா அம்மாக்கு மதிப்பு அதிகம் தருவா.அதுவும் ஒரு பெண் அல்லது இரண்டுமே பெண் ஆகி விட்டால் அந்த அக்கறை அதிகம் இருக்கும். அதை கூட தெரிந்து வைத்துக்கொள்ளாமல் அந்த பெண் மட்டமாக கமெண்ட் அடிக்கிறாள், இவளை என்னமோ அடிமையாக விற்பது போல் நீங்க் கேட்கிறீர்கள் அதை படிக்கலையா என ? இந்த மாதிரி பெண்களால் தானே முதியோர் இல்லம் பெருகுகிறது? தன் அம்மா அப்பாக்கு ஒரு நியாயம் அகமுடையானின் அம்மா அப்பா கு வேறு ஒரு நியாயம் என இருக்கும் இவளை போன்ற பெண்களால் தானே இந்த அவலம் ? இதில் இவளுக்கு பேச்சு வேறு கோபம்

தொடரும்....


அப்படி எந்த பெண்ணும் நினைப்பது இல்லை.....
இன்னும் விளக்கினால் நமக்குலே விவாதங்கள் தான் ஏற்படும்.
ஒரு பெண்ணாக சொல்ட்றேன்...சுயநலம் இருக்கும் ஆண்கள் வீட்டில் ஒரு பெண்ணால் வாழவே முடியாது..
மகனின் சந்தோஷம் தான் முக்கியம் என்று பெண்ணை அவலப்படுத்தும் கேவலமான சில மாமியார்கள் இருந்தால் அவரகளை அடக்க ஒரு மருமகள் வருவாள்... அனுபவத்தில் கூறுகிறேன்.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக