புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Kavithas
இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
bala_t
இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10 
293 Posts - 42%
heezulia
இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
prajai
இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
manikavi
இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_m10இலக்கணச் சுருக்கம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்கணச் சுருக்கம்


   
   

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:00 am

First topic message reminder :

இலக்கணச் சுருக்கம் - ஆறுமுகநாவலர்


முதலாவது: எழுத்ததிகாரம்

1.1. எழுத்தியல்

இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுள் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம்.
-----

2. அந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் என, மூன்றதிதிகாரங்களாக வகுக்கப்படும்.

எழுத்துக்களின் பெயர்
3. எழுத்தாவது சொல்லுக்கு முதற்காரணமாகிய ஒலியாம்
-----

4. அவ்வெழுத்து, உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து என நான்கு வகைப்படும்.
-----

5. உயிரெழுத்துக்கள், அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள என்னும் பன்னிரண்டெழுத்துக்களுமாம். இவை ஆவி எனவும் பெயர் பெறும்.
-----

6. உயிரெழுத்துக்கள், குற்றெழுத்து, நெட்டெழுத்து, என இரண்டு வகைப்படும்.
-----

7. குற்றெழுத்துக்கள், அ, இ, உ, எ, ஒ என்னும் ஐந்துமாம். இவை குறில் எனவும் பெயர் பெறும்.
-----

8. நெட்டெழுத்துக்கள், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் ஏழமாம். இவை நெடில் எனவும் பெயர் பெறும்
-----

9. மெய்யெழுத்துக்கள், க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்னும் பதினெட்டெழுத்துக்களுமாகும்.
இவை உடல், உடம்பு, உறுப்பு, ஒற்று, புள்ளி எனவும் பெயர் பெறும்.
-----

10. மெய்யெழுத்துக்கள், வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து என மூன்று வகைப்படும்.
-----

11. வல்லெழுத்துக்கள், க், ச், ட், த், ப், ற், என்னும் ஆறுமாம்.
இவை வல்லினம், வன்கணம், வலி எனவும் பெயர் பெறும்.
-----

12. மெல்லெழுத்துக்கள், ங், ஞ், ண், ந், ம், ன் என்னும் ஆறுமாம்.
இவை மெல்லினம், மென்கணம், மெலி எனவும் பெயர் பெறும்.
-----

13. இடையெழுத்துக்கள், ய், ர், ல், வ், ழ், ள் என்னும் ஆறுமாம்.
இவை இடையினம், இடைக்கணம், இடை எனவும் பெயர் பெறும்.
-----

14. அ, இ, உ என்னும் மூன்றும், மொழிக்கு முதலிலே சுட்டுப் பொருளில் வரும்போது, சுட்டெழுத்துக்களாம். உதாரணம்.
அவன், இவன், உவன்,
அக்கொற்றன், இக்கொற்றன், உக்கொற்றன்.
-----

15.எகரம் மொழிக்கு முதலிலும், அகரமும் ஒகாரமும் மொழிக்கு கடையிலும், வினாப்பொருளில் வரும் போது, வினாவெழுத்துக்களாம்.உதாரணம்.
எவன், எக்கொற்றன்
கொற்றான, கொற்றனோ
ஏவன், கொற்றனே
யா என்னும் உயிர் மெய்யும், மொழிக்கு முதலிலே வினாப் பொருளில் வரும் போது வினாவெழுத்தாம்
-----

16. அகரத்துக்கு ஆகாரமும், இகரத்துக்கு ஈகாரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், உகரத்துக்கு ஊகாரமும், எகரத்துக்கு ஏகாரமும், ஐகாரத்துக்கு இகரமும், ஒகரத்துக்கு ஓகாரமும், ஒளகாரத்துக்கு உகரமும், ககரத்துக்கு ஙகரமும், சகரத்துக்கு ஞகரமும், டகரத்துக்கு ணகரமும், தகரத்துக்கு நகரமும், பகரத்துக்கு மகரமும், றகரத்துக்கு னகரமும், இன வெழுத்துக்களாம். இடையெழுத்தாறும். ஓரினமாகும்; அவை இவ்விரண்டோரினமாகாவாம்.
-----

17. உயிர் மெய்யெழுத்துக்களாவன. புன்னிரண்டுயிரும் பதினெட்டு மெய்மேலுந் தனித்தனி ஏறிவருதலாகிய இருநாற்றுப்பதினாறுமாம்.

அவை, க, கா, கி, கீ முதலியவைகளாம்.

உயிர் மெய்க்குற்றெழுத்துத் தொண்ணூறு; உயிர்மெய் நெட்டெழுத்து நூற்றிருபத்தாறு; ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.

ஊயிர்மெய் வல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் மெல்லெழுத்து எழுபத்திரண்டு, உயிர்மெய் யிடையெழுத்து எழுபத்திரண்டு, ஆக உயிர்மெய் இருநாற்றுப் பதினாறு.
-----

18. ஆய்தவெழுத்தாவது, குற்றெழுத்துக்கும் உயிர்மெய் வல்லெழுத்துக்கும் நடுவே மூன்று புள்ளி வடிவுடையதாய் வரும் ஓரெழுத்தாகும்.
உதாரணம். எஃகு, கஃசு, அஃது, பஃறி
-----

19. மேற்சொல்லப்பட்ட உயிர் பன்னிரண்டும், மெய்பதினெட்டும், உயிர்மெய் இருநாற்றுப் பதினாறும், ஆய்தம் ஒன்றும் ஆகிய இருநாற்று நாற்பத்தேழெழுத்துக்களுந் தமிழ் நெடுங்கணக்கில் வழங்கி வருதல் கண்டு கொள்க.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:27 am

1. 3. புணரியல்

75. புணர்ச்சியாவது, நிலைமெழியும் வருமொழியும் ஒன்டுபடப்புணர்வதாம்.
---

76. அப்புணர்ச்சி, வேற்றுமைப்புணர்ச்சியும், அல் வழிப்புணர்ச்சியும் என இரண்டு வகைப்படும்.
---

77. வேற்றுமைப் புணர்ச்சியாவது, ஐ, ஆல், கு, இன், அது, கண், என்னும் ஆறுருப்புகளும் இடையில் மறைந்தாயினும் வெளிப்பட்டாயினும் வரச்சொகள் புணர்வதாம்.
உதாரணம்.
வேற்றுமைத்தொகை வேற்றுமைவிரி
மரம்வெட்டினான் .. ஜஐஸ மரத்தை வெட்டினான்
கல்லெறிந்தான் .. ஜஆல்ஸ கல்லாலெறிந்தான்
கொற்றன்மகன் .. ஜகுஸ கொற்றனுக்கு மகன்
மலைவீழருவி .. ஜஇன்ஸ மலையின் வீழருவி
சாத்தான்கை .. ஜஅதுஸ சாத்தனதுகை
மலைநெல் .. ஜகண்ஸ மலையின்கணெல்
---

78. அலவழிப்புணர்ச்சியாவது, வேற்றுமையல்லாத வழியிற் புணர்வதாம். ஆது, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை, என்னும் ஐந்து தொகைநிலைத்தொடரும், எழுவாய்த்தொடர், விளித்தொடர், தெரிநிலை வினைமுற்றுத் தொடர், குறிப்பு வினைமுற்றுத்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், இடைச்சொற்தொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர், என்னும் ஒன்பது தொகாநிலைத் தொடருமாகப், பதினான்கு வகைப்படும்.

தொகைநிலைத் தொடர்களுக்கு உதாரணம்
(1) கொல்யானை .. வினைத்தொகை
(2) கருங்குதிரை .. பண்புத்தொகை சாரைப்பாம்பு .. இருபெயரொட்டுப் பண்புத் தொகை
(3) மதிமுகம் .. உவமைத் தொகை
(4) இராப்பகல் .. உம்மைத் தொகை
(5) பொற்றொடி .. அன்மொழித் தொகை

தொகாநிலைத் தொடர்களுக்கு உதாரணம்
(1) சாத்தன் வந்தான் .. எழுவாய்த் தொடர்
(2) சாத்தவா .. விளித் தொடர்
(3) வந்தான் சாத்தன் .. தொரிநிலை வினைமுற்றுத் தொடர்
(4) பொன்னனிவன் .. குறிப்பு வினைமுற்றுத்தொடர்
(5) வந்த சாத்தன் .. பெயரெச்சத் தொடர்
(6) வந்து போனான் .. வினையெச்சத் தொடர்
(7) மற்றொன்று .. இடைச்சொற்றொடர்
(8) நனிபேதை ..உரிச்சொற்றொடர்
(9) பாம்பு பாம்பு .. அடுக்குத் தொடர்
---

79. இப்படி மொழிகள், வேற்றுமை வழியாலும், அல்வழியாலும், புணருமிடத்து, இயல்பாகவாயினும், விகாரமாகவாயினும் புணரும்.
---

80. இயலபு புணர்ச்சியாவது, நிலைமொழியும், வருமொழியும், விகாரமின்றிப் புணர்வதாம்.
உதாரணம்.
பொன்மணி சாத்தன்கை
---

81. விகாரப்புணர்ச்சியாவது, நிலைமொழியேனும், வருமொழியேனும், இவ்விரு மொழிமேனும், தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்று விகாரங்களுள் ஒன்றையாயினும் பெற்றுப் புணர்வதாம்.
உதாரணம்.
வாழை + பழம் - வாழைப்பழம் தோன்றல்
மண் + குடம் - மட்குடம் திரிதல்
மரம் + வேர் - மரவேர் கெடுதல்
நிலம் + பனை - நிலப்பனை கெடுதல், தோன்றல்
பனை + காய் - பனங்காய் கெடுதல், தோன்றல், திரிதல்
---

82. தோன்றல், திரிதல், கெடுதல், என்னும் இவ் விகாரமூன்றும், மயக்க விதி இன்மை பற்றியும், அல்வழி வேற்றுமைப் பொருணோக்கம் பற்றியும் வரும்.

தேர்வு வினாக்கள்

75. புணர்ச்சியாவது யாது?
76. அப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?
77. வேற்றுமைப்புணர்ச்சி யாவது யாது?
78 ஆல்வழிப் புணர்ச்சியாவது யாது?
அது எத்தனை வகைப்படும்?
79. மொழிகள், வேற்றுமை வழியாலும் அல்வழியாலும் புணருமிடத்து, எப்படி புணரும்?
80. இயல்பு புணர்ச்சியாவது யாது?
81. விகாரப் புணர்ச்சியாவது யாது?
82. தோன்றல் முதலிய விகாரங்கள் எவை பற்றி வரும்?

---

மயங்கா எழுத்துக்கள்

83. உயிரோடு உயிர்க்கு மயக்கவிதி இன்மையால், உயிhPற்றின்முன், உயிர் வரின், இடையே உடம்படு மெய்யென ஒன்று தோன்றும்.
உடம்படு மெய்யாவது, வந்த உயிருக்கு உடம்பாக அடுக்கும் மெய், நிலைமொழியீற்றினும் வருமொழி முதலினும் நின்ற உயிர்களை உடம்படுத்தும் மெய்யெனினும் பொருந்தும். உடம்படுத்தலெனினும், உடன் படுத்தலெனினும் ஒக்கும்.
---

84. மெய்யீற்றின்முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய்வரின், நிலைமொழியீற்றேனும், வருமொழி முதலேனும், இவ்விரண்டுமேனும் விகாரப்படும்.
---

85.மொழிக்கு ஈராகுமெனப்பட்ட பதிகொருமெய்களின் முன்னும், மொழிக்கு முதலாகுமெனப்பட்ட ஒன்பது மெய்களும் புணரும்போது, மயங்குதற்கு உரியனவல்லாத மெய்களைச் சொல்வாம் :-
லகர ளகரங்களின் முன்னே த ஞ ந ம என்னும் நான்கும் மயங்கா. ணுகர னகரங்களழன் முன்னே த ந என்னும் இரண்டும் மயங்கா. முகர மெய்யின் முன்னே க ச த ஞ ந என்னும் இரண்டும் மயங்கா ஞகரத்தின் முன்னே சகரமும் யகரமுமல்லாத ஏழம் மயங்கா. நுகரத்தின் முன்னே தகரமும் யகரமுமல்லாத ஏழம் மயங்கா. வுகரத்தின் முன்னே யகரமல்லாத எட்டும் மயங்கா.

தேர்வு வினாக்கள்
83. உயீறிற்றின் முன் உயிர் வரின் எப்படி யாகும்?
உடம்படுமெய்யாவது யாது?
உடம்படுமெய்யென்பதற்கு வேறு பொருளும் உண்டோ?
84. மெய்யீற்றின் முன் மயங்குதற்கு உரியதல்லாத மெய்வரின் எப்படியாகும்?
85. லகர ளகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
ணகர னகரங்களின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
மகரமெய்யின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
ஞகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
நகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?
வகரத்தின் முன் எவ்வெழுத்துக்கள் மயங்கா?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:32 am

மெய்யீற்றின் முன் உயிர் புணர்தல்
86. தனிக்குற்றெழுத்தைச் சாரத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், வந்தவுயிர் அந்த மெய்யீற்றின் மேல் ஏறும்.
உதாரணம்.
ஆண் + அழகு - ஆணழகு
மரம் + உண்டு - மரமுண்டு
---

87. தனிக்குற்றெழுத்தை ச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால், அந்த மெய் இரட்டிக்கும்: இரட்டித்த மெய்யீற்றின் மேல் வந்தவுயிர் ஏறும்.
உதாரணம்.
கல் + எறிந்தான் - கல்லெறிந்தான்
பொன்; + அழகியது - பொன்னழகியது

தேர்வு வினாக்கள்
86. தனிக்குற்றெழுத்தைச் சாராத மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படி புணரும்?
87. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த மெய்யீற்றின் முன் உயிர் வந்தால் எப்படி புணரும்?

-----

உயீரிற்றின் முன் உயிர் புணர்தல்
88. இ, ஈ, ஐ என்னும் மூன்றுயிரீற்றின் முன்னும் உயிர் முதன் மொழிவந்தால், இடையில் யகரம் உடம்படு மெய்யாக வரும்.
உதாரணம்.
கிளி; + அழகு - கிளியழகு
தீ + எரிந்தது - தீயெரிந்தது
பனை + ஓலை - பனையோலை
---

89. அ, ஈ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் வகரம் உடம்படுமெய்யாக வரும்.
உதாரணம்.
பல + அணி - பலவணி
பலா + இலை - பலாவிலை
திரு + அடி - திருவடி
பூ + அரும்பு - பூவரும்பு
நொ + அழகா - நொவ்வழகா
கோ + அழகு - கோவழகு
கௌ + அழகு - கௌவழகு

கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால், இடையில் வகரம் வராது யகரம் வரும்.
உதாரணம்.
கோ + இல் - கோயில்
ஓரோவிடத்துக் கோவில் எனவும் வரும்.
---

90. ஏகாரவுயிhPற்றின் முன் உயிர் முதன் மொழி வந்தால், இடையில் யகரமாயினும், வகரமாயினும், உடம்படு மெய்யாக வரும்.
உதாரணம்.
அவனே + அழகன் - அவனேயழகன்
சே + உழுதது - சேவுழுதது

தேர்வு வினாக்கள்
88. இ, ஈ, ஐ எ;ஏம் மூன்றுயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால் எப்படி புணரும்?
89. அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, ஒள என்னும் ஏழயிhPற்றின் முன்னும் உயிர் முதன் மொழி வந்தால் எப்படி புணரும்?
கோ என்பதன் முன் இல் என்னும் பெயர் வந்தால் இப்படியே முடியுமோ?
90. ஏகாரவுயிhPற்றின் முன் உயிர் முதன்மொழி வந்தால் எப்படி புணரும்?

-----

குற்றியலுகரத்தின் முன் உயிரும் யகரமும் புணர்தல்
91. குற்றியலுகரம், உயிர் வந்தால் தான் ஏறி நின்ற மெய்யைவிட்டுக் கெடும்: யகரம் வந்தால், இகரமாகத் திரியும்.
உதாரணம்.
ஆடு + அரிது - ஆடரிது
நாகு + யாது - நாகியாது
குற்றியலுகரஞ் சம்ஸ்கிருத பாடையில் இல்லாமையால், சம்பு, இந்து முதலிய வட மொழிகளின் ஈற்றுகரம் உயிர்வரிற் கெடாது நிற்க, உடம்படு மெய் தோன்றும்.
உதாரணம்.
சம்பு + அருளினான் - சம்புவருளினான்
இந்து + உதித்தது - இந்துவுதித்தது

தேர்வு வினாக்கள்
91. குற்றியலுகரத்தின் முன் உயிர் வந்தால் எப்படியாம்?
குற்றியலுகரத்தின் முன் யகரம் வந்தால் எப்படியாம்?
குற்றியலுகரஞ் சம்ஸ்கிருத பாடையில் உண்டா இல்லையா? வுட மொழிகளின் ஈற்றுகரத்தின் முன் உயிர் வரின் எப்படியாம்?

----

சில முற்றியலுகரவீற்றின் முன் உயிரும் யகரமும் புணர்தல்

92. சில முற்றியலுகரமும், உயிர் வரின் மெய்யை விட்டுக்கெடுதலும், யகரம் வரின் இகரமாகத் திரிதலுமாகிய இவ்விரு விதியையும் பெறும்.
உதாரணம்.
கதவு + அழகு - கதவழகு
கதவு + யாது - கதவியாது


தேர்வு வினா

92.முற்றியலுகரங் குற்றியலுகரவீற்று விதி பெறாதா?

---

எல்லாவீற்றின் முன்னும் மெல்லினமும் இடையினமும் புணர்தல்
93. உயிரும் மெய்யுமாகிய எல்லாவீற்றின் முன்னும் வரும் ஞ ந ம ய வ க்கள், இருவழியினும், இயல்பாம்: ஆயினும் இவற்றுள் ண ள ன ல என்னும் நான்கின் முன்னும் வருநகரந் திரியும். இத்திரிபு மேற் கூறப்படும்;
வின, பலா, புளி, தீ, கடு, பூ, சே, பனை, கோ, கௌ, உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், யாழ், வாள், என்னும் நிலைமொழிகளோடு, அல்வழிப்புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது, என்னும் வருமொழிகளையும், வேற்றுமைப்புணர்ச்சிக்கு உதாரணமாக, ஞாற்சி நீட்சி, மாட்சி, யாப்பு, வன்மை, என்னும் வருமொழிகளையும் கூட்டிக்கண்டு கொள்க.
உதாரணம்.
விள + ஞான்றது - விளஞான்றது
உரிஞ் + ஞான்றது - உரிஞ10ஞான்றது
விள + ஞாற்சி - விளஞாற்சி
உரிஞ் + ஞாற்சி - உரிஞ10ஞாற்சி
நிலைமொழியீற்றுட் சில விகாரப்படுதல், பின்பு அல்வவ்வீற்றிற் கூறும் விதியாற் பெறப்படும்.
---

94. தனிக்குற்றெழுத்தைச் சார்ந்த யகரமெய்யின் முன்னுந் தனி ஐகாரத்தின் முன்னும் வரும் மெல்லினம் மிகும்ஃ
உதாரணம்.
மெய் + ஞானம் - மெய்ஞ்ஞானம்
செய் + நன்றி - செய்ந்நன்றி
கை + மாறு - கைம்மாறு
---

95. நொ, து என்னும் இவ்விரண்டும் முன் வரும் ந ம ய வக்கள் மிகும்.
உதாரணம்.
நொ + ஞௌ;ளா - நொஞ்ஞௌ;ளா
யவனா - நொய்யவனா
து + ஞௌ;ளா - துஞ்ஞௌ;ளா
யுவனா - துய்யவனா
நோ - துன்பப்படு, து- உண்

தேர்வு வினாக்கள்
93. எல்லாவீற்றின் முன்னும் ஞ ந ம ய வக்கள் வந்தால் எப்படிப் புணரும்?
94. ஞ ந ம ய வக்கள் எந்த மொழி முன்னும் மிகவோ?
95. நொ, து என்னும் இவ்விரண்டின் முன்னும் ஞ ந ம ய வக்கள் இயல.பேயாமோ?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:33 am

மெய்யீற்றின் முன் யகரம் புணர்தல்
96. யகரமல்லாத மெய்கள், தம் முன் யகரம் வந்தாள் இகரச்சாரியை பெறுதலுமுண்டு.
உதாரணம்.
வேள் + யாவன் - வேளியாவன்
மண் + யானை - மண்ணியானை
வேள்யாவன் என இகராச்சாரியை பெறாது வருதலே பெரும்பான்மையாம்.
---

97. தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய் வருமொழி யகரம் வந்தாற் கெடும்.
உதாரணம்.
வேய் + யாது - வேயாது

தேர்வு வினாக்கள்
96. யகரமல்லாத மெய்களின் முன் யகரம் வந்தால் எப்படி புணரும்?
97. தனிக்குற்றெழுத்தைச் சாராத யகரமெய் முன் யகரம் வந்தால் எப்படிப் புணரும்?

---

மூன்று சுட்டின் முன்னும் எகரவினாமுன்னும் நாற்கணமும் புணர்தல்
98. அ, இ, உ என்னும் மூன்றும் சுட்டின் முன்னும், யகரமொழித்த மெய்கள் வந்தால், வந்தவெழுத்து மிகும்: யகரமும் உயிரும் வந்தால், இடையில் வகரந் தோன்றும்.

உதாரணம்.
அக்குதிரை இக்குதிரை உக்குதிரை எக்குதிரை
அம்மலை அம்மலை உம்மலை எம்மலை
அவ்வழி இவ்வழி உவ்வழி எவ்வழி
அவ்யபனை இவ்யானை உவ்யானை எவ்யானை
அவ்வுயிர் இவ்வுயிர் உவ்வுயிர் எவ்வுயிர்
---

99. அந்த, இந்த, உந்த எந்த என மரூஉமொழிகளாய் வருஞ்சுட்டு வினாக்களின் முன் வரும். வல்லினம் மிகும்.
உதாரணம்.
அந்தக்கல், இந்தக்கல், உந்தக்கல், எந்தக்கல்

தேர்வு வினாக்கள்
98. அ, இ, உ என்னும் மூன்று கட்டின் முன்னும், எகரவினா முன்னும் யகரமொழிந்த மெய்கள் வந்தால், எப்படி புணரும்?
இந்நான்கன் முன்னும் யகரமும் உயிரும் வந்தால் எப்படிப் புணரும்? 99. அந்த, இந்த, உந்த, எந்த என்னும் மரூஉமொழிகளின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?

---

உயர்தினைப் பொதுப் பெயர்களின் முன் வல்லினம் புணர்தல்
100. உயர்தினைப் பெயாப் பொதுப் பெயர்களின் ஈற்றுயிர் முன்னும், யகர ரகரமெய்களின் முன்னும் வரும் வல்லினம் இருவழியினும் மிகாதியல்பாம்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
நம்பிக்குறியன்
விடலைசிறியன்
செய்பெரியன்
அவர் தீயர் நம்பிக்கை
விடலை செவி
சேய்படை
அவர்தலை உயர்தினைப் பெயர்
சாத்திகுறியள்
சாத்திகுறிது சாத்திகால் போதுப்பெயர்
தந்தைசிறியன்
தந்தைசிறிது தந்நைசெவி
தாய்பொடியாள்
தாய்கொடிது தாய்கை
ரகரமெய் பொதுப்பெயர்க்கு ஈறாகாது

நும்பிக்கொற்றான், சாத்திப் பெண், சேய்க்கடவுள், தாய்ப்பசு என இருபெயரொட்டுப் கண்புத்தொகையினும், தாய்க்கொலை, ஒன்னலர்ச் செகுத்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், செட்டித்தெரு என ஒரோவிடத்து ஆறாம் வேற்றுமைத் தொகையினும் வல்லின மிகுமெனக்கௌ;க.
முகப்பிறந்தது, மகப்பெற்றாள், எ-ம். பிதாக்கொடியன்.பிதாக்கை, எ-ம். ஆடுச்சிறியன், ஆடுச்செவி, எ-ம். கோத்தீயன், கோத்தலை, எ-ம். அகர, ஆகார ஊகார ஓகாரங்களின் முன் வரும் வல்லினம் இரு வழியினும் மிகுமெனக் கொள்க.
---

101. உயர்திணைப் பெயர் பொதுப்பெயர்களின் ஈற்று லகர ளகர ணகர னகர மெய்கள், வல்லினம் வந்தால் இருவழியினுந் திரியாதியல்பாம்.

உதாரணம்.
அல்வழி வேற்றுமை
தேன்றல்குறியன்
அவள்சிறியள்
அவன்பெரியான் தோன்றல்கை
அவள்செவி
அவன்பொருள் உயர்திணைப் பெயர்
ணகரமெய் உயர்திணைப்பெயர்க்கு ஈறாகாது.
தூங்கல் குறியன்
தூங்கல் குறிது தூங்கல் கை பொதுப் பெயர்
மகக்கள் சிறியர்
மக்கள் சிறிய மக்கள் செவி
ஆண் பெரியன்
ஆண் பெரிது ஆண்புறம்
சாத்தன் சிறியன்
சாத்தன் சிறிது சாத்தன் செவி
உயர்திணைப் பெயாPற்று லகர ளகரங்கள், மாற்கடவுள், மக்கட்சுட்டு என இரு பெயரொட்டுப் பண்புத்தொகையினும், லகர ளகர னகரங்கள், குரிசிற் கண்டேன், மகட்கொடுத்தான், தலைவற்புகழ்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினுந் திரியுமெனக் கொள்க.
லகர ளகரங்களின் முன்னும், ணகர னகரங்களின் முன்னும், தகரம் மயங்குதற்கு விதியில்லாமையால், வரும் விகாரம் மேற்கூறப்படும்.

தேர்வு வினாக்கள்
100. உயர்திணைப் பெயர் பொதுப் பெயர்களின் ஈற்றுயிர் முன்னும், யகர ரகர மெய்களின் முன்னும், வல்லினம் வரின் எப்படிப் புணரும்?
இவைகளின் முன் வரும் வல்லினம் எந்தவிடத்தும் மிகவோ?
101. உணர்திணைப் பெயர் பொதுப் பெயர்களின் ஈற்று லபர ளகர ணகர னகரங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படிப் புணரும்?
இவைகள் வல்லினம், வந்தால் எவ்விமத்துந் திரியாவோ?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:36 am

சில வுயர்திணைப் பெயர் முன் நாற்கணமும் புணர்தல்
102. னகலர லகரவீற்றுச் சிலவுயர்திணைப் பெயர் முன் நாற்கணமும் புணருமிடத்து, உம்மைத் தொகையினும், இருபெயரொட்டுப் பண்புத் தொகையினும் ஆறாம் வேற்றமைத் தொகையினும், நிலைமொழியேனும், இவ்விரு nhழியுமெனும், விகாரப்படும்.
உதாரணம்.
உம்மைத் தொகை
கபிலன் + பரணன் - கபிலபரணர்
இரு பெயரொட்டுப் பண்புத்தொகை
சிவன் + பெருமான் - சிவபெருமான்
முருகன் + கடவுள் - முருகக்கடவுள்
சதாசிவன் + நாவலன் - சதாசிவ நாவலன்
கந்தன் + வேள் - கந்தவேள்
வேலாயுதன் + உபாத்தியாயன் - வேலாயுதவுபாத்தியாயன்
தியாகராசர் + செட்டியர் - தியாகராசச் செட்டியர்
விநாயகர் + முதலியார் - விநாயகமுதலியார்

வேற்றுமைத் தொகை
குமரன் + கோட்டம் - குமரகோட்டம்
குமரக்கோட்டம்
வாணியர் + தெரு - வாணியத்தெரு
வேளாளர் + வீதி - வேளாளவீதி

தேர்வு வினாக்கள்
101. எல்லாவுயர்தியைப் பெயரும், நாற்கணங்களோடு புணருமிடத்து, இயல்பாகவே புணருமொ?

---

விளிப்பெயர் முன் வல்லினம் புணர்தல்
103. விளிப்பெயாற்று உயிர் முன்னும் ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். ஆப் பெயாPற்று லகர ளகர ணகர னகரங்கள் வல்லினம் வந்தால் திரியாதியல்பாம்.
உதாரணம்.
புலவபாடு சாத்தா கேள்
நம்பிசெல் தம்பீ தா
வேந்து கூறு மகனே படி
விடலை போ நங்காய் பார்
நாய்கீர் சென்மின் நாய்காய் பார்
தோன்றல் உறாய் மக்கள் சொல்லீர்
ஆண் கேளாய் கோன் பேசாய்
விளக்கொடியை, பிதாகடகூறாய், ஆடூச் சொல்லாய், சேச்சொல்லாய், கோப்பேசாய், என அகர ஆகார ஊகார ஏகார ஓகாரங்களை இயல்பீறாகவுடைய விளிப்பெயர் முன் வரும் வல்லினம் மிகுமெனக் கொள்க.

தேர்வு வினாக்கள்
103. விளிப் பெயாற்று உயிர் முன்னும், யரழ மெய் முன்னும், வல்லினம் வரின் எப்படியாம்?
வுpளிப்பெயாற்று லகர ளகர ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
விளிப்பெயர் முன் வரும் வல்லினம் எவ்விடத்தும் மிகவோ?

---

ஈற்று வினா முன்னும் யாவினா முன்னும் வல்லினம் புணர்தல்
104. ஆ, ஏ, ஒ என்னும் மூன்றீற்று வினா முன்னும் யபவினா முன்னும் வரும் வல்லினம் மிகவாம்.
உதாரணம்.
அவனா கொண்டான் அவனே சென்றான்
அவனோ தந்தான் யா பெரிய

தேர்வு வினாக்கள்
104. ஆ, ஏ, ஒ என்னும் மூன்றீற்று வினா முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்?

---

வினைமுற்று வினைத் தொகைகளின் முன் வல்லினம் புணர்தல்
105. வினைமுற்று வினைத்தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ வொற்றுக்களின் முன்னும் வரும் வல்லினம் மிகாதியல்பாம். ஆச்சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகரங்கள், வல்லினம் வந்தாள் திரியாதியல்பாம்.
உதாரணம்.
தெரிநிலை வினைமுற்று
உண்டன குதிரைகள் உண்ணா குதிரைகள்
வருதி சாத்தா வந்தனை சாத்தா
வந்தது புலி வந்தாய் பூதா
உண்டீர் தேவரே உண்டாhட தேவர்
உண்பல் சிறியேன் உண்டாள் சாத்தி
வந்தேக் சிறியேன் வந்தான் சாத்தன்
குறிப்பு வினைமுற்று
கரியன குதிரைகள் வில்லி சாத்தா
கரியது தகர் கரியை தேவா
கரியாய் சாத்தா கரியீர் சாத்தரே
கூயிற்றுக் குயில், குநற்தாட்டுக் களிறு என வன்றொடர்க் குற்றியலுகரவீற்றுத் தெரிநிலை வனை முற்றின் முன்னும், குறிப்பு வினைமுற்றின் முன்னு மாத்திரம் வரும் வல்லினம் மிகுமெனக் கொள்க.
ஏவலொருமை வினைமுற்று
நட கொற்றா வா சாத்தா
எறி தேவா கொடு பூதா
ஓடு கொற்றா வெஃகு சாத்தா
பரசு தேவா நடத்து பு_தா
அஞ்சு கொற்றா எய்து சாத்தா
வனை தேவா செய்கொற்றா
சேர் சாத்தா வாழ் பூதா
நில் கொற்றா கேள் சாத்தா
உண் கொற்றா தின் சாத்தா

நொ, து என்னும் ஏவலொருமை வினைமுற்றிரண்டின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.
உதாரணம். நொக்கொற்றா துச்சாத்தா
வினைத்தொகை
விரிகதிர் ஈபொருள்
அடுகளிறு வனைகலம்
ஆடு பாம்பு அஃகுபிணி
பெருகுபுனல் ஈட்டுதனம்
விஞ்சுபுகழ் மல்கு சுடர்
உண்கலம் தின்பண்டம்
கொல்களிறு கொள்கலம்
செய்கடன் தேர்ப்பொருள்
வீழ்புனல்
ஏவலொருமை வினைமுற்றும் வினைத் தொகையும் வன்றொடர்க் குற்றியலுகரவீற்றனவாயினும், அவற்றின் முன் வரும் வல்லினம் மிபாமை காண்க.
ணகர ழகரவீறுகள், வினைத் தொகைக்கும் ஏவன் முற்றுக்குமன்றி, மற்றை வினை முற்றுக்களுக்கு இல்லை. லகர வீறு குறிப்பு வினை முற்றுக்கு இல்லை.

தேர்வு வினாக்கள்
105. வினைமுற்று வினைத் தொகைகளின் ஈற்றுயிர் முன்னும், ய ர ழ மெய் முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்?
ஆச் சொற்களின் ஈற்று லகர ளகர ணகர னகலங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படியாம்?
வுல்லினம், எந்த வினை முற்றின் முன்னும் மிகவோ? வுன்றொடர்க் குற்றியலுகரவீற்று ஏவல் வினை முன்னும் வல்லினம் மிகுமோ? ஏந்த ஏவல் வினை முன்னும் வல்லினம் மிகவோ?

---



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 2:38 am

பெயரெச்சத்தின் முன் வல்லினம் புணர்தல்
106. அகரவீற்றுப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகா. ஈற்றுயிர் மெய் கெட்டு ஈகாரவிறுதியாக நின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்.
உதாரணம்.
உண்ட கொற்றன் கரிய டிகாற்றன்
உண்ணாத குதிரை இல்லாத குதிரை
உண்ணாக் குதிரை இல்லாக் குதிரை
தேர்வு வினாக்கள்- 106. அகரவீற்றுப் பெயரெச்சத்தின் முன் வல்லினம் வரின் எப்படியாம்? ஈற்றுயிர்மெய் கெட்டு ஆகார விறுதியாக நின்ற எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?
வினைடியச்சத்தின் முன்வல்லினம் புணர்தல்
---

107. இ, ய், ஆ, ஊ, என, அ என்னும் விகுதிகளையுடைய தெரிநிலை வினை வினையெச்சங்களின் முன்னும் அ, றி என்னம் விகுதிகளையுடை இவ்விரு வகை வினையெச்சங்களின் முன்னும் வரும் வல்லினம் மிகும்.
உதாரணம்.
தேடிக்கொண்டான் போய்க்கொண்டான்
உண்ணாச்சென்றான் உண்ணுச் சென்றான்
உண்டெனப்பசஜ தீர்ந்தது உண்ணப் போனான்
மெல்லப் பேசினான் நாளின்றிப் போனான்
உண்டவழித் தருவான் உண்டக் கடைத்தருவான்
அவனில்லாவழிச் செய்வான் அவனில்லாக் கடைச்செண்வான்
---

108. இய, இயர், மு, டை என்னும் விகுதிகளையுடைய வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா.
உதாரணம்.
உண்ணிய சென்றான் உண்ணியா சென்றான்
உண்ணாமே போனான் உண்ணாமை போனான்
---

109. வன்றொடர்க்குற்றியலுகரவீற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகும்: மற்றைக் குற்றியலுகரவீற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா.
உதாரணம்.
அடித்துக் கொன்றான் உண்பாக்குச் சென்றான்
பொருது சென்றான் நடந்து போனான்
எய்து கொன்றான் அவனல்லது பேசுவார் யார்
துவ்விகுதி கெட நின்ற எதிர்மறைத் தெரிநிலை வினை வினையெச்சத்தின் முன் வரும் வல்லினமிகும்.
உ-ம்
உண்ணாப் போனான்
---

110. வினையெச்சத்தீற்று னகர லகரங்கள், வல்லினம் வந்தால், றகரமாகத் திரியும்: வான் பான் இரண்டுந் திரியா.
உதாரணம்.
வரிற்கொள்ளும் உண்டாற்கொடுப்பேன்
அறிவான்சென்றான் உண்பான் போனான்

தேர்வு வினாக்கள்
107. எந்த வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகும்?
108. எந்த வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் மிகா?
109. வன்றொடர்க் குனுற்றியலுகரவீற்று வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? வன்றொடரழிந்த குற்றியலுகரவீற்று வினையெச்சங்களின் முன் வரும் வல்லினம் எப்படியாம்? துவ் விகுதி கெட நின்ற எதிர்மறைத் தெரிநிலை வினை வினையெச்சத்தின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?
110. வினையெச்சத் தீற்று னகர லகரங்களின் முன் வல்லினம் வந்தால் எப்படியாம்?
எல்லா வினையெச்சத் தீற்று னகரமும் வல்லினம் வந்தாற்றிரியுமொ?

---

இ உ ஐ யொழிந்த உயிரீற்றஃறிணைப் பெணர் முன் வல்லினம் புணர்தல்
111. அ, ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, என்னும் ஆறயிரீற்றஃறிணைப் பெயர் முன்னும் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
விளக்குறிது விளக்கோடு
தாராச்சிறிது தாராச்சிறை
தீச்சுடும் தீச்சுவாலை
கொண்மூக்கரிது கொண்மூக்கருமை
சேப்பெரிது சேப்பெருமை
கோச்சிறிது கோச்செவி
---

112. அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர் முன்னும்: வகரவைகாரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர் முன்னும் வரும் வல்லினம் இரு வழியினும் மிகா.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
பல போயின பல படைத்தான்
சில சென்றன சில சொற்றான்
உள்ளன குறைந்தன உள்ளன கொடுத்தான்
உள்ளவை தகர்ந்தன உள்ளவை தந்தான்
பல சில என்னும் இரு பெயருந் தம் முன்னே தாம் வரின், வருமொழி முதலெழுத்து இயல்பாகியும், மிக்கும், நிலைமொழியீற்றின் அகரங்கெட லகரம் றகரமாகத் திரிந்துந் தியாதும், வரும்.
உதாரணம்.
பலபல பலப்பல பற்பல பல்பல
சிலசில சிலசில சிற்சில சில்சில
பல, சல என்னும் இரு பெயர் முன்னும் பண்புத் தொகையிற் பிற பெயர் வரின், நிலை மொழியீற்றின் அகரங்கெடாதுங் கெட்டும் வரும்.
உதாரணம்.
பல்கலை பல்கலை சிலகலை சில்கலை
பலமலை பனடமலை சிலமலை சின்மலை
பலயானை பல்யானை சிலயானை வில்யானை
பலவணி பல்லணி சிலவணி சில்லணி
---

113. ஆ, மா, ஆமா, பீ, நீ என்னும் பெயர்களின் முன்வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாம்.
உதாரணம்.
ஆ தீண்டிற்று மா சிறிது ஆமா பெரிது பீ கிடந்தது நீ பெரியை
மா - இங்கே வலங்கு. ஆமா - காட்டுப்பசு
114. பூ என்னும் பெயர் முன் வரும் வல்லெழுத்து மிகுதலேயன்றி இனமெல்லெழுத்தும் மிகும்.
உதாரணம்.
பூங்கொடி பூங்கரும்பு
பூ என்பது மலருக்கும் பொலிவுக்கும் பெயர். முலர்ப்பொருளில் வேற்றுமை: பொலிவுப் பொருளில் அல்வழி.

தேர்வு வினாக்கள்
111. அ, ஆ, ஈ, ஊ, ஏ, ஒ என்னும் ஆறயிரீற்று அஃறிணைப் பெயர் முன்னும் வல்லினம் வரின் எப்படியாம்?
112. அகரவீற்றஃறிணைப் பன்மைப் பெயர், வகரவைகாரவீற்றஃறிணைப் பன்மைப்பெயர் என்மும் இவைகளின் முன் வரும் வல்லினமும் மிகுமோ? புல, சில என்னும் இரு பெயருந் தம்முன்னே தாம் வரின் எப்படி புணரும்? இவ்விரண்டின் முன்னும் பண்புத்தொகையிற் பிறபெயர் வரின் எப்படி புணரும்?
113. ஆ, மா, ஆமா, பீ, நீ என்னும் பெயர்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
114. பூ என்னும் பெயர் முன் வல்லினம் மிகுதலேயன்றி வேறு விதுயும் பெறுமோ?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:28 am

முற்றியலுகர வீற்றுப் பெயர் முன் வல்லினம் புணர்தல்
115. முற்றியலுகரவீற்றுப் பெயர் முன் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
பசுக்குறிது பசுக்கோடு
---

116. முற்றியலுகர வீற்று அது, இது, உது, என்னுஞ் சுட்டுப்பெயர் முன்னும், எது என்னும் வினாப் பெயர் முன்னும், ஒரு, இரு, அறு, எழு என்னும் விகாரவெண்ணுப் பெயர் முன்னும் வரும் வல்லினம் மிகவாம்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
அது குறிது அது கண்டான்
இது சிறிது இது சொற்றான்
உது தீது உது தந்தான்
எது பெரிது எது பெற்றான்
அல்வழி
ஒருகை, இருசெவி, அறுகுணம், எழுகடல்


தேர்வு வினாக்கள்

115. முற்றியலுகரவீற்றுப் பெயர் முன் வல்லினம் வரின் எப்படி புணரும்?
116. முற்றியலுகரவீற்றுச் சுட்டுப்பெயர் முன்னும், வினாப்பெயர் முன்னும், விகார வெண்ணுப்பெயர் முன்னும் வல்லினம் வரின் எப்படி புணரும்?

---

இ ஐ ர ழ வீற்றஃறிணைப் பெயர்முன் வல்லினம் புணர்தல்

117. இகர ஐகாரவுயிர்களையும் ய ர ழ வொற்றுக்களையும் இறுதியாகவுடைய அஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத்தொகையினும், உவமைத்தொகையினும், மிகும் எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும் மிகவாம்.
உதாரணம்.
கரிக்கோடு
நாய்க்கால் யானைச்செவி
தேர்த்தலை பூழ்ச்செவி வேற்றுமை
மாசித்திங்கள்
மெய்க்கீர்த்தி சாரைப்பாம்பு
கார்ப்பருவம் பூழ்ப்பறவை பண்புத்தொகை
காவிக்கண்
வேய்த்தோள் குவளைக்கண்
கார்க்குழ் காழ்ப்படிவம் உவமைத்தொகை
பருத்திகுறிது
நாய்தீது யானைகரிது
வேர்சிறிது யாழ்பெரிது எழுவாய்
பரணி-
கார்த்திகை
பேய்பூதம் யானைகுதிரை
நீர்கனல் இகழ்புகழ் உம்மைத்தொகை
இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம் வேற்றமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, வல்லினம் மிகா.
உதாரணம்.
இரண்டாம் வேற்றுமை ஏழாம்வேற்றுமை
புளி தின்றான் அடவிபுக்கான்
குவளை கொய்தான் வரைபாய்ந்தான்
வேய் பிளந்தான் வாய்புகுந்தது
தேர் செய்தான் ஊர் சென்றான்
தமிழ் கற்றான் அகழ் குதித்தான்
காவித்தடம், மனைத்தூண் என உருபும் பயனும் உடன்றொக்க தொகையாயின், வல்லினம் மிகுமெனக் கொள்க. புளி தின்றான், அடவி, புக்கம் என்பன, குளியைத் தின்றான், அடவியின் கட்புக்கான் என விரிதலின், உருபு மாத்திரந்தொக்க தொகை. காவித்தடம், மனைத்தூண் என்பன, காவியையுடைய தடம், மனையின் கண்ணதாகிய தூண் என விரிதலின் உருபும் பயனும் உடன்றொக்க தொகை.
ஏரிகடை, குழவிகை, மலைகிழவோன். எனச் சிறுபான்மை அஃறிணைப் பெயரிடத்து வேற்றுமையில் வல்லினம் மிகாமை காண்க.
ஒரோவிடத்து, வேய்ங்குழல், ஆர்ங்கோடு என வேற்றுமையில் யகர ரகரங்களின் முன்னும், பாழ்ங்கிணறு எனப் பண்புத் தொகையில் ழகரத்தின் முன்னும், இனமெல்லெழுத்து மிகுமெனக் கொள்க.
பேய்கோட்பட்டான், பேய்க்கோட்பட்டான். எ-ம். சூர்கோட்பட்டான், சூர்க்கோட்பட்டான். எ-ம். ஒரோ வழிச் செயப்பாட்டுவினை முடிக்குஞ்சொல்லாக வருமிடத்து, யகர ரகரங்களின் முன் வரும் வல்லினம், ஒரு கால் இயல்பாயும், ஒரு காற்றிரிந்தும் வரும்.

தேர்வு வினாக்கள்
117. இகர ஐகாரவுயிர்களையும் ய ர ழ மெய்களையும் இறுதியாகவுடைய அஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம் எந்தெந்த விடங்களின் மிகும்: எந்தெந்தவிடங்களின் மிகா?
இரண்டாம் வேற்றுமைத் தொகையும், ஏழாம்வேற்றுமைத் தொகையும், உருபு மாத்திரந் தொக்க தொகையாயின், அவற்றின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?
உருபும் பயனும் உடன்றொக்க தொகையாயின், அவற்றின் முன் வரும் வல்லினம் எப்படியாம்?
இகர ஐகாரவீற்றஃறிணைப் பெயர்களின் முன் வரும் வல்லினம், ஆறாம் வேற்றுமைத் தொகையில், மிகுதலன்றி வேறு விதி பெறாதோ?
ய ர ழ வீற்றின் முன் வரும் வல்லினம், வேற்றுமைத் தொகையிலும், பண்புத் தொகையிலும், ஒரோவிடத்து வேறு விதி பெறவோ? மூன்றாம் வேற்றுமைத் தொகையிலே முடிக்குஞ் சொற் செயற்பாட்டு வினையாகுமிடத்து, ய ர க்களின் முன் வரும் வல்லினம் எப்படிப் புணரும்?

---

சில மரப்பெயர்முன் வல்லினம் புணர்தல்
118. உயிரீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், இன மெல்லெழுத்து மிகும்.
உதாரணம்.
மா + காய் - மாங்காய்
விள + காய் - விளாங்காய்
---

119. இகர, உகர லகரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், அம்முச்சாரியை தோன்றும்.
உதாரணம்.
புளி + காய் - புளியங்காய்
புன்கு + காய் - புன்கங்காய்
ஆல் + காய் - ஆலங்காய்
---

120. ஐ காரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின், நிலைமொழியீற்றை காரங் கெட்டு அம்முச்சாரியை தோன்றும்.
உதாரணம்.
எலுமிச்சை + காய் - எலுமிச்சங்காய்
மாதுளை + காய் - மாதுளங்காய்

தேர்வு வினாக்கள்
118. உயிரீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
119. இகர உகர லகரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
120. ஐகாரவீற்றுச் சில மரப்பெயர் முன் வல்லினம் வரின் எப்படியாம்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:30 am

சில வேற்றுமையுருபின் முன் வல்லினம் புணர்தல்
121. ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமையுருபு களின் முன்னும் அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும் வரும் வல்லினம் மிகா.
உதாரணம்.
மகனொடு போனான் மகனோடு போனான்
தனது கை தனாது கை தன கைகள்

தேர்வு வினா
121. ஒடு, ஓடு என்னும் மூன்றாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும் அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும், அது, ஆது, அ என்னும் ஆறாம் வேற்றுமை யுருபுகளின் முன்னும், வல்லினம் வரின் எப்படியாம்?

---

குற்றியலுகரவீறு
122. வன்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் வரும் வல்லினம் இரு வழியினும் மிகும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
கொக்குக்கடிது கொக்குச்சிறை
சுக்குத்திப்பிலி சுக்குக்கொடு
---

123. மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் வரும் வல்லினம் அல்வழியில் இயல்பாம்: வேற்றுமையிலே மிகும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
குரங்கு கடிது குரங்குக்கால்
அம்பு தீது அம்புத்தலை
குரங்கு பிடித்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையிலும், அரங்கு புக்கான் என ஏழாம் வேற்றுமைத் தொகையிலும், வருமொழி வினையாயவிடத்து, வல்லினம் மிகாவெனக் கொள்க.
---

124. ஏழாம் வேற்றுமையிடப்பொருள் உணர நின்ற அன்று, இன்று, என்று, பண்டு, முந்து, என்னும் இடைச்சொற்களின் முன் வரும் வல்லினம் மிகா.
உதாரணம்.
அன்று கண்டான் பண்டு பெற்றான்
இங்குச்சென்றான் ஈங்குச்சென்றான்
உங்குத்தந்தான் ஊங்குத்தந்தான்
எங்குப்பெற்றான் யாங்குப்பெற்றான்
யாண்டுப் பெற்றான்
---

125. நெடிற்றொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், இடைத்தொடர் என்னும் இந்நான்கு தொடர்க் குற்றியலுகர வீற்றுமொழிகளின் முன் வரும் வல்லினம், இரு வழியினும் இயல்பாம்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
நாகு கடிது நாகு கால்
எஃகு கொடிது எஃகு கூர்மை
வரகு சிறிது வரகு சோறு
தௌ;கு பெரிது தௌ;கு பெருமை
---

126. டுவ்வையும் றுவ்வையும் இறுதியிலுடைய நெடிற்றொடர் உயிர்த்தொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் நாற்கணமும் வரின், உகரமேறிய டகர றகர மெய்கள் வேற்றுமையிற் பெரும்பாலும் இரட்டும்.
ஆட்டுக்கால்
ஆட்டுமயிர்
ஆட்டுவால்
ஆட்டதர் ஆற்றுக்கால்
ஆற்றுமணல்
ஆற்றுவழி
ஆற்றூறல் நெடிற்றொடர்
பகட்டுக்கால்
பகட்டுமார்பு
பகட்டு வால்
பகட்டடி வயிற்றுக்கொடல்
வயிற்றுமயிர்
வயிற்றுவலி
வயிற்றணி உயிர்த்தொடர்
காட்டரண், ஏற்றுப்பன்றி, வரட்டாடு, வெளிற்றுப்பனை எனச் சிறுபான்மை அல்வழியிலே பண்புத்தொகையில் இரட்டுதலும், வெருக்குக்கண், எருத்துமாடு எனச் சிறுபான்மை இரு வழியிலும் பிறவொற்றிரட்டுதலும் உளவெனக் கொள்க.
ஆடு கொண்டான், ஆறு கண்டான், பகடு தந்தான், பயறு தின்றான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், காடு போந்தன், ஆறு பாய்ந்தான், அகடு புக்கது, வயிறு புக்கது என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து, இரட்டா வெனக் கொள்க.

127. மென்றொடர்க் குற்றியலுகர வீற்று மொழிகளுள்ளே சில, நற்கணமும் வரின், வேற்றுமையிலும், அல்வழியிலே பணபுத்தொகையிலும், உவமைத் தொகையிலும், வன்றொடர்க் குற்றியலுகரமாதலுமுண்டு.
உதாரணம்.
மருந்து + பை - மருந்துப்பை
கரும்பு + நாண் - கருப்புநாண்
கரும்பு + வில் - கருப்புவில் வேற்றுமை
கன்று + ஆ - கற்றா
அன்பு + தளை - அற்புத்தளை பண்புத்
என்பு + உடம்பு - எறபுடம்பு தொகை
குரங்கு + மனம் - குரக்குமனம் உவமைத்
இரும்பு + நெஞ்சம் - இருப்புநெஞ்சம் தொகை
---

128. சில மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகள் இறுதியில் ஐகாரச்சாரியை பெற்று வரும்.
உதாரணம்.
பண்டு + காலம் - பண்டைக்காலம்
இன்று + நாள் - இற்றைநாள் அல்வழி
அன்று + கூலி - அன்றைக்கூலி வேற்றுமை
இன்று + நலம் - இற்றை நலம்
சில மென்றொடர் மொழிகள், வருமொழி நோக்காது, ஒற்றை, இரட்டை எனத் தனிமொழியாக நின்றும், ஈராட்டை, மூவாட்டை எனத்தொடர் மொழியாக நின்றும், ஐகாரச்சாரியை பெறுதலுமுண்டு.
நேற்று + பொழுது - நேற்றைப்பொழுது. எ-ம்.
நேற்று + கூலி - நேற்றைக்கூலி. எ-ம். வன்றொடர் ஐகாரச்சாரியை பெறுதலுமுண்டு.

தேர்வு வினாக்கள்
122. வன்றொடர்க்குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் இரு வழியினும் வல்லினம் வரின் எப்படியாம்?
123. மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் இரு வழியினும் வல்லினம் வரின் எப்படியாம்?
இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம்வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்து வல்லினம் எப்படியாம்?
124. ஏழாம் வேற்றுமையிடப் பொருள் உணர நின்ற அன்று முதலிய இடைச்சொற்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
ஏழாம் வேற்றுமையிடப் பொருள் உணர நின்ற அங்கு முதலிய இடைச் சொற்களின் முன் வல்லினம் வரின் எப்படியாம்?
125. நெடிற்றொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், இடைத்தொடர், என்னும் இந்நான்கு தொடர்க்குற்றியலுகர வீற்று மொழிகளின் முன் இரு வழியினும் வல்லினம் வரின் எப்படியாம்?
126. டுவ்வையும் றுவ்வையும் இறுதியிலுடைய நெடிற்றொடர், உயிர்த்தொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளின் முன் இரு வழியினும் நாற்கணமும் வரின் எப்படியாம்? அல்வழியில் எங்கும் இப்படி இரட்டுதலில்லையோ?
127. மென்றொடர்க் குற்றியலுகரவீற்று மொழிகளுட் சில, இருவழியினும் நாற்கணமும் வரின், வன்றொடராகத் திரிதலும் உண்டோ?
128. மென்றொடர்க் குற்றியலுகரம் .ன்னும் எவ்வாறாகும்? வன்றொடர்க் குற்றியலுகரம் ஐகாரச்சாரியை பெறுதலில்லையோ?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:32 am

குற்றியலுகரவீற்றுத் திசைப்பெயர்களோடு திசைப்பெயர்களும் பிற பெயர்களும் பிற பெயர்களும் புணர்தல்
129. வடக்க், குணக்கு, குடக்கு, என்னுஞ் செற்களின் ஈற்றுயிர் மெய்யுங் ககரவொற்றுங் கெடும்.
உதாரணம்.
வடக்கு + கிழக்கு - வடகிழக்கு
மேற்கு - வடமேற்கு
திசை - வடதிசை
மலை - வடமலை
வேங்கடம் - வடவேங்கடம்
குணக்கு + திசை - குணதிசை
கடல் - குணகடல்
குடக்கு + திசை - கடதிசை
நாடு - குடநாடு
கிழக்கு என்பது, ஈற்றுயிர் மெய்யுங் ககரவொற்றும் ழகரமெய்யின் மேனின்ற அகரவுயிருங்கெட்டு, முதனீண்டு வரும்: அங்கணம் வருமிடத்து, வல்லெழுத்து, இயல்பாகியும் ஓரோவிடத்து, வல்லெழுத்து, இயல்பாகியும், ஓரோவிடத்து மிகுந்தும் புணரும்.
உ-ம்
கிழக்கு + பால் - கீழ்பால்
திசை - கீழ்த்திசை
கீழைச்சேரி, கீழைவீதி, என ஐகாரம் பெறுதலுமுண்டு.
தெற்கு என்பது, ஈற்றுயிர்மெய் கெட்டு, றகரம் னகரமாகத்திரிந்து வரும்.

உதாரணம்.
தெற்கு + கிழக்கு - தென்கிழக்கு
மேற்கு - தென்மேற்கு
மலை - தென்மலை
மேற்கு என்பது ஈற்றுயிர்மெய் கெட்டு, றகரம் லகரமாகத் திரிந்து வரும். தகரம் வரிற் றிரியாது.
உதாரணம்.
மேற்கு + கடல் - மேல்கடல்
வீதி - மேல்வீதி
திசை - மேற்றிசை
மேலைச்சேரி, மேலைவீதி என ஐகாரம் பெறுதலுமுண்டு.
இத்திசைப் பெயர்கள், வடக்கூர், தெற்கூர், கிழக்கூர், மேற்கூர், வடக்குவாயில், தெற்கு மலை, கிழக்குத் திசை, மேற்கு மலை, என இங்ஙனங் காட்டிய விகாரமின்றியும் வரும்.
வடகிழக்கு என்பது, வடக்குங் கிழக்குமாயதொரு கோணம் என, உம்மைத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. வடதிசை என்பது, வடக்காகிய திசை எனப் பண்புத்தொகை, வடமலை என்பது வடக்கின் கண் மலை என ஏழாம் வேற்றுமைத்தொகை.


தேர்வு வினாக்கள்

129. திசைப்பெயர் முதலிய பெயர்கள் வந்து புணரின், வடக்கு, குணக்கு, குடக்கு என்னுஞ் சொற்கள் எப்படியாம்?
கிழக்கு என்பது எப்படியாம்? தெற்கு என்பது எப்படியாம்?
மேற்கு என்பது எப்படியாம்?
இத்திசைப் பெயர்கள் இவ்விகாரமின்றியும் வருமோ?
வடகிழக்கென்பது என்ன தொகை?
வடதிசை என்பது என்ன தொகை? வட மலை என்பது என்ன தொகை?

---

உகரவீற்றெண்ணுப் பெயர்ப் புணர்ச்சி
130. ஒன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெட்டு, னகரவொற்று ரகரமாகத் திரியும். வந்தது மெய்யாயின் ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும்.
உதாரணம்.
ஒன்று + கோடி - ஒருகோடி
கழஞ்சு - ஒருகழஞ்சு
நாழி - ஒருநாழி
வாழை - ஒருவாழை
ஆயிரம் - ஓராயிரம்
இரண்டென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய்யும், ணகரவொற்றும், ரகரத்தின் மேனின்ற அகரவுயிருங் கெடும். வந்தது மெய்யாயின், ரகரம் உகரம் பெறும்: உயிராயின், உகரம் பெறாது முதனீளும்.
உதாரணம்.
இரண்டு + கோடி - இருகோடி
கழஞ்சு - இருகழஞ்சு
யானை - இருயானை
வாழை - இருவாழை
ஆயிரம் - ஈராயிரம்
மூன்றென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும். நின்ற னகரமெய் வந்தது உயிராயிற்றானும் உடன் கெடும். மெய்யாயின் முதல் குறுகி, னகரமெய் வருமெய்யாகத் திரியும்.
உதாரணம்.
மூன்று + ஆயிரம் - மூவாயிரம்
கழஞ்சு - முக்கழஞ்சு
நாழி - முந்நாழி
நான்கென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும். நின்ற னகரம், வந்தவை. உயிரும் இடையெழுத்துமாயின், லகரமாகத்திரியும்: வல்லெழுத்தாயின், றகரமாகத் திரியும்: மெல்லெழுத்தாயின் இயல்பாம்.
உதாரணம்.
நான்கு + ஆயிரம் - நாலாயிரம்
யானை - நால்யானை
கழஞ்சு - நாற்கழஞ்சு
மணி - நான்மணி
ஐந்தென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெகுடும். நின்ற நகர மெய் வந்தவை உயிராயிற் றானும் உடன் கெடும். வல்லெழுத்தாயின், இனமெல்லெழுத்தாகத் திரியும். மெல்லெழுத்தும் இடையெழுத்துமாயின் அவ் வந்த வெழத்தாகத் திரியும்.
உதாரணம்.
ஐந்து + ஆயிரம் - ஐயாயிரம்
கழஞ்சு - ஐங்கழஞ்சு
மூன்று - ஐம்மூன்று
வட்டி - ஐவ்வட்டி
நகரமுந் தகரமும் வரின், ஐந்நூறு, ஐந்தூணி, என ஈற்றுயிர் மெய் மாத்திரங் கெடும்.
ஆறென்னும் எண் உயிர் வரிற் பொதுவிதியான் முடியும்: மெய்வரின் முதல் குறுகும்.
உதாரணம்.
ஆறு + ஆயிரம் - ஆறாயிரம்
கழஞ்சு - அறுகழஞ்சு
மணி - அறுமணி
வழி - அறுவழி
ஏழு என்னும் எண்ணின் முன் உயிர் வரின், ஈற்றுகரங் கெடும்: மெய்வரின் முதல் குறுகும்.
உதாரணம்.
ஏழு + ஆயிரம் - ஏழாயிரம்
கழஞ்சு - எழுகழஞ்சு
மணி - எழுமணி
வகை - எழுவகை
ஏழ்கடல், ஏழ்பரி என வருதலுமுண்டு.
எடடென்னும் எண்ணின் ஈற்றுயிர் மெய் கெடும்: நின்ற டகரமெய் நாற்கணத்தின் முன்னும் ணகரமெய்யாகத்திரியும்.
உதாரணம்.
எடடு + ஆயிரம் - எண்ணாயிரம்
கழஞ்சு - எண்கழஞ்சு
மணி - எண்மணி
வளை - எண்வளை
இவ் விகாரங்களின்றிப் பொது விதி பற்றி, இரண்டு கழஞ்சு, மூன்று படி, நான்கு பொருள், ஐந்து முகம், ஆறு குணம், ஏழு கடல், எட்டுத் திக்கு எனவும் வருமெனக் கொள்க.
---

131. ஒன்பதென்னும் எண்முன் பத்தென்னும் எண்வரின், பது கெட்டு, முதலுயிரோடு தகரமெய் சேர்ந்து, நின்ற னகரம் ளகரமாகவும். வருமொழியாகிய நூறு ஆயிரமாவுந் திரியும்.
உதாரணம்.
ஒனபது + பத்து - தொண்ணுhறு
ஒன்பது என்னும் எண்முன் நூறு என்னும் எண் வரின், பது கெட்டு, முதலுயிரோடு தகரமெய்சேர்ந்து, நின்ற னகரம் ளகரமாகவும், வருமொழியாகிய நூறு ஆயிரமாகவுந் திரியும்.
உதாரணம்.
என்பது + நூறு - தொள்ளாயிரம்
இது இக்காலத்துத் தொளாயிரம் என வழங்கும்.
---

132. ஒன்று முதல் எடடீறாக நின்ற எண்ணுப் பெயர் கண்முன் பத்தென்னும் எண்ணுப் பெயர் வரின், அப்பத்தின் நடு நின்ற தகரமெய், கெட்டாயினும், ஈய்தமாகத் திரிந்தாயினும் புணரும்.
உதாரணம்.
ஒன்று 10 பத்து - ஒருபது, இருபஃது
இரண்டு இருபது, இருபஃது
மூன்று முப்பது, முப்பஃது
நான்கு நாற்பது, நாற்பஃது
ஐந்து ஐம்பது, ஐம்பஃது
ஆறு அறுபது, அறுபஃது
ஏழு எழுபது, எழுபஃது
எட்டு எண்பது, எண்பஃது
---

133. ஒருபது முதல் எண்பது ஈறாகிய எண்களின் முன் ஒன்று முதல் ஒன்பதெண்ணும் அவற்றையடுத்த பிற பெயரும் வரின், நிலைமொழியீற்றுக்கு அயலிலே தகரவொற்றுத் தோன்றும்.
உதாரணம்.
ஒருபது 10 ஒன்று - ஒருபத்தொன்று
இருபது 10 இரண்டு - இருபத்திரண்டு
முப்பது 10 மூன்று கழஞ்சு - முப்பத்துமூன்று கழஞ்சு
மற்றவைகளு மிப்படியே
-----

134. பத்தின் முன் இரண்டு வரின், உம்மைத் தொகையில் ஈற்றுயிர் மெய் கெட்டு நின்ற தகரமெய் னகரமாகத்திரியும்.
உதாரணம்.
பத்து 10 இரண்டு - பன்னிரண்டு
பத்தின் முன் இரண்டொழிந்த ஒனிறு முதல் எட்டீறாகிய எண்கள் வரின், உம்மைத்தொகையில் ஈற்றுயிர் மெய் கெட்டு, இன் சாரியை தோன்றும்.
உதாரணம். பத்து 10 ஒன்று - பதினொன்று
மூன்று - பதின்மூன்று
நான்கு - பதினான்கு
ஐந்து - பதினைந்து
ஆறு - பதினாறு
ஏழு - பதினேழு
எட்டு - பதினெட்டு



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:33 am

135. பத்தின் முன்னும், ஒன்று முதலிய எண்ணுப் பெயரும், நிறைப்பெயரும், அளவுப்பெயரும், பிறபெயரும், வரின் பண்புத்தொகையில் இற்றுச்சாரியை தோன்றும்: அங்ஙனந் தோன்றுமிடத்துப் பத்தென்பதின் ஈற்றுயிர் மெய் கெடும்..
உதாரணம்.
பத்து 10 ஒன்று - பதிற்றொன்று
இரண்டு - பதிற்றிரண்டு
மூன்று - பதிற்றுமூன்று
பத்து - பதிற்றுப்பத்து
நூறு - பதிற்றுநூறு
ஆயிரம் - பதிற்றாயிரம்
கோடி - பதிற்றுக்கோடி
கழஞ்சு - பதிற்றுக்கழஞ்சு
கலம் - பதிற்றுக்கலம்
மடங்கு - பதிற்றுமடங்கு

ஒன்பது 10 ஒன்று - ஒன்பதிற்றொன்று
இரண்டு - ஒன்பதிற்றிரண்டு
மூன்று - ஒன்பதிற்றுமூன்று
பத்து - ஒன்பதிற்றுப்பத்து
நூறு - ஒன்பதிற்றுநூறு
ஆயிரம் - ஒன்பதிற்றாயிரம்
கோடி - ஒன்பதிற்றுக்கோடி
கழஞ்சு - ஒன்பதிற்றுக்கழஞ்சு
கலம் - ஒன்பதிற்றுக்கலம்
மடங்கு - ஒன்பதிற்றுமடங்கு
பத்தின் முன்னும், ஒன்பதின் முன்னும், ஆயிரமும், நிறைப்பெயரும், அளவுப்பெயரும், பிற பெயரும் வரின், பண்புத்தொகையில் இற்றுச்சாரியையேயன்றி இன் சாரியையும் தோன்றும்: அங்ஙனந் தோன்றுமிடத்துப் பத்தென்பதின் ஈற்றுயிர்மெய் கெடும்.
உதாரணம்.
பத்து 10 ஆயிரம் - பதினாயிரம்
கழஞ்சு - பதின்கழஞ்சு
கலம் - பதின்கலம்
மடங்கு - பதின்மடங்கு
ஒன்பது 10 ஆயிரம் - ஒன்பதினாயிரம்
கழஞ்சு - ஒன்பதின்கழஞ்சு
கலம் - ஒன்பதின்கலம்
மடங்கு - ஒன்பதின்மடங்கு
----

136. ஒன்பதொழிந்த ஒன்று முதற் பத்தீறாகிய ஒன்பதென்களையும் இரட்டித்து சொல்லுமிடத்து, நிலைமொழியின் முதலெழுத்து மாத்திரம் நிற்க, அல.லென் வெல்லாங் கெட்டு, முதனெடில் குறுகவும், வந்தவை உயிராயின் வகரவொற்றும், மெய்யாயின் வந்த எழுத்தும் மிகவும் பெறும்.
உதாரணம்.
ஒன்று 10 ஒன்று - ஒவ்வொன்று
இரண்டு 10 இரண்டு - இவ்விரண்டு
மூன்று 10 மூன்று - மும்மூன்று
நான்கு 10 நான்கு - நந்நான்கு
ஐந்து 10 ஐந்து - ஐவைந்து
ஆறு 10 ஆறு - அவ்வாறு
ஏழு 10 ஏழு - எவ்வேழு
எட்டு 10 எட்டு - எவ்வெட்டு
பத்து 10 பத்து - பப்பத்து
சிறு பான்மை ஒரோவொன்று, ஒன்றொன்று என வருதலு முண்டு.

தேர்வு வினாக்கள்
130. ஒன்று என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
இரண்டு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்? மூன்று என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
நான்கு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
ஐந்து என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
ஆறு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்? ஏழு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
எட்டு என்பதன் முன் நாற்கணமும் வரின் எப்படிப்புணரும்?
இவ் வெண்ணுப் பெயர்கள் இவ்விகாரமின்றியும் வருமோ?
131. ஒன்பது என்பதன் முன் பத்து வரின் எப்படி புணரும்?
132. ஒன்று முதல் எட்டீறாக நின்ற எண்ணுப் பெயர்கண் முன் பத்து வரின் எப்படி புணரும்?
133. ஒருபது முதல் எண்பதீறாகிய எண்களின் முன் ஒன்று முதல் ஒன்பதெண்ணும் அவற்றையடுத்த பிற பெயரும் வரின் எப்படி புணரும்?
134. பத்தின் முன் இரண்டு வரின் உம்மைத்தொகையில் எப்படிப் புணரும்? பத்தின் முன் இரண்டொழிந்த ஒன்று முதல் எட்டீறாகிய எண்கள் வரின் உம்மைத்தொகையில் எப்படி புணரும்?
135. பத்தின் முன்னும் ஒன்பதின் முன்னும் ஒன்று முதலிய எண்ணுப் பெயரும் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் பிறபெயரும் வரின், பண்புத்தொகையில் எப்படி புணரும்? பத்தின் முன்னும் ஒன்பதின் முன்னும் ஆயிரமும் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் பிறபெயரும் வரின் பண்புத்தொகையில் இற்றுச்சாரியையேயன்றி வேறு சாரியையுந் தோன்றுமோ?
136. ஒனபதொழிந்த ஒன்று முதற் பத்தீறாகிய ஒன்பதென்களையும் இரட்டித்து சொல்லுமிடத்து, எப்படி புணரும்?

-----


மெய்யீற்று முதனிலைத் தொழிற்பெயர் முன்னும் ஏவல் வினை முன்னும் மெய் புணர்தல்

137. ஞ், ண், ந், ம், ல், வ், ள், ன் என்னும் இவ்வெட்டு மெய்யீற்று முதனிலைத் தொழிற்பெயரும், ஏவல் வினை முற்றும், தம்முன் யகரமல்லாத மெய்கள் வரின், உகரச் சாரியை பெறும். தொழிற்பெயரின் சாரியைக்கு முன் வரும் வல்லினம் மிகும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
உரிஞ10க்கடிது உரிஞ10க்கடுமை
உண்ணுஞான்றது உண்ணுஞாற்சி
பொருநுவலிது பொருநுவன்மை
உரிஞகொற்றா
உண்ணுநாகா
பொருநுவளவா
திரும், செல், வவ், துள், தின் முதலியனவற்றோடும் இவ்வாறே யொட்டிக்கொள்க.
முதனிலைத் தொழிற்பெயராவது தொழிற்பெயர் விகுதி குறைந்தது. முதனிலை மாந்திர நின்று தொழிப்பெயர்ப் பொருளைத் தருவதாம்.
இவ்வொட்டீற்று ஏவல் வினைகளுள்ளே, உண்கொற்றா, தின் சாத்தா, வெல்பூதா, தூள் வளவா என, ண, ன, ல, ள, என்னும் இந்நான்கீறும், உகரச்சாரியை பெறாதும் நிற்கும்.
பொருநூதல் - மற்றொருவர்போல வேடங்கொள்ளுதல் பொருந் என்பது தொழிற்பெயராவதன்றிஅ த்தொழிலினரை உணர்த்துஞ் சாதிப்பெயருமாம்.
பொருநூக்கடிது என நகரவீற்றுச் சாதிப்பெயரும் வெரிநுக்கடிது என நகரவீற்றுச் சினைப்பெயரும், உகரச்சாரியை பெறுமெனவுங்கொள்க. வெரிந் - முதுகு.

தேர்வு வினாக்கள்
137. ஞ, ண, ந, ம, ல, வ, ள, ன என்னும் இவ்வெட்டு மெய்யீற்று முதனிலைத் தொழிற் பெயரும், ஏவல் வினை முற்றும், தம் முன் யகர மல்லாத மெய்கள் வரின், எப்படிப் புணரும்?
முதனிலைத் தொழிற் பெயராவது யாது? இவ் வொட்டீற்றேவல் வினைகளுள்ளே, உகரச் சாரியை பெறாதும் நிற்பன உளவோ? பொருநுதல் என்பதற்குப் பொருள் என்ன?
பொருந் என்பது தொழிற்பெயராவதன்றி, வேறு பெயரும் ஆமோ? நகரவீற்றுப் பெயர் பொருந் அன்றி வேறும் உண்டோ?
வெரிந் என்பதற்குப் பொருள் என்னை? பொருந் என்னுஞ் சாதிப் பெயரும், வெரிந் என்னுஞ் சினைப் பெயரும், உகரச்சாரியை பெறவோ?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 14, 2009 3:34 am

ண கர னகர வீற்றுப் புணர்ச்சி
138. ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின், அல் வழியில் அவ்விரு மெய்களும் இயலபாம். வேற்றுமையில் ணகரம் டகரமாகவும், னகரம் றகரமாகவுந் திரியும். அவ்விரு வழியிலும், வருந்தகரம் ணகரத்தின் முன் டகரமாகவும், னகரத்தின் முன் றகரமாகவும் திரியும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
மண்சிறிது மட்சாடி
மண்டீது மட்டூண்
பொன் குறிது பொற்கலம்
பொன்றீது பொற்றூண்
கட்பொறி, பொற்கோடு எனப் பண்புத் தொகையினும் பட்சொல், பொற்சுணங்கு என உவமைத் தொகையினுந் திரிதலும் உண்டு.
மண் சுமந்தான், பொன் கொடுத்தான், என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், விண் பறந்தது, கான் புகுந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாயவிடத்துத் திரியாதியல்பாம். மண்கூடை, புண்கை, என ஒரோவிடத்து இரண்டனுருபும் பயனும் உடன் றொக்க தொகையினுந் திரியாமை கொள்க.
----

139. ணகர, னகரங்களின் முன் மெல்லினமும் இடையினமும் வரின், இறுதி ண னக்கள் இரு வழியினும் இயல்பாம். அவ்விரு வழியிலும், ணகரத்தின் முன் வரு நகரம் ணகரமாகவும்: னகரத்தின் முன் வரு நகரம் னகரமாகவுந் திரியும்.
உதாரணம்.

அல்வழி வேற்றுமை
மண்ஞான்றது மண்ஞாற்சி
மண்ணீன்டது மண்ணீட்சி
மண்வலிது மண்வன்மை
பொன்ஞான்றது பொன்ஞாற்சி
பொன்னீண்டது பொன்னீட்சி
பொன்வலிது பொன்வன்மை
----

140. தனிக்குற்றெழுத்தைச் சாராத ணகர னகரங்கள், வரு நகரந் திரிந்த விடத்து, இரு வழியினுங் கெடும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
தூணன்று தூணன்மை
அரணன்று அரணன்மை
வானன்று வானன்மை
செம்பொனன்று செம்பொனன்மை
----

141. பாண், உமண், அமண், பரண், கவண், என்னும் பெயர்களின் இறுதி ணகரம், வல்லினம் வரின், வேற்றுமையினுந் திரியாதியல்பாம்.
உதாரணம்.
பாண்குடி உமண்சேரி அமண்பாடி
பரண்கால் கவண்கால்
பாண் - பாடுதற்றொழிலுடையதொரு சாதி. உமண் - உப்பமைதற்றொழிலுடையதொரு சாதி. அமண் - அருகனை வழிபடுவதொரு கூட்டம்.
----

142. தன், என், என்னும் விகார மொழிகளின் இறுதி னகரம், வல்லினம் வரின், ஒருகாற் றிரிந்தும், ஒருகாற் றிரியாதும், நிற்கும். நின் என்னும் விகாரமொழியின் இறுதி னகரந் திரியாதியல்பாகும்.
உதாரணம்.
தன்பகை தற்பகை
என்பகை எற்பகை
நின்பகை
தற்கொண்டான், எற்சேர்ந்தான், நிற்புறங்காப்ப என இரண்டாம் வேற்றுமைத் தொகையிற் றிரிந்தே நிற்கும்.
---

143. குயின், ஊன், எயின், எகின், தேன், மீன், மான், மின் என்னுஞ் சொற்களின் இறுதி னகரம், வல்லினம் வரின், வேற்றுமையினுந் திரியாதியல்பாம்.
உதாரணம்.
குயின்கடுமை - தேன்பெருமை
ஊன்சிறுமை - மீன்கண்
எயின்குடி - மான்செவி
எகின்சிறுமை - மின்கடுமை
குயின் - மேகம், எயின் - வேட்டுவச்சாதி, எகின் - அன்னப்புள்
தேன் என்பது, தேக்குடம், தேங்குடம் என, இறுதி னகரங்கெட, ஒருகால் வரும் வல்லெழுத்தும் ஒருகால் அதற்கின மெல்லெழுத்து வருமிடத்து ஈறு கெடுதலுமுண்டு.


தேர்வு வினாக்கள்

138. ணகர னகரங்களின் முன் வல்லினம் வரின், இரு வழியும் எப்படிப் புணரும்?
அல்வழியில் எவ்விடத்துந் திரியாவோ? வேற்றுமையில் எவ்விடத்தும் இயல்பாகவோ?
ண ன வீறு இரண்டனுருபும் பயனும் உடன் றொக்க தொகையில் எவ்விடத்துந் திரிந்தே வருமோ?
139. ணகர னகரங்களின் முன் மெல்லினமும் இடையினமும் வரின், இரு வழியிலும் எப்படி புணரும்?
140. தனிக்குற்றெழுத்தைச் சாராத ணகர னகரங்களின் முன் நகரம் வந்தால், ணகர னகரம் இயல்பாகவே நிற்குமோ?
141. எந்த மொழியினும் ணகரம் வேற்றுமையிற்றிரிந்தே வருமோ?
பாண் என்பதற்கு பொருள் என்னை? உமண் என்பதற்கு பொருள் என்னை?
அமண் என்பதற்கு பொருள் என்னை?
142. தன், என் என்பவற்றின் னகரம், வல்லினம் வரின் எப்படியாம்?
நின் என்பது இப்படி வராதோ?
இம் மூன்றிடத்து னகரமும், இரண்டாம் வேற்றுமைத் தொகையில் இவ்விதியே பெறுமோ?
143. எந்த மொழியினும் னகரம், வவேற்றுமையிற்றிரிந்தே வருமொ? தேன் என்பதன் னகரம்,இயல்பாதலன்றி, வேறு விதி பெறாதோஃ மெல்லெழுத்து வரின், விகாரமடைதல் இல்லையோ?

----

மகரவீற்றுப் புணர்ச்சி
144. மகரத்தின் முன் வல்லினம் வரின், வேற்றுமையினும். அல்வழியிலே பண்புத் தொகையினும், உவமைத் தொகையினும், இறுதி மகரங் கெட்டு, வரும் வல்லினமிகும். எழுவாய்த் தொடரினும், உம்மைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும், இறுதி மகரம் வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.
உதாரணம்.
மரக்கோடு
நிலப்பரப்பு வேற்றுமை
வட்டக்கடல்
சதுரப்பலகை பண்புத்தொகை
கமலக்கண் உவமைத்தொகை
முரங்குறிது
யபங்கொடியேம் எழுவாய்
நிலந்தீ
பயங்காக உம்மைத்தொகை
செய்யுங்காரியம் பெயரெச்சம்
உண்ணுஞ்சோறு
தின்றனங்குறியேம் வினைமுற்று
சாத்தானுங்கொற்றனும்
பூதனுந் தேவனும் உம்மையிடைச் சொல்
மரம் பெரிது எனப் பகரம் வருமிடத்து இறுதி மகரம் இயல்பாம்.
தவஞ்செய்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், நிலங்கிடந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழி வினையாய விடத்து, இறுதி மகரங்கெடாது. வரும் வல்லெழுத்திற்கு இனமாகத்திரியும்.
----

145. தனிக்குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம், இரு வழியினும், வரும் வல்லெழுத்திற்கு இனமாகத் திரியும்.


உதாரணம்.
அல்வழி வேற்றுமை
கங்குறிது கங்குறுமை
அஞ்சிறிது அச்சிறுமை
செங்கோழி நங்கை
தஞ்செவி
எந்தலை
---

146. மகரத்தின் முன் மெல்லினம் வரின், இறுதி மகரம், இருவழியிலுங் கெடும்.
உதாரணம்.
அல்வழி வேற்றுமை
மரஞான்றது மரஞாற்சி
மரநீண்டது மரமாட்சி
---

147. தனிக்குறிலின் கீழ் நின்ற மகரம், ஞ நக்கள் வரின், அவ்வெழுத்தாகத் திரியும்.
உதாரணம்.
அஞ்ஞானம் நுஞ்ஞானம்
எந்நூல் தந்நூல் நந்நூல்
---

148. மகரத்தின் முன் உயிரும் இடையினமும் வரின், வேற்றுமையினும், அல்வழியிலே பண்புத் தொகையினும், உவமைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், உம்மைத் தொகையினும், செய்யுமென்னும் பெயரெச்சத் தொடரினும், வினைமுற்றுத் தொடரினும், இடைச் சொற்றொடரினும் இறுதி மகரங்கெடாது நிற்கும்.
உதாரணம்.
மரவடி
மரவேர் வேற்றுமை
வட்டவாழி
வட்டவடிவம் பண்புத்தொகை
பவளவிதழ்
பவளவாய் உவமைத்தொகை
மரமரிது
மரம்வலிது எழுவாய்
வலமிடம்
நிலம்வானம் உம்மைத்தொகை
உண்ணுமுணவு
ஆளும்வளவன் பெயரெச்சம்
உண்டனமடியேம்
உண்டனம்யாம் வினைமுற்று
அரசனுமமைச்சனும்
புலியும் யானையும் உம்மையிடைச்சொல்

செயமடைந்தான், மரம் வெட்டினான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், மாயூரமேகினான். சிதம்பரம் வாழ்ந்தான் என ஏழாம் வேற்றுமைத் தொகையினும், வருமொழிவினையாய விடத்து, இறுதிமகரங்கெடாது நிற்கும்.
வினையாலணையும் பெயரின் ஈற்று மகரம், வேற்றுமையினும், உயிரும் இடையினமும் வரின் சிறியேமன்பு, சிறியேம் வாழ்வு எனக் கெடாது நிற்கும் வல்லினம் வரின், சிறியேங்கை என இனமெல்லெழுத்தாகத் திரியும்.


தேர்வு வினாக்கள்

144. மகரத்தின் முன் இரு வழியினும் வல்லினம் வரின் எப்படி புணரும்?
இரண்டாம் வேற்றுமைத் தொகையினும், ஏழாம் வேற்றுமைத் தொகையினும் வருமொழி வினையாயவிடத்து எப்படிப் புணரும்?
145. தனிக்குற்றெழுத்தின் கீழ் நின்ற மகரம் இரு வழியினும் வல்லெழுத்து வரின் எப்படியாம்?
146. மகரத்தின் முன் இரு வழியினும் மெல்லினம் வரின் எப்படிப் புணரும்?
147. தனிக்குறிலின் கீழ் நின்ற மகரம், ஞ நக்கள் வரின் எப்படியாம்?
148. மகரத்தின் முன் இரு வழியினும் உயிரும்; இடையினமும் வரின் எப்படிப் புணரும்?
இரண்டாம் வேற்றுமைத் தொகையினும் எழாம் வேற்றுமை தொகையினும், வருமொழி வினையாயவிடத்து எப்படியாம்?
வினையாலனையும் பெயரின் ஈற்று மகரம் வேற்றுமையில் உருபும் இடையினமும் வாரிக்கொட்டே புணருமோ?
வல்லினம் வரின் எப்படியாம்?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக