புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
4 Posts - 3%
Kavithas
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
1 Post - 1%
சிவா
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
1 Post - 1%
bala_t
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
1 Post - 1%
prajai
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
1 Post - 1%
M. Priya
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
296 Posts - 42%
heezulia
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
27 Posts - 4%
sugumaran
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
6 Posts - 1%
prajai
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
4 Posts - 1%
manikavi
இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 8 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கணச் சுருக்கம்


   
   

Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:00 am

First topic message reminder :

இலக்கணச் சுருக்கம் - ஆறுமுகநாவலர்


முதலாவது: எழுத்ததிகாரம்

1.1. எழுத்தியல்

இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.
-----

2. அந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்றதிதிகாரங்களாக வகுக்கப்படும்.

எழுத்துக்களின் பெயர்
3. எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்
-----

4. அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.
-----

5. உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.
-----

6. உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும்.
-----

7. குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.
-----

8. நெட்டெழுத்துக்கள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்
-----

9. மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும்.
இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.
-----

10. மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.
-----

11. வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம்.
இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.
-----

12. மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம்.
இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.
-----

13. இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம்.
இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.
-----

14. அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம். உதாரணம்.
அவன், இவன், உவன்,
அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்.
-----

15.எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம்.உதாரணம்.
எவன், எக்கொற்றன்
கொற்றான, கொற்றனோ
ஏவன், கொற்றனே
யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம்
-----

16. அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம். இடையெழுத்தாறும். ஓரினமாகும்; அவை இவ்விரண்டோரினமாகாவாம்.
-----

17. உயிர் மெய்யெழுத்துக்களாவன. புன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.

அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.

உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

ஊயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
-----

18. ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும்.
உதாரணம். எஃகு, கஃசு, அஃது, பஃறி
-----

19. மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:57 pm

எதிர்மறையிடைநிலை
69. இல், அல், ஆ, என்னும் மூன்றும் எதிர்மறை யிடைநிலைகளாம். இவற்றுள், ஆகாரவிடைநிலை, வருமெழுத்து மெய்யாயிற் கெடாதும், உயிறாய்க்கெட்டும் கெட்டும் வரும்.
உதாரணம்.
நடந்திலன், நடக்கின்றிலன், நடக்கலன், நடவாதான், நடவான், நடவேன்.
நடவாதான் என்பதிலே தகரமெய் எழுத்துப்பேறு.

தேர்வு வினாக்கள்
69. எதிர்மறையிடைநிலைகள் எவை?
ஏதிர்மறை ஆகாரவிடைநிலை எங்கே கெடதும், எங்கே கெட்டும் வரும்?

----

காலங்காட்டும் விகுதி

70. சில விகுதிகள், இடைநிலையேலாது, தாமே காலங்காட்டும், அவை வருமாறு:-
து, தும், று, றும் என்னும் விகுதிகள் இறந்தகாலமும், எதிர்காலமுங்காட்டும்.
உதாரணம்.
வந்து, (-வந்தேன்), வந்தும், (-வந்தேம்) வருது, (-வருவேன்) வருதும், (-வருவேம்) எ-ம்.
சென்று, (-சென்றேன்) சென்றும், (-சென்றேம்) சேறு, (-செல்வேன்) சேறும், (-செல்வேம்) எ-ம். வரும்.
கு, கும் என்னும் விகுதிகள் எதிர்காலங் காட்டும்.
உதாரணம்.
உண்கு, (-உண்பேன்) உண்கும், (-உண்பேம்) என வரும்
டு, டும் என்னும் விகுதிகள் இறந்தகாலங் காட்டும்.
உதாரணம்.
உண்டு, (-உண்டேன்) உண்டும், (-உண்டேம்) என வரும்.
இ என்னும் முன்னிலை வினைமுற்று விகுதி யொன்றும், ப, மர், என்னும் படர்க்கை வினைமுற்று விகுதியிரண்டும், க, இய, இயர், அல், என்னும் வியங்கோண் முற்று விகுதுp நான்கும், ஆய், இ, ஆல், ஏல், காண், மின், உம், ஈர், என்னும் முன்னிலையேவன்முற்று விகுதியேழும், ஆகிய பதிநான்கு விகுதிகளும் எதிர்காலங்காட்டும்.
உதாரணம்.
(1). சேறி, (-செல்வாய்) (2) நடப்ப, (-நடப்பார்) நடமார், (-நடப்பார்) (3) வாழ்க, வாழிய, வாழியர், உண்ணல் (4) நடவாய், உண்ணுதி, மாறல், அழேல், சொல்லிக்காண், நடமின், உண்ணும், உண்ணீர்.
உம்
என்னஞ் செய்யுமன் முற்று விகுதி நிகழ்காhலமும் எதிர்காலமுங் காட்டும்.
உதாரணம்.
உண்ணும்
எச்சவிகுதிகள் காலங்காட்டல் வினையியலிற் கண்டு கொள்க.

தேர்வுவினாக்கள
70. இடைநிலையேலாது தாமே காலங்காட்டும் விகுதிகள் உளவோ?
து, தும், று, றும், விகுதிகள் எக்காலங் காட்டும்?, கு, கும், விகுதிகள் எக்காலங் காட்டும்?
டு, டும் விகுதிகள் எக்காலங் காட்டும்? ஏதிர்காலங்காட்டும்? வேறு விகுதிகள் உளவோ? உம் என்னுஞ் செய்யுமென் முற்று விகுதி எக்காhலங் காட்டும்?

------

காலங்காட்டும் பகுதி
71. கு, டு, று, என்னும் மூன்னுயிர்மெய்களை இறுதியாக உடைய சில குறிலிணைப் பகுதிகள் விகாரப்பட்டு இறந்த காலங்காட்டும்.
உதாரணம்.
புக்கான், விட்டான், பெற்றான்.

தேர்வு வினா
71. காலங்காட்டும் பகுதிகள் உளவோ?

----

சாரியை
72. சாரியைகள், அன், ஆன், அம், ஆம், அல், அத்து, அற்று, இன், இற்று, தன், தான், தம், தாம், நம்,நும், அ, ஆ, உ, ஏ, ஐ, கு, து, ன் என்னும் இருபத்து மூன்றும் பிறவுமாம்.
உதாரணம்.
நடந்தனன், ஒருபற்கு, புளியங்காய், புற்றாஞ்சோறு, தொடையல், அகத்தன், பலவற்றை, வய்டின் கால், பதிற்றுப் பத்து, அவன்றன்னை, அவன்றான், அவர்தம்மை, அவர்தாம், எல்லாநம்மையும், எல்லீர் நும்மையும், நடந்தது, இல்லாப்பொருள், உண்ணுவான், செய்து கொண்டான், ஆன்.

தேர்வு வினா
72. சாரியைகளென்பன எவை?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:59 pm

சந்தி
73. சந்திகளாவன, புணரியலிற் சொல்லப்டுவன வாகிய தோன்றல் முதலிய புணர்ச்சி விகாரங்களாம்.

தேர்வு வினா
73. சந்திகளாவன எவை?

----

விகாரம்
74. விகாரங்களாவன, மெல்லின மெய்யை வல்லின மெய்யாக்கலும், குற்றெழுத்தை நெட்டெழுத்தாக்களும், நெட்டெழுத்தை கற்றெழுத்தாக்கலும், இல்லாத எழுத்தை விரித்தலும், உள்ள எழுத்தை தொகுத்தலும் ஆம்.

தேர்வு வினா
74. வகாரங்களாவன எவை?

பதவியல் முற்றிற்று




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 7:07 pm

[You must be registered and logged in to see this image.]



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 18, 2009 6:41 am

1. 3. புணரியல்

75. புணர்ச்சியாவது, நிலைமெழியும் வருமொழியும் ஒன்டுபடப்புணர்வதாம்.
---

76. அப்புணர்ச்சி, வேற்றுமைப்புணர்ச்சியும், அல் வழிப்புணர்ச்சியும் என இரண்டு வகைப்படும்.
---

77. வேற்றுமைப் புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண், என்னும் ஆறுருப்புகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச்சொகள் புணர்வதாம்.
உதாரணம்.
வேற்றுமைத்தொகை வேற்றுமைவிரி
மரம்வெட்டினான் .. ஜஐஸ மரத்தை வெட்டினான்
கல்லெறிந்தான் .. ஜஆல்ஸ கல்லாலெறிந்தான்
கொற்றன்மகன் .. ஜகுஸ கொற்றனுக்கு மகன்
மலைவீழருவி .. ஜஇன்ஸ மலையின் வீழருவி
சாத்தான்கை .. ஜஅதுஸ சாத்தனதுகை
மலைநெல் .. ஜகண்ஸ மலையின்கணெல்
---

78. அலவழிப்புணர்ச்சியாவது, வேற்றுமையல்லாத வழியிற் புணர்வதாம். ஆது, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை, என்னும் ஐந்து தொகைநிலைத்தொடரும், எழுவாய்த்தொடர், விளித்தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், இடைச்சொற்தொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர், என்னும் ஒன்பது தொகாநிலைத் தொடருமாகப், பதினான்கு வகைப்படும்.

தொகைநிலைத் தொடர்களுக்கு உதாரணம்
(1) கொல்யானை .. வினைத்தொகை
(2) கருங்குதிரை .. பண்புத்தொகை சாரைப்பாம்பு .. இருபெயரொட்டுப் பண்புத் தொகை
(3) மதிமுகம் .. உவமைத் தொகை
(4) இராப்பகல் .. உம்மைத் தொகை
(5) பொற்றொடி .. அன்மொழித் தொகை

தொகாநிலைத் தொடர்களுக்கு உதாரணம்
(1) சாத்தன் வந்தான் .. எழுவாய்த் தொடர்
(2) சாத்தவா .. விளித் தொடர்
(3) வந்தான் சாத்தன் .. தொரிநிலை வினைமுற்றுத் தொடர்
(4) பொன்னனிவன் .. குறிப்பு வினைமுற்றுத்தொடர்
(5) வந்த சாத்தன் .. பெயரெச்சத் தொடர்
(6) வந்து போனான் .. வினையெச்சத் தொடர்
(7) மற்றொன்று .. இடைச்சொற்றொடர்
(8) நனிபேதை ..உரிச்சொற்றொடர்
(9) பாம்பு பாம்பு .. அடுக்குத் தொடர்
---

79. இப்படி மொழிகள், வேற்றுமை வழியாலும், அல்வழியாலும், புணருமிடத்து, இயல்பாகவாயினும், விகாரமாகவாயினும் புணரும்.
---

80. இயலபு புணர்ச்சியாவது, நிலைமொழியும், வருமொழியும், விகாரமின்றிப் புணர்வதாம்.
உதாரணம்.
பொன்மணி சாத்தன்கை
---

81. விகாரப்புணர்ச்சியாவது, நிலைமொழியேனும், வருமொழியேனும், இவ்விரு மொழிமேனும், தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்று விகாரங்களுள் ஒன்றையாயினும் பெற்றுப் புணர்வதாம்.
உதாரணம்.
வாழை + பழம் - வாழைப்பழம் தோன்றல்
மண் + குடம் - மட்குடம் திரிதல்
மரம் + வேர் - மரவேர் கெடுதல்
நிலம் + பனை - நிலப்பனை கெடுதல், தோன்றல்
பனை + காய் - பனங்காய் கெடுதல், தோன்றல், திரிதல்
---

82. தோன்றல், திரிதல், கெடுதல், என்னும் இவ் விகாரமூன்றும், மயக்க விதி இன்மை பற்றியும், அல்வழி வேற்றுமைப் பொருணோக்கம் பற்றியும் வரும்.

தேர்வு வினாக்கள்

75. புணர்ச்சியாவது யாது?
76. அப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
77. வேற்றுமைப்புணர்ச்சி யாவது யாது?
78 ஆல்வழிப் புணர்ச்சியாவது யாது?
அது எத்தனை வகைப்படும்?
79. மொழிகள், வேற்றுமை வழியாலும் அல்வழியாலும் புணருமிடத்து, எப்படி புணரும்?
80. இயல்பு புணர்ச்சியாவது யாது?
81. விகாரப் புணர்ச்சியாவது யாது?
82. தோன்றல் முதலிய விகாரங்கள் எவை பற்றி வரும்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 18, 2009 6:42 am

மயங்கா எழுத்துக்கள்
83. உயிரோடு உயிர்க்கு மயக்கவிதி இன்மையால், உயிரீற்றின்முன், உயிர் வரின், இடையே உடம்படு மெய்யென ஒன்று தோன்றும்.
உடம்படு மெய்யாவது, வந்த உயிருக்கு உடம்பாக அடுக்கும் மெய், நிலைமொழியீற்றினும் வருமொழி முதலினும் நின்ற உயிர்களை உடம்படுத்தும் மெய்யெனினும் பொருந்தும். உடம்படுத்தலெனினும், உடன் படுத்தலெனினும் ஒக்கும்.
---

84. மெய்யீற்றின்முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய்வரின், நிலைமொழியீற்றேனும், வருமொழி முதலேனும், இவ்விரண்டுமேனும் விகாரப்படும்.
---

85.மொழிக்கு ஈராகுமெனப்பட்ட பதிகொருமெய்களின் முன்னும், மொழிக்கு முதலாகுமெனப்பட்ட ஒன்பது மெய்களும் புணரும்போது, மயங்குதற்கு உரியனவல்லாத மெய்களைச் சொல்வாம் :-
லகர ளகரங்களின் முன்னே த ஞ ந ம என்னும் நான்கும் மயங்கா. ணுகர னகரங்களழன் முன்னே த ந என்னும் இரண்டும் மயங்கா. முகர மெய்யின் முன்னே க ச த ஞ ந என்னும் இரண்டும் மயங்கா ஞகரத்தின் முன்னே சகரமும் யகரமுமல்லாத ஏழம் மயங்கா. நுகரத்தின் முன்னே தகரமும் யகரமுமல்லாத ஏழம் மயங்கா. வுகரத்தின் முன்னே யகரமல்லாத எட்டும் மயங்கா.

தேர்வு வினாக்கள்
83. உயீறிற்றின் முன் உயிர் வரின் எப்படி யாகும்?
உடம்படுமெய்யாவது யாது?
உடம்படுமெய்யென்பதற்கு வேறு பொருளும் உண்டோ?
84. மெய்யீற்றின் முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய்வரின் எப்படியாகும்?
85. லகர ளகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
ணகர னகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
மகரமெய்யின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
ஞகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
நகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
வகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?

---

மெய்யீற்றின் முன் உயிர் புணர்தல்

86. தனிக்குற்றெழுத்தைச் சாரத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், வந்தவுயிர் அந்த மெய்யீற்றின் மேல் ஏறும்.
உதாரணம்.
ஆண் + அழகு - ஆணழகு
மரம் + உண்டு - மரமுண்டு
---

87. தனிக்குற்றெழுத்தை ச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், அந்த மெய் இரட்டிக்கும்: இரட்டித்த மெய்யீற்றின் மேல் வந்தவுயிர் ஏறும்.
உதாரணம்.
கல் + எறிந்தான் - கல்லெறிந்தான்
பொன்; + அழகியது - பொன்னழகியது

தேர்வு வினாக்கள்
86. தனிக்குற்றெழுத்தைச் சாராத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படி புணரும்?
87. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படி புணரும்?

-----

உயீரிற்றின் முன் உயிர் புணர்தல்

88. இ, ஈ, ஐ என்னும் மூன்றுயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழிவந்தால், இடையில் யகரம் உடம்படு மெய்யாக வரும்.
உதாரணம்.
கிளி; + அழகு - கிளியழகு
தீ + எரிந்தது - தீயெரிந்தது
பனை + ஓலை - பனையோலை
---

89. அ, ஈ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் வகரம் உடம்படுமெய்யாக வரும்.
உதாரணம்.
பல + அணி - பலவணி
பலா + இலை - பலாவிலை
திரு + அடி - திருவடி
பூ + அரும்பு - பூவரும்பு
நொ + அழகா - நொவ்வழகா
கோ + அழகு - கோவழகு
கௌ + அழகு - கௌவழகு

கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால், இடையில் வகரம் வராது யகரம் வரும்.
உதாரணம்.
கோ + இல் - கோயில்
ஓரோவிடத்துக் கோவில் எனவும் வரும்.
---

90. ஏகாரவுயிரீற்றின் முன் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் யகரமாயினும், வகரமாயினும், உடம்படு மெய்யாக வரும்.
உதாரணம்.
அவனே + அழகன் - அவனேயழகன்
சே + உழுதது - சேவுழுதது

தேர்வு வினாக்கள்
88. இ, ஈ, ஐ எ;ஏம் மூன்றுயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால் எப்படி புணரும்?
89. அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால் எப்படி புணரும்?
கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால் இப்படியே முடியுமோ?
90. ஏகாரவுயிரீற்றின் முன் உயிர் முதன்மொழி வந்தால் எப்படி புணரும்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Sep 18, 2009 7:21 am

சிவா அண்ணா அருமை அருமை நல்ல தகவல்... [You must be registered and logged in to see this image.] .

[You must be registered and logged in to see this image.] "வாழ்க தமிழ்" [You must be registered and logged in to see this image.]

****** [You must be registered and logged in to see this image.] வளர்க ஈகரை [You must be registered and logged in to see this image.] *****


[You must be registered and logged in to see this image.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 4:21 am

குற்றியலுகரத்தின் முன் உயிரும் யகரமும் புணர்தல்
91. குற்றியலுகரம், உயிர் வந்தால் தான் ஏறி நின்ற மெய்யைவிட்டுக் கெடும்: யகரம் வந்தால், இகரமாகத் திரியும்.
உதாரணம்.
ஆடு + அரிது - ஆடரிது
நாகு + யாது - நாகியாது
குற்றியலுகரஞ் சம்ஸ்கிருத பாடையில் இல்லாமையால், சம்பு, இந்து முதலிய வட மொழிகளின் ஈற்றுகரம் உயிர்வரிற் கெடாது நிற்க, உடம்படு மெய் தோன்றும்.
உதாரணம்.
சம்பு + அருளினான் - சம்புவருளினான்
இந்து + உதித்தது - இந்துவுதித்தது

தேர்வு வினாக்கள்
91. குற்றியலுகரத்தின் முன் உயிர் வந்தால் எப்படியாம்?
குற்றியலுகரத்தின் முன் யகரம் வந்தால் எப்படியாம்?
குற்றியலுகரஞ் சம்ஸ்கிருத பாடையில் உண்டா இல்லையா? வுட மொழிகளின் ஈற்றுகரத்தின் முன் உயிர் வரின் எப்படியாம்?

----

சில முற்றியலுகரவீற்றின் முன் உயிரும் யகரமும் புணர்தல்

92. சில முற்றியலுகரமும், உயிர் வரின் மெய்யை விட்டுக்கெடுதலும், யகரம் வரின் இகரமாகத் திரிதலுமாகிய இவ்விரு விதியையும் பெறும்.
உதாரணம்.
கதவு + அழகு - கதவழகு
கதவு + யாது - கதவியாது

தேர்வு வினா
92.முற்றியலுகரங் குற்றியலுகரவீற்று விதி பெறாதா?

---

எல்லாவீற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும் புணர்தல்
93. உயிரும் மெய்யுமாகிய எல்லாவீற்றின் முன்னும் வரும் ஞ ந ம ய வ க்கள், இருவழியினும், இயல்பாம்: ஆயினும் இவற்றுள் ண ள ன ல என்னும் நான்கின் முன்னும் வருநகரந் திரியும். இத்திரிபு மேற் கூறப்படும்;
வின, பலா, புளி, தீ, கடு, பூ, சே, பனை, கோ, கௌ, உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், யாழ், வாள், என்னும் நிலைமொழிகளோடு, அல்வழிப்புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது, என்னும் வருமொழிகளையும், வேற்றுமைப்புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞாற்சி நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை, என்னும் வருமொழிகளையும் கூட்டிக்கண்டு கொள்க.
உதாரணம்.
விள + ஞான்றது - விளஞான்றது
உரிஞ் + ஞான்றது - உரிஞ10ஞான்றது
விள + ஞாற்சி - விளஞாற்சி
உரிஞ் + ஞாற்சி - உரிஞ10ஞாற்சி
நிலைமொழியீற்றுட் சில விகாரப்படுதல், பின்பு அல்வவ்வீற்றிற் கூறும் விதியாற் பெறப்படும்.
---

94. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த யகரமெய்யின் முன்னுந் தனி ஐகாரத்தின் முன்னும் வரும் மெல்லினம் மிகும்ஃ
உதாரணம்.
மெய் + ஞானம் - மெய்ஞ்ஞானம்
செய் + நன்றி - செய்ந்நன்றி
கை + மாறு - கைம்மாறு
---

95. நொ, து என்னும் இவ்விரண்டும் முன் வரும் ந ம ய வக்கள் மிகும்.
உதாரணம்.
நொ + ஞௌ;ளா - நொஞ்ஞௌ;ளா
யவனா - நொய்யவனா
து + ஞௌ;ளா - துஞ்ஞௌ;ளா
யுவனா - துய்யவனா
நோ - துன்பப்படு, து- உண்

தேர்வு வினாக்கள்
93. எல்லாவீற்றின் முன்னும் ஞ ந ம ய வக்கள் வந்தால் எப்படிப் புணரும்?
94. ஞ ந ம ய வக்கள் எந்த மொழி முன்னும் மிகவோ?
95. நொ, து என்னும் இவ்விரண்டின் முன்னும் ஞ ந ம ய வக்கள் இயல.பேயாமோ?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 4:23 am

மெய்யீற்றின் முன் யகரம் புணர்தல்
96. யகரமல்லாத மெய்கள், தம் முன் யகரம் வந்தாள் இகரச்சாரியை பெறுதலுமுண்டு.
உதாரணம்.
வேள் + யாவன் - வேளியாவன்
மண் + யானை - மண்ணியானை
வேள்யாவன் என இகராச்சாரியை பெறாது வருதலே பெரும்பான்மையாம்.
---

97. தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய் வருமொழி யகரம் வந்தாற் கெடும்.
உதாரணம்.
வேய் + யாது - வேயாது

தேர்வு வினாக்கள்
96. யகரமல்லாத மெய்களின் முன் யகரம் வந்தால் எப்படி புணரும்?
97. தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய் முன் யகரம் வந்தால் எப்படிப் புணரும்?

---

மூன்று சுட்டின் முன்னும் எகரவினாமுன்னும் நாற்கணமும் புணர்தல்
98. அ, இ, உ என்னும் மூன்றும் சுட்டின் முன்னும், யகரமொழித்த மெய்கள் வந்தால், வந்தவெழுத்து மிகும்: யகரமும் உயிரும் வந்தால், இடையில் வகரந் தோன்றும்.

உதாரணம்.
அக்குதிரை இக்குதிரை உக்குதிரை எக்குதிரை
அம்மலை அம்மலை உம்மலை எம்மலை
அவ்வழி இவ்வழி உவ்வழி எவ்வழி
அவ்யபனை இவ்யானை உவ்யானை எவ்யானை
அவ்வுயிர் இவ்வுயிர் உவ்வுயிர் எவ்வுயிர்
---

99. அந்த, இந்த, உந்த எந்த என மரூஉமொழிகளாய் வருஞ்சுட்டு வினாக்களின் முன் வரும். வல்லினம் மிகும்.
உதாரணம்.
அந்தக்கல், இந்தக்கல், உந்தக்கல், எந்தக்கல்

தேர்வு வினாக்கள்
98. அ, இ, உ என்னும் மூன்று கட்டின் முன்னும், எகரவினா முன்னும் யகரமொழிந்த மெய்கள் வந்தால், எப்படி புணரும்?
இந்நான்கன் முன்னும் யகரமும் உயிரும் வந்தால் எப்படிப் புணரும்? 99. அந்த, இந்த, உந்த, எந்த என்னும் மரூஉமொழிகளின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?

---

உயர்தினைப் பொதுப் பெயர்களின் முன் வல்லினம் புணர்தல்
100. உயர்தினைப் பெயாப் பொதுப் பெயர்களின் ஈற்றுயிர் முன்னும், யகர ரகரமெய்களின் முன்னும் வரும் வல்லினம் இருவழியினும் மிகாதியல்பாம்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
நம்பிக்குறியன்
விடலைசிறியன்
செய்பெரியன்
அவர் தீயர் நம்பிக்கை
விடலை செவி
சேய்படை
அவர்தலை உயர்தினைப் பெயர்
சாத்திகுறியள்
சாத்திகுறிது சாத்திகால் போதுப்பெயர்
தந்தைசிறியன்
தந்தைசிறிது தந்நைசெவி
தாய்பொடியாள்
தாய்கொடிது தாய்கை
ரகரமெய் பொதுப்பெயர்க்கு ஈறாகாது

நும்பிக்கொற்றான், சாத்திப் பெண், சேய்க்கடவுள், தாய்ப்பசு என இருபெயரொட்டுப் கண்புத்தொகையினும், தாய்க்கொலை, ஒன்னலர்ச் செகுத்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், செட்டித்தெரு என ஒரோவிடத்து ஆறாம் வேற்றுமைத் தொகையினும் வல்லின மிகுமெனக்கௌ;க.
முகப்பிறந்தது, மகப்பெற்றாள், எ-ம். பிதாக்கொடியன்.பிதாக்கை, எ-ம். ஆடுச்சிறியன், ஆடுச்செவி, எ-ம். கோத்தீயன், கோத்தலை, எ-ம். அகர, ஆகார ஊகார ஓகாரங்களின் முன் வரும் வல்லினம் இரு வழியினும் மிகுமெனக் கொள்க.
---

101. உயர்திணைப் பெயர் பொதுப்பெயர்களின் ஈற்று லகர ளகர ணகர னகர மெய்கள், வல்லினம் வந்தால் இருவழியினுந் திரியாதியல்பாம்.

உதாரணம்.
அல்வழி வேற்றுமை
தேன்றல்குறியன்
அவள்சிறியள்
அவன்பெரியான் தோன்றல்கை
அவள்செவி
அவன்பொருள் உயர்திணைப் பெயர்
ணகரமெய் உயர்திணைப்பெயர்க்கு ஈறாகாது.
தூங்கல் குறியன்
தூங்கல் குறிது தூங்கல் கை பொதுப் பெயர்
மகக்கள் சிறியர்
மக்கள் சிறிய மக்கள் செவி
ஆண் பெரியன்
ஆண் பெரிது ஆண்புறம்
சாத்தன் சிறியன்
சாத்தன் சிறிது சாத்தன் செவி
உயர்திணைப் பெயரீற்று லகர ளகரங்கள், மாற்கடவுள், மக்கட்சுட்டு என இரு பெயரொட்டுப் பண்புத்தொகையினும், லகர ளகர னகரங்கள், குரிசிற் கண்டேன், மகட்கொடுத்தான், தலைவற்புகழ்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினுந் திரியுமெனக் கொள்க.
லகர ளகரங்களின் முன்னும், ணகர னகரங்களின் முன்னும், தகரம் மயங்குதற்கு விதியில்லாமையால், வரும் விகாரம் மேற்கூறப்படும்.

தேர்வு வினாக்கள்
100. உயர்திணைப் பெயர் பொதுப் பெயர்களின் ஈற்றுயிர் முன்னும், யகர ரகர மெய்களின் முன்னும், வல்லினம் வரின் எப்படிப் புணரும்?
இவைகளின் முன் வரும் வல்லினம் எந்தவிடத்தும் மிகவோ?
101. உணர்திணைப் பெயர் பொதுப் பெயர்களின் ஈற்று லபர ளகர ணகர னகரங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படிப் புணரும்?
இவைகள் வல்லினம், வந்தால் எவ்விமத்துந் திரியாவோ?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 21, 2009 4:26 am

சில வுயர்திணைப் பெயர் முன் நாற்கணமும் புணர்தல்

102. னகலர லகரவீற்றுச் சிலவுயர்திணைப் பெயர் முன் நாற்கணமும் புணருமிடத்து, உம்மைத் தொகையினும், இருபெயரொட்டுப் பண்புத் தொகையினும் ஆறாம் வேற்றமைத் தொகையினும், நிலைமொழியேனும், இவ்விரு சுழியுமெனும், விகாரப்படும்.
உதாரணம்.
உம்மைத் தொகை
கபிலன் + பரணன் - கபிலபரணர்
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
சிவன் + பெருமான் - சிவபெருமான்
முருகன் + கடவுள் - முருகக்கடவுள்
சதாசிவன் + நாவலன் - சதாசிவ நாவலன்
கந்தன் + வேள் - கந்தவேள்
வேலாயுதன் + உபாத்தியாயன் - வேலாயுதவுபாத்தியாயன்
தியாகராசர் + செட்டியர் - தியாகராசச் செட்டியர்
விநாயகர் + முதலியார் - விநாயகமுதலியார்

வேற்றுமைத் தொகை
குமரன் + கோட்டம் - குமரகோட்டம்
குமரக்கோட்டம்
வாணியர் + தெரு - வாணியத்தெரு
வேளாளர் + வீதி - வேளாளவீதி

தேர்வு வினாக்கள்
101. எல்லாவுயர்தியைப் பெயரும், நாற்கணங்களோடு புணருமிடத்து, இயல்பாகவே புணருமொ?

---

விளிப்பெயர் முன் வல்லினம் புணர்தல்
103. விளிப்பெயரீற்று உயிர் முன்னும் ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். ஆப் பெயரீற்று லகர ளகர ணகர னகரங்கள் வல்லினம் வந்தால் திரியாதியல்பாம்.
உதாரணம்.
புலவபாடு சாத்தா கேள்
நம்பிசெல் தம்பீ தா
வேந்து கூறு மகனே படி
விடலை போ நங்காய் பார்
நாய்கீர் சென்மின் நாய்காய் பார்
தோன்றல் உறாய் மக்கள் சொல்லீர்
ஆண் கேளாய் கோன் பேசாய்
விளக்கொடியை, பிதாகடகூறாய், ஆடூச் சொல்லாய், சேச்சொல்லாய், கோப்பேசாய், என அகர ஆகார ஊகார ஏகார ஓகாரங்களை இயல்பீறாகவுடைய விளிப்பெயர் முன் வரும் வல்லினம் மிகுமெனக் கொள்க.

தேர்வு வினாக்கள்
103. விளிப் பெயரீற்று உயிர் முன்னும், யரழ மெய் முன்னும், வல்லினம் வரின் எப்படியாம்?
வுpளிப்பெயரீற்று லகர ளகர ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
விளிப்பெயர் முன் வரும் வல்லினம் எவ்விடத்தும் மிகவோ?

---

ஈற்று வினா முன்னும் யாவினா முன்னும் வல்லினம் புணர்தல்
104. ஆ, ஏ, ஒ என்னும் மூன்றீற்று வினா முன்னும் யபவினா முன்னும் வரும் வல்லினம் மிகவாம்.
உதாரணம்.
அவனா கொண்டான் அவனே சென்றான்
அவனோ தந்தான் யா பெரிய

தேர்வு வினாக்கள்
104. ஆ, ஏ, ஒ என்னும் மூன்றீற்று வினா முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்?

---

வினைமுற்று வினைத் தொகைகளின் முன் வல்லினம் புணர்தல்
105. வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். ஆச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள், வல்லினம் வந்தாள் திரியாதியல்பாம்.
உதாரணம்.
தெரிநிலை வினைமுற்று
உண்டன குதிரைகள் உண்ணா குதிரைகள்
வருதி சாத்தா வந்தனை சாத்தா
வந்தது புலி வந்தாய் பூதா
உண்டீர் தேவரே உண்டாட தேவர்
உண்பல் சிறியேன் உண்டாள் சாத்தி
வந்தேக் சிறியேன் வந்தான் சாத்தன்
குறிப்பு வினைமுற்று
கரியன குதிரைகள் வில்லி சாத்தா
கரியது தகர் கரியை தேவா
கரியாய் சாத்தா கரியீர் சாத்தரே
கூயிற்றுக் குயில், குநற்தாட்டுக் களிறு என வன்றொடர்க் குற்றியலுகரவீற்றுத் தெரிநிலை வனை முற்றின் முன்னும், குறிப்பு வினைமுற்றின் முன்னு மாத்திரம் வரும் வல்லினம் மிகுமெனக் கொள்க.
ஏவலொருமை வினைமுற்று
நட கொற்றா வா சாத்தா
எறி தேவா கொடு பூதா
ஓடு கொற்றா வெஃகு சாத்தா
பரசு தேவா நடத்து பு_தா
அஞ்சு கொற்றா எய்து சாத்தா
வனை தேவா செய்கொற்றா
சேர் சாத்தா வாழ் பூதா
நில் கொற்றா கேள் சாத்தா
உண் கொற்றா தின் சாத்தா

நொ, து என்னும் ஏவலொருமை வினைமுற்றிரண்டின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.
உதாரணம். நொக்கொற்றா துச்சாத்தா
வினைத்தொகை
விரிகதிர் ஈபொருள்
அடுகளிறு வனைகலம்
ஆடு பாம்பு அஃகுபிணி
பெருகுபுனல் ஈட்டுதனம்
விஞ்சுபுகழ் மல்கு சுடர்
உண்கலம் தின்பண்டம்
கொல்களிறு கொள்கலம்
செய்கடன் தேர்ப்பொருள்
வீழ்புனல்
ஏவலொருமை வினைமுற்றும் வினைத் தொகையும் வன்றொடர்க் குற்றியலுகரவீற்றனவாயினும், அவற்றின் முன் வரும் வல்லினம் மிபாமை காண்க.
ணகர ழகரவீறுகள், வினைத் தொகைக்கும் ஏவன் முற்றுக்குமன்றி, மற்றை வினை முற்றுக்களுக்கு இல்லை. லகர வீறு குறிப்பு வினை முற்றுக்கு இல்லை.

தேர்வு வினாக்கள்
105. வினைமுற்று வினைத் தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ மெய் முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்?
ஆச் சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகலங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படியாம்?
வுல்லினம், எந்த வினை முற்றின் முன்னும் மிகவோ? வுன்றொடர்க் குற்றியலுகரவீற்று ஏவல் வினை முன்னும் வல்லினம் மிகுமோ? ஏந்த ஏவல் வினை முன்னும் வல்லினம் மிகவோ?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 21, 2009 11:40 am

எனக்கு ஒரு உண்மை தெரிந்து போச்சு அண்ணா ..மீனு தொல்லை தாங்க முடியலை தானே உங்களால். ஈகரை கண்ணோட்டத்தில் உங்க காதலை மீனு பிரித்து விடடாள் என்றுதானே இப்படி பண்றீங்க ..நானே போயிடுறேன்..இங்கே சொல்லும் இலக்கணம் உங்களுக்கு தலைக்கனம் ,எனக்கு மண்டைக்கனம் ஆகுதுங்கோ ..



[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 8 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக