புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10 
3 Posts - 2%
Kavithas
இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10 
1 Post - 1%
bala_t
இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10 
1 Post - 1%
prajai
இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10 
280 Posts - 42%
heezulia
இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10 
5 Posts - 1%
prajai
இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10 
4 Posts - 1%
manikavi
இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கணச் சுருக்கம்


   
   

Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:00 am

First topic message reminder :

இலக்கணச் சுருக்கம் - ஆறுமுகநாவலர்


முதலாவது: எழுத்ததிகாரம்

1.1. எழுத்தியல்

இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.
-----

2. அந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்றதிதிகாரங்களாக வகுக்கப்படும்.

எழுத்துக்களின் பெயர்
3. எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்
-----

4. அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.
-----

5. உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.
-----

6. உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும்.
-----

7. குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.
-----

8. நெட்டெழுத்துக்கள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்
-----

9. மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும்.
இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.
-----

10. மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.
-----

11. வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம்.
இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.
-----

12. மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம்.
இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.
-----

13. இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம்.
இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.
-----

14. அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம். உதாரணம்.
அவன், இவன், உவன்,
அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்.
-----

15.எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம்.உதாரணம்.
எவன், எக்கொற்றன்
கொற்றான, கொற்றனோ
ஏவன், கொற்றனே
யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம்
-----

16. அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம். இடையெழுத்தாறும். ஓரினமாகும்; அவை இவ்விரண்டோரினமாகாவாம்.
-----

17. உயிர் மெய்யெழுத்துக்களாவன. புன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.

அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.

உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

ஊயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
-----

18. ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும்.
உதாரணம். எஃகு, கஃசு, அஃது, பஃறி
-----

19. மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 6:16 pm

வாவ் நன்றி சிவா தகவலுக்கு



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:17 pm

முடிக்குஞ் சொன்னிற்கு மிடம்.

366. ஆறனுபொழிந்த வேற்றுமையுருபுகளையும், வினைமுற்றையும், வினையெச்சத்தையும் முடிக்கவருங் சொற்கள், அவைகளுக்குப் பின்னன்றி முன் வருதலுமுண்டு.

உதாரணம்.


1 வுந்தான் சாத்தன்
வெட்டினான் மரத்தை
வெட்டினான் வாளால்
கொடுத்தானந்தணர்க்கு
நிங்கினானூரின்
சென்றான் சாத்தன் கண்
வா சாத்தா வேற்றுமையுருபு
2 சாத்தன் போயினான் வினைமுற்று
3 போயினான் வந்து வினையெச்சம்
------

தேர்வு வினா
366. வேற்றுமையுருபுகளையும், வினைமுற்றையும், வினையெச்சத்தையும் முடிக்கவருங் சொற்கள், அவைகளுக்குப் பின்னன்றி முன் வருதலுமுண்டோ?


தொகாநிலைத் தொடரியல் முற்றிற்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:18 pm

3.3. ஒழியியல்

தொடர்மொழிப் பாகுபாடு


367. தொடர் மொழி,முற்றுத் தொடர் மொழியும் எச்சத்தொடர் மொழியும் என இருவகைப்படும்.

368. முற்றுத் தொடர் மொழியாவது, எழுவாயுஞ் செயப்படுபொருண் முதலிவைகளோடு கூடாதாயினுங் கூடியாயினும் முடிபு பெற்று நிற்குந் தொடர் மொழியாம். வடநூலார் இம்முற்றுத் தொடர் மொழியை வாக்கிய மென்பார்.

உ-ம்
சர்தன் வந்தான்
சாத்தன் சோற்றையுண்டான்

369. எச்சத் தொடர்மொழியாவது, முடிவு பெறாது அம்முற்றுத் தொடர் மொழிக்கு உறுப்பாக வருந் தொடர் மொழியாம்.

உதாரணம்.
யானைக் கோடு
யானையாவது கோடு
-----

தேர்வு வினாக்கள்
367. தொடர்மொழி எத்தனை வகைப்படும்?
368. முற்றுத் தொடர் மொழியாவது யாது?
369. எச்சத் தொடர்மொழியாவது யாது?


வாக்கியப் பொருளுணர்வுக்குக் காரணம்

370. வாக்கியத்தின் பொருளை உணர்த்தற்குக் காரணம், அவாய்நிலை, தகுதி, அண்மை, கருத்துணர்ச்சி என்னு நான்குமாம.

371. அவாய் நிலையாவது, ஒரு சொற் றனக்கு எச்சொல் இல்லாவிடின் வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாகாதோ அச்சொல்லை அவாவி நிற்றலாம்.

உதாரணம்.
ஆவைக்கொணா என்னுமிடத்து, ஆவை என்பது மாத்திரஞ் சொல்லிக் கொணாவெண்பது சொல்லாவிடினும், கொணாவெண்பதுமாத்திரஞ் சொல்லி ஆவை என்பது சொல்லாவிடினும், வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாதல அறிக.

372. தகுதியாவது, பொருட்குத் தடையுணர்ச்சி இல்லாமையாம்.

உதாரணம்.
நெருப்பானனை என்னுமிடத்து நனைலின் நெருப்புக் கருவியன்று என்கிற உணர்ச்சி தடையுணர்ச்சி. அவ்வுணர்ச்சி இருத்தலால், வாக்கியப் பொருளுணர்ச்சி உண்டாகாது.

நீலானனை என்னுமிடத்து நனைலின் நீர் கருவியாதலாற் றடையுணர்ச்சி யில்லை: ஆகவே தகுதி காரணமக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.

373. அண்மையாது, காலம் இடையின்றியும் வாக்கயப் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத சொல் இடையீடின்றியுஞ் சொல்லப்படுதலாம்.

உதாரணம்.
ஆவைக்கொணா என்பது யாமத்துக்கு ஒவ்வொரு சொல்லாக சொல்லப்படின், வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாகாது. ஒரு தொடராக விரையச் சொல்லப்படின், வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.

மலையுண்டானெருப்புடையது தேவதத்தன் என்னுமிடத்து, மலை நெருப்புடையது என்னும் வாக்கியத்தால் உண்டாகும் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத உண்டாக் என்னுஞ் சொல் அற்சொற்கட்கு இடையீடாக நின்றது: உண்டான் றேவதத்தன் என்னும் வாக்கியத்தால் உண்டாகும் பொருளுணர்ச்சிக்குக் காரணமல்லாத நெருப்புடையது என்னுஞ் சொல் அற்சொற்கட்கு இடையீடாக நின்றது. இப்படி இடையிட்டுச் சொல்லாது, மலை நெருப்புடையது: உண்டான் றேவதத்தன் எனச் சொல்லின, அண்மை காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.

374. கருத்துணர்ச்சியாவது, ஒரு சொல் எப்பொருளைத் தரல் வேண்டும் என்னுங் கருத்தாற் சொல்லப்பட்டதோ அக்கருத்தைச் சமயவிசேடத்தால் அறிதலாம்.

உதாரணம்.
மாவைக் கொண்டுவா என்னுமிடத்து மாவெண்பது பல பொருளொரு சொல்லாததால் வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாகாது. இது பசித்தோனாற் சொல்லப்படிற் றின்னுமாவெனவும், கவசம் பூண்டு நிற்பானாற் சொல்லப்படிற் குதிரை யெனவும், சொல்லுவான் கருத்துச் சமயவிசேடத்தால் அறியப்படும். அப்போது அக்கருத்துணர்ச்சி காரணமாக வாக்கியப் பொருளுணர்ச்சி யுண்டாதலறிக.
------

தேர்வு வினாக்கள்
370. வாக்கியத்தின் பொருளை உணர்த்தற் காரணம் என்ன?
371. அவாய்நிலையாவது யாது?
372. தகுதியாவது யாது? 373.
அண்மையாவது யாது?
374. கருத்துணர்ச்சியாவது யாது?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:20 pm

உருபும் வினையும் அடுக்கி முடிதல்

375. வேற்றுமையுருபுகள் விரிந்தாயினும் மறைந்தாயினும் ஒன் பல வடுக்கி வரினும், கலந்து பல வடுக்கி வரினும், வினைமுற்றும் பெயரெச்சமும் வினையெச்சமும் ஒன்று பல வடுக்கி வரினும், அப்பரவுந் தம்மை முடித்தற் குறிய ஒரு சொல்லைக் கொண்டு முடியும்.

உதாரணம்.

சாத்தனையுங் கொற்றனையும்
வாழ்த்தினான். சாத்தனுக்குங் கொற்றனுக்குந் தந்தை.
அருளற முடையன். உருபுகள் விரிந்தும் மறைந்தும் ஒன்று பல வடுக்கல்
அரசன் பகைவனை வாளால் வெட்டினான். அரசன் வாள் கைக் கொண்டான். உருபுகள் விரிந்தும் மறைந்தும் கலந்து பல வடுக்கல்
ஆடினான் பாடினான் சாத்தன் இளையண் வினைமுற்று ஒன்று பல வடுக்கல்
கற்ற கேட்ட பெரியோர்
நெடிய கரிய மனிதன் பெயரெச்சம் ஒன்று பல வடுக்கல்
கற்றுக் கேட்டறிந்தார் விருப்பின்றி வெறுப்பின்றியிருந்தார். வினையெச்சம் ஒன்று பல வடுக்கல்


376. வேற்றுமையுருபு, ஒன்று பல வடுக்கி வருமிடத்து, ஒரு தொடரினுள்ளே இறுதியினின்ற பெயரின் மாத்திரம் விரிந்து நின்று மற்றைப் பெயர்களெல்லா வற்றினுந் தொக்கு வருதலு முண்டு.

உதாரணம்.
பொருளின் பங்களைப் பெற்றான்
சேசோழபாண்டியர்க்கு நண்பன்
தந்தை hகயி னீங்கினான்

377. ஒரு தொடரினுள் ஒரு பொருளுக்கே பல பெயர் வருதலும், அப்பெயர் தோறும் ஒரு வேற்றுமையுருபே வருதலும் உளவாம். வரினும், பொருலொன்றே யாதலால் எண்ணும்மை பெறுதலில்லை.

உதாரணம்.
சங்கரனை யென்குணனைச் சம்புவைநால் வேதனொரு
கங்கரனை நெஞ்சே கருது.
------

தேர்வு வினாக்கள்
375. வேற்றுமையுருபுகள் ஒன்று பல வடுக்கி வரினும், கலந்து பலவடுக்கி வரினும், வினைமுற்றம் பெயரெச்சமும் வினையெச்சமும் ஒன்று பல வடுக்கி வரினும், அப்பலவும் எப்படி முடியும்?
376. வேற்றுமையுருபு, ஒன்று பலவடுக்கி வருமிடத்து, ஒரு தொடரினுள்ளே இறுதியினின்ற பெயரின் மாத்திரம் விரிந்து நின்று மற்றப் பெயர்களௌ;லாவற்றிலுந் தொக்க வருதலும் உண்டோ?
377. ஒரு தொடரினுள்ளே ஒரு பொருளுக்கே பல பெயர் வருதலும், அப் பெயர்தோறும் ஒரு வேற்றுமையுருபே வருதலும் உளவோ?

திணைபாலிட முடிபு


378. முடிக்கப்படுஞ் சொல்லோடு முடிக்குஞ் சொல்லானது, திணைபால் இடங்களின் மாறு படாது இயைந்து நிற்றல் வேண்டும். இயைந்து நில்லாதாயின் வழுவாம்.

உதாரணம்.

நம்பி வந்தான்
நங்கை வந்தான்
அந்தனர் வந்தார்
நான்வந்தேன்
நீ வந்தாய் வழாநிழை
நம்பி வந்தது
நங்கை வந்தான்
அவன்வந்தான் தியைவழு
பால்வழு
இடவழு

379. இரண்டு முதலிய உயர்திணைப் படர்க்கை எழுவாய் அடுக்கி வரின், பலர்பாற் படர்க்கைப் பயனிலை கொண்டு முடியும். இரணடு முதலிய அஃறிணைப் படர்க்கையெழுவாய் அடுக்கி வரின், பலர்பாலின்பாற் படர்க்கைப் பயனிலை கொண்டு முடியும்.

உதாரணம்.
நம்பியு நங்கையும் வந்தார்
யானையுங் குதிரையும் வந்தன

380. முன்னிலையெழுவாயோடு படர்க்கை எழுவாய் அடுக்கிவரின், முன்னிலைப் பன்மைப்பயனிலை கொண்டு முடியும். அது உளப்பாட்டு முன்னிலைப்பன்மை எனப்படும்.

உதாரணம்.
நீயு மவனும் போயினீர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:21 pm

381. தன்மையெழுவாயோடு முன்னிலையெழுவாயேனும் படர்க்கை யெழுவாயுமேனும் இவ்விரண்டெழுவாயு மேனும் அடுக்கி வரின், தன்மைப்பன்மைப் பயனிலை கொண்டு முடியும். இது உளப்பாட்டுத் தன்மைப்பன்மை எனப்படும்.

உதாரணம்.
யானு நீயும் போயினோம்
யானு மவனும் போயினோம்
யானு நீயு மவனும் போயினோம்.

382. திணையைந் தோன்றிய விடத்து உருபு வடிவு என்னும் பொதுச் சொற்களாலும், உயர்திணைப் பாலையந் தோன்றியவிடத்து அத்திணைப் பண்மைச் சொல்லாலும், அஃறிணைப்பாலையந் தோன்றியவிடத்துப் பால்பகாவஃறிணைச் சொல்லாலுங் கூறல் வேண்டும்.

உதாரணம்.

1 குற்றியோ மனுடனோ
அங்கு தோன்றுகிற உரு?
.... திணையையம்
2 ஆண்மகனோ
பெண்மகளோ அங்கே தோன்றுகிறவர்? ... உயர்திணைப்பாலையம்
3 ஒன்றோ பலவோ அங்கு வந்த குதிரை? ... அஃறிணைப்பாலையம்

383. இரு திணையில் உருதிணை துணிந்தவிடத்தும், இருபாலில் ஒரு பால் துணிந்தவிடத்தும், மற்றொன்றல்லாத தன்மையைத் துணிந்த பொருண்மேல் வைத்துக் கூறல் வேண்டும். இது சுரங்கள் சொல்லல் என்னும் அழகைப் பயப்பித்தலாற் சிறப்புடையதாம்.

உதாரணம்.

1 (குற்றியெனின்)
(மனுடனெனின்) மனுடனன்று
குற்றியல்லன் எ-ம்.
எ-ம்.
2 (ஆண்மகனெனின்)
(பெண்மகனெனின்) பெண்மகளல்லன்
ஆண்மகனல்லன் எ-ம்.
எ-ம்.
3 (ஒற்றெனின்)
(பலவெனின்) பலவன்று
ஒன்றல்ல எ-ம்.
எ-ம். கூறுக.
-----

தேர்வு வினாக்கள்
378. முடிக்கப்படுஞ் சொல்லோடு முடிக்குஞ் சொல்லானது எப்படி இயைந்து நிற்றல் வேண்டும்?
379. இரண்டு முதலிய உயர்திணைப் படர்க்கையெழுவாய் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்?
இரண்டு முதலிய அஃறிணைப் படர்க்கையெழுவாய் அடுக்கிவரின், எப்பயனிலை கொண்டு முடியும்?
380. முன்னிலையெழுவாயோடு படர்கையெழுவாய் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்?
381. தன்மையெழுவாயோடு, முன்னிலையெழுவாயேனும், படர்க்கையெழுவாயேனும் இவ்விரண்டெழுவாயேனும் அடுக்கி வரின், எப்பயனிலை கொண்டு முடியும்?
382. திணையையத்தையும் பாலையத்தையும் எந்தெந்த சொல்லாற் கூறல் வேண்டும்?
383. இருதிணையில் ஒரு திணை துணிந்த விடத்தும், மற்றொன்றல்லாத தன்மையை எப்பொருண்மேல் வைத்துக் கூறல் வேண்டும்?


திணைபாலிடப் பொதுமை நீங்குநெறி

384. திணை பாலிடங்கட்குப் பொதுவாகிய பெயர் வினைகட்கு முன்னும் பின்னும் வருஞ் சிறப்புப் பெயருஞ் சிறப்பு விணையும், அவற்றின் பொதுத்தன்மையை நீக்கி, ஒன்றனை யுணர்த்தும்.

உதாரணம்.
சாத்தனிநன்: சாத்தனிது,. எ-ம். சாத்தன் வந்தான்: சாத்தன் வந்தது, எ-ம். பெயர்திணைப் பொதுமையைப் பின் வந்த சிறப்புப் பெயர்கள் நீக்கி உரு திணையை யுணர்த்தின.

ஒருவரென்னையர்: ஒருவரென்றாயர். எ-ம். மரம் வளர்ந்தது: மரம் வளர்ந்தன,எ-ம். பெயர்ப்பாற் பொதுமைப் பின் வந்த சிறப்புப் பெயரும் வினையும் நீக்கி ஒரு பாலையுணர்த்தின.

யாமெல்லாம் வருவோம்: நீயிரெல்லாம் போமின்: அவரெல்லாமிருந்தார் எனப் பெயரிடப் பொதுமையை முன்வந்த சிறப்புப் பெயரும் பின் வந்த சிறப்பு வினையும் நீக்கி ஒவ்வோரிடத்தை யுணர்த்தின.

வாழ்க அவன், அவள், அவர், அது, அவை, யான், யாம், நீ, நீர் என வினைத்திணை பாலிடப் பொதுமையைப் பின் வந்த சிறப்புப் பெயர்கள் நீக்கி ஒரு திணையையும் பாலையும் இடத்தையும் உணர்த்தின.

385. பெயர் வினையிரண்டும் உயர்திணை யாண் பெணிரண்டற்கும் பொதுவாகவேணும், அஃறிணை யாண்பெணிரண்டற்கும் பொதுவாகவேணும் வருமிடத்து, அப்பாலிரண்டனுள் ஒருபாற்கே யுரிய தொழின் முதலிய குறிப்பினால், அப்பாலானது துணியப்படும்.

உதாரணம்.
ஆயிரமக்கள் போர் செய்யப் போயினார் என்னுமிடத்து, மக்களென்னும் பெயரும் போயினரென்னும் வினையும் உயர்திணை யாண்பெணிருபாறற்கும் பொதுவாயினும், போர் செயலென்னுந் nhழிற்குறிப்பினால் ஆண்பால் துணியப்பட்டது.

பெருந்தேவி மகவீன்ற கட்டிலினருகே நால்வர் மக்களுளர் என்னுமிடத்து, மக்களென்னும் பெயரும் உளர் என்னும் வினையும் உயர்திணை யாண்பெணிருபாறற்கும் பொதுவாயினும், ஈனுதலென்னுந் தொழிற்குறிப்பினாற் பெண்பால் துணியப்பட்டது.

இப்பெற்ற முழவொழிந்தன என்னுமிடத்து, பெற்றமென்னும் பெயரும் ஒழிந்தன வென்னும் வினையும் அஃறிணையாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், உழவென்னுந் தொழிற்குறிப்பினால் எருது துணியப்பட்டது.

இப்பெற்ற முழவொழிந்தன என்னுமிடத்து, பெற்றமென்னும் பெயரும் ஒழிந்தன வென்னும் வினையும் அஃறிணையாண்பெணிருபாற்கும் பொதுவாயினும், கறத்தலென்னுந் தொழிற்குறிப்பினால் பெண்பசு துணியப்பட்டது.
----

தேர்வு வினாக்கள்
384. திணை பால் இடங்கட்குப் பொதுவாகிய பெயர் விணைகளின் பொதுத்தன்மையை நீக்கி, ஒன்றனை உணர்த்துவன யாவை?
385. பெயர் வினை இரண்டும் உயர்திணை யாண், பெண் இரண்டற்கும் பொதுவாகவேணும் வருமிடத்து, அப்பாலிரண்டனுள் ஒன்று எதனாலே துணியப்படும்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:23 pm

உயர்திணை தொடர்ந்த அஃறிணை

386. உயர்திணையெழுவாயோடு கிழமைப்பொருள் படத் தொடர்ந்து எழுவாயாக நிற்கும் அஃறினைப் பொருளாதியாறும், உயர்திணை விணையான் முடியும்.

உ-ம் நம்பி பொன்பெரியன்
நம்பி நாடு பெரியன்
நம்பி வாழ்நாள் பெரியன்
நம்பி மூக்குக் கூரியன்
நம்பி குடிமை நல்லன்
நம்பி நடை கடியன் இங்கேஉயர்திணையெழுவாயின் பயனிலையோடு அஃறிணை யெழுவாயும் முடிந்தறிக

மாடு கோடு கூரிது என்னுமிடத்தும், மாடு என்னும் அஃறிணையெழுவாயின் பயனிலையாகிய கூரிது என்னும் வினையோடு அதன்கிழமைப் பொருள்பட எழுவாயாக நின்ற கோடு என்பது முடிதறிக.
-----

தேர்வு வினா
386. உயர்திணை யெழுவாயோடு கிழமைப் பொருள் படத் தொடர்ந்து, எழுவாயாக நிற்கும் அஃறிணைப் பொருளாதியாறும் எத்திணை வினையான் முடியும்?


கலந்த திணை பால்களுக்கு ஒரு முடிபு

387. இரு திணைப் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்து, ஆண், பெண், என்னும் இருபாற் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வலுமிடத்தும், சிறப்பினாலும், ஒரு முடிபைப் பெறும்.

உதாரணம்.
’’திங்களுஞ் சான்றோரு மொப்பர்’’ என் இருதிணைப் பொருள்கள் கலந்துசிறப்பினால் உயர்திணைமுடிபைப் பெற்றன. சான்நோர் திங்கள் போல மறுத் தாங்கமாட்டாமை இங்கே சிறப்பு.

’’பார்ப்பார் தவரே சுமந்தார் பிணிப்பட்டார் மூத்தோர் குழவியெனு மிவர்கள்’’ என இரு திணைப் பொருள்கள் கலந்து மிகுதியால் உயர்திணை முடிபைப் பெற்றன. அஃறிணைப் பொருள் ஒன்றேயாகா உயர்திணைப் பொருள் ஐந்தால் இங்கே மிகுதி.

’’மூர்க்கனு முதலையுங் கொண்டது விடா’’ என இருதிணைப்பொருள்கள் கலந்து இழிவினால் அஃறிணை முடிபைப் பெற்றன. மூர்க்க குணமுடை இங்கே இழிவு.

தேவதத்தன் மனைவியுந் தானும் வந்தான் எனப்பாற் பொருள்கள் கலந்து சிறப்பினால் ஆண்பான் முடிவிபைப் பெற்றன. பெண்ணினும் ஆண் உயர்ந்தமை இங்கே சிறப்பு.
------

தேர்வு வினா
387. இருதிணைப் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்தும், ஆண் பெண் என்னும் இரு பாற் பொருள்கள் கலந்து ஒரு தொடராக வருமிடத்தும் அவை பலவும் எப்படி முடியும்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:24 pm

திணை பால் வழுவமைதி

388. மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, கோபம், இழிவு என்னும் இவைகளுள் ஒரு காரணத்தினால், ஒரு திணைப்பொருள் வேறுதிணைப் பொருளாகவும், ஒரு பாற் பொருள் றேறுபாற் சொல்லாகவுஞ் சொல்லப்படும்.

உதாரணம்.

ஒராவினை என்னமை வந்தாள் என்றவிடத்து, உவப்பினால் அஃறிணை உயர்திணையாகச் சொல்லப்பட்டது.

பசுங்கிளியார் தூது சென்றார் என்ற விடத்து, உயர்வினால் அஃறிணை உயர்திணையாகச் சொல்லப்பட்டது.

’’தம்பொருளெம்ப தம்மக்கள்’’ என்ற விடத்துச் சிறப்பினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.

பயனில்லாத சொற்களைச் சொல்லும் ஒருவனை இந்நாய் குரைக்கின்றது என்றவிடத்து, கோபத்தினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.

நாங்களுடமை என்றவிடத்து இழிவினால் உயர்திணை அஃறிணையாகச் சொல்லப்பட்டது.

தன்புதல்வனை என்னம்மை வந்தாள் என்றவிடத்து, மகிழ்ச்சியினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது.

ஒருவனை அவர் வந்தார் என்ற விடத்து, உயர்வினால் ஒருமைப்பால் பன்மைப்பாலாகச் சொல்லப்பட்டது.

தேவன் மூவுலகிற்குந் தாய் என்றவிடத்துச் சிறப்பினால் ஆண்பால் பெண்பாலாகச் சொல்லப்பட்டது.

‘எனைத்துணைய ராயினு மென்னாந் திணைத்துணையுந் தேரான் பிறனில் புகல்’ என்றவிடத்துக் போடத்தினாற் பன்மைப்பால் ஒரமைப்பாலாக சொல்லப்பட்டது.

பெண்வழிச் செல்வானை இவன் பெண் என்ற விடத்து இழிவினால் ஆண்பால் பெண்பாலகச் சொல்லப்பட்டது.
-----

தேர்வு வினா
388. ஒரு திணைப்பொருள் வேறு திணைப் பொருளாகவும், ஒரு பாற் பொருள் வெறுபாற் பொருளாகவுஞ் சொல்லப்படுமோ?


ஒருமை பன்மை மயக்கம்

389. ஒருமைப்பாலிற் பன்மைச்சொல்லையும், பன்மைப்பாலில் ஒருமைச் சொல்லையும் ஒரோவிடத்துச் தழுவிச் சொல்லுதலும் உண்டு.

உதாரணம்.
வெயிலெல்லா மறைத்தது மேகம். என்னுமிடத்து, வெயில் என்னும் ஒருமைப்பாலில் எலலாமென்னும் பன்மைச் சொற்சேர்த்து சொல்லப்பட்டது.

இரண்டு கண்ணும் சிவந்நது என்னுமிடத்து, வெயில் என்னும் ஒருமைச் சொற்சேர்த்து ச் சொல்லப்பட்டது.
-----

தேர்வு வினா
389. ஒருமைப்பாலிற் பன்மைச் சொல்லையும் பன்மைப்பாலில் ஒருமைச் சொல்லையுஞ் சொல்லதல் உண்டோ?


இடவழுவமைதி


390. ஓரிடத்திற் பிறவிடச் சொல்லை ஒரோவிடத்துத் தழுவிச் செல்லுதலும் உண்டு.

உதாரணம்.

சாத்தன்றா யிவை செய்வேனோ என்னுமடத்து, யானெனச் சொல்லல் வேண்டுந் தன்மையிலே சாத்தன்றாயெனப் படர்க்கைச் சொற் சேர்த்து சொல்லப்பட்டது. சாத்தன்றாயாகிய யான் என்பது பொருள்.

’’எம்பியை யீங்கப் பெற்றே னென்னெனக் கரிய தென்றான்.’’ என்னுமிடத்து, நின்னையெனச் சொல்லல்வேண்டு முன்னிலையிலே எம்பியையெனப் படர்க்கைச் சொற் சோர்த்துச் சொல்லப்பட்டது. எம்பியாகிய உன்னை என்பது பொருள்.

யானோ வவனோ யாரிது செய்தார்;
நீயோ வவனோ யாரிது செய்தார்;
நீயோ யானோ யாரிது செய்தார்;
நீயோ வவனோ யானோ யாரிது செய்தார்;

என ஒரிடத்திற் பிறவிடம் விரவி வருதலும் உண்டெனக் கொள்க.
------

தேர்வு வினா
390. ஓரிடத்திற் பிறவிடச் சொல்லை ஒரோவிடத்துத் தழுவிச் செல்லுதலும் உண்டோ?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:25 pm

காலவழுவமைதி

391. முக்காலத்தினுந் தந்தொழில் இடையறாமல் ஒரு தன்மையவாய் நிகழும் பொருள்களின் வினையை நிகழ்காலத்தாற் சொல்லத் தகும்.

உதாரணம்.
மலை நிற்கின்றது
தெய்வமிருக்கின்றது
கடவு ளளிக்கின்றார்

மலைக்கு நிற்றலும், தெய்வத்திற்கு இருத்தலும், கடவுட்கு அளித்தலும் முக்காலத்திலும் உள்ளனவாதல் காண்க.

392. விரைவு, மிகுதி, தெளிவு, என்னும் இம்மூன்று காரணங்களாலும், இக்காரணங்கள் இல்லாமலும், ஒருகாலம் வேறொருகாலமாகச் சொல்லவும் படும்.

உதாரணம்.
உண்பதற்கிருப்பவனும் உண்கின்றவனும் விரைவிலே தம்மை உடன்கொண்டு போக அழைப்பவனுக்கு, உண்டேன்

உண்டேன்; வந்தேன் வந்தேன் என்ற விடத்து, விரைவு பற்றி எதிர்காலமும் நஜகழ்காலமும், இறந்தகாலமாகச் சொல்லப்பட்டன.

களவு செய்ய நினைப்போன் கையறுப்புண்டான் என்ற விடத்துக், களவு செய்யிற் கையறுப்புண்ணல் மிகுதியாதலால், எதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது. கையறுப்புண்ணல் தவறிறுந் தவறுமாதலால் மிகுதிணெனப்பட்டது.

எறும்பு முட்டைகொண்டு திட்டையேறின் மழைபெய்தது என்ற விடத்து, எறும்பு முட்டையெடுத்து மேட்டிலேறினால் மழைபெய்தல் தெளிவாதலால், nதிர்காலம் இறந்தகாலமாகச் சொல்லப்பட்டது.

யாம் பண்டு விளையாடுவ திச்சோலை; யாம் பண்டு விளையாடுகிறதிச் சோலை இவைகளில், அக்காரணங்கள் இல்லாமலே, இறந்தகாலம், எதிர்காலம் நிகழ்காலம், சொல்லப்பட்டன.
-----

தேர்வு வினாக்கள்
391. முக்காலத்தினுந் தந்தொழில் இடையறமல் ஒரு தன்மையவாய் நிகழும் பொரள்களின் வினையை எக்காலத்தாற் சொல்லத் தகும்?
392. ஒரு காலம் வேறொரு காலமாகச் சொல்லப்படுமோ?


வினைமுதலல்லனவற்றை வினைமுதல் போலச் சொல்லல்

393. செயப்படுபொருளையும், கருவியையும், இடத்தையும், செயலையும், காலத்தையும், வினைமுதல் போல வைத்து, அவ்வினைமுதல் வினையை அவைகளுக்கு ஏற்றிச் சொல்லுதலும் உண்டு.

உதாரணம்.
இம்மாடியான் கொண்டது - செயப்படுபொருள்
இவ்வெழுத்தாணியானெழுதியது - கருவி
இவ்வீடியானிருநடதது - இடம்
இத்தொழில் யான் செய்தது - செயல்
இந்நாள் யான் பிறந்தது - காலம்
-----

தேர்வு வினா
393. செயப்படுபொருளையுங் கருவியையும் இடத்தையும் செயலையுங் காலத்தையும் வினைமுதல் போல வைத்து, அவ்வினைமுதல் வினையை அவைகளுக்கு ஏற்றிச் சொல்லுதலும் உண்டோ?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 6:26 pm

அடைமொழி

394. பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறும், இனமுள்ள பொருள்களுக்கேயன்றி, இனமில்லாப் பொருள்களுக்கும், அடைமொழிகளாய் வரும்.

அடையினால் அடுக்கப்பட்டது அடைகொளி எனப்படும். அடையெனினும் விசேடணமெனினும் பொருந்தும். அடைகொளியெனினும் விசேடியமெனினும் பொருந்தும்.

(உதாரணம்)

இனமுள்ளன
நெய்க்குடம்
குளநெல்
கார்த்திகை விளக்கு
பூமரம்
செந்தாமரை
ஆடுபாம்பு இனமில்லா
உப்பளம்
ஊர்மன்று
நாளரும்பு
இலைமரம்
செம்போத்து
தோய்தயிர் பொருள்
இடம்
காலம்
சினை
குணம்
தொழில்
-----

தேர்வு வினா
394. பொருளாதியாறும், இனமுள்ள பொரள்களுக்கேயன்றி, இனமில்லாப் பொருள்களுக்கும் அடைமொழிகளாய் வருமோ?


சிறப்புப் பெயர் இயற்பெயர்

395. ஒரு காரணம் பற்றிவருஞ் சிறப்புப்பெயரினாலும், காரணம் பற்றாது வரும் இயற் பெயரினாலும், ஒரு பொருளைச் சொல்லமிடத்துச், சிறப்புப் பெயரை முன்வைத்து இயற்பெயரைப் பின் வைத்தல் சிறப்பாம்.

உதாரணம்.
சோழியன் கொற்றன்
பாண்டியன் குழசேகரன்
தமிழ்ப்புலவன் கம்பன்

இனிக் கொற்றன் சோழியன் என இயற்பெயர் முன்னும் வருதல் காண்க. இன்னும் இயற்பெயர் முன் வருமிடத்து, வைத்தியநாத நாவலன் கச்சியப்பப்புலவன் என இறுதி விகாரமாக வருதலுங் காண்க.

தேர்வு வினாக்கள் - 395. ஒரு காரணம் பற்றிவருஞ் சிறப்புப் பெயரினாலும், காரணம் பற்றாது வரும் இயற்பெணரினாலும் ஒரு பொருளைச் சொல்லமிடத்துச், எதை முன்வைத்து எதைப் பின் வைத்தல் சிறப்பாம்? இயற்பெயர் சிறப்புப் பெயருக்கு முன் வருதல் இல்லையோ? இயற்பெயர் முன் வருமிடத்து, அதனிறுதி விகாரமாக வருதலும் உண்டோ?

வினாவிடை

396. வினாவாவது, அறியக்கருதியதை வெளிப்படுத்துவதாம். விடையாவது, வினாவாகிய பொருளை அறிவிப்பதாம்.

வினா, உசா, சுடா, என்பன ஒரு பொருட்சொற்கள். விடை, செப்பு, உத்தரம், இறை என்பன ஒரு பொருட்சொற்கள்.

397. வினாவையும் விடையையும் வழுவாமற் காத்தல் வேண்டும்.

உதாரணம்.
உயிரெத்தன்மைத்து வினாவழாநிலை
உயிருணர்தற்றன்மைத்து விடைவழாநிலை
கறக்கின்ற வெருமை
லோ சினையோ? வினாவழு
தில்லைக்கு வழியாது?
எனின் சிவப்புக்காளை
முப்பது பணம் என்பது விடைவழு

398. வினா, அறியாமை, ஐயம், அறிவு, கொளல், கொடை, ஏவல், என அறுவகைப்படும்.

உதாரணம்.

1 ஆசிரியரே இப்பாட்டிற்கு பொருள் யாது? அறியாமை வினா
2 குற்றியோ மகனோ? ஐயவினா
3 மாணாக்கனே, இப்பாட்டிற்குப் பொருள் யாது? அறிவினா
4 பயறுண்டோ செட்டியாரே? கொளல்வினா
5 தம்பிக்காடையில்லையா? கொடைவினா
6 தம்பீ யுண்டாயா? ஏவல்வினா

399. விடை, சுட்டு, எதிர்மறை உடன்பாடு, ஏவல், வினாவெதிர்வினாதல், உற்றுரைத்தல், உறுவது கூறல், இனமொழி என, எட்டு வகைப்படும். இவற்றுள் முன்னைய மூன்றுஞ் செவ்வனிறை: பின்னைய ஐந்தும் பயப்பன.

(உதாரணம்)

வினா விடை

1 தில்லைக்கு வழி யாது? இது சுட்டு
2 இது செய்யவா? செய்யேன் எதிர்மறை
3 இது செய்யவா? செய்வேன் உடன்பாடு
4 இது செய்யவா? நீ செய் ஏவல்
5 இது செய்யவா? செய்யேனோ வினாவெதிர் வினாதல்
6 இது செய்யவா? உடம்பு நொந்தது உற்றுரைத்தல்
7 இது செய்யவா? உடம்பு நோம் உறுவது கூறல்
8 இது செய்யவா? மற்றையது செய்வேன் இனமொழி
----

தேர்வு வினாக்கள்
396. வினாவாவது யாது? விடையாவது யாது?
397. வினாவையும் விடையையும் எவ்வாறு காத்தல் வேண்டும்?
398. வினா எத்தனை வகைப்படும்?
399. விடை எத்தனை வகைப்படும்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Wed Sep 16, 2009 6:27 pm

தமிழ் தமிழுக்கு நிகர்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Sponsored content

PostSponsored content



Page 6 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக