புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10 
31 Posts - 44%
jairam
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10 
2 Posts - 3%
சிவா
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10 
1 Post - 1%
Manimegala
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10 
13 Posts - 4%
prajai
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10 
9 Posts - 3%
jairam
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Jenila
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Rutu
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_m10நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன்


   
   

Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:50 am

First topic message reminder :

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 1

ஜோதிடம் என்றால் என்ன ? ஜோதிடம் என்பது வானமண்டலத்திலுள்ள நட்சத்திரங்கள் கூறும் செய்திகள் என்று பொருள். அவைகள் வருங்காலத்தைப் பற்றிக் கூறுகின்றன. நமக்குத் தேவையான செய்திகளையெல்லாம் கூறுகின்றன. அவைகள் கூறும் செய்திகளை தெரிந்துகொள்ள நமக்கு நட்சத்திரங்களின் மொழி தெரிய வேண்டும். அந்த நட்சத்திர மொழி தான் ஜோதிடம்.

சரி ! நட்சத்திரங்கள் எப்படிக் கூறுகின்றன, அவை 9 கிரகங்கள் மூலமாகக் கூறுகின்றன. அந்த 9 கிரகங்கள்.

    1. சூரியன்
    2. சந்திரன்
    3. செவ்வாய்
    4. புதன்
    5. குரு
    6. சுக்கிரன்
    7. சனி
    8. ராகு
    9. கேது

இந்த 9 கிரகங்களையும் பார்க்கமுடியுமா ? முடியாது. ஏழு கிரகங்களைத்தான் பார்க்க முடியும். ராகு கேதுக்களைப் பார்க்க முடியாது. அவைகள் நிழல் கிரகங்கள் என்று பெயர். முதல் எழு கிரகங்களில் சூரியன், சந்திரன், சுக்கிரன் ஆகியவைகளை நாம் நமது கண்களால் 'டெலஸ்கோப்' உதவியுடன்தான் பார்க்க இயலும்.

அடுத்த கேள்வி, இந்த கிரகங்களுக்கும், மனித உயிர்களுக்கும் என்ன தொடர்பு ? தொடர்பு நிறைய இருக்கிறது. சூரிய ஒளி இல்லை என்றால் மனித உயிர்கள், தாவரங்கள் எதுவும் வாழ முடியாது. சூரிய நமஸ்காரம் ஏன் செய்கிறோம் ? சூரிய ஒளி நம் கண்களில் பட்டால் அது நமது கண்களுக்கு நல்லது என்பதால் தானே ! ஆக சூரிய ஒளி மனித வாழ்க்கைக்கு மிகவும் தேவை என்பது விளங்குகின்றது அல்லவா ? அதே போன்று மனநிலை சரியில்லாதவர்களைப் பாருங்கள்! அமாவாசை, பௌர்ணமி காலங்களில் அவர்கள் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாவதைப் பார்க்கலாம், அவர்களின் ஆர்ப்பாட்டங்களும் அதிகமாகின்றன. இதே போன்று மற்ற கிரகங்களும் மனித வாழ்க்கையோடு உறவு கொண்டு பல மாற்றங்களைத் தோற்றுவிக்கின்றன. இப்போது நவகிரகங்கள் என அழைக்கப்படும் 9 கிரகங்களும் மனித வாழ்க்கையோடு தொடர்பு கொண்டுள்ளன எனத் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா?

சரி ! மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள்? ஆகாயத்திலே சூரியனைச் சுற்றி பல லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன். சூரியனை மையமாக வைத்து நீளவட்ட வடிவமான பாதையில் பல லட்சக்கணக்கான் நட்சத்திரங்கள் உள்ளன. இந்த நீளவட்டமான பாதைதான் ராசி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இந்த நட்சத்திரக் கூட்டங்களை நம் முன்னோர் 27 பாகங்காளகப் பிரித்து உள்ளனர். இந்த 27 பாகங்களுக்கும் பெயர்கள் உண்டு. அந்தப் பெயரால்தான் அந்த நட்சத்திரக் கூட்டம் அழைக்கப்படுகின்றது.

    1. அஸ்வினி
    2. பரணி
    3. கார்த்திகை
    4. ரோகினி
    5. மிருகசீரிஷம்
    6. திருவாதரை
    7. புனர்ப்பூசம்
    8. பூசம்
    9. ஆயில்யம்
    10. மகம்
    11. பூரம்
    12. உத்திரம்
    13. ஹஸ்தம்
    14. சித்திரை
    15. ஸ்வாதி
    16. விசாகம்
    17. அனுஷம்
    18. கேட்டை
    19. மூலம்
    20. பூராடம்
    21. உத்திராடம்
    22. திருவோணம்
    23. அவிட்டம்
    24. சதயம்
    25. பூரட்டாதி
    26. உத்திரட்டாதி
    27. ரேவதி

நாம் என்ன தெரிந்து கொண்டோம் ? ஆகாயமண்டலத்தில் நீள வட்ட வடிவமான பாதையில் 27 நட்சத்திரக்கூட்டங்கள் இருக்கின்றன. நாம் இனிமேல் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன எனக் கூறுவோம். இந்த 27 நட்சத்திரங்களின் மேல் இந்த 9 கிரகங்களும் வலம் வருகின்றன. அவைகள் எல்லாம் ஒரே வேகத்தில் வருவதில்லை. ஒவ்வொரு கிரகமும் வேகத்தில் மாறுவிடுகின்றன, சந்திரனுக்கு இந்த ஆகாய மண்டலத்தைச்சுற்றி வர ஒரு மாதம் ஆகிறது. சூரியனுக்கு ஒரு வருடம், செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டுகள், ராகு கேதுவிற்கு 18 ஆண்டுகள், சனிக்கு 30 ஆண்டுகள் ஆகின்றன.

இந்த ஒன்பது கிரகங்களில் சந்திரன்தான் மிக வேகமாகச் சுற்றுகிறார். சனி மெதுவாகத்தான் சுற்றுகிறார். அதனால்தான் அவர் பெயர் "மந்தன்" எனக்கூறப்படுவதுண்டு. சனிக்கு ஒருகால் கிடையாது. அவர் நொண்டி ஆகவேதான் அவர் மெதுவாக வலம் வருகிறார். சனி நொண்டியானதற்கு ஒரு கதை உண்டு. இராவணன் தன்மகன் இந்திரஜித் பிறக்கும் முன்பு அவன் சாகாவரம் பெற வேண்டும் என விருப்பினான். அவன் தான் நவக்கிரங்களையும் வென்று தன் இஷ்டப்படி செயல்பட வைத்தவனாயிற்றே. ஆகவே எல்லா கிரகங்களையும் தன் மகன் பிறக்கும் சமயத்தில் அவன் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அடைத்து வைத்துவிடுகிறான். ஒருவர் ஜாதகத்தில் 11ம் வீடு என்பது வெற்றியைக் குறிக்கும். அதில் எல்லா கிரகங்களும் இருக்குமேயாகில் அவருக்குத் தோல்வியே கிடையாது. இதை மனதில் கொண்டு இராவணன் இந்திரஜித்தின் ஜாதகத்தில் 11ம் வீட்டில் அத்தனை கிரகங்களும் இருக்குமாறு செய்து விட்டான்.

தேவர்கள் இதைக் கண்டு மனம் பதைத்தனர். ஒரு அசுரன் இவ்வாறு பிறந்தால் அவனை மரணமே நெருங்காதே! அப்புறம் உலகத்தில் அநீதிதான் இருக்கும், என்ன செய்வது என்றறியாது கலங்கினர். அப்போது நாரதர் சனிபகவானிடம் சென்று, "உன்னால்தான் ஒருவருக்கு நாசத்தைக் கொடுக்க முடியும், ஆகவே மற்றவர்களை நீதான் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டும் கொண்டார்.

சனி பகவானும் அவர் வேண்டுகோளுக்குகிணங்கி, இந்திரஜித் பிறக்கும் சமயத்தில் தன் இடது காலை 12ம் வீட்டில் வைத்துவிட்டார். ஒருவர் ஜாதகத்தில் 12ம் வீடு என்பது நாசத்தைக் கொடுக்கு இடமாகும். இந்தக் கட்டத்தில் இடது காலை சனி பகவான் வைத்து விட்டதால், இந்திரஜித் ஜாதகத்தில் சனி பகவான் 12ம் இடத்தில் காணப்பட்டார், மற்ற கிரகங்கள் எல்லம் 11ம் இடத்தில் இருந்தன. இராவணன் குழந்தை பிறந்ததும் ஜாதகத்தைக் கணித்துப்பார்த்தான், சனி 12ம் இடத்தில் காணப்பட்டார். தன் எண்ணம் நிறைவேறாத காரணத்தால் கடும் சினம் கொண்டான். உடனே 12ம் இடத்தில் காலை வைத்த சனி பகவானின் இடது காலை வெட்டுமாறு கட்டளையிட்டான். இது தான் சனிபகவான் முடமான கதை. ஆகவேதான் அவர் நொண்டி நொண்டி மெதுவாக 30 ஆண்டுகளில் வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வருகிறார்.

இதுவரை நீங்கள் 27 நட்சத்திரங்கள் யாவை, நவக்கிரகங்கள் யாவை, அவை வான் மண்டலத்தை ஒரு முறை சுற்றி வரும் காலம் பற்றி தெரிந்துகொண்டீர்கள். நாம் முதலில் ஜாதகத்தை எப்படிக் கணிப்பது என சொல்லிக் கொடுக்க இருக்கிறோம். அதற்குப்பின் எப்படி பலன் சொல்வது என்பது விளக்குவோம். ஜாதகக் கணிதம் செய்ய ஓரளவிற்குக் கணிதம் தெரிய வேண்டும். கணிதம் என்றால் எதோ கல்லூரியிலே பயிலுகிற கணிதமோ என அஞ்ச வேண்டாம். கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்ற அடிப்படைக் கணிதம் தெரிந்தால் போதும்.

நாம் முன்பு கூறியது போல் மிகக் குறைந்த கல்வியறிவு உள்ளவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு மிக எளிய முறையில் எழுதி இருக்கிறோம். அத்தோடு நமது புராணங்களில் வருகின்ற உபகதைகளையும் சேர்த்துக் கொண்டால் புரிந்து கொள்வது மிக எளிதாக இருக்கும்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:22 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 15


சென்ற பாடத்தில் ஆயுள் எப்படிக் கணிப்பது என்று ஓரளவிற்குத் தெரிந்து கொண்டீர்கள். நாம் எப்படிப் பார்ப்பது என ஓரளவிற்குத்தான் சொல்லிக் கொடுத்தோம். நீங்கள் பல ஜாதகங்களைப் பார்த்து அவர்கள் எப்போது மரணமடைந்தார்கள் என்று பார்த்து அப்போது என்ன தசா, புக்தி என்று பார்க்க வேண்டும். ஆயிரம்பேரைக் கொன்ற வன் அரை வைத்தியன் என்பார்கள். அதே போல் நாமும் பல ஜாதகங்களைப் பார்த்துப் பழகினால்தான் பலன்களைக் கூறமுடியும். நாம் ஏற்கனவே எழுதி இருக்கிறோம், ஒரு வீட்டைப் பற்றிக் கூறவேண்டுமானால் அந்த வீட்டிலே சுப கிரகங்கள் இருக்கின்றார்களா அல்லது பாப கிரகங்கள் இருக்கின்றார்களா, அந்த வீட்டின் அதிபர் எங்கு இருக்கிறார், அந்த வீட்டை யார் பார்க்கிறார்கள், அந்த வீட்டின் அதிபர் யாருடன் சேர்ந்திருக்கிறார் என்று பார்த்துத்தான் பலன் சொல்ல முடியும். ஜாதகம் கணிப்பது எளிது. வெறும் கணக்குத்தான். ஆனால் பலன் சொல்லுவது இருக்கிறதே அது அவ்வளவு எளிது இல்லை. எளிதாக இருந்தால் எல்லோரும் ஜோதிடராக முடியும். நாம் இன்னும் முதல் வீடான இலக்கினத்தை இன்னும் முடிக்க வில்லை.

இலக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் இலக்கினாதிபதி நல்ல கிரகத்துடன் சேர்ந்து இருக்கலாம். நல்லத்தையே செய்யும். இலக்கினாதிபதி ஒருபாப கிரகத்துடன் சேர்ந்து இருந்து, இலக்கினத்தில் ராகு இருப்பாரேயாகில் அவருக்கு தாழ்மை உணர்வு இருக்கும். சூரியன், சனி, செவ்வாய் ஆகியவை வரண்ட கிரகங்களாகும். இவை ஒருவரின் இலக்கினத்திலே இருப்பாரேயாகில் அவர் சற்று ஒல்லியான உருவம் கொண்டவராக இருப்பர். ஒருவரின் இலக்கினம் சரராசியாக இருந்து, அதன் அதிபர் சர ராசியில் இருந்தால் அவர் அதிகம் வெளியூர்ப்பயணம் செய்து பணம் சம்பாதிப்பார் எனக் கொள்ளலாம். இலக்கினம் சரராசியாகி, நவாம்ச இலக்கினமும் சர ராசியாகி, நவாம்சத்தில் இலக்கினாதிபதி சர இலக்கினத்தில் இருப்பாரே யாகில் அவரும் வெளியூர்ப் பயணம் மேற்கொண்டு ஜீவனம் செய்வார் எனக் கொள்ளலாம். ஒருவருக்கு இலக்கினத்தில் பல பாப கிரகங்கள் இருப்பாரேயாகில் அவர் வாழ்க்கையில் பல துக்ககரமான சம்பவங்களைச் சந்திக்க வேண்டியது இருக்கும். இலக்கினத்திற்கு இருபுறமும் ராகுவும், சனியும் அதாவது 12, 2 ஸ்தானங்களில் இருப்பார்களேயாகில் அவர்களுக்கு திருட்டு பயம் இருக்கும்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:22 am

அதேபோல் ராகுவும், செவ்வாயும் அல்லது சனியும் செவ்வாயும் இலக்கினத்திற்கு 2, 12 வீடுகளில் இருந்தால் திருட்டு பயம் இருக்கும். ஒருவரின் உறுவ அமைப்பைப் பற்றிப் பார்க்கும்போது சூரியன் இலக்கினத்தில் இருந்தால் நல்ல உடல் அமைப்பைக் கொடுப்பார். சந்திரன் இருந்தால் உடல் அமைப்பு நல்ல விகிதத்தில் இருக்கும். சிலரைப் பார்த்து இருப்பீர்கள். அவர்களுக்கு கை, அல்லது கால் நீண்டு இருக்கும். அல்லது முகம் மட்டும் நீண்டு இருக்கும். சந்திரன் இலக்கினத்தில் இருப்பாரேயாகில் உடல் அமைப்பு சரியாக இருக்கும். செவ்வாய் இருந்தால் நல்ல ஆரோக்கியமான, உறுதியான உஷ்ணப் பாங்கான உடல் அமைப்பைக் கொடுப்பார். புதனும் இலக்கினத்தில் இருந்தால் நல்ல உறுவமைப்பைக் கொடுப்பார். குரு இருப்பாரேயாகில் நல்ல மதிப்பை உண்டாக்கும் வகையில் உறுவ அமைப்பைக் கொடுப்பார். சுக்கிரன் இருப்பாரேயாகில் கவர்ச்சிகரமான உறுவ அமைப்பைக் கொடுப்பார். ஆனால் அந்த உறுவமைப்பில் பெண்மை கலந்து இருக்கும். சனி இருப்பாரேயாகில் நல்ல கறுமையான கூந்தலைக் கொடுப்பார். குருகிய மார்பு அமைப்புடன் சிறிது சோம்பேரித்தனமாக இருப்பார்.

ஒருவரின் மனதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சந்திரனின் நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும். சந்திரன்தான் மனதுக்குக் காரகம் வகிப்பவர். சந்திரன் சுபகிரகங்களான புதன், குரு, சுக்கிரனுடன் சேர்ந்து இருக்கலாம். புதனுடன் சேர்ந்து இருந்தால் நியாய உணர்வுடன் இருப்பர். நியாயத்தைப் பேசுபராக இருப்பர். புதன் அடிக்கடி மாறும் குணமுள்ளவரதலால் சந்திரனுடன் சேரும்போது இவர் தன் எண்ணங்களை மாற்றக் கூடியவராக இருப்பர். சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் எப்போதும் கவலை கொண்டவராக இருப்பார். செவ்வாயும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் பெண்களாக இருப்பின் மாதவிலக்கு சம்மந்தமான பிரச்சனை இருக்கும். அவர்கள் மன உறுதியுடனும் தைரியத்துடனும் இருப்பர். சந்திரனும், ராகுவும் சேர்ந்து இருந்தால் அதுவும் இலக்கினத்தில் இருந்தால் Hysteria என்னும் மன நோய் இருக்கும். சந்திரனும் குருவும் சேர்ந்து இருந்தால் நல்ல எண்ணங்களோடு மன உறுதியுடன் இருப்பர். பொதுவாக சந்திரனும் ராகுவும், சனியுமோ அல்லது செவ்வாயுமோ இருக்குமேயாகில் அவர்கள் நிச்சயமாக ஒரு emotional Character ஆக இருப்பர். பாப கிரகங்கள் சந்திரனுடன் சேராமல் இருப்பது நல்லது. சந்திரனும் சூரியனும் சேர்ந்து இருந்தால் மிகவும் வலுவான மனதைக் கொண்டவராக இருப்பார். அதே சமயம் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராகவும் இருப்பார். அம்மாவாசை அன்றுதான் சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருக்கும். அப்போது பிறந்தவர் பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் கொண்டவராக இருப்பர்.

ஒருவரின் ஜாதகத்தில் ராகுவோ அல்லது கேதுவோ இலக்கினத்தில் இருக்குமேயாகில் அவர்களுக்கு நரம்பு சம்மந்தமான தொந்தரவுகளிருக்கும். சூரியன் உடலுக்கும், சந்திரன் மனதிற்கும் காரகம் வகிப்பவர்கள் என்று நாம் கூறி இருக்கிறோம். சூரியனோ அல்லது இலக்கினமோ வர்க்கோத்தமத்தில் இருந்தால் முதல் வீடு பலம் பொருந்தியதாகக் கருதப் படும். வர்க்கோத்தமம் என்றால் என்ன? வர்க்கோத்தமம் என்பது ராசியிலும், நவாம்சத்திலும் ஒரு கிரகமோ அல்லது வீடோ ஒரே இடத்தில் இருப்பது. ஒருவருக்கு சூரியன் ராசியில் மேஷத்தில் இருக்கிறார் எனக் கொள்வோம். நவாம்சத்திலும் மேஷத்தில் சூரியன் இருப்பாரேயாகில் அது வர்க்கோத்தமம் எனப்படும். அதாவது சூரியன் ராசியிலும், நவாம்சத்திலும் மேஷத்தில் இருக்கிறார். இது சூரியனுக்கு மட்டுமல்ல எந்த கிரகமாக இருந்தாலும் ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்தால் அது வர்கோத்தமம் எனப்படும். இலக்கினம் வர்கோத்தமாக இருந்தால் ஆயுள் தீர்க்கம் என்று கூறலாம். சூரியன் வர்கோத்தமத்தில் இருந்தால் அவர் உடல் வலு உள்ளவராகக் கருதலாம்.

பொதுவாக நல்ல கிரகங்கள் இலக்கினத்தில் இருப்பது நல்லது. பாப கிரகங்கள் இருப்பது அவ்வளவு நல்லது இல்லை. நாம் இத்துடன் முதல் இலக்கின பாவத்தை முடித்துக் கொள்வோம். இனி 2-ம் பாவத்தைப் பற்றிப் பார்ப்போம்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:22 am

இரண்டாம் வீட்டை அதன் அதிபதியைக் கொண்டும், அதில் இருக்கும் கிரகங்களை வைத்தும், அந்த வீட்டைப் பார்க்கும் கிரகங்களை வைத்தும் பலன் கூறவேண்டும். 2-ம் வீட்டை வைத்து எந்தெந்த பலங்களைக் கூறலாம் என்பதைப் பார்ப்போம். 2-ம் வீடு குடும்பத்தைக் குறிக்கிறது. குடும்பத்தில் அமைதி இருக்குமா அல்லது குழப்பம் இருக்குமா என்பதை இந்த வீட்டை வைத்துத்தான் சொல்ல வேண்டும். ஆகவே இதை குடும்பஸ்தானம் என்று நாம் குறிப்பிடுகிறோம். ஒருவருக்குக் குழந்தை பிறக்கிறது எனக் கொள்வோம். அதாவது அந்த வீட்டில் ஒரு நபர் கூடி இருக்கிறார் என்றுதானே இதற்குப் பொருள். அதனால்தான் குழந்தை பிறப்பை இந்த வீட்டை வைத்துக் கூறுகிறோம். அடுத்ததாக இதை தனஸ்தானம் என்று கூறுவார்கள். அதாவது ஒருவருக்குப் பணவரவு நன்றாக இருக்குமா அல்லது சொற்பமாக இருக்குமா என்பதையும் இந்த வீட்டை வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவரின் கண்பார்வை நன்றக இருக்குமா அல்லது பார்வையில் கோளாறு இருக்குமா என்பதையும் இந்த வீட்டையும் வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவரின் வாக்கு வன்மையையும் இதை வைத்துத்தான் கூறவேண்டும். ஒருவர் சிரிக்கச், சிரிக்கப் பேசுவர். ஒருவர் எப்போதுமே ஒருவரையும் மதியாமல் பேசுவர். சிலர் திக்கித்திக்கிப் பேசுவர். ஆக ஒருவரின் நாக்கு வன்மையை இதைவைத்துத்தான் கூறவேண்டும். ஒருவரின் வங்கியில் உள்ள பணம், Liquid Cash என்று சொல்லக் கூடிய கையிருப்புப் பணம், நகைகள், Investments ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த வீடுதான். ஒருவருக்குக் கல்யாணம் ஆகவில்லையா? ஏன் என்பதையும் நாம் இந்த இரண்டாம் வீட்டை வைத்துத்தான் ஆராய வேண்டும். இதைத்தவிர வேறொன்றும் கிடையாதா? உண்டு. இளைய சகோதரத்தின் மரணம், இளைய சகோதரத்தின் வீண் செலவுகள் ஆகியவற்றையும் கூறலாம். எப்படி? 3-ம் வீடு இளைய சகோதரத்தைக் குறிக்கிறது. 3-ம் வீட்டிற்குப் பன்னிரெண்டாம் வீடு 2-ம் வீடு அல்லவா? ஆக 2-ம் வீடானது இளைய சகோதரத்தின் மரணம், வீண் செலவுகள், ஆகியவற்றையும் இந்த வீடு குறிக்கிறது.

4-ம் வீடு தாயாரைக் குறிக்கிறது. 4ம் வீட்டிற்குப் 11-ம் வீடு 2-ம் வீடு அல்லவா? ஆக தாயாரின் லாபங்களையும் இது குறிக்கிற்து. ஒருவரின் 7-ம் வீடு கணவன் அல்லது மனைவியைக் குறிக்கிறது. 7-ம் வீட்டிற்கு 8-ம் வீடு 2-ம் வீடல்லவா? ஒருவருக்குக் கன்னியா இலக்கினம் எனக் கொள்ளுங்கள். இவருக்கு 7-ம் வீடு மீனம். இது இவருடைய மனைவியைக் குறிக்கிறது. 7-ம் வீட்டிற்க்கு 8-ம் வீடு எது? துலாம் அல்லவா? இந்த 8-ம் வீட்டில் குரு இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். அதாவது ஜாதகரின் தனஸ்தானத்தில் குரு இருக்கிறார். குரு எதையும் குறைவில்லாமல் கொடுப்பவர். ஆக இவருக்குப் பணம் குறைவில்லாமல் இருக்கும் எனக் கொள்ளலாம். இவருக்குக் குழந்தை பாக்கியமும் குறைவில்லாமல் இருக்கும் எனவும் கொள்ளலாம். இவரின் மனைவிக்கு இது 8-ம் இடம் என்றும் கூறினோமல்லவா? 8-ம் இடம் என்ன? ஆயுள் ஸ்தானம். ஆக இந்த 8-ம் இடத்தில் குரு இருப்பதால் இவரின் மனைவிக்கு நீண்ட ஆயுள் இருக்குமெனக் கூறலாம். இவ்வாறாக ஒரு வீட்டை வைத்து ஜாதகர் மட்டுமில்லாது மற்றவரின் பலன்களையும் கூறமுடியும். 2-ம் வீட்டை வைத்து ஒருவரின் மூத்த சகோதரத்தின் வீடு, வாசல் ஆகியவற்றைக் கூறமுடியும். மூத்த சகோதரத்தைக் குறிப்பது 11-ம் வீடு. 11-ம் வீட்டிற்கு 4-ம் வீடு ஜாதகரின் 2-ம் வீடல்லவா? ஆக 2-ம் வீட்டை வைத்து ஜாதகரின் ஸ்திரசொத்துக்கள், கல்வி ஆகையவற்றயும் கூறமுடியும்.

இந்த 2-ம் வீட்டை வரும் பாடங்களில் விரிவாகப் பார்ப்போம்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:23 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 16


சென்ற பாடத்தில் 2-ம் வீட்டை வைத்து என்னென்ன பலன் சொல்லலாம் என்பதைப் பார்த்தோம். இப்போது எப்படிப் பலன் சொல்வது என்று பார்ப்போம். ஒருவரின் பொருளாதாரம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள 2-ம் வீடு, 6-ம் வீடு, 10ம் வீடு 11-ம் வீடு ஆகியவற்றை கவனமாகப் பார்க்க வேண்டும். 2-ம் வீடு ஒருவரின் தனஸ்தானம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறோம். 6-ம் வீட்டை ஏன் பார்க்க வேண்டும்? 6-ம் வீடு என்பது நாம் ஒருவரின் கீழ் வேலை செய்யும் அடிமைத் தொழிலைக் குறிக்கிறது. சிலர் 6-ம் வீடு என்பது ரோகம், ரணம், கடன் என்று மட்டும் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது தவறு. 6-ம் வீடு நாம் செய்யும் அடிமைத் தொழிலையும் குறிக்கிறது. நாம் செய்யும் வேலையின் மூலம் வருவதுதானே நமது வருமானம். ஆக 6-ம் வீட்டையும் பார்த்தால்தானே நம் வருமானம் தெரியும். ஆக 6-ம் வீட்டையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 10-ம் வீடு என்பது ஜீவன ஸ்தானம் ஆகும். ஜீவனம் என்பது ஒருவருக்கு வியாபாரமாக இருக்கலாம். மற்றொருவருக்கு உத்தியோகமாக இருக்கலாம். ஆக ஜீவனம் என்பது உத்தியோகத்தையோ அல்லது வியாபாரத்தையோ குறிக்கும் பொதுப்படையானவார்த்தை யாகும். ஆக ஒருவரின் பணநிலையைத் தீர்மானம் செய்ய 10-ம் வீட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 11-ம் வீடு என்பது லாபஸ்தானம் ஆகும். நாம் சம்பாதித்து செலவு செய்தது போக மிச்சம்தான் லாபம் என்பது. இதைக் குறிப்பதுதான் லாபஸ்தானம் ஆகும். ஆக இந்த 4-வீடுகளையும் கவனமாக ஆராய்ந்தால்தான் ஒருவரின் பணநிலையை நாம் கூறமுடியும்.

இயற்கையிலேயே சுப கிரகங்களான குரு, சுக்கிரன், புதன், வளர் பிறைச்சந்திரன் ஆகியவை 2-ம் வீட்டில் இருப்பது நல்லது. பொருளாதாரம் நன்றாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும். சனி, ராகு, கேது போன்ற பாப கிரகங்கள் இருப்பது அவ்வளவு நல்லது இல்லை. பணவசதி குறைவாக இருக்கும். 2-ம் வீட்டின் அதிபதி உச்சமாகவோ அல்லது சொந்த வீட்டிலோ இருப்பது தாராளமான பொருளாதாரத்தைக் குறிக்கும். 2-ம் வீட்டை அதன் அதிபதியோ அல்லது மேற் கூறிய சுப கிரகங்களோ பார்த்தாலும் பொருளாதாரம் நன்றாக இருக்கும். 2-ம் வீட்டில் செவ்வாயோ அல்லது கேதுவோ இருப்பவர்கள் சற்றுக் கடினமான வார்த்தைகளால் பேசுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் பேச்சு மற்றவர்கள் மனதைப் புண்படுத்தும். 8-ம் வீட்டின் அதிபதி தனஸ்தானமான 2-ம் வீட்டில் இருந்தால் அவர்கள் பண நிலைமை நன்றாக இருக்காது. அதே போன்று 12-ம் வீட்டின் அதிபதியும் 2-ம் வீட்டில் இருந்தால் அவர்கள் பண நிலைமையும் நன்றாக இருக்காது.

இரண்டாம் வீட்டின் அதிபதி எந்தெந்த வீட்டில் இருந்தால் என்னென்ன பலன்கள் என்று பார்ப்போம். இலக்கினத்தில் இருந்தால் அவர் சொந்த முயற்சியில் பணம் சம்பாதிப்பார். அவருடன் 9-ம் வீட்டதிபதியோ அல்லது சூரியனோ இருப்பாரேயாகில் அவருக்குப் பிதுராஜித சொத்துக்கள் கிடைக்கும். 2-ம் வீட்டதிபதி சொந்த வீட்டிலேயே இருப்பாரேயாகில் பண நிலை சரளமாக இருக்கும். 3-ம் வீட்டிலிருந்தால் இளைய சகோதரத்திட மிருந்து பண உதவி கிட்டும். 3-ம் இடம் இளைய சகோதரத்தைக் குறிப்பது அல்லவா? 4-ம் இடத்திலிருந்தால் என்ன பலன்? 4-ம் வீடு வாகனங்களைக் குறிக்கிறது அல்லவா? வீடு, வாசல், தாய் வழி சொந்தங்கள் ஆகியவற்றையும் குறிக்கிறது அல்லவா? ஆகவே வாகனங்கள் மூலமாகவும், வீடு, வாசல் வாங்கி, விற்றுத் தொழில் செய்தும் பணம் சம்பாதிப்பர். 5-ம் வீடு என்பது கலைகள், Speculation துறைகள் ஆகியவற்றைக் குறிப்பது ஆகும். இதில் 2-ம் வீட்டிற்குடையவர் இருந்தால் கலைகள் மூலமாகப் பணம் சம்பாதிக்க முடியும். லாட்டரி, ரேஸ், போன்றவற்றிலிருந்தும் பணம் இயலும். அதாவது சிரமமின்றி பணம் சம்பாதிக்க இயலும். 6-ம் இடம் என்பது உத்தியோகத்தைக் குறிக்கிறது. அதில் 2-ம் வீட்டதிபர் இருந்தால் அவர் உத்தியோகம் செய்து பணம் சம்பாதிக்க முடியம் என்று கூறலாம். என்ன! எல்லோருமே உத்தியோகம் செய்துதானே பணம் சம்பாதிக்கிறார்கள் என்று நீங்கள் கூறலாம்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:23 am

ஒருவர் உங்களிடம் ஒருஜாதகத்தைக் காட்டி நான் வியாபாரம் செய்வேனா அல்லது வேலைக்குப் போவேனா? என்று கேட்க்கிறார் எனக் கொள்வோம். 10-ம் இடம் ஜீவன ஸ்தானம் அல்லவா? 10-ம் அதிபதி 6-ம் வீட்டிலோ அல்லது 6-ம் வீட்டின் அதிபதியுடனோ சேர்ந்து இருக்கிறார் எனக் கொள்வோம். நீங்கள் தைரியமாக அவர் வேலைக்குப் போவார் எனச் சொல்லலாம். அதேபோன்று 2-ம் வீட்டு அதிபர் 6-ம் வீட்டில் இருந்தாலும் உங்களுக்கு உத்தியோகத்தின் மூலமாகப் பணவரவு கிடைக்கும் என்றும் கூறலாம். 2-ம் வீட்டு அதிபர் 7-ம் வீட்டில் இருந்தால் அன்னிய நாட்டின் மூலமாகப் பணம் வரும் எனக்கொள்ளலாம்.8-ம் வீட்டில் 2-ம் வீட்டு அதிபர் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல. பணவிரயம் ஆகும் எனக் கொள்ளலாம். 9-ம் வீடு வெளிநாட்டுப் பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? அந்நியத் தொடர்புமூலமாப் பணம் கிடைக்கும் எனக் கொள்ளலாம். 11-வது லாபஸ்தானம் அல்லவா? அங்கு 2-ம் வீட்டு அதிபர் இருப்பது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். பணப் பெருக்கு இருக்கும். 12-ம் வீடு விரையஸ்தானம் என்று சொல்லுவார்கள். அந்த வீட்டை முதலீடு செய்யும் வீடு எனவும் கூறலாம். அதாவது ஒருவர் வீடு வாங்குகிறார் எனக் கொள்வோம். அது ஒரு முதலீடுதானே. 12-ம் வீட்டிலுள்ள கிரகத்தின் தசாபுக்திகளிலோ அல்லது 12-ம் வீட்டு அதிபரின் தசா, புக்தி களிலோ ஒருவர் வீடு வாங்க முடியும். ஏனெனில் 12-ம் வீடு முதலீட்டையும் குறிக்கும். 2-ம் அதிபர் 12-ல் இருந்தால் சிலசமயம் பணவிரயமோ அல்லது முதலீடு செய்யும் செலவோ இருக்கக் கூடும்.

2-ம்வீட்டில் சூரியனும், சந்திரனும் சேர்நது இருந்தால் கண் பார்வையில் குறை இருக்கும். 2-ம் வீட்டு அதிபர் 6 அல்லது 8 அல்லது 12-ம் வீட்டில் இருந்தாலும் கண்பார்வையில் தொந்தரவு இருக்கும். 2-ம் அதிபதி 8-ல் இருந்து அங்கு சூரியனும் இருந்தால் அரசாங்கத்தின் மூலமாகப் பண விரயம் இருக்கும். கிரகங்கள் 2-ம் வீட்டில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.

சூரியன் : 2-ம் வீட்டில் சூரியன் இருப்பது அவ்வளவு நல்லது அல்ல: கஷ்டத்தின்பேரில்தான் பணம் சம்பாதிக்க முடியும். நல்ல கிரகங்கள் பார்வை இருந்தால்தான் பண வரவு சரளமாக இருக்கும்.

சந்திரன் : பெண்கள் மூலமாகப் பணவரவு இருக்கும். சந்திரன் பெண்கிரகம் அல்லவா? பணவரவு ஒரே மாதிரியாக இருக்காது. உயர்வும், தாழ்வும் இருந்து வரும்.

செவ்வாய் : இவர்கள் சண்டைக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் பேச்சுத் திறமை இருக்கும்.

புதன் : ஏஜென்சி தொழில் மூலமாகவோ, வியாபாரம் மூலமாகவோ பணம் சம்பாதிப்பர். சிலர் தான் கற்ற கல்வியைக் கொண்டு பணம் சம்பாதிப்பர். சிலருக்கு இரட்டை வருமானம் உண்டு; ஏனெனில் புத ஒரு இரட்டைக் கிரகம்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:24 am

குரு : பணப் புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பம் விருத்தியாகும். பொதுவாக 2-ம் வீட்டில் குரு நன்மையையே செய்யும்.

சுக்கிரன் : பணப் புழக்கம் நன்றாக இருக்கும். மிக இனிமையாகப் பேசுவார். சிலருக்குப் பெண்களாலும், வாகனங்களாலும் வருமானம் உண்டு.

சனி : பணப்புழக்கம் மிகக் குறைவாக இருக்கும்.வேலைக்கேற்ற ஊதியம் கிட்டாது. குடும்ப வாழ்க்கை சுகமாக இருக்காது. பலருடன் கலந்து பழகத்தெரியாதவர்.

ராகு : குடும்பத்தில் குழப்பம் இருக்கும். கண்பார்வையில் கோளாறு ஏற்படும். ராகுவுடன் நல்ல கிரகங்கள் சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோதான் நன்மை ஏற்படும்.

கேது : கடுமையகப் பேசக் கூடியவர். பண நஷ்டம் ஏற்படக் கூடும்.

2-ம் வீட்டைப் பற்றி " ஜாதகதத்துவத்தில்" என்ன சொல்லி இருக்கிறது எனப்

பார்ப்போம். பணக்காரன் ஆகும் யோகம்:-

1. இலக்கினாதிபதியும் லாபாதிபதியும் சேர்ந்து தனஸ்தானத்தில் இருத்தல்.

2. 2-ம் வீட்டு அதிபரும், 10-ம் வீட்டு அதிபரும் சேர்ந்து கேந்திரஸ்தானத்தில் இருத்தல்.

3. 10-ம் வீட்டு அதிபரும், 11-ம் வீட்டு அதிபரும் சேர்ந்து இருத்தல்.

4. ஒரு ஜாதகத்தில் 4-கிரகங்கள் சொந்த வீட்டில் இருத்தல்.

5. 2-ம் வீட்டிற்குடையவன் 9, 10, 11- வது வீட்டில் இருத்தல்.

6. சந்திரனும், செவ்வாயும் சேர்ந்து ஒரே வீட்டில் இருத்தல். இதைச் சந்திரமங்கள யோகம் என்பார்கள்.

7. கேந்திரஸ்தானம் என்று சொல்லுகின்ற 1, 4, 7, 10-ம் வீடுகளில் சுபகிரகங்கள் இருத்தல்.

8. குரு தன் சொந்த வீட்டிலும், 5-ம் வீட்டில் சந்திரனும் இருத்தல்.

9. சூரியன் சிம்மத்திலும், குருவும், செவ்வாயும் 1-ம் வீட்டிலும் இருத்தல்.

10. கீழே புதையல் கிடைப்பதற்கான யோகத்தைக் கீழே கூறி இருக்கிறார்.

11-ம் வீட்டு அதிபதி இலக்கினத்திலும், இலக்கினாதிபதி 2-ம் வீட்டிலும், 2-ம் வீட்டு அதிபதி 11-ம் வீட்டிலும் இருந்தால் புதையல் கிடைக்கும். (இந்தக் காலத்தில் புதையல் கிடைப்பது என்பது அரிது. லாட்டரி, ரேஸ் போன்ற வற்றிலிருந்து பணவரவு இருக்குமெனக் கொள்ளலாம்)

இவ்வாறாக ஜாதக தத்துவம் பல்வேறு கிரக நிலைகளைக் கூறி இருக்கிறது. இரண்டாம் இடத்தை வாக்குஸ்தானம் என்று கூறி இருக்கிறோம் அல்லவா? 2-ம் வீடு ஊமை ராசிகளாகி (கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை ஊமை ராசிகளாகும்) அதில் கேது இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் ஊமையாகப் போகக் கூடிய வாய்ப்பு உண்டு. 2-ம் வீட்டில் சந்திரன் இருந்து புதன் பார்ப்பாரேயாகில் அந்த ஜாதகர் மிகவும் தெளிவாகப் பேசுவார். சுக்கிரன் பார்ப்பாரேயாகில் சினிமா, டிராமா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களையும், மற்றும் பால் உறவினைப்பற்றியும் அதிகமாகப் பேசுவர். சனி பார்த்தாரேயாகில் சொற்பமாகப் பேசுவார். சூரியன் பார்த்தால் மிகவும் கண்ணியமாகப் பேசுவார்.

2-ம் இடத்தைவைத்து ஒருவரின் 2-ம் கல்யாணத்தைப் பற்றிக் கூறவேண்டும். திருமணத்தைப் பற்றி எழுதும்போது நாம் 2-ம் கல்யாணத்தைப் பற்றி எழுதுவோம்.

மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 4:24 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 17


இதுவரையில் 2-ம் வீட்டைப் பற்றிப் பார்த்தோம். இந்தப் பாடத்தில் 3-ம் வீட்டைப் பற்றிப் பார்ப்போம். 3-ம் வீட்டை வைத்து என்னவெல்லாம் கூறலாம்?

மூன்றாம் வீட்டை வைத்து ஒருவர் தைரியமானவரா, இல்லையா என்றும் கூறலாம். ஆகவே இந்த வீட்டை தைரிய ஸ்தானம் என்று கூறுவர். ஒருவரின் வலது காதையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். காது கேட்குமா அல்லது காதில் ஏதாவது தொந்தரவு இருக்குமா என்றும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவரின் இளைய சகோதரத்தையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவருக்குப் படிப்பதற்கு ஆசை இருக்கிறதா அல்லது இல்லையா என்பதையும் இந்த வீட்டை வைத்துக் கூறலாம். ஒருவருக்குப் 10-ம் வீட்டதிபர் 3-ம் வீட்டிலோ அல்லது 3-ம் வீட்டதிபர் 10-ம் வீட்டிலோ அல்லது 3-ம் வீட்டதிபரும், 10-ம் வீட்டதிபரும் சேர்ந்திருந்தாலும் ஒருவர் போலீஸ் வேலைக்கோ அல்லது ராணுவத்திலோ வேலை செய்வார் என்று கூறலாம். ஏன்? 3-ம் வீடு தைரியத்தைக் குறிக்கிறது. 10-ம் வீடு ஜீவன ஸ்தானம் அல்லவா? போலீஸ், ராணுவம் இவற்றிற்கு மிக முக்கியமானது தைரியம் அல்லவா? ஆக இந்த சேர்க்கை இத்தகைய வேலையைக் குறிக்கிறது. செவ்வாய் கிரகம் தைரியத்திற்குக் காரகம் வகிப்பவர். அவரும் 10ம் வீட்டிலோ அல்லது 10-ம் வீட்டதிபருடன் சேர்ந்தோ அல்லது இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலோ போலீஸ் அல்லது ராணுவ வேலைக்குப் போவார் என்று கூறலாம். 3-ம் வீடு குறுகிய பிரயாணத்தைக் குறிக்கிறது. ஒருவர் சென்னையிலிருந்து திருச்சிக்குப் போகிறார் எனக் கொள்ளுங்கள். இது ஒரு குறுகிய பயணம். இந்தப் பயணத்தைக் குறிப்பது 3-ம் வீடு. ஒருவர் சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்கிறார் எனக்கொள்ளுங்கள். இது நீண்ட பயணம் அல்லவா? இந்த நீண்ட பயணத்தைக் குறிப்பது 9-ம் வீடு. ஆக 3-ம் வீடு Short Journeys என்று கூறப்படுகிற குறுகிய பயணத்தையும், 9-ம் வீடு Long journey என்று கூறப் படுகிற நீண்ட பயணத்தையும் குறிக்கும்.

என் நண்பர் ஒருவர் இருந்தார். அவர் ஒரு வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு வங்கியில் Inspection செய்யக் கூடிய வேலை. அது சம்மந்தமாக அவர் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டியது இருக்கும். அவர் என்னிடம் "நான் எப்போது உள்ளூரிலேயே இருப்பேன்? அடிக்கடி வெளியூர் செல்ல முடியவில்லை" என்று கேட்டார். அவர் ஜாதகத்தைப் பார்த்த போது அப்போது நடக்கும் தசா, புக்திகள் 3-ம் வீட்டைக் குறிப்பனவாக இருந்தது. அதாவது அவர் மிதுன இலக்கினம். 3-க்குடைய சூரியனின் புக்தி நடந்து கொண்டிருந்தது. அடுத்த புக்தியின் அதிபதியான சந்திரன் 9-ம் வீட்டில் இருந்தார். அதற்கும் அடுத்த செவ்வாயானவர் 4-ம் வீட்டில் இருந்தார். நாம் "தற்போது சூரியனின் புக்தி நடந்து கொண்டிருக் கிறது. சூரியன் 3-ம் வீட்டிற்கதிபதி. ஆகவே வெளியூர்ப் பயணத்தைத் தவிர்க்க முடியாது. தற்போது பக்கத்திலுள்ள ஊர்களுக்குச் சென்று கொண்டு இருக்கிறீர்கள். இந்த சூரியன் புக்தி முடிந்து சந்திர புக்தியின்போது இன்னும் தூரத்திலுள்ள ஊர்களுக்குச் சென்றுவருவீகள். அடுத்தபுக்தியான செவ்வாய் 4-ம் வீட்டில் இருக்கிறார். அப்போதுதான் நீங்கள் உள்ளூரிலேயே தங்கி இருக்க முடியும்" என்று கூறினோம். அதன்படியே சூரியபுக்தியின் போது தமிழ் நாட்டிற்குள் பயணம் செய்து கொண்டிருந்த அவர் சந்திர புக்தியின்போது பக்கத்திலுள்ள அண்டை மாநிலங்களுக்கெல்லாம் பயணம் செய்ய ஆரம்பித்தார். சந்திரன் 9-ம் வீட்டில் இருப்பதால் நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியது இருந்தது.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 17, 2014 4:00 am

4-ம் வீடு என்பது தற்போது குடியிருக்கும் ஊரைக் குறிக்கும். ஆகவே செவ்வாய் புக்தியில் பழையபடி சொந்த ஊரிலேயே வேலைசெய்யும்படியாக மாற்றல் ஆகிவிட்டது. ஆக இப்போது 3-ம் வீடு எப்படி பயணத்தைக் கொடுக்கிறது என்பது விளங்கி இருக்கும். 3-ம் இடம் என்பது தைரியஸ்தானம் அல்லவா? 3-ல் சனி இருந்தால் அவர் மிக நிதானமாகச் செயல்படுவார். அதே இடத்தில் செவ்வாய் இருந்தால் மிக துணிச்சலாக நிதானமிழந்து அவசரப்பட்டு செயல் படுவார்.

இளைய சகோதரம், பக்கத்து வீட்டுக்காரர்கள், ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த 3-ம் வீடுதான். கடிதப் போக்குவரத்து, எல்லாவிதமான செய்திகள், ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த 3-ம் வீடுதான். உங்களுக்கும் இளைய சகோதரத்திற்கும் நல்லுரவு இருக்குமா அல்லது இருக்காதா என்பதையும் 3-ம் வீட்டை வைத்துச் சொல்லலாம். 3-ம் வீட்டில் சனி இருப்பாரேயாகில் உங்களுக்கும் உங்கள் சகோதரத்திற்கும் திருப்தியான உறவு இருக்காது; குரு இருந்தால் நல்லுறவு; செவ்வாய் இருந்தால் சண்டை; இவ்வாறாகப் பலன் கூறலாம். 3-ம் வீடு ஏஜென்சித் தொழிலையும் குறிக்கும். 3-ம்வீடும் 2-ம்வீடான தனஸ்தானத்துடனோ, அல்லது 6-ம் வீடான தொழில் ஸ்தானத்துடனோ, அல்லது 10ம் வீடான ஜீவனஸ்தானத்துடனோ சம்மநதப்பட்டு இருந்தால் ஒருவர் Agency தொழில், Broker ஆகிய தொழில் செய்வர். 3-ம் வீட்டில் ஒருவருக்கு கேது இருப்பாரேயாகில் அவரை நாரதர் என்று கூறலாம். ஏனெனில் அவரால் அவர் உண்டு அவர் வேலையுண்டு என்று இருக்க முடியாது.

நீங்கள் ஒரு வீட்டில் இருக்கிறீர்கள். அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டுமென்றால் 3-ம் வீட்டின் தசை, அல்லது புக்தி காலங்களில்தான் செய்ய முடியும். 4-ம் வீடு என்பது தற்போது குடிருக்கும் வீட்டைக் குறிக்கிறது. 4-ம் வீட்டிற்குப் 12-ம் வீடு 3-ம் வீடல்லவா? ஆக 3ம் வீட்டக் குறிக்கும் தசை அல்லது புக்தியின் போதுதான் நாம் வேறு வீடு குடி செல்ல முடியும்.

உடல் உறுப்புக்களில் காது, கை, தொண்டை, தோள்பட்டை ஆகியவற்றைக் குறிப்பதும் இந்த 3-ம் வீடுதான். 3-ம் வீட்டில் பாப கிரகங்கள் இருந்தால் மேற்கண்ட உறுப்புக்களில் ஏதாவது தொந்தரவு இருக்கும்.ஒருவர் மருத்துவராக இருக்கிறார் எனக்கொள்ளுங்கள். மருத்துவத்திற்குக் காரகம் வகிப்பவர் சூரியன். அதனால்தான் அவர் தன்வந்திரி என்று அழைக்கப் படுகிறார். அவர் 10-ம் வீட்டுடன் சம்மந்தப் பட வேண்டும். அப்போதுதான் ஒருவர் மருத்துவராக முடியம். சரி! ஒருவர் மருத்துவராகிவிட்டார். 10-ம் வீட்டதிபதி 3-ம் வீட்டுடன் சம்மந்தப்பட்டால் அவர் எந்தத் துறையில் மருத்துவராக முடியும். சொல்லுங்கள் பார்ப்போம்? 3-ம் வீடு காதைக் குறிக்கிறது அல்லவா? அவர் E.N.T டாக்டராக இருப்பார். நாம் சொல்லும் விளக்கம் உங்களுக்கு இப்போது புரிந்து இருக்குமென நினைக்கிறோம். ஜீவன, மற்றும் தொழில் ஸ்தானத்தைப் பற்ரிப் பார்க்கும்போது இன்னும் விளக்கமாகப் பார்ப்போம்.

ராசிகளில் ஆண்ராசி, பெண்ராசி என்று உண்டென்பது உங்களுக்குத் தெரியும். அதேபோல் கிரகங்களிலும் ஆண் கிரகங்கள், பெண் கிரகங்கள், அலி கிரகங்கள் என்று உண்டு. அவையாவன...

ஆண்கிரகங்கள் : சூரியன், செவ்வாய், குரு ஆகிய மூன்றும் ஆண் கிரகங்கள் எனப்படும்.

பெண் கிரகங்கள் : சந்திரன், சுக்கிரன், ராகு ஆகிய மூன்றும் பெண் கிரகங்கள் எனப்படும்.

அலி கிரகங்கள் : புதன், சனி, கேது ஆகிய மூன்றும் அலிக்கிரகங்கள் எனப்படும்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 17, 2014 4:01 am

3-ம் வீட்டதிபர் ஆண் ராசியில் இருப்பாரேயாகில் அவருக்கு ஆண் சகோதரர்கள் அதிகமிருப்பர் எனக்கொள்ளலாம். அதேபோன்று 3-ம் வீட்டுக்காரர் பெண் ராசியில் இருப்பாரேயாகில் சகோதரிகள் அதிகம் இருப்பார்கள் எனக் கொள்ளலாம்.

ஒருவருக்கு எவ்வளவு சகோதர, சகோதரிகள் இருப்பார்கள் என்று எப்படிக் கூறுவது? இதற்கு ஒருவழி இருக்கிறது. அது எப்படி எனப் பாருங்கள்.

ஜாதகத்தைக் குறித்துக் கொள்ளுங்கள்.

ராசி : கன்னியில் இலக்கினம். தனுசில் சுக்கிரன், புதன், சந்திரன், மகரத்தில் கேது, சூரியன்; ரிஷபத்தில் சனி, செவ்வாய்; கடகத்தில் ராகு; சிம்மத்தில் கேது.

நவாம்சம் : மீனத்தில் இலக்கினம், சூரியன்; மேஷத்தில் சுக்கிரன், செவ்வாய், குரு ரிஷபத்தில் கேது, கடகத்தில் சந்திரன், சிம்மத்தில் புதன், கன்னியில் சனி; விருச்சிகத்தில் ராகு.

இதுதான் ஜாதகம்; இவர் இலக்கினம் கன்னி. சகோதரனுக்குக் காரகம் வகிப்பவர் செவ்வாய்; அவரே 3-ம் வீட்டிற்கும் உடையவர் ஆகிறார். 3-ம் வீட்டதிபர் நவாம்சத்தில் எவ்வளவு நவாம்சம் சென்றிருக்கிறார் எனப்பாருங்கள். அதை எப்படிக் கண்டு பிடிப்பது? ராசியில் செவ்வாய் ரிஷபத்தில் இருக்கிறார். நவாம்சத்தில் மேஷத்தில் இருக்கிறார். அதாவது 4-வது நவாம்சத்தில் இருக்கிறார். ரிஷபத்தில் ஒன்பது நட்சத்திரப் பாதங்கள் அல்லவா? கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்; ரோகிணி 1, 2, 3, 4 பாதங்கள்; மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள். செவ்வாய் ரோகிணி 1-ம் பாதத்தில் இருப்பதால் நவாம்சத்தில் மேஷத்தில் இருக்கிறார். அதாவது கார்த்திகை மூன்றுபாதங்கள், ரோகிணி 1-ம் பாதத்தையும் சேர்த்து மொத்தம் 4 பாதங்கள் சென்று விட்டன; அதைத்தான் நாம் 4 வது நவாம்சத்தில் இருக்கிறார் என மேலே குறிப்பிட்டுள்ளோம். 3-ம் வீட்டிற்கதிபதி 4 நவாம்சம் சென்று இருப்பதால் இவரையும் செர்த்து மொத்தம் 4 பேர்கள் இவருடன் கூடப்பிறந்தவர்கள். இது கூடப் பிறந்தவர்களைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு வழி. முன்பு குழந்தை பிறப்பதைக் கட்டுப் படுத்த வழி கிடையாது. இப்போதோ கட்டுப்படுத்துவதற்கு வழிகள் பிறந்து விட்டன். இப்போது ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை, அல்லது இரண்டு குழந்தைகள் என்ற அளவில் கட்டுப்பாடு வந்து விட்டது. குழந்தை பிறப்பை செயற்கை முறையில் கட்டுப் படுத்துகிறோம். ஆகவே நாம் மேற்கூறிய விதி இந்தக் காலத்துக்கு ஒத்து வராமல் போகலாம். இருப்பினும் வாசகர்கள் தெரிந்து கொள்ளட்டுமே என்ற எண்ணத்தில் எழுதலானோம்.

பொதுவாக மூன்றாம் வீட்டில் சுப கிரகங்கள் இருப்பின் அந்த பாவம் நன்றாக இருக்கும். மாறாக பாவ கிரகங்கள் இருந்தால் அந்த பாவம் பெரிதும் பாதிக்கப்படும். அதேபோல் மூன்றாம் வீட்டை சுபகிரகங்கள் பார்த்தால் அந்த வீடு பலம் பெற்று நன்றாக இருக்கும். பாவ கிரகங்கள் பார்வை இருப்பின் அந்த வீடு கெட்டு விடும். மூன்றாம் வீட்டு அதிபர் 6, 8, 12 வீடுகளில் இருந்தாலோ அல்லது 3-ம் வீட்டு அதிபர் பாவர்களின் சேர்க்கை பெற்று இருந்தாலோ அந்த வீடு கெட்டு விடும். இத்துடன் நாம் மூன்றாம் வீட்டைப் பற்றிக் கூறுவதை நிறுத்திக் கொள்வோம். மற்றவைகளை அடுத்தபாடத்தில் படிப்போம். நாம் ஏற்கனவே கூறி இருக்கிறோம், நீங்கள் இன்னும் பல ஜோதிடப் புத்தகங்கள் படிக்க வேண்டுமென்று. படித்தால்தான் மேலும்பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். பலாதீபிகை, ப்ருஹத் ஜாதகம், உத்திரகாலாம்ருதம் ஆகியவை மிகவும் பயனுள்ள ஜோதிட நூல்கள். இவைகள் எல்லாம் வடமொழியில் இருந்தாலும் இவைகளின் மொழிபெயர்ப்புக்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் கிடைக்கின்றன. அவைகளை வாங்கிப் படியுங்கள். உங்கள் ஜோதிட அறிவு வளரும்.



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 17, 2014 4:02 am

நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - ஜோதிடப் பாடம் – 18


சென்ற பாடம் வரையிலும் 3-வது வீடு முடியப் பலன் சொல்லத் தெரிந்து கொண்டுள்ளீர்கள். பாடங்களைத் திரும்பத்திரும்பப் படியுங்கள். உங்களுக்குப் புரியும். ஒருவர் ஜோதிடராக வேண்டுமென்றால் எத்தகைய கிரக நிலைகள் இருக்க வேண்டும். நீங்கள் மொட்டு நிலையிலுள்ள ஜோதிடர். (Budding Astrologers). அதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? ஒருவர் மருத்துவராக வேண்டுமென்றால் சூரியன் ஜீவன ஸ்தானத்துடன் சம்மந்தம் பெற வேண்டும். ஏனெனின் சூரியன்தான் தன்வந்திரி என்றழைக்கப் படுகிறார். ராணுவம் அல்லது போலீஸ் வேலைக்குப் போக வேண்டுமென்றால் செவ்வாய் ஜீவனஸ்தானத்துடன் சம்மந்தம் பெறவேண்டும். கலைத் தொழிலில் ஒருவர் இருக்க வேண்டுமென்றால் சுக்கிரன் சம்மந்தப்பட்டு இருக்க வேண்டும். ஏனெனில் சுக்கிரன்தான் கலைக்கு அதிபதி. இவ்வாறாக ஒவ்வொரு துறைக்கும் ஒரு கிரகம் இருக்கிறது. ஜோதிடத்திற்கு எந்த கிரகம் காரகம் வகிக்கிறது? "புதன்". இவர்தான் ஜோதிடத்திற்குக் காரகம் வகிக்கிறார்.

1. ஜோதிடராக விரும்புகிறவர்கள் ஓரளவிற்குக் கணிதம் தெரிந்தவராக இருக்க வேண்டும். கணிதமென்றால் Algebra, Geometry என்றல்ல; அடிப்படைக் கணிதத்தில் தவறு செய்யாதவறாக இருக்க வேண்டும். ஏனெனில் ஜாதகம் தவறு இல்லாது கணிக்க வேண்டுமல்லவா?

2. நமது முன்னோர்கள் எழுதியுள்ள ஜோதிட நூல்களைப் படிக்க வேண்டும்.

3. அதில் கூறப்பட்டுள்ள விதிகளை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

4. ஜோதிடர்களுக்கு தெய்வபக்தி மிக அவசியம். அந்த பக்தி இருந்தால்தான் பலன்களைச் சரியாகச் சொல்லமுடியும்.

ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு துறைக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அந்த எல்லை வரையிலும்தான் நாம் செல்ல முடியும். அதேபோல் ஜோதிடத்திற்கும் எல்லை உண்டு. அந்த எல்லைக்குள் இருந்து நாம் பலன் சொல்ல முடியும். புதன் ஒருவரின் ஜாதகத்தில் 1, 4, 7, 10 கேந்திர ஸ்தானங்களிலோ, அல்லது வாக்கு ஸ்தானமான 2-ம் வீட்டிலோ இருக்க வேண்டும். புதன் ஜாதகத்தில் கெட்டுப் போகாது இருக்க வேண்டும். புதனும், சந்திரனும் ஒரு ஜாதகத்தில் சேர்ந்து இருந்தாலோ, அல்லது பார்த்துக் கொண்டாலோ ஒருவர் ஜோதிடத்தில் தேர்ச்சி பெற முடியும். சந்திரன் மனதுக்குக் காரகம் வகிப்பவர் அல்லவா? புதன் ஒருவரின் அறிவுத்திறனுக்குக் காரகம் வகிப்பவர். ஆக இருவரின் சேர்க்கையும் தெளிவான சிந்தனைக்கும், அறிவு பூர்வமான சிந்தனைக்கும் வழிவகுக்கும். ஆக வலுவான புதன் தீர்க்கமாகச் சிந்தித்துப் பலன் சொல்ல உதவுவார். அந்த புதனுக்கு குருவின் பார்வையும் இருக்குமேயாகில் தெய்வ அனுகிரகம் கிட்டி பலன் சொல்ல உதவி கிடைக்கும். அதைத் தவிரவும் குருவின் பார்வை ஜோதிடத்தில் ஆழ்ந்த அறிவையும் கொடுக்கும். ஜோதிடராகும் யோகத்தைப் பற்றி ஒரு தமிழ் நூல் கீழ்க் கண்டவாறு கூறுகிறது:-

"ஆட்சி நல் உச்சத்தோடே
அருள் குரு பார்வை பெற்று
மாட்சிமை உடைய வாக்கில்
மாபுதன் நிற்பாரேயாகில்
சூட்சும புத்தியோடே
சோதிடக் கலைகள் கற்றே
பேச்சினில் ஞானம் சொட்டும்
பெரும் புகழ் சோதிடன் காண்"



நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - 'ஜோதிடரத்னம்' திரு. எஸ்.சந்திரசேகரன் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக