புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 14%
Manimegala
Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
11 Posts - 4%
prajai
Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
9 Posts - 4%
Jenila
Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
4 Posts - 2%
Rutu
Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
jairam
Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_m10Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Search found 2 matches for Hemorrhoids

Topics tagged under hemorrhoids on ஈகரை தமிழ் களஞ்சியம் 6_1_980x550

மூல நோய் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?



நமது ஆசனவாய் பகுதியில் உள்ள ரத்த குழாய்களில் வீக்கம் ஏற்படும்போது, அதை நாம் மூலம் என்கிறோம். ஆசனவாய் பகுதி அதிகமான அழுத்தங்களை சந்திக்கும்போது அதன் ரத்த குழாய்கள் வீக்கமடைகின்றன. இத்தகைய வீக்கம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

மலம் கழிக்கும்போது அதிகமான அழுத்தம் கொடுப்பது, மலம் கழிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது, நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்னை இருப்பது போன்ற காரணங்களால் ஆசனவாய் ரத்த குழாய்கள் வீக்கம் அடைகின்றன. அதேபோல் அடிக்கடி வயிற்றுப்போக்கு பிரச்னை ஏற்படுவது, அதிகமான உடல் பருமன் கொண்டிருப்பது, நார்சத்து உணவுகளையும் தண்ணீரையும் குறைவான அளவு எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சியின்போது மிக அதிகளவிலான எடைகளை தூக்குவது போன்ற காரணங்களால் ஆசனவாய் பகுதி அதிகமான அழுத்தங்களை சந்திக்கிறது.

இது அனைத்தும் மூலநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை உண்டாக்குகிறது. இதுதவிர கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலங்களில் மலச்சிக்கல் ஏற்படுவதும், மூலநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை உண்டாகிறது.

எத்தனை வகையான மூல நோய்கள் இருக்கின்றன? அது என்னென்ன?



உள் மூலம், வெளி மூலம், பவுத்திர மூலம் என மூன்று வகையான மூல நோய்கள் இருக்கின்றன. உள் மூலம் இருப்பது நமது கண்களுக்கு தெரியாது. இது மிக அரிதாகவே நமக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஆனால் ஆசனவாய் பகுதிக்கு நாம் அழுத்தம் கொடுக்கும்போது சில நேரங்களில் அங்கே ஒருவிதமான எரிச்சலும், அரிப்பும் ஏற்படலாம்.

அதிகமான அழுத்தங்களை தொடர்ச்சியாக கொடுக்கும்போது உள்ளிருக்கும் மூலம், வெளியே வருகின்றன. அதைதான் வெளிமூலம் என்கிறோம். சிலருக்கு அது ஏற்கனவே வெளிப்பகுதிகளில் ஏற்பட்டிருக்கும். வெளிமூலம் இருப்பதை நம்மால் காண முடியும். இதனால் ஆசனவாய் பகுதியில் வீக்கம் ஏற்படும். சிலருக்கு ரத்த கசிவு மற்றும் அரிப்பு ஏற்படலாம்.

வெளி மூலம் இருக்கும் சிலருக்கு, வீக்கம் ஏற்பட்டிருக்கும் ரத்த குழாய்கள் வெடித்து ரத்த கட்டிகளாக மாறும் . இந்த நிலையை நாம் பவுத்திர மூலம் (த்ரோம்போஸ்டு ஹெமராய்ட்ஸ் )என்கிறோம்.

மக்களிடையே அதிகமாக காணப்படும் மூல நோய் எது?



உட்புற மூல நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு நாம் ஏற்கனவே கூறியது போல குறைவான அளவு அசௌகரியங்கள்தான் ஏற்படுகின்றன. அதனால் மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரும்பாலும் வெளிப்புற மூலம் அல்லது பவுத்திர மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். எனவே மருத்துவ தரவுகளின்படி கூறும்போது பெரும்பான்மையான மக்கள் வெளிமூல நோயால்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

எந்த வயதைச் சேர்ந்தவர்கள் இதில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்?



மூல நோய் என்பது எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் 20 - 50 வயதான மக்களிடம்தான் இந்த பிரச்னை அதிகமாக காணப்படுகிறது.

அதேபோல் அறுபது, எழுபது வயதுகளில் உடையவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும்போது, அது மூல நோய் உண்டாவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.

மூல நோய் மிக அரிதாகவே குழந்தைகளிடம் காணப்படுகிறது. குழந்தைகள் சரியாக மலம் கழிக்காமல் இருப்பது, மலத்தை அடக்கி வைப்பது, மலம் கழிப்பதற்கு நீண்ட நேரம் எடுத்து கொள்வது போன்ற காரணங்களால் அவர்கள் தங்களுடைய பதின்பருவ வயதுகளில் மூல நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

மூலநோய் ஏற்படுவதற்கு மக்களின் உணவு பழக்கங்களும் ஒரு காரணமா?



நிச்சயமாக. இன்றைய உணவு பழக்கங்களும், வாழ்க்கை முறை பழக்கங்களும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. சீஸ், பீட்ஸா, மைதா மற்றும் பிற வகையான துரித உணவுகளை அதிகமாக எடுத்து கொள்பவர்களுக்கு மூல நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல் குறைவான அளவு காய்கறிகளையும், தண்ணீரையும் எடுத்துக் கொள்பவர்களுக்கும் மூல நோய் ஏற்படலாம். எனவே இதுபோன்ற பிரச்னைகளில் நமது உணவு பழக்கவழக்கங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.

மூலநோய் இருப்பவர்களுக்கு உணவு கட்டுப்பாடு தேவையா?



ஆம். குறிப்பாக மூல நோய் ஆரம்ப கட்டங்களில் இருப்பவர்கள் தங்களது உணவு முறைகள் மூலம் அதனை சரிசெய்துகொள்ள முடியும்.

முக்கியமாக மேற்கூறியது போல், மைதா மற்றும் துரித உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

அதேபோல் எந்த வகையான மூல நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றும்போது, அதன்மூலம் ஏற்படும் நல்ல விளைவுகளை அவர்களால் உணர முடியும்.

அசைவ உணவுகள் மூலநோய் பாதிப்பை அதிகரிக்க செய்யும் என்று கூறுவது உண்மையா?



கோழி, மட்டன், பீஃப் மற்றும் பன்றி கறி போன்ற இறைச்சி (Meat) வகை அசைவ உணவுகளை எடுத்துகொள்ளும்போது, அதனை செரிமானம் செய்வதற்கு நமது குடலுக்கு அதிகமான அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. தண்ணீர் தேவையான அளவு கிடைக்காதபோது அது செரிமான பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது. இது மூல நோய் இருப்பவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தலாம்.

எனவே இறைச்சி வகைகளுக்கு பதிலாக மீன் அல்லது முட்டை போன்ற அசைவ உணவுகளை அவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இவை எளிமையாக செரிமானம் ஆகக்கூடிய அசைவ உணவுகள் ஆகும்.

வீட்டு வைத்திய முறைகள் மூலநோய்க்கு உதவுமா?



ஆரம்ப கட்ட மூல நோய் பாதிப்புகளுக்கு மட்டுமே வீட்டு வைத்திய முறைகளை முயற்சிகலாம். உதாரணமாக அதிமான காய்கறிகள், பழங்கள் எடுத்து கொள்வது, சீரக தண்ணீர் அல்லது சோம்பு தண்ணீர் எடுத்து கொள்வது போன்றவைகள் அவர்களுக்கு உதவும்.

அறுவை சிகிச்சை செய்வது எப்போது அவசியமாகிறது?



உணவு பழக்கங்கள் மற்றும் வாழ்வியல் முறைகளை மாற்றிய பின்னரும், மாத்திரை மருந்துகளில் பலன்கள் கிடைக்காத நிலையிலும் நாம் அறுவை சிகிச்சைக்கு செல்ல வேண்டும்.

மூல நோய்க்கான சிகிச்சை முறைகள் என்னென்ன?



ஆரம்பகட்ட மூல நோய் பாதிப்புகளில் இருப்பவர்கள், தங்களது உணவு முறைகள் மற்றும் வாழ்வியல் முறைகளை சரி செய்து கொள்வதோடு, சில மருந்து மாத்திரைகளை எடுத்துகொள்வதன் மூலம் தங்களது பிரச்னைகளுக்கு தீர்வுகாண முடியும்.

ஆனால் மூல நோய் பாதிப்பு தீவிரமான நிலைக்கு செல்லும்போது அறுவை சிகிச்சை செய்து கொள்வது மட்டுமே அவர்களுக்கு ஒரே வழியாக இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு மலம் கழிக்கும்போது அடைப்பு ஏற்படுவது, ரத்த கசிவு ஏற்படுவது, சதை வளர்ச்சி வெளியே தெரியும் அளவிற்கு அதிகரிப்பது, உட்காரும்போது வலி ஏற்படுவது போன்ற பிரச்னைகள் உண்டாகி மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். எனவே இதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்வது மட்டுமே நல்ல பலன்களை அளிக்கும். தற்போது லேசர் முறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகள், மீண்டும் மூல நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னரும் கூட, அவர்கள் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்பதுதான் இங்கே நாம் நினைவுகொள்ள வேண்டிய விஷயம்.

மூலநோய்க்கு நிரந்தர தீர்வு இருக்கிறதா?



நிரந்தர தீர்வு என்றால் ஆரோக்கியமான வாழ்வியல் முறைகள் மட்டும்தான். அறுவை சிகிச்சை செய்த பின்னர் கூட சிலருக்கு மீண்டும் மூல நோய் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளையும், உணவு முறைகளையும் பின்பற்றி வந்தால்தான், இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மை நாம் எப்போதும் தற்காத்து கொள்ள முடியும்.

குறிச்சொற்கள் #மூலநோய் #மூலம் #மூல_நோய் #Hemorrhoids #உள்_மூலம் #வெளி_மூலம் #பவுத்திர_மூலம்

மூலநோய் சிறப்பு சிகிச்சை நிபுணர்,
மருத்துவர் வாணி விஜய்

நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்படுகிற நோய்களுள் 'மூலநோய்' (Piles) முக்கியமானது. இந்த நோய் வந்தவர்களில் பெரும்பாலோர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு முறையான சிகிச்சையை எடுக்கத் தவறுவதால், பின்னாளில் கடுமையான மலச்சிக்கல், ஆசனவாயில் வலி, ரத்தப்போக்கு, ரத்தசோகை எனப் பல துன்பங்களுக்கு உள்ளாகிறார்கள்.

எது மூலநோய்?

சாதாரணமாக, நம் உடலில் உள்ள சிரை ரத்தக் குழாய்களில் (Veins) குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பு வால்வுகள் உள்ளன. இவை ரத்தத்தை இதயத்துக்குச் செலுத்துகின்றன; ரத்தம் தேவையில்லாமல் சிரைக் குழாய்களில் தேங்கி நிற்பதைத் தவிர்க்கின்றன. ஆனால், நம் உடல் அமைப்பின்படி ஆசனவாயிலிருந்து குடலுக்குச் செல்லும் சிரைக் குழாய்களில் மட்டும் இந்தத் தடுப்பு வால்வுகள் இயற்கையிலேயே அமையவில்லை.

இதனால் அந்த ரத்தக்குழாய்களில் அழுத்தம் சிறிது அதிகமானால்கூட ரத்தம் தேங்கி, சிறிய பலூன் போல வீங்கிவிடுகிறது. இப்படி ஆசன வாயில் உள்ள இரண்டு சிரை ரத்தக்குழாய்கள் ஏதோ ஒரு காரணத்தால் வீங்கிப் புடைத்து, தடித்து ஒரு கட்டி போலத் திரண்டு விடுவதை ‘மூலநோய்’ என்கிறோம்.

காரணங்கள்

மலச்சிக்கல் மூலநோய்க்கு முக்கியக் காரணம். மலச்சிக்கலின்போது மலத்தை வெளியேற்றுவதற்கு முக்கவேண்டி இருப்பதால், அப்போது ஆசனவாயில் அழுத்தம் அதிகரித்து மூலநோயைத் தோற்றுவிக்கும்.

ஆண்களுக்கு ஏற்படுகிற சிறுநீர்த்தாரை அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் போன்றவற்றாலும் இம்மாதிரி அழுத்தம் அதிகமாகி மூலநோய் உண்டாகிறது.

வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடலில் உருவாகும் புற்றுநோய்க் கழலைகள் மற்றும் கொழுத்த உடல் போன்றவையும் மூலநோயை ஏற்படுத்தும்.

கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக்குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் மட்டும் தற்காலிகமாக மூலநோய் வருகிறது.

சிலருக்குப் பரம்பரை காரணமாக ஆசனவாயில் உள்ள சிரைக்குழாய்கள் மிக மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலநோய் வரலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து குறைந்த உணவு வகைகளைச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, மாமிச உணவு வகைகளையும் விரைவு உணவு வகைகளையும் அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு, மூலநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

புகைபிடிப்பதும் மது அருந்துவதும் போதைப்பொருள்களை உபயோகிப்பதும் ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், இப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூலநோய் எளிதில் வந்துவிடும்.

மூலநோய் வகைகள்

மூலநோய் இரு இடங்களில் ஏற்படுகிறது.
1. ஆசனவாயின் வெளிப்புறத்தில் தோன்றுவது 'வெளிமூலம்' .
2. ஆசனவாயின் உள்ளே சளிப்படலத்தில் உருண்டையாக புதைந்திருப்பது 'உள்மூலம்'.

சாதாரணமாக, நாற்பது வயதைக் கடந்தவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு அதிக வாய்ப்பிருப்பதால், அந்த வயது உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், நடைமுறையில் பலருக்கு மூலநோய் இருப்பது தெரிந்தால்கூட ஆரம்பத்தில் வலியோ, சிரமமோ இருக்காது என்பதால் அதைக் கவனிக்கத் தவறி விடுகின்றனர். பின்னாளில் வீக்கம் பெரிதாகி பல தொல்லைகள் தரும்போது வேதனைப்படுகின்றனர்.

அறிகுறிகள்

ஆசனவாயில் சிறிய வீக்கம் தோன்றும், வலி இருக்காது. அடுத்த நிலையில் மலம் கழிக்கும்போது லேசாக ரத்தம் கசியும். அல்லது மலத்தோடு வரிவரியாக ரத்தம் வெளிப்படும். சில வாரங்களில், அந்த நபருக்கு மலம் கழித்த பின்னர் சொட்டுச் சொட்டாக ரத்தம் வெளிவரும். சிலருக்கு வீக்கம் பெரிதாகி நிலைத்துவிடும். அப்போது அடிக்கடி ஆசனவாயில் வலியை ஏற்படுத்தும்.

அந்த வீக்கத்தில் புண் உண்டாகி, அரிப்பு, வலி தொல்லை தரும். அதனால் மலம் கழிப்பதில் சிரமம் உண்டாகும், மலச்சிக்கல் ஏற்படும். 'முள்ளின் மீது உட்கார்ந்திருப்பதைப் போன்ற அவதி' என்று சொல்வது, இதற்கு மிகவும் பொருந்தும். ஆசன வாயில் வெடிப்பு (Anal fissure) புண், சுருக்கம் இருந்தாலும் இந்த மாதிரியான வலி, தொல்லையைத் தரும்.

மூலநோய் அறிகுறிகளை நான்கு நிலைகளாக மருத்துவர்கள் பிரித்திருக்கிறார்கள். காரணம், இந்த நோய்க்குப் பல்வேறு சிகிச்சை முறைகள் உள்ளன. அவற்றில் எந்தச் சிகிச்சை முறை குறிப்பிட்ட நோயாளிக்கு நல்ல பலனைத் தரும் என்று முடிவு செய்வதற்கு இது உதவும். மூலநோயின் நிலைக்கு ஏற்ப சிகிச்சை தரப்பட்டால் மட்டுமே, நோய் முழுவதுமாக குணமாகும். அப்படி இல்லாதபோது மூலநோய் மீண்டும் வந்துவிடும்.

மூலநோய் நிலைகள்

முதலாம் நிலையில், சிறிய அளவில் தடிப்பு அல்லது வீக்கம் தோன்றும். அந்த இடத்தில் லேசாக வலி இருக்கும். இரண்டாம் நிலையில், வீக்கம் பெரிதாக இருக்கும். மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறும். மலம் கழித்தபின் வீக்கம் உள்ளே சென்றுவிடும். மூன்றாம் நிலையில், வீக்கம் நிரந்தரமாக இருக்கும். ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். நான்காம் நிலையில், வீக்கத்தில் புண் ஏற்படலாம். வலி அதிகமாகலாம். அடிக்கடி ரத்தம் மிக அதிகமாக வெளியேறும்.

முக்கியக் குறிப்பு

பெருங்குடலில் ஏற்படும் புண், வீக்கம், புற்றுநோய், ஆசனவாயில் ஏற்படும் புற்றுநோய் ஆகியவற்றின் காரணமாகவும் மலம் கழிக்கும்போது ரத்தம் வெளியேறலாம். ஆகவே, ஒருமுறை ஆசனவாயிலிருந்து ரத்த ஒழுக்கு ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் பரிசோதித்து, காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம்.

இது மூலநோயாகத்தான் இருக்கும் என்று நீங்களாகவே முடிவு செய்துகொண்டு சிகிச்சை எடுக்காமல் இருந்துவிடக் கூடாது.

சிகிச்சை முறைகள்

மூலநோய்க்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுக்கொண்டால் மருந்து, மாத்திரை, களிம்புகளில் குணப்படுத்திவிடலாம். முக்கியமாக, மலச்சிக்கலுக்கு சரியான சிகிச்சை பெற்றுவிட்டால் போதும். மூலநோயும் விடைபெற்று விடும். மூலநோய்க்குப் பல்வேறு சிகிச்சைமுறைகள் உள்ளன. அவை:

1. சுருங்க வைத்தல்
2. வளையம் இடுதல்
3. உறைய வைத்தல்
4. அறுவைச் சிகிச்சை
5. கதிர்வீச்சு சிகிச்சை
6. லேசர் சிகிச்சை
7. ஸ்டேப்ளர் சிகிச்சை.
நோயாளியின் தேவைக்கேற்ப இவற்றில் ஒன்றை மருத்துவர் தேர்வு செய்வார்.

தடுப்பது எப்படி?

மூலநோய் உள்ளவர்கள் மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மலம் கழிப்பதைத் தள்ளிப்போடக் கூடாது. மலம் கழிப்பதற்கு முக்கவும் அவசரப்படவும் கூடாது.

அடிக்கடி அசைவ உணவு வகைகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காரம் அதிகமான உணவு ஆகாது. மசாலா நிறைந்த, கொழுப்பு மிகுந்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகப்படுத்த வேண்டும்.

பச்சைக் காய்கறிகள், பயறு வகைகள், பொட்டுக்கடலை, அவரைக்காய், கொத்தவரங்க்காய், கீரைகள், முழு தானியங்கள், வாழைத்தண்டு போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம். தினமும் இரண்டு பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். காபி. தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொண்டு, பழச்சாறுகளை அருந்த வேண்டும். தினமும் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதையும், நிற்பதையும் தவிர்க்க வேண்டும். உடற்பருமன் அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே, உடல் பருமனாக உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க வேண்டும். வயிற்றில் தோன்றும் கட்டிகள், புற்றுநோய் போன்றவற்றுக்கு ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெற்றுவிட வேண்டும்.

புகைப்பிடித்தல், மது அருந்துதல் கூடாது. இடுப்புக்குழித் தசைகளுக்குப் பயிற்சி தரலாம். இயலாதவர்கள் இதற்கென்றே உள்ள யோகாசனங்களைச் செய்யலாம். இவை எல்லாமே மூலநோய்க்குத் தடை போடும்.

சிகிச்சை முறைகள்

சுருங்க வைத்தல்:

ரத்தத்தை உறைய வைக்கும் மருந்தை ஊசிக்குழாயில் எடுத்துக்கொண்டு மூலநோய் ஏற்பட்டுள்ள இடத்தில் செலுத்தி, தடித்துள்ள ரத்தக்குழாயைச் சுருங்க வைப்பது இந்த சிகிச்சையின் முக்கிய செயல்முறை. முதல்நிலை மூலநோயாளிக்கு இது உதவும்.

வளையம் இடுதல்:

இந்த முறையில், மூலநோய் உள்ள பகுதியைச் சுற்றி ஓர் இறுக்கமான ரப்பர் வளையத்தைப் பொருத்துகிறார்கள். இதனால் ரத்தக்குழாய் வீக்கத்துக்குள் ரத்தம் வருவது தடைப்பட்டுப்போகும். இதனால் வீக்கம் சுருங்கிவிடுகிறது. இரண்டாம் நிலை மூலநோய் உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை உதவும்.

உறைய வைத்தல்:

திரவ நைட்ரஜனை மூலநோயின் மேல் வைத்தால், அதில் உள்ள ரத்தக்குழாய்கள் உறைந்து சுருங்கிவிடும். இரண்டாம் நிலை, மூலநோய் உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை உதவும்.

அறுவைச் சிகிச்சை:

நாள்பட்ட மூலநோயில் வீக்கம் மிக அதிகமாக இருந்தால், அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விடுகிறார்கள். வெளிமூலம் உள்ளவர்களுக்கு இந்தச் சிகிச்சை சிறந்த பலன் தரும்.

கதிர்வீச்சு சிகிச்சை:

ஐ.ஆர்.சி. ( IRC Infra red Coagulation) என்ற கருவி மூலம் இந்தச் சிகிச்சை செய்யப்படுகிறது. இக்கருவி அகச்சிவப்புக் கதிரை உற்பத்தி செய்து, மூலநோய் உள்ள பகுதிக்கு அனுப்புகிறது. அப்போது அக்கதிர்கள் மூலநோய்க்குச் செல்லும் ரத்தத்தை நிறுத்திவிடும். இதனால் மூலநோய் வீக்கம் சுருங்கிவிடும்.

முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை மூலநோய் உள்ளவர்களுக்கு, இதயநோய் உள்ளவர்களுக்கு, கர்ப்பிணிகளுக்கு, மயக்க மருந்து கொடுக்க இயலாத நிலையில் உள்ள முதியவர்களுக்கு இந்தச் சிகிச்சை உதவும்.

லேசர் சிகிச்சை:

லேசர் கதிர்களைச் செலுத்தி மூலநோயில் உள்ள திசுக்களை அழிப்பது, இந்தச் சிகிச்சையின் செயல்முறை. ஆனால், இதற்கு ஆகும் பணச்செலவு சிறிது அதிகம்.

ஸ்டேப்ளர் சிகிச்சை:

அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன சிகிச்சை முறை இது. இதற்கு ஆகும் பணச்செலவும் அதிகம்தான். என்றாலும், இதுதான் மிக எளிய சிகிச்சை முறை. நவீன ஸ்டேப்ளர் கருவியைக் கொண்டு மூலநோயின் மேல்பகுதியைத் தையலிட்டு இறுக்கிவிட்டு, வீக்கமுள்ள பகுதியையும் அதை ஒட்டியுள்ள தசைப்பகுதியையும் வெட்டி எடுத்து தையலிட்டுவிடுகிறார்கள்.

இது மூலநோயை நிரந்தரமாக குணப்படுத்திவிடும். மூலநோய் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கும், முதியவர்களுக்கும் இந்தச் சிகிச்சை நல்ல பலனைத் தருகிறது.

டாக்டர் கு. கணேசன் @ தி இந்து

Back to top