புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
11 Posts - 4%
prajai
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
9 Posts - 4%
Jenila
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
3 Posts - 1%
Baarushree
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
2 Posts - 1%
jairam
இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_m10இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Apr 05, 2015 7:37 am


இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்,
50 கூறுகிறேன்…’ என, ஆரம்பித்தார் குப்பண்ணா.
அவற்றில் சிலவற்றை அச்சில் ஏற்ற முடியாது என்பதால்,
தவிர்த்து விட்டேன்.

இதோ… குப்பண்ணா கூறியவற்றில் சில:

* இடது கையால் ஆசனம் போட்டால், ஆயுள் குறைவும்;
எண்ணெய் தேய்த்தால், புத்திர நாசமும் ஏற்படும்;
சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;
படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

* ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி
முதலியோருக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில்
கண்டிப்பாக உதவ வேண்டும்; இது, மிகவும் புண்ணியம்.

* சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால்,
அவர்களுக்கு உதவ வேண்டும்.

* அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

* பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன்
சேர்ந்த வேம்பு இவை எதிரில் செல்ல நேரும் போது,
வலது புறம் சுற்றிச் செல்ல வேண்டும்.

* குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு
உட்கொள்ளக் கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி
சாப்பிடவோ, துணியில்லாமல் குளிக்கவோ, சூரியனுக்கு
எதிரில் மலஜலம் கழிக்கவோ கூடாது.

* கன்றுக்குட்டியின் கயிறை தாண்டவோ, மழை பெய்யும்
போது ஓடவோ, தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கவோ
கூடாது.

* நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

* கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம்
கழிக்கக் கூடாது.

* எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ,
பெண்கள் கற்பை இழந்துவிட்டால், புண்ணிய நதியில்,
18 முறை மூழ்கி குளித்தால் தோஷம் நீங்கும்.

* திருமணம் ஆகாமல் ஒரு பெண்ணுடன் வாழ்பவனை,
சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

* சாப்பிடும்போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு,
கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின், நீர்
அருந்த வேண்டும்.

* சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால்
தண்ணீர் அருந்தக் கூடாது.

* கோவணமின்றி, வீட்டின் நிலைப் படியை தாண்டக்
கூடாது.

* இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும்போது விளக்கு
அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து,
மீண்டும் விளக்கேற்றி, அதன் பின்பே சாப்பிட வேண்டும்.

* சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட
வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில்
நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை
கிள்ளி எறிந்து விட வேண்டும்.

* சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ,
வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின்
பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

* மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக்
கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன்,
தாய்க்கும், பெண், தந்தைக்கும் வெற்றிலை மடித்துத் தரக்
கூடாது.

* குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரியை பார்க்கச்
செல்லும் போதும், ஆலயம் செல்லும்போதும் வெறுங்
கையுடன் செல்லக் கூடாது.

* தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டுமே
சொறிய வேண்டும்; இரண்டு கைகளாலும் சொறியக்
கூடாது.

* இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க
கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி,
தலையில் தேய்க்க வேண்டும்.

* தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ
படுக்கக் கூடாது.

* வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

* மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி,
ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

* பேசும்போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

* ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

* வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து
படுக்கக் கூடாது; நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

* ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

* தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு, காலால் தேய்க்கக்
கூடாது; பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை
கிடைக்காமல் போய் விடும்.

* பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன்,
பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

* பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன்
மனைவியை கூடுதல் இவை மூன்றுமே பிராய
சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

* அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள்,
கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையில் உள்ளவர்கள்
இவர்களது குறையை குத்திக்காட்டி பேசக்கூடாது.

* ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர்,
மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களை பற்றி
வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள
தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

* பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை
இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

* பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது
படக் கூடாது.

* பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி
போடாமலிருப்பது பாவம்.

* பசு மாட்டை, கோமாதாவாக எண்ணி, சகல
தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு,
புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை
கொடுப்பது புண்ணியம்.

* தூங்குபவரை திடீரென்று எழுப்பவோ, தூங்குபவரை
உற்றுப் பார்க்கவோ கூடாது.

* பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

* தலை, முகம் இவற்றில், முடியை காரணம் இல்லாமல்
வளர்க்கக் கூடாது.

* அண்ணன் தம்பி; அக்காள் தங்கை; ஆசிரியர் – மாணவர்;
கணவர் மனைவி; குழந்தை – தாய்; பசு – கன்று
இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

* வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத்
தான் நுழைய வேண்டும்.

* நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு
ஆலோசனை கூறக் கூடாது.

— என, சொல்லி முடித்தார் குப்பண்ணா.

இவற்றில் சில அறிவுரைகளை இக்காலத்தில் பின்பற்ற
முடியுமா என்பது சந்தேகம் தான். சில, மூட
நம்பிக்கையாகவும் தெரிகிறது. வாசகர்கள் தெரிந்து
கொள்வதற்காக எழுதி விட்டேன் இனி, அவரவர் விருப்பம்!

———————————————-
அந்துமணி பா.கே.ப., – வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக