புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
11 Posts - 4%
prajai
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
9 Posts - 4%
Jenila
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
4 Posts - 2%
Rutu
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Barushree
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_m10தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்?


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Apr 19, 2017 8:42 pm

தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் திரும்பியது ஏன்?

சென்னை: தினகரனையும், அவரது குடும்பத்தையும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என்று, மூத்த அமைச்சர்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடி விவாதித்து முடிவெடுத்தனர். அந்த கூட்டத்தில், மூத்த அமைச்சர்கள் பலரும் தங்கள் குமுறல்களை, முதல்வர் பழனிச்சாமியிடம் கொட்டித் தீர்த்தனர். முதல்வரும், தனக்கு ஏற்பட்ட சங்கடங்களை, அவர்களிடம் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.


மூத்த அமைச்சர் புலம்பல்:

கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த அமைச்சர் ஒருவர் கூறியதாவது:கூட்டத்தில் கலந்து கொண்ட அத்தனை அமைச்சர்களும், தினகரனாலும், சசிகலாவாலும் தாங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டோம் என்பதை பட்டியல் போட்டு கூறினர்.ஒரு முறை, வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல், 'வாய்யா... போய்யா...' என்று, கட்சியினர் சிலர் மத்தியில் ஒரு மூத்த அமைச்சர் என்றும் பாராமல், தினகரன் பேசினார். குறிப்பாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக நடந்த பிரசாரக் கூட்டத்திலேயே, பலர் முன்னிலையில் என்னை அவமானப்படுத்துவது போல பேசினார்.மறைந்த முதல்வர் ஜெயலலிதா சில நேரங்களில், பலர் முன்னிலையில் என்னை கடிந்து கொண்டிருக்கிறார். அவருடைய ஆளுமைக்கு, என்னைப் போல பலரை, அரசியலில் உருவாக்கியவர். அவர் என்னை திட்டிய போது கூட, நான் வருத்தம் அடைந்திருக்கிறேன். ஆனால், அவரின் ஆளுமையில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இல்லாத தினகரனெல்லாம் கடிந்து கொள்ளும்போது, அதையெல்லாம் கேட்டுக் கொண்டு அரசியல் செய்யத்தான் வேண்டுமா என்று, நினைத்து வருந்தினேன். இந்த குடும்பத்தால் இத்தனை பிரச்னைகள் இருக்கும்போதே, இவர்கள் இவ்வளவு ஆணவத்துடன் நடந்து கொள்கின்றனரே, பிரச்னைகள் எதுவும் இல்லை என்றால், என்னவெல்லாம் செய்வார்கள் என்று நினைத்தேன்.மக்களுக்கும் அதே மனநிலைதான் உள்ளது; தொண்டர்களும் அதே மனநிலையில்தான் உள்ளனர். அதனால், அந்தக் குடும்பத்தை, அ.தி.மு.க., அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டு, நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து, ஜெயலலிதா வளர்த்தெடுத்த இயக்கத்தை வழி நடத்துவோம் எனக் கூறி, கூட்டத்தை துவக்கி வைத்தார் மூத்த அமைச்சர்.அதன் பின், ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறைகளில் தினகரன் மற்றும் கோஷ்டியினர் எப்படியெல்லாம் மூக்கை நுழைத்து, அதிகாரம் செய்தனர் என்பது குறித்தெல்லாம் பட்டியல் போட்டு பேசினர்.ஒரு நாள், தலைமைச் செயலகத்துக்குச் சென்று, எனது அறையில் அமர்ந்து, மனு கொடுத்து காரியம் சாதிப்பதற்காக வந்திருந்த கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில், விவரங்களை கேட்டு, உதவியாளர்களுக்கு உத்தவிட்டுக் கொண்டிருந்தேன்.அப்போது, தினகரன் பெயரைச் சொல்லி, அவருடைய உறவுக்காரர் என ஒருவர் வந்தார். கூடவே, மீடியாக்காரர் ஒருவரும் வந்திருந்தார். இருவரும், தினகரனுக்கு ரொம்ப நெருக்கம் என்று சொல்லி, தினகரனுக்கு போன் போட்டுக் கொடுத்தனர்; பேசினேன். அவர்கள் இருவரும் எனக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவர்கள்; நம் துறையில் ஒதுக்கீடு செய்யப்படவிருக்கும் டெண்டரை அவர்களுக்கு ஓ.கே., செய்யுங்கள் என்று சொன்னவர், மற்றவர்களுக்கு என்ன பார்மாலிட்டியோ அதே பார்மாலிட்டியை அவர்களிடமும் பாலோ செய்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்..எதிரில் அமர்ந்திருந்த அவர்களுக்குத் தெரியாது தினகரன் என்னிடம் என்ன கூறினார் என்று. நான் தினகரனிடம் பவ்யமாக பேசியதைக் கண்டு, அவர்கள், தினகரன் ரொம்ப அழுத்தமாக தங்களுக்கு சிபாரிசு செய்து விட்டார் என்று நம்பியிருக்கக் கூடும். அவர்களை நம்பி, தினகரன் சொன்னதை என்னால் சொல்லவும் முடியவில்லை; மெல்லவும் முடியவில்லை. வந்திருந்ததில் ஒருத்தர் உறவுக்காரர்; இன்னொருவர் பிரபலமாக மீடியாக்காரர். அவர் பார்மாலிட்டிபடி செய்யச் சொன்னதை சொன்னால், இவர்கள் இருவரும் எப்படி எடுத்துக் கொள்வார் என்று புரியாமல், தடுமாறி, தேடி வந்த விஷயத்தை செய்து கொடுப்பதாகச் சொல்லி அனுப்பினேன். பின், அவர்களுக்கே ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. ஆனால், எந்த பார்மாலிட்டியும் இல்லை. ஆனால், பார்மாலிட்டி படி, படியளக்க வேண்டியவர்களுக்கு, நான், எனது சொந்தக் காசில் படியளந்தேன். இப்படியெல்லாம் பல அமைச்சர்களுக்கும் அனுபவம் இருக்கும். அதெல்லாம், இந்த கும்பலுக்கு நாம் ஏன் செய்ய வேண்டும்? கப்பம் கட்டி எதற்காக இனியும் பிழைக்க வேண்டும். அதற்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால், சசிகலா, தினகரன் குடும்பம் கட்டாயம், அ.தி.மு.க.,வில் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும் என அங்கலாய்த்தார்.அடுத்து பேசிய அமைச்சர் ஒருவர், துறையில் எந்த டெண்டர் போட்டாலும் சரி… எப்படித்தான் மோப்பம் பிடித்து வருவார்களோ தெரியாது. டெண்டர் அறிவிப்பு வெளியான நாளிலேயே, சசிகலாவுக்கு சொந்தம், தினகரனுக்கு சொந்தம், நடராஜனுக்கு சொந்தம், இளவரசிக்கு சொந்தம், விவேக்குக்கு சொந்தம், டாக்டர் வெங்கடேஷுக்கு சொந்தம், டாக்டர் சிவக்குமாருக்கு சொந்தம், அனுராதாவுக்கு சொந்தம் என்றெல்லாம் சொல்லி, புற்றீசலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்டு வருவார்கள். அவர்களையெல்லாம் பார்த்தாலே பயமாக இருக்கும். ஒப்பந்தத்தை ஒதுக்கிக் கொடுக்கவில்லை என்றால், அமைச்சர் பதவிக்கே வேட்டு வைத்து விடுவார்களோ என்ற பயத்தில், சம்பந்தமில்லாத நபர்களுக்கும் தினகரனுக்கு வேண்டப்பட்டவர்களாக இருப்பரோ என்று நினைத்து, மரியாதையாக பணிந்து வணக்கம் போடுவேன். ஆனால், நெஞ்சுக்குள் அந்த உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. கட்சி ஒன்றாகி, சசிகலா குடும்பம், கட்சி மற்றும் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டால், சந்தோஷமாக இருப்போம் என்று ஒருவர் கூறினார்.இப்படி பல அமைச்சர்களும், தாங்கள் எதிர்கொண்ட சம்பவங்களை பட்டியல் இட்டு, தினகரன், சசிகலா ஒதுக்கப்பட வேண்டும் என்பதை மையமாக வைத்துப் பேசினர். அதன் பின் தான், தான் சந்தித்த அவமானங்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கூறினார். அதன்பின்பே, கட்சியை இணைக்க, தினகரன், சசிகலா மற்றும் குடும்பத்தினரை ஒதுக்கி வைப்பது என முடிவெடுக்கப்பட்டது. அதைத்தான், மூத்த அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.இவ்வாறு அந்த அமைச்சர் கூறினார்.

நன்றி தினமலர்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Apr 20, 2017 1:57 pm

இவனுங்க என்ன தான் சொன்னாலும் யாரும் நம்ப போவதில்லை , அரசியல் சாக்கடையில் இன்னொரு துரோக செயல் அவ்வளவு தான்.

1.5 கோடி உறுப்பினர்களுக்கு யார் எப்படி போனாலும் பிரச்சினையில்லை தாங்கள் நினைத்தது நடக்கிறதே என்று சந்தோசம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக